I can’t read my Hand writing! (Post No.5351)

Compiled BY London swaminathan

Date: 22 August 2018

 

Time uploaded in London – 11-42 AM (British Summer Time)

 

Post No. 5351

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

Hand writing Anecdotes

 

Horace Greeley is another instance of a famous man noted for the illegibility of his handwriting. He once wrote the following letter,
Mr M B Castle,
Sandwich III
Dear sir
I am over worked and growing old. I shall be 60 on next February the 3rd. On the whole, it seems I must decline to lecture hence forth except in this immediate vicinity. If I go at all, I cannot promise to visit Illinois on that errand, certainly not now.
Yours truly
Horace Greeley

A few days later he received this answer:-
Horace Greeley
New York Tribune

Dear sir,
Your acceptance to lecture before our association next winter came to hand this morning. Your penmanship not being the plainest, it took some time to translate it. But we succeeded and would say your time February 3rd and the terms 60 dollars, are entirely satisfactory. As you suggest we may be able to get you other engagements.

Respectfully
M B Castle

Xxx

I don’t know me!
John Calhoun’s handwringing, though it looked neat, was almost undecipherable. Once his friend sent him back one of his letters because it was too difficult to read. Calhoun replied,
“I know what I think on this subject but cannot decipher what I wrote.”
Xxx

 

Admission Pass or Doctor’s Prescription!


The actor, Macready, was notorious for the illegibility of his handwriting. He frequently was called upon to scrawl a chit for the free admission for friends and acquaintances to his performances. Although unrecognisable, they-were familiar to the door man and served their purpose. One day, however, a friend of the actor jestingly took one of Macready’s scrawled passes to a pharmacist and gravely handed it over as a prescription to be filled. The latter unhesitatingly compounded a potion from various phials and powder boxes, and handing it across the counter to the waiting customer, observed,
“A cough mixture, and a very good one. Fifty cents, please!”

Social Activities


Said Marie Antoinette,
“My tastes are not the same as those of the king, who cares only for hunting and blacksmith work. You will admit that I should not show to advantage in a forge. I could not appear there as Vulcan, and the part of Venus might displease him even more than my tastes”.

  Xxx Subham xxx

 

அறிஞர்க்கழகு கற்றுணர்ந்து அடங்கல்- 2 கதைகள் (Post No.5350)

Modi with Bhutanese King.

WRITTEN BY London swaminathan

Date: 22 August 2018

 

Time uploaded in London – 8-57 AM (British Summer Time)

 

Post No. 5350

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

அறிஞர்க்கழகு கற்றுணர்ந்து அடங்கல்- வெற்றி வேற்கை/ நறுந்தொகை (அதிவீர ராம பாண்டியன்)

மிதிலை நகரில் ஒருவன் மாமிசக் கடை வைத்திருந்தான். அவன் ஒரு வேடன்; காட்டுப் பன்றியின் மாமிசம் காட்டு எருமை மாட்டின் மாமிசம் முதலியவற்றை அவன் அவன் விற்று வந்தான். இப்படிச் செய்பவனுடைய பெயர் தர்ம வியாதன். அதாவது அறநிலை வேடன். ஏனென்றால் அவன் சத்தியம் தவறாதவன். வேத சாஸ்திரங்களைக் கற்றவன். வைத்திருப்பதோ கசாப்புக் கடை; பெயரோ தர்ம வியாதன். ஆயினும் அவன் தன் புகழை தம்பட்டம் அடிக்கவில்லை. ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்பதற்கிணங்க வாழ்ந்து வந்தான்.

 

 

அவனிடம் பிராஹ்மண ஸ்ரேஷ்டர்களும் வந்து ஐயம் தெளிந்தனர். கௌசிகன் என்ற அந்தணன் அவரிடம் வந்து பெற்றோர்களைக் கவனிப்பதே முக்கியம் என்று தர்ம வியதனைப் பார்த்துக் கற்றுக் கொண்டார். அப்போதுதான் அவர் தான் அப்படிக் கவனிக்காமல் போனதும் தவறு என்றும் புரிந்தது. இந்தக் கதை மஹாபாரதத்தில் இருக்கிறது

அடக்கம் காரணமாக அவன் புகழ் தானாகப் பரவியது. வள்ளுவனும் அடக்கத்தின் – பணிவின் பெருமையை திருக்குறளில் விதந்து ஓதுகிறான்.

Prince Charles in India

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து (குறள் 125)

 

பொருள்

பணிவு- அடக்கம் என்பது எல்லோருக்கும் நன்மை தரும்; பணக்காரர்களிடத்தில்  அது இருந்தால், அவர்களுக்கு மேலும் செல்வம் கிடைத்தது போல இருக்கும்.

 

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது  (குறள் 124)

 

எந்த நிலையிலும் மாறுபடாமல் இருப்பவனின் பணிவு, மலையை விடப் பெரியது, உயர்வானது.

 

இதோ இன்னொரு கதை!

அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் (GEORGE WASHINGTON). அவருடைய படம் பொறித்த பத்து டாலர் தங்கக் காசு (700 ரூபாய்) அமெரிக்காவில் 137 லட்சம் பவுன் மதிப்புக்கு ஏலம் போனதாகப் பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் 20-8-2018ல் செய்தி வெளியிட்டுள்ளன. ஏன் இவ்வளவு மதிப்ப?. அதை ஜார்ஜ் வாஷிங்டன் தனது பைக்குள்ளேயே வைத்திருந்தாராம். அவர் ஏன் சட்டைப் பைக்குள் வைத்திருந்தார்?

 

அங்குதான் ரஹஸியம் இருக்கிறது எனது படம் பொறித்த நாணயங்களை வெளியிட வேண்டாம் என்று சொல்லி அதைப் பைக்குள் போட்டுக்கொண்டார். உடனே அதை முன் மாதிரியாக அடித்த கம்பெனியும் அந்த மாடலைக் கைவிட்டு ஒரு புறம் சுதந்திர தேவி மறு புறம் அமெரிக்காவின் சின்னமான கழுகு ஆகியவற்றைப் பொறித்து புதிய நாணயங்களை வெளியிட்டனர்.

 

இந்த ஏலத்தில் இன்னொரு சுவையான செய்தியும் உளது. ஏலத்துக்கு வந்த நாணயம் எரிக் நியூமான் (ERIC NEWMAN) என்பவருக்குச் சொந்தமானது; அவர் அமெரிக்காவின் மிகப்பெரிய நாணய சேகரிப்பாளர். அது மட்டுமல்ல எழுத்தாளர்; அத்தோடு அறக்கொடையாளர் (PHILANTHROPHIST) . அவர் 106 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை புரிந்து, சென்ற ஆண்டு இறந்தார். அவரது நாணயங்களை ஒவ்வொன்றாக ஏலம் விட்டு கல்விப் பணிகளுக்கும் நாணய ஆராய்ச்சிக்கும் நன்கொடையாகத் தருகின்றனர். எவ்வளவு பெரிய மனது!

அவரது மகன் ஆண்டி (ANDY)  சொல்கிறார்,

எனது தந்தை நியூமானுக்கு, ஜார்ஜ் வாஷிங்டன் என்றால் மிகவும் பிடிக்கும். அவரைப் போற்றித் துதிபாடுவார். வாஷிங்டன் தனது உருவத்தை நாணயத்தில் பொறிக்ககூடாது என்று சொன்னது அவரது மகத்தான (HUMILITY) பணிவைக் காட்டுகிறது.

 

இதுவரை அறக்கொடைப் பணிகளுக்கு நியூமான் நாணய ஏலம் முதல் 560 லட்சம் பவுன் கிடைத்துள்ளது. இது வள்ளுவனின் குறளை நினைவு படுத்துகிறது:

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்கணவர் – குறள்228)

பொருள்

பொருளைச் சேர்த்துவிட்டு, அதைத் தானும் அனுபவியாமல், பிறருக்கும் கொடுக்காமல் இருக்கிறார்களே; ஐயோ பாவம்! அவர்களுக்கு கொடுப்பதில் உள்ள இன்பம் என்னவென்றே தெரியவில்லையே!

 

–சுபம்-

 

 

மூன்று R கொள்கைகளும் நகரில் பயிரிடுதலும் (Post No.5349)

WRITTEN BY S NAGARAJAN

Date: 22 August 2018

 

Time uploaded in London – 6-57 AM (British Summer Time)

 

Post No. 5349

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

சென்னை வானொலி நிலையம் 21-7-18 முதல் 31-7-18 முடிய தினமும் காலை ஒலி பரப்பிய சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளில் ஏழாவது உரை

 

மூன்று R கொள்கைகளும் நகரில் பயிரிடுதலும்

 

ச.நாகராஜன்

 

ஒவ்வொருவரும் தான் வாழும் பகுதியில் உள்ள சமுதாயத்திற்கு இணங்கவும், தங்களது பொருளாதார வருமானத்திற்கு ஏற்றபடியும் வாழ்க்கை முறையை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். சுற்றுப்புறத்தில் இருக்கும் இயற்கை ஆதார வளங்களைப் பயன்படுத்தி அவற்றைச் சேதப்படுத்தாமல் வாழ வேண்டும் என்ற அக்கறை நாளுக்கு நாள் மேலோங்கி வருகிறது. வரவேற்கத்தக்க நல்ல ஒரு மாறுதல் இது.

நீடித்த வாழ்வைத் தமக்கும் தமது சந்ததியினருக்கும் வழங்கும் இந்த வாழ்க்கைமுறையில் பல வழிமுறைகள் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொள்வது அவசியம்

 

மூன்று ஆர் கொள்கைகள் (3 R’s Principle – Reduce, Reuse, Recycle) எனப்படும் குறை, திருப்பிப் பயன்படுத்து, மறு சுழற்சி செய் என்ற மூன்று கொள்கைகள் பிரதானமானவை.

 

வாழ்கின்ற இடத்தில் சுற்றுப்புறச் சூழ்நிலையை மேம்படுத்த விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த மூன்று ஆர் கொள்கை முக்கியமானது.

 

இயற்கை ஆதாரங்களைப் பயன்படுத்துவதில் நமது தேவைகளை எவ்வளவு குறைந்த பட்ச தேவையோ அதற்குத் தக அமைத்துக் கொள்ள வேண்டும். நமது வாழ்வில் பல பொருள்கள், தயாரிப்புகள் திரும்பப் பயன்படுத்துவதற்கு உகந்தவை. மறுசுழற்சிக்கு உள்ளாக்க முடிபவை. அவற்றைப் பயன்படுத்துவதன் மூலமும் மறுசுழற்சி செய்வதன் மூலமும் சுற்றுப்புறச் சூழல் மேம்படும்.

இன்னொரு அற்புதமான நடைமுறை நகரத்தில் பயிரிடுதல் (Urban Farming) என்பதாகும். மெட்ரோ நகரங்கள் எனப்படும் பெரு நகர்களில் இது இப்போது அமுல்படுத்தப்பட்டு வருகிறது. தங்கள் வீட்டு மாடிகளில் தோட்டத்தை அமைப்பது, சிறு குழுவாகச் சேர்ந்து சமுதாய அளவில் ஒரு பண்ணையை அமைத்துப் பயிரிடுவது ஆகியவை வரவேற்கத்தக்க இன்றைய நவீன வாழ்க்கைமுறையாக மாறி வருகிறது. இரசாயனங்களைப் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படும் காய்கறிகள் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதவையாக அமைகின்றன. இப்படி வீட்டு மாடிகளில் தோட்டங்களை அமைப்பதானது விளைநிலங்களின் தேவையை கிராமப்புறத்தில் குறைக்கவும் செய்கிறது.

 

மும்பை போன்ற பெரு நகரங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பெரிய அளவில் மாடித் தோட்டங்களில் கறிகாய்களைப் பயிரிட்டு சந்தையில் விற்பனை செய்வது சுவையான ஒரு செய்தியாகும். இதனால் உத்வேகம் பெறும் இதர பெரு நகர சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டு ஆர்வலர்கள் தாங்களும் வீட்டுத் தோட்டங்களை அமைக்கத் துவங்கி விட்டனர். இவற்றில் பல அரிய வகை மூலிகைகளும் வளர்க்கப்படுகின்றன. இதில் கிடைத்த வெற்றியால் இவர்கள் இதைப் பற்றிய கருத்தரங்கத்தையும், பயிற்சி முகாமையும் நடத்த ஆரம்பித்துள்ளனர். இதைப் பற்றி நன்கு அறிந்து நமது பகுதியில் நாமும் நகரில் பயிரிடுதல் என்னும் நல்ல திட்டத்தை ஆரம்பிக்கலாமே!

***

EXAMPLE OF HUMILITY; AMERICA’S FIRST PRESIDENT! (Post No.5348)

Compiled by London swaminathan

Date: 21 August 2018

 

Time uploaded in London – 15-09 (British Summer Time)

 

Post No. 5348

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

Following news item appeared in Metro newspaper of London yesterday (201-8-2018).

This emphasizes that George Washington a humble man. Eric Newman was a great charitable man. He has donated all his collections to charity.

It illustrates what the great Tamil poet Tiru Valluvar said in his Tirukkural:

There is a goodness and grace in our humility, but it crowns anew men of fortune—Kural 125

 

The graceless misers who hoard up their wealth and eventually lose it, do not know the pleasure which the wise derive in  giving to the poor what they need Kural 228

Enjoying alone the hoarded wealth , without giving others is worse than begging-  Kural 229

 

A  gold coin with the face of the first president of United States is sold for 1-37 million pounds!

It is a ten dollar coin with the date 1792 with

George Washington’s profile. It was specially made by a company seeking to make the first US currency. But he declined to have his head used so as not to look like European royalty. However he kept the coin as a memento and , a year later, the first coins had Lady Liberty on the front and a bald eagle on the back.

The coin had belonged to prominent American coin collector and author Eric Newman since 1942. Following his death at the age of 106 last year, his son Andy sold the coin through Heritage Auctions.

 

Andy said George Washington was a personal hero to his father. NOT PUTTING HIS IMAGE ON THE COINAGE WAS AN EMBLEMATIC EXAMPLE OF WASHINGTON’S PROFOUND HUMILITY.

More than 56 million pounds worth of coins from Eric Newman’s collection have been sold for charity since 2013.

 

–subham–

 

 

 

Homer 15,693 lines and Valmiki 48,000 lines! (Post No.5347)

 

 

Homer 15,693 lines and Valmiki 48,000 lines! (Post No.5347)

 

Compiled by London swaminathan

Date: 21 August 2018

 

Time uploaded in London – 8-26 AM (British Summer Time)

 

Post No. 5347

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Hindus have two great epics Ramayana and Mahabharata; of these two Ramayana is older and Mahabharata is larger. There is nothing in the world that is not touched by Veda Vyasa, author of Mahabharata. Ramayana is famous for its simplicity and superb story.

A comparison with other great epics of the old world will give an idea of their enormous size.
Mahabharata has 2,20,000 lines
Ramayana has. 48,000 lines
Homer’s Iliad has 15,693 lines
Virgil’s Aeneid has 9868 lines
Iliad + odyssey together contain 30,000 lines

Professor Monier Williams says, “ Ramayana is undoubtedly one of the greatest treasure in Sanskrit literature. The classical purity, clearness and simplicity of  its style, the exquisite touches of true poetic feeing with which it abounds, its graphic descriptions of heroic incidents, nature’s grandest scenes, the deep acquaintance it displays with the conflicting workings and most refined emotions of the human heart, all entitle it to rank among the most beautiful compositions that appeared at any period or any country”.
“There are many graphical passages in the Ramayana and Mahabharata, which for beauty of description cannot be surpassed by anything in Homer,… that the the diction f Indian epics is more polished, regular and cultivated, and the language altogether in a more advanced stage of development than that of Homer”.

 

“The battle fields of the Ramayana and Mahabharata are not made barbarous by wanton cruelties, and the description of Ayodhya and Lanka imply far greater luxury refinement than those of Sparta and Troy. Ramayana and Mahabharata rise above the Homeric poems also in the fact that a deep religious meaning appears to underlie all the narrative, and that the wildest allegory may be intended to conceal a sublime moral, symbolizing conflict between good and evil, teaching hopelessness of victory in so terrible a contest with purity of souls, self-abnegation and the subjugation of passions.

Did Homer copy Ramayana?

Some critics hold that the Ramayana is the original of Iliad that the latter is only an adaptation of the former to the local circumstances of Greece; that Homer’s description of the Trojan war is merely a mythological account of the invasion of Lanka by Ram Chandra. The main plot, of course, is the same. Troy stands for Lanka (Tabropane), Sparta for Ayodhya, Menelaus for Rama, Paris for Ravana, Hector for Indrajit and Vibhishan; Helen for Sita, Agamemnon for Sugriva, Patroclus for Lakshmana, Nestor for Jambavan. Achilles is a mixture of Arjuna, Bhima and Lakshmana.

 

Anterior to Homer, Greek literature has no existence, even no name, and it is difficult to believe that, without any previous cultivation whatever, some of the highest and the noblest work in the whole range of literature should come into existence. The English literature did not begin with Milton, nor the Roman with Virgil; nor does the Sanskrit with Valmiki or Vyasa, as the Greek does with Homer.

 

M.Hippolyte Fauch, in the French translation of the Ramayana, says that, “Ramayana was composed before the Homeric poems’ and that Homer took his ideas from it.”

 

Schlegel calls ‘Ramayana the noblest of epics’.

Sir William Jones says,
“The Ramayana is an epic poem on the story of Rama, which, in unity of action, magnificence of imagery and elegance of style far surpasses the learned and elaborate work of Nonnus” .

 

(Nonnus was an Egyptian poet of Hellenized Egypt of fifth century CE. His epic on Dionysus contain 20,426 lines in Greek language)
After giving the argument of the Ramayana, with his usual moderation, Professor Heeren says, “Such in few words, is the chief subject of Ramayana, while the development and method of handling this simple argument is so remarkably rich and copious as to suffer little from a comparison in this respect with the most admired productions of the epic muse.”

 

Professor Dowden says, “Juliet is but a passionate girl before this perfect woman meaning Brutus’ Portia, but what becomes of Portia herself before this heavenly woman, this ethereal being, this celestial Sita?”

        

Stamps on Homer and Virgil

Source Book:- Is Hindu A Superior Reality, Krishan Lal Jain, Akshat Publications, 1989

–subham–

 

பாபர் ஆட்சியில் பசுவின் கால் சடங்கு!! (Post No.5346)

WRITTEN by London swaminathan

Date: 21 August 2018

 

Time uploaded in London – 6-54 AM (British Summer Time)

 

Post No. 5346

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

மொகலாய மன்னர்களில் பாபர் (1483-1530) முதலாமவர். அவர் காலத்தில் துருக்கி இனத்தவர்கள் பழைய கால பழக்க வழக்ககங்களை அப்படியே பின்பற்றி வந்தனர். அவை எல்லாம் இஸ்லாமிய மதம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்னமே இருந்தவை. பாபர், முஸ்லீமாக இருந்த போதும் அந்த வழக்கங்களைப் பின்பற்றியது அவர் பற்றிய பாபர் நாமா புஸ்தகத்தில் உள்ளது.

 

பாபர் தனது சுயசரிதையை அவரது சாகதாய் மொழியில் எழுதினார். அவர்  தைமூரின் கொள்ளுப்பேரன். அக்பரின் தாத்தா. இதனால் அக்பர் காலத்தில் பாபர் நாமாவை ஓவியமாக வரைந்து தர அக்பர் ஆணையிட்டார். அவை இப்பொழுது டில்லியில் தேசீய மியூஸியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் இந்துக்களின் புனித தெய்வமான பசுவைப் பற்றிய ஒரு அதிசயப் படம் உள்ளது. துருக்கி-இராக் பகுதிகள், வேத கால அரசர்களின் கீழ் இருந்ததால் இந்த வழக்கம் வேத கால வழக்கமாகவும் இருக்கலாம். கி.மு 1400 வாக்கில் துருக்கி வரை இந்துக்களின் ஆட்சி பரவி இருந்தது.

 

 

பாபர் நாமாவில் நாலாவது படத்திலுள்ள காட்சி இதோ:

 

“மன்னர் குதிரையிலிருந்து இறங்கினார். அவருக்கு முன்னால் ஒன்பது அலங்காரச் சின்னங்கள் இருந்தன. ஒரு மொகலாய வீரன் பசுவின் காலில் ஒரு வெள்ளைத் துணியைக் கட்டி அதன் மறு முனையை தன் கையில் பிடித்திருந்தான். மேலும் மூன்று வெள்ளைத் துணிகள் ஒன்பது அலங்காரக் கம்பங்களில் மூன்றில் கட்டப்பட்டன. அவைகளில் ஒரு வெள்ளைத் துணியின் மீது பாபர் நின்றார். அப்பொழுது பசுவில் கால் துணியைப் பிடித்திருந்தவன், ஏதோ சில உச்சாடனங்களை அவனது பாஷையில் மொழிந்தான். அப்பொழுது அவன் அந்த ஒன்பது அலங்காரக் கம்பங்களைப் பார்த்து ஏதோ முத்திரைகளைக் காட்டினான். மன்னனும் மற்ற பெரியோர்களும் குதிரையின் பாலை அந்தச் சின்னங்கள் மீது ப்ரோக்ஷனம் செய்தனர் (தெளித்தனர்). உடனே பின்னால் நின்ற படை வீரர்கள் போர்க்கால வெற்றி முழக்கமிட்டனர். இதை அவர்கள் மூன்று முறை செய்தார்கள். அப்பொழுது வாத்தியக் காரர்கள் முரசுகளை அடித்து எக்காளமிட்டனர். இந்த வாத்ய கோஷத்துக்குப் பின்னர் அவர்கள் மீண்டும் கோஷமிட்டவாறே அந்தச் சின்னங்களைச் சுற்றி ஓடி வந்தார்கள்.”

இந்த சடங்கு புதிய மன்னர்களை வரவேற்று அங்கீகாரம் அளிக்கும் சடங்கு ஆகும்.

இந்த வழக்கம் செங்கிஸ்கான் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டதற்கான சான்று உளது.

 

எவ்வாறு கிறிஸ்தவ மதம் பரவிய நாடுகளில் எல்லாம் பழங்கால வழக்கங்கள் அந்த மதத்தில் இணக்கப்பட்டனவோ அவ்வாறே இன்றும் இஸ்லாமிய நாடுகளில் குறிப்பாக வேத கால மன்னர் ஆட்சி நடந்த துருக்கி-இராக்-ஈரான் பகுதிகளில் உள்ளன. முஸ்லீம் மதத் தலைவர்கள் கண்டிப்பதனால் மறைவாக அவைகளைச் செய்கின்றனர். அவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன.

கிருஷ்ணனின் யாதவ குலத்தில் 12-ஆவது மன்னனான கஜன் என்ற மன்னன் ஸ்தாபித்த நகர்தான் ஆப்கனிஸ்தானத்திலுள்ள கஜினி. அங்கிருந்து முகமது என்ற மன்னன் குஜராத் மீது 17 முறை படையெடுத்து சோமநாத சிவலிங்கத்தை உடைத்து அதன் கீழேயிருந்த தங்கம் வைரம் எல்லாவற்றையும் கொள்ளை அடித்ததை நாம் அறிவோம். அந்த கஜினி நகரம் யாதவ குல மன்னர்களின் கீழ் 101 தலைமுறைக்கு மேல் இருந்தது. அதன் 74ஆவது மன்னன் கஜ சிங். அவனது காலத்தில் அவர்கள் கஜினியிலிருந்து வெளியேற்றப்பட்டு ஹிமாசலப் பிரதேசத்திலுள்ள ஜ்வாலாமுகிக்கு வந்தனர். அதில் ஒருவன் சாலிவாஹனன் என்ற மன்னன். அவன் சாலிவாஹனபுரத்தை ஸ்தாபித்தான். அதன் பெயர் சாலாபுரம் என்றும் சியால் கோட் என்றும் மருவின; இப்பொழுது சால்கோட் (டை) பாகிஸ்தானில் உள்ளது. சாலிவாஹனனனுக்கு பத்து மகன்கள். அவர்களில் ஒருவன் பட்டி.  அந்த பட்டி என்போன் மீண்டும் கஜினியை வென்று 101 தலைமுறை ஆட்சியைக் கொண்டாட ஹரோத் என்னுமிடத்தில் ஒரு கோட்டையைக் கட்டினான்.

 

எவ்வாறு புத்த மதத்தினர், இலங்கையிலுள்ள ராமாயண சின்னங்களை மறைத்தனரோ அவ்வாறே முஸ்லீம்கள் ஆட்சி ஏற்பட்ட ஈரான் முதல்- இந்தோநேஷியா வரை இந்துச் சின்னங்கள் மறைக்கப்பட்டுள்ளன. அவை அந்த நாடுகளின் மியூஸியங்களில் இன்றும் உள. அவைகளை அறவே ஒழித்தால் அந்த நாடுகளின் வரலாறு எல்லாம் முகமது நபிக்குப் பின்னர் என்று ஆகிவிடுமே என்று அஞ்சி, இன்னும் மியூஸியங்களில் பழம்பொருட்களை வைத்துள்ளனர். பாமியன் புத்தர் சிலைகளையும் இராக்கில் உள்ள புனிதச் சின்னங்களையும் சமீப காலங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகள் அழித்ததை நாம் பத்திரிக்கைகளில் படித்தோம். எஞ்சியுள்ளவைகளை விரைவில் புகைப்படம் எடுத்து அவற்றின் வரலாற்றை எழுதுவது இந்துக்களின் கடமை.

 

-சுபம்–

‘பாரதி கண்ட சித்தர்கள்’– பாரதியார் நூல்கள் – 56 (Post No.5345)

WRITTEN BY S NAGARAJAN

Date: 21 August 2018

 

Time uploaded in London – 4-56 AM (British Summer Time)

 

Post No. 5345

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 56

சி.எஸ்.முருகேசனின் ‘பாரதி கண்ட சித்தர்கள்

 

ச.நாகராஜன்

 

புதுச்சேரி வாழ் பாரதி அன்பர் சி.எஸ். முருகேசன் எழுதியுள்ளபாரதி கண்ட சித்தர்கள் மகாகவி தன் வாழ்வில் கண்ட சித்தர்களை அறிமுகம் செய்யும் அழகிய நூல்.

190 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் முதல் பதிப்பு 2002ஆம் ஆண்டில் குறிஞ்சி, சென்னை-49இன் வெளியீடாக வந்துள்ளது.

     பாரதி சித்தர், ஸ்ரீ குரு சித்தானந்த சுவாமிகள், கோவிந்த ஞானி, யாழ்ப்பாணத்துச் சாமியார் ஸ்ரீ கதிர்வேலு சுவாமிகள்,குள்ளச்சாமி சித்தர், கடற்கரையாண்டி, மௌனச் சாமியார், மிளகாய்ப் பழச் சாமியார், மகான் அரவிந்தர், ஸ்ரீ அன்னை ஆகிய பத்து அத்தியாயங்களை இந்த நூல் கொண்டுள்ளது.

புதுச்சேரியில் பல இடங்களுக்கும் சென்று பலரையும் சந்தித்து பாரதி கண்ட சித்தர்களின் சுவை மிகு வரலாற்றை ஆசிரியர் நூலில் நயம்படத்தொகுத்துத் தருகிறார்.

பாரதியை, தேசியக் கவிஞன் பாரதியாக, கதாசிரியன் பாரதியாக, கட்டுரையாளன் பாரதியாக, அரசியல்வாதி பாரதியாக, ஆன்மீகவாதி பாரதியாக, சீர்திருத்த செம்மல் பாரதியாக,பெண் விடுதலை கோரும் புரட்சியாளராக, பத்திரிகையாளராகப் பல பேர் கண்டாலும் சித்தன் பாரதியாக காணவில்லை என்னும் குறையை இந்த நூல் போக்குகிறது.

‘எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா,

யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டிலே’                  என்ற வரிகள் மூலம் தன்னை சித்தனாக அறிவித்துக் கொள்ளும் பாரதியார் பல சித்தர்களைக் கண்டு பல சுவையான அனுபவங்களையும் உபதேசங்களையும் பெற்றுள்ளார்.

பாரதியாரின் ஆத்ம பலத்தை விளக்கும் வகையில் அவர் வாழ்வில் நடந்த சுவையான மூன்று சம்பவங்களை விவரமாக நூலாசிரியர் முதல் அத்தியாயத்தில் தருகிறார்.

அதில் ஒரு பகுதி:

“விடிந்தால் பொங்கல் பண்டிகை. பாரதியின் கையிலோ பைசா கூட இல்லை. பண்டிகை நாளும் அதுவுமாக வீடு துடைத்துக்  கொண்டிருந்தது. பாரதியின் மனைவியான செல்லம்மாளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

 

கவிதைகளில் மூழ்கியிருந்த பாரதியாரிடம் தெரிவித்ததற்கு ‘எல்லாம் பராசக்தி பார்த்துக்குவாள்’ என்று சொல்லிவிட்டார்.

என்ன செய்வது. விதிப்படி ஆகட்டும் என்று அந்த அம்மாளும் சோர்வாக உட்கார்ந்து விட்டாள்.

அன்று மாலை புதுச்சேரி பிரபல ஜவுளிக் கடையின் முதலாளியான முதலியார் அனுப்பி வைத்ததாக பாரதியாருக்கு வேஷ்டி, துண்டு, குழந்தைகளுக்கான பாவாடை, சட்டை, அவர் மனைவிக்கான புடவை முதலியவற்றை ஒருவன் கொண்டு வந்து கொடுத்தான்,

இத்தனைக்கும் அந்த முதலியார் அவருக்குச் சாதாரண அறிமுகந்தான். நான் இப்படியொன்றும் கேட்கவில்லையேப்பா? என்று பாரதி சொல்லிப் பார்த்தார். ‘இது மாதிரி பெரியவங்களுக்கு எங்கள் முதலாளி அனுப்பி வைக்கிறது வழக்கமுங்க’ என்று சொல்லிக் கொண்டே போய் விட்டான்.

மற்றொரு கடைக்காரன் (கடற்கரை சிநேகம்) வெற்றிலை, பாக்கு, பழங்கள், இனிப்பு யாவும் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனான்.

இவைகளைப் பார்த்து வீட்டிலுள்ளோர் அதிசயப்பட்டுக் கொண்டு இருந்தனர். பாரதியாருக்கு வேறொரு கவலை வந்து விட்டது. பண்டிகை முடிந்ததும் பால் பொங்கிற்றா? என்று கேட்டு வருபவர்களை எப்படி வெறுங்கையுடன் அனுப்புவது? யோசனையில் அவர் உழன்று கொண்டிருந்தார்.

 

அன்றிரவு ஊரே உறங்கிக் கொண்டிருந்த வேளையில் பாரதியார்  உறக்கமில்லாமல் தவித்தார். நடுநிசி. யாரோ கதவைத் தட்டினார்கள். பாரதியார் தான் சென்று கதவைத் திறந்தார். அவருக்கு அறிமுகமில்லாத ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

“இப்பொழுது தான் சொப்பனத்தில் பராசக்தி வந்து, என் கையிலிருக்கும் சில்லறையை உங்களிடம் கொடுத்து வரச் சொன்னாள்’ என்று சொல்லி ஐந்நூறு ரூபாய் சில்லறைப் பொட்டணத்தைப் பாரதியாரின் பாதங்களில் வைத்து நமஸ்கரித்தெழுந்தார்.

இதைக் கண்டு பாரதியாருக்குப் புல்லரித்துப் போயிற்று. அந்த ஆளைப் பற்றி விசாரித்ததற்கு ஏதோ முத்தியால் பேட்டை நெசவாளி என்று சொல்லிக் கொண்டு போய் விட்டார்.

அதன் பிறகு பாரதியார் தூக்கம் கலைந்து விளக்கைப் பெரிதாக்கி வைத்துக் கொண்டு பராசக்தி மேல் பாட்டு எழுத உட்கார்ந்து விட்டார். மறு நாள் பொங்கல் பண்டிகை அவர் வீட்டில் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது.’ (இந்த சம்பவத்தை திரு சம்பந்தம் எழுதிய ‘புதுவையில் பாரதி’ – பக்கம் 181-182 இலிருந்து எடுத்துத் தருகிறார் நூலாசிரியர்)

இதே போல சித்தபிரமை பிடித்த புதுச்சேரி தமிழ் வித்வான் பங்காரு பத்தரின் மகனைச் சரியாக்கிய சம்பவமும் நூலில் விவரமாகத் தரப்பட்டுள்ளது.

ஸ்ரீ குரு சித்தானந்த சுவாமிகள் வரலாறு பலரும் அறியாத ஒன்று. இவரைப் பற்றி பாரதியார் விளக்கமாக எழுதியுள்ளார். ஆனால் அவரது வாழ்க்கை வரலாறைச் சுருக்கமாக நூலாசிரியர் பல சம்பவங்களுடன் விவரிக்கிறார்.

1837ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுவாமிகள் ஜீவ சமாதி எய்தினார்.

இன்றும் அவரது குருபூசை ஆண்டு தோறும் வைகாசி மாதம் 15ஆம் தேதி அவரது சமாதியில்- சித்தர் கோவிலில் – நடை பெறுகிறது.

கோவிந்த ஞானி என்ற அத்தியாயம் பாரதியார் பாடிய

‘வன்மை திகழ் கோவிந்த ஞானி – பார்மேல்

யாங்கற்ற கல்வியெலாம் பலிக்கச் செய்தான்’ என்ற வரிகளில் உள்ள கோவிந்த சித்தரைப் பற்றி விளக்குகிறது.

ஒருநாள் கருவடிக்குப்பத்தில் தனிமையில் பாரதியார் தனது தந்தையைப் பற்றிச் சிந்தனை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த கோவிந்தஞானி சித்தர் அங்கிருந்த குளத்து நீரில் அவரது தந்தையாரின் திருமுகத்தைக் காண்பித்தார். பின்னர் அவரது தாயாரின் வடிவத்தையும் பாரதியார் கண்டார்.

இதை அவர், “முனி ஒருநாள் இறந்த எந்தை தன்னுருவங் காட்டினான், பின்னே யென்னைத் தரணிமிசைப் பெற்றவளின் வடிவமுற்றான்” என்ற வரிகளால் குறிப்பிடுகிறார்.

 

யாழ்ப்பாணத்துச் சாமியார் ஸ்ரீ கதிர்வேலு சுவாமிகளைப் பற்றி நான்காம் அத்தியாயம் விவரிக்கிறது.

மாங்கொட்டைச் சாமி எனப்படும் குள்ளச்சாமி சித்தரின் தொடர்பு பாரதியாருக்கு அவர் புதுச்சேரியில் தங்கியிருந்த இறுதி நாட்களில் கிடைத்தது. ஸ்ரீ அரவிந்தரின் சீடர்கள் புதுச்சேரியில் அவருடன் கடற்கரையில் கூடியிருந்த ஒரு சமயத்தில் குள்ளச்சாமி பைத்தியத்துடன் உங்கள் நண்பர் பாரதியார் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று ஒரு சீடர் கூறிய போது அரவிந்தர், அவரை சாதாரண மானுடராக எண்ணாதீர்கள், அவர் ஒரு மகான் என்று கூறினார்.

அந்த சித்தர் பாரதியாருக்கு செய்த உபதேசம் பற்றிய சம்பவத்தை குள்ளச்சாமி சித்தர் என்ற அத்தியாயம் தருகிறது.

இன்னும் மௌனச் சாமியார் பற்றியும் பெண் சாமியாரான மிளகாய்ப் பழச் சாமியாரைப் பற்றியும் நூலில் காண்கிறோம்.

மகான் அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னை ஆகிய அத்தியாயங்களில் சுவை மிகு தகவல்களைப் பெறுகிறோம்.

பாரதியாரின் கவிதா ஆவேசத்திற்கு ஸ்ரீ அரவிந்தரின் நட்பும் ஒரு முக்கிய காரணம். ரிக் வேத சூக்தங்களில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டவற்றை அவரிடமிருந்து பாரதியார் கற்றார். பாரதியாரிடமிருந்து அரவிந்தர் தமிழ் மொழியைக் கற்றார்.

இப்படி பல தகவல்களை நூல் முழுவதும் காண முடிகிறது.

பாரதியாரைச் சித்தர் என்ற நோக்கில் பார்க்கும் இந்த நூல் பாரதி இயலில் ஒரு முக்கிய நூல். ஆய்வு செய்து இதை எழுதியுள்ள நூலாசிரியர் பாராட்டுக்குரியவர்.

பாரதி அன்பர்கள் இதைத் தங்கள் பாரதி இயல் நூலகத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

***

பெரியது கேட்கின்….. ஏனிட் பெரிது, அதனினும் பெரிது இலியட், அதனினும் பெரிது… (5344)

WRITTEN by London swaminathan

Date: 20 August 2018

 

Time uploaded in London – 20-23 (British Summer Time)

 

Post No. 5344

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

பெரியது கேட்கின்….. ஏனிட் பெரிது, அதனினும் பெரிது இலியட், அதனினும்  பெரிது… (5344)

 

இன்று அவ்வையாரிடம் யாராவது அவ்வையே இதிஹாசங்களில் எது பெரிதோ? என்று கேட்டால்,

ஐயனே உலகில் பழமையானதும் பெரிதுமான நூல் ரிக் வேதம்; அதில் 40,000 வரிகள் உள்ளன.

ஆனால் நீவீர் இதிஹாசம் பற்றிக் கேட்டதால் அது பற்றி மட்டும் செப்புவேன் கேளீர்:

Image of Virgil

பெரிது பெரிது வர்ஜிலின் ஏனிட் (Aeneid of Virgil) ,

அதனினும் பெரிது ஹோமரின் இலியட்

(Iliad of Homer)அதனினும் பெரிது வால்மீகியின் ராமாயணம்;

அதனினும் பெரிது வியாஸரின் மஹாபாரதம்

 

அதனினும் பெரிது எங்கும் இல்லை, இப்போதும் இல்லை!

 

தாங்க்ஸ் (Thanks), அவ்வை என்று சொல்லி விடைபெற்றால் பல உண்மைகள் புலப்படும்.

 

வர்ஜில் என்பவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ரோமானிய புலவர். அவர் எழுதிய காவியம் ஏனிட். அது லத்தீன் மொழியில் உள்ளது அதிலுள்ள வரிகள்- 9868

 

இதற்கு முன், கி.மு 800-ஐ ஒட்டி கிரேக்க மொழியில் ஹோமர் இரண்டு இதிஹாசங்களை இயற்றினார். அவற்றில் இலியட்டின் வரிகள் 15,693. இத்தோடு ஆடிஸி (Odyssey)  என்ற அவரது காவியத்தையும் சேர்த்தால் சுமார் 30,000 வரிகள்தான் வரும். அதற்கு முன் கிரேக்க மொழியில் எந்தப் படைப்பும் இல்லை. ஆனால் இலியட் காவியத்துக்கெல்லாம் முன் மாதிரியாக விளங்கிய வால்மீகி ராமாயணத்தில் 48,000 வரிகள். இதை விட மஹாபாரதம் பெரிது. 2,20,000 வரிகள். அதில் வியாஸர் சொல்லாத, பேசாத விஷயம் எதுவும் இல்லாததால், ‘வியாச்சோசிஷ்டம் ஜகத் ஸர்வம்’ (வியாஸரின் எச்சில்தான் உலகம் முழுதும்) என்பர்.

 

இந்துக்களின் கணக்குப்படி வால்மீகி ராமாயணமே முதல் காவியம். அதில் புத்த மதம் பற்றி ஒரு குறிப்பு இருப்பதாகச் சொல்லி அதை பின்னுக்குத் தள்ளுவர் வெளிநாட்டு ‘அறிஞர்கள்’.

 

மஹாபாரதத்தில் புத்த மதம், சமண மதம் பற்றிய குறிப்புகள் இல்லாமையால் அதை முன் வைப்பர். ஆனால் உண்மையில் எளிமையான காவியமான ராமாயணமே முதல் காவியம். இந்துக்கள் பயன்படுத்தும் ஸ்லோகம் என்பதே வால்மீகியின் சோகத்திலிருந்து வந்ததாக கதையும் உண்டு.

மஹா    பாரதத்துக்குப் பெருமை சேர்க்கும் இரண்டு விஷயங்கள்-

அதிலுள்ள பகவத் கீதை

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

 

ராமாயணத்தைப் பார்த்து, அல்லது அதைக் கேட்டு, கிரேக்க நாட்டுக்கு ஏற்ப ஹோமர் ஒரு இதிஹாசம் எழுதினார் என்று சில இலக்கிய விமரிசகர்கள் பகர்வர்:-

ட் ரோ ஜன் யுத்தம்= ராம ராவண யுத்தம்

ட் ராய் நகரம் = லங்கா

ஸ்பார்டா = அயோத்யா

மெனெலஸ் = ராமா

பாரிஸ்= ராவணா

ஹெக்டர் = இந்திரஜித் அல்லது விபீஷணன்

ஹெலன் = சீதா

அகமெம்னன்= சுக்ரீவா

பட் ரோ ஸியஸ்=  லக்ஷ்மணன்

நெஸ்டர்= ஜாம்பவான்

அகில்லிஸ் = அர்ஜுனா+,,,,,,,,மா+ லக்ஷ்மணா

என்று ஒப்பிடுவர்.

இது ஒருவேளை மிகைப்படுத்தப்பட்டது என்று கருதுவோரும் ஒரு விஷயத்தை மறக்க மாட்டார்கள் லத்தீன், கிரேக்க மொழிகளில் காவியங்களோ இதிஹாசங்களோ தோன்றும் முன் இலக்கியம் கிடையாது. ஸம்ஸ்க்ருதத்திலோ இதிஹாஸத்துக்கும் முன்னதாக பிரம்மாண்ட வேத கால இலக்கியம் உண்டு.

ராமாயண, மஹாபாரத இதிஹஸங்களைப் புகழாத இந்தியவியல் (Indologists) அறிஞர் எவருமிலர்.

 

–சுபம்–

Mogul king Babar and Cow Goddess (Post No.5343)

Compiled by London swaminathan

Date: 20 August 2018

 

Time uploaded in London – 9-21 AM (British Summer Time)

 

Post No. 5343

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Mogul kings followed strange customs. Though they were Muslims they believed in local customs. Akbar did worship Sun God like Hindus. But not many people knew what Babar did.

Picture shows Babur standing on a strip of white cloth. In the foreground is an old mogul soldier holding a piece of cloth which he has tied to the leg of a cow. In the background trumpets are being sounded and drums beaten.

 

Turks worshiped goddess Shakti before waging a war. Akbar got Babar Nama painted during his reign. Some of the paintings were printed by the National Museum, New Delhi under the title, ‘Paintings of the Babar Nama’, and the plate no.IV has a note which runs as follows,

The moguls observed rules and ceremonies which were laid long ago by Chengiz Khan. For each clan, a place was fixed in battle array. One of the ceremonies was acclamation of nine standard s which is described by Babar thus,
“The standards were acclaimed in mogul fashion. The khan dismounted and nine standard s were placed in front of him. A mogul tied a long strip of white cloth to the thigh bone of a cow and the other end in his hand. Three other long strip of white cloths were tied to the staves of three of the nine standard s, just below the yak tails and their other ends brought for the khan to stand on one end for me and Sl. Muh. Khanika to stand each one of the two others. The mogul who had hold of the strip of cloth fastened to the cow’s leg then said something in Mughal while he looked at the standard s and made signs towards them. The khan and those present sprinkled Quntiz ( fermented mares milk) in the direction of the standards , hautbois and drums were sounded towards them, the army flung the war -cry out three times towards them, mounted and cried it again and rode at the gallop around them.

In the picture one can see two domes with Trisula on their top, which must have been a temple of goddess Shakti. This is the remnant of Bharatiya Yadhuvamsi rulers.

The whole ritual is un- Islamic and was prevalent among Chugatai Turks till Babar s period.
There is a belief that Maharajah Gaja was twelfth from Lord Krishna, the Yadava ruler, and he founded the city of Gazni after his name following the defeat of his enemies. He defeated the forces of Ruma and Khurasan ( Turkey and Iran ) . He ruled from Mathura to Kabul and Lahore was also under his rule. From Maharajah Gaja to Gaja Singh III , for 74 generations, they ruled Gazni under different vicissitudes.

Having been dislodged from Gazni, one of their descendents Shalivahana sent his family to Jvalamukhi in Himachal Pradesh and founded Shalivahanpur or Salpur, identified with modern Sialkot . He had ten sons and one of them Bhatti recaptured Gazni and constructed a fort at Haroth to celebrate 101 generations of their rule in the region. All these are recorded in their family history.

Even if we discard all the exaggerations we can see some glorious history of the Yadava rulers from the time of Krishna’s predecessors.

 

Source Book: Glimpses of Bharatiya History, R S Kushwaha


–Subham–

 

ரிக்வேத ஆராய்ச்சியில் கிடைத்த ஒன்பது விஷயங்கள்! (Post No.5342)

Research Article by London swaminathan

Date: 20 August 2018

 

Time uploaded in London – 7-44 AM (British Summer Time)

 

Post No. 5342

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

கடந்த 150 ஆண்டுகளாக வேதங்கள் பற்றி வெளியான புஸ்தகங்கள் எண்ணிலடங்கா. அவை பெரும்பாலும் ஆங்கிலம், ஹிந்தி மொழியிலோ ஜெர்மானிய பிரெஞ்சு மொழிகளிலோ இருக்கின்றன. கடல் போலப் பெருகிக் கிடக்கின்றன. தமிழில் இத்தகைய ஆராய்ச்சிப் புத்தகங்கள் மிகக் குறைவு; வேத மந்திரங்களின் மொழி பெயர்ப்பு மட்டுமே ஆர். ஜம்புநாதன் முதலியோரால் வெளியிடப் பட்டுள்ளன. ஆனால் அதை ஆராயாமல் அப்படியே மந்திர மொழி பெயர்ப்பையே கொடுத்துள்ளனர். நான் இது வரை படித்த புத்தகங்களில் கண்ட ஒன்பது சுவையான செய்திகளைத் தருகிறேன்.

 

1.மன்னர்களின் தம்பிமார்களில் ஓரிருவர் பிராஹ்மண ரிஷிகளாக மாறி , ரிஷி வம்ஸத்தை ஸ்தாபித்தனர் என்று

புருஷோத்தம் லால் பார்கவா எழுதிய நூலில் சொல்கிறார்:

!

தமிழிலும் இதற்கு உதாரணம் உண்டு; சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோ, துறவியாக மாறி, நமக்கு சிலப்பதிகாரத்தைத் தந்துள்ளார்.

2.அடுத்த சுவையான செய்தி ஈரானிலும் சுமேரியாவிலும் பல வேதகாலப் பெயர்கள் காணப்படுவதாகும். ஸுமுகன் என்ற ஒரு கெட்ட மன்னனின் பெயர் இரண்டே இடங்களில்தான் காணப்படுகின்றது. தீய செயல்களினால் அரசாட்சியை இழந்த மன்னர் பட்டியலில் சுமுகன் என்றொரு மன்னனின் பெயரைச் சொல்கிறார் மநு. இது விநாயகர் முதலிய பல கடவுள்களைக் குறிப்பிடும் நாமம். ஆனால் புராதன இந்தியாவில் இப்படி ஒரு மன்னன் பெயர் கிடையாது! சுமேரியாவில் மட்டும் இந்தப் பெயர் காணப்படுகிறது!

 

பழங்காலத்தில் பெண் கொலை புரிந்த நன்னன் என்ற தமிழ் மன்னனைப் போற்றிப்பாட எல்லா சங்கப் புலவர்களும் மறுத்துவிட்டனர். அது போல சுமுகனையும் கிடப்பில் போட்டுவிட்டனர் ஸம்ஸ்க்ருதப் புலவர்கள்.

 

3.மற்றொரு மர்மமான பெயர் நாபாகநேதிஷ்டா. இந்தப் பெயரே ஒரு விநோதமான பெயர். ஸம்ஸ்க்ருத அர்த்தப்படி ‘மநுவுக்கு அடுத்தவன்’ என்பது பொருள். இவன் ஒரு மநுவின் புதல்வன். முறை தவறிய செயல்களில் ஈடுபட்டதால் இவனுக்கு மநுவும் நாபாகனின் சஹோதர்களும் சொத்து விஷயத்தில் பங்கு தர மறுத்து விட்டார்களாம். அந்தக் காலத்திலேயே இப்படி ஒரு குடும்பத் தகராறு!! இந்தப் பெயர் சுமேரிய,அஸீரியப் பெயர்களுடன் தொடர்புடையது. இவனைப் பற்றிய குறிப்புகள் ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் வருகிறது.

அக்நேதன் (Akhenaten of Egypt) போன்று நாபாகநேதிஷ்டானும் சமயப் புரட்சி செய்திருக்கலாம். ஏனெனில் இது போல எகிப்தில் அக்நதனும் (ஏக நாதன்) சுமேரியாவில் ஒரு மன்னனும் புரட்சி செய்தவுடன் அவர்கள் பதவி பறிபோனது அது போல நாபாக நேதிஷ்டன், சுமுகன் போன்றோரும் சமயப் புரட்சி செய்தனரா என்று ஆராய வேண்டும்.

 

4.ரிக் வேதத்தின் எட்டாவது மண்டலம் புதிர்கள் நிறைந்தது. இதில் வரும் பலபூதன் என்ற மன்னன் பிராஹ்மணர்களுக்கு பசுக்களோடு ஒட்டகங்களையும் தானம் செய்தான். இவன் ஈரான் பகுதியைச் சேர்ந்தவன். ரிக்வேதப் பாடல்கள் ஈரான், ஆப்கனிஸ்தான், துருக்கி, தற்போதைய பாகிஸ்தான், இந்தியாவில் விதர்ப தேசம்- கங்கைச் சம்வெளி, மங்கோலிய வம்ஸத்தினர் வசிக்கும் திபெத், சீனா வரையுள்ள விஷயங்களை விவாதிக்கிறது. இது மிகப்பெரிய பகுதி. இவ்வளவு பெரிய பகுதியை உலகில் வேறு எந்தப் பழைய நூலும் பிரஸ்தாபிக்கவில்லை!!!

 

  1. வேதத்தில் வரும் ‘தாஸ’, ‘அநாஸ’ ஆகிய சொற்களுக்கு வெளிநாட்டினர் தவறான பொருள் கொடுத்து, ஆரிய-திராவிடர் என்று பிரித்துப் பொய் சொன்னதால், சிந்துவெளி எழுத்தைப் படிக்க முடியவில்லை. தாசர் என்றால் அடிமை போல வேலை செய்வோர். இது கிரேக்க சாம்ராஜ்யத்தில் உண்டு. பெரிய புராணத்தில் சுந்தர மூர்த்தி நாயனார் சரிதத்தில் உண்டு. இதற்கும் ஆரிய- திராவிட என்ற பிரசாரத்துக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை. இதே போல ‘அநாஸ்’ என்றால் மூக்கு அற்றவர் என்று பொருள். ஜப்பானியர், சீனர் போன்ற மங்கோலிய இன மக்களுக்கு மூக்கு சப்பையாக இருக்கும்; மூக்கு இருப்பதாகவே தோன்றாது ஆகையல் இதை அநாஸ ( மூக்கு அற்றவர்) என்று வேதங்கள் சொல்லும். ஒரு பக்கம் திராவிடர்களுக்கு போண்டா மூக்கு என்று எழுதிய வெள்ளைக்கார்கள் ‘மூக்கற்ற’ என்ற சொல்லையும் திராவிடர் மேல் ஏற்றிவிட்டனர்.

 

  1. மற்றொரு அதிசயம் துருக்கி நாட்டில் கி.மு 1380-ஆம் ஆண்டு மிட்டனி நாகரீக(Mitanni Civilization) களிமன் கல்வெட்டில் வேத காலப் பெயர்கள் சம்ஸ்க்ருதத்தில் இருப்பதாகும்! வேத கால மன்னர்களின் பெயரில் உள்ள ‘பிரதர்தன’ என்ற மன்னர் பெயர் மிட்டனி மன்னர்களின் பட்டியலில் உளது. நாம் தினமும் படிக்கும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும் ரிக் வேதத்திலும் உளது.

 

7.ரிக் வேதத்தில் ‘சிந்துத்வீப’ என்பது ஒரு ரிஷி/மன்னரின் பெயர். இந்த மாதிரி பெயர் மஹா பாரதத்திலும் வருகிறது. சிந்து தேச ராஜா ஜெயத்ரதன் பற்றி மஹாபாரதத்திலும் காணலாம். ஆக, வேத காலத்தில் இருந்த மன்னர்களின் பெயர்களை பிற்காலத்தவரும் பயன்படுத்தினர். இது ரிக்வேத- சிந்து சமவெளி நாகரீகத்தை உறுதிப் படுத்திகிறது.

8.ரிக் வேதத்தில் பல்வேறு வம்ஸாவளியைச் சேர்ந்த 160 மன்னர்களின் பெயர்கள் உளது. எனது ஆங்கிலக் கட்டுரையில் அனைவர் பெயரும் உள. இவர்களுக்கு வெள்ளைக்காரர் போல 20 ஆட்சி ஆண்டு வீதம் கொடுத்தால் 3000 ஆண்டுகளைக் கடந்து விடும்; ஆனால் ஒரே நேரத்தில் பல தேசங்களில் பல மன்னர்கள் ஆண்டிருக்கலாம். ஆக 500 முதல் 1000

ஆண்டுக் கால வரலாறு இது!

9.மீனவ மன்னன் , துமுசி, சம்மட போன்ற சுமேரியப் பெயர்கள், வெள்ளம் பற்றிய அதர்வன வேதக் குறிப்பு ஆகியனவும் ஒப்புநோக்கதக்கது.

–SUBHAM–