Written by london swaminathan
Date: 13 May 2016
Post No. 2807
Time uploaded in London :– 10-43 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
அஃகமும்= நிலபுலன்களையும் அதில் விளையும் தானியங்களையும்
காசும்= பணத்தையும்
சிக்கென = உறுதியாக
தேடு = முயற்சி செய்து பெறு
-என்று கொன்றைவேந்தனில் அவ்வையார் அழகாகச்சொல்லிவிட்டார்.
இது போதாதோ என்று எண்ணி, மேலும் சொல்லுவார்:-
சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
சொக்கர் = பொருளுடையவர் (சொக்கத் தங்கம் வைத்திருப்பவர்)
அத்தம் = செல்வம் (தர்ம, அர்த்த, காம, மோக்ஷ=அறம், பொருள், இன்பம், வீடு என்பதிலுள்ள அர்த்தம் =அத்தம்)
பெறுவர் = அடைவர்.
அதாவது ஏற்கனவே செல்வம் வைத்திருப்பவர், புத்திசாலியாக இருந்தால், அதை நல்ல விதத்தில் முதலீடு செய்து மேலும் மேலும் செல்வதராவர் என்பது அவ்வையரின் கணிப்பு.
அட, இவ்வளவு சொல்லியும் புரியாதோருக்கு இன்னும் ஒரு வக்கியத்தையும் சொல்லி விடுவோம் என்று கருதி,
திரைகடலோடியும் திரவியம் தேடு – என்றார் கொன்றைவேந்தனில்.
அதாவது, உள்நாட்டில் செல்வம் சம்பாதிக்க முடியவில்லையா, அல்லது போட்டி தைகமாக இருக்கிறதா, வெளிநாட்டுக்குப் போய் சம்பாதி என்றார்.
இவை அத்தனையையும் கடைப்பிடித்து வெற்றி பெற்றவர்கள் செட்டியார்களும், படேல் சமூகத்தினரும்.
வெற்றிவேர்க்கை எழுதிய அதிவீர ராம பாண்டியனும் “வணிகர்க்கழகு வளர் பொருளீட்டல்: என்று கூறி அதை உறுதி செய்கிறார்.
இந்து மதம் ஒரு திட்டமிடப்பட்ட மதம்; கட்டுக்கோப்பன மதம்; காமா சோமா என்றோ கன்னா பின்னா என்றோ அமைக்கப்பட்ட மதமல்ல. பழைய சம்ஸ்கிருத நூல்களில் தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்று வாழ்க்கையின் தத்துவங்களை நாலே சொற்களில் சொல்லிவிட்டனர். இதை அப்படியே தொல்காப்பியரும், சம்ஸ்கிருதப் பேரறிஞன் வள்ளுவனும், புறநானூற்றுப் புலவர்களும் அப்படியே அதே வரிசையில் தொல்காப்பியத்திலும், புற நானூற்றிலும், திருக்குறளிலும் பல இடங்களில் சொல்லிவிட்டனர். (குறள் எண், தொல்காப்பிய வரி எண், புறநானூற்றுப் பாடலெண் வேண்டுவோர் என் பழைய கட்டுரைகளைப் பார்க்கவும்).
அறம்:- வாழ்க்கையில் நேர்மையைக் கடைப்பிடி
பொருள்:- சும்மா, பொழுதைக் கழிக்காதே! எப்படி பொருள் சேர்ப்பது; முதலில் சொன்ன அறப்படி (தர்மப்படி).
இன்பம்:– நல்ல மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்து; அனுபவி ராஜா, அனுபவி.
மோக்ஷம்:- மேற்கூறிய மூன்றும் சிற்றின்பம்தான் தரும்; மேற்கூறிய மூன்றும் ஒரு நிலையில் அலுத்துப் போகும். பேரின்பம் பெற, நிலையான இன்பம் பெற, வீடு பேறு பெறத்தான் இவையனைத்தும் பயன்பட வேண்டும்.
சம்ஸ்கிருத பண்டிதர்களும் அழகாகச் சொல்லுகிறார்கள்:–
“ஸ்ரேயாம்சி சகலான்யனலசானாம் ஹஸ்தே நித்யசான்னிதயானி”
யார் சோம்பேறித்தனம் இல்லாமல், எப்பொழுதும், உழைக்கிறார்களோ, அவர்களிடத்திலே எப்போதும் வளமும் நலமும் தங்கும்.
Shreyaamsi cha sakalaanyanalasaanaam haste nityasaannidhyaani
All prosperity and welfare is always in the hands of those who are always active, who do not
know laziness
உத்தரராமசரிதம் என்னும் சம்ஸ்கிருத நாடகத்தில், பவபூதி கூறுவார்:-
“சாஹசே ஸ்ரீ ப்ரதிவசதி”
பொருள்:- துணிவான செயல்களைச் செய்வோரிடத்திலே லெட்சுமி வசிக்கிறாள் (செல்வம் நிலையாகத் தங்கும்)
साहसे श्री प्रतिवसति
Saahase shree prativasati
In adventure resides Goddess Lakshmi (Only those who are adventurous can amass wealth)
Uttararaamacharitam (Bhavabhuti)
–சுபம்–
You must be logged in to post a comment.