தமிழனுக்கு அடி மேல் அடி! 27,000 அடி!!

????????????????????????????????????????????????????????????????????????????????????????????

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1418; தேதி 18 நவம்பர், 2014.

தமிழா உனக்கு 27,000 அடி!
புரியவில்லையா? விளங்கவில்லையா?
உனக்கு பல்லாயிரம் அடி! தமிழன்னை கொடுத்தது!!
சங்கத் தமிழ் இலக்கியத்தில் மொத்தம் 27,000 அடிக்கு மேல்!!

தமிழா உனக்கு 27,000 அடி! உடனே, படி,படி,படி!

தொல்காப்பியத்தில் 3999 அடி!
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

திருக்குறளில் 2660 அடி!
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

சிலப்பதிகாரத்தில் 5001 அடி!
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

மணிமேகலையில் 4759 அடி!
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

திருமந்திரத்தில் 12,000 அடி!
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

திவ்யப் பிரபந்தத்தில் 16,000 அடி!
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

தேவாரம் திருவாசகத்திலோ பல்லாயிரம் அடி
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

பெருங்கதையில் 16,230 அடிகள்
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

lot of books 3

சீவக சிந்தாமணியில் 12,400 அடிகள்
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

கம்ப ராமாயணம் 42,000 அடிகள்
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

வள்ளலார் முதல் பாரதி வரை சொல்லிய சொல்
பல்லாயிரம் அடி! தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

இன்னும் ஆயிரமாயிரம் கவிஞர்கள் படைத்த கவிதைகளைப் படிக்க வேண்டுமானால் பல நூறு பிறவி வேண்டும்!

கல்வி கரையில, கற்பவர் நாள் சில!
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

நாளது சின்மையும், இளமையது அருமையும்
அரிதரிது! தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

ஓங்கி உலகலளந்த உத்தமன் (விஷ்ணு) மூவடியால் உலகளந்தான்!
தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் கற்றோர் ஈரடியால் (இரு மொழியால்) உலகளப்பர்!! இது உண்மை! வெறும் புகழ்ச்சி இல்லை!!
dog-with-books-and-glasses

புள்ளிவிபரம்

தொல்காப்பியம் 3,999 அடிகள்

சங்கத் தமிழ் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சுமார் 30, 000 அடிகள் (சிலர் கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப படையை ஒதுக்கி 27,000 வரிகள் என்பர்)

சிலப்பதிகாரம் 5,001 அடிகள்

மணிமேகலை 4,759 அடிகள்

பெருங்கதை 16,230 அடிகள்
origin of man

பாடல் கணக்கு

பதினெண் கீழ்க்கணக்கு (குறள் உள்பட 18 நூல்கள்) 3,250 பாடல்கள்

கம்ப ராமாயணம் 10,500 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3,145 பாடல்கள்

திவ்யப் பிரபந்தம் (ஆழ்வார் பாடியவை) 4,000 பாடல்கள்

பன்னிரு திருமுறை 18, 326 பாடல்கள்

தாயுமானவர் 1,454 பாடல்கள்

அருணகிரி 1,361 பாடல்கள்

இராமலிங்க சுவாமிகள் 5,800 பாடல்கள்
தமிழில் உள்ள பழமொழிகள் 20,000க்கு மேல்
Rat-reading

எனது முந்தைய கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன்:
தமிழ் ஒரு கடல் ( 11-5-2012 எழுதியது )
சம்ஸ்கிருதம் ஒரு சமுத்திரம்( 11-5-2012 எழுதியது )

cat reading

contact swami_48@yahoo.com