கடவுளுக்கு சவால்!

simpsonz

கடவுளும் விஞ்ஞானிகளும்

கடவுளுக்கு சவால்குரங்கு அடிக்கப் போன ஷேக்ஸ்பியர் கவிதை!

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by S NAGARAJAN

Date: 23 September 2015

Post No: 2182

Time uploaded in London :– 13-26

(Thanks  for the pictures) 

 

 

.நாகராஜன்

 

கடவுளுக்கு சவால்!

படைப்பு என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; எல்லாம் நம்மாலேயே செய்ய முடியும் என்றார் ஒரு விஞ்ஞானி.

அந்த நகரிலிருந்த பெரியவரிடம் அனைவரும் அந்த விஞ்ஞானியின் அதிசயமான கூற்றைத் தெரிவித்தனர்பெரியவர் விஞ்ஞானியிடம் வந்தார்.

பெரியவர் கேட்டார்:- “நீங்கள் கடவுளைப் போல எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று கூறுகிறீர்களாமே!”

 monkeysshakespeare

 

விஞ்ஞானி முழங்கினார்:+ “ நீங்கள் சொல்வதில் ஒரு திருத்தம்! கடவுளே இல்லை என்கிறேன். எல்லாவற்றையும் மனிதனால் செய்ய முடியும்!”

பெரியவர் விஞ்ஞானியிடம் ஒரு பந்தையும் பேட்டையும் கொடுத்தார்.அவர் ஒரு உயிரியல் விஞ்ஞானி என்பதோடு அவர் ஒரு குரங்கை வளர்ப்புப் பிராணியாக வளர்த்து வந்ததும் பெரியவருக்குத் தெரியும்.

பெரியவர் சொன்னார்:”ஓஹோ! சரி, பெரிய விஷயம் எல்லாம் பேச வேண்டாம். இதோ கொடுத்திருக்கிறேனே, பேட், பந்து, இரண்டையும் உங்கள் செல்லக் குரங்கிடம் கொடுங்கள். அதற்கு பேட் மூலம் பந்து விளையாடக் கற்றுக் கொடுங்கள். நீங்கள் சொல்வதை எல்லாம் அப்புறம் கேட்கிறோம்!”

 

 

பூ! இது சுலபம்என்றார் விஞ்ஞானி. அனைவரும் கலைந்தனர்.

விஞ்ஞானி குரங்கிற்கு பந்து விளையாடக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். பேட்டையும் பந்தையும் வைத்து எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார். நாட்கள் ஓடின. குரங்கு பந்து விளையாடக் கற்கவே இல்லை.

கடைசி முயற்சியாக குரங்கை பேட், பந்துடன் ஒரு அறையில் வைத்துப் பூட்டினார். நெடு நேரம் கழித்து ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க அவர் கதவின் சாவித் துவாரம் வழியே பார்த்தார்.

மறுமுனையில் குரங்கு தன் விழிகளை வைத்து இந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தது!

 

விஞ்ஞானி அன்றிலிருந்து தன்னால் எதையும் செய்ய முடியும் என்று சொல்வதை நிறுத்தி விட்டார். பெரியவர் புன்முறுவல் பூக்க அனைவரும் வழக்கம் போல கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுதனர்.

கோவிலில்அலகிலா விளையாட்டுடையான்சிரித்தான்!

 

 darwin_italy_stamp

சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை    

காலம் காலமாக எதையாவது புதுக் கொள்கையாகச் சொல்வது அறிஞர்களுக்கு ஒரு விளையாட்டு. ஆனால் அவர்களின் பல கொள்கைகள் கால வெள்ளத்தில் ஈடு கொடுத்து நிற்க முடிவதில்லை!

எவல்யூஷன்’ – பரிணாம வளர்ச்சிஎன்ற கொள்கையை முன் வைத்தார் சார்லஸ் டார்வின். ஆனால் அது தோன்றிய காலம் தொட்டே சர்ச்சைக்குள்ளாகி  படாதபாடு பட்டது.

 

 

ஆனால் தாமஸ் ஹக்ஸ்லி (Thomal Huxley) அதை பலமாக ஆதரித்தார்.அவர் சிறந்த உயிரியல் வல்லுநர் (eminent biologist)

குரங்கிலிருந்து பிறந்தவனே மனிதன் என்று அடித்துக் கூறினார் அவர். அதற்கும் ஒரு படி மேலே போய் ஒரு குரங்கு டைப் அடித்துக் கொண்டே இருந்தால் அது ஷேக்ஸ்பியரின் கவிதையைக் கூட டைப் அடித்து விடும் என்றார்.

அவரது, ‘Monkeys might type Shakespeare’ என்ற வாக்கியம் பிரசித்தமானது. அவ்வளவு தூரம் இங்கிலாந்தின் சொற்பொழிவு அரங்கங்களில் அந்தக் கருத்தை அவர் முழங்கி வந்தார்.

 

 

பரிணாம வளர்ச்சி கடவுளுக்கு எதிரான சவால் என்று விஞ்ஞானிகளும்பகுத்தறிவுகளும்மகிழ மக்களோ முழித்தனர். எது உண்மை?

 

 cartoon

குழுவினரும் குரங்குகளும்       

இதற்கு ஒரு முடிவு கட்ட ஒரு குழு முன் வந்தது. இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ள ப்ளிமத் பல்கலைக்கழகத்தைச் (Plymouth University) சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் அடங்கிய குழு தான் அது. இந்த மாணவர்கள் மீடியா லாப் ஆர்ட்ஸ் (Media Lab Arts Course) என்ற பாடத்திட்ட வகுப்பில் பயில்பவர்கள்.

 

இதற்கான ஆராய்ச்சியை அறிவியல் ரீதியில் நடத்த நாங்கள் தயார் என்று குழுவினர் அறிவித்தனர். 2000 பவுண்டு நிதி உதவி உடனே அளிக்கப்பட்டது. (ஒரு பவுண்டு இன்றைய மதிப்பில் சுமார் 101 ரூபாய்; ஆராய்ச்சி நடந்த காலத்தில் குறைவு தான்!) மத்திய இந்தோனேஷியாவில் இருந்த சோலை குரங்குகள் ஆறை வாங்கினர் குழுவினர்.

 

இதற்காக தேவான் என்ற இடத்தில் உள்ள பைக்ங்டன் மிருகக்காட்சிசாலையில் (Paignton Zoo, Devon) ஒரு தனி அறை அமைக்கப்பட்டது. ஒரு கம்ப்யூட்டரும் நிறுவப்பட்டது. குரங்குகளின் இலக்கிய இன்பம்எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை அன்றாடம் அவ்வப்பொழுது கண்காணிக்க குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

 

ஒரு மாத தீவிர முயற்சியில் அந்த சோலை மந்திகள் கம்ப்யூட்டரை உடைத்ததோடு அதைத் தங்கள் கழிவறையாகவும் பயன்படுத்தியதைக் கண்டு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அதைக் கேட்ட மக்களோ விழுந்து விழுந்து சிரித்தனர்.

 shakes, falkland

ஷேக்ஸ்பியரை குரங்குகள் மதிக்கவே இல்லை!!

ஒரு குரங்கு ஐந்து பக்கங்களில் ‘S’ என்ற வார்த்தையை மட்டும் அடித்துத் தள்ளி இருந்தது!

 

 

குரங்கின் மீதல்ல ஜோக், கொள்கையின் மீதே தான்!

 

ஆய்வுத் தலைவரான விரிவுரையாளர் ஜெஃப் காக்ஸ் (Geoff Cox) தங்களது ஆய்வின் முடிவை அறிவித்துக் கூறுகையில், “காலப் போக்கில் பரிணாம வளர்ச்சி அடைவதைக் குறிக்கும் ரேண்டம் ப்ராசஸ் (Random Process) முறை மூலம் மிருகங்கள் ஒரு போதும் வளர்ச்சி அடையாது என்பதையும் மிருகங்களைக் கம்ப்யூட்டர் மட்டத்திற்கு கொண்டு வர முடியாது என்பதையும் எங்கள் ஆய்வு உறுதி செய்கிறது. இந்த ஆய்வில் ஜோக் ஏதாவது இருப்பதாக எண்ணி நீங்கள் மகிழ்வீர்களானால் அந்த ஜோக் குரங்குகளின் மீது (அல்லது அதன் செயல்பாடுகளில்) இல்லை. உண்மையில் ஜோக் அந்த பரிணாம வளர்ச்சி கொள்கையில் தான் இருக்கிறதுஎன்றார்.

 

paington 

 

ஊடகத்தின் கொண்டாட்டம்

 

இது என்ன, பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதையாய் இருக்கிறதே என்கிறீர்களா! இல்லை உண்மையில் குரங்கு அடிக்கப் போய் கம்ப்யூட்டர் டாய்லட் ஆன கதை தான் இது!

விஷயம் பிரமாதமான விஷயம் இல்லையா! வரிந்து கட்டிக் கொண்டு ஊடகங்கள் ஆய்வுக் குழுவினரை (குரங்குகள் கூடவே இருக்கும் போது தான்!) முற்றுகை இட்டன.

 

உலகளாவிய விதத்தில் ஆய்வு முடிவுகள் ஒளிபரப்பப்பட்டன. லண்டனில் பிரபல பத்திரிகையான டைம்ஸ்இல், நிருபர் சாம் லிஸ்டர் (Times, Sam Lister) செய்தியை வெளுத்துக் கட்டி விட்டார். (இதை ஸ்டேட்ஸ்மென் ஆங்கில நாளிதழ் 10-5-2003 இதழில் வெளியிட்டது)

 

 darwin russia

சார்லஸ் டார்வினின் கொள்கை சந்தி சிரிப்பது ஒரு புறம் இருக்கட்டும்; கடவுளை அடிக்கடி சவாலுக்கு இழுக்கும் விஞ்ஞானிகளின் விளையாட்டு தான் திண்டாட்டத்தில் முடிகிறதுஒவ்வொரு முறையும்!

அலகிலா விளையாட்டுடையான் அவன்!

அவனிடமே ஒரு விளையாட்டா???!!!

****************

Sringeri Acharya’s Advice on Anger Management!

shiva abhinava bharati

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by London swaminathan

Date: 22 September 2015

Post No: 2181

Time uploaded in London :– 20-08

(Thanks  for the pictures) 

A Forest Officer who was camping a few miles off Sringeri came there and paid respects to His Holiness Sri Sachidananda Siva Abhinava Narasimha Bharati Svaminah (33rd Acharya of Sarada Mutt between 1879 and 1912).

F.O: I am in the forest department and, as happened to camp in the hills about ten miles from here and learnt that Sringeri was so neat it struck me that I might worship Sri Sarada Devi and pay my respects to you, my hereditary Guru, though I cannot claim to have any orthodox leanings and habits.

HH: I am glad you have come. It is past ten o’clock. You may take your breakfast in the mutt and then go.

F.O: I have to return to my camp forthwith. I pray for your gracious blessings and for any practical advice which even I can follow in spite of my drawbacks.

HH: There is no occasion at all for despair in anybody born of a respectable family. Are you the top most officer in your department?

anger-management-stress-ball-set-67

F.O: Not so. But I am fairly high in the ladder.

HH: I suppose you get frequent occasions which make you angry in the course of your employment.

F.O: Very often.

HH: That is, you have occasion to get angry with your subordinates?

FO: Yes.

HH:  Suppose your anger is not quite justifiable, will your subordinate point it out to you?

FO: He will not have the courage to do so.

HH: If your anger is not justified and if he cannot say it to you, will he not have a sense of resentment?

FO: He may have.

HH: But he cannot show it to you?

FO: If he does show it, his job will be in danger.

HH: How is he then to give vent to his resentment?

F.O: If he chooses, he may visit it on his subordinates.

HH: Will it be proper to direct the resentment against the subordinate when the latter is quite innocent and does not in the least merit it? Will not that subordinate resent such treatment and how is he to give vent to his resentment?

F.O: He must pass it on to a lower official.

HH: It appears therefore that if you unnecessarily get angry, it gives rise to a chain f unnecessary angers and you are primarily responsible for it.

F.O: It may be so. But what can I do?

anger book

HH: People who get angry may be classified under three categories: 1. those that know they are GOING to get angry, 2.those that know that they ARE angry and 3those that they know they WERE angry. Ordinarily the majority belong to the third category. To which category do you belong?

F.O: I think I can feel the anger coming on.

HH: I am very glad to hear it. There must be an interval ever so short between your feeling like that and the actual anger. You may just utilise that interval to think for a moment whether you really need to get angry. If you find that anger is not really so urgent, you may prevent the anger coming on. If the person KNOWS that he is in angry mood, even he may stop for a moment to think whether it is necessary to persist in that mood any longer; if he does so, the anger will lose its momentum. A person who gives way to anger and is aware of it only AFTER he has given vent to it may in his calm moments consider whether the anger he gave vent to was justified; he will be then more careful when he gets angry next time. Thus in all three cases a kind of self-enquiry at the time or later on will easily blunt the edge of anger and he may ultimately get rid of it altogether. It will be very useful if you bear that in mind.

AngerBall

Then the officer took leave of His Holiness and rode his horse back to his tent. It was past one o’clock and the ride for twenty miles had been a tiring one especially in the hot sun so much so that he felt very hungry. As soon as he entered the tent, the cook hastened to place before him a silver plate with a small rice cake in it and also a cup of water. Having missed a sumptuous breakfast at the Mutt and being faced with such a scanty fare before him, he naturally felt a surge of anger coming up with him, he naturally felt a surge of anger coming up with him but before he gave vent to it, he remembered the advice of His Holiness, put a check on his temper and began to question the cook.

F.O: You know I shall be coming late and hungry. How is that you have not prepared the regular meal yet? Is it proper to offer me now this small cake?

Cook: I certainly know. The servant who went down the hills to purchase the provisions has not yet turned up and, as I felt that you must have something to sustain you till he comes and till I prepare the meal, I got together what rice flour I had here and prepared the cake.

F.O: If you have used up all the available flour and if you are to have your meal after preparing the meal and serving me, what will you do then?

Cook: It does not matter. I am accustomed to late meals. But you are not. Hence I prepared this.

The forest officer realised that he was about to get angry with a faithful servant who had so affectionately cared for him and he insisted upon the cook sharing that cake with himself. It need hardly be said that, in course of time, he completely got rid of his anger and, with deep devotion and gratitude to His Holiness for His Gracious blessings and advice, began to resume his traditional habits and earned the status of an earnest devotee.

anger-in-the-workplace-233x300

N.B: There are few more anecdotes which I will post separately: swaminathan

Source: GOLDEN SAYINGS, Compiled by Shri Jnanananda Bharati Svaminah, year of publication 1969,  Shri Jnananda Grantha Prakasana Samiti, Thenkarai, Madura District

–Subham–

நம் பந்தம் போக்க வந்த சம்பந்தர்!

sambadar

திருஞான சம்பந்தர் சிலை

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by S NAGARAJAN

Date: 22 September 2015

Post No: 2180

Time uploaded in London :– 14-25

(Thanks  for the pictures) 

 

 

தேவார சுகம்

நம் பந்தம் போக்க வந்த சம்பந்தர் கவசம் அணிவோம்!

 

.நாகராஜன்

 

சமணரை வென்று சைவம் தழைக்கச் செய்த சம்பந்தர்

சூறாவளிப் புயல் போல பாரதமெங்கும் சுற்றி, தேவையற்றவைகளை அகற்றி, புற மதத்தவரின் வாதங்களைத் தகர்த்து, ஷட் மதங்களை ஸ்தாபித்த ஆதி சங்கரர் உலக வரலாற்றில் ஓர் அற்புதம் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடும்போதே அதற்கு இணையான ஒரு அதிசயம் அவர் வயதில் பாதி வயதே வாழ்ந்து சமணர்களின் சூழ்ச்சிகளைத் தவிடு பொடியாக்கி சைவத்தைத் தழைத்தோங்க வைத்த சம்பந்தரின் அவதாரம் என்றால் அது மிகையல்ல!

16 ஆண்டுகளே வாழ்ந்தார். பாலனாக இருந்து பரமனுடன் நேரடியாக உடலுடன் சேர்ந்தார்சூழ இருந்தவர்களையும் அழைத்துக் கொண்டு! வரலாற்றில் இது போன்ற நிகழ்ச்சி இது ஒன்றே ஒன்று தான்!

அதுவும் இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் தான் நடந்தது.

இறைவியிடம் பால் குடித்த மூன்று வயது பாலகன். தோடுடைய செவியன் என்று கண்ணாரக் கண்ட இறைவனைப் பாடத் தொடங்கினார்.

பாடிக் கொண்டே இருந்தார்தெய்வத் தமிழில்.

சமணர்கள் கொடுமைப் படுத்த, சைவர்கள் நடுங்கி ஒடுங்கி இருக்கப் புயலென எழுந்தார் அந்தப் புனிதர்.

மதுரையில் அவரை எதிர்கொண்டு அழைக்க வந்த பாண்டிய மஹாராணியார் ஒரு பாலனைப் பார்க்கவே வியப்பும் குழப்பமும் அடைந்தாள்.

மஹாசூழ்ச்சிக்காரர்களான சமணர்களின் மாயாஜால சித்து வேலைகளை, பால் மணம் மாறாப் பச்சிளம் பாலகனா வெல்ல முடியும். வெல்லுவது இருக்கட்டும், பாலகனுக்கு எந்த விதத் தீங்கும் ஏற்பட்டு விடக் கூடாதே என்று அந்தத் தாயுள்ளம் உருகியது. கருணை பொங்கும் விழிகளால் சம்பந்தரை அவள் பார்த்தாள். அதில் பொங்கி வந்த கருத்து வெள்ளத்தை உணர்ந்த சம்பந்தர் ஒரு போடு போட்டார் இப்படி:-                                                              

மானின் நேர் விழி மாதராய்! வழுதிக்கு மாபெரும் தேவி!

apparsambandar

கேள்!

பானல் வாயொரு பாலன் ஈங்கிவன் என்று நீ பரிவு எய்திடேல்” 

(பாண்டிமாதேவியே, என்ன பயந்து விட்டாயா? என்னை பாலன் என்று எண்ணி பயப்படாதே!)

ஆனைமாமலி ஆதியாய இடங்களில் பல அல்லல் சேர் ஈனர்களுக்கு எளியேன் அலேன்!

(இந்த ஈனர்களுக்குச் சரியான ஆள் நான் தான்! இவர்களை மட்டும் அல்ல; இன்னும் மோசமானவர்களையும் சந்திக்கத் தயார்!)

திரு ஆலவாய் அரன் நிற்கவே!

(என்னை யாரென்று எண்ணி, நீ பார்க்கிறாய்! நான் பார்வதியின் மைந்தன் கந்தனே! அந்த சிவனுக்கே தகப்பன் சாமி நான்)

இந்த ஒரு பாடலில் முழித்துக் கொண்டவள் தான் மஹாராணி! ‘எனக்கென்ன மனக்கவலைஎன்று முழுப் பொறுப்பையும் அவரிடம் கொடுத்து விட்டாள்.

விளைந்தது பல லீலைகள்! சமணர் கழுவேற, தமிழ் நாட்டில், சைவம் நிலை கொண்டது.

திருஞானசம்பந்தர் பதினாறாயிரம் பதிகங்கள் (ஒரு பதிகம் என்பது 10 பாடல்கள்) அருளிச் செய்ததாக ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதிஎன்ற தனது நூலில் நம்பியாண்டார் நம்பி குறிப்பிடுகிறார். ஆனால் நமக்குக் கிடைத்திருப்பதோ 383 பதிகங்களே. பாடல் எண்ணிக்கையில் கணக்கிட்டால் நம்மிடம் இன்று இருப்பது சுமார் 4147 பாடல்களே!

Boy saint Sambandhar meeting Appar the great.

பற்று விட ஒரு பற்று பற்றுக!

பற்றுகள் எல்லாம் போக பற்றற்றவனை ஒரே பற்றாகப் பற்று என்றார் திருவள்ளுவர். அதே வழியில் நம் பந்தமெல்லாம் போக some பந்தம்தேவை தானே! ஒரே ஒரு பந்தமாக நம் பந்தம் போக்க வந்த சம்பந்தரைக் கொண்டு விட்டால் கவலை ஏது, இனி!

அவர் பாடல்கள் எதுவானாலும் சிவ புண்ணியம் இருந்தால் மட்டுமே அதைப் பாட முடியும், படிக்க முடியும். அனைத்துமே சிவ அருள் தருபவை. மாதிரிக்காகச் சில பாடல்கள் இதோ!

இந்த சம்பந்தர் பாடல்கள் என்னும் சம்பந்தர் கவசத்தை அணிந்து கொண்டால் எந்த வினையும் வந்த வழி போய் விடும்.

சம்பந்த கவசம் நம் பந்த வினை அறுப்பதோடு இன்னும் ஒரு நன்மையையும் தருவதை அவரே திருச்சிராப்பள்ளி, ‘நன்றுடையானைப் பதிகத்தில்அருளுகிறார் இப்படி:-

ஞானசம்பந்தன் நலம் மிகு பாடல் இவை வல்லார்                               

வான சம்பந்தத்து அவரோடு மன்னி வாழ்வாரே!”

ஆக வான சம்பந்தம் விழைவோரெல்லாம் வாருங்கள்; அவர் பாடல்களைப் படிப்போம்; அருள் பெறுவோம்!

வான சம்பந்தம் பெற ஞானசம்பந்தர் பாடல்கள்!

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்                            

காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன்                                

ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்தேத்த அருள்செய்த                         

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

இடரினும் தளரினும் எனது உறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்

நனவினும் கனவினும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன்

காதல் ஆகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது, வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது, நாதன் நாமம் நமச்சிவாயவே

thiruganasambandar

 “துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்                                                           

நெஞ்சு அகம் நைந்து நினைமின் நாள்தொறும்                                                                                      

வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று                                               

அஞ்ச உதைத்தன அஞ்சு எழுத்துமே

மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு                                      

சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு                                                   

தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு                                            

செந்துவர்வாய் உமைபங்கன் திருஆலவாயான் திரு நீறே

நாள் ஆய போகாமே நஞ்சு அணியும் கண்டனுக்கே                                    

ஆள் ஆய அன்பு செய்வோம் மட நெஞ்சே

வெய்ய வினை தீர, ஐயன் அணி ஆரூர்                                            

செய்ய மலர் தூவ, வையம் உமது ஆமே

மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்                               

 நிறையவன் உமையவன் மகிழ் நடம் நவில்பவன்                                

இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்                                              

உறைவு என உடையவன் எமை உடையவனே

நீறு பூசினீர், ஏறு அது ஏறினீர்                                                            

கூறு  மிழலையீர் பேறும் அருளுமே

 “நீ நாளும் நன்னெஞ்சே நினை கண்டாய் யாரறிவார்                                 

சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம் பெருமாற்கே                              

பூநாளும் தலைசுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப                                     

நாநாளும் நவின்று ஏத்தப் பெறலாமே நல்வினையே

என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து                        

முன்னம் நீ புரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்                           

மன்னு காவிரி சூழ் திருவலஞ்சுழி வாணனை வாயாரப்                              

பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்                                 

எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலைக்                                          

கண்ணின் நல்லஃது உறும் கழுமல வளநகர்ப்                                          

பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா                                   

காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

(குறிப்பு: இந்தப் பாடலை கடைசி எழுத்திலிருந்து மாற்றிப் படித்தாலும் அதே பாடலே வரும். சீர்காழியில் பாடிய திருமாலைமாற்றுப் பாடல் இது!)

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்                                         

சோதிக்க வேண்டா சுடர் விட்டு உளன் எங்கள் ஜோதி                             

மா துக்கம் நீங்கல் உறுவீர் மனம் பற்றி வாழ்மின்                                  

சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே

வாழ்க அந்தணர் வானவர் ஆன் இனம்                                                 

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக                                                     

ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே                                                        

சூழ் வையகமும் துயர் தீர்கவே

*****

 

நாய்வாலை நிமிர்த்த முடியாது!

dog,monkey1

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by London swaminathan

Date: 22 September 2015

Post No: 2179

Time uploaded in London :– 14-06

(Thanks  for the pictures) 

பிறவிக் குணம், சுபாவம் பற்றிய பொன்மொழிகள்

1.அங்கார: சததௌதேன மலினத்வம் ந முஞ்சதி

கரியை நூறு தடவைக் கழுவினாலும் அதன் கறுப்பு நிறம் போகாது

(ஒப்பிடுக: நாய் வாலை நிமிர்த்த முடியாது)

crow

2.ஆஜன்ம உன்மஜ்ஜது துக்தசிந்தௌ ததாபி காக: கில காக ஏவ

பிறந்த நாள் முதல் பாற்கடலில் மூழ்கினாலும் காகத்தின் கறுப்பு நிறம் போகாது

3.அதீத்ய ஹி குணான் சர்வான் ஸ்வபாவோ மூர்த்னி திஷ்டதி – ஹிதோபதேசம்

எல்லா குணங்களையும் மீறி ஒருவனுடைய சுபாவம் தலைதூக்கி நிற்கும்( அதாவது பிறவிக் குணம் மாறாது)

4.சுதப்தமபி பானீயம் புனர்கச்சதி சீததாம் – பஞ்சதந்திரம்

ஒப்பிடுக: சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

நன்றாகச் சூடேற்றினாலும், நீரின் குணம் குளிர்ச்சிஅடைவதுதான்

பெரியோரின் குணமும் அப்படித்தான்.

குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது (குறள்).

5.சுதப்தமபி பானீயம் சமயத்யேவ பாவகம்- பஞ்சதந்திரம்

நல்ல கொதிக்கும் நீரானாலும்

நெருப்பை அணைக்கத்தான் செய்யும்.

(ஒப்பிடுக: தேளைக் காப்பாற்றினாலும் அது கொட்டத்தான் செய்யும்)

6.ஸ்வபாவம் நைவ முஞ்சந்தி சந்த: சம்சர்கதோ அசதாம்

ந த்யஜந்தி ருதம் மஞ்சு காகசம்பர்கத: பிகா: – த்ருஷ்டாந்த சதகம்

தீயோர் சஹவாசம் இருந்தாலும் நல்லோர் கெடுவதில்லை; காகத்துடன் சம்பந்தம் வைத்திருந்தாலும் குயில்கள் அதன் இனிமையான குரலை விடுவதில்லை

ஒப்பிடுக:-புகைக்கினும் நன்மணம் குன்றாது   …. சங்கு சுட்டாலும் வெண்மைதரும்

7.ஸ்வபாவோ யாத்ருசோ யஸ்ய ந ஜஹாதி கதாசன – சாணக்ய நீதி

ஒருவர், தன் சுபாவத்தை விடுவதே இல்லை

476_Lion

8.ஸ்வபாவோ ஹி துரதிக்ரம: – ஹிதோபதேசம்

ஒருவரின் சுபாவமானது மீறமுடியாதது.

9.அனுஹூங் குருதே கனத்வனிம் நஹி கோபாயுருதானி கேசரி – சிசுபாலவதம்

இடியோசை கேட்டால் சிங்கம், பதிலுக்குக் கர்ஜிக்கும்; சிறு மிருகங்களின் சப்தத்துக்கு பதில்தராது.

ஒப்பிடுக: யானையைப் பார்த்து குரைத்த நாய் போல

10.ஆகண்ட ஜலமக்னோபி ஸ்வா லிஹத்யேவ ஜிஹ்வயா – சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

பால் ஆறாக ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்.

ஒப்பிடுக: காவேரி கஞ்சியாய் ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்

11.ந ஸ்வபாவோ அத்ர மர்த்யானாம் சக்யதே கர்துமன்யதா – பஞ்சதந்திரம்

பூவுலகிலுள்ளவர்களின் சுபாவத்தை (இயல்பான குணத்தை) மாற்ற இயலாது

dog ele

12.நஹி கஸ்தூரி காமோத: சபதேன விபாவ்யதே – சமயோசித பத்ய மாலிகா

கஸ்தூரியின் மணத்தை ஒருவர் சபதம் செய்து நிரூபிக்க வேண்டியதில்லை. அது சுயமாகவே சுகந்த மணம் வீசும். நல்லோரும் சுயம் பிரகாசிகள்

(ஒப்பிடு: பல்பொடி வியாபாரி கூவி விற்பான்; வைர வியாபாரியை மக்கள் நாடிச்செல்வர்)

xxxxxxxxxxxxxxxxxxxxx

What makes Madurai Unique in the World: Oswald J.Couldrey

temple big

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Research Article: Written by London swaminathan

Date: 21 September 2015

Post No: 2178

Time uploaded in London :– 20-15

(Thanks  for the pictures) 

Please read my post “The Wonder that is Madurai Meenakshi Temple” posted by me here on 14th October 2011.

Following is excerpt from South Indian Hours by Oswald J.Couldrey, Year 1924

“Madura is a city in the far south, and very old. You will find her name recorded in Ptolemy’s Greek, MODOURA, which better represents the Tamil pronunciation than does the English form. Her ancient Pandya kings, who grew early rich upon the local pearl fisheries, and are mentioned in Asoka’s Edicts, were connected by the Greeks with King Pandion, by themselves and neighbours with the five legendary Pandavas, the heroes of the Mahabharata. Of that remote civilization there are now probably few material remains. The monuments of Madura chiefly refer to the seventeenth century Naiks, those powerful viceroys of the great Southern Hindu Empire of Vijayanagar, who rivalled and outlasted the splendour of their suzerain.

But what makes Madura almost unique among the cities of the world, wherein the past can be studied, is the fact that her antiquity generally, though having its roots far back in an almost Babylonish past, is also of the twentieth century. I speaks of no stagnation. Art and religion here were alive and growing with a vigour and direction imparted long ago. The life seen here today is sister to the life of ancient Shinar, a younger sister, and grown up in time.

The glory and potential crown of Madura is the great double temple (but they stand within the same enclosure) of Siva and Minakshi. You hear more of the goddess, the Fish-Eyed, though her husband’s lodging is larger; and I suspect that she represents an older local cult, espoused later by the religion of the Brahmins. There are in India many temples far older, many holier than this, some more cunningly designed and adorned; few larger, grander and more intricate, none more crowded, busy, eloquent of the living past. For size, you could put all the temples of Benares within the Madura precinct, and have room to spare, in extent, variety, and occupation, it resembles a city rather than a temple, and a city where you will not quickly learn your way about.

The good people of Madura, which is large and flourishing town, spend much of their time in temple, like Anglo-Indians at a club, or Greeks in their agora, and so fill the place themselves, without the help of pilgrims and sight seers, f whom, however, there is no lack. I have been to the Madura temple several times, and know well the lie of its courts and edifices; but to explain it is another matter, and I shall attempt only a general description.

The temple is, four square, like the heavenly Jerusalem, and girt with a high wall.in the middle of each side is the pylon or gopuram, but far taller than usual, and all crusted with idols; four towers that crown the city like the tiaras upon the fourfold brows of Brahma.

M.Temple

The great pile of the gate head is plastered thick with images, which stand se before its innumerable storied, lessening cells, like an enormous and splendid swarms of bees; all the mystic and many weaponed persons of the Siva pantheon, infinitely multiplied and repeated and reduced, and carried in rising ranks, and receding tiers, up to the horns and scrolls of the topmost roof.

There, and yonder, he appears as Nataraja, the dancer, his polyp arms spread round him like an aureole, as he weaves the mystic dance of the worlds, the universal and eternal dance of life, which is the pastime of god. Near him, with arms as many, and a whole brigade of heads, Skanda, the War God, Siva’s first born, rides upon his peacock, a fine image of the pomp and circumstance of Asian war. Nor is the figure of his brother Ganapati, round bellied, elephant faced, the people’s darling fetish, less conspicuous and frequent along the ranks of his pyramid of idols, and plastic pandemonium.

Immediately within, and all about the eastern gates of the god and goddess, there is a gloomy labyrinth of arcades and corridors, solemn indeed and lofty, but choked with shops and stalls of food and fruit and sweets, garlands, toys and various glittering knacks whose nature and use I have forgotten, save that they seemed to have little to do with the temple worship. But sculptured saints stood with joined hands among the confectionery, hoar dragons guarded the trash of the toy shops, and cheap cutlery from Birmingham.

From this imposing den of thieves we pass into the outer court, which is here confined and crowded with various porches of similar architecture, but elsewhere spreads, uneventful and empty, between the sanctuaries and outer wall. We are now directly before the temple of god; we find ourselves within the cloister of the Golden Lily Pool, which lies opposite her ancient shrine.

The pool and its colonnade, and especially the chain of porticos before Minakshi’s shrine, are always the most crowded and lively portions of the temple. The steps and water are constantly thronged with bathers and visited of housewives bearing brazen pitchers; the cloisters full of naked, sleek and shaven Brahmins, lounging, chatting, meditating, waiting to minister, for a fee, to the spiritual needs of the pilgrims. One chants a spell for a pair of rustics, which seems chiefly concerned with the business of informing God, not only of the name, parentage and present address (in a geography no longer recognisable) of the persons on whose behalf it is recited, but also of the particular point and minute of eternity, the hour and year, and aeon (he species the Kaliyuga, as we perhaps might say, the iron age) in which the service is performed and reward expected; a formula crude perhaps in some respects, but calculated to a degree not often found, I cannot help thinking, in our own liturgies, to make a simple fellow realise his own littleness, and the metaphysical mystery of the universe.

-images-city-134-Meenakshi temple

(His description continues for a few more pages; he describes Thousand Pillar Hall, Tirumalai Nayak Palace etc. and concludes with the following paragraph)

I am constrained to close upon a note of apprehension. You may buy little gods in the Madura bazaars, akin apparently to the temple sculpture, and steeped in odour of old sanctity. Too often nowadays they prove to be forgeries, new ware made rough, buried a while, dug up and kept for sale as old brass to the Americans. For these have discovered Madura before ourselves, who have lived there for a hundred years. Consequently, though there is still no city in South India, where you can to more advantage study the real religion of antiquity, there is none where you can more easily buy false god, or as some would say, gods doubly false (unless two wrongs should make a right) than in Madura, the city of Minakshi may it be long ere the dissolvent curiosity, or blasting disapproval of the West goes deeper”.

Year of Publication in London — 1924.

300 ராமாயணமா? 3000 ராமாயணமா? –Part 3

S kanda 9

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Research Article: Written by London swaminathan

Date: 21 September 2015

Post No: 2177

Time uploaded in London :– 15-45

(Thanks  for the pictures) 

First part was uploaded on 15th September, 2015

சுந்தர காண்டம் வரையே லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்தது.

 S kanda 4

ஒவ்வொரு பக்கம் மீதும் “க்ளிக்” செய்தால் பக்கம் பெரிதாகும். இவ்வாறு “ஸூம்” செய்து படிக்கவும்.

IMG_3437 (2)

IMG_3438 (2)

IMG_3440 (2)

IMG_3441 (2)

IMG_3443 (2)

IMG_3444 (2)

IMG_3447 (2)

IMG_3449 (2)

IMG_3450 (2)

IMG_3451 (2)

IMG_3452 (2)

IMG_3454 (2)

IMG_3455 (2)

IMG_3456 (2)IMG_3459 (2) IMG_3462 (2)

IMG_3465 (2)IMG_3468 (2)

IMG_3471 (2)

IMG_3472 (2)

IMG_3473 (2) IMG_3474 (2)

IMG_3475 (2)

சுந்தர காண்டம் முற்றும்.

இராமாயண கும்மி முற்றும்.

-சுபம்-

வள்ளுவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி!

 IMG_5749 (2)

Article written by S NAGARAJAN

Date: 21  September 2015

Post No: 2176

Time uploaded in London :– 7-52 am

(Thanks  for the pictures) 

 

By .நாகராஜன்

 

மன்றம் கூடியது

 

சில நிமிடங்களில் ஊர் மன்றம் கூடி விட்டது! ஏன்?

வள்ளுவர் வந்திருக்கிறாராம்!

வள்ளுவர் வந்திருக்கிறாராம்!

செய்தி அதிக வேகத்தில் பரவவே, பறக்கவே அனைவரும் ஊர் மன்றமான ஆலமரத்தடியில் கூடி விட்டனர். ஆலமரத்தைச் சுற்றியுள்ள மேடையில் அமர்ந்திருப்பவர் நிஜமாகவே வள்ளுவர் தான்!

அவரை வணங்கினர்; தொழுதனர்; கை கட்டி, வாய் மூடி உற்றுப் பார்த்து தங்களின் தரிசன பாக்கியத்தை நினைத்து மகிழ்ந்தனர்.

இன்று முழித்த வேளை நல்ல வேளை!

மெதுவாக ஊர்ப் பெரியவர் ஒருவர் எழுந்தார். ‘பெரிசு’ ஏதாவது பொருள் பொதிந்த ஒன்றைத் தான் கேட்கும்! அனைவரும் ‘பெரிசையும்’ அதற்கு வள்ளுவர் என்ன சொல்லப் போகிறார் என்பதையும் ஆவலுடன் எதிர் நோக்கினர்.

அப்போது கூட்டமாகக் கூடி இருக்கும் கூட்டத்தைப் பார்த்து பிச்சை எடுக்கும் வறியவன் ஒருவனும் ஓரமாக வந்து நின்றான்.

caoin valluvar2

பத்துக் கேள்விகள்

பெரியவர் கேட்டார்: “வள்ளுவரே! வணக்கம். உங்கள் அருளை நாடி நிற்கிறோம். அருள் அல்லாதது யாது?

வள்ளுவர் அவரைக் கனிவுடன் நோக்கினார். பின்னர் கூறினார்:-

“அருள் அல்லது யாதெனின் கொல்லாமை கோறல்

பொருள் அல்லது அவ்வூன் தினல்             (குறள் 254)

ஒரு கேள்வி; அதற்கு அற்புதமாக இரண்டு விஷயங்களைப் பதிலாகப் பெற முடிந்தது. ஒரு உயிரையும் கொல்லாமல் இருப்பதே அருள்; அந்த மாமிசத்தை வாங்கித் தின்னுவதே பொருள் அற்றது.

ஊர் மக்கள் சைவ உணவை மட்டும் உண்ணத் தீர்மானித்து விட்டனர்.

ஒரு கேள்வி கேட்டு பதிலும் வந்ததால் அடுத்தவர் மெல்ல எழுந்தார்.

“வாய்மை எனப்படுவது யாது?”

“வாய்மை எனப்பதுவது யாதெனின் …..

யாதெனின்?!

“யாதொன்றும் தீமை இலாத சொலல்”   (குறள் 291)

ஆஹா! எளிமையான சுருக்கமான சூத்திரமாக இருக்கிறதே! பிற உயிருக்குத் தீமை பயக்காத சொற்களைச் சொல்லுவதே வாய்மை!

மூன்றாமவர் எழுந்தார்:-“ அறவினை யாது?”

“அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாம் தரும்”            (குறள் 321)

தான் முதலில் சொன்னதை மீண்டும் வலியுறுத்தி வள்ளுவர் கூறியதை அனைவரும் பக்தியுடன் மனதில் குறித்துக் கொண்டனர். பிற உயிரைக் கொல்லாமல் இருப்பதே அறவினை. அப்படிக் கொல்வோருக்கு அறமற்ற பிற தீவினைகள் சேரும்.

கூட்டத்தில் அஹிம்சையைப் பின்பற்றுபவருக்கு ஒரே சந்தோஷம். மனதிற்குள் உருகினார்.

இன்னொருவர் கேட்டார்:- “நல் ஆறு யாது?”

நல்ல வழி எது என்றா கேட்கிறீர்கள்?

வள்ளுவர் கூறினார்:-“ நல் ஆறு எனப்படுவது யாதெனின்  யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி”    (குறள் 324)

அட, அதே கருத்து! திருப்பித் திருப்பி வலியுறுத்துகிறாரே! சொல் சிக்கனம் உடைய வள்ளுவர் ஆழ்ந்த கருத்தை வலியுறுத்தி, எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பதே நல் ஆறு என்கிறாரே!

கையிலுள்ள பணம் சுருங்கக் கூடாது; குறையக் கூடாது என்ற கவலையில் இருந்தவர் கேட்டார்:- : செல்வத்திற்கு அஃகாமை யாது?

வள்ளுவர் சிரித்தார்:- “அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன் கைப் பொருள்”   (குறள் 178)

பிறர் கைப்பொருளைக் கவரக் கூடாது என்று இருத்தலே தன் கைப்பொருள் சுருங்காமல் இருக்கும் வழி!

மோசமான அரசியல்வாதிகள் எல்லாம் அங்கு தலையைக் குனிந்து கொண்டனர்.

நண்பர்கள் இருவர் எழுந்தனர்: ஒருவர் கேட்டார்:-“நட்பிற்குச் சிறந்த நிலை யாது?”

பதில் உடனே வந்தது: “நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும் வாய் ஊன்றும் நிலை”   (குற:ள் 789)

நட்பிற்கு வீற்றிருக்கை – சிறந்த நிலை – மாறுபாடின்றி முடிந்த போதெல்லாம் உதவி செய்து தாங்கிக் கொண்டிருப்பதே ஆகும்.

அடுத்த நண்பர் பளிச்சென்று உடனே கேட்டார்:-“ பழைமை எனப்படுவது யாது?”

“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்

கிழமையைக் கீழ்ந்திடா நட்பு”    (குறள் 801)

பழகிய நட்பு, அதாவது பழைமை எனப்படுவது யாதெனில் பழகிய நண்பர் உரிமையாய் செய்யும் எந்தச் செயலையும் அவமதிக்காது ஏற்றுக் கொள்வதேயாகும்.

நண்பர்கள் இருவரும் மகிழ்ந்தனர்.

punul valluvar

பூணூலணிந்த, அபூர்வ வள்ளுவர் சிலை

அடுத்தவர் எழுந்தார்: “பேதைமை என்பது யாது?”

“பேதைமை அதாவது அறியாமை யாது என்று தானே கேட்கிறீர்கள்?

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு

ஊதியம் போக விடல்    (குறள் 831)

அறியாமை என்று சொல்லப்படுவது யாதென்றால், தனக்குக் கேடு விளைவிப்பனவற்றைக் கைக்கொண்டு நன்மை தருபனவற்றைக் கை நழுவி விடச் செய்வதாகும்!

இன்னொருவர் எழுந்தார்:-“ வெண்மை எனப்படுவது யாது?”

“வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை

உடையம் யாம் என்னும் செருக்கு” (குறள் 844)

வெண்மை அதாவது புல்லறிவு – கீழான அறிவு எதுவெனில் யாம் நிறைந்த அறிவு உடையோம் என்று தம்மைத் தாமே மதித்துக் கொண்டிருக்கும் செருக்கு-  அகம்பாவம் – தான்!

கூட்டத்தினர் அகம் மிக மகிழ்ந்தனர். எத்தனை ‘யாதெனின்?’ கேள்விகள். அத்தனைக்கும் உடனுக்குடன் பதில்!

வள்ளுவர் எட்டிப் பார்த்தார். ஓரத்தில் இருந்த பிச்சைக்காரன் முண்டியடித்துக் கொண்டு முன்னே வந்தான்.

வள்ளுவர் அவனுக்கு வழி விடுமாறு சைகை காட்டவே அனைவரும் ஒதுங்கினர்.

அவன் முன்னே வந்தான். “ஐயா! வணக்கம். இன்மையின் இன்னாதது யாது?”

தான் எடுக்கும் இந்த பிச்சையை விடக் கொடியது ஏதாவது இருக்கிறதா?

மனம் கலங்கி இருக்கும் அவனைப் பார்த்த வள்ளுவர் எழுந்தார். அனைவரும் எழுந்தனர்.

இன்மையின் இன்னாதது யாதெனின்..

அனைவரும் வள்ளுவரையே கவனித்தனர். இன்மையின் இன்னாதது யாதெனின்..

யாதெனின்..

வள்ளுவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி என்று கூட ஒன்று உண்டா, என்ன?

யாதெனின்;;

என்ன, வள்ளுவர் தடுமாறுகிறார். உடனுக்குடன் பதில் அளித்த வள்ளுவரா, யோசிக்கிறார், தடுமாறுகிறார், பதிலுக்காகத் தவிக்கிறார்.

கூட்டம் வியந்தது; பிரமித்தது.

தன் நிலையை அடைந்த வள்ளுவர் கூறினார்:-

“இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது”    (குறள் 1041)

வறுமையை விடக் கொடியது என்னவென்றால்,..   என்னவென்றால் .. வறுமையைப் போலக் கொடியது வறுமையே தான்!

வள்ளுவரும் கலங்கி நின்றதைப் பார்த்த மன்றமே கலங்கியது.

பிச்சைக்காரன் கண்ணைத் துடைத்துக் கொண்டான்.

வள்ளுவரின் சாபம்

வள்ளுவர் சற்று உரத்த குரலில் கூறினார்:-

“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்” (குறள் 1062)

பிச்சை எடுத்தும் உயிர் வாழுமாறு சிலரைப் படைத்திருந்தால் அந்த உலகை இயற்றியவன் அதே போல பிச்சை எடுத்து அலைந்து திரியட்டும்!

பிச்சைக்காரனின் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டார் வள்ளுவர். அனைவரும் அவர் மேலே நடக்க வழியை விட்டனர்.

வள்ளுவரின் சாபத்தைக் கேட்ட இறைவன் சிரித்தான். ‘அடடா, என்ன கருணை நெஞ்சம், தெய்வப் புலவருக்கு!’

அருகிலிருந்த அன்னையைப் பார்த்துக் கண் சிமிட்டினான். மதுரையில் பொற்றாமரை ஏறிய ‘பொய்யில் புலவன்’ சாபம் கொடுத்து விட்டான், தேவியே! அதை சிரமேற்கொண்டு நிறைவேற்ற வேண்டாமா?”

தேவியும் சிரித்தாள்.

“வைகை தான் பெருக்கோடுகிறது. வந்தியோ அழைக்கிறாள். பிட்டுக்காவது மண் சுமந்து உங்கள் திருவிளையாடலைத் தொடங்குங்களேன்!”

பத்தே பத்து –  ‘யாதெனின்’ குறள்கள்!

பத்து, நூறு, ஆயிரம் அறிஞர்களும் நூல்களும் சேர்ந்தாலும் விளக்க முடியாத அரிய கருத்துக்கள்,

இல்லையா?

குறள் வாழ்க! தமிழ் வாழ்க!! குறள் நெறி வாழ்வோர் எவரானாலும் எங்கிருந்தாலும் வாழ்க!

****************

Two Anecdotes: Love your Enemy!

finnisdeath

Article written by London swaminathan

Date: 20th  September 2015

Post No: 2175

Time uploaded in London :– 19-18

(Thanks  for the pictures) 

This happened during the Great Indian Mutiny in the year 1857. Indian soldiers revolted against the British Government and the government took stern steps to put them down. The result was, people left the villages in panic. At one place, when they were running away, they saw a Sadhu coming towards their village which they had abandoned. The villagers warned the Sadhu that the British soldiers would be there shortly and kill him mercilessly. The sadhu did not pay heed to the advice, but went on. When he was nearing the village, a British soldier came towards him and stabbed him. The sadhu was fatally injured. He fell down and was about to die. The soldier was looking at him to make sure if he was dead. Before breathing his last, the Sadhu looked at the soldier, his murderer, and smilingly said “You also are He” (Tat Tvam Asi).

Even in the agony of death, the Sadhu saw God in him. What a glorious vision was his! It is indeed wonderful.  Such is the vision of one who has realised God.

periya_puranam_a_tam

Safeway to a Tamil Murderer

Periyapuranam is a great Tamil literary master piece which deals with the lives of sixty three Saivite Saints of Tamil Land. One of the sixty three saints was Meypporul Nayanar who ruled a small kingdom from Tirukkovilur in North Tamil Nadu. He had a rival in a neighbouring kingdom whose name was Muthanathan. He invaded Meypporul Nayanar’s country several times but was defeated. So he planned to kill him by hook or crook. He knew that Nayanar respected Saivite devotees a lot.

One day Muthanathan came to Nayanar’s palace disguised as a Saivite saint. It was dead of night and so the guards at the gate refused him permission to enter the palace but he insisted that he had brought something important to give it to the king. Then Nayanar’s bodyguard Tattan came and allowed him in; but Tattan was very suspicious about this ascetic guy. So he was ready to meet any eventuality.

When Muthanathan went into the palace, Nayanar was sleeping with his queen in the bed room. She woke up at the slightest noise and woke her husband immediately. As soon as he saw someone with holy ash smeared all over his body he fell at his (Muthanathan’s) feet. Nayanar asked him what brought him at the dead of night to the palace. “Ascetic” Muthanathan told Nayanar that he had got a rare book and wanted to teach him the same night. Nayanar told him that he was ready to receive it the very next minute. But Muthanathan insisted that his wife should not be in the room. Immediately she left the bed room.

When Nayanar fell at Muthanathan’s feet in the traditional way before start of the lesson, Muthanathan took his sword from inside the ascetic robe and stabbed Nayanar. He fell on the floor. As soon as the body guard Tattan heard the noise he rushed into the bed room and caught Muthanathan red handed. But Nayanar, before breathing for the last time, instructed Tattan, “Tatta, He is our man. Please allow him a safe passage”.

As instructed by Nayanar, he took Muthanathan, inspite of a big lynching crowd, out of the city limits and allowed him a safe passage. He was pardoned by Nayanar just because he came in the guise of a Saivite (Shiva) saint.

There are several episodes like this in Indian literature.

மொத்தம் எத்தனை கடவுள்?

vishnu viswarupam

Don’t Reblog it for at least a week; don’t use pictures.

 

Article written by ச.நாகராஜன்

Date: 20th  September 2015

Post No: 2174

Time uploaded in London :– 12-41

(Thanks  for the pictures) 

 

 

.நாகராஜன்

 

மஹரிஷி யாக்ஞவல்க்யரிடம் சில கேள்விகள்!

ப்ருஹத் ஆரண்ய உபநிடதத்தில் ஒரு காட்சி.

பொய்யே சொல்லாதவர் தான் ப்ரஹ்ம ரிஷி எனக் கூறப்பட முடியும்! (கடந்த காலத்தில், நிகழ் காலத்தில் ஒரு பொய்யும் சொல்லி இருக்கக் கூடாது! இனி வரும் காலத்திலும் பொய் சொல்லாத வன்மை கொண்டிருக்க வேண்டும்!)

அப்படிப்பட்ட ப்ரஹ்மரிஷிக்கு ஆயிரம் பசுக்கள் (பொற்கிழிகளுடன் தான்!) தர மன்னர் ஜனகர் முன் வந்தார்.

எல்லோரும் இந்த பிரம்மாண்டமான பட்டத்திற்கு நிச்சயம் தகுதியுள்ளவர் தான் இல்லை என்று எண்ணி அமர்ந்திருந்த போது மஹரிஷி யாக்ஞவல்க்யர் ஆயிரம் பசுக்களையும் சிஷ்யர்களின் துணை கொண்டு ஒட்டலானார்.

பார்த்தார் விதாக்தா சகல்யர்!

மஹரிஷி யாக்ஞவல்க்யரிடம் வந்தார். கேட்டார்.

“மஹரிஷி யாக்ஞவல்க்யரே! எத்தனை கடவுள்கள் உண்டு?

கேள்விகள் கணைகளாக வர பதில்களும் திருப்பிப் பறந்தன இப்படி:

“கடவுளைத் துதி செய்யும் துதிகளில் எத்தனை கடவுள்கள் கூறப்படுகின்றனரோ அத்தனை கடவுள்கள் உண்டு. அதாவது முன்னுற்றி மூன்றும் மேலும் மூவாயிரத்தி மூன்றும்..”

“சரி, ஆனால் எத்தனை கடவுள்கள் உண்டு, மஹரிஷி யாக்ஞவல்க்யரே!”

“முப்பத்தி மூன்று”

“சரி, ஆனால் எத்தனை கடவுள்கள் உண்டு, மஹரிஷி யாக்ஞவல்க்யரே!”

“மூன்று”

“சரி! எத்தனை கடவுள்கள் உண்டு, மஹரிஷி யாக்ஞவல்க்யரே!”

“இரண்டு”

“சரி, எத்தனை கடவுள்கள் உண்டு, மஹரிஷி யாக்ஞவல்க்யரே!”

“ஒன்றரை”

“சரி, எத்தனை கடவுள்கள் உண்டு, மஹரிஷி யாக்ஞவல்க்யரே!”

“ஒன்று”

“சரி, அந்த முன்னுற்றி மூன்றும் மேலும் மூவாயிரத்தி மூன்றும் யாவர்?”

“அவைகள் அவர்களின் சக்தியே! முப்பத்தி மூன்று கடவுள்களே உள்ளனர்”

“அந்த முப்பத்தி மூன்று பேர் யார்?”

“எட்டு வசுக்கள், பதினோரு ருத்ரர்கள், பன்னிரெண்டு ஆதித்யர்கள். இவர்களே முப்பத்தியொன்று பேர். இந்திரனையும் ப்ராஜபதியையும் சேர்த்தால் முப்பத்தி மூன்று ஆகிறது”

“வசுக்கள் யார்?”

“தீ, புவி, காற்று, வளி மண்டலம், சூரியன், வான், சந்திரன், நட்சத்திரங்கள் இவையே வசுக்கள். இவர்களின் மீதே இந்த அழகிய உலகம் உறுதியாக  இருக்கிறது. அதனால் அவர்களின் பெயர் வசுக்கள்”

“ருத்ரர்கள் யார்?”

ஒருவனிடம் உள்ள பத்து மூச்சுகள், ஆத்மாவையும் சேர்த்ந்தால் பதினொன்று. அவைகள் இந்த உடலிலிருந்து நீங்கும் போது நம்மைப் புலம்ப (அழ) வைக்கின்றன. ஆகவே ருத்ரர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.”

vishnu-vishwaroopa-picture

“ஆதித்யர்கள் யார்?”

“ஒரு வருடத்தில் உள்ள பன்னிரெண்டு மாதங்களே தான்! இந்த உலகை “ எடுத்துக் கொண்டு செல்கின்றவர்கள்” அவர்கள். ஆகவே அவர்கள் ஆதித்யர்கள் எனப்படுகின்றனர்.”

“இந்திரன் யார்? ப்ரஜாபதி யார்?”

“இடி முழக்கமே உண்மையில் இந்திரன். யாகமே ப்ரஜாபதி.”

“இடி முழக்கம் என்பதென்ன?”

“இடியே தான் அது.”

“யாகம் என்பதென்ன?”

“யாகத்தில் இடப்படும் மிருகங்கள்”

“ஆறு கடவுள்கள் யார்?”

““தீ, புவி, காற்று, வளி மண்டலம், சூரியன், வான். இவையே ஆறு கடவுள்கள். ஏனெனில் இந்த உலகமே இந்த ஆறு தான்!”

“மூன்று கடவுள்கள் யார்?”

“உண்மையில் அவை மூன்று உலகங்களே, ஏனெனில் அவற்றில் தான் கடவுளர் இருக்கின்றனர்”

“இரண்டு கடவுள்கள் யார்?”

“உணவும், மூச்சும்”

“ஒன்றரை யார்?”

“இதோ இங்கு யார் தூய்மைப் படுத்துகிறாரோ அவர், காற்று”

“இதோ இங்கு யார் தூய்மைப் படுத்துகிறாரோ அவர் ஒன்று தானே ஆக முடியும், ஒன்றரை எப்படி?”

“ஏனெனில் அவரிடம் முழு உலகமும் செழிக்கிறது. ஆகவே அவர் ஒன்றரை ஆகிறார்.”

“ஒரே கடவுள் யார்?”

“மூச்சு. அதை ப்ரஹ்மா என்று சொல்கின்றனர்.”

பசுக்களை ஓட்டிக் கொண்டு மஹரிஷி செல்கிறார்.

ஜனகர் உள்ளிட்ட அனைவரும் அவரை வணங்கி வழிபட்டு வழி

விட்டு நிற்கின்றனர்.

ஆரண்யத்தில் அற்புதக் காட்சி முடிகிறது!

ப்ரஹ்ம ஞானம் மலர்கிறது!!

**********

தொண்டர் பெருமை: வசிஷ்டர், விஸ்வாமித்திரர் மோதல்!

hare krsn bhajan

Don’t Reblog it for at least a week; don’t use pictures.

 

Article written by London swaminathan

Date: 20th  September 2015

Post No: 2173

Time uploaded in London :– 12-26

(Thanks  for the pictures) 

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பர் – ஆன்றோர்.

நல்லவன் ஒருவன் ஏதேனும் அபூர்வமாக கெட்டது செய்துவிட்டால் – எல்லாம் ‘’சஹவாச தோஷம்’’= சேர்வார் சேர்க்கை என்பர் சான்றோர். இந்தப் பொன்மொழிகளை விளக்கும் கதை கீழே உள்ளது:—

வேத காலத்தில் வாழ்ந்த இரண்டு பெரிய ரிஷிக்கள் வசிஷ்டரும் விஸ்வாமித்திரரும் ஆவர். இருவருக்கும் எப்போது பார்த்தாலும் மோதல். எதிரும் புதிருமாக நிற்பார்கள். கீரியும் பாம்பும் போல சண்டையிடுவர்! காரணம்: விஸ்வாமித்ரர் ஒரு மன்னர். இதனால் ஆட்சியாளருக்கே உரிய தீய குணங்கள் அவரிடம் இருந்தன:-

அஹங்காரம் :–(தன்னை வசிட்டர் வாயினால் பிரம்மரிஷி என்று அழைக்க வேண்டும்.

பெண்வயப்படுதல்:– மேனகாவிடம் வசப்படல்.

வேண்டியவருக்குச் சலுகை:– திரிசங்கு என்பவரை உடலோடு சொர்க்கத்து அனுப்புகிறேன் பார்! என்று சவால் விடுதல்.

பிறர் பொருளுக்கு ஆசைப்படுதல்:வசிஷ்ட முனிவரின் காமதேனு முதலிய அரும்பெரும் விஷயங்களை தனதாக்கிக்கொள்ள விரும்பல்.

இறுதியில் இத்தனை மோக வலைகளையும் தாண்டி வசிட்டர் வாயினால் பிரம்மரிஷி பட்டம் பெற்றார். அதற்கு முன்னால் நடந்த ஒரு மோதல் இதோ:–

எது பெரிது தவமா? நல்லோருடன் இருக்கும் சத்சங்கமா? என்பதே கேள்வி. ஒருவன் நியம நிஷ்டைகளுடன் வாழ்ந்து தவம் இயற்றுவதே சக்தி வாய்ந்தது என்றார் தபோநிதி விசுவாமித்திரர்.

இல்லை அவ்வளவு எல்லாம் கஷ்டப்படவேண்டாம். நல்லவருடன் இருந்து, அவர்களுடைய காற்றோ, நிழலோ மேலே விழுந்தால் அதைவிட சக்தி வாய்ந்தது எதுவுமில்லை என்றார் கருணாநிதி வசிஷ்டர்.

இருவர் வாக்குவாதமும் முடிவில்லாமல் போய் உச்ச ஸ்தாயியை அடைந்தது. இனியும் பேசினால் தொண்டை வறண்டுவிடுமென்று எண்ணி, இருவரும் மஹாவிஷ்ணுவிடம் சென்று முடிவு காண்போம் என்றனர்.

மஹாவிஷ்ணு இருவரையும் பார்த்து விட்டு, இப்பொழுது கொஞ்சம் முக்கியமான அலுவலில் இருக்கிறேன்; கொஞ்சம் ‘பிஸி’. ஆகையால் ஆதிசேஷனிடம் போய்க்கேளுங்கள் அவன்தான் என்னைத் தாங்குகிறான். இந்த பூபாரம் முழுதும் அவன் தலையில்தானே சுழல்கிறது – என்றார்.

இருவரும் மஹாசேஷன் — – ஆதிசேஷன் – என்னும் பாம்பிடம் சென்றனர். அவர் தலையில்தான் பூமி நிற்கிறது என்பது இந்துமத புரானங்கள் சொல்லும் விஷயமாகும். மஹாசேஷன் சொன்னார்: உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லுகிறேன். என் தலைவர் விஷ்ணு அனுப்பிவிட்டால் நான் மறுக்க முடியுமா? ஒரு சின்ன உதவி தேவை. இதோ என் தலையில் இருக்கும் பூபாரத்தை இறக்கிவையுங்கள்; உங்கள் கேள்வியைப் பரிசீலிக்கிறேன் என்றார். உடனே விசுவாமித்திர வழக்கம்போல, ‘முந்திரிக் கொட்டை போல முந்திக் கொண்டு’ சென்று, இதோ பார்! என் தவ வலிமை, நியம, நிஷ்டைகள் அத்தனையையும் பயன்படுத்தி பூமியைத் தூக்குகிறேன் என்று பூமியைத் தூக்க முயன்றார். அதுவோ ஒரு அங்குலம் கூட அசையவில்லை.

இப்பொழுது வசிட்டர், சரி, விடுங்கள்! இப்போது என்னுடைய முறை; நான் முயற்சிக்கிறேன் என்று சொல்லி “நான் நல்லோரிடம் வாழ்ந்த ஒரு நிமிடப் பலனில் இந்த பூமி என் கைக்கு வரட்டும்” என்றார். அவர் கையில் பூமி நின்றது.

மஹாசேஷன் சொன்னார்: “குட் பை! உங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. பை! பை! என்று சொல்லிவிட்டார்.

இருவரும் நிம்மதியாகத் திரும்பினர். இது சுவாமி ராம்தாஸ் சொன்ன கதை.

ராமகிருஷ்ண பரமஹம்சரும் அவரது உபதேசங்களில் சத்சங்கத்தின் பெருமையை நிறை இடங்களில் விளக்குகிறார். ஒரு ஜமீந்தாரிடம் (நிலச் சுவாந்தார்) வேலைபார்க்கும் ஒரு வேலையாள், கிராமத்திற்குள் தனியே சென்றால் பல அடாவடித்தனக்களைச் செய்து தனது அதிகாரத்தைக் காட்டுவார். அவரே ஜமீந்தாரிடம் வந்துவிட்டால், அன்று அவரிடம் உதவி நாடிவந்த ஏழை விவசாயிகளுக்கு ஜமீந்தார் முன்னால், அடக்க ஒடுக்கமாக, அன்பாக அவ்வளவு உதவிகளையும் அள்ளிவீசுவார். நல்லோரின் சந்நிதானத்தில் வாழ்வோரும் இப்படி அஹங்காரம் ஒடுங்கி நிற்பர்.

யானையை எவ்வளவு குளிப்பாட்டினாலும் அது, மண்ணில் இருக்கும் வரை,  தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும். அதே யானையைக் குளிப்பாட்டி, சுத்தமான இடத்தில் கட்டிவிட்டால் அது அப்படிச் செய்யாது. நாமும் கெட்டவர் சஹவாசத்தில் உள்ளவரை இப்படி நம் தலையில் நாமே மண்னை வாரிப் போட்டுக்கொள்வோம். நல்லோர் சஹவாசம் என்னும் கட்டுத்தறியில் கட்டப்பட்டுவிட்டால் சுத்தமாக இருப்போம் என்பார் பரமஹம்சர்.

ஆதிசங்கரரும் பஜகோவிந்தம் என்னும் துதியில் நல்லோர் சஹவாசம் முக்தி நிலைக்கு இட்டும் செல்லும் என்கிறார்:–

சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்

நிர்மோஹத்வே நிஸ்ஸலிதத்வம்

நிஸ்ஸலிதத்வே ஜீவன் முக்தி – பஜகோவிந்தம்.

திருவள்ளுவரும் சத்சங்கத்தின் பெருமையை, தொண்டர்தம் கூட்டை, ‘கேள்வி’ என்னும் அதிகாரத்தில் சொல்லுவார்:

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும் (குறள் 416)

கொஞ்சமாவது நல்லது கேளுங்கள்; அது உங்களுக்குப் பயன்படுகிறபோது நல்ல பெருமையைக் கொண்டுவரும் – என்கிறார்.

இன்னொரு குறளில் சறுக்கி விழும் நிலத்தில் நடக்கும்போது பயன்படும் ஊன்றுகோல் போல (வாக்கிங் ஸ்டிக்), புராண இதிஹாசச் சொற்பொழிவுகள் பயன்படும் என்பார்:

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் – குறள் 415

–சுபம்—–