What is Agni Cayana? 10,800 Bricks in Five Layers!! (Post No.3029)

yaha kunda

Research Article written by london swaminathan

Date: 2nd  August 2016

Post No. 3029

Time uploaded in London :–  10-17 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Vedic Hindus were great mathematicians. Even in the construction of Yaga kundas (Fire Altars for sacrifice) they used geometry. They wanted mathematical precision even in Fire sacrifices. Probably this is the reason Egyptians borrowed Hindu knowledge for constructing the Pyramids or actually imported Hindus for the construction (Please read my article ‘Did Indians build Egyptian Pyramids?’)

 

“Agni Cayana is a rite of piling the fire altar, included in Soma sacrifices, in five layers with bricks, on the uttaravedi for setting up the Ahavaniya; it is represented in the Satapata Brahmana as a human imitation of the cosmic world of the Prajapati.

tortoise

The heads of five animals are built up into the altar, and the trunks are thrown into water. Bricks of the altar are prepared with this water. Anthill clay is mixed with the earth of a pit. The first brick is prepared by the sacrificer’s wife. The sacrifice prepares a fire pan and three bricks. There after other bricks are made and burnt.

 

After the diksha the building of the altar begins. The altar may be of several shapes e.g. suparna (eagle), syena (hawk), drone (trough). The bricks have different shapes: traiangular, oblong, square etc. the bricks are given different names. They are laid accompanied with mantras, and in a definite pattern, for which a knowledge of geometry is required.

 

Of the five layers, the first, third and fifth layers are of the same pattern, while the second and the fourth follow a different pattern. The ground on which the altar is erected is measured with a rope and ploughed.

 

At the lowest level a golden figure of a man is placed. The total number of bricks for all the five layers is 10,800; each layer is covered with thick mud.

 

A living tortoise is placed on a layer. Various other materials, e.g. mortar, pestle, pan, winnowing basket are placed in different positions.

 

The time taken for piling varies from 8th months to 12 months or five consecutive days.

 

The main authority on the rite is Satapata Brahmana which devotes five out of 14 kandas – more than one third of the book”.

–source: A Dictionary of Vedic Rituals

 

Tamil Mystery solved!

My comments: There is a verse in Sangam Tamil literature (Akananuru verse 361) where a simile about a tortoise is not explained by any one Tamil commentator correctly. After reading the above passage of placing a live tortoise on a layer, we know what the simile is about. Akananuru is a book which deals with family life and sex and so a simile about fire sacrifice and a tortoise going out of the fire altar to a cool pond has been a puzzle! Now it is solved!

Hermann's tortoise shutterstock_78129739

The reason for the poet to use such a simile in a lover’s song is the lover is compared to the tortoise and the arid area he was travelling was compared with the fire altar. The cool pond is his wife/lady love.

 

From this simile we come to know another thing, i.e. the tortoise is allowed to go free. It was not sacrificed in the fire. Otherwise the poet would not have used it in this context. It elucidates another thing as well. 2000 years ago all these fire sacrifices were a common place in the Tamil speaking world. Otherwise the poet wound not have used it in a lover’s song.

 

There is more significance to this Agnicayana rite. The Indus valley civilization used more bricks than any other civilization that too in a geometrical pattern. The Indus city streets and drainages were constructed in an orderly pattern. This shows the people who constructed mathematical fire altars and the buildings in the Indus cities were the same people. Already we have another proof in the Indus bull seals. The cow is praised sky high in the Vedas and the Bulls are shown more in the Indus seals, but the cow is completely absent. It has been a great mystery. Probably cow is considered holy and so the cow was not used in any images in the Indus- Saraswati valley civilization. This is another proof to show that the Vedic Hindus were the one who lived in the Indus-Saraswati valley.

buildings

10,800 has a great significance from the Vedic days until today. 1008 (Sahasranama) for every Hindu god is used in the temples. 108 (Ashtottara sata) names is used in houses for pujas. Added together it gives number 9 that has got lot of magical properties (please see my earlier article on this subject).

A lot of Vedic rituals are not explained or understood properly today. Unfortunately, we have very few scholars now to explain them correctly. Most of us read or have access only to the rubbish commentaries written by foreigners. I will try to unravel the Vedic secrets as far as possible.

 

–Subham–

அகநானூறு ஆமை ரகசியம் அம்பலம்! (Post No.3028)

Hermann's tortoise shutterstock_78129739

Research Article written by london swaminathan

Date: 2nd  August 2016

Post No. 3028

Time uploaded in London :–  6-26 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

அகநானூற்றுப் பாடல் 361ல், வேள்விக் குண்ட ஆமை  (தித்தியம் ஆமை )  பற்றி சொல்லப்படுகிறதே; அப்படியானால் யாகத்தில் ஆமையும் உயிர்ப்பலியாகக் கொடுக்கப்படுகிறதா? என்று ஒரு வாசகர் கேள்வி கேட்டவுடனே, எனக்கும் முழுப் பொருள் தெரியாது, அதுவும் அகத்துறைப் பாடலில் இப்படி ஒரு உவமையைப் பயன்படுத்துவது பொருளற்றதாக இருக்கிறது என்று மார்ச் மாதக் கட்டுரையில் வியப்பு தெரிவித்திருந்தேன். இப்பொழுது யாக, யக்ஞங்கள் பற்றிய ஒரு புத்தகத்தைப் படிக்கையில் திடீரெனப் புதுப் பொருள் கிடைத்தது. அது, பாட்டில் உவமைக்கும் பொருத்தமாக இருக்கிறது.

அகநானூறு 361
‘தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்,
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன,
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்,    (5)
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்’ என
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்,
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே!
கரியாப் பூவின் பெரியோர் ஆர,     (10)
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு,
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று,
சில் மொழி, அரிவை தோளே பல் மலை
வெவ் அறை மருங்கின் வியன் சுரம்,     (15)
எவ்வம் கூர, இறந்தனம், யாமே.

பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. –
எயினந்தை மகனார் இளங்கீரனார்

yaha kunda

 

“வாடாத மலரையுடைய தேவர் உண்பதற்காகத் தீ ஓங்கிய வேள்விக் குண்டத்தில் இடப்பட்ட ஆமை தான் முன்பு இருந்த நிழல் பொருந்திய பொய்கையில் போவதைப் போல………………………”

பாடல் வரி கரியாப்பூவின் பெரியோர்’ = வாடாத மலருடைய பெரியோர்கள்= தேவர்கள்

தித்தியம்= வேள்விக் குழி (யாக குண்டம்); வியப்பான விஷயம்! சுமார் 30,000 வரிகளையுடைய சங்க இலக்கியத்தின் 18 புத்தகங்களில், இந்த தித்தியம் என்னும் சொல், ஒரே இடத்தில்தன் கையாளப்பட்டுள்ளது!

 

நான் கண்ட புதுப் பொருள்:-

யாக குண்டம் கட்ட  செங்கற்களைப் பயன்படுத்துவர். இந்த நிகழ்ச்சிக்கு ‘அக்னிசயனம்’ என்று பெயர்’. பிரஜாபதியை உருவகப்படுத்தி ஆகவனீயம் என்ற தீயை அமைப்பர்; இது முத்தீக்களில் ஒன்று. ஐந்து மிருகங்களின் தலைகளும் அதில் பொருத்தப்படும்; அவைகளின் உடல்கள் நீரில்   எறியப்படும். அந்த நீரைக்கொண்டு செங்கற்கள் செய்யப்படும். எறும்புப்புற்று மண்ணையும், ஒரு குழியிலிருந்து கிடைத்த மண்ணையும் கொண்டு யாகம் நடத்துவோரின் மனைவி முதல் செங்கலைச் செய்வாள்.

 

யாகம் செய்பவர் மூன்று செங்கற்களையும் சட்டியையும் செய்வார். அதன் மீது புதிய செங்கற்கள் செய்யப்படும்.

தீட்சைக்குப் பின்னர், பல வகை வடிவங்களில்– கழுகு, பருந்து, தண்ணீர்த் தொட்டி வடிவங்கள்– யாக குண்டங்கள் அமைக்கப்படும். செங்கற்களும் பலவகை வடிவங்களில் செய்யப்பட்டு மந்திரபூர்வமாக ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கப்படும். இதற்கு கணித அறிவு தேவை.  மொத்தமுள்ள ஐந்து அடுக்குகளில் 1, 3, 5- அடுக்குகள ஒரு விதமாகவும் 2,4 அடுக்குகள  மற்றொருவிதமாகவும் இருக்கும்..

 

நூலை வைத்து அளப்பார்கள் (எகிப்திய பிரமிடுகளிலும் இம்முறை பின்பற்றபட்டதாலும் அங்கும் சூத்ர (நூல்) என்ற சொல் பயன்பட்டதாலும் எகிப்திய பிரமிடுகளைக் கட்டுவதிலும் இந்தியர்கள் உதவினார்கள் என்று முன்னரே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளேன்.

இதற்குப் பின்னர் ஏர் கொண்டு உழுவார்கள்.

கீழ் மட்டத்தில் ஒரு மனிதன் உருவம் தங்கத்தில் செய்து வைக்கப்படும். ஐந்து அடுக்குகளிலும் சேர்த்து, 10,800 செங்கற்கள் இருக்கும்.

ஒரு அடுக்கில் ஒரு உயிருள்ள ஆமை வைக்கப்படும் என்று ஆபஸ்தம்ப ச்ரௌத சூத்திரம் சொல்லுகிறது. மற்ற பல பொருட்கள் வெ வேறு இடங்களில் வைக்கப்படும். இவை எல்லாம் எட்டு முதல் 12 மாதங்களில் முடிவடையும்.

ஐந்தே நாட்களில் வேண்டுமானாலும் செய்யலாம்.

பல நூல்கள் இதுபற்றி உரைத்தாலும் சதபத பிராமணம் என்னும் நூலே விரிவாகப் பேசுகிறது அதனுடைய 14 காண்டங்களில் ஐந்து காண்டங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

tortoise

அகநானூற்றுப் பாடலின் பொருள்

இப்போது அகநானூற்றுப் பாடலின் பொருள் நன்கு விளங்கும்.

அதாவது பாலை நிலத்திலுள்ள தலைவனுக்கு யாக குண்டம் உவமை. அதிலிருந்து குளிர்ச்சியான சென்ற ஆமைக்கு தலைவன் உவமை. அது எப்படி குளிர்ச்சியான குளத்துக்குச் சென்று இன்பம் துய்க்கிறதோ, அது போல நீயும் இன்பம் துய்க்க இப்போது நினைக்க வேண்டாம் என்கிறார் புலவர்.

இதில் இன்னொரு விஷயமும் தெளிவாகிறது. உயிருள்ள ஆமையை அவர்கள் பலி இடுவதில்லை. அதை குளிர்ந்த நீர் நிலைக்குச் செல்ல யாகம் நடத்துவோர் அனுப்பினர். அப்படி பலியிட்டிருந்தால் அதை தலைவனுக்கு ஒப்பிடமாட்டார் புலவர்!

சங்க காலத்தில் யாக யக்ஞங்கள் ஆயிரக் கணக்கில் நடந்ததால் காதல் பாட்டில் கூட  யாக குண்ட ஆமை (யாமை) இடம் பெற்றுள்ளது!

ஆமை ரகசியம் அம்பலமானது!

buildings

சிந்து சமவெளி செங்கற்கள்!

சதபத பிராமணத்தில் மூன்றில் ஒரு பகுதி யாக குண்டம் அமைப்பது பற்றியது என்பது செங்கற்களின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும். சிந்து சமவெளியிலும் ஏராளமான செங்கற்கள் இருப்பதும் யாக குண்டம் 10,800 செங்கற்களைக் கொண்டமைக்கப்படுவதும் இரண்டு நாகரீகங்களும் ஒன்றே என்றும் புலப்படுத்தும். சிந்து சமவெளியில்  காளைகளும் , வேதங்களில் பசு மாடுகளும் போற்றப்படுவதாலும் அதை வேத கால நாகரீகம் என்று சொல்லத் தூண்டுகிறது.

மேற்கூறிய சடங்குகளில் பல தகவல்களுக்கு இப்போது பொருள் சொல்லக்கூட ஆள் இல்லை. வேதங்களை நன்றாகப் படி தால் சங்க இலக்கியத்துக்கு மேலும் தெளிவான பொருள் காணலாம்.

முந்தைய கட்டுரை/ Previous Article

அகநானூற்றுப் பாடலில் யாக குண்ட ஆமை!! புரியாத புதிர்!!! (Post No 2607) Research article written by london swaminathan

Date: 7 March, 2016

–subham–

 

 

 

Space Shuttle in Hindu Literature! (Post No.3027)

shuttle

written by london swaminathan

Date: 1st August 2016

Post No. 3027

Time uploaded in London :–  13-35

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

Lord Shiva has at least 1008 names and one of them is Tripuraantaka. The meaning of Tri+Pura+Antaka is one who has destroyed Three Forts. This story is referred to in the epics, Puranas (mythology) and the 2000  year old Sangam Tamil Lierature (Puranaanuru 55).

tripura

There was a demon named Taraka and he had three sons Tarakaksha, Kamalaksha and Vidyunmali. They did a penance towards Brahma and got three floating forts as a boon. Our Puranas describe the forts as staying in the sky without any support and flying as well. The three demons were harassing the Devas and they prayed to Lord Shiva to take action against the demons.

 

Shiva told them that he would destroy the forts. The condition required to destroy the forts is that all the three should be in one straight line. Shiva made the flying (moving) forts to come in a straight line and fired them with his arrow of fire.

 

My comments:

The story is a clear indication that Hindus had orbiting space stations or at least the concept of flying stations. Since they came to earth and troubled the devas and people, we come to know that the forts acted like space shuttles. Shiva’s third eye sends laser weapons and so they might have been destroyed by laser weapons.

 

More comments:-

This story explodes the Aryan- Dravidian myth. Throughout Hindu literature we see that the demons also pray to Hindu gods and get boons from the Trinity. It shows that they were also ardent Hindus but with bad motives. The story of Demons, Devas and men is also in the oldest Upanishad where they get the Upadesa.

 

Also note that the names of demons are always in Sanskrit. This also explodes the myth of ‘demonisng’ Dravidians. Demons are not Dravidians.

350px-Shiva_Tripurantaka

Also note that the ancient Tamils were very familiar with this story. It is in the oldest Purananuru (verse 55) and other literature of Sangam period and later Kambaramayana.

 

–subham-

 

 

 

சூர் அறுத்தவனும் ஊர் அறுத்தவனும்! ராமாயண இன்பம் (Post No.3026)

350px-Shiva_Tripurantaka

Written by london swaminathan

Date: 1st August 2016

Post No. 3026

Time uploaded in London :–  11-45 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

கம்ப ராமாயணம் படிக்கப்படிக்கத் தெவிட்டாதது. இதை பல்வேறு கோணங்களில் படிக்கவேண்டும். ஒவ்வொரு கடவுளுக்கும் கதா பாத்திரத்துக்கும் கம்பன் கொடுத்த அடைமொழிகளை மட்டும் தனியாக படித்து ரசிக்கலாம்.

 

ஆரணிய காண்டத்தில் அகத்தியப் படலத்தில் வரும் ஒரு பாடலைக் காண்போம்:

 

சூர் அறுத்தவனும் சுடர் நேமியும்

ஊர்  அறுத்த ஒருவனும் ஓம்பினும்

ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்

வேர் அறுப்பென் வெருவன்மின் நீர் என்றான்

 

பொருள்:-

சூர் அறுத்தவன் – முருகன்

சுடர் நேமி – திருமால்

ஊர் அறுத்தவன் – சிவன்

சூரபதுமனைக் கொன்ற முருகனும், காலநேமியைக் கொன்ற ஒளிமிகுந்த சக்ராயுதம் ஏந்திய திருமாலும், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான ருத்திரனும், அவ்வரக்கருக்குத் துணையாக வந்து காத்தாலும், எந்த அரக்கர் பாவம் செய்தவர்களோ, அவர்களை அடியோடு அழிப்பேன்; எனவே நீங்கள் அஞ்ச வேண்டாம் என்றான் ராமன்.

surasamharan

தாரகன் என்ற அரக்கனுக்கு மூன்று பிள்ளைகள்: தாரகாக்க்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி. மூவரும் பிரம்மாவிடம் வரம் பெற்று மூன்று பறக்கும் கோட்டைகளைப் பெற்றனர். அவர்கள், நல்லோருக்குத் தொல்லை கொடுக்கவே சிவன் அந்த மூன்று கோட்டைகளையும் அழித்தார். அதனால் அவருக்கு திரிபுராந்தகன் என்று பெயர்.

 

இக்கதை 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியத்திலும் இருக்கிறது:-

 

ஓங்கு மலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ,

ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றி,

பெருவிறல் அமரர்க்கு வென்றிதந்த

கறைமிடற்று அண்ணல் காமர் சென்னி

—– மதுரை இளநாகன், புறம்.55

 

முக்கண்ணன் (சிவன்) பூமியாகிய தேரில் சென்றான்; வேதங்களே குதிரையாக வந்தன. ஆதி அந்தணனாகிய பிரமன் தேர்செலுத்திச் செல்கிறான்; இமயமலையை வில்லாகவும், ஆதிசேடன் என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு வளைத்து தீ என்னும் அம்பால் மூன்று கோட்டைகளை எரித்தான். சங்க இலக்கியத்தின் நூல்களில் பல இடங்களில் சிவனின் திருவிளையாடல் இடம்பெறுகிறது.

 

இந்த த்ரிபுரம் எரித்த வரலாறு நமக்குப் பல உண்மைக  யும் உணர்த்தும்:–

 

அசுரர்களும் தவம் செய்தனர்; வரம் பெற்றனர்; அவர்களுக்கும் பிரம்மா, விஷ்ணு, சிவந்தான் கடவுள். ஆகவே தேவர்கள் ஆரியர் என்றும், அசுரர்கள் திராவிடர் என்றும் வெளிநாட்டினர் சொன்ன கதைகள் யாவும் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயின.

tripura

அசுரர்களின் பெயர்கள் எல்லாம் சம்ஸ்கிருதத்தில் இருப்பதையும் கவனிக்க வேண்டும். தமிழில் இல்லை.

மேலும் சங்க இலக்கிய காலத்திலேயே தமிழ் இந்துக்களுக்கு ராமாயண, இதிஹாச புராணங்கள் நன்கு தெரிந்திருந்தன.

 

மேலும் ரஷியாவும் அமெரிக்காவும் SPACE SHUTTLE ஸ்பேஸ் ஷட்டில் கட்டுவதற்குமுன் நாம் ‘ஸ்பேஸ் ஷட்டில்’ வைத்திருந்தோம். திரிபுரம் என்ற மூன்று கோட்டைகளும் வானில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.

 

–Subham–

கீதையின் மஹிமை: சிருங்கேரி ஆசார்யர்!(Post No.3025)

34thjagadguru

Article Written S NAGARAJAN

Date: 1st August 2016

Post No. 3025

Time uploaded in London :– 5-27 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

ஞான ஆலயம், இந்த மாத இதழில் (ஆகஸ்ட் 2016) வெளியாகியுள்ள கட்டுரை

முன்னுக்குப் பின் முரணாக இருப்பது அல்ல கீதை; முக்காலத்திற்கும் எல்லோருக்கும் பொருந்துவது கீதை என்பதை உணர்த்திய சிருங்கேரி ஆசார்யாளின் மஹிமை பொருந்திய சம்பாஷணை காலத்தை வென்ற ஒன்று!

 

கீதையின் மஹிமையை உணர்த்திய சிருங்கேரி ஆசார்யர்!

 

ச.நாகராஜன்

 

அறிஞர்கள் போற்றும் கீதை

கீதையின் பெருமையைப் போற்றாத உலக அறிஞர்களே இல்லை. எமர்ஸன், தோரோ, எட்வின் ஆர்னால்ட் உள்ளிட்ட மேலை நாட்டு அறிஞர்கள் கீதைக்கு உயரிய புகழாரம் சூட்டியுள்ளனர்.

மஹாத்மா காந்திஜிக்கு கீதையே வாழ்க்கை வழிகாட்டி. குறிப்பாக கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில் உள்ள கடைசி 19 ஸ்லோகங்களில் (ஸ்தித் ப்ரஜ்ஞஸ்ய என்பது முதல் ப்ரஹ்ம நிர்வாணம்ருச்சதி என்பது முடிய உள்ள ஸ்லோகங்கள்) தான் கடைப்பிடிக்க வேண்டிய தர்மம் அனைத்தும் அடங்கி விட்டது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

 

“கீதை பிரபஞ்ச தாய். அவள் யாரையும் வெறுங்கையுடன் திருப்பி அனுப்ப மாட்டாள். அவளது கதவைத் தட்டுக்கின்ற யாருக்கும் கதவு அகலத் திறந்தே இருக்கும்”  (The Gita is the universal mother. She turns away nobody. Her door is wide open to anyone who knocks.) என்று உளத்தின் ஆழத்திலிருந்து வந்த வார்த்தைகளால் அவர் கீதையின் பெருமையைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஸ்வாமி விவேகானந்தர் பாரதநாடெங்கும் சுற்றுப் ப்யணம் செய்யும் போதும் வெளி நாட்டிற்குச் சென்ற போதும் அவர் கையில் உடன் எடுத்துச் சென்றது கீதையே.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தன்னுடன் இறுதி வரை வைத்திருந்தது பகவத் கீதையே.

 

 

கீதையைத் தினமும் படித்து வர வேண்டும் என்பது ஸ்வாமி விவேகானந்தரின் கட்டளை.

 

ஆதி சங்கரரோ பகவத் கீதா கிஞ்சித் தீதா என்று பகவத் கீதையைக் கொஞ்சமாவது படித்தவனுக்கு யம பயம் இல்லை, ஆண்டவனின் அனுக்ரஹம் உண்டு என்று பஜகோவிதத்தில் உறுதி பட அருளியிருக்கிறார்.

 

தினமும் கீதையைப் படிக்கும் போது தோன்றும் சந்தேகங்கள் பல. அவற்றை உரிய ஆசார்யர்களிடம் தெளிவு படுத்திக் கொண்டால் உத்வேகம் பிறக்கும். கீதை காட்டும் பாதையை நன்கு உணரவும் முடியும்.

sringeri 14a

sringeri Sharda Peetham temple to the right and the vidyashankara temple in sringeri. credit T. NARAYAN

 

ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹா ஆசார்யாள்

 

ஆதி சங்கரர் ஸ்தாபித்த சிருங்கேரி பீடம் சரஸ்வதி அன்றாடம் நர்த்தனம் ஆடும் ஞான பீடம் என்பதை அனைவரும் அறிவர். அந்த பீடத்தை அலங்கரிக்கும் ஆசார்யர்களோ வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் கரை கண்டவர்கள். கீதையை வாழ்ந்து காட்டுபவர்கள்.

 

 

34வது பீடாதிபதியாக சிருங்கேரி பீடத்தை அலங்கரித்த அவதார புருஷர் ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஆவார். (1892’1954).இவரது சரித்திரம் அற்புதமானது. அதிசயிக்க வைக்கும் ஒன்று!

சதாசிவ ப்ரம்மேந்திரர் போல இடைவிடாது ஒவ்வொரு கணமும் இறையுணர்வில் உன்மத்தம் பிடித்தது போல அவர் வாழ்ந்தது பலரையும் திகைப்படைய வைத்தது.

 

 

அவரது ஞான நிலையைச் சற்றும் அறியாத அரசாங்கம் உண்மை நிலையைக் கண்டறிந்து வருமாறு டாக்டர் எம்.வி.கோவிந்தசாமி என்ற மருத்துவரை அனுப்பியது.

 

 

சிறந்த உளவியல் நிபுணரான அவர்  ஒரு வாரம் தங்கியிருந்து தேவையான தகவல்களைச் சேகரித்தார். ஆனால் ஆசார்யரைப் பற்றி என்ன  முடிவெடுப்பது என்பது அவருக்கு புலப்படவில்லை. தான் கிளம்ப வேண்டியதற்கு  முந்தைய தினம் ஆசார்யர் ‘அந்தர்முக’ நிலையிலிருந்து வெளி வந்து விட்டார் என்று கேள்விப்பட்டு அவரது தரிசனத்திற்காக வந்து ஆசி பெற வரிசையில் நின்றார்.

 

அவரைப் பார்த்த ஆசார்யாள்,”அதற்குள் ஏன் கிளம்ப வேண்டும்? வ்ந்த வேலையை இன்னும் நீங்கள் முடிக்கவில்லையே!” என்றார்.

 

 

திகைத்துப் போன டாக்டர் குழப்பத்துடன் மௌனமாக நின்றார்.

“என்னை சோதிக்கும் படி கொடுத்த வேலையை முடித்து விட்டீர்களா? என்னுடைய வியாதி உங்களுக்குத் தெரிந்த மருந்துகளினால் குணப்படுத்தக்கூடியது தானா?” என்று ஆசார்யாள் வினவினார்.

 

 

டாக்டருக்குத் தூக்கிவாரிப் போட்டது. டாக்டர் சேகரித்த தகவல்களை நினைவுபடுத்தும் வண்ணம் அடுத்தாற்போல ஆசார்யாள், “என்ன செய்வது! இது என் பிராரப்தம். இப்படித் தான் இருக்க வேண்டும். இதற்கு உங்களால் என்ன செய்ய முடியும்?” என்றார்.

 

 

கண்களில் நீர் மல்க விடை பெற்றுக் கொண்ட டாக்டர் அரசாங்கத்திற்கு தன் அறிக்கையில், ‘ஆசார்யாளின் நிலை மருத்துவ சோதனைகளுக்கு அப்பாற்பட்ட உயரிய நிலை’,. என்று குறிப்பிட்டார். அதுவரை நாத்திகராக இருந்த அவர் ஆத்திகராகவும் மாறி விட்டார்.

 

sathyamurthy

சத்தியமூர்த்தியின் சந்தேகங்கள்

 

மைசூர் ராஜ்யத்தில் பருவமழை பொய்த்துப் போக அனைவரும் ஆசார்யரை வேண்ட அவர் அருளினால் பெய்யோ பெய்யென்று  மழை கொட்டித் தீர்த்தது. அண்டை ராஜ்யமாக அமைந்த மதராஸ் பிராந்தியமும் பயனடைந்தது.

 

 

இதையெல்லாம் உணர்ந்த தேசபக்தரான தீரர் சத்தியமூர்த்தி ஆசார்யரைச் சந்தித்து நன்றி தெரிவித்து தன் மரியாதையைச் செலுத்தினார்.

 

அவரை உட்கார்த்தி வைத்த ஆசார்யார் கீதையின் பெருமையையும் அதன் ஆழ்ந்த அர்த்தத்தையும் விளக்கலானார். சத்தியமூர்த்தி கட்டாயமாக திரும்பிச் செல்ல வேண்டிய

ஷிமோகா செல்லும் பஸ் நேரமும் தாண்டியது. “நாளை போகலாம்” என்று கட்டளையிட்டு விட்டார் ஆசார்யர்.

பின்னால் தான் தெரிந்தது அந்த பஸ் பெரும் விபத்துக்குள்ளானது என்று!

 

சத்தியமூர்த்தி ஆசார்யரின் சம்பாஷணையால் திகைத்துப் போனார். ஏனெனில் அவர் கீதையை தினமும் படிப்பவர். அதில் தனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை குறித்து வைத்துக் கொண்டு வந்திருந்தார். அவற்றை ஆசார்யரிட்ம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும் என்பது அவரது எண்ணம்,

 

 

ஆனால் அவர் அதைச் சொல்லாத போதே அதற்கான சந்தேக விளக்கங்களை ஒன்றன் பின் ஒன்றாக ஆசார்ய்ர் தன் உரையில் சொல்லி விட்டார்.

 

 

இதைச் சத்தியமூர்த்தி நாத் தழுதழுக்க சொல்ல ‘என்ன சந்தேகங்கள், நான் என்ன விளக்கம் சொன்னேன்’ என்றார் ஆசார்யர்.

 

 

சத்தியமூர்த்தியின் மனதில் எழுந்த சந்தேகங்களும் அதற்கு ஆசார்யரின் விளக்கமும் எந்த ஒரு கீதை பக்தரையும் மகிழச் செய்யும். அவற்றில் சில:

 

  • அர்ஜுனன் கர்மயோகத்தைச் செய்ய வேண்டியவன். போர் புரியும் தருணத்தில் கர்ம யோகத்தை மேற்கொள்ள வேண்டிய அவனிடம் கண்ணபிரான் ஏன் சாங்கிய யோகத்தையும் சந்நியாச தர்மத்தையும் கூறினார். அவசியமே இல்லையே

 

பதில்: கீதை அர்ஜுனனுக்காக மட்டும் சொல்லப்படவில்லை.அவனை முன் வைத்து உலக மக்கள் அனைவருக்கும் சொல்ல வேண்டியதை கண்ணன் எடுத்துரைத்தார்.

  • கர்மண்யேவாதிகாரஸ்தே (கர்மம் செய்வதில் தான் உனக்கு அதிகாரம் இருக்கிறது கீதை 2-47) என்றும் ஸ்வகர்மணா த்வமர்ப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மானவ (பரம்பொருளைத் தம் கட்மையைச் செய்தலென்ற பூஜையினால் மகிழ்ச்சிபெறச் செய்து சித்தி பெறுகிறான் கீதை 18-46) என்றும் கூறி கர்மாக்களால் தான் மோக்ஷ பலன்கள் கிடைக்கும் என்று கூறிய பகவானே ‘ஸர்வ தர்மான பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ (எல்லா தர்மங்களையும் துறந்து விட்டு என் ஒருவனையே சரண் அடை கீதை 18-66) என்று சொல்வது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே

 

பதில் : முன்பு சொன்ன அதிகாரி பேதம் என்ற காரணமே இங்கும் பொருந்தும். ஸித்தி என்பதை சித்த சுத்தி என்று வைத்துக் கொண்டால் அது கர்மங்களைச் செய்பவருக்கு என்று ஆகும். சர்வதர்மான் பரித்யஜ்ய (எல்லா தர்மங்களையும் துறத்தல்) என்றால் அது ஞானாதிகாரிக்கான விஷயமாக ஆகி விடும்.

  • முதல் அத்தியாயத்தில் அர்ஜுனனின் விஷாதம் (துக்கம்) சொல்லப்பட்டிருக்கும் போது இறுதியில் தத்ர ஸ்ரீர் விஜயோ பூதி (அங்கு ஸ்ரீ என்னும் லக்ஷ்மி,ஜயம்,நீதியும் நிலைத்திருக்கும் கீதை 18-78), என்று சொல்லப்படுகிறது.. ஆரம்பம் முடிவுடன் பொருந்தவில்லையே!

 

பதில் : கீதையின் முதல் அத்தியாயம் ஒரு அறிமுக முகவுரை தான். இரண்டாவது அத்தியாயத்தில் அஸோஸ்யானஸ்ய சோகஸ்த்வம் (வருந்தத் தகாதவர்களைப் பற்றி நீ வருந்துகிறாய் கீதை 2-11) என்பதில் தான் கீதா சாஸ்திரம் துவங்குகிறது. அஹம் த்வாம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச:” (உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்; வருந்தாதே கீதை 18-66) என்பதுடன் கீதை  முடிகிறது. அஸோஸ்யானய (வருந்தத் தகாதவர்கள்) என்று ஆரம்பித்து மாஸுச (வருந்தாதே) என்று முடிவதால் ஆரம்பமும் முடிவும் அற்புதமாகப் பொருந்தி வருவது தெளிவாக விளங்குகிறது.

 

 

கேள்வி: இப்படி எடுத்துக் கொண்டால் அர்ஜுனனைப் பார்த்து நீ என்றும் உன்னை என்றும் கூறுவதால் அது அர்ஜுனனுக்கு மட்டும் தானே பொருந்தும். மற்றவர்களுக்கு கீதோபதேசம் இல்லையா? அது அர்ஜுனனுக்கு மட்டும் தானா?

பதில் : அர்ஜுனன் என்ற பதத்திற்கு அமரகோசத்தில் வெளுப்பானவன்,பரிசுத்தன், சித்த சுத்தி உடையவன் என்று அர்த்தங்கள் கூறப்படுகிறது. முக்கிய்மானவ்னை முன்னிலைப்படுத்திச் செய்வதே உபதேசம். ஆகவே அர்ஜுன பதத்தின் அர்த்தத்துட்ன் பொருந்தும் அனைவருக்கும் இது பொருந்தும்.

 

 

இப்படி ஒவ்வொரு கேள்வியாக சத்தியமூர்த்தி கூறி அதற்கான பதிலைப் பெற்றதையும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

அங்கு குழுமியிருந்த அனைவரும் இந்த உரையினால் கிருஷண – அர்ஜுன சம்வாதத்தை நேரில் கேட்டது போல மகிழ்ந்தனர்.

 

 

காலத்தை வென்ற கீதையை அனுதினமும் ஒதி வந்தால் அர்த்தமும் புரியும்; அனுக்ரஹமும் கிடைக்கும்!

*************