Two Stories: See yourself in all beings!

177414-petrin-hill---hall-of

Don’t Reblog it for at least a week; don’t use pictures.

 

Article written by London swaminathan

Date: 19th  September 2015

Post No: 2172

Time uploaded in London :– 20-22

(Thanks  for the pictures) 

In order to have some fun a man procured innumerable small mirrors and had them fixed in his room on the walls, in the ceiling and on the floor. There was not an inch of space where there was no mirror. After closing the door, he switched on the light and stood in the middle of the room. He saw himself reflected in myriad forms in the mirrors— above, below and on all sides. He enjoyed the sight very much because he loved to see himself everywhere. After having had this fun for a while, he left the room, but forgot to close the door.

His dog entered the room a few minutes later and it saw its own reflections in the mirrors. The dog started barking at its own reflections and jumped and fought with them, as it thought those were dogs different from itself.  It fought till it got completely exhausted and fell down dead.

So, man in his ignorance, when fighting with his fellow thinks that they are separate from him. When he realises that all beings are the images of his own Self, instead of quarrelling with and disliking them, he will love them all equally.

elephant3_

 Ramakrishna Paramahamsa’s Elephant story 

In a forest there lived a holy man who had many disciples. One day he taught them how to see god in all beings and knowing this, to low before them all.

A disciple went to the forest to gather wood for the sacrificial fire. Suddenly he had an outcry, “Get out of the way! A mad elephant is coming!” all but the disciple of the holy man took to their heels. He reasoned that the elephant was also god in another form. Then why should he run away from it? He stood still, bowed before the animal, and began to sing its praises.

The mahut of the elephant was shouting “Run away! Run away!” but the disciple didn’t move. The animal seized him with its trunk, cast him to one side and on its way. Hurt and bruised the disciple lay unconscious on the ground. Hearing what had happened, his teacher and his brother disciples came to him and carried him to the hermitage.

With the help of some medicine he soon regained consciousness. Someone asked him, “You knew the elephant was coming. Why didn’t you leave the place? “But”, he said, “our teacher has told us that God Himself has taken all forms, of animals as well men. Therefore thinking that it was only the elephant God that was coming, I didn’t run away.”

At this the teacher said, “Yes, My child, it is true that the elephant God was coming; but the mahut God forbade you to stay there. Since all are manifestations of God, why didn’t you trust the mahut’s words? You should have heeded the words of the Mahut God.”

God dwells in all beings. But you may be intimate only with good people; you must keep away from the evil minded. God is even in the tiger; but you cannot embrace the tiger on that account! You may say, “Why run away from tiger, which is also a manifestation of god?” The answer to that is: Those who tell you to runaway are also manifestations of God – and why shouldn’t listen to them?

God undoubtedly dwells in the hearts of all – holy and unholy, righteous and unrighteous; but a man should not have dealings with the unholy, the wicked, the impure. He must not be intimate with them. With some of the he may exchange words, but with others one should not go even that far. One should keep aloof from such people.
—Subham–

வசிஷ்டர் தரும் காலத்தை வென்ற இரகசியம்!

yoga vasiosta

Don’t Reblog it for at least a week; don’t use pictures.

Article written by S NAGARAJAN

Date: 19th  September 2015

Post No: 2171

Time uploaded in London :– 17-49

(Thanks  for the pictures) 

 

.நாகராஜன்

 

நம்பிக்கை தரும் ஹிந்து நூல்கள்

 

உலகினருக்கு வாழ்க்கையில் நம்பிக்கை தருவதற்கு ஹிந்து நூல்களைப் போல வேறெந்த நூல்களும் இல்லை.

உன்னை நீயே உயர்த்திக் கொள்ளலாம் என்பதே அவற்றின் சாரம்.

கர்மத்தால் கட்டுண்டவன் தான் நீ என்று சொல்லும் போதே நல்ல கர்மங்களைச் செய்து உன்னை உயர்த்திக் கொள் என்று அது ஓங்கிச் சொல்கிறது.

விதி உன்னை விடாது என்று சொல்லும் போதே அந்த விதியை உருவாக்குபவன் நீயே என்று அடித்துச் சொல்கிறது.

பல ஜன்மங்களில் முன்னேற வாய்ப்புண்டு; உடனடியாக முன்னேற்றத்தை நோக்கி முதல் அடியை நீ வை; நான் உன்னை நூறு அடிகள் முன்னேற்றுவேன் என்ற ஆறுதலான அவதாரங்களின் வாக்கியத்தை அது நம் முன் வைக்கிறது.

பிறப்பு ஒன்றே ஒன்று தான் என்றால் ஏன் மனிதனுக்கு மனிதன் வாய்ப்புகளில் ஏன் இந்த வேறுபாடு? அது போகட்டும் பிறந்து ஒரு நாளில் இறக்கும் ஒரு குழந்தைக்கும் நூறு ஆண்டுகள் வாழ்ந்து பல நல்ல, கெட்ட காரியங்களைச் செய்பவனுக்கும் எப்படி சமமான தீர்ப்பு வழங்கப்பட முடியும்? ஒரே ஒரு நாள் வாழ்ந்த குழந்தை தீர்ப்பு வழங்கும் நாளுக்காக எல்லையற்ற காலம் வரை ஏன் காத்திருக்க வேண்டும்!

இறைவனின் நீதி இது என்பதை ஏற்பதில் மனம் சலிப்படைகிறது.

‘சே, போ’, மனம் போன படி நடப்பேன்; நடப்பது நடக்கட்டும் என்பது வாழ்க்கை முறையாகிறது.

மேலை நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் இது தான்!

yoga-vasistha

ராமரின் சந்தேகங்கள் (636 பாக்களில்)

 

ராமர் வசிஷ்டரிடம் வருகிறார். நியாயமாக ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் சந்தேகம் ஏற்பட முடியுமோ அந்த சந்தேகங்களை அறிவியல் யுகமான நமது இன்றைய நாளுக்கும் பொருந்தும்படி கேட்கிறார்.

அவரது கேள்விகள் 19 அத்தியாயங்களில் 636 ஸ்லோகங்களில் இடம் பெறுகிறது – யோக வாசிஷ்டம் நூலில்.

அற்புதமான இந்த நூல் மனிதனுக்குக் காலத்தை வென்ற இரகசியத்தைக் கூறும் நூல். வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதைச் சரியானபடி கூறும் அருமையான நூல் இது. 32000 ஸ்லோகங்கள் உள்ள யோக வாசிஷ்டம் இப்போது நாம் படிக்கும்படியான அளவுக்குச் சுருக்கமாக எந்தக் கருத்தையும் விடாமல் சுருக்கப்பட்டுள்ளது.

நூலின் நடை எளிமையானது. சம்ஸ்கிருதம் படித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் எளிய நடை; காம்பீர்யமான வார்த்தைகள்.

yoga2

முயற்சியா, விதியா எது வெற்றியைத் தரும்?

 

உதாரணத்திற்கு மனித முயற்சி, விதி பற்றிய சில ஸ்லோகங்களின் அர்த்தத்தைத் தமிழில் இங்கு பார்ப்போம்.

14_Yoga-Vasistha_1

பௌருஷ மஹிமா (மனித முயற்சியின் மஹிமை)

                                                                 

பௌருஷேன சர்வமாஸாத்யதே (முயற்சியினால் அனைத்தும் கிடைக்கும்).

எதையும் எப்போது வேண்டுமானாலும் அடைய மனித முயற்சியே தேவை. போதுமான முயற்சி செய்த பின்னர் ஒருவன் அடைய விரும்புவதை அடைகிறான்.

கர்மா, தைவம் (விதி) என்று இரண்டைச் சொல்கிறார்களே!

கர்மம் என்பது ஒருவனின் முந்தைய செயல்களைக் குறிப்பதே ஆகும்! ஆனால் ஒருவனின் தற்போதைய முயற்சி முன்னால் செய்ததை மீறிச் செயல்படும்.

தைவம் அதாவது விதி என்பது, அறியாதவர்களுடைய மனக் கற்பனையே. பார்க்க முடியாத ஒன்று அது. விதி என்பதே இல்லை!

தைவம் வித்யதே I (தைவம் – விதி என்று ஒன்று இல்லை)

தைவமஸத்ஸதா I (விதி என்பது இல்லாத ஒன்று)

தைவம் கிஞ்சித்குருதே கேவலம் கல்பனேத்ருஷி I (விதி ஒன்றையும் செய்வதில்லை. கற்பனையே அதைச் செய்கிறது)

ஒரு விவசாயி தனது நிலத்தில் கஷ்டப்பட்டு பல மாதங்கள் உழைக்கிறான். அறுவடைக் காலம் நெருங்குகிறது. ஆனால் அறுவடை நாளுக்கு முதல் நாள் அடைமழை பெய்கிறது. பயிர்கள் நாசமாகின்றன.

இது விதியா? இதன் காரணம் விதி தானா?

இல்லை; உழைப்பு, மழை என்பதில் மழை உழைப்பை விட வலியதாக இருக்கிறது என்பதே இதன் அர்த்தம்.

நாம் செய்யும் அனைத்துமே ஏன் வெற்றி பெறுவதில்லை?

பதிலை ராமருக்கு வசிஷ்டர் கூறுகிறார்:” இது ஏன் என்றால் வெற்றி என்பது உழைப்பை மட்டும் கொண்டு வருவதில்லை. காலம், வெளி, செல்வம் (Time, Space and Wealth) போன்ற காரணங்களும் இணைந்தே வெற்றியைத் தருகின்றன.

பலன் எப்போதும் எது வலிமையானதோ அதைக் கொண்டு அமைகிறது!

காலம் வேறு இருக்கிறது. சில சமயம் உடனடி பலன் கிடைக்கிறது; சில சமயம் சில காலம் கழித்துக் கிடைக்கிறது. ஆனால் பலன் விளையும் என்பதில் சந்தேகமில்லை.

உடனடியாக நடந்ததற்கும் தாமதமாக ஆனதற்கும், முட்டாள்களே விதியே காரணம் என்கின்றனர்.

கர்மத்தின் ஆதிக்கத்தை எடுத்துக் கொள்வோம். (ஓ, ராமா!)

கர்மம் இரு வகைப்படும்; ஒன்று ப்ரக்தனா (பழையது); மற்றொன்று இஹிகா (தற்போது நடப்பில் உள்ளது)

தற்போதைய கர்மம் பழையதை வெல்லும் ஆற்றல் கொண்டது. இரண்டும் இரண்டு செம்மறி ஆடுகளைப் போலச் சண்டையிடும்; வலியது வெல்லும்! ஆகவே தற்போது வலுவுள்ளவனாக ஆவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

கடந்த காலம் நிச்சயமாக தற்போதுள்ள நிகழ்காலத்தை விட வலுவுள்ளதாக இருக்க முடியாது. நேற்று சாப்பிட்டதால் வயிற்றில் ஏற்பட்ட அஜீர்ணத்தை இன்று மருந்து சாப்பிட்டுக் குணப்படுத்துவதில்லையா?

samvid yoga

ஏழ்மையாக இருந்தாலும் சரி, பல இன்னல்கள், தடைகள் இருந்தாலும் சரி, எவன் ஒருவன் அவற்றையும் மீறித் தன் முயற்சி மூலம் அவற்றை வெல்கிறானோ அவனே பாராட்டத் தகுந்தவன்!

வசிஷ்டரின் இந்த உபதேசம் நலிந்தோர்க்கு நம்பிக்கை ஊட்டும் ஒன்றல்லவா!

மூன்றாம் உலக நாடுகள் என்று அங்குள்ளோர் தாழ்ந்து இருக்க வேண்டுமென்பதில்லையே! உலகம் முழுவதற்குமான ஒரு நூல்; ஒவ்வொரு மனிதனுக்குமான ஒரு நூல் – யோக வாசிஷ்டம்!

கடந்த காலத்தை மீறி நிகழ்காலத்தில் வலிமையுடன் பாடுபடு என்பதே வசிஷ்டரின் உபதேசம்.

எளிய சம்ஸ்கிருத பதங்கள்; படிப்பதற்கே ஆனந்தம்!  முயற்சி, தெய்வம் ஆகிய இவை, இதர பல விஷயங்களுடன் எப்படிப் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது என்பதையும் சேர்ந்து அறிய வேண்டும்.

ஆகவே, யோக வாசிஷ்டம் முழுவதுமாகப் பயில்வோம்; காலத்தை வென்ற உயர் இரகசியத்தை அறிவோம்!

குறிப்பு: யோக வாசிஷ்டம் பயில விரும்புவோ அருமையான கீழே குறிப்பிடப்படுள்ள இந்த இரு நூல்களை வாங்கலாம்:

  • Quintessence of Yogavasishtha by C.S. Gupta, Satsanga Seva Samithi Gandhi Bazar, Bangalore -4 (174 பக்கங்கள்)
  • The Vision and the way of Vasistha by Samvid (2461 ஸ்லோகங்களை சம்ஸ்கிருத மூலத்திலும் ஆங்கிலத்திலும் தரும் இந்த நூலைப் புகழ்வதற்கு வார்த்தைகளே இல்லை; 583 பக்கங்கள்; வாழ்நாள் முழுவதும் பக்கத்திலேயே வைத்திருந்து படிக்க வேண்டிய நூல்)

*********

மரங்கள் பழுப்பது ஏன்? நதிகள் ஓடுவது ஏன்?

cherry bunch

செர்ரி பழம் படம்

Don’t Reblog it for at least a week; don’t use pictures.

 

Article written by London swaminathan

Date: 19th  September 2015

Post No: 2170

Time uploaded in London :– 7-05 am

(Thanks  for the pictures) 

உதவி – உபகாரம் பற்றிய பொன்மொழிகள்

(1).பரோபகாராய பலந்தி வ்ருக்ஷா:

பரோபகாராய வஹந்தி நத்யா:

பரோபகாராய துஹந்தி காவ:

பரோபகாரார்த்தம் இதம் சரீரம் – விக்ரம சரிதம்

பொருள்:–

மற்றவர்களுக்காகவே மரங்கள் பழுக்கின்றன

மற்றவர்களுக்காகவே நதிகள் ஓடுகின்றன

மற்றவர்களுக்காகவே பசுக்கள் பாலைப் பொழிகின்றன

மற்றவர்களுக்காகவே இந்த உடல் இருக்கிறது

(2).பரோபகாராய சதாம் விபூதய: – சமயோசித பத்ய மாலிகா

நல்லோருடைய செல்வம் பிறருக்காகவே உளது

(3).விபாதி காய: கருணாபராணாம் பரோபகாரைர்ன து சந்தனேன – பர்த்ருஹரி

ஒருவனுடைய உடல் ஒளிருவது சந்தனத்தால் அல்ல; பிறருக்கு உதவி செய்வதன் மூலமே.

(4).சர்வ பூத உபகாராச்ச கிம் அன்யத் சுக்ருதம் பரம் – கதாசரித் சாகரம்

எல்லா உயிர்களுக்கும் உதவி செய்வதைவிடப் புண்ணியமானது எது?

yellow plums

பிளம்ஸ் பழம் படம்

மனிதரில் முதன்மையானவன் யார்?

(5).ஸ்வார்த்தோ யஸ்ய பரார்த்த ஏவ ஸ ந்ருணாம் அக்ரணீ: – பர்த்ருஹரி

பிறர் நலனைத் தன்னலமாகக் கருதுபவனே மனிதரில் முதன்மையானவன்.

(6).அனபேக்ஷித: குணதோஷ: பரோபகார: சதாம் வ்யசனம் – மஹாபாரதம்

குற்றம், குறைகளைக் கருத்திற் கொள்ளாமல் நல்லோர் உதவி செய்வர்.

(7).அனுத்ததா: சத்புருஷா: சம்ருத்திபி: ஸ்வபாவ ஏவைஷ பரோபகாரிணாம் – சாகுந்தலம்/ பர்த்ருஹரி

வளமுள்ள, செழிப்பான காலங்களில் கூட நல்லோர் அடாவடித்தனம் செய்யமாட்டார்கள்; அவர்களுடையை  இயல்பே பிறருக்கு உதவுவதுதான்.

TWIN TREES

நிழழ் தரும் மரத்தின் படம்

வெய்யிலை வாங்கி நிழலைத் தருவது மரங்களின் குணம்!

(8).அனுபவதி ஹி மூர்த்னா பாதப: தீவ்ரமுஷ்ணம்

சமயதி ப்ரிதாபம் சாயயா சம்ஸ்ரிதானாம் – சாகுந்தலம்

மரங்கள் கடும் வெய்யிலைத் தலையில் தாங்கி, தன் கீழ் இருப்போருக்கு நிழலை மட்டும் தரும் (நல்லோரும் கடும் துயரங்களைச் சுமந்து பிறருக்கு உதவி செய்கிறார்கள்).

(9).அஷ்டதச புராணேஷு வ்யாஸஸ்ய வசனத்வயம்

பரோபகார: புண்யாய பாபாய பரபீடனம்- பஞ்சதந்திரம்

பதினெட்டு புராணங்களிலும் வியாசர் சொல்வது இரண்டே வாக்கியங்கள்தான். 1) மற்றவர்களுக்கு உதவி செய்வது புண்ணியம் 2) மற்றவர்களுக்கு கெடுதல் செய்வது பாபம்.

(10).தனானி ஜீவிதம் சைவ பராத்தே ப்ராக்ஞ உத்ஸ்ருஜேத் – ஹிதோபதேசம்

அறிவாளிகள் தன்னுடைய பொருளையும், உயிரையும் பிறருக்காகவே செலவிட வேண்டும்.

(11).நஹி க்ருதம் உபகாரம் சாதவோ விஸ்மரந்தி – சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

செய்த உதவியை நல்லோர் மறப்பதில்லை.

managai

மா மரத்தின் படம்

சந்தன மரத்தில் குளிர்ச்சி இருப்பது யாருக்காக?

(12).ந ஹி ஸ்வதேஹசைத்யாய ஜாயந்தே சந்தன த்ருமா: -(சு.ர.பா)

சந்தன மரம் “தன்னுடைய” குளிர்ச்சிக்காக வளருவதில்லை

(13).பரம் பரோபகாரத்தம் யோ ஜீவதி ச ஜீவதி — சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

பிறருக்காக வாழ்பவனே வாழ்பவன்.

They alone live who live for others; the rest are more dead than alive – Swami Vivekananda

sandalwood

சந்தன மரம் படம்

-சுபம்–

Story about Company of the Good: Vasishta X Viswamitra clash!

hare krsn bhajan

Satsang by Hare Krishna Devotees

Don’t Reblog it for at least a week; don’t use pictures.

 

Article written by London swaminathan

Date: 18th  September 2015

Post No: 2169

Time uploaded in London :– 16-54

(Thanks  for the pictures) 

Satsangatve nissangatvam

Nissangatve nirmohatvam

Nirmohatve niscalitatvam

Niscalitatve jivanmuktih

–Adi Sankara’s Bhaja Govindam

“Through the company of the good, there arises non-attachment; through non-attachment there arises freedom from delusion; through delusionlessness, there arises steadfastness; through steadfastness there arises liberation in life.”

There is a story about Viswamitra. Once there was a discussion between him and sage Vasishta, the Guru of Sri Rama. The discussion was: which was greater, the power of austerities or the power of the company of the saints. Vasishta said that the power of the power of the company of the saints was greater. Viswamitra disagreed with him. The matter was brought before Lord Vishnu. He directed them to Mahasesha, the big serpent on whose head this earthly globe is supposed to be resting.

The sages went to Mahasesha and asked him which was greater — company of saints or austerities. Mahasesha said: I have this heavy burden of the earth on my head. If you will just lift it for a moment from my head I will be free to give the answer. At this, Vasishta and Viswamitra looked at each other as to how best this problem could be solved. Viswamitra suggested that he would apply the power he had gained by his austerities and lift the earth. He put forth all the strength he had gained by his austerities but the earth did not move. Then Vasishta came forward and applying the strength which he had gained by one minute company of saints, lifted the earth. Now Mahasesha said: your question has been answered.

 

Ramakrishna Paramahamsa’s Story

The agent of a rich Zamindar (land owner), when he goes into rural localities tyrannises over the tenants in various ways, but when he come back to the head quarters, and under the eyes of his master, he changes his ways, becomes pious, treats the tenants kindly, investigates into all their grievances fully and tries to meet out justice impartially to all. The tyrannical agent becomes good through the fear of the master and also  by reason of his society. Similarly does the society of the pious make even the wicked righteous, awakening awe and reverence in them.

Clean Temple Elephants

Elephant and soil

If you wash an elephant well and leave it at large, it is sure to make it self dirty in no time; but if, after the wash, you tie it down in its stable, it will remain clean. So if by the good influences of holy men, you once become pure in spirit, and then allow yourself to mix freely with wordly men, you are sure to lose that purity soon; but if you keep your mind fixed on god, you will never more get soiled in spirit

ஆனந்த விகடனும் தாயுமானவ கவசமும்!

1947 vikatan

 

Don’t Reblog it for at least a week; don’t use pictures.

 

Article written by S NAGARAJAN

Date: 18th  September 2015

Post No: 2168

Time uploaded in London :– காலை 8-18

(Thanks  for the pictures) 

 

 

.நாகராஜன்

தாயுமானவர், கவசம் ஏதாவது பாடியிருக்கிறாரா என்ன, தெரியாமல் போய் விட்டதே என்று நினைப்பவர்களுக்கு முதலிலேயே சில வார்த்தைகள்.

தாயுமானவர் கவசம் ஒன்றையும் பாடவில்லை; அவரது அருமையான தமிழ்ப் பாக்களையே தாயுமானவ கவசம் என்று இங்கு குறிப்பிடுகிறோம்.

விஷயத்திற்கு வருவோம்.

 

 

சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் அநேகமாக பெரும்பாலான குடும்பங்களில் வாரந்தோறும் ஒரு குறிப்பிட்ட நாளில் தவறாமல் சண்டை நடக்கும்.

சகோதரனுக்கும் சகோதரிக்கும். சகோதரர்கள், சகோதரிகளுக்குள். சில சமயம் குடும்பத் தலைவி, தலைவரும் இதில் பங்கு கொள்வார்கள். கடைசியில்பெரிய தலஒன்று அனைவரையும் சமாதானப் படுத்திபங்கீடுசெய்து வைக்கும்.

 

சண்டைக்குக் காரணம்: வாரம் தோறும் வரும் ஆனந்தவிகடன் பத்திரிகை.

அதை யார் முதலில் படிப்பது என்பதில் தான் சண்டை! சில சமயம் விகடனே கிழிந்து முழிக்கும். இந்த சண்டையைக் கொஞ்சம் ஈடுகட்டபசையுள்ளகுடும்பங்கள் விகடனின் இரண்டு பிரதிகளைக் கூட வாங்கிச் சமாளிக்கப் பார்க்கும்.

 

ஆனந்தவிகடனை 1928 பிப்ரவரியில் பூதூர் வைத்தியநாத ஐயரிடமிருந்து வாங்கி அதன் உரிமையாளராக அதைத் தன் பொறுப்பில் எடுத்தவுடன் வாசன் அவர்கள், பிரிண்ட் செய்த காப்பிகளை சைக்கிளில் கட்டி எடுத்துச் சென்று பீச்சில் விற்பாராம். மெல்ல மெல்ல விகடனை தமிழ் மக்களின் உள்ளங்களில் நிலை நிறுத்தினார்.

கல்கி, தேவன், மாலி என ஒரு பிரம்மாண்டமான பட்டாளம் விகடனைத் தூக்கி நிறுத்தியது.

 

ஆனால் தமிழ் மக்கள் மனதில் இது நிரந்தரமான இடத்தைப் பிடித்தது எப்படி?

இந்த மேதைகளின் படைப்புகளுக்கெல்லாம் மேலாக ஒரு கவசத்தை அது அணிந்திருந்ததால் தான்!

தாயுமானவ கவசத்தை அது அணிந்து கொண்டிருந்தது.

 

1928_vikatan

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!

வாசன் அவர்கள் தன் பொறுப்பில் ஆனந்தவிகடனை ஏற்றவுடன் இந்த பராபரக் கண்ணியை விகடனின் குறிக்கோளாக ஆக்கி அதை விகடனில் வெளியிட ஆரம்பித்தார்.

தாயுமானவரின் இந்தஉலக நலப் பாட்டிற்குஈடு இணை ஏதுமில்லை.

 

அனவருக்கும் இன்பம் என்ற அற்புத மந்திரத்தை அது அணிந்து வாரந்தோறும் அதை முகப்பில் ஏந்தி பல்லாயிரக்கணக்கானோருக்குப் பறை சாற்றி வந்ததால் அது தமிழர்களின் நல்ல உள்ளங்களில் இடத்தைப் பிடித்தது.

 

ஆனால் லட்சோபலட்சம் உள்ளங்களில் இடம் பெற்று பெரிய சக்தியாக அது மாறியவுடன் சில வருடங்களுக்கு முன்னர் தீயசக்திகளின் பார்வை அதன் மீது சுயலாபத்திற்காகத் திரும்பியதாக செய்திகள் கசியவே நல்ல உள்ளங்கள் பதைபதைத்தன.

 

பாழாய்ப்போன அந்தப் பாப்பாரப் பத்திரிகைஅனைத்து உள்ளங்களிலும் குடி கொண்டு செல்வாக்கு மிக்க சக்தியாக விளங்கியதைக் கண்ட தீயசக்திகள் அதைலபக்என்று விழுங்கி ஏப்பம் விட்டு முடிந்த அளவு அந்த செல்வாக்கில் கிடைக்கும் ஆதாயத்தைப் பெறத் தீர்மானித்த போது விகடனைக் காப்பாற்றியது எது?

 

தாயுமானவ கவசம் தான்! எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்தவாறே இருந்த போது அந்த எல்லோரிலும் நல்ல உள்ளங்கள் ஏராளம் இருந்தன அல்லவா! அந்த உள்ளங்களின் ஆசீர்வாதம் தொடர்ந்து அதற்கு இருந்து வந்ததல்லவா! அந்த தெய்வ சக்தி தீய சக்திகளைத் துரத்தி விட்டது; விகடன் பிழைத்தது!

விகடனை வாழ வைத்த அந்த தாயுமானவ கவசம் தன்னை அணிந்து கொள்ளும் தமிழர்களையும்  காப்பாற்றும் என்பதில் சந்தேகம் என்ன?

 

 தாயு

திருப்பராய்த்துறை சுவாமி சித்பவானந்தர் தாயுமானவர் பாடல்களை அருமையாகத் தனது நூல்களில் விளக்கியுள்ளார். அவர் நடத்தி வந்த அந்தர்யோகத்திலும் தாயுமானவரின் பாடலின் விளக்கவுரை தவறாமல் இடம் பெறும்.

தாயுமானவரின் சிந்தனை உயரிய சிந்தனை; அதன் அகலமும் நீளமும் ஆழமும் தொடர்ந்து படித்தால் மட்டுமே புரியும்; உணர முடியும். அதன் பயன் எல்லையற்றது!

பொருளில்லா அடுக்கு மொழிகளில் தடுக்கி விழுந்து ஏமாறும் தமிழர்களுக்குப் பொருளுடன் கூடிய அடுக்கு மொழிகள் ஏராளம் தாயுமானவ கவசத்தில் உண்டு.

 

 

லைகடலென ர்ப்பரித்து வரக் கூவும் தமிழர்களுக்கான அடுக்குமொழி இன்றி மைதியுடன் னந்தமாக வாழ வழி கூறும் அடுக்குமொழி தாயுமானவர் பாடல்களில் நிறையவே உண்டு.

 

அவரது பாடல்களில் சில முக்கிய வரிகள் / வார்த்தைகள் இதோ இங்கே: (உத்வேகம் பெற்று அனுதினமும் ஒதிப் பயனடைவதற்காக):-

கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே

மார்க்கண்டர்க்காக மறலி பட்ட பாட்டை உன்னிப் பார்க்கின் அன்பர்க்கென்ன பயம் காண் பராபரமே

 

அன்பர் பணி செய்ய என்னை ஆளக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே

வாக்கும் மனமும் மவுனமுற எந்தை நின்னை நோக்கும் மவுனமிந்த நூல் அறிவில் உண்டாமோ?

நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே

 

அருளால் எவையும் பாரென்றான் அத்தை                                                

யறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன்                                                                         

இருளான பொருள் கண்டதல்லால் கண்ட                                       

வென்னையுங் கண்டிலனென்னேடி தோழி  சங்கர சங்கர சம்பு

வாழி சோபனம் வாழி நல்லன்பர்கள்                                                

சூழ வந்தருள் தோற்றமும் சோபனம்

 

 

அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது எது?

சமயகோடிகள் எல்லாம் தம் தெய்வம் எம் தெய்வம் என்று எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் நின்றது எது?

அது கருத்திற்கிசைந்ததுவே கண்டனவெலாம் மோன உருவெளியதாகவுங் கருதி அஞ்சலி செய்குவாம்!

 

நாதவடிவென்பர் சிலர் விந்துமயமென்பர் சிலர் நட்ட நடுவே இருந்த நாமென்பர் சிலர் உருவமாமென்பர் சிலர் கருதி நாடில் அருள் என்பர் .. இவையால் பாதரசமாய் மனது சஞ்சலப் படுமலாற் பரம சுக நிட்டை பெறுமோ பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே!

ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதினிலே ஆணை செலவே நினைவர்

இந்திரசாலம் கனவு கானல் நீர் என உலகம் எமக்குத் தோன்றச் சந்ததமும் சிற்பரத்தால் அழியாத தற்பரத்தைச் சார்ந்து வாழ்க

 

 

பட்டப் பகல் பொழுதை இருள் என்ற மருளர் தம் பக்ஷமோ என் பக்ஷம்?

பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி

எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவி தான் யாதினும் அரிதரிது காண்

கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்; கற்றும் அறிவில்லாத என் கன்மத்தை என் சொல்வேன்!

பேதித்த சமயமோ ஒன்று சொனபடி ஒன்று பேசாது

 

 

காகமானவை கோடி கூடி நின்றாலும் ஒரு கல்லின் முன் எதிர் நிற்குமோ! கர்மமானவை கோடி முன்னே செய்தாலும்  நின் கருணை ப்ரவாக அருளைத் தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ?

பாகத்தினாற் கவிதைப் பாடிப் படிக்கவோ பத்தி நெறியில்லை வேத பாராயணப் பனுவல் மூவர் செய் பனுவல் அது பகரவோ விசையுமில்லை

 

 

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்; கரடி வெம்புலி வாயையும் கட்டலாம் ; ஒரு சிங்க முதுகின் மேற்கொள்ளலாம்; கட்செவி எடுத்தாட்டலாம்; வெந்தழலிலிரதம் வைத்து ஐந்து உலோகத்தையும் வேதித்து விற்றுண்ணலாம்; வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்; விண்ணவரை ஏவல் கொளலாம்; சந்ததமும் இளமையோடிருக்கலாம்; மற்றொரு சரீரத்தினும் புகுதலாம்; சலமேல் நடக்கலாம்; கனல் மேல் இருக்கலாம்; தன் நிகரில் சித்தி பெறலாம்; சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது; சத்தாகி என் சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே! தேஜோமயானந்தமே!!

 

 

எனக்கெனச் செயல் வேறிலைமனத்தகத்துள அழுக்கெலாம் மாற்றி எம்பிரான் நீ நினைத்தது எப்படி அப்படி அருளுதல் நீதம்

 

காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டாகார சிவ,                            

போகமெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமா                  

ஏக உருவாய்க் கிடக்குதையோ, இன்புற்றிட நாம் இனி எடுத்த                         

தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் செகத்தீரே!

 

*************

Freezy, Sneezy, Breezy, Wheezy, Showery: New Names of Months!

FrenchRev_3

Compiled  by London swaminathan

Date: 17th September 2015

Post No: 2167

Time uploaded in London :– 21-31

(Thanks  for the pictures) 

During the time of French Revolution, when the months in France were named Thermidor, Floreal, Nivose etc.,  — Sheridan proposed to extend the innovation to the English language, beginning with Januray, as – Freezy, Sneezy, Breezy, Wheezy, Showery, Lowery, Flowery, Bowery, Snowy, Flowy, Blowy, Glowy.”

 

Revolution or Revolt?

Following are some of the anecdotes on revolution:

On the afternoon of July 14, 1789, the Duc de La Rochefoucauls – Liancourt brought to King Louis XVI at Versailles the news of the capture of Bastille. The king exclaimed, “Why, this is a revolt!

“No, sire,” replied the Duke, “it is a revolution.”

french

Revolutionary Irishman

The character of the natural revolutionary is typified by the Irishman who was cast ashore upon a beach after a shipwreck. Weak and exhausted from his struggle with the waves, the castaway staggered along the sands until he encountered a man. “Is there a government here?” he asked next.

“Of course,” was the reply.

“Then – I am against it?”

Hats-1024x877

Heads Roll! Man who made hats hates!

A man living in a village outside Paris during the Revolution met a friend frsh from the city and asked what was happening.

“It’s awful”, was the reply, “they are cutting off heads by the thousand.”

“Good Heavens! Surely not heads,” he cried.

“Why, I am a hatter!”

(Hatter= one who makes hats and sells)

விநாயக கவசத்தின் அபூர்வ சக்தி!

ganesh mumbai mani

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Written  by London swaminathan

Date: 17th September 2015

Post No: 2166

Time uploaded in London :– 12-45

(Thanks  for the pictures) 

கடவுள் துதிகள், தோத்திரங்கள், பாடல்களைப் படிப்போரைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம் உருவாகிறது. இதை நாம் அறிய மாட்டோம். யோகிகளும், ஞானிகளும் அறிவர். நம்மைச் சுற்றி ஒரு ஒளிவட்டமும் இருக்கிறது என்று ஆன்றோர் சொல்லுவர். இதே போல நம்முடைய பூர்வ ஜன்ம பாப புண்ணியங்களும் நம்மைத் தொடர்ந்தே வருவதை அவர்கள் காண முடியும். சில சொந்த அனுபவங்களைக் கொண்டு நான் இதைச் சொல்கிறேன்.

மதுரை தினமணி பத்திரிகையில் என் தந்தை திரு.வெ.சந்தானம் செய்தி ஆசிரியராக வேலை பார்த்த காலத்தில் மதிப்புரைக்கு என்று வாரம் தோறும் நிறைய புத்தகங்கள் வரும். அதில் ஒன்று தஞ்சை மாவட்டம், கருப்பக்கிளர், பைந்தமிழ்ப் பண்ணை, சு.அ.இராமசாமிப்புலவர் 20-11-1962-ல் வெளியிட்ட “செல்வத் திறவுகோல்” என்று தலைப்பிட்ட, கவசங்களின் தொகுப்பு ஆகும். அதில் விநாயக கவசத்தால் ஏற்படும் பலன்களை முன்னுரையில் எழுதிவிட்டு இதைப் படிப்பவர்கள் நகைப்பார்கள் என்று தெரியும், ஆயினும் இதை வெளியிடுகிறேன் என்று அவர் எழுதியுள்ளார். அதில், சிலர் சிறையிலிருந்து விடுதலை பெற தான் படித்துப் பல கிடைத்ததையும், இந்தியாவைத் தாக்கிய சீனப் படைகள் பின்வாங்க வேண்டுமென்று தான் படித்துப் பலன் பெற்றதையும் சொல்கிறார். அந்தப் புத்தகம் என் கைக்கு வந்த காலத்திலிருந்து நானும் கவசம் சொல்லி வருகிறேன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இருக்கலாம்.

ganesh ivory

கொஞ்சம் சுய புராணம்! மன்னிக்கவும்.

லண்டனில் நான் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் உடையவன். எல்லோரும் கிறிஸ்துமஸ் ஹாலிடே, ஈஸ்டர் ஹாலிடே என்று எட்டு மணி வரை தூங்கினாலும் எனக்கு காலை ஐந்து மணிக்குப்பின் படுக்கையில்  இருக்க முடியாது. வேலையில் கொஞ்சம் தூக்கம் வரத்தான் செய்யும். நைஸாக யாருக்கும் தெரியாமல் ஒரு நிமிடமாவது கண் அயர்ந்தால் புத்தெழுச்சி கிடைத்துவிடும். ஒரு நாள் அதிகாலையில் மாடியிலிருந்து எழுந்து கீழே வருகையில் ‘லைட்’ போடாமல், அட நமக்குப் பழக்கமான படிகள் தானே, என்று எண்ணி இறங்கினேன். மேல் படியிலிருந்து அப்படியே சறுக்கி கீழே வந்துவிட்டேன்!! எல்லாப் படிகளையும் என் முதுகெலும்பு மட்டும் தொட்டு வந்தது! பெரிய சப்தம்! வீட்டிலுள்ள எல்லோரும் லண்டனில் ஏதோ பூகம்பம் நிகழ்ந்துவிட்டதோ என்று எழுந்து ‘லைட்’டைப் போட்டுக் கொண்டு ஓடிவந்தனர். எனக்கோ ஒரு காயமும் ஆகாததில் மகிழ்ச்சி. ஆகையால் சிரித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் என்னைப் பார்த்து என்ன ஆயிற்று? அதிகாலை வேலையில் எதைக் கீழே போட்டீர்கள் என்று கேட்டனர். நான் என் உடம்பைத்தான் கீழே போட்டேன். ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னேன். அவர்கள் எல்லோரும் அரைத் தூக்க கலக்கத்தில் இருந்ததால், புரிந்ததோ, புரியவில்லையோ மீண்டும் சுகமாகத் தூங்கப் போய்விட்டார்கள்.

நான் அந்த சம்பவத்தை எண்ணி எண்ணி வியக்கிறேன். ஊமைக் காயம் கூடப் படவில்லை! கடவுள் காப்பாற்றினார். பின்னர் இதை எல்லோரிடமும் சொல்லி, விநாயக கவசம் படித்ததன் பலனே இது என்று சொல்லி எல்லோரையும் கவசம் படிக்கச் சொன்னேன். மகன்களுக்குத் தமிழ் படிக்கத் தெரியாதாகையால் (பேச மட்டுமே தெரியும்) கந்த சஷ்டி கவசத்தை ‘ஐபேடி’ல் கேட்பர். அதே போல ஹனுமான் சாலிசாவையும் கேட்பார்கள்.

இது ஒரு சம்பவம் மட்டுமிருந்தால் “கோஇன்ஸிடென்ஸ்” (தன்னிச்சையாக ஒரே நேரத்தில் நடந்த இரு செயல்கள்), ஒன்றிரண்டு “ரேர் இன்ஸிடெண்ட்ஸ்” (அபூர்வ சம்பவங்கள்) என்று விட்டு விடலாம். இன்னொரு விஷயத்தைக் கேளுங்கள்.

ganesh tall

என் எதிரி நீலாம்பரி!

சென்னையிலுள்ள எனது அண்ணன் சீனிவாசனுக்கு யாரைப் பார்த்தாலும் எதிர்காலத்தைச் சொல்லும் சக்தி (பேஸ் ரீடிங் பவர்) உண்டு. 1990- ஆம் ஆண்டில் லண்டனுக்கு வந்தபோது, பொதுவான முறையில், மரியாதையின் நிமித்தமாக, நான் வேலை பார்க்கும் இடத்திலுள்ள, என் பரம விரோதிக்கு அவரை அறிமுகப்படுத்தி வைத்தேன். பேஸ் ரீடிங்  சக்தி பற்றியும் சொன்னேன். அவர் விடுவதாக இல்லை. எங்கே பார்க்கலாம், என்னைப் பற்றிச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று ஆரம்பித்தார். எனக்கு முன்னாலேயே அவரைப் புகழ்ந்து, அவரை யாராலும் அசைக்கமுடியாது என்று என் அண்ணன் சொல்லிவிட்டார்.

பின்னர் அறையிலிருந்து வெளியே வந்தபின்னர், “என்ன இது அநியாயம்? என் பரம விரோதிக்குப் போய் இப்படி நல்லதாகச் சொல்லிவிட்டாய்? என்று வியப்புடன் கேட்டேன். அவரைச் சுற்றி முருகன் அருள் வளையம் இருப்பதாகவும் அதைத் தான் கண்டவுடன் பார்த்த நிகழ்ச்சிகளை அப்படியே சொன்னதாகவும் கூறினார். எனக்கும் அந்தப் பெண்மணி, சிறுவயதிலிருந்தே, அவர் கந்த சஷ்டிக் கவசம் படிப்பதைப் பேச்சுவாக்கில் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அவர் அம்மா கற்பித்தது அது. ஆனால் வெளியே பேசும்போதெல்லாம் தான் ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்று “பெருமையாக”ச் சொல்லிக் கொள்வார்! அவர் சிறு வயதிலிருந்து படித்த, அவர் அம்மா, காலில் செருப்புகூட இல்லாமல் கப்பலில், வெளிநாடு சென்ற தன் பெண்ணைக் காப்பாற்று என்று நாள்தோறும் கதறிப்படித்த, அந்தக் கவசமே அவரைச் சுற்றிக் காத்து நின்றது என்று எனக்குப் புரிந்தது. நீங்கள் மற்றவர் நலனுக்காகக் கவசம் படித்தாலும் பலன் உண்டு என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

gnapathy suzi

என் அம்மா “கடித்த” வேலைக்காரி!

சென்னை அடையாறில் உள்ள எனது தம்பியின் பங்களாவில் என் அம்மா வசித்துவந்த காலம். அங்கே ஒரு வேலைக்கார பெண்மணி இருந்தார். என் அம்மாவுக்கு வயது எழுபதுக்கு மேல். அவருக்கு கூனும் விழுந்துவிட்டது. ஆனால் தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தோத்திரங்களை வாசித்துக் கொண்டிருப்பார். வீட்டில் என் அம்மா மட்டும் இருப்பதை அறிந்து ஒரு முகமூடியை மூஞ்சியில் போட்டுக்கொண்டு வந்து என் அம்மாவைத் தாக்கி கழுத்திலிருந்த தங்க நகைகளைப் பறித்தார். என் அம்மா, ஒரே கடியாக அவரைக் கடிக்கவே அந்தப் பெண் அலறிய வாறு ஓடிவிட்டார். அவர் குரல், நடை, உடை, பாவனைகளை வைத்து அடையாளம் காணவே அவரைப் போலீஸார் வந்து பிடித்தனர். சென்னைப் பத்திரிக்கைகளில் இச்செய்தி அப்போது வெளியாகியது. இது பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி. அவரை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லி,  என் அம்மா போலீஸில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிவிட்டார்.

“அம்மா, உனக்கோ உடலில் கொஞ்சமும் தெம்பு கிடையாது. எப்படிக் கீழேவிழாமல் கடித்தாய்? அதுவும் கடிப்பது என்பது பிராமண குலத்தில் மிகவூம் அபூர்வமே” என்று நாங்கள் கேட்டோம். அவர் தினமும் படிக்கும் நரசிம்ம ஸ்த்தோத்திரமே இப்படி அவரைச் சிங்கமாக மாற்றியது. ஆதிசங்கரரைப் பலியிட காபாலிகர் அழைத்துச் சென்றபோது அவரது சீடரே நரசிம்மாவதாரம் எடுத்து அந்தக் காப்பாலிகனைக் கிழித்தெறிந்தது உடனே நினைவுக்கு வந்தது. துதிப்பாடல்களுக்கு அவ்வளவு சக்தி! இப்படி நூற்றுக் கணக்கான சம்பவங்களை நான் சொல்லலாம். ஆனால் அது சுயபுராணமாக, என் “ஆட்டோபையோகிராபியாக” மாறிவிடும் என்று அஞ்சி இத்துடன் நிறுத்துகிறேன்.

நம்பிக்கையுள்ளவர்கள் விருப்பமான கவசத்தைப் படியுங்கள். பலன் உண்டு. குற்றாலம் அருவியின் பின்னாலுள்ள குகையில் தவறி விழுந்த ஒரு பிராமண இளைஞன், பல நாட்களுக்கு காயத்ரீ ஜபம் செய்துகொண்டிருக்க, இடையர்களும் வேடர்களுமே அறிந்த அந்த இடத்துக்கு வந்த, ஆட்டிடையர்கள் அவரைக் காப்பாற்றிய செய்தி முன்னர் தினமணியில் வந்தது.

மந்திரம் என்பதன் பொருளே மனனம் செய்பவரைக் காப்பாற்றும் என்பதுதானே!

ganesh gold

விநாயக கவசமும் அதன் பலனும்:–

வளர் சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க!

வாய்ந்தசென்னி அளவுபடா அதிக சவுந்தர தேகம்

மதோற்கடர்தாம் அமர்ந்து காக்க! விளரற

நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க!

புருவந் தம்மைத் தளர்வில் மகோதரர் காக்க!

தடவிழிகள் பாலசந்திரனார் காக்க!

கவின்வளர் அதரம் கசமுகர் காக்க!

தால்  அங்கணக்கீரிடர் காக்க!

நவில்சிபுகம் கிரிசை சுதர் காக்க!

நனி வாக்கை விநாயகர்தாம் காக்க!
அவிர்நகை துன்முகர் காக்க!
அள் எழிற் செஞ்செவி பாசபாணி காக்க!

தவிர்தலுறாது இளங்கொடிபோல் வளர்மணி
நாசியைக் சித்திதார்த்தர் காக்க! காமருபூ
முகந்தன்னைக் குணேசர் நனி காக்க!
களம் கணேசர் காக்க!

வாமமுறும் இருதோளும் வயங்கு கந்தபூர்வசர்
தாம் மகிழ்ந்து காக்க! ஏமமுறு மணிமுலை
விக்கின விநாசர் காக்க! இதயந் தன்னைத்
தோமகலுங் கணநாதர் காக்க!

அகட்டினைத் துலங்கு ஏரம்பர் காக்க!
பக்கம் இரண்டையும் தராதரர் காக்க!
பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க!

விளங்கிலிங்கம் வியாளபூடணர்தாம் காக்க!

தக்க குய்யந்தன்னை வக்கிரதுண்டர் காக்க!
சகனத்தை அல்லல் உக்க கணபன் காக்க!
ஊருவை மங்களமூர்த்தி உவந்து காக்க!
தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க!

இருபதம் ஏகதந்தர் காக்க! வாழ்கரம்
க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க! முன்கையை
வணங்குவார் நோய் ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க!

ganesh indonesia

கேழ்கிளறும் நகங்கள் விநாயகர் காக்க!

கிழக்கினிற் புத்தீசர் காக்க!
அக்கினியிற் சித்தீசர் காக்க!
உமாபுத்திரர் தென்னாசை காக்க!
மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க!

விக்கினவர்த்தனர் மேற்கென்னுந் திக்கதனிற் காக்க!
வாயுவிற் கசகன்னர் காக்க!
திகழ்  உதீசி தக்க நிதிபன் காக்க!
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க!

ஏகதந்தர்பகல் முழுதுங் காக்க! இரவினும் சந்தி
இரண்டன் மாட்டும் ஒகையின் விக்கினகிருது காக்க!
இராக்கதர் பூதம் உறு வேதாளம் மோகினி பேய்
இவையாதி உயிர்த்திறத்தால் வருந்துயரும்
முடிவிலாத வேகமுறு பிணிபலவும் விலக்குபு
பாசாங்குசர்தாம் விரைந்து காக்க!

மதி,ஞானம், தவம், தானம், மானம், ஒளி, புகழ்,

குலம், வண்சரீரம், முற்றும் பதிவான தனம்,

தானியம், கிர

கம், மனைவி, மைந்தர், பயில்

நட்பாதிக் கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க!

காமர் பவுத்திரர் முன்னான விதியாரும்

சுற்றமெலாம் மயூரேசர் எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க!

வென்றி,சீவிதம் கபிலர் காக்க!

கரியாதியெலாம் விகடர் காக்க!

என்றிவ்வாறிது தனை முக்காலுமும் ஓதிடின்,

நும்பால் இடையூறென்றும் ஒன்றுறா, முனிவரர்காள்,

அறிமின்கள், யாரொருவர் ஓதினாலும் மன்ற ஆங்கவர்

தேகம் பிணியற வச்சிர தேகமாகி மின்னும்!

ganesh rose

விநாயக கவசப் பலன்

யாத்திரையில் தோத்திரம் செய்தால் சகல

விக்கினமும் இரியல் போக

மூத்த பயன் கைகூடும் சமரின் மொழிந்

திடில் விசயம் முற்றும் நாளும்

ஏத்தியிரு முறை இருபத் தொருநாள் வந்

தித்டின் மாரணம் ஈண்டேதம்

பனமாதி நிலை பேறெய்தும்.

நித்தலு மூவேழுமுறை செபித்திடில்கா

ராக்கிருகநீங்கு மன்னர்

பொத்துமுளநிட்டூரம் போம் அரையன்

தனைக் காணும்போது முக்கால்

பத்தியின் ஓதிடின் அவன் தான் வசப்படுவன்

இதைத் தாளிப் பனைமெல்லேட்டில்

வைத்தெழுதிப் படிப்பினும் கேட்பினும் பூசை

வயக்கினும் வல் இடரும் தீரும்.

அன்பு, உறுதி, ஆசாரம் உடையார்க்கு இக்

கவசத்தை அறைக! அல்லார்க்கு

என்பெறினும் உரையற்க! எனக்கிளந்து

மரீசி தனது இருக்கை உற்றான்.

–சுபம்–

happy g chaturthy

ஒரு லட்சம் ஸ்லோகங்கள், 2314 அத்தியாயங்கள் கொண்ட உலகின் மிகப் பெரும் நூல் மஹாபாரதம்

maha head 3

Dont Reblog it for at least a week; dont use pictures.

மஹாபாரத வழிகாட்டி

ஒரு லட்சம் ஸ்லோகங்கள், 2314 அத்தியாயங்கள் கொண்ட உலகின் மிகப் பெரும் நூல் மஹாபாரதம்

 

Research Article written by S NAGARAJAN

Date: 17th  September 2015

Post No: 2165

Time uploaded in London :– 12-11

(Thanks  for the pictures) 

 

 

.நாகராஜன்

வாழ்நாள் முழுவதும் படிக்க வேண்டிய இதிஹாஸங்கள் ராமாயணமும், மஹாபாரதமும்.

இதில் மஹாபாரதம் உலகின் மிகப் பெரும் நூல் என்ற பெருமையைப் பெறுகிறது. இதில் இல்லாத விஷயங்களே இல்லை என்பது இதன் சிறப்புகளில் ஒன்று.

நூலின் பிரம்மாண்டத்தை எப்படி அறிவது?

 

கீழே உள்ள பட்டியலைப் பார்த்து அறியலாம்.

 

தமிழில் மிகவும் அரும்பாடு பட்டு மஹாபாரதத்தைப் பதிப்பித்தவர் .வீ.இராமானுஜாசாரியர். இவரது பதிப்பு மொத்தம் சுமார் 8895 பக்கங்களைக் கொண்டிருக்கிறது. 2314 அத்தியாயங்கள் இதில் உள்ளன.

1896இல் K.M. கங்குலி அவர்களால் 1896ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட மஹாபாரதத்திலோ 2113 அத்தியாயங்கள் உள்ளன.

ஹிந்தியில் மஹாபாரதம் பற்றி எழுதியுள்ள அறிஞர் வாசுதேவ குப்தா தனது மஹாபாரத் தர்ஷன் (2011 வெளியீடு, புனீத் ப்ரகாஷன், ஜய்பூர்) என்ற நூலில் 1923 அத்தியாயங்களில் உள்ள 96244 ஸ்லோக பட்டியலைத் தருகிறார்.

நூலின் பிரம்மாண்டம் இப்போது புரியும்.

 

 

மூன்று பட்டியல்களையும் கீழே காணலாம். இன்னும் சில பட்டியல்களும் கூட இருக்கக் கூடும்.

 maha headline

தமிழ் மஹாபாரதம்.வீ.ராமானுஜாசாரியர் பதிப்பு

  1. ஆதி பர்வம் 260 அத்தியாயங்கள் 956 பக்கங்கள்
  2. சபா பர்வம் 103 அத்தியாயங்கள் 359 பக்கங்கள்
  3. வனபர்வம்  315 அத்தியாயங்கள் 1242 பக்கங்கள்
  4. விராட பர்வம் 78 அத்தியாயங்கள் 337 பக்கங்கள்
  5. உத்யோக பர்வம் 196 அத்தியாயங்கள் 663 பக்கங்கள்
  6. பீஷ்ம பர்வம் 122 அத்தியாயங்கள் 510 பக்கங்கள்
  7. துரோண பர்வம் 203 அத்தியாயங்கள் 858 பக்கங்கள்
  8. கர்ண பர்வம்  101 அத்தியாயங்கள்  482 பக்கங்கள்
  9. சல்ய பர்வம்  66 அத்தியாயங்கள் 303 பக்கங்கள்
  10. சௌப்திக பர்வம் 18 அத்தியாயங்கள்  72 பக்கங்கள்
  11. ஸ்த்ரீ பர்வம் 27 அத்தியாயங்கள்  72 பக்கங்கள்
  12. சாந்தி பர்வம் 375 அத்தியாயங்கள் 1414 பக்கங்கள்
  13. அநுசாஸன பர்வம் 274 அத்தியாயங்கள் 1068 பக்கங்கள்
  14. அஸ்வமேதிக பர்வம் 118 அத்தியாயங்கள் 403 பக்கங்கள்
  15. ஆஸ்ரமவாசிக பர்வம் 41 அத்தியாயங்கள் 98 பக்கங்கள்
  16. மௌஸல பர்வம் 9 அத்தியாயங்கள் 28 பக்கங்கள்
  17. மஹா ப்ரஸ்தானிக பர்வம் 3 அத்தியாயங்கள்  10 பக்கங்கள்

18 ஸ்வர்காரோஹண பர்வம்    5 அத்தியாயங்கள்   20 பக்கங்கள்

               மொத்தம்        2314  அத்தியாயங்கள்   8895 பக்கங்கள்

 

 

ஆங்கிலத்தில் உள்ள மஹாபாரதம்கே.எம். கங்குலி பதிப்பு

 

maha headline2

  1. ஆதி பர்வம் 236 அத்தியாயங்கள்
  2. சபா பர்வம் 80 அத்தியாயங்கள்
  3. வனபர்வம் 313 அத்தியாயங்கள்
  4. விராட பர்வம் 72 அத்தியாயங்கள்
  5. உத்யோக பர்வம் 199 அத்தியாயங்கள்
  6. பீஷ்ம பர்வம் 124 அத்தியாயங்கள்
  7. துரோண பர்வம் 203 அத்தியாயங்கள்
  8. கர்ண பர்வம் 96 அத்தியாயங்கள்
  9. சல்ய பர்வம் 65 அத்தியாயங்கள்
  10. சௌப்திக பர்வம் 18 அத்தியாயங்கள்
  11. ஸ்த்ரீ பர்வம் 27 அத்தியாயங்கள்
  12. சாந்தி பர்வம் 364 அத்தியாயங்கள்
  13. அநுசாஸன பர்வம் 168 அத்தியாயங்கள்
  14. அஸ்வமேதிக பர்வம் 92 அத்தியாயங்கள்
  15. ஆஸ்ரமவாசிக பர்வம் 39 அத்தியாயங்கள்
  16. மௌஸல பர்வம் 8 அத்தியாயங்கள்
  17. மஹா ப்ரஸ்தானிக பர்வம் 3 அத்தியாயங்கள்

18 ஸ்வர்காரோஹண பர்வம்    6 அத்தியாயங்கள்  

               மொத்தம்        2113  அத்தியாயங்கள் 

 

 maha2

ஹிந்தியில் உள்ள மஹாபாரத தர்ஷன் நூலில் கே.எம்.வாசுதேவ குப்தா தந்துள்ள பட்டியல்

  1. ஆதி பர்வம் 227 அத்தியாயங்கள் 8884 ஸ்லோகங்கள்
  2. சபா பர்வம் 78 அத்தியாயங்கள் 2511 ஸ்லோகங்கள்
  3. வனபர்வம் 269 அத்தியாயங்கள் 11664 ஸ்லோகங்கள்
  4. விராட பர்வம் 67 அத்தியாயங்கள் 2050 ஸ்லோகங்கள்
  5. உத்யோக பர்வம் 186 அத்தியாயங்கள் 6698 ஸ்லோகங்கள்
  6. பீஷ்ம பர்வம் 117 அத்தியாயங்கள் 5884 ஸ்லோகங்கள்
  7. துரோண பர்வம் 170 அத்தியாயங்கள் 8909 ஸ்லோகங்கள்
  8. கர்ண பர்வம் 69 அத்தியாயங்கள் 4964 ஸ்லோகங்கள்
  9. சல்ய பர்வம் 59 அத்தியாயங்கள் 3220 ஸ்லோகங்கள்
  10. சௌப்திக பர்வம் 18 அத்தியாயங்கள் 870 ஸ்லோகங்கள்
  11. ஸ்த்ரீ பர்வம் 27 அத்தியாயங்கள் 775 ஸ்லோகங்கள்
  12. சாந்தி பர்வம் 329 அத்தியாயங்கள் 14732 ஸ்லோகங்கள்
  13. அநுசாஸன பர்வம் 146 அத்தியாயங்கள் 8000 ஸ்லோகங்கள்
  14. அஸ்வமேதிக பர்வம் 103 அத்தியாயங்கள் 3320 ஸ்லோகங்கள்
  15. ஆஸ்ரமவாசிக பர்வம் 42 அத்தியாயங்கள் 1111 ஸ்லோகங்கள்
  16. மௌஸல பர்வம் 8 அத்தியாயங்கள் 320 ஸ்லோகங்கள்
  17. மஹா ப்ரஸ்தானிக பர்வம் 3 அத்தியாயங்கள் 123 ஸ்லோகங்கள்

18 ஸ்வர்காரோஹண பர்வம்    5 அத்தியாயங்கள்   209 ஸ்லோகங்கள் 

               மொத்தம்        1923  அத்தியாயங்கள்    84224 ஸ்லோகங்கள்

19 ஹரிவம்சம்                                             12000 ஸ்லோகங்கள்

                                  மொத்தம்                 96244 ஸ்லோகங்கள்

 

 maha4

ஆக தீவிரமாக இதைப் படிக்க விழையும் ஒருவர் நாள் ஒன்றுக்கு நூறு பக்கங்கள் வீதம் படித்தால் 100 நாட்களில் படித்து முடிக்கலாம். நாள் ஒன்றுக்கு 1000 ஸ்லோகங்கள் என்ற கணக்கில் படித்தாலும் 100 நாட்களில் படித்து முடித்து விடலாம்.

 

பல முறை படிக்க வேண்டிய நூல் என்பதால் முக்கியமான பகுதிகளை மீண்டும் திருப்பிப் படிக்கக் கூடிய அளவில் குறிப்புகளும் எடுக்க வேண்டியிருக்கும்.

 

அதற்கான் ஆயத்தங்களுடன் விநாயகரையும் வியாஸரையும் வணங்கி படிக்க ஆரம்பிக்கலாம்.

 

படிக்க முனையும் பாக்கியசாலிக்கு வாழ்த்துக்கள்.

***********

Did Lord send you a message?

F Douglass

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by London swaminathan

Date: 16th September 2015

Post No: 2164

Time uploaded in London :– 20-35

(Thanks  for the pictures) 

 

Prejudice against Race, Religion and Colour

Frederick Douglass, noted Negro author and champion of the rights of his people, was once invited to have tea with President Lincoln at the White House.

Whenever Douglass spoke of this occasion he always said, “Lincoln is the first white man I ever spent an hour with who did not remind me that I am a Negro.”

xxxx

Did Lord send you a message?

Innocently unaware of the prejudices held against him, an old coloured man, staunchly religious, applied for membership in an exclusive church. The pastor attempted to put him off with all sorts of evasive remarks. The old Negro, instinctively becoming aware that he was not wanted, said finally that he would sleep on it and perhaps the Lord would tell him just what to do.

Several days later he returned.

“Well”, asked the minster, “did the Lord send you a message?”

“Yes, he did,” was the answer. “He told me it wasn’t no use. He said, I have been trying to in that same church myself for ten years and I still can’t make it.”

Xxxx

Jewish Ladies

A man who was talking with Sir Moses Montefiore at a reception, found the conversation so entertaining that he completely forgot the race of his companion and made some uncomplimentary remark about the Jewish features of a lady who was passing by. The mistake was no sooner made than it was perceived. The unhappy man began to apologise profusely. “I ask thousand pardons. It was so stupid of me to forget. You look angry enough to eat me. I beg you not to devour me.”

“Sir”, replied Sir Moses, “it is impossible. My religion forbids.”

Xxxx

prejudice-quotes-8

In the days of the great Abolition furore, Wendell Philips was accosted on a lecture tour by a minister who hailed from the state of Kentucky, a place with very different views concerning the ideas of the Abolitionists. The clergyman, who was more militant on behalf of his prejudices than on behalf of his creed, said, “Yoy are Wendell Philips, I believe.”

“Yes, I am.”

“You want to free the niggers, don’t you?”

“Yes, I do.”

“Well, why do you preach your doctrines up North? Why don’t you try coming down to Kentucky?”

Philips began to counter question the man. “You are a preacher. Aren’t you?”

“Yes, I am, Sir”

“Are you trying to save souls from Hell?”

“Why yes, Sir. That is my business.”

“Why don’t you go there then?” suggested Mr Philips.

Xxxx

roosevelt

Theodore Roosevelt once said, “While I was a police commissioner of New York City, an anti – Semitic preacher from Berlin Rector Ahlwardt, came to New York to preach a crusade against the Jews. Many Jews were much excited and asked me prevent him from speaking and not to give him police protection.

This, I told them was impossible; and if possible would have been undesirable because it would make him a martyr. The proper thing to do was to make him ridiculous. Accordingly I sent a police under a Jewish sergeant, and Jew-baiter made his harangue under the active protection of 40 police, every one of them a Jew.”

Red Roosvelt

Xxx

I am an Irishman!

He was a red faced, middle aged Irishman, who had taken just enough to make him officious. He kept a wary eye on the conductor, and a sympathetic one on the unsteady entering passenger. Opposite the Irishman sat a young man of the most pronounced Hebrew type. He watched pat with a humorous twinkle in his black eyes.

A good natured Negro got in, and took the seat next to the Irishman. Pat threw one haughty look at the black man; then, rising with great dignity, he said in terms of unutterable scorn: “a nagger!” and sat down next to the young Hebrew. Quick as a flash his new neighbour, with an exact imitation of Pat’s tone and manner, said, “an Irishman!” and too the vacant seat next to the Negro a titter went round the car, and one Irishman looked foolish.

—————————xxxxxxxxxxxxxxxxxxxxxxxx—————————-

300 ராமாயணமா? 3000 ராமாயணமா? –Part 2

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Part 1 was posted yesterday; Source: British Library, London

 kkish1

Compiled  by London swaminathan

Date: 16th September 2015

Post No: 2163

Time uploaded in London :– 9-18 am

(Thanks  for the pictures) 

 

IMG_3416 (2)

IMG_3417 (2)

IMG_3422 (2)

IMG_3423 (2)

IMG_3428 (2)

IMG_3431 (2)

IMG_3434 (2)

k kanda 9

to be continued………………………………