
Compiled by london swaminathan
Date: 29 June 2016
Post No. 2927
Time uploaded in London :– 8-07 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
தீபச் சாயா நரச் சாயா ஹந்தி புண்யம் புராதனம்
சாச்சேத்வேதவிச் சாயா ஹந்தி பாபம் புராதனம்
விளக்கின் நிழலும், மனிதர்களின் நிழலும் யார் மீது விழுகிறதோ
அவர்கள் சேர்த்து வைத்த பழயை புண்யம் கூட அழிந்து விடும்.
வேதம் ஓதுபவரின் நிழல் நம் மீது பட்டால் முன் செய்த பாவங்களும் அழிந்து விடும்.

Picture from wikipedia
Xxx
நடக்க முடியாத விஷயங்கள்
கானல் நீரில் மூழ்கி, முயல் கொம்பினால் ஆன வில்லை ஏந்தி, ஆகாயப் பூவாலான
மாலையை அணிந்து கொண்டு மலடியின் மகன் போகிறான்
ம்ருக த்ருஷ்னாம்பசி ஸ்நாத:சசச்ருங்க தணுர்தர:
ஏஷ வந்த்யா சுத: யாதி கபுஷ்ப க்ருத சகேர:
xxxx
யாருக்கு எது முக்கியம் ?
அலங்காரத்துக்கு ஆடை முக்கியம்
உணவுக்கு அன்பு முக்கியம்
பெண்ணுக்கு நல்ல குணம் முக்கியம்
அந்தணணுக்கு கல்வி முக்கியம்
வத்ஸ்த்ர முக்யஸ்த்வலங்கார: ப்ரிய முக்யந்து போஜனம்
குணமுக்யா பவேன்னாரி வித்யா முக்யஸ்து ப்ராஹ்மண:
Xxx
அமிர்தம் எது?
மனு கூறுகிறார்:
விகசாசி பவேன்னித்யம் நித்யன்னாம்ருத போஜன:
விகசோ புக்த சேஷந்து யக்ஞசேஷம் ததா அம்ருதம்
…மனு 3-285
திதி செய்த பின்னுள்ள மிச்சத்தை சாப்பிட வேண்டும்.
யக்ஞம் செய்த பின் மிஞ்சுவது அமிர்தத்துக்கு ஒப்பாகும்.
இவைகளை ஒருவன் தினமும் புசிக்க வேண்டும்.
இது தினமும் செய்யவேண்டிய பஞ்சமஹா யக்ஞம்
தொடர்பாக சொல்லப்பட்டவை.
Xxxx SUBHAM xxxx
You must be logged in to post a comment.