புண்ணிய, பாவ கர்மங்களின் விளக்கம்! (Post No.4406)

Written by S.NAGARAJAN

 

 

Date: 18 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-24 am

 

 

Post No. 4406

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 2

பிறவி ஏன்? முக்தி எப்போது – கட்டுரை எண் 4388 வெளியான தேதி ̀12-11-17 – இதைத் தொடர்ந்து வெளியாகும் கட்டுரை இது.

 

புண்ணிய, பாவ கர்மங்களின் விளக்கம்!

 

ச.நாகராஜன்

அத்வைத நோக்கில் புண்ணிய, பாவ கர்மங்களைப் பற்றி இனி காண்போம்,

 

*

 

சரீர பரிக்கிரகத்தினால் ஆன்மாவுக்குத் துக்கம் எனில். அது எத்தனை விதம்?

புண்ணியம், பாவம், மிஸ்ரம் என்று மூன்று விதம்.

 

இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?

புண்ணிய கர்மத்தினால் தேவாதி சரீரம் உண்டாகும்.

பாவ கர்மத்தினால் மிருகாதி சரீரம் உண்டாகும்.

புண்யமும் பாவமும் இணைந்த மிஸ்ராதி (கலந்த) கர்மத்தினால் மனுஷ்யாதி சரீரம் உண்டாகும்.

 

இவைகளில் வித்தியாசம் உண்டா?

அத்ருஷ்டம், மத்யமம்,சாமான்யம் என்று தனித் தனியாக மூன்று வித பேதங்கள் (வேறுபாடுகள்) உண்டு.

இப்படிச் சொல்லப்பட்ட கர்ம பந்தத்தினால் தான் நானாவித ஜனபேதம் உருவாகிறது.

எப்படி எனப் பார்ப்போம்.

ஹிரண்யகர்ப்பாதி சரீரம் புண்யோத்க்ருஷ்ட சரீரம்.

இந்திராதி சரீரம் புண்ய மத்யமம்.

யட்ச, ராக்ஷஸ, பிசாசம் புண்ய சாமானியம்.

 

இந்த மூன்று வித கர்மங்கள் எதனால் ஏற்படுகிறது?

மூன்று வித கரணங்களினால்.

 

அப்படியா? ஆத்மாவினால் அல்லவா?

ஆத்மா அவிகாரி, நிஷ்கிரியன் (அவத்த பேதம்) அவயவம் அற்றவனாவதால் கர்த்ருத்வம் கிடையாது.

 

ஆனால் ஆத்மாவுக்குக் கர்த்ருத்வம் இருப்பது போலத் தோற்றமளிக்கிறதே. இது ஏன்?

அத்தியாசிகமே. (அதாவது ஆரோபிதமே)

 

புரியவில்லை. ஆரோபிதம் என்றால் என்ன?

ஒன்றின் தர்மங்கள் வேறொன்றில் காணப்படுதலே ஆகும்.

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

ஓடம் ஒன்று நதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஓடத்தின் ஓட்டம் நதிக்கரையில் இருக்கின்ற மரங்களிலும், அசையாமல் ஓரே இடத்தில் இருக்கும் தன்மையை உடைய  மரங்களின் தர்மம் ஓடத்திலும் ஆரோபிப்பது போலாகும்.

 

நல்லது, மூன்று கரணங்களும் அசேதனமாக இருக்கின்ற போது, அதற்கு எப்படி கர்த்ருத்வம் உண்டாகும்?

(குறிப்பு: சேதனம் என்றால் உயிருள்ளவைகள். ஜங்கமம் என்று சொல்லப்படும். அசேதனம் என்றால் ஸ்தாவரம் , அதாவது உயிரில்லாத ஜட வஸ்துக்கள்)

அசேதனமன நீரும், காற்றும் மரம் முதலானவற்றை வேருடன் பிடுங்கித் தூக்கிக் கொண்டுபோவது போல,தூக்கி எறிவது போல கர்த்ருத்வம் காணப்படுகிறதில்லையா?

அதே போல மூன்று கரணங்களுக்கும் வேறு கரணங்களின்றிக் கர்த்ருத்வம் காணப்படுகிறது.

 

இந்த மூன்று வித கரணங்களினால் செய்யப்படுகின்ற கர்மங்கள் யாவை?

ஸவிசேஷ சிந்தை, நிர்விசேஷ சிந்தை, பரலோக சிந்தை, பக்தி ஞான வைராக்கிய சிந்தை என்பவையேயாம்.

இவைகளில் மனதினால் செய்யப்படுபவை புண்ணிய கர்மங்கள்- விஷய சிந்தை.

மற்றவர்களுக்கு உபகார சிந்தை,

வேத சாஸ்திரங்களில் பற்றுள்ள சிந்தை,

தர்மம், அதர்மம் என்கிற சிந்தை,

இவை போன்ற புத்தி விகாரங்கள் மன சம்பந்தமான பாவ காரியங்கள்.

அவிசேஷ, நிர்விசேஷ, புண்ய விஷய சிந்தை முதலான பாவ சிந்தையுடன் கலந்து அநுஷ்டிப்பது மிஸ்ர கர்மங்களாகும்.

வேத சாஸ்திரப்படி பகவத் சங்கீர்த்தனம், சத்தியம், பரோபகார வார்த்தை, மிருதுவாகப் பேசுதல், பூர்வ பாஷணம் (தானாக முனவந்து முதலில் பேசுதல்) ஆகியவை வாசிக புண்ய கர்மங்கள் ஆகும்.

வேத சாஸ்திர தூஷணை (இழித்துப் பேசுதல்) வேத தூஷணை,அசத்தியம், கடும் சொல், பொய் சொல்லுதல், கேலி செய்தல் ஆகியவை வாக்கினால் செய்யப்படும் பாவ கர்மங்கள் ஆகும்.

 

வேதாத்தியயனம், தேவ பூஜை காலங்களில் பரநிந்தை, கேலி, அசத்தியம் ஆகியவற்றை அனுஷ்டித்தல் மிஸ்ர பாவ கர்மங்களாகும்.

இப்படியே பலவித பாவ கர்மங்கள் உண்டு.

பிரம்ம ஞானம் உண்டாயிருந்தாலும் கூ மூன்று வித கரணங்களையும் புண்ய கர்மத்திலேயே நிறுத்த வேண்டும்.

***

Leave a comment

Leave a comment