சுமேரியாவில் இந்து புராணக் கதை!

eagle 883 BCE
Eagle headed genie with divine water (amrita) in Assyria 893 BCE

By London swamiathan
Post No.1037; Dated 12th May 2014.

சுமேரியா என்பது இன்றைய இராக், ஈரான் ஆகிய நாடுகளைக் கொண்ட பகுதியில் நிலவிய பழங்கால நாகரீகம். உலகில் எல்லா நாகரீகங் களுக்கும் முன்னதாக அது இருந்ததற்கான தொல்பொருட் சின்னங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. களிமண் பலகைகளில் 60,000 வரிகள் அளவுக்கு விஷயங்கள் கிடைத்து இருக்கின்றன. இது சம்ஸ்கிருதம் போல தெள்ளிய நடை இலக்கியம் மற்றும் கணக்கு வழக்குகள். இதே போல மேலும் ஒரு 60,000 வரிகள் பேச்சு வழக்கு இலக்கியம் வேறு இருக்கிறது. இது பிராக்ருதம் போன்றது. எப்படி வடமொழி நாடகங்களில் பெண்களும் நகைச்சுவை நடிகரும் மட்டும் பிராக்ருதம் பேசினார்களோ அதே போல பெண்கள் மட்டும் கொச்சை வழக்கு சுமேரியன் மொழியைப் பேசினர். இவை எல்லாவற்றையும் படித்து வெளியிட இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும். அதற்குப் பின்னர்தான் இதில் முத்துக் குளிக்க முடியும்.

சம்ஸ்கிருதத்தில் இதைவிடப் பன்மடங்கு இலக்கியம் இருந்தபோதிலும் அதன் பழமையை– சுமேரியாவுக்கும் முந்தையது என்று– மேல்நாட்டினர் ஒத்துக் கொள்வதில்லை. ஆனால் ஜாகோபி பொன்ற ஜெர்மானிய அறிஞர்கள் ரிக் வேத காலம் கி.மு.6000 என்று ஒப்புக்கொள்வர். அப்போது இவ்வளவு சுமேரிய விஷயங்கள் வெளியாகவில்லை.

இதுவரை வெளியான சுமேரிய இலக்கியங்களில்கூட இந்து மத நூல்களோடு ஒப்பிடும் பல வியப்பான விஷயங்கள் உள்ளன. எல்லோரும் அறிந்த விஷயம்—பிரளயம் பற்றிய கதை. இது நமது மச்சாவதாரத்தில் இருப்பது போல பைபிள் மற்றும் பல மத்திய கிழக்கு நூல்களில் உள்ளன. நான் பார்த்த வரையில் கருட புராணக் கதை, அதர்வ வேத (பாம்பு) நாகங்கள், சுமுகன் என்ற சம்ஸ்கிருத சொல் முதலியன கிடைத்திருக்கின்றன. முதலில் கருடன் கதையைப் பார்ப்போம்.

உலகம் முழுதும், நாகர்களுக்கும் பறவை ( கருடன் ) மனிதர்களுக்கும் நடந்த சண்டை பற்றி இலக்கியங்கள் பேசுகின்றன. அங்கே எழுதினவர்கள் நாகர்களையும் கருடன்களையும் மனிதர்கள் என்று பொருள்படவே எழுதினர். பிற்காலத்தில் இதை பாம்பு, கழுகு என்று மாற்றிச் சொல்லத் துவங்கிவிட்டனர். இதை மாயா, எகிப்திய, சுமேரிய நாகரீகங்களிலும் காணலாம்.
garuda vahan

மஹாபாரதம், புராணங்களில் வரும் நாகர்- கருடன் சண்டை பலருக்கும் தெரிந்திருக்கும். காஸ்யப மகரிஷிக்கு இருந்த பல மனைவியரில் விநதா என்பவளுக்கு கருடனும் கத்ரு என்பவளுக்கு பாம்புகளும் (நாகர்கள்) பிறந்தன என்றும் கொடுமைக்காரியான கத்ரு, விநதாவை அடிமையாக வைத்திருந்ததாகவும் தேவ லோக அமிர்த்தத்தைக் கொண்டுவந்து கொடுத்தால் அடிமை விலங்கை முறிப்பதாகச் சொன்னதாகவும் கதை.

உடனே கருடன் இந்திர லோகம் சென்று அமிர்தத்தைத் திருடியதாகவும் இந்திரன் சண்டை போடவே கருடன் ஒரு இறகைக் கொடுத்து கொஞ்சம் அமிர்தத்தை மட்டும் பெற்று நாகர்களுக்குக் கொடுக்க விநதா விடுதலை ஆனதாகவும் படிக்கிறோம். இதில் மேலும் சுவையூட்ட அந்த அமிர்தம் தர்ப்பைக் காட்டில் சிந்தியதை நாகங்கள் நக்கியதால் பாம்புகளின் நாக்கு பிளவுபட்டதாகவும் சொல்லுவர். இது எல்லாம் அடையாளபூர்வ சங்கேத மொழி. இதன் ஆழ்ந்த பொருளை ஊன்றிப் படிப்பவர்கள் புரிந்து கொள்ளமுடியும்.

கருடனைப் பற்றி ரிக்வேதம் முதல் புராணங்கள் வரை மூன்று விஷயங்கள் வருகின்றன: 1) அமிர்தத்தைக் கொண்டு வந்தது 2). தொலை தூர மலைகளில் இருந்து சோமயாக த்துக்கான சோமலதையைக் கொண்டுவந்தது 3) மலைப் பள்ளத் தாக்குகளில் இருந்து மரகதக் கற்களைக் கொண்டுவந்தது.

மரகதக் கல்லுக்கு கருட ரத்னம் என்றும் குபேரனின் கல் அது என்றும் சொல்லுவர். பிற்காலத்தில் இந்தக் கதைகள் எல்லாம் அராபியர்களால் திருடப்பட்டு அரேபியன் இரவுகள கதைப் புத்தகத்துக்குப் போய்விட்டன.
garuda vahanam, tiruppullani, fb

சுமேரியாவில் கருடன் கதை

சுமேரியாவில் கிஷ் என்னும் நகரத்துக்கு முதல் மன்னன் ஏதனன். அவனுக்குக் குழந்தைகள் இல்லை. ஷாமாஷ் என்னும் சூரியக் கடவுளிடம் முறை இடுகிறான். குழந்தை பிறப்பதற்கான மர்ம மூலிகையின் பெயரைச் சொல்லுமாறு வேண்டுகிறான். மலைக்குச் செல்லும் படி சூரியதேவன் உத்தரவிடுகிறான். இதற்கிடையில் மலையில் பாம்புகளுக்கும் கருடன்களுக்கும் இடையில் சண்டை. எல்லா பாம்புகளையும் கருடன் பிடித்துத் தின்பதாக புகார். உடனே பாம்புகள் கடவுளிடம் முறையிட்டன. கருடனைப் பிடிக்க கடவுள் ஒரு திட்டம் தருகிறார். கருடனும் அகப்பட்டுக் கொள்கிறான். அந்த நேரத்தில்தான் ஏதனன் அங்கு செல்கிறான்.

கருடனை ஏதனன் காப்பாற்றுகிறான். நன்றிக்கடனாக அவனை தேவலோகத்துக்கு அது அழைத்துச் செல்கிறது. ஏதனன் உயரத்தைக் கண்டு பயப்படவே திரும்பிவிடுகின்றனர். பின்னர் பூவுகத்துக்கு வந்தவுடன் ஒரு கனவு வருகிறது. .மீண்டும் தேவ லோகம் செல்லுகின்றனர். இந்த்
இடத்தில் களிமண் பலகை உடைந்திருக்கிறது.

இருந்தபோதிலும் பிற்கால களிமண் பலகைகளில் ஏதனனின் மகன் பலி அரசாண்டதாக வருவதால் தேவ லோக மூலிகை பெற்று குழந்தை பெற்றிருப்பான் என்றே ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர். இந்தக் கதையிலும் இந்துமத கருடன் கதையிலும் கருடன்- நாகர் சண்டை வருவதும், அமிர்தம் அல்லது அற்புதக் குளிகை கொண்டுவர தேவலோகம் செல்லுவதும் ஒரேமாதிரியாக உள்ளன.

Map Sumeria

ஏதனன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்ததால் அவனை யத்னன் என்று அழைத்திருக்கலாம். யத்ன என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு விடாமுயற்சி என்று பொருள். யத்னன் உடன் சென்றவன் பெயர் சுமுகன். அவனுடைய மக்ன் பெயர் பலி. அதுவும் சம்ஸ்கிருத சொல். சுமுகன், சுமேரு மற்றும் அதர்வ வேதத்தில் வரும் தியமத், அலிகி, விலிகி ஆகிய சம்ஸ்கிருத சொற்கள் சுமேரியாவில் காணப்படுகின்றன. இவை எதற்கும் மேலை நாட்டினர் விளக்கம் சொல்ல முடியவில்லை.
ரிக்வேதத்தில் கருடனை சுபர்ணன், ஸ்யேனன் என்று அழைக்கின்றனர்.
சுமுகன், சுமேரு. அலிகி, விலிகி பற்றி தனியாகக் காண்போம்.

hit_eagle

கீழ்கண்ட கட்டுரை (25-12-2011-ல் வெளியிடப்பட்டது)
சுமேரியாவில் தமிழ் பறவை
ச.சுவாமிநாதன்

துருக்கியில் இரு தலைப் புள், கி.மு 1400
சங்கத் தமிழ் இலக்கியமான அகநானூற்றில் ஒரு அரிய செய்தி வருகிறது. அது ஒரு இரண்டு தலைப் பறவை பற்றிய செய்தி. இந்தப் பறவை சுமேரியாவில் கி.மு 3800 சிலிண்டர் முத்திரை ஒன்றிலும் இருக்கிறது. அதுமட்டுமல்ல, பஞ்ச தந்திரக் கதைகளிலும் அச்யுத ராயரின் தங்கக் காசுகளிலும் இதே இரு தலைப் புள் கண்டரண்ட பறவை என்ற பெயரில் உள்ளது.அல்பேனியாவின் தேசியக் கொடியிலும் ரஷ்யாவின் காசு, கரன்சி நோட்டுகளிலும் தமிழ்நாடு,ஆந்திர,கர்நாடக கோவில்களிலும் இந்தப் பறவையின் ஓவியங்களையும் சிலைகளையும் பார்க்கலாம்.எப்படி ஒரு தமிழ் பறவை இப்படி உலகெங்கும் பறந்து சென்று வெற்றிக் கொடி நாட்டியது என்பது ஒரு சுவையான செய்தி.

இதோ அகநானூறு கூறுவதைக் கேளுங்கள்:
“யாமே,பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்
இருதலைப் புள்ளின் ஓர் உயிரம்மே”
–கபிலர் (பாடல் எண் 12)

இதன் பொருள்: இனி யாங்களோ ஒரு பொழுதும் பிரிதல் இல்லாது கூடிய வெறுத்தல் இல்லாத நட்பினால் இரண்டு தலைகளுடைய ஒரு பறவையின் உடம்பில் உள்ள ஓர் உயிர் போல் உள்ளோம்.
இரண்டு தலைப் பறவைக்கு தலைகள் மட்டுமே இரண்டு.ஆனால் வயிறு ஒன்றுதான். கபிலர் பாடிய பாடலில் இருவர் இருந்தாலும் உயிர் ஒன்றுதான் எனப் பாடியுள்ளார். அந்தக் காலத்தில் இந்தியா முழுதும் இப்பறவை பற்றி தெரிந்திருக்கிறது. ஆகையால் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட வடமொழி நூலான பஞ்ச தந்திரக் கதையிம் இப்பறவை வருகிறது. புறாக்கள் அனைத்தும் வேடனின் வலையில் சிக்கி அவை அனைத்தும் ஒன்றாகப் பறந்து சென்று வேடனை ஏமாற்றிய கதையை அனைவரும் அறிவோம். அந்தக் கதையில் ஒரு துணைக் கதையாக கண்ட பேரண்ட பட்சி கதை வருகிறது. இரு தலை பறவையின் இரண்டு தலைகளும் ஒன்றுக்கொன்று சண்டை யிடும் கதை. ஒரு தலை தனக்கு அம்ருதம் வேண்டும் என்றும் இன்னொரு தலை தனக்கு விஷம் வேண்டும் என்றும் சண்டை போடுகின்றன. இறுதியில் ஒரு தலை விஷம் அருந்தவே அப்பறவை இறக்கிறது. ஒற்றுமையின்மையால் இருதலைப் பறவை இறக்கும் கதை இது.

சங்கத் தமிழ் நூல்களான பரிபாடல் (8-72), கலித்தொகை (89), பிற்கால நூலான தகடூர் யாத்திரை ஆகியவற்றிலும் இருதலைப் பறவை உவமை வருகிறது.அந்த அளவுக்குப் பிரபலமான கதை. சேர மன்னனும் அதியமானும் ஒரே குலத்தவராயிருந்தும் சண்டை போட்டதற்கு உவமையாக தகடூர் யாத்திரை இதைக் காட்டுகிறது. சுமேரியாவில் இது லகாஷ் நகர தெய்வம் நினூர்தாவின் சின்னமாகக் கருதப் பட்டது.

துருக்கியில் ஹட்டுசா முதலிய நகர்களில் இது இரண்டு தலைகளாலும் இரண்டு முயல்களைத் தூக்குவது போல பெரிய உருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இது கி. மு 1400ல் செதுக்கப் பட்டது.துருக்கியின் வரலாற்றில் பின்னிப் பிணைந்துவிட்ட இப்பறவைக்கு வானத்தில் விண்கலத்திலிருந்து பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்டமான ஒரு வடிவத்தை எர்சூரும் மாகாணத்தில் இப்போது கட்டிவருகிறார்கள்.

flag_of_albania
Flag of Albania

நாயக்க மன்னர் காலத்தில் இப்பறவை மிகப் பலம் வாய்ந்த டினோசர் பறவை போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அச்யுத ராயர் (1530-1542) வெளியிட்ட தங்க நாணயத்தில் இரண்டு யானைகளைத் தூக்குவது போல படம் உள்ளது. அவ்ருக்கு முந்திய மன்னன் நாகரி எழுத்தில் பெயரை மட்டும் பொறித்தான்.

தமிழ்நாட்டில் ஆவுடையார் கோவில் ஒவியத்தில் இது பல யானைகளைத் தூக்குவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. கர்னாடகத்தில் கேலடி கோவில் சிற்பத்திலும்,தட்சசீலத்தில் சமணர் கோவில் சிற்பங்களிலும் இப்பறவை உண்டு. ஸ்ரீசைலம்,பேலுர்,கோரமங்கலா கோவில்களிலும் இதைக் காணலாம்.

achyuta-raya-gold

அச்யுத ராயரின் தங்கக் காசு

மைசூர் மன்னர் உடையார், இதை 500 ஆண்டுக் காலமாக ராஜவம்ச சின்னமாக பயன்படுதுகின்றனர். இன்றும் அரண்மனையில் இதைக் காணலாம். கர்நாடக அரசும் இதை தனது சின்னத்தில் பொறித்துள்ளது.
இப்பறவை ரஷ்ய நாணயங்கள், கரன்சி நோடுக்கள், அல்பேனியா,பல்கேரியா தபால் தலைகள், தேசியக் கொடி எல்லாவற்றிலும் இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் இரு தலைப் பறவை இல்லாத இடமே இல்லை. 2000 ஆண்டுகளுக்கு முன் கபிலர் பாடிய இப்பறவை எங்கெல்லாம் பறந்து செண்றுவிட்டது!!

அல்பேனியாவின் தேசியக் கொடி ரஷ்ய ரூபிள் நாணயம்

குறுந்தொகையில் இருதலைக் குழந்தை

சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் ஒரு இரு தலைக் குழந்தை Siamese Twins பற்றிய சுவையான செய்தி வருகிறது. பாடல் எண் 324 ஐ எழுதியவர் பெயரே கவைமகன்.அதாவது இருதலை உடையோன். கவட்டை, ஆங்கிலச் சொல் gap ஆகியவை இதனுடன் தொடர்புடைய சொற்களாக இருக்கலாம்.

ரிக் வேதத்தில் பெயர் தெரியாத மிகப் பழைய புலவர்களுக்கு அவர்கள் பயன் படுத்தும் சொற்றொடர்களைக் கொண்டு பெயரிடப் பட்டதாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ளனர். ஐந்தாம் நூற்றாண்டில் தமில் இலக்கியத்தைப் பகுத்து வைத்தோரும் அதே நடை முறையைப் பயன் படுத்தி ஏறத்தாழ 20 புலவர்களுக்கு இப்படி காரணப் பெயர்களை இட்டுள்ளனர்.
siamese
Siamese Twins

கவைமகன் (twins or Siamese Twins) எழுதிய குறுந்தொகை 324 ல் இருதலைப் புள்
போலவே கருத்து கூறியுள்ளார்.
கவை மக நஞ்சு உண்டா அங்கு,
அஞ்சுவல் பெரும! என் நெஞ்சத்தானே.
— கவை மகனார்

பொருள்: இத்தலைவியோ தன் அறியாமையினால் வருந்துகின்றாள். யான் என் மனத்தினுள்ளே இரட்டைப் பிள்ளைகள் நஞ்சுண்டால் இருவர் திறத்தும் ஒரு தாய் வருந்துவதைப் போல நீ அங்கனம் வருதலை எண்ணி அஞ்சுவேன்.

ஒட்டிப் பிறக்கும் இருதலை குழந்தை மிகவும் அபூர்வம்.ஒரு லட்சத்தில் ஒர்ன்றுதான் இப்படிப் பிறக்கும்.அக் குழந்தைகளை ஆபரேஷன் செய்து தனியே பிரிக்க 18 மணி நேரம் கூட ஆகும்.இப்படிப் பட்ட நீண்ட நேர அறுவைச் சிகிச்சைகள் அண்மையில் நடந்தன.
மேற்கூறிய கவை மகன் உவமையில் ஒரு தலை விஷம் உண்டால் மறு தலையும் இறக்கும் என்பது விளக்கப் பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் இக் கட்டுரையைப் படிக்க விரும்புவோர் Please go to swamiindology.blogsot.com or tamilandvedas.wordpress.com
coin

இதே பொருள் பற்றிய முந்தைய கட்டுரைகள்:
Double headed Eagle: Sumerian Indian Connection (posted on 18-12-2011)
Birds for Finding Direction: Sumerian to Tamil Nadu via Indus Valley (8-4-13)
Hindu Eagle Mystery Deepens Feb.16, 2013
Karikal Choza and Eagle Shaped Fire Altar
Are Mayas, Hindu Nagas?
Four Birds in One Sloka
Hindu Vahanas around the World
Gods and Birds
Vishnu Seal in Indus Valley Civilization
Bahrain (Dilmun) Mysteries (posted 10-11-2012)
Confusion about Vedic Soma Plant (Posted on 5-5-2013)
பஹ்ரைன் அதிசயங்கள்“( posted 7-11-2012)
Contact swami_48@yahoo.com

Leave a comment

Leave a comment