
Date: 19 FEBRUARY 2018
Time uploaded in London- 6-59 AM
Written by London swaminathan
Post No. 4762
PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
கீழ்கண்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.
கீழ்கண்ட பாடல் வரிகளை யார் சொன்னது? எங்கே சொன்னார்கள்?
1.நாவினில் வேத முடையவள் கையில்
நலந்திகழ் வாளுடையாள்- தனை
மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடையாள்
2.காய்ச்ச பலாவின் கனி உண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடர் உற்றவாறே
3.நல்லதொரு புதுமைநாட்டில் கண்டேன்; அதனைச் சொல்லவா? சொல்லவா? சொல்லவா?
4.ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீப் புரையக் காண் தக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்!
5.சுக்கிரன் கண்ணைத் துரும்பாற் கிளறிய
சக்கரக் கையனே! அச்சோ! அச்சோ!

6.ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ
7.அறன் எனப்பட்டதே இல்வாழ்கை
8.எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்
9.கல்லை மென்கனியாக்கும் விச்சைகொண்டென்னை நின்கழற்கன்பனாக்கினாய்
எல்லையில்லை நின்கருணை யெம்பிரான்
10.குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
11.தண்டியக்காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடி விழுந்துஒடிட
12.மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப்பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
13.கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே
14.தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய்
வாக்கும் பெருக பணித்தருள்வாய்
15.கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகிய அப்பால்
எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே

விடைகள் ANSWERS
- பாரதி, பாரதியார் பாடல்கள், 2. திருமூலர் எழுதிய திருமந்திரம், 3. காளமேகம், தனிப்பாடல்கள், 4. சங்க கால அவ்வையார் ,புறநானூறு, 5. பெரியாழ்வார் திருமொழி, திவ்யப் பிரபந்தம், 6.கம்பன், கம்ப ராமாயணம், 7. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 8. பாரதிதாசன் பாடல்கள், 9. மாணிக்கவாசகர், திருவாசகம், 10. தற்கால அவ்வையார்,
- தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம், 12. இளங்கோ, சிலப்பதிகாரம், 13. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 14. குமரகுருபரர், சகல கலாவல்லி மாலை, 15. பட்டினத்தார் பாடல், திருவேகம்பமாலை