
Written by London Swaminathan
Date: 20 September 2018
Time uploaded in London – 17-34 (British Summer Time)
Post No. 5451
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பூஜையில் 16 விதமான உபசாரங்கள் உண்டு .இதை சோடசோபசாரம் என்று ஸம்ஸ்க்ருதத்தில் அழைப்பர். அபிஷேகம் என்பதில் தண்ணீர், இளநீர், பன்னீர், வாசனை நீர், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி முதலியன இருக்கும். சிவ பெருமானை அபிஷேகப் ப்ரியன் என்றும் விஷ்ணுவை அலங்காரப் ப்ரியன் என்றும் அழைப்பர். இதனால் சிவன் கோவில் அபிஷேக ஆராதனை பிரஸித்தம் என்பது விளங்கும். மலேயாவிலிருந்து 1956 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி என்ற இதழில் இருந்து பு.உ.கே.நடராஜ பிள்ளை எழுதிய கட்டுரையிலிருந்து இரண்டு பக்கங்களை இணைத்துள்ளேன்.

16 வகையான உபசாரங்கள்:
ஆவாஹனம், ஸ்தாபனம், சந்நிதானம்,ஸந்நிரோதனம், அவகுண்டனம், தேநு முத்திரை, பாத்யம், ஆசமநீயம், அர்க்யம், புஷ்பதானம், தூபம், தீபம், நைவேத்யம், பாநீயம், ஜப சமர்ப்பணம், ஆராத்ரிகம்.
இதை வேறு வகையாகவும் சொல்லுவர்:
தவிசளித்தல் (தவிசு= ஆசனம்)
கை கழுவ நீர் தருதல்
கால் கழுவ நீர் தருதல்,
முக்குடி நீர் தருதல்,
நீராட்டல்
ஆடை சாத்தல்
முப்புரி நூல் தருதல்
தேய்வை பூசல்
மலர் சாத்தல்
மஞ்சளரிசி தூவல்
நறும்புகை காட்டல்,
விளக்கிடல்
கருப்பூரம் காட்டல்
அமுதமேந்தல்
அடைகாய் (பாக்கு) தரல்
மந்திர மலரால் அருச்சித்தல்
பூஜை முடிந்தவுடன் பிரதக்ஷிணம் செய்வர்.
இறுதியில் சத்திரம் (குடை) சாமரம் வீசி, ந்ருத்யம் (ஆடல்) சங்கீதம் (பாடல்), வாத்திய கோஷம் ஆகியவற்றுடனும் முடிப்பர்.






Bahubali (Jain) Maha Mastaka Abisheka
–subham–