அவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்!

aathi-sudi1

Compiled by London swaminathan

Date: 14 November 2015

POST No. 2328

Time uploaded in London :– காலை 10-26

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES;

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

((மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளைத் திருடாதீர்கள். இது தமிழையும் உங்கள் குடும்பத்தையும் அழித்துவிடும்; “ஷேர்” செய்யுங்கள் தவறில்லை; ஒரு வாரத்துக்குப் பின் “ரீப்ளாக்” செய்யுங்கள்; தவறில்லை. கட்டுரை எழுதியவர் பெயரையும், பிளாக்- கின் பெயரையும் வெட்டிவிட்டு வெளியிடாதீர்கள்))

 

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியிலுள்ள பழைய தமிழ் புத்தககங்களில் பல சுவையான விஷயங்கள் கிடைக்கின்றன. திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் இவையனைத்தும் மறைக்கப்பட்டு விட்டன. ஆயினும் 100 ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர்களும் தமிழர்களும் எழுதிய நூல்களில் இவை அப்படியே உள்ளன.

நமக்குத் தெரிந்த திருவள்ளுவர் ஒருவர்தான். ஆனால் கபிலர், அவ்வையார் என்ற பெயர்களில் பல புலவர்கள் உண்டு. ஆறு அவ்வையார்கள் இருந்ததாக ஒருவர் ஆராய்ச்சிப் புத்தகம் எழுதியுள்ளார். நான் மொழியியல் அடிப்படையில் குறைந்தது மூன்று அவ்வையார்கள் இருந்ததை நிரூபிப்பேன். இந்தக் கதையில் வரும் அவ்வையார் வள்ளுவர், பிற்கால அவ்வையாரின் சமகாலத்தவராக இருக்கக்கூடும். இவைகள் கட்டுக் கதைகளோ என்று எண்ணத் தோன்றும். ஆயினும் நெருப்பில்லாமல் புகையுமா? என்ற தமிழ்ப் பழமொழியை நினைவிற்கொண்டு படியுங்கள்.

அவ்வையார் ஏழு பேருடன் பிறந்தார். அவர்களில் கடைசி சகோதரர் திருவள்ளுவர்!

coin valluvar

யார் அந்த எழுவர்?

பூர்வத்தில் ஆதி என்ற பெண்மணிக்கும் பகவன் என்ற பிராமணனுக்கும் பெண்மக்கள் நால்வரும் ஆண் மக்கள் மூவரும் பிறந்தனர்.

அவ்வை

உப்பை

அதிகமான் (ஆண்)

உறுவை

கபிலர் (ஆண்)

வள்ளியம்மை

திருவள்ளுவர் (ஆண்)

பகவனும் ஆதியும் யாத்திரை புறப்பட்டனர். இது வாழ்நாள் முழுதும் செய்யும் புனித யாத்திரை என்பதால் பகவன் ஒரு நிபந்தனை போட்டார். உனக்கும் எனக்கும் பிறக்கும் குழந்தையைப் பிறந்த இடத்திலேயே விட்டுவிட்டு வரவேண்டும் என்றார். தாய் மனம் பொறுக்குமா? “அது எப்படி, சுவாமி முடியும்?” என்று கேட்டார். “மரத்தை வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்” என்று இறைவன் மீது பாரத்தைப் போடு என்று பதில் சொன்னார் பகவன்.

அந்தப் பெண்ணும் குழந்தை பிறக்கும்போது அவர் மனம் மாறிவிடுவார் என்று பேசா மடந்தையாக தீர்த்த யாத்திரையைத் தொடர்ந்தாள். ஒரு ஆண்டில் முதல் குழந்தை பிறந்தது. முன்னரிட்ட நிபந்தனையின் படி “குழந்தையை விட்டுப் புறப்படு” – என்றார் பகவன். அவள் தயங்கினாள். ஆனால் குழந்தையே அதிசயமாக வாய்திறந்து ஒரு பாட்டுப்பாடியது:–

என்னுடைய தலைவிதி இதுதான் என்று எழுதிய சிவன் செத்தா விட்டான்?. நீ கவலையில்லாமல் போ – என்று அக்குழந்தை பாடியது.

“இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதி

விட்ட சிவனுஞ் செத்துவிட்டானோ? – முட்டமுட்டப்

பஞ்சமே யானாலும் பாரமவனுக்கன்னாய்

நெஞ்சமே யஞ்சாதே நீ”

 

இப்படி அதிசயமாக ஒரு பிறந்த குழந்தை பாடியவுடன் ஆதி நம்பிக்கையுடன் அக்குழந்தையை விட்டுச் சென்றாளாம். அந்த முதல் குழந்தையே அவ்வை.

இதற்கடுத்த குழந்தை உப்பை என்னும் பெண். அந்தக் குழந்தையும் பிறந்தவுடன், யானை முதல் எறும்பு வரை காக்கும் இறைவன் என்னைக் காப்பாற்றுவான் என்று பாடியதாம்.

 

“அத்தி முதல் எறும்பீறான உயிர் அததனைக்கும்

சித்த மகிழ்ந்தளிக்கும் தேசிகன் – முற்றவே

கற்பித்தான் போனானோ? காக்கக் கடனிலையோ?

அற்பனோ அன்னாய் அரன்?”

 

இதைக்கேட்டவுடன் அவள் குழந்தையை அங்கேயே போடுவிட்டுப் புறப்பட்டாள்.

மூன்றாவது குழந்தை ஆண். அதிகமான் என்ற பெயர். அக்குழந்தையும் பாடியது:

அம்மா கருப்பைக்குள் இருக்கும் குழந்தைக்கும், கல்லுக்குள் வசிக்கும் தேரைக்கும் உணவளிப்பவன் இறைவன். நீ கவலையிலாமல் செல் என்றது.

கருப்பைக்குண் முட்டைக்கும் கல்லினுட் டேரைக்கும்

விருப்புற்றமுதளிக்கும் மெய்யன் – உருப்பெற்றால்

ஊடி வளர்க்கானோ? ஓகெடுவாய் அன்னாய்! கேள்

வாட்டமுனக்கேன்? மகிழ்!

ஔவையார்1

நான்காவது குழந்தையோ, அம்மா, கருப்பைக்குள் இருக்கும் குழந்தை தாயின் உணவையே உண்டு வளரவில்லையா? இதுவும் இறைவனின் செயலில்லையா? நீ ஏன் கவலைப்படுகிறாய்? என்று கேட்டவுடன் அக்குழந்தையையும் விட்டுச் சென்றாள்.

சண்டப்பைக்குள்ளுயிர்தன் தாயருந்தத் தானருந்தும்

அண்டத்துயிர் பிழைப்பதாச்சரியம்  – மண்டி

அலைகின்ற அன்னாய்! அரனுடைய உண்மை

நிலைகண்டு நீயறிந்து நில்.

இதைக் கேட்டு ஆதி , சமாதனம் அடைந்தாள் பின்னர் ஐந்தவது பிள்ளையைப் பெற்றபோது அதுவும் ஒரு வெண்பா பாடியது.

நடுக் காட்டில் கல்லுக்குள் இருக்கும் தவளையையும் அறிந்து அதற்குப் படியளக்கும் இறைவன் எனக்கு உணவளிக்கமாட்டானா? இதைவிட அவனுக்கு வேறு என்ன வேலை?

கண்ணுழையாக் காட்டிற் கருங்க ற்றவளைக்கும்

உண்ணும் படியறிந் தூட்டுமவர் – நண்ணும்

நமக்கும் படியளப்பார் நாரியோர் பாகர்

தமக்குத் தொழிலென்னதான்?

ஆறாவது குழந்தை, “தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கே உணவளிக்கும் கடவுள் எனக்கும் உணவளிப்பான். தாயே, வருந்தாது செல்க” என்று வெண்பா இயற்றியது:

அன்னை வயிற்றில் அருத்தி வளர்த்தவன் தான்

இன்னும் வளர்க்கானோ? என் தாயே! – மின்னரவஞ் சூடும் பெருமான், சுடுகாட்டில் நின்று விளை

யாடும் பெருமான் அவன்”

இதைக்கேட்டவுடன் தாயும் உச்சி குளிர்ந்து விடை பெற்றுச் சென்றாள்

ஏழாவது குழந்தையும் ஒரு வெண்பா பாடி தாய்க்கு நம்பிக்கையூட்டியது. அக்குழந்தைதான் பிற்காலத்தில் பெரும்புகழெடுத்த வள்ளுவன்:

உலகத்திலுள்ள எல்லா உயிர்களையும் கடவுள் காப்பாற்றுவான். அதில் நானும் ஒருவனில்லையா? எனக்கு என்ன வரும் என்பது அவனுக்குத் தெரியும். கவலையில்லாமற் செல்க – என்றது.

எவ்வுயிரும் காக்கவோர் ஈசனுண்டோ, இல்லையோ?

அவ்வுயிரில் யானொருவன் அல்லனோ? – வவ்வி

அருகுவது கொண்டிங் கலைவதேன்? அன்னே

வருகுவதுதானே வரும்?

 

sundarambal2

இந்தக் கதையில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, தெரியாது. பாடல்கள் அனைத்தும் இந்துமதக் கருத்துக்களை எதிரொலிக்கிறது. ஆகையால் இவற்றைப் போற்றிப் பாது காக்கவேண்டும்.

எல்லாப் பாடல்களிலும் சிவ பெருமான் அருள் போற்றப்படுகிறது!

உலகத்தைப் படைத்த கடவுள் யாரையும் பட்டினி போடாமல் ஏதோ ஒருவிதத்தில் காப்பாற்றி விடுவான். காளிதாசன் சொன்னது போல அவனே உலகிற்கெல்லாம் தாயும் தந்தையும்:

ஜகதப் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ – காளிதாசனின் ரகு வம்சம்.

வாழ்க தமிழ்! வளர்க அவ்வை- வள்ளுவன் புகழ்!!

–சுபம்–

தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயம்!

Radio Talk written by S NAGARAJAN

Date: 14 November 2015

POST No. 2327

Time uploaded in London :– 10-11 AM

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

ச.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

Part 1 posted on 6th November 2015; Part 2 posted on 7th ;Part 3 on 8th nov.

Part 4 on 9th nov.15;part 5 on 11th Nov.; Part 6- 12th; Part- 7- 13th.Nov.

 

8.தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயம்!

உலகின் தட்பவெப்ப நிலை வெகு வேகமாக மாறி வருகிறது.புவி வெப்பமடைந்து வருகிறது.இந்த மாறுதலுக்குக் காரணம் மனிதனின் செயல்களே என்பது வருத்தமூட்டும் செய்தி!

புவி வெப்பம் அடைவதால் பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருகின்றன; அவற்றின் உறைவிடங்கள் மறைகின்றன; சுற்றுப்புறச் சூழல் அமைப்புகள் பாதிக்கப்படுகின்றன.பூமியை எதிர்நோக்கியுள்ள அபாயங்களில் மிகப் பெரிய அபாயம் புவி வெப்பமாதலே என்பதை விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் ஒரு மனதாக ஒப்புக் கொண்டுள்ளனர். சமீபத்திய ஆய்வுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உஷ்ணம் அதிகரித்து வருவதையும் தட்பவெப்ப நிலையில் சீரற்ற மாறுபாடுகள் அதிகரிப்பதையும் அறிவிக்கின்றன.

தொல்படிம எரிபொருள்களான நிலக்கரி, பெட்ரோல் உள்ளிட்டவை எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் போது அது காற்றை மாசுபடுத்துகிறது. சூரிய கிரணங்களை மேகங்கள் சூரியனிலிருந்து பிரதிபலிக்க வைத்து அவை விண்வெளியை அடையச் செய்கின்றன. இது ஒரு அசாதாரண விளைவை ஏற்படுத்துகிறது. இது க்ளோபல் டிம்மிங் (global dimming) என்ற சொற்றொடரால் குறிப்பிடப்படுகிறது. இந்த க்ளோபல் டிம்மிங்கின் விளைவாக குறைந்த வெப்பமும் ஆற்றலும் பூமியை அடைகிறது. முதலில் இது நலம் பயக்கும் ஒன்றாகத் தோன்றினாலும் இதுவே ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளிலும் எண்பதுகளிலும் எதியோப்பியாவில் ஏற்பட்ட பஞ்சத்திற்குக் காரணம் என கண்டறியப்பட்டது. ஏனெனில் வட துருவத்தில் உள்ள பெருங்கடல்கள் மழையை உருவாக்கும் வண்ணம் உரிய வெப்பத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆகவே இந்தப் பஞ்சங்களினால் லட்சக்கணக்கில் அங்கு மக்கள் மடிந்தனர்.

க்ளோபல் டிம்மிங்கிற்குக் காரணமாக அமையும் கார்பன் டை ஆக்ஸைடு போன்ற நச்சுப் புகை வளி மண்டலத்தில் கலப்பதைத் தடுப்பதே இதற்குச் சரியான தீர்வாக அமையும்.

க்ளோபல் டிம்மிங்கைத் தடுப்பதன்  மூலம் தட்பவெப்ப நிலை சீரடைந்து புவி வெப்பமயமாதல் தடுக்கப்படும். மக்களின் ஆரோக்கியம் மேம்படும். ஆகவே இன்றைய உடனடிக் கடமை புவி வெப்பமடைவதைத் தடுப்பதே ஆகும்.

தொடரும்…………………………….

Story of Broken Candle: Grace for all alike

ramdas

Compiled by London swaminathan

Date: 13 November 2015

POST No. 2326

Time uploaded in London :– 13-26

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

A priest was preaching a sermon in the church. Hundreds of people formed the congregation in which there were some diseased, poor and crippled persons. The priest told the people that God doesn’t make any difference between the rich and the poor, the diseased and the healthy, the able bodied and the crippled. His grace pours on all alike, whatever their external conditions

In the course of the sermon, the priest’s eye lighted upon a broken candle lying on the floor. He got down from the pulpit, took the candle, and holding it before the congregation, lit it up with a match and it gave light. The candle though crushed and crumpled burnt bright by the touch of the flame. The match did not deny its fire to the candle because it was broken, and the candle gave full light inspire of its broken condition. This example struck Ramdas as unique. Really, God is all compassion and mercy. He pours his grace on any person who opens his heart to receive it.

Story told by Swami Ramdas of Anandhasram

–Subham–

பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்போம்!

biodiversity-of-india-1-638

Radio Talk written by S NAGARAJAN

Date: 13 November 2015

POST No. 2325

 

Time uploaded in London :– 13-15

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

ச.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

Part 1 posted on 6th November 2015;Part 2 posted on 7th November 2015

Part 3 on 8th nov. Part 4 on 9th nov.15;part 5 on 11th Nov.’part-6 on 12th Nov.15

biodiversity (1)

7.பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்போம்!

 

சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாக்க மனித குலம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் பல. அவற்றுள் முக்கியமான ஒன்று பயோடைவர்ஸிடி என்னும் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதாகும்.

பூமியில் ஒரு குறித்த பகுதியில் காணப்படும் உயிரினங்களின் வகைகள் மற்றும் எண்ணிக்கையில் பல்வகைமையைக் கொண்டிருப்பதையே பயோடைவர்ஸிடி அல்லது பல்லுயிர்ப் பெருக்கம் என்று கூறுகிறோம்.

ஒரு ஆரோக்கியமான பல்லுயிர்ப் பெருக்கம் ஏன் தேவை?

அது ஒவ்வொருவருக்கும் இயற்கை ஆதாரங்கள் பலவற்றை வழங்குகிறது என்பதால்!

பயோடைவர்ஸிடி அல்லது பல்லுயிர்ப்பெருக்கத்தினால் ஏற்படும் முக்கியமான நன்மைகளுள் சிலவற்றைப் பார்ப்போம்:

சுற்றுப்புறச்சூழல் மனித குலத்திற்குத் தரும், நீர் ஆதாரத்தை அது பாதுகாக்கிறது.

மணல் ஆதாரத்தை அது உருவாக்குகிறது; மற்றும் பாதுகாக்கிறது.

ஊட்டச் சத்துக்களை சேமித்து வைக்கிறது; மறு சுழற்சி செய்து தருகிறது.

சுற்றுப்புறச் சூழல் மாசுகளை தகர்க்கிறது; உறிஞ்சிக் கொள்கிறது.

உலகின் தட்பவெப்ப நிலையைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது.

சுற்றுப்புறச் சூழல் அமைப்புகளைப் பராமரிக்கிறது.

எதிர்பாராது எற்படும் இயற்கை நிகழ்வுகளிலிருந்து நம்மை மீட்கிறது.

உயிரிய ஆதாரங்களான  உணவு, மருத்துவ ஆதாரங்கள் மற்றும் மருந்து தயாரிக்க உதவும் செடிகள், மரச் சாமான்களைத் தயாரிக்க உதவும் மரங்கள், அலங்காரச் செடிகள் ஆகியவற்றைப் பாதுகாக்கிறது. பறவைகளுக்கான உணவு வகைகளைத் தருவதோடு  பல்வேறு வகை உயிரினங்களின் பாதுகாப்பு, மரபணு பாதுகாப்பு ஆகியவற்றிற்கும் உதவி செய்கிறது.

Biodiversity

இது தவிர சமூகத்திற்கு ஆதாயம் தரும் வகையில் பண்பாட்டைப் பாதுகாத்துப் பேணுகிறது; உல்லாச சுற்றுலா ஸ்தலங்களை உருவாக்கி மக்களை மகிழ்விக்கிறது. எதிர்காலத்திற்கான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

ஒரு செலவும் இல்லாமல் இயற்கை நமக்குத் தரும் இதைப் பாதுகாக்க வேண்டும் அல்லவா? இவற்றை நாமே அமைக்க முயன்றால் அதற்கு ஆகும் செலவு கோடானு கோடிகளைத் தாண்டும்.அதோடு இதை உருவாக்கப் பல்லாயிரம் பேர் பல்லாயிரம் ஆண்டுகள் முயற்சிக்க வேண்டும்.

ஆகவே அரிதாக நமக்கு இயற்கை அருளியுள்ள பயோடைவர்ஸிடி எனப்படும் பல்லுயிர்ப் பெருக்கத்தை அழிக்காமல் காத்து சுற்றுப்புறத்தைக் காப்பது நமது கடமை,அல்லவா!

******************

Swami Ramdas Story: Is there an Ego?

at_the_feet_of_god_medium

Compiled by London swaminathan

Date: 12 November 2015

POST No. 2324

Time uploaded in London :– 18–32

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Once a man invited son in law, who was living far away, to stay with him during holidays. When the letter was received by the son in law, there was an adventurer in his place, who knows the contents of the letter. This man thought it was a nice occasion for him to make the best of. When the son in law got into the train, he also boarded the same train, and at the destination both got down. The son in law was greeted by his brother in law who had come to the railway station in a car to receive him. When the son in law got into the car, the adventurer also got into the car. The son in law thought that this man might be some friend of his father in law’s family His brother in law thought that that he might be a friend of the son in law. They all reached the father in laws house and the guests were received with great honour and given nice rooms to stay, and they were all quite happy.

At the time of meals, this impostor would go and sit first, and before the others he would begin eating. Sometimes he even went into the kitchen to demand certain kinds of food he liked. Though this was noticed by the father in law, he did not tell him anything lest he should wound the feelings of his son in law. The imposter was also freely going to the son in law s room and using his shirts ties shoes and so on, without asking him. Though the son in law got annoyed at this, he did not complain as he took him to be a member or friend of his father in law s family. Thus from both sides this imposter was allowed full Liberty and was having a fine time.

ramdas (1)

Things went on like this, but a time came when both the father in law and the son in law were fed up with the fellow s behaviour. They did not know how to deal with him as each thought that he was the friend of the other. At last when the father in law could not tolerate him anymore he decided to go to his son in law and ask why he had brought such a man with him. At the very moment, his son in law also wanted to ask the father in law “What a pest you have here! Where from he has come? He doesn’t seem to be a member of the family. He comes to my room and uses freely whatever I have in my room. All my clean shirts have been put on and soiled by him”. When the father in law and the son in law met together in a room to discuss privately about this imposter, the imposter found out they were making enquiries about him, and suddenly disappeared by the back door.

So in the case of the ego, a mere enquiry makes this imposter to also to disappear. In fact you will discover there was no imposter ego at all. Ego is an illusion caused by your ignorance. The ignorance is removed by Atmavichar or Self enquiry. But you do not want to make the enquiry. You are so much obsessed by him that you allow him to dance to his tune. He brings nothing but misery for you.

Story told by Swami Ramdas of Anandhasram

கோமுட்டிகளைக் கொட்டிய கொண்டித் தேள் !

தேள்

Compiled by London swaminathan

Date: 12 November 2015

POST No. 2323

 

Time uploaded in London :– 18-04

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

பழைய கால நகைச் சுவை நூலான — பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

விகடன் ப்ரவேசம்

அகட விகட தீரன் மெத்த மெத்த

அறட்டுக்காரன் கவி புறட்டுக்காரன்

ககனமதைப் பாயாய்க் – கணத்தினில்

கக்கத்திற் சுருட்டிப் பக்குவஞ் செய்வேன்

காசினி முழுவதையும் – எந்தன்

நாசியலடைப்பேன் வாசிபோல

வேதமுடிவறிவேன் – அந்த விமலனையும் விண்டு வேதனையும்

அடுப்புக் கல்லாய் வைத்து – இந்த

அகிலந்தன்னையோர் அகலாக்கி

சப்த சமுத்திர நீர்தன்னைச்

சடுதிலகலியிற் பாய்ச்சியே நான்

தேவர்கள் முதலோரை – விரைவில்

சேர்த்து ஒன்றாயதிற் போட்டுக் காய்ச்சி

பஸ்பமதாய்ச் செய்து – நெற்றியில்

பரிவுடனணிந்திடும் சூரன் நானே!

தந்தினத்தினதினன

நகைச்சுவை இறை வணக்கம்

ககனே காக ரத்னானி க்ரக ரத்னானி மூஷிகா

சயனே மட்குண ரத்னானி சபாரத்னானி விதூஷக

ககனே- ஆகாயத்திற்கு

காக ரத்னானி – காகங்கள் பறப்பது அழகு

க்ரகரத்னானி – வீட்டிற்கழகு

மூஷிகா – பெருச்சாளிகள் வசிப்பது

சயனே- படுக்கைக்கு

மட்குண ரத்னானி – மோட்டுப் பூச்சிகள் வசிப்பது

சபாரத்னானி- சபைக்கு அழகாவது

விதூஷகா – காணதனைத்தியும் கண்டவிதம் பிரசங்கம் செய்யும் விகடப் பிரசங்கிகள்

scorpion-4

கோமுட்டிகள் பிரயாண ஒற்றுமை

ஆறுபேர் கோமுட்டிகள் ஒரு ஊருக்குப் போகும் மார்க்கத்தில் கள்ளியும் கத்தாழையும் நிரம்பி, ஆதிசேடன் குட்டிகள் வசிக்கும் பாழுங்கோவிலொன்றிருந்தது. அக்கோவிலில் முக்குறுணியரிசிப் பிள்ளையாரொன்றிருந்தது. விரிந்த முகமும் பெரிய துதிக்கையும் ஒருவிரல் ஆழமுள்ள தொப்புளுமாய் வீற்றிருந்ததைக் காணவும் அதில் ஒருவருக்கு சேஷ்டை சும்மாவிராமல் பிள்ளையார் தொப்புளில் விரலை விட்டார். அப்போது உள்ளேயிருந்த கொள்ளித் தேளொன்று நறுக்கென்று கொட்டியது.

அவர் மூக்கில் விரலை வைத்துமுகர்ந்து பார்த்துக்கொண்டு மற்றொருவரிடம்,”ஏமி பாவா! மஞ்சி வாசனரா, கமகமனி மணக்குசுந்தி” என்றான். இதைக் கேட்டு நிஜமென நம்பிய மற்றொருவனும் தன் விரலையுந்திணித்தான். அவனையும் ஒரு போடு போட்டது. அவனும், :அவுனுரா, பாவா, கஸ்தூரி வசன, கதம்ப வாசன, அத்தர் வாசன, அந்தா சேரி அரிகுமுக்குலோபனிசேஸ்துந்தி” யென்றான்

மூன்றாமவன் கையை விட அவனையும் தீண்டவே அவன் முன்னவனைப் போல வாசனை பிடித்து மெச்சினான். அந்தப் பாழுந்தேளுக்கு விஷமெங்கிருந்ததோ தெரியவில்லை, அத்தனை பேரையும் கொட்டிவந்தது.

இப்படியிருக்க கடைசியான ஒருவன் கையை விட்டான். அவன் மட்டும் அலறிப் புடைத்துக்கொண்டு, “அரே உரே, தேளுரா தேளு, கொண்டித் தேளுரா” எனவே எல்லோரும், அவுனுரா மாஅப்ப” என்று கட்டிக்கொண்டு நெறியின் உபத்திரவத்தால் அழுது சந்தோஷித்தனர்.

–சுபம்—

உத்வேகமூட்டும் ஒரு காட்டின் கதை!

one man foresst

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

Part 1 posted on 6th Nov.15;Part 2 posted on 7th ,Part 3 on 8th nov. Part 4 on 9th nov.15;part 5 on 11th Nov. and Part 6 on 12th Nov.2015

Radio Talk written by S NAGARAJAN

Date: 12 November 2015

POST No. 2322

 

Time uploaded in London :– 17-12

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

forest man

6.உத்வேகமூட்டும் ஒரு காட்டின் கதை!

 

மரங்களை மனம் போன போக்கில் வெட்டி வீழ்த்தி சுற்றுப்புறச் சூழலுக்குப் பெருங்கேட்டைப் பலரும் ஏற்படுத்தும் இந்தக் காலத்தில் அனைவருக்கும் உத்வேகமூட்டும் விதத்தில் தனிநபராக இருந்து ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார் ஒருவர் என்றால் அது ஆச்சரியமான விஷயம் தானே!

கௌஹாத்தியிலிருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோர்ஹாட்டை அடுத்துள்ள பிரம்மபுத்ரா நதியின் படுகை அருகே உள்ள பெரும் மணற்பரப்பில் ஜாதவ் பேரிக் (Jadav ) என்பவர் ஒரு காட்டையே அமைத்துள்ளார்.550 ஹெக்டேர் நிலப்பரப்பில் இவர் அமைத்துள்ள காடு தனி மனிதன் அமைத்த காடுகளில் மிகப் பெரிய ஒன்றாகும்.

1979ஆம் ஆண்டு பிரம்மபுத்ரா நதியில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக ஏராளமான பாம்புகள் மணற்பரப்பில் ஒதுங்க அருகில் மரங்கள் ஏதும் இல்லாததால் அவை மடிந்தன,இதைப் பார்த்து மனம் நெகிழ்ந்த பதினாறே வயதான சிறுவன் ஜாதவ் அந்த உயிரினங்களைக் காக்க காடு ஒன்றை அமைப்பது என உறுதி பூண்டான்.

forest-man-jadav-rhino

இடைவிடாத உழைப்பினால் அங்கிருந்த, எதுவுமே விளையமுடியாத மணற்பரப்பை மாற்ற ஆரம்பித்தான். இதற்கென செவ்வெறும்புகளை தூரத்திலிருந்த கிராமங்களிலிருந்து கொண்டு வந்து அந்த மணற்பரப்பில் வாழ வைத்து செடிகளை வளர்க்கலானான். இன்றோ ஆயிரமாயிரம் மரங்களைக் கொண்டு அனைவரையும் அதிசயக்க வைக்கும் அடர்ந்த காடாக அது மலர்ந்துள்ளது. கடந்த 32 ஆண்டுகளில் அந்தக் காடு ஏராளமான பறவைகளுக்கு இருப்பிடமாக ஆகியுள்ளது. முதலில் சிறு பறவைகள் வர ஆரம்பிக்கவே பின்னால் பருந்துகள் போன்றவையும் அங்கே வர ஆரம்பித்து வாழ ஆரம்பித்தன.

அதுமட்டுமின்றி அருகி வரும் இனமான புலிகள் கூட சிறிய அளவில் அங்கே வசித்து வருகின்றன. யானைகளோ விரும்பி கூட்டம் கூட்டமாக அங்கே வசிப்பதற்கு வந்து விட்டன.இயற்கை எப்போதுமே தானாகவே ஒரு உணவுச் சங்கிலியை அமைக்கிறது என்கிறார் ஜாதவ்.

இந்த உணவுக்காகவும் உறைவிடத்திற்காகவும் ஏராளமான மிருகங்கள் அங்கே வந்து சேரவே அது இயற்கைக் காடு போல இப்போது திகழ்கிறது.  சீதோஷ்ண நிலையை அந்தப் பகுதியில் மேம்படுத்தியுள்ளது.

அற்புதமான காட்டை இவர் உருவாக்கியதால் அவரது செல்லப் பெயரான மொலாய் என்பதை அதற்குச் சூட்டி அதை “மொலாய்க் காடு” என்றே அனைவரும் அழைக்கின்றனர்.

இந்த முயற்சியினால் ஏற்பட்ட வெற்றியைக் கவனித்த சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் இவரைப் பாராட்டியுள்ளனர். அரசும் பல்வேறு விதங்களில் உதவி புர முன் வந்துள்ளது.

Jadav-Payeng-from-India-spent-2505

தனி மனிதனாக இருந்து ஏழையான ஒருவர் இயற்கைச் செல்வத்தைக் காக்க ஒரு காட்டையே அமைத்திருக்கும் போது நாமும் நமது பங்கிற்கு இயற்கையைக் காக்க ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மேற்கொள்வோம்; இயற்கை அன்னையைக் காப்போம்!

*****************

Acharya’s Sandals sent to Banaras Hindu University!

BHU Stamp

Compiled by London swaminathan

Date: 11 November 2015

POST No. 2321

 

Time uploaded in London :– 14-01

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

The respect which His Holiness Sringeri Shankaracharya had for tradition was so deep that he would not give his approval for an innovation even though it was not against the Sastras (scriptures)

Pandit Madan Mohan Malaviya (1861- 1946) sent Dattatreya Krishna Tamale as the representative of himself and others to request His Holiness SRI SACHIDANANDA SIVA ABHINAVA NARASIMHA BHARATI SVAMINH (as the Mutt Chief 1879-1912) to come to Banaras in person and lay the foundation stone for the Hindu University there. He came to Sringeri with a letter of introduction from P.N Krishnamurthi, the then Devan of Mysore. After paying his respects to his H H, he opened the topic and conveyed to H H the earnest prayer of the Pandit and the public of Northern India generally to favour them with a visit which had long been overdue.

MM Malaviya

Tamale: it is long since an Acharya of Sringeri paid a visit to our parts and people are eagerly looking forward to Your Holiness’ visit at least on this occasion.

HH: I am very glad to hear of the noble work which the Pandit has taken up and of the earnest longing of the people there to see me. It is certainly proper that we should consent to carry out your request. But the distance that separates us from Banaras is very great and the date fixed for the laying of the foundation stone is so near that it is not possible for us to conform to our daily duties and yet reach Banaras in time. I am sorry I have to disappoint you.

Tamale: in our anxiety to have your Holiness at Banaras in time for the function, we have deeply thought over this aspect also and have come to a decision. We intend arranging for a special train or a special fleet of motor cars to take your Holiness and retinue without any hindrance to  the performance of the daily rites. I request therefore your Holiness will be pleased to comply with our request.

HH: it certainly gladdens us to know the deep devotion and enthusiasm of the people there to have us visit them. But we are constrained to point out our difficulty. Any kind of vehicle is prohibited for a Sanyasi. It is well known that our founder Sri Shankaracharya Bhagavatpada travelled throughout our country only on foot except on rare occasions when he availed himself of his power of yoga when he had to traverse long distances urgently. His successors also never used any vehicle. It was only during the time of Sri Vidyaranya that the Royal insignia like the palanquin, umbrella, thrown, crown etc were assigned to the head of this mutt. It is not possible to concede that our predecessors who were fully conversant with the Sastras accepted without reason or justification such an innovation.

sringeri previous

It has to be surmised they accepted it not with any selfish motive but only with a view to attract ordinary people who were easily amenable to outward forms. So far as the later Acharyas are concerned, they did right in accepting the same, as it had the sanction of their predecessors. It is definitely stated the obedience to the word of Guru will not operate as a violation of any vow.

Astautaanya vratagnaani aapo muulam grutam payah

Havi braahmanakaamyaa sa gurorvacanam ausadham

Such is our justification for using palanquins.

Now you suggest another kind of vehicle, a train or a motor car. It does not seem to us travelling in either of them more objectionable. The only thig is that our predecessors have not been using it.  Further even though an act may be meritorious, it is not proper to do it if it is likely to be censured by the people. As no Acharya till now has travelled in a train or in a motor car, the people are likely to censure such an innovation.

 

Asvargyam lokavidvishta dharmayaasaret na tu

We are unwilling, therefore, to be the first to adopt this new kind of travel. When Sri Rama who was God incarnate and knew quite well  that Sita was without ant blemish , chose to exile her in deference to a stray popular calumny, how much more careful must be such as ourselves in adopting a method not sanctioned by tradition? I hope you appreciate my position. If instead of asking us to go to Banaras, you take with you the sacred sandals of our revered Guru and have the function done in their holy presence, I am sure all your objects will be fulfilled.

Tamale: I bow to your Holiness’ decision. I am sure that the devotees in the North will be struck with admiration and pleasure when they hear about your Holiness’ firm respect far more than they will be if your Holiness had conceded to our request.

padukas-1

A Model of Sandals (not the orginal one)

(It may be mentioned that Sri Tamale accordingly took the sandals for the function at Banaras and that after its completion Pandit Madan Mohan Malaviya came in person to Sholavandan (in Madurai District) to pay his respects to and thank HH and return the sandals)

Source: Golden Sayings by Shri Jnananda Grantha Prakasana Samiti, Thenkarai, Madura District, Year 1969

–Subham–

“பிராமணா போஜனப்பிரியா, நாரதா கலகப்பிரியா”

IMG_7068 (2)

Compiled by London swaminathan

Date: 11 November 2015

POST No. 2320

 

Time uploaded in London :– காலை 8-16

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

பழைய கால நகைச் சுவை நூலான — பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை!

நூலைக் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

IMG_7072 (2)

போளி வடை சாப்பிட்ட ஸம்வாதம்

தண்டுலபுரம் பட்டாமணியக்காரர் சம்சாரம் அன்னபூரணியம்மாள் வீட்டில் குருவும் சீஷனும் திருப்தியாக புசித்துவிட்டு மீளுகையில் கீழே குனியமுடியாமல் சீஷனைப் பார்த்து, “அடே! பிரமானந்த சிஷ்யா! என் காலில் செருப்பு இருக்கிறதா பாரடா” என்றார். சிஷ்யனும் வயிறு நிரம்ப புசித்திருக்கிறபடியாலே குனிந்து பார்க்கச் சக்தியற்று ஆகாசத்தைப் பார்த்து, “சுவாமி, நட்சத்திர மண்டலம் வரை எங்கும் தேடிப்பார்த்தேன். காணப்படவில்லை” என்றான்.

சீ!சீ! பிருஷ்டா, தலை குனிந்து கீழே தேடடா” என்று குருவானவர் கோபித்துக்கொண்டு சொல்ல, “தங்களைப் பார்க்கிலும் குறைவாகச் சாப்பிட்ட முட்டாளென்று நினைத்தீரோ” என்று சீடன் ஜவாப்பு சொன்னான். இவர்கள் நம்மைப் பார்க்கிலும் போஜனப்ரியர்கள் யார் இருக்கப் போகிறார்கள் என்று நடந்து போகையில் வேறொரு சாப்பாட்டு ராமன், தெருத் திண்ணையில் படுத்துப் புரண்டு வயிற்றைத் தட்டிக்கொண்டு இப்படி அப்படி நெளிந்து அவஸ்தைப் பட்டுக்கொண்டி ருக்கையில் அவனது தாயார் வந்து அருகில் நின்று, “அப்பனே, இரண்டு ஓமம் தரட்டுமா?” என்று கேட்டாள். அதற்கவன் நகைத்துக் கொண்டு ஒரு ஓமத்துக்கு இடமிருந்தால் இன்னும் இரண்டு போளி சாப்பிட்டிருக்கமாட்டேனா? என்றான்.

இதைச் செவியுற்ற சீடனும் குருவும் இது ஏது நம்மைப் பார்க்கிலும் அகாதமாயிருக்கின்றது என்று தங்களிருப்பிடம் சேர்ந்தார்கள்.

IMG_7072 (3)

பிராமணா போஜனப் பிரியா

ஒரு நாள் ஜலக்கரையில் உட்கார்ந்து ஜெபம் பண்ணிக்கொண்டிருந்த பிராமணனண்டை மற்றொரு பிராமணன் வந்து “ஐயா, பெரியவரே! இன்று என் ஆத்தில் திவசம், பிராமணார்த்தத்திற்கு வரவேண்டுமென்று கூப்பிட்டான்.

“பிராமணா போஜனப்பிரியா, நாரதா கலகப்பிரியா” என்றபடி முடாமுழுங்கிப் பிராமணன் வேட்டை கிடைத்ததென்று கனைத்து, கொஞ்சமும் வஞ்சமன்னியில் இடுப்பில் கட்டியிருந்த அரைஞாண் அறுபடும்படியாகச் சாப்பிட்டுவிட்டு அடுத்த வீட்டுத் திண்ணையில் படுத்திருக்கும் பொழுது அவ்வீட்டுக்குரிய ஸ்த்ரீ, “ ஏங்காணும் சாஸ்திரிகளே, இப்படி திண்ணையில் விழுந்து புரளுகிறீர்களே! இரண்டு மினறு ஜலம் குடிக்கிறதுதானே என்று கேட்டதற்கு, “ அம்மா!   இரண்டு மினறு ஜலம் சாப்பிட இடமிருந்தால், இன்னும் இரண்டு வடையாவது திணித்திருக்க மாட்டேனா?” என்று சாவதானமாகப் பதில் சொல்லிவிட்டு எழுந்திருந்து தன் வீட்டை நாடிச் சென்றான்.

–Subham–

பசுமை இயக்கம் பரவட்டும்!

alapuza

எழுதியவர்:–  ச.நாகராஜன்

Date: 11 November 2015

Post No:2319

Time uploaded in London :– காலை- 4-46

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

ச.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

Part 1 posted on 6th November 2015;Part 2 posted on 7th Nov.;Part 3 on 8th Nov. ;Part 4 on 9th nov.;Part 5 – 11th Nov.

crop

5.பசுமை இயக்கம் பரவட்டும்!

 

உலகெங்கும் சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்தும் விதமாக பசுமை இயக்கம் பரவி வருகிறது. பச்சை நிறம் பாரம்பரியம் பாரம்பரியமாக வளத்துடனும், செழிப்புடனும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடனும் அனைத்து நாகரிகங்களினாலும் போற்றப்பட்டு வருகிறது. ஆகவே பூமியைப் பசுமையாக வைக்க எண்ணும் நல்ல நோக்கத்திற்கு பசுமை  இயக்கம் என்று சூட்டப்பட்டுள்ள பெயர் பொருத்தமானதே!

இந்தப் பசுமை இயக்கத்தின் அங்கமாக புதிதாகக் கட்டப்படும் இல்லங்கள் மற்றும் நிறுவனங்கள் பசுமைக் கட்டிடங்களாக அமைக்கப்படுகின்றன. அதாவது சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு மாசு ஏற்படாவண்ணமும் தூய நீர் தூய காற்று ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படாமலும் ஆற்றலைச் சேமிக்கும் விதத்திலும் இவை அமைக்கப்படுகின்றன. காற்று நீர், ஆற்றல் இவற்றை சிக்கனமாகப் பயன்படுத்துவதோடு இவற்றை அனாவசியமாக வீணாக்காமல் பாதுகாக்கும் நடைமுறைகளை பசுமைக் கட்டிடக் கலை கொண்டுள்ளது.

வானளாவ உயரும் கட்டிடங்கள் ஒரு புறம் இருக்க அருகில் திறந்தவெளியாக நிலப்பரப்பு அதிகம் உருவாக்கப்படுவதும் இதன் ஒரு அம்சம் தான்!

இப்படிப்பட்ட பசுமைப் புரட்சியில் அனைவரும் பங்கு பெறலாம்; தன் அளவு முடிந்தவரை இயற்கை ஆதாரங்களை வீணாக்காமல் பாதுகாக்கலாம்.

தேவையற்றபோதெல்லாம் விளக்குகளை அணைப்பது, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, குழாயைத் திறந்து விட்டு வேலைகளைச் செய்யாமல் அளவோடு நீரைப் பயன்படுத்துவது,காம்பாக்ட் ப்ளோரஸண்ட் பல்புகளை வாங்கி வீட்டில் பொருத்துவது, நாம் அன்றாடம் வாங்கிப் படிக்கும் செய்தித் தாள்களை மறுசுழற்சிக்கு உரிய முறையில் அனுப்புவது உள்ளிட்ட ஏராளமான எளிய பழக்க வழக்கங்களை ஒவ்வொருவரும் மேற்கொண்டால் ஆற்றல் சேமிப்பு அதிகமாகும்; ஆதார வளங்கள் வீணாவது குறைவாகும்!

தகவல் புரட்சி ஏற்பட்டு கணினி மயமாகி வரும் இன்றைய சூழ்நிலையில் அடுத்த பெரும் புரட்சியாக பசுமை இயக்கப் புரட்சி ஏற்படப்போவதாக அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். உலகைப் பசுமைத் தாயகமாகக் காப்பதற்கெனவே புதிய புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் அவை சுமார் ஒன்றரைக் கோடி பேருக்கு உலகமெங்கும் வேலை வழங்கும் என்ற நல்ல செய்தியையும் அறிவிக்கின்றனர்.

இந்தப் பசுமைப் புரட்சியின் பெருமை வாய்ந்த ஒரு அங்கமாக நம்மில் ஒவ்வொருவரும் ஆவோமாக!

to be continued………………………….