சத்தியம் எங்கும் வியாபித்திருக்கிறது, மகனே! (Post No.4314)

Written by S.NAGARAJAN

 

 

Date:19 October 2017

 

Time uploaded in London- 6–51 am

 

 

Post No. 4314

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

உபநிடத சத்தியம்

நீரில் உப்பு போல சத்தியம் எங்கும் வியாபித்திருக்கிறது, மகனே!

 

ச.நாகராஜன்

1

உத்தாலகர் என்று ஒரு மஹரிஷி. அனைத்தையும் அறிந்தவர்.

அவருக்கு ஒரு புதல்வன். ஸ்வேதகேது என்று பெயர்.

ஆத்மா என்றால் என்ன என்பதையும் ஜகத்துக்கு காரணம் என்ன என்பதையும் அறிய விரும்பினான்.

அவனது விருப்பம் சிரத்தையுடைய ஒருவனது உண்மையான விருப்பம்.

தகுதியுள்ள பாத்திரம் தான் என்று நிச்சயித்தார் உத்தாலகர்

 

2

உத்தாலகர் புத்திரன் ஸ்வேதகேதுவை அழைத்தார்.

“இந்த நியக்ரோத (ஆல) மரத்தின் பழம் ஒன்றைக் கொண்டு வா” என்றார்.

புத்திரன், “இதோ கொண்டு வந்தேன்” என்று அதைக் கொண்டு வந்தான்.

தந்தை அதை உடை என்றார்.

இதோ உடைத்தேன் என்றான் புதல்வன்.

அதில் என்ன காணப்படுகிற்து என்று கேட்டார் தந்தை.

புத்திரன், “ஒரு சிறிய வித்து காணப்படுகிறது” என்றான்.

“அதை உடை” என்றார் தந்தை.

“இதோ உடைத்தேன்” என்றான் புதல்வன்.

“அதில் என்ன காணப்படுகிறது” என்று கேட்டார் தந்தை.

“அதில் ஒன்றுமில்லை” என்றான் புதல்வன்.

“எதில் உனக்கு ஒன்றும் காணப்படவில்லையோ, அதில் ஒரு பெரிய நியக்ரோத (ஆல) மரம் இருக்கின்றது. அன்புள்ள மகனே! அதைக் கவனிப்பாயாக. இவற்றிற்கெல்லாம் ஆத்மாவாகிய அணு சத்தியம். அது ஜகத்துக்கெல்லாம் ஆத்மா. நீ அதுவாக இருக்கிறாய், ஸ்வேதகேதுவே” என்றார் பிதா.

புத்திரன், “மறுபடியும் அதைக் கொஞ்சம் விரிவாக விளக்குங்கள்’ என்று தந்தையை வேண்டினான்.

3

தந்தை கொஞ்சம் உப்பை எடுத்து ஸ்வேதகேதுவின் கையில் கொடுத்தார்.

“இந்த உப்பை அந்த ஜலத்தில் கரைத்து விட்டு நாளைக் காலையில் என்னிடம் வா” என்றார் உத்தால்கர்.

மகனும்,”அப்படியே ஆகட்டும்” என்று கூறி விட்டு உப்பை குடுவையில் இருந்த ஜலத்தில் கரைத்தான்.

மறுநாள் காலை.

ஸ்வேதகேது உத்தால்கரிடம் வந்தான்.

தந்தை, “நீ நேற்று இரவு ஜலத்தில் கரைத்த உப்பை எடு” என்று பணித்தார்.

உப்பு க்ரைந்து போனதால் எடுக்கப்பட முடிய்வில்லை. ஸ்வேதகேது அதைக் கூறவே, “சரி, நீரின் மேல் புறத்திலிருந்து கொஞ்ச்ம எடுத்து ஆசமனம் செய்” என்றார்.

புத்திரன் அப்படியே செய்தான்.

தந்தை, “அது எப்படி இருக்கிறது” என்று கேட்டார்.

“உப்பு கரிக்கிறது” – ஸ்வேதகேது

‘சரி, நடுவிலிருந்து ஜலத்தை எடுத்துக் கொண்டு ஆசமனம் செய்”

அப்படியே செய்தான் ஸ்வேதகேது.

“இப்போது எப்படி இருக்கிறது?”

“உப்பு கரிக்க்றது, தந்தையே”

“சரி, அடியிலிருந்து கொஞ்ச்ம் ஜலம் எடுத்து ஆசமனம் செய்”

அப்படியே செய்தான் ஸ்வேதகேது.

“இப்போது எப்படி இருக்கிறது?”

“உப்பு கரிக்கிறது, தந்தையே”

“ஓ, அதைக் கொட்டி விட்டு,, வாயை அலம்பி விட்டுப் பேசாமலிரு” என்றார் தந்தை.

அப்படியே செய்த ஸ்வேதகேத், “நான் நீரில் கலந்த உப்பு அப்படியே இருக்கிறது தந்தையே” என்றான்.

உத்தாலகர், “சத்தியமும் அப்படியே, குழந்தாய். நீ அதைக் காணாவிட்டாலும் கூட, அது இந்த தேகமெங்கும் வியாபித்திருக்கிறது. இதற்கெல்லாம் ஆத்மாவாகிய அணு சத்தியம். அது ஜெகத்துக்கெல்லாம் ஆத்மா. நீ அதுவாக இருக்கிறாய் ஸ்வேதகேதுவே” என்றார்.

ஸ்வேதகேதுவுக்கு இப்போது புரிந்தது.

4

தத் ஸத்யம், ஸ ஆத்மா, தத்வமஸி

ஸ்வேதகேதோ இதி

என்று முடிகிறது சாந்தோக்கிய உபநிஷத்தின் ஆறாவது அத்தியாயம் (12,13,14 கண்டங்களில்)

5

இலேசில் உணர முடியாத ம்ஹா சக்தி எங்கும் வியாபித்திருக்கிறது.

இதை உணர்ந்து கொள் என்கிறது சாந்தோக்கிய உபநிடதம்!

***