யார் மிக மிகக் கீழானவன்?

 

Picture of Hare Krishna Bhajan and dance

சம்ஸ்கிருதச் செல்வம்-2 by S Nagarajan

2. யார் மிக மிகக் கீழானவன்?

 

கவிஞருக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது – யார் மிக மிகக் கீழானவன் என்று! அது தெரிந்து விட்டால் அப்படிப்பட்டவருடைய தொடர்பை அறுத்து விடலாமில்லையா!

 

சிலர் சொன்னார்கள் பணம் இல்லாதவன் தான் கீழானவன் என்று.

 

கேசித் வதந்தி தனஹீன ஜனோ ஜதன்ய:

சிலர் தனஹீனனைக் கீழானவன் என்று சொல்கின்றனர்

என்று பதிவு செய்து கொண்டார்.

 

பின்னர் மற்றும் சிலரைப் பார்த்துக் கேட்டார். அவர்களோ குணமில்லாதவன் தான் கீழானவன் என்றனர். நற்குணமில்லாதவர்கள் தாம் கீழானவர்கள் என்று அவர்கள் சொல்வதும் கவிஞருக்குச் சரியாகத் தான் பட்டது. அப்படியே அதைப் பதிவு செய்து கொண்டார்.

 

கேசித் வதந்தி குணஹீன  ஜனோ ஜதன்ய:

சிலர் குணஹீனனையே கீழானவன் என்று சொல்கின்றனர்.

 

தனஹீனனா அல்லது குணஹீனனா – இருவரில் யார் கீழானவன்!

 

குழம்பிய கவிஞரின் முன் வியாஸ பகவான் வந்தார்.

கவிஞர் தன் சந்தேகத்தை அவரிடம் கேட்க அவர் புன்முறுவல் பூத்தார். இருவரும் கீழானவர் இல்லை என்று கூறிய அவர் சரியான பதிலைச் சொல்லி விட்டுச் சென்றார்.

 

புளகாங்கிதம் அடைந்த கவிஞர் அதை அப்படியே பதிவு செய்து உலக மக்களின் நன்மைக்காக முழுவதுமாகப் பாடி வைத்தார்.

Picture of Harekrishna Chariot Procession in London

வியாஸர் சொன்னது என்ன?

 

வ்யாஸோ வதத்யகிலவேத விசேஷவிக்ஞோ

நாராயண ஸ்மரணஹீன  ஜனோ ஜதன்ய:

 

அகில வேதத்திலும் விசேஷ ஞானத்தை உடைய வியாஸ பகவானோ நாராயணனை ஸ்மரணம் செய்யாதவனே உண்மையில் மிக மிகக் கீழானவன் என்றார்.

 

பாடலை முழுவதுமாகப் படித்து பெரும் உண்மையை நமக்காகத் தந்த கவிஞருக்கு நன்றி சொல்வோம்!

 

 

கேசித் வதந்தி தனஹீன ஜனோ ஜதன்ய:

கேசித் வதந்தி குணஹீன  ஜனோ ஜதன்ய: I

வ்யாஸோ வதத்யகிலவேத விசேஷவிக்ஞோ

நாராயண ஸ்மரணஹீன  ஜனோ ஜதன்ய: II

 

சிலர் தனஹீனனாக உள்ளவர்களைக் கீழானவர் என்று சொல்கின்றனர். சிலரோ குணஹீன ஜனங்களைக் கீழானோர் என்று சொல்கின்றனர். அனைத்து வேதங்களிலும் விசேஷ அறிவு படைத்தவரான வியாஸரோ நாராயண ஸ்மரண ஹீனனாக உள்ளவரையே மிகக் கீழானவர் என்று சொல்கிறார்!

 

அரிய உண்மையைத் தெரிந்து கொண்டோமல்லவா! நாராயணனை அனுதினமும் ஸ்மரிப்போமாக!!

 

இது அமைந்துள்ள சந்தம் வசந்ததிலகா சந்தம்!

 

***************

Leave a comment

Leave a comment