வெளி உலகவாசிகள் (E.T.), காலம் (Concept of Time) பற்றி கம்பன்! (Post No.4963)

 

Written by London Swaminathan 

 

Date: 30 APRIL 2018

 

Time uploaded in London – 16-00  (British Summer Time)

 

Post No. 4963

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

வெளி உலகவாசிகள் (E.T.), காலம் (Concept of Time) பற்றி கம்பன்! (Post No.4963)

கம்பன் இயற்றிய ராமாயண காவியத்தில் நிறைய அறிவியல் செய்திகள் உள்ளன. நமது பூவுலத்தைத் தவிர நிறைய உலகங்கள் உள்ளன; அங்கேயும் உயிரினங்கள் உள்ளன என்பதெல்லாம் மிகவும் தெரிந்த விஷயங்கள் போல போகிற போக்கில் அனாயாசாமாகச் சொல்கிறான் கம்பன்; உண்மைதான்; மஹாபரதத்திலேயே அர்ஜுனன் மேலுலகம் சென்று திரும்பி வந்த விஷயம் உள்ளது;  வால்மீகி ராமாயணத்திலேயே விமானம் பற்றிய செய்திகள் உள்ளன. இதே போல அணு விஞ்ஞானம் அவ்வையார் பாடல்களிலும் திருமூலர் பாடல்களிலும் கம்பன் பாடல்களிலும் காணப்படுகின்றன. இது பற்றிய முந்தைய எனது கட்டுரைகளின் இணைப்பை கீழே காட்டுவதால் அவைகளைத் திரும்பச் சொல்லப் போவதில்லை. கம்பன் பாடல்களை மட்டும் தருகிறேன்.

 

இந்த பூமியும் கோள்களும் பிரபஞ்சமும் வட்ட வடிவானமவை. இதை பல்லாயிரமாண்டுகளுக்கு முன்னரே அறிந்த இந்து மத விஞ்ஞானிகள் இதை அண்டம் என்ற ஸம்ஸ்க்ருத சொல்லால் குறித்தனர். அண்டம் என்றால் முட்டை; அந்த வடிவில் வானத்தில் இருக்கும் எல்லா  கிரஹங்களும் நட்சத்திரங்களும் தென்படுவதால் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவர்

கம்பன் எழுதிய காவியம் சுமார் ஆயிரம் ஆண்டுப் பழமையுடைத்து. ஆனால் ராமாயண, மஹாபாரத இதிஹாசங்களோ பல்லாயிரம் ஆண்டுப் பழமையுடைத்து. வேதங்களிலும் இந்தக் கருத்து உளது.

மாணிக்கவாசகர் முதல் பாரதியார் வரை பல்லாயிரம் அண்டங்கள் இருப்பதைப் பாடிப் பரவியுள்ளனர்.

 

எற்றை நாளினும் உளன் எனும் இறைவனும் அயனும்

கற்றை அஞ்சடைக்கடவுளும் காத்து அழிக்கும்

ஒற்றை அண்டத்தின் அளவினோ அதன்புறத்து உலவா

மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான்

 

பொருள்

மேலும் அந்த இரணியன் (ஹிரண்யகஸிபு), எந்தக் காலத்தும் அழியாமல் இருப்பவன் என்று வேதங்கள் சொல்லும் திருமாலும், நான்முகனும் அழகிய சடையுடைய திருமாலும் முறையே காத்து அழிக்கும்  அண்டத்தின் எல்லை மட்டுமா? இந்த அண்ட கோளத்திற்கு அப்பாலுள்ள  மற்ற அண்டங்களில் உள்ள எல்லாரும் தன் பெயரையே சொல்லித் துதிக்குமாறு வாழ்ந்தனன்.

 

ஏனைய அண்ட கோளங்கள் இருப்பதும் அங்கே வசிப்பவர்கள் பேச முடியும் என்பதும் நம்மவர்களுக்குத் தெரிந்த மிக சாதாரண விஷயம் என்பதை இந்தப் பாட்டு காட்டுகிறது.

 

அண்டம் என்பது முட்டை வடிவினதே என்று அறுதியிட்டுக் கூறுகிறான் கம்பன்:

குயிற்றிய அண்டம் குஞ்சை இட்டிலா முட்டைக் கூட்டில்

பயிற்றிய பருவமொத்த……………………………………..

 

திருமாலால் படைக்கப்பட்ட அண்ட கோளங்கள் குஞ்சு பொரிக்காத நிலையில் உள்ள முட்டைகள் போல விளங்க……………….

 

இதில் அண்டம் என்பது முட்டை வடிவமே என்று தமிழ்ப்படுத்திக் காட்டுகிறான் கம்பன்.

 

கால நேரம் பற்றிய அற்புத அறிவு

 

ஒரு நொடியை ஆயிரம் கூறாகப் போடுவது குறித்து பாடல் பாடுவதால் அக்கால மக்களுக்கு இவை எல்லாம் அத்துபடி என்பது சொல்லாமலேயே விளங்கும்:-

அயிரா இமைப்பினை ஓராயிரம் கூறு இட்ட

செயிரின் ஒரு பொழுதில் நுந்தையை யாம் சீறி

உயிர்நேடுவேம்போல் உடல் அளைய கண்டும்

செயிர் சேரா உள்ளத்தாய்கு என் இனி யாம் செய்கேம்

 

பொருள்:-

ஒரு இமைப் பொழுதை நுட்பமாக ஆயிரம் கூறாகப் பிளந்து, அந்த பகுப்புகளுள் ஒரு பகுப்பான சிறிது பொழுதிலே, உன் தந்தையை அவன் செய்த குற்றத்துக்காக யான் சினந்து அவன் உடலை நகங்களால் பிளந்து வருத்தியதைக் கண்ணெதிரே கண்டும் உள்ளம் கலங்காத மனநிலைக் கொண்ட நினக்கு யாம் இப்பொழுது என்ன கைம்மாறு செய்வோம் என்று பிரஹலாதனை நரசிம்மன் வடிவெடுத்த  விஷ்ணு கேட்கிறான்.

 

 

இன்று நம்மிடையே கம்ப்யூட்டர்கள் இருப்பதால்  ஒரு வினாடியை ஆயிரத்தால் வகுத்து,விண்கலங்களை விண்ணில் செலுத்த முடிகிறது. அந்தக் காலத்தில் இப்படி ஒரு நொடியை ஆயிரமாகப் பிரிக்கும் விஷயங்களை வெளிநாட்டார் சிந்திக்கவும் இல்லை; சிந்திக்கவும் முடியாது. ஏனெனில் கணிதமும் ‘டெஸிமல் சிஸ்டமும்’ (தசாம்ஸ முறை) எண்களும் பூஜ்யமும் உலகிற்கு நாம் கற்றுக் கொடுத்த விஷயங்களாகும்!!!

MY OLD ARTICLES ON EXTRA TERRESTRIALS AND CONCEPT OF TIME

 

வெளி உலகவாசிகள் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/வெளி-உலகவாசிகள்/

2000 ஆண்டுகளாக மக்கள் முதலிய ஜீவன்களை 18 கணங்களாகப் பிரிப்பது இந்து மத நூல்களில் காணப்படுகிறது. அப்படியே மிஸ்டர் … இந்துக்களின் வெளி உலகவாசிகள் பற்றிய நம்பிக்கைகள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளில் இதை விரிவாக விளக்கியுள்ளேன். ஆக புற நானூற்றின் …

 

ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது …

https://tamilandvedas.com/…/ராமரின்-புஷ்பக-வி…

22 Jun 2013 – புதிய கண்டு பிடிப்பு! ஸ்ரீ ராமர் விமானம் எப்படிப் பறந்தது? தற்காலவிமானம் போல உயர் ரக பெட்ரோல் ஊற்றினாரா? அல்லது ஹைட்ரஜன் வாயுவால் பறந்ததா? என்று எல்லாம் கேட்போருக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது. லண்டன் ‘மெட்ரோ’ பத்திரிகையில் எண்ண …

 

 

science and religion | Tamil and Vedas

https://tamilandvedas.com/category/science-and-religion/

15 Mar 2018 – நமக்கு ஒரு காலம், பித்ருக்களுக்கு ஒரு காலக் கணக்கு, பிரம்மாவுக்கு வேறு ஒரு காலக் கணக்கு ஆகியன வெளி உலகங்கள் (Extra Terrestrial Civilization) இருப்பதைக் காட்டும். வெளி உலக கிரக வாசிகள் (ET) கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் இப்படிப்பட்ட காலச் சுழற்சி உடைய இடத்தில் …

 

வெளி உலகவாசிகள் பற்றி தாண்ட்ய …

https://tamilandvedas.com/…/வெளி-உலகவாசிகள்-… – Translate this page

2 Jul 2017 – … ஆனால் செக்ஸ் (SEX) செய்ய முடியாது. 5.அவர்கள் மானசீகமாக எங்கும்பயணம் செய்யலாம். 6.தாண்ட்ய பிராமண விளக்கத்தின்படி பார்த்த்,,,,,,,,,,,ல், அவர்கள் பூமியிருந்து பிற கிரகங்களுக்குச் சென்றவர்களே. ஆனால் வெள்ளைக்காரர் களோவெனில் வெளி உலக வாசிகள் தான் இங்கு …

 

காலப் பயணம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/காலப்-பயணம்/

Pisces constellation that includes REVATHI star. நட்சத்திர அதிசயங்கள். இந்த கட்டுரை தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம்.27 நட்சத்திரங்களில் கடைசி நட்சத்திரமான ரேவதி அறிவியல் வியக்கும் நட்சத்திரங்களில் முதலிடத்தை வகிக்கிறது.அப்படி அதிகம் வியக்கும்படி அந்த நட்சத்திரத்தில் எதைத் …

 

விண்வெளி அறிவியல் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/விண்வெளி-அறிவிய…

உலகப் புகழ்பெற்ற சம்ஸ்கிருதக் கவிஞனின் உலகப் புகழ்பெற்ற நாடகம் சாகுந்தலம். இயற்கைக் காட்சிகளின் வருணனை ஒரு … காளிதாசன் சொல்லுவதைப் படிக்கையில் அவனே விண்வெளி வாகனத்தில் பயணம் செய்தானோ என்றே வியக்க வேண்டி இருக்கிறது. விமானி அறையில் (காக்பிட்) …

தமிழர்கள் கணித மேதைகள் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/தமிழர்கள்-கணித-மேத…

ஆவியின் கூறு நூறயிரத்தொன்றாமே”—திருமந்திரம் 1974. சங்க இலக்கிய நூல்களான பரிபாடல் (3-53), புறநானூறு (பாடல் 2) ஆகியவற்றுக்கு உரை எழுதியோர் அணுச் செறிந்த உலகம் என்று பூமியை வருணித்துள்ளனர். உபநிஷத்துக்கள் இறைவனின் பெருமையைக் கூறுமிடத்து “அணோர் …

Tamil and Vedas | A blog exploring themes in Tamil and vedic …

https://tamilandvedas.com/page/10/?ca – Translate this page

21 Sep 2017 – திருமந்திரம். கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை. மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில். தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி. சிங்கார மான ….tamilandvedas.com/tag/ka. Posts about Ka written by Tamil and Vedas … Picture shows Egyptian Manu= Narmer. Did Indians build Pyramids?-Part 2 ( Please read first part before reading this .. –சுபம்–. Leave a comment.

 

Science & Religion | Tamil and Vedas | Page 14

https://tamilandvedas.com/category/science…:/tamilandvedas…/14/

17 Dec 2012 – அதாவது வியாச முனிவரின் எச்சில்தான் இந்த உலகம் முழுதும். அவர் வாயில் விழாத சப்ஜெக்ட் (விடயம்) இப்பூவுலகில் எதுவும் இல்லை. முன்னரே வெளி உலக வாசிகள் பற்றியும், பீஷ்மரின் ஊசி மருத்துவம் (அக்யுபன்க்சர்) பற்றியும் காலப்பயணம் பற்றியும் (டைம் ட்ராவல்) …

 

–சுபம்–

புறநானூற்று முதல் பாட லில் அதிசயச் செய்திகள்! (Post No.4148)

Written by London Swaminathan

 

Date: 11 August 2017

 

Time uploaded in London- 7-25 am

 

Post No. 4148

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே-

 

புறநானூற்றின் முதல் பாட்டு கடவுள் வாழ்த்து. அதாவது தமிழர்களின் முதல் பாட்டே திராவிடப் பேய்களுக்கு செமை அடி கொடுக்கும் பாடல். பேய்கள் யார்? கடவுள் இல்லை என்று சொல்வோர் பேய்மகன்களாம். நான் சொல்லவில்லை; வள்ளுவர் சொல்கிறார்

 

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் — குறள் 850

 

“உயர்ந்தோர் பலரும் உண்டென்று சொல்லும் பொருளைத், தனது புல்லறிவால் இல்லை என்று மறுப்பவன் இப்பூமியில் காணப்படும்  பேய் என்றே கருதப்படுவான்”.

கடவுள் வாழ்த்து பற்றித் தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் உள்ளது. ஆகவே கடவுளை நம்பாதவன் தமிழன் அல்ல; பேய்கள்!

கடவுளை நம்பாதவன் தமிழ் பற்றிப் பேசினால் தமிழ்த் தாய் பொறுத்துக் கொள்ளமாட்டாள்!

 

இன்னும் ஒரு அதிசயம். முதல் பாட்டிலேயே அந்தணர், வேதம் எல்லாம் புகழப்படுகிறது. இதுவும் திராவிடப் பண்பாடு தனிப்பட்டது என்று சொல்லுவோருக்கு செமை அடி கொடுக்கிறது.

இதைவிட அதிசயம் பாடலை எழுதியவர் பெயர் மஹாதேவன். சிவனுடைய பெயர். ஆகையால் இவர் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் எல்லாம் சிவன் பற்றியது. புற நானூற்றுக் காலத்திலேயே, பல புலவர்கள் தங்கள் பெயர்களைத் தமிழ் படுத்தியுள்ளனர். காமாட்சி என்பதை காமக் கண்ணி என்றும் மஹாதேவன் என்பதை பெருந்தேவன் என்றும் கண்ணதாசன் என்பதை கண்ணந்தாயன் என்றும் விஷ்ணுதாசன் என்பதை  விண்ணந்தாயன் என்றும் தமிழ்படுத்தி இருக்கின்றனர்

இன்னும் ஒரு சுவையான செய்தி மக்களை    ஆரியர், திராவிடர் என்று வெள்ளைக்கரப் பாதிரியார்கள் பிரித்தது பயங்கரப் புளுகு என்று காட்டுகிறது. 2000 ஆண்டுகளாக மக்கள் முதலிய ஜீவன்களை 18 கணங்களாகப் பிரிப்பது இந்து மத நூல்களில் காணப்படுகிறது. அப்படியே மிஸ்டர் மஹாதேவனும் செப்பியுள்ளார்.

 

முதல் பாட்டிலேயே கங்கை, வேதம், பிராமணர், சம்ஸ்கிருதம்!

பிராமணர் பாடும் வேதம் பற்றிச் சொன்னதோடு கங்கை நதி பற்றியும் முதல் பாட்டிலேயே வந்து விடுகிறது. சிவனிடம் உள்ள வற்றாத நீரூற்று என்பதை உரைகாரர்கள் கங்கை என்றே பகர்வர்.

இதைவிடச் சுவையான செய்தி 18 கணங்கள் பற்றிய செய்தி; யார் அந்த 18 கணங்கள்?

தேவார, திவ்யப் பிரபந்த காலம் வரை, கம்ப ராமாயண காலம் வரை மக்களையும் அவருக்கு மேலானவர்களையும் 18 பிரிவுகளாகப் பிரித்தனர்:-தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாரா கணம் (நட்சத்திரவாசிகள்) , வானுலக வாசிகள், போகபூமியர்.

 

நாகர், கருடர் என்று சொன்னவுடன் பாம்பு, கருடன் என்னும் பறவை என்று எண்ணி விடாதீர்கள். அந்தக் காலத்தில் ஒவ்வொரு சின்னத்தை வைத்துக் கொண்டவர்கள் தங்களை கரடி (ஜாம்பவான்) கழுகு (ஜடாயு), குரங்கு (வானர) என்று அழைத்துக் கொண்டனர். இப்பொழுதும் உலகம் முழுதும் பழங்குடி மக்களிடையே இவ்வழக்கம் உள்ளது. வேத காலத்தில் துவங்கிய வழக்கம் இது. இது பற்றி முன்னரே எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் வேத கால எடுத்துக் காட்டுகளைத் தந்துள்ளேன்.

இன்னும் ஒரு சுவையான விஷயம் 18 கணம் பற்றிய பழங்காலப் பாடலாகும்; இது அடியார்க்கு நல்லார் தரும் பாடல்:-

 

கின்னரர் கிம்புருடர் விச்சாதரர் கருடர்

பொன்னமர் பூதர் புகழியக்கர் – மன்னும் உரகர் சுரர் சாரணர்

முனிவர் மேலாம், பரகதியோர் சித்தர் பலர்; கந்தருவர்

தாரகைகள் காணப் பிசாசகணம் ஏந்து புகழ் மேய விராக்கதரோ

டாய்ந்ததிறர் போகா வியல்புடைய போகபுவியுருடனே ஆகாசவாசிகளாவர்

 

வெளி உலகவாசிகள் பற்றி புறநானூறு

 

புறநானூற்றில் பைலட் இல்லாத ஏரோப் பிளேன் (Pilotless Plane/ drone வலவன் ஏவா வான ஊர்தி- பாடல் 27) முதலிய பல அறிவியல் கூற்றுகள் இருப்பது பற்றி ஏற்கனவே விரிவாக எழுதிவிட்டேன். முதல் பாட்டில் வெளி உலகத்தில் அறிவுசார்ந்த உயிரினங்கள் உண்டு என்பதை உறுதிபடக்  கூறுகிறார் மிஸ்டர் மஹாதேவன். இவர் அந்தக் காலத்திலேயே மஹாபாரதத்தைத் தமிழில் பாடியதால் பாரதம் பாடிய பெருந்தேவானார் என்று அழைக்கப்படுகிறார். இவர் வானுலகவாசிகள் பற்றிச் சொல்லும் செய்தி சுவைமிக்கது; 18 கணங்களில் ஆகாசவாசிகள், நட்சத்திரங்கள் பற்றி வருகிறது. அர்ஜுனனை மாதரி என்பவன் வெளி உலகத்துக்கு அழைத்துச் சென்றபோது விண்வெளி ஓடத்திலிருந்து ஒளிமிகுந்த பொருள்களைக் கண்டு ஆச்சர்யத்தோடு வினவுகிறான்.

இவைகளைத்தான் பூமியில் உள்ளோர் நட்சத்திரங்கள் என்று சொல்லுவர் என்று மாதரி விளக்குகிறான். இது மஹாபாரதம் வனபர்வத்தில் உள்ள விஷயம்.

 

எகிப்தியர்களும் மன்னர்கள் இறந்தவுடன் நட்சத்திரத்தோடு கலந்துவிடுவதாக நம்பினர். நாமும் துருவன் அகஸ்தியர் ஏழு ரிஷிகள், அருந்ததி ஆகியோரை நட்சத்திரங்களாக வணங்குகிறோம். இந்துக்களின் வெளி உலக வாசிகள் பற்றிய நம்பிக்கைகள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளில் இதை விரிவாக விளக்கியுள்ளேன். ஆக புற நானூற்றின் முதல்பாட்டிலேயே கச்சேரி களை கட்டத் துவங்குகிறது.

ஆதாம் (Adam) என்னும் ஆணின் இடது விலா எலும்பை ஒடித்துப் பெண்களைக் (Eve) கடவுள் உருவாக்கினான் என்ற பைபிள் கதை, சிவனின் இடது பாகத்தில் இருக்கும் உமை பற்றிய அர்த்த நாரீஸ்வரர் கதையிலிருந்து வந்தது என்பதையும் “பைபிளும் சம்ஸ்கிருதமும்” என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கியுள்ளேன்

இதோ பாடலும் அதன் பொருளும்:

 

கண்ணி கார் நறுங் கொன்றை; காமர்

வண்ண மார்பின் தாரும் கொன்றை;

ஊர்தி வால் வெள்ளேறே; சிறந்த

சீர்கெழு கொடியும் அவ் ஏறு என்ப;

கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக் கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே;

பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ் உருத்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் சுரக்கும்;

பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப் பிறை

பதினென்கணனும் ஏத்தவும் படுமே —

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய

நீர் அறவு அறியாக் கரகத்து,

தாழ்சடைப் பொலிந்த, அருந்தவத்தோற்கே

 

— முதல் பாடல், பாரதம் பாடிய பெருந்தேவனார்

 

வண்ணம், தவம், கணம் ஏமம் முதலிய பல சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளன. கொடி வாஹனம் ஆகிய விஷயங்களும் சம்ஸ்கிருத நூல்களில் காணப்படும் கருத்துகளே.

 

பாடலின் பொருள்:-

சிவபெருமான் எல்லா உயிர்களுக்கும் காவலாய் உள்ளவன்; நீர் வற்றப் பெறாத கரகத்தை உடையவன்; தாழ்ந்த சடையுடையவன்; சிறந்த தவத்தோன். அவனது தலையில் அணியப் பெறுவதும் (கண்ணி) மார்பில் அணியப் படுவதும் (தார்=மாலை) கார்காலத்தில் பூக்கும் கொன்றைப் பூ. அவன் ஏறி வருவது வெள்ளை நிறக் காளை; அவனது கொடியில் உள்ளதும் அஃதே. அவனது கழுத்து விஷம் உண்டதால் கறுத்தது; அது களங்கமாகத் தோன்றினும் தேவர்களை உயிர்பிழைக்க வைத்ததால், வேதத்தைப் பயிலும் அந்தணர்களால் போற்றப்படுகிறது. அவனது உடலின் ஒரு பகுதி பெண் (அர்த்தநாரீஸ்வரர்);  அது அவனுள்ளே ஒடுங்கியும் இருக்கும்; பிறைச் சந்திரன் நெற்றிக்கு அழகூட்டும் அதை 18 கணத்தவரும் புகழ்வர்.

 

18 கணங்களும் சிவனை வணங்குவதாகக் கூறுவதால் அசுரர்களும், இராக்கதரும் இந்துக்களே—- அவர்களும் சிவனை வேண்டி வரம் பெற்றவர்களே என்பது வேத காலம் முதற்கொண்டு இருந்து வரும் கோட்பாடு. ஆனால் பகச் சொல்லி கேளிர் பிரிக்கும் வெள்ளைத் தோலினர்,  அவர்களை திராவிடர்கள் என்றும் பழங்குடி மக்கள் என்றும் முத்திரை குத்தியது ஜகஜ்ஜாலப் புரட்டு, பொய், பித்தலாட்டம் என்பதை அழகாகக் கூறுகிறார் மிஸ்டர் மஹாதேவன்

 

புறநானூற்றுக்கு நான் புது உரை எழுதி வருகிறேன்; மேலும் வரும்!

சில சொற்களுக்குப் பொருள்:

நீரறவறியாக் கரகம் = கங்கை; கண்ணி = தலையில் அணியும் மாலை; தார் = மார்பில் சூடும் மாலை, காமர் = அழகு

வாழ்க பாரதம் பாடிய பெருந்தேவனார்; வளர்க தமிழ்!

 

—–subam—-

 

 

 

வெளி உலகவாசிகள் பற்றி தாண்ட்ய பிராமணம் (Post No.4046)

Compiled by London Swaminathan
Date: 2 July 2017
Time uploaded in London-17-21
Post No. 4046

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வேத கால இலக்கியத்தில் நான்கு பகுதிகள் உண்டு சம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் என்பன அவை. அதில் நேற்று சுவையான சில கதைகளைத்  தந்தேன். இன்று மேலும் சில தகவல்களைக் காண்போம்

 

தாண்ட்ய மஹா  பிராமணம் தரும் தகவல்:-

 

உயிரினங்களைப் படைத்த பிரஜாபதி, தேவர்களின் நன்மைக்காக  தன்னையே, யாகத்தில் ஆஹுதியாக அளித்தார். முன்னர் மரணம் அடைந்து கொண்டிருந்த தேவர்கள், இதன் காரணமாக இப்பொழுது தெய்வீக நிலையைப் பெற்றனர் (தேவர்களாயினர்)

 

இது பற்றி ஆபஸ்தம்பர் (2-7-16) தரும் வியக்கியானம் சுவையானது:-

முன் காலத்தில் இவ்வுலகத்தில் தேவர்களும் மனிதர்களும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர். பின்னர் யாக யக்ஞங்கள் செய்தவர்கள், அதன் பலனாக, தேவ லோகம் சென்றனர். மனிதர்களோவெனில் உலகிலேயே தங்க நேரிட்டது தேவர்களைப் போல யாக யக்ஞங்களைச் செய்பவர்கள் மரணத்துக்குப் பின்னர், தேவ லோகத்தில் பிரம்மாவுடன் வசிப்பர்..

தேவ லோகவாசிகள் பற்றி இந்துமத புராணங்கள் தரும் தகவல் வேறு எங்கும் இல்லை. ஆக,  நாமே இத்துறையில் மிகவும் முன்னேறி உள்ளோம்; எதிர்காலத்தில் வெளி கிரஹ வாசிகளைக் கண்டுபிடிக்கையில் நாம் அன்றே சொன்னோம் என்று சொல்லலாம்:-

1.தேவலோக வாசிகள் கண் இமைக்காது

2.கால்கள் நிலத்தில் பதியாது

3.அவர்கள் போட்டிருக்கும் மாலைகள் வாடாது

4.அவர்கள் இன்பமாக இருப்பர்; ஆனால் செக்ஸ் (SEX) செய்ய முடியாது

5.அவர்கள் மானசீகமாக எங்கும் பயணம் செய்யலாம்.

6.தாண்ட்ய பிராமண விளக்கத்தின்படி பார்த்த்,,,,,,,,,,,ல், அவர்கள் பூமியிருந்து பிற கிரகங்களுக்குச் சென்றவர்களே

 

ஆனால் வெள்ளைக்காரர் களோவெனில் வெளி உலக வாசிகள் தான்  இங்கு வந்து, பூமியில் உயிரினங்களை உண்டாக்கினர் என்பர்

தசரதர் போன்றோர் இறந்த பின்னரும் பூமிக்கு வந்து காட்சி தந்தனர்.  அர்ஜுனன் போன்றோர் இந்திர லோகம் வரை சென்று வந்ததை மஹாபாரதம் கூறுகிறது.

 

ஐதரேய பிராமணக் கதை

 

வேதங்களுக்கு உரை எழுதிய சாயனர் சொல்லும் கதை இது. பழங்கால ரிஷிகளில் ஒருவருக்கு பல மனைவியர் உண்டு. ஒரு மனைவியின் பெயர் இதரா. அவருக்கு மஹிதாச ஐதரேய என்ற ஒரு மகன் இருந்தான். ஆனால் அவர் அந்த மகனைத் தவிர மற்ற மனைவியர் மூலம் பிறந்த எல்லோர் இடத்திலும் அன்பு காட்டினார். அவனைத் தவிர மற்ற எல்லோரையும் மடியில் உட்கார வைத்துக் கொஞ்சுவார். மஹிதாசனுடைய அம்மாவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தன்னுடைய குல தெய்வத்திடம் வேண்டினாள்.

மஹிதாசன் எல்லோரையும் விட அறிவில் சிறந்தவனாக இருந்ததால் எல்லோர் முன்னிலையிலும் தேவி தோன்றி அவரை சிம்மாசனத்தில் உட்கார வைத்தாள். ஐதரேய பிராமணம் அவர் முன்னிலையில் தோன்றியது –ஆரண்யகமும் அவர் முன்னிலையில் தோன்றியது

 

பிராமண நூலும் ஆரண்யக நூலும் அவர் முன்னிலையில் “தோன்றியது” என்பதன் பொருள், அவர் அருள் பெற்றபோது பொங்கி எழுந்த விஷயங்களே இவ்விரு நூல்களும் என்பதாகும்.

 

–Subham–