
Date: 2 January 2016
Post No. 2452
Time uploaded in London :– 14-40
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
முன்னர் வெளியிட்ட கதையின் தொடர்ச்சிக் கதை:–
இவ்வாறு நான் துபாஷ் வேலையில் தகல்பாஜி அன்னாத்தைகளுடன் தமாஷாயிருக்கும்போது, எனது குரு என்னைப் பார்க்க வந்தார். முன்னரே எனக்கும், அவருக்கும் ஒரு சபதமுண்டல்லவா? ஆகையால் அவர் வந்தவுடன் மெதுவாய்க் கொல்லைப்புஅம் போய், என் மனைவி நாறவல்லியை நயந்து, அடிபணிந்து, “அம்மணீ! பரதேவதா! உனக்குப் புண்ணியமுண்டே; ப்ருஷார்த்தமுண்டே; இகமுண்டே, பரமுண்டே, எல்லாமுண்டே. இன்று என் குரு வந்திருக்கிறார். ஓம், பாக்யவதி, ஐம்பது வசவு உன்னை வைவேன். நீ பொறுத்துக்கொள்ள வேண்டும்” – என்று வேண்டினேன். உடனே ஜகஜண்டி மனமிரங்கி, ஒரு வசவு ஜாஸ்தியாப் போனாலும் வட்டியும் முதலுமாய் வசூல் பண்ணிவிடுவேனென்றாள்.
நானும் சாப்பிட்டு முடிவதற்குள் ஐம்பது வசவு ஆகாதென்று மனம் தேறி உள்ளே வந்து, என் குரு முன்னிலயில் நின்று, “ ஜலமேண்டி தூக்கவில்லை, லவண்டி, பருப்பேண்டி கடையவில்லை பத்ரகாளி, பெருக்காமலிருக்கிறாயே பெருச்சாளி, தலைமயிர் ஏன் அவிழ்ந்திருக்கிறது தடிமுண்டே” என்று பிரண்டையின் மேல் வண்டிக்காலுருண்டதுபோல், மனங்கொண்டது மாளிகையாய் வைதேன். அவளும் கணக்கெண்ணிக்கொண்டு வந்தாள். எனது குருவும் எனக்கு நல்ல பெண்டாட்டி வாய்த்திருக்கிறாளென்று உள்ளமகிழ்ந்தார். சமையல் ஆயிற்று.
சாப்பாட்டிற்கு உகார்ந்தோம்.என் சம்சாரம், ரசம் ஒரு சட்டியிலெடுத்துவது வார்க்கவந்தாள்; வசது ஐம்பதும் தீர்ந்துவிட்டது எனக்குத் தெரியாது. குருவின் இலையில் ரசத்தை விடவும், ஒரு துளி சிதறி அவர்துடையில் விழ அவர் ‘உஸ்’ அப்பாடா, என்றார். உடனே நான் கோபித்து, “கொட்டினாளா பரத்தை” என்று திட்டினேன். அதற்கவள், என்னை முறைத்துப் பார்த்து ‘ஆமடாபிலே, வெள்ளான்பிலே’ என்று கூறி என் தலையில் சட்டியைப் போட்டுக் கரண்டிக்காம்பாலடித்து, “வெட்கங்கெட்ட வெங்கம், ஐம்பது வசவுக்கு மேல் பொறுக்கமாட்டெனென்று சொல்லவில்லையோடா; ஆலி பூதமே! பின்னழலாம். முன்னே ரசச் சட்டிக்காசை கீழே வை” – என்றாள்.

அப்போது நான் ரசமெல்லாம் மேலே ஒழுகிக் கழுத்தில் சட்டிவாய் மாட்டிக் கன்றிச் சிவந்து திகுதிகுவென்றெரிய,’இஞ்சி தின்ற குரங்கு போல்’ விழித்தேன்.எனது குருவோ பயந்து நடுங்கிக் கொண்டு,
“வீணாயுடைத்தது வேணதுண்டு என் தலையில் இந்தப்
பூணாரம்பூண்ட புதுமைதனைக் கண்டதில்லை”
–என்று கூறிக்கொண்டு சிட்டாய்ப் பறந்துவிட்டார்.
–சுபம்–
You must be logged in to post a comment.