Written by London Swaminathan
Date: 30 APRIL 2018
Time uploaded in London – 16-00 (British Summer Time)
Post No. 4963
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
வெளி உலகவாசிகள் (E.T.), காலம் (Concept of Time) பற்றி கம்பன்! (Post No.4963)
கம்பன் இயற்றிய ராமாயண காவியத்தில் நிறைய அறிவியல் செய்திகள் உள்ளன. நமது பூவுலத்தைத் தவிர நிறைய உலகங்கள் உள்ளன; அங்கேயும் உயிரினங்கள் உள்ளன என்பதெல்லாம் மிகவும் தெரிந்த விஷயங்கள் போல போகிற போக்கில் அனாயாசாமாகச் சொல்கிறான் கம்பன்; உண்மைதான்; மஹாபரதத்திலேயே அர்ஜுனன் மேலுலகம் சென்று திரும்பி வந்த விஷயம் உள்ளது; வால்மீகி ராமாயணத்திலேயே விமானம் பற்றிய செய்திகள் உள்ளன. இதே போல அணு விஞ்ஞானம் அவ்வையார் பாடல்களிலும் திருமூலர் பாடல்களிலும் கம்பன் பாடல்களிலும் காணப்படுகின்றன. இது பற்றிய முந்தைய எனது கட்டுரைகளின் இணைப்பை கீழே காட்டுவதால் அவைகளைத் திரும்பச் சொல்லப் போவதில்லை. கம்பன் பாடல்களை மட்டும் தருகிறேன்.
இந்த பூமியும் கோள்களும் பிரபஞ்சமும் வட்ட வடிவானமவை. இதை பல்லாயிரமாண்டுகளுக்கு முன்னரே அறிந்த இந்து மத விஞ்ஞானிகள் இதை அண்டம் என்ற ஸம்ஸ்க்ருத சொல்லால் குறித்தனர். அண்டம் என்றால் முட்டை; அந்த வடிவில் வானத்தில் இருக்கும் எல்லா கிரஹங்களும் நட்சத்திரங்களும் தென்படுவதால் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவர்
கம்பன் எழுதிய காவியம் சுமார் ஆயிரம் ஆண்டுப் பழமையுடைத்து. ஆனால் ராமாயண, மஹாபாரத இதிஹாசங்களோ பல்லாயிரம் ஆண்டுப் பழமையுடைத்து. வேதங்களிலும் இந்தக் கருத்து உளது.
மாணிக்கவாசகர் முதல் பாரதியார் வரை பல்லாயிரம் அண்டங்கள் இருப்பதைப் பாடிப் பரவியுள்ளனர்.
எற்றை நாளினும் உளன் எனும் இறைவனும் அயனும்
கற்றை அஞ்சடைக்கடவுளும் காத்து அழிக்கும்
ஒற்றை அண்டத்தின் அளவினோ அதன்புறத்து உலவா
மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான்
பொருள்
மேலும் அந்த இரணியன் (ஹிரண்யகஸிபு), எந்தக் காலத்தும் அழியாமல் இருப்பவன் என்று வேதங்கள் சொல்லும் திருமாலும், நான்முகனும் அழகிய சடையுடைய திருமாலும் முறையே காத்து அழிக்கும் அண்டத்தின் எல்லை மட்டுமா? இந்த அண்ட கோளத்திற்கு அப்பாலுள்ள மற்ற அண்டங்களில் உள்ள எல்லாரும் தன் பெயரையே சொல்லித் துதிக்குமாறு வாழ்ந்தனன்.
ஏனைய அண்ட கோளங்கள் இருப்பதும் அங்கே வசிப்பவர்கள் பேச முடியும் என்பதும் நம்மவர்களுக்குத் தெரிந்த மிக சாதாரண விஷயம் என்பதை இந்தப் பாட்டு காட்டுகிறது.
அண்டம் என்பது முட்டை வடிவினதே என்று அறுதியிட்டுக் கூறுகிறான் கம்பன்:
குயிற்றிய அண்டம் குஞ்சை இட்டிலா முட்டைக் கூட்டில்
பயிற்றிய பருவமொத்த……………………………………..
திருமாலால் படைக்கப்பட்ட அண்ட கோளங்கள் குஞ்சு பொரிக்காத நிலையில் உள்ள முட்டைகள் போல விளங்க……………….
இதில் அண்டம் என்பது முட்டை வடிவமே என்று தமிழ்ப்படுத்திக் காட்டுகிறான் கம்பன்.
கால நேரம் பற்றிய அற்புத அறிவு
ஒரு நொடியை ஆயிரம் கூறாகப் போடுவது குறித்து பாடல் பாடுவதால் அக்கால மக்களுக்கு இவை எல்லாம் அத்துபடி என்பது சொல்லாமலேயே விளங்கும்:-
அயிரா இமைப்பினை ஓராயிரம் கூறு இட்ட
செயிரின் ஒரு பொழுதில் நுந்தையை யாம் சீறி
உயிர்நேடுவேம்போல் உடல் அளைய கண்டும்
செயிர் சேரா உள்ளத்தாய்கு என் இனி யாம் செய்கேம்
பொருள்:-
ஒரு இமைப் பொழுதை நுட்பமாக ஆயிரம் கூறாகப் பிளந்து, அந்த பகுப்புகளுள் ஒரு பகுப்பான சிறிது பொழுதிலே, உன் தந்தையை அவன் செய்த குற்றத்துக்காக யான் சினந்து அவன் உடலை நகங்களால் பிளந்து வருத்தியதைக் கண்ணெதிரே கண்டும் உள்ளம் கலங்காத மனநிலைக் கொண்ட நினக்கு யாம் இப்பொழுது என்ன கைம்மாறு செய்வோம் என்று பிரஹலாதனை நரசிம்மன் வடிவெடுத்த விஷ்ணு கேட்கிறான்.
இன்று நம்மிடையே கம்ப்யூட்டர்கள் இருப்பதால் ஒரு வினாடியை ஆயிரத்தால் வகுத்து,விண்கலங்களை விண்ணில் செலுத்த முடிகிறது. அந்தக் காலத்தில் இப்படி ஒரு நொடியை ஆயிரமாகப் பிரிக்கும் விஷயங்களை வெளிநாட்டார் சிந்திக்கவும் இல்லை; சிந்திக்கவும் முடியாது. ஏனெனில் கணிதமும் ‘டெஸிமல் சிஸ்டமும்’ (தசாம்ஸ முறை) எண்களும் பூஜ்யமும் உலகிற்கு நாம் கற்றுக் கொடுத்த விஷயங்களாகும்!!!
MY OLD ARTICLES ON EXTRA TERRESTRIALS AND CONCEPT OF TIME
வெளி உலகவாசிகள் | Tamil and Vedas
https://tamilandvedas.com/tag/வெளி-உலகவாசிகள்/
2000 ஆண்டுகளாக மக்கள் முதலிய ஜீவன்களை 18 கணங்களாகப் பிரிப்பது இந்து மத நூல்களில் காணப்படுகிறது. அப்படியே மிஸ்டர் … இந்துக்களின் வெளி உலகவாசிகள் பற்றிய நம்பிக்கைகள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளில் இதை விரிவாக விளக்கியுள்ளேன். ஆக புற நானூற்றின் …
ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது …
https://tamilandvedas.com/…/ராமரின்-புஷ்பக-வி…
22 Jun 2013 – புதிய கண்டு பிடிப்பு! ஸ்ரீ ராமர் விமானம் எப்படிப் பறந்தது? தற்காலவிமானம் போல உயர் ரக பெட்ரோல் ஊற்றினாரா? அல்லது ஹைட்ரஜன் வாயுவால் பறந்ததா? என்று எல்லாம் கேட்போருக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது. லண்டன் ‘மெட்ரோ’ பத்திரிகையில் எண்ண …
science and religion | Tamil and Vedas
https://tamilandvedas.com/category/science-and-religion/
15 Mar 2018 – நமக்கு ஒரு காலம், பித்ருக்களுக்கு ஒரு காலக் கணக்கு, பிரம்மாவுக்கு வேறு ஒரு காலக் கணக்கு ஆகியன வெளி உலகங்கள் (Extra Terrestrial Civilization) இருப்பதைக் காட்டும். வெளி உலக கிரக வாசிகள் (ET) கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் இப்படிப்பட்ட காலச் சுழற்சி உடைய இடத்தில் …
வெளி உலகவாசிகள் பற்றி தாண்ட்ய …
https://tamilandvedas.com/…/வெளி-உலகவாசிகள்-… – Translate this page
2 Jul 2017 – … ஆனால் செக்ஸ் (SEX) செய்ய முடியாது. 5.அவர்கள் மானசீகமாக எங்கும்பயணம் செய்யலாம். 6.தாண்ட்ய பிராமண விளக்கத்தின்படி பார்த்த்,,,,,,,,,,,ல், அவர்கள் பூமியிருந்து பிற கிரகங்களுக்குச் சென்றவர்களே. ஆனால் வெள்ளைக்காரர் களோவெனில் வெளி உலக வாசிகள் தான் இங்கு …
https://tamilandvedas.com/tag/காலப்-பயணம்/
Pisces constellation that includes REVATHI star. நட்சத்திர அதிசயங்கள். இந்த கட்டுரை தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம்.27 நட்சத்திரங்களில் கடைசி நட்சத்திரமான ரேவதி அறிவியல் வியக்கும் நட்சத்திரங்களில் முதலிடத்தை வகிக்கிறது.அப்படி அதிகம் வியக்கும்படி அந்த நட்சத்திரத்தில் எதைத் …
விண்வெளி அறிவியல் | Tamil and Vedas
https://tamilandvedas.com/…/விண்வெளி-அறிவிய…
உலகப் புகழ்பெற்ற சம்ஸ்கிருதக் கவிஞனின் உலகப் புகழ்பெற்ற நாடகம் சாகுந்தலம். இயற்கைக் காட்சிகளின் வருணனை ஒரு … காளிதாசன் சொல்லுவதைப் படிக்கையில் அவனே விண்வெளி வாகனத்தில் பயணம் செய்தானோ என்றே வியக்க வேண்டி இருக்கிறது. விமானி அறையில் (காக்பிட்) …
தமிழர்கள் கணித மேதைகள் | Tamil and Vedas
https://tamilandvedas.com/…/தமிழர்கள்-கணித-மேத…
ஆவியின் கூறு நூறயிரத்தொன்றாமே”—திருமந்திரம் 1974. சங்க இலக்கிய நூல்களான பரிபாடல் (3-53), புறநானூறு (பாடல் 2) ஆகியவற்றுக்கு உரை எழுதியோர் அணுச் செறிந்த உலகம் என்று பூமியை வருணித்துள்ளனர். உபநிஷத்துக்கள் இறைவனின் பெருமையைக் கூறுமிடத்து “அணோர் …
Tamil and Vedas | A blog exploring themes in Tamil and vedic …
https://tamilandvedas.com/page/10/?ca – Translate this page
21 Sep 2017 – திருமந்திரம். கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை. மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில். தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி. சிங்கார மான ….tamilandvedas.com/tag/ka. Posts about Ka written by Tamil and Vedas … Picture shows Egyptian Manu= Narmer. Did Indians build Pyramids?-Part 2 ( Please read first part before reading this .. –சுபம்–. Leave a comment.
Science & Religion | Tamil and Vedas | Page 14
https://tamilandvedas.com/category/science…:/tamilandvedas…/14/
17 Dec 2012 – அதாவது வியாச முனிவரின் எச்சில்தான் இந்த உலகம் முழுதும். அவர் வாயில் விழாத சப்ஜெக்ட் (விடயம்) இப்பூவுலகில் எதுவும் இல்லை. முன்னரே வெளி உலக வாசிகள் பற்றியும், பீஷ்மரின் ஊசி மருத்துவம் (அக்யுபன்க்சர்) பற்றியும் காலப்பயணம் பற்றியும் (டைம் ட்ராவல்) …
–சுபம்–