ஹிந்து ராஷ்ட்ரத்தில் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 1 (Post No.5301)

Date: 9 August 2018

 

Time uploaded in London – 6-46 AM  (British Summer Time)

 

Post No. 5301

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஹிந்து ராஷ்ட்ரத்தில் எங்களை நாங்கள் விரும்பும் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 1

 

ச.நாகராஜன்

1

 

டெல்லியின் ஆர்ச்பிஷப் அனில் கௌடோ (Anil Couto, Archbishop of Delhi) எல்லா சர்ச்சுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதன் சாரம் ஒரே வரியில் இது தான்; செகுலரிஸம் ஆபத்துக்குள்ளாயிருக்கிறது. (Secularism fabric under threat : Archbishop)

 

இதன் முழு அர்த்தமும் நமக்குப் புரிய வேண்டும். அதாவது இனிமேல் நம்மால் நினைத்தபடி மதம் மாற்ற முடியாது; ஏமாற்ற முடியாது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உண்ணாவிரதம் இருந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்கிறார் இந்த பிஷப்! எது வரை? 2019 பொதுத் தேர்தல் வரை!

‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற பழமொழி போல ‘2019 பொதுத் தேர்தல் வரை’ என்பதிலிருந்தே மறைமுகமாக இந்த பிஷப்,  மோடிக்கு ஓட்டுப் போடாதீர்கள்; போட்டால் நமது தொழில் இங்கே சரிவர நடக்காது! என்கிறார்.

இந்த கெட்ட எண்ணப் பிரார்த்தனை வேண்டுகோள் ஒரு புறம் இருக்க இதை ஆதரித்து ஜூலியோ ரிபரோ  என்ற போலீஸ் அதிகாரி (Julio Riberio – The Times of India dated 28-5- 2018 – A prayer for secularism: Hindu Rashtra, which would make my country a saffron Pakistan, is profoundly anti-national May 28, 2018, 2:02 AM IST Julio Ribeiro ) எழுதியுள்ள கட்டுரையில் இந்தியா காவி பாகிஸ்தான் ஆகி விடக்கூடும்; ஹிந்து ராஷ்ட்ரத்தில் நான் விரும்பும் வழிபாட்டைச் செய்ய முடியுமா? என்று ஆதங்கப்பட்டுக் கேட்டிருக்கிறார்.

ஆக, ஆர்ச்பிஷப்பின் விஷமத்தனமான தூண்டுதல் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது என்பது தெரிகிறது.

ஜூலியோவிற்கு நாம் சொல்ல வேண்டியது ஏராளம் இருக்கிறது. இருந்தாலும் கூட “கிறிஸ்து வழிபாட்டைத் தடுத்து நிறுத்த மாட்டீர்களே என்று கேட்கும் நீங்கள் தயவு செய்து கிறிஸ்தவ மதம் பரப்பப்பட்ட வரலாறைச் சற்று தெரிந்து கொள்ளுங்கள்” என்று சொல்லி விடலாம். அத்துடன் இந்தியாவைப் பற்றி ஒன்றுமே நீங்கள் அறிந்திருக்கவில்லை; அறிந்திருந்தால் இப்படி ஒரு அபத்தமான எண்ணத்தை வெளியிட்டிருக்க மாட்டீர்கள் என்றும் கூறலாம்.

 

2

அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதியாக இருந்த தாமஸ் ஜெஃபர்ஸன் என்ன சொன்னார் என்று பார்ப்போமா?

“Millions of innocent men, women and children, since the introduction of Christianity, have been burnt, tortured, fined, imprisoned, (and molested) : yet we have not advanced one inch towards humanity. What has been the effect of coercion? To make one half of the world fools, and the other half hypocrites. To support error  and roguery all over the earch.” – Thomas Jefferson, The Third President of United States.

 

கிறிஸ்துவ மதத்தை அறிமுகப்படுத்துவதில் லட்சக்கணக்கான அப்பாவிகளும், பெண்களும், குழந்தைகளும் எரிக்கப்பட்டனர், சித்திரவதை செய்யப்பட்டனர், அபராதம் விதிக்கப்பட்டனர், சிறைக்கு அனுப்பப்பட்டனர். பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டனர். இருந்த போதிலும் ஒரு அங்குலம் கூட மனிதத்வத்தை நோக்கி நாம் முன்னேறவில்லை. இப்படிக் கட்டாயப்படுத்தப்பட்டதன் விளைவு என்ன? உலகின் ஒரு பாதியை முட்டாளாக்கியது. இன்னொரு பாதியை கபடதாரிகளாக்கியது. தவறுக்கும் அயோக்கியத்தனத்திற்கும் துணை செய்தது. – தாமஸ் ஜெஃபர்ஸன், யுனைடெட் ஸ்டேட்ஸின் மூன்றாவது ஜனாதிபதி.

3

பற்பல நூற்றாண்டுகளாக இந்தியா தான் எல்லா மதத்தினருக்கும் சுதந்திரமாக வழிபடுவதற்கான சொர்க்க பூமியாக அமைந்திருக்கிறது. எல்லா இனத்தினரும் அமைதியாக வாழக்கூடிய சொர்க்க பூமி இது ஒன்றே தான்! தங்கள் நாடுகளை விட்டு அகதிகளாகத் துரத்தப்பட்டவர்களுக்கும், மதமாற்றக் கொடுமைகளிலிருந்து தப்பித்து ஓடி வந்தவர்களுக்கும், தங்கள் பண்பாட்டையும் வழிபாட்டுமுறைகளையும் தக்க வைத்துக் கொள்ள விரும்பி ஓடி வந்தவர்களுக்கும் அடைக்கலம்  கொடுத்த புண்ய பூமி இது.

கிறிஸ்துவத்தில் உருவ வழிபாட்டை ஏற்று அதன்படி வழிபாடு நடத்திய சிரியன் கிறிஸ்தவர்கள் கேரளாவில் அடைக்கலம் புகுந்தனர்.

தீயை நித்தம் வழிபடும் பார்ஸிகள் மஹராஷ்டிரத்திலும் குஜராத்திலும் அடைக்கலம் கோரி வந்து வசித்தனர்.

யூதர்களில் சிலர் மத மாற்றக் கொடுமைக்கு அஞ்சி இங்கு வந்து குடியேறினர்.

முஸ்லீம்களில் பஹாய் மார்க்கத்தினர் 50 இஸ்லாமிய நாடுகளில் வாழ முடியாமல் அங்கு வர அனுமதிக்கப்படாமல் இறுதியில் இந்தியாவில் வந்து குடியேறினர்;தங்கள் வழிபாடுகளை இன்றளவும் தடையின்றி நடத்துகின்றனர்.

சீன கம்யூனிஸ ராட்சஸர்களால் துரத்தப்பட்ட தலாய்லாமா – புத்த மதத் தலைவர் – அடைக்கலம் தேடி இந்தியா வந்தார். இன்றளவும் தர்மஸ்தலாவில் தங்கி தன் வழிபாட்டைத் தொடர்கிறார்.

இப்படி ஒரு நாட்டை – இன்னும் ஒரே ஒரு நாட்டை உலகில் காட்ட முடியுமா? முடியாது.

தன் மதத்தைச் சேராமல் இருப்பவர்களுக்கு – அடிதடி, வெட்டு, குத்து, கொலை – இவை தான் இதர மதங்கள் காட்டும் வழி; செய்த செயல் முறை.

ஆக இப்படிப்பட்ட நாட்டை நோக்கி- அதன் மக்களை நோக்கி – என் வழிபாட்டை இங்கு தொடர முடியுமா என்று கேள்வி கேட்கும் ஜூலியா போன்றவர்களை என்ன சொல்லி அழைப்பது?

அப்பாவித்தனமாக கேள்வி கேட்பவர் என்றா?

விஷமிகளில் ஒருவர் என்றா? வரலாறு தெரியாதவர் என்றா?

 

நல்ல மனம் கொண்ட, இந்திய வரலாறைத் தெரிந்த எவரும் இந்திய வாழ்க்கை முறை ஒன்றே தான் எந்த மதத்தையும் சம்மதம் என்று ஏற்றுக் கொள்ளும் ஒரே வாழ்க்கை முறை என்பதை உணர்வர்.

இஸ்லாமோ, கிறிஸ்தவமோ ஏனைய பிற மதங்கள் இருக்கக் கூடாது என்று கூறுபவை.  பிற மதத்தின் வழிபாட்டைச் செய்வோர் பாவிகள்; அவர்கள் திருத்தப்பட வேண்டும் என்று கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தொடர்ந்து முழங்கி வருபவர்கள்.

ஆகவே ஜூலியா இப்படிப்பட்ட கேள்வியை இஸ்லாமிய நாடுகளிலும் கிறிஸ்தவ நாடுகளிலும் கேட்கலாம். அங்கு இதர மதத்தினருக்கு வழிபாட்டுச் சுதந்திரம் உண்டா என்று கேட்கலாம்.

 

விஷமத்தனமான கேள்விகளைக் கேட்பவர்களுக்காக – அவர்கள் இப்படிக் கேட்டு இந்தியாவில் வகுப்புக் கலவரத்தைத் தூண்ட விரும்புவதால் – சில உண்மைகளை எடுத்துக் காட்ட வேண்டியிருக்கிறது.

அதைத் தொடர்ந்து காண்போம்.

  • தொடரும்

***

 

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க! (Post No.5300)

Written by London swaminathan

Date: 8 August 2018

 

Time uploaded in London – 11-48 AM (British Summer Time)

 

Post No. 5300

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என் 
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க 
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என் 
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க 

திரைப்படம்: எங்க ஊர் ராஜா 
இயற்றியவர்: கவிஞர் கண்தாசன் 

 

குருட்டுக் கவிஞர் மில்டனும் செவிட்டு அறிஞர் எடிசனும் சமாளித்த விதம்!

 

உலகப் புகழ்பெற்ற கவிஞர்களில் பலர் கண்பார்வையற்றவர்கள். உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் அருமையான கவிகளைப் பொழிந்தவர் தீர்க்கதமஸ் (நீண்ட இருள்). கண்பார்வையற்றதால் ஏற்பட்ட காரணப் பெயர் இது. கிரேக்க மொழியில் முதல் காவியத்தை இயற்றிய ஹோமரும் அந்தகரே. ஆங்கில மொழியில் புகழ்பெற்ற பாரடைஸ் லாஸ்ட் காவியத்தை உருவாக்கிய மில்டனும் கண்பார்வை இழந்தவரே. தமிழ் கூறு நல்லுலகில் அந்தகக் கவி வீர ராகவ முதலியார், இரட்டைப் புலவரில் ஒருவர் இப்படிப் பலர் அந்தகர்களே! கிருஷ்ண பக்தர் சூர்தாஸும் அந்தகரே! கண்ணில்லை; ஆனால் புகழ் கொடி கட்டிப் பறந்தனர்.

 

 

மில்டனை குருட்டுக் கவிஞர் என்று அவருடைய இலக்கிய எதிரிகள் குறைகூறினர். அதற்கு மில்டன் அளித்த பதில் மிகவும் உருக்கமானது:

மில்டன் சொன்னார்

“உங்களுடைய குருட்டுத் தன்மையை விட என் குருட்டுத்தனம் எவ்வளவோ மேலானது. எனக்கு கண்கள் மட்டுமே குருடு; உங்களுக்கோ எல்லா புலன்களுக்கும் அடியில் ஆழமாகச் சென்று உங்கள் மனதையும் குருட்டாக்கி விட்டது. இதனால் உருப்படியான விஷயங்களை உங்களால் காண  முடியாது;  நான் ஒரு பொருளின் வர்ணத்தையும் உருவத்தையும்தான் காண முடியாது. ஆனால் அவைகளின் உண்மைப் பொருளையும் நிலைத்த தன்மையையும் ஊடுருவிப்பார்க்க முடியும். அது கிடக்கட்டும்.

 

நான் பார்க்காத பொருள்கள் எவ்வளவு; நான் வருத்தப் படாமல் பார்க்கும் பொருள்கள்தான் எவ்வளவு? அப்படி வருந்தாமல் பார்க்கக்கூடிய, விட்டுப் போன பொருள்கள் குறைவே;

 

தீய மனிதர்களே! என்னைப் பார்த்து கேலியா செய்கிறீர்கள்? மனிதர்கள் ஏற்படுத்தக்கூடிய காயங்களில் இருந்து அந்தகர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. சொல்லப்போனால் நாங்கள் (தீயவைகளைப் பார்க்காததால்) புனிதர்கள் ஆக்கப்பட்டுவிட்டோம்”

 

(இது ஒரு நல்ல பாடம்; நாமதிகமான தீமைகளையும் தீய செயல்களைச் செய்வோரையுமே காண்கிறோம்; அவர்களைக் காணாததும் அது பற்றி சிந்திக்காததும் அந்தகர்களை ரிஷி முனிவர் போல ஆக்கி விடுகிறது!

 

மில்டன் யார்?

ஆங்கில மொழியில் தலை சிறந்த புலவர்களில் ஒருவர். ஹோமர், வர்ஜில் போல காலத்தால் அழியாத காவிய த் தைப் படைக்க வேண்டும் என்பது இவரது நீண்ட நாளைய அவா; அதன் காரணமாக PARADISE LOST சொர்க்க இழப்பு, சொர்க மீட்சி PARADISE REGAINED என்ற இரண்டு காவியங்களைப் படைத்தார்.

 

பிறந்த ஆண்டு 9-12- 1608

 

 

இறந்த ஆண்டு 8-11-1674

 

இறக்கும்போது வயது- 65

 

கல்லூரியில் படிக்கும்போது கவிதை யாத்தார். 29 வயதில் அவர் எழுதிய லிஸிடாஸ் LYCIDAS  என்ற கவிதை மிகச் சிறந்த கவிதை ஆகும்.

 

இங்கிலாந்தில் உளநாட்டுப் போர் ஆரம்பமானது.

 

ஆலிவர் க்ராம்வெல் OLIVER CROMWELL என்பவர், முடியாட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியபோது, அவருக்கு ஆதரவாக அரசியல் கட்டுரைகளை எழுதுவதில் முனைப்பு காட்டினார். பின்னர் முடியாட்சி மீண்டும் ஏற்பட்டது. இதற்குள் அவர் முழுக் குருடு ஆகிவிட்டார். அவர் பிறவிக்குருடர் அல்ல.

 

பாரடைஸ் லாஸ்ட் என்பதை எழுத இவர் மனைவியும் மகளகளும் உதவினர். மில்டன் சொல்லச் சொல்ல அவர்கள் எழுதினர். 55 வயதில் அது வெளிவந்தது. சாத்தானை சொர்க்கத்தில் இருந்து பூமிக்குத் தள்ளியப்போது அது எப்படி ஆதாமையும் ஏவாளையும் மனதளவில் கெடுத்தது என்பதே சொர்க்க இழப்பு கதையின் சாரம். இது வெளியானவுடன் இவர் புகழ் உச்சாணிக் கொம்புக்கு ஏறியது!

 

xxxx

 

செவிடாக இருப்பதே மேல்!

தாமஸ் ஆல்வா எடிசன், அமெரிக்காவின் புகழ் பெற்ற விஞ்ஞானி; கண்டு பிடிப்பாளர். ஆயிரத்துக்கும் மேலான பொருள்களுக்கு அமெரிக்காவில் பேடன்ட் வாங்கி வைத்தவர். பல்பு முதலிய பலபொருட்களைக் கண்டுபிடித்தவர்.

அவர் வாழ்ந்த காலம்-

11-2-1847   to

18-10- 1931

 

தாமஸ் ஆல்வா எடிசனுக்குக் காது கேட்காது. ஆனால் அவர் காதில் கோளாறு இல்லை; மனதிலேயே கோளாறு என்று கண்டுபிடிக்கப்பட்டது. உடனே நண்பர்கள் ஒரு டாக்டரை அழைத்து வந்தனர். அவர் பெரிய சிகிச்சை திட்டம் ஒன்றை வகுத்து  எடிசனிடம் காட்டினார். நீங்கள் ஒப்புக் கொண்டால் நாங்கள் உடனே தயார் என்றார்.

 

எடிஸன் சொன்னார்

“இதோ பாருங்கள்; உங்கள் திட்டம் கட்டாயம் வெற்றி பெறும்; எனக்கு ஐயப்பாடே இல்லை. நான் என்ன என்ன வெல்லாம் கேட்க வேண்டி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அவற்றில் எவை எவை கேட்கத்  தகாதவை என்பதையும் சிந்தியுங்கள். கொஞ்சம் காது கேளாமை இருப்பது நல்லதே. நானே எவை எவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அவைகளை மட்டுமே கேட்கிறேன். என்னை இப்படியே விட்டு விடுங்கள்” நீங்கள் எந்த அளவுக்கு காது  கேட்க முடியாதவர்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்திருப்பது எவ்வளவு நல்லது!

–சுபம்–

Head or Foot? Poet Byron Anecdote (Post No.5299)

compiled by London swaminathan

Date: 8 August 2018

 

Time uploaded in London – 9-05 am  (British Summer Time)

 

Post No. 5299

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

During one of Hobouse’s visit to Byron—Hobhouse was a College friend— at his villa near Genoa, and whilst they were walking in the garden, his lordship suddenly turned upon his guest, and, apropos of nothing, but always having his deformity in his mind exclaimed,
Now I know Hobhouse, you’re looking at my foot!
Upon which Hobhouse kindly replied,
My dear Byron, nobody thinks of or looks at anything but your head.

xxx

LORD BYRON

ENGLISH POET

BORN ON JANUARY 22, 1788

DIED ON April 19, 1824

Age at death 36

 

Publications

1807 Hours of Idleness

1809 English Bards and Scotch Reviewers

1812-18 Childe Harold’s Pilgrimage

1813 The Bride of Abydos

1817 Manfred

1818 Beppo

1819-24 Don Juan

1821 Cain

1822 The Vision of Judgement

 

xxx

 

Lord Byron was a leading poet of the 19th Century English Romantic Movement. His life was almost as colourful as those of the moody, mysterious heroes of his poems.

George Gordon Noel Byron was born in London but spent his first troubled years in Scotland. When Byron was three, his father died, after spending his mother’s fortune, and Byron and his mother faced hardships. But at ten, he inherited a great uncle’s title and estates. Later he attended the prestigious Harrow School and Cambridge University. Byron’s first published poems, ‘Hours of Idleness’, appeared when he was nineteen and were strongly criticized. Byron responded with ‘English Bards and Scotch Reviewers’, a satirical poem attacking the major literary figures of the time.

At 21 Byron began a two-year grand tour through Southern Europe to Turkey. These travels inspired ‘Childe Harold’s Pilgrimage’, a long poem about a world weary young lord’s journey through a Europe in need of reforms. The handsome author’s gloomy passion and pleas for justice and liberty attracted women admirers.

At 26 Byron married Annabella Milbanke. She soon left him, shocked by Byron’s affair with his half -sister Augusta. The disgrace made Byron leave England, aged 28.

In Italy, he had new love affairs and wrote his master piece ‘Don Juan’, a long, witty poem about a handsome man’s adventures with women. Byron also began ardently supporting Italian and Greek freedom from foreign control. He joined an Italian secret society and was leading Greek troops against Turks when he caught a fever and died.

 

–subham–

 

விஞ்ஞான உலகின் அபாயகரமான ஆயுதங்கள் – 1 (Post No.5298)

Written by S NAGARAJAN

Date: 8 August 2018

 

Time uploaded in London – 7-28 AM  (British Summer Time)

 

Post No. 5298

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

பாக்யா 10-8-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபத்திமூன்றாம்) கட்டுரை

விஞ்ஞான உலகின் அபாயகரமான ஆயுதங்கள் – 1

ச.நாகராஜன்

 

மனித குலம் தோன்றிய நாளிலிருந்து சண்டை சச்சரவுகளும்   தோன்றி விட்டன. மண்ணாசை, பெண்ணாசை, அதிகார ஆசை, தான் சரி என்பதை அடுத்தவர்கள் மீது திணிக்கும் ஆசை என்று இப்படிப் பல காரணங்கள் ஒருவரை ஒருவர் கொல்ல வழி வகுத்ததோடு பெரிய போர்களுக்கும் காரணமாக ஆகி விட்டன.

கற்களை ஆயுதமாகப் பயன்படுத்த ஆரம்பித்து, கடைசியில் அணுகுண்டைப் போடுவது வரை சண்டைகளில் பயன்படுத்தப்பட்ட பயங்கரமான ஆயுதங்களை உலக வரலாறு பார்த்து விட்டது.

வளர்ந்து விட்ட விஞ்ஞான உலகில் பல வித பயங்கரமான  ஆயுதங்களை உருவாக்க பல நாடுகளும் முயன்றன; முயல்கின்றன! இது பற்றி சாமான்யர்கள் யாருக்கும் தெரியாது. ரகசியமான இந்த ஆயுதங்கள் அபாயகரமானவை. இவை பற்றி அறிந்தால் குலை பதறும். எந்தெந்த மாதிரியான ஆயுதங்கள் உருவாக்கப்பட்டன, உருவாக்கப்படுகின்றன என்பதை அறிய ஒரு சிறிய பட்டியலை மாதிரிக்காகப் பார்க்கலாம்:

ரொபாட் நாய்

 யுத்தங்களில்  குண்டுகள் புதைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதைக் கண்டுபிடிக்க நாய்களின் மோப்ப சக்தி உதவும் என்பதால் அவை பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் போஸ்டன் டைனமிக்ஸ் என்ற நிறுவனம் ‘பிக் டாக்’ என்ற ஒரு சாதனத்தைத் தயார் செய்தது. சாதாரணமாக மனிதர்கள் ஏற கஷ்டப்பட்டும் கரடுமுரடான பாதைகள், மலைப் பகுதிகள் ஆகியவற்றில் இந்த ரொபாட் நாய் அனாயாசமாக பெரிய பாரத்தை முதுகில் சுமந்து கொண்டு வேகமாக ஏறும். இது இப்போது ஆப்கானிஸ்தானத்தில் சோதனை செய்யப்படுகிறது. தேனீக்களின் ரீங்காரத் தொனியோடு குலுக்கல் நடையோடு இந்த சடைநாய் மெதுவாக முன்னேறும். 109 கிலோகிராம் எடையை இது சுமக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 45 கிலோகிராம் எடையை தூக்கிச் சென்றது.ஆகவே ராணுவ வீரர்கள் இந்த அளவு எடையைத் தூக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் இது போடும் சப்தம் ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்து விடும் என்பதால் இது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படவில்லை. இதை மேம்படுத்துவதற்கான சோதனைகள் தொடர்கின்றன.

கண்ணைக் குருடாக்கும் துப்பாக்கி

இந்தத் துப்பாக்கி ஆளைக் கொல்லாது. இது கண்களைக் குறி வைக்கும். இதன் லேஸர்கள் ஒரு ஆளின் கண்களைச் சிறிது நேரத்திற்குக் குருடாக்கும். கிரிமினல்களைச் செயலிழக்க வைத்து கைது செய்ய இது பயன்படும். போரிலும் எதிரிகளைத் தற்காலிகமாக செயலிழக்கச் செய்ய இது பயன்படும். ஆனால் 1995ஆம் ஆண்டில் ஐநா கண்களைக் குருடாக்கும் ஆயுதத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று ஜெனிவா ஒப்பந்தத்தின் படி அறிவித்திருக்கிறது. இதன் முழுப் பெயர் PHASR. (Personal halting and stimulation response rifle) என்பதாகும்.

புறாக் குண்டுகள்

ப்ராஜக்ட் பீஜன் என்ற இந்த திட்டம் 1944இல் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்டது. பின்னர் மீண்டு 1948இல் ப்ராஜக்ட் ஆர்கான் என்று ஆரம்பிக்கப்பட்டது. இப்போது மின்னணு சாதனங்கள் ஏராளமாகக் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் புதிய அளவில் புறாக் குண்டுகள் என்ற இந்த பயங்கரமான திட்டம் உருவாகி விட்டது. இதன்படி புறாக்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்படும். ஒரு திரையின் எதிரில் புறாக்கள் உட்கார்த்தி வைக்கப்படும். அந்தத் திரையில் குண்டு போட வேண்டிய இடம் நன்கு காண்பிக்கப்படும். பின்னர் புறாக்கள் குண்டுடன் பறக்க விடப்படும். தான் திரையில் பார்த்த இடத்தை அடைந்தவுடன் அதைக் கண்டு கொள்ளும் புறாக்கள் குண்டை அங்கு போடும். விளைவு தெரிந்தது தானே!

சோவியத்தின் ‘தாக்கும் டால்பின்கள்’

மிருகங்களைப் போரில் ஈடுபடுத்துவதில் சோவியத் யூனியனும் சளைக்கவில்லை. போர் புரியும் டால்பின்களை அது பயிற்சிக்குத் தயாராக்கியது. இந்தத் திட்டத்த்தை அது ஆயிரத்திதொள்ளாயிரத்து அறுபதுகளில் ஆரம்பித்தது. நீரில் மூழ்கி போர் புரியும் திட்டம் இது. இதே போல இந்த உத்தியை அமெரிக்காவும் ஆராய ஆரம்பித்தது. ஆனால் இவற்றை குண்டு ஏந்திக் கொண்டு செல்ல பயிற்றுவிக்க முடியாது. ஏனெனில் டால்பின்களுக்கு எதிரிகள் யார் நண்பர்கள் யார் என்பதை வேறுபடுத்தி பார்க்கத் தெரியாது.

கோழி அணுகுண்டுகள்

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஒரு புது ஆயுதம் உருவாக்கப்பட்டது. 8 டன் எடை கொண்ட இந்த அணு ஆயுதத்தின் பெயர் ‘ப்ளூ பீகாக்’ – நீல மயில் என்பதாகும். பிரிட்டனின் திட்டத்தின் படி, ஜெர்மனியில் இது புதைத்து வைக்கப்படும். சோவியத் கிழக்கிலிருந்து படையெடுத்து வந்தால் இது பயன்படுத்தப்படும். ஆனால் இதில் ஒரு பிரச்சினை இருந்தது. குளிர்காலம் என்பது மிக மிகக் கடுங்குளிரை உருவாக்குவதால் சுரங்கக் குண்டுகள் வெடிக்கவே வெடிக்காது. ஆகவே கோழிகளை இந்த குண்டுகளுக்கு வெப்பமூட்டத் தீர்மானிக்கப்பட்டது. ஒரு கூண்டில் கோழிக்கான ஒரு வாரத் தீனி போடப்படும். உணவு, நீர் ஆகியவற்றுடன் கோழிக் குண்டுகள் இருப்பதால் சுரங்கக் குண்டுகள் ஒரு வாரம் வரை நன்கு செயல்படும். ஆனால் இந்தத் திட்டம் அணு ஆயுதத்தின் எதிர் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதால் கைவிடப்பட்டது..

 

 

அடுத்து இன்னும் சில பயங்கர ஆயுதங்களைப் பார்ப்போம்.

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .

.

மிஹைல் கலஷ்னிகோவ் ஒரு ரஷிய விஞ்ஞானி.(பிறப்பு 10-11-1919 மறைவு 23-12-2013).தாய்நாட்டைக் காப்பதற்காக ரஷிய ராணுவத்தில் சேர்ந்தார் அவர். அவரது தோழர்கள் அபாயகரமான துப்பாக்கிகளுக்குப் பதிலாக எளிதாக இயக்கக் கூடிய துப்பாக்கி வேண்டும் என்று அவரிடம் சொன்னதால் புதிய ரக துப்பாக்கி ஒன்றை அவர் கண்டு பிடித்தார். அது அவர் பெயராலேயே இன்றும் அழைக்கப்படுகிறது. அவ்டோமெட் கலஷ்னிகோவ் மாடல் 1947 (Avtomat Kalashnikove Model 1947) என்பதைனச் சுருக்கி இன்று ஏகே47 என்று அது அழைக்கப்படுகிறது. உலகில் இன்றைய மிகத் திறன் வாய்ந்த துப்பாக்கி அது தான். எடை குறைவு. உயிருள்ள ஒரு கோழிக் குஞ்சின் விலையை விட அதன் விலை குறைவு. எந்த சீதோஷ்ண நிலை இருந்தாலும் அதை எளிதில் இயக்க முடியும். இந்தக் கண்டுபிடிப்பால் அவர் ரஷியாவின் மிகச் சிறந்த வீரராகக் கருதப்படுகிறார். ஆனால் இந்த துப்பாக்கியை தீவிரவாதிகள் தங்களது ஆயுதமாகக் கையாளுவதைக் கண்ட அவர் மிகவும் நொந்து போனார். கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், “ எனது கண்டுபிடிப்பால் நான் கர்வப்படுகிறேன். ஆனால் இதைத் தீவிரவாதிகள் பயன்படுத்துவதைக் கண்டு மனம் நொந்து போகிறேன். இதற்கு பதில் விவசாயிகள் பயன்படுத்தக் கூடிய  அறுவடை மெஷினைக் கண்டுபிடித்திருப்பதையே நான் விரும்புகிறேன்” என்றார்.

2009ஆம் ஆண்டு வரை 10 கோடி ஏகே 47 துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாதி போலியானவை. இதனால் இன்னும் நொந்து போன கலஷ்னிகோவ் ரஷிய ஆர்தோடாக்ஸ் சர்ச்சுக்கு மன்னிப்புக் கேட்டு ஒரு கடிதம் எழுதினார். “93 வயதான மிஹைல் கலஷ்னிகோவ் என்னும் விவசாயியின் மகனான நான் எனது துப்பாக்கி பலரது உயிரை இழக்கச் செய்திருப்பதால் ஆன்மீக ரீதியான எனது வலி பொறுக்கமுடியாததாக இருப்பதால் மன்னிப்புக் கேட்கிறேன்”

சர்ச் அவருக்கு மன்னிப்பு வழங்கியது. அதன் பின்னர் ஆறு மாதம் கழித்து அவர் காலமானார்.

***

 

மஹாபாரதத்தில் ஒட்டகக் கதை (Post No.5297)

ஒட்டக மர்மம்-PART -2 (5297)


RESEARCH ARTICLE WRITTEN by London swaminathan

Date: 7 August 2018

 

Time uploaded in London – 12-20  (British Summer Time)

 

Post No. 5297

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ரிக் வேதம் முதல் தமிழில் அகநானூறு வரை ஒட்டகம் பேசப்படுவது வியப்பான செய்தி

 

ரிக் வேதத்தில் ஒட்டகம் வரும் இடங்கள்  ஈரான் (பாரஸீக) பகுதி பாடல்களிலேயே வருகிறது. அதாவது எட்டாம் அத்தியாயத்தில்!

 

 

ரிக் வேத எட்டாம் அத்யாய (மண்டல விஷயங்கள்)

 

புரோகிதர்களுக்கு மன்னன் காஷு நூறு ஒட்டகங்களையும் 10,000 பசுக்களையும் பரிசாகக் கொடுத்தான் (8-5-37)

 

பல்பூதாவும் தாருக்ஷாவும் முனிவருக்கு 100 ஒட்டககங்களைப் பரிசாகக் கொடுத்தனர் (8-46-32)

 

பர்ஷுவும் த்ரீந்திராவும் ஒரு லக்ஷம் பரிசு/ தானம் கொடுத்தனர் (8-6-46)

 

இந் த மன்னர்களின் பெயர்கள் ஈரானிய அவெஸ்தன் இலக்கியத்திலும் வருவதால் எட்டாவது மண்டலம் ஈரானிய மர்மங்கள் நிறைந்ததாக உள்ளது.

சுமார் 20, 30 வெள்ளைக்கார்கள் ரிக் வேத த்தை மொழி பெயர்ப்பதாகச் சொல்லி குதறி இருக்கிறார்கள்; உளறிக் கொட்டி கிளறி மூடி இருக்கிறார்கள் ஒட்டகம் என்றால் திமிலுள்ள மாடு என்பர். திமிலுள்ள மாடு என்றால் ஒட்டகம் என்பர். ஒருவருக்கொருவர் முரண்பாடாக “முழி” பெயர்த்து இருக்கின்றனர்.

 

ஆனால் இந்தோநேஷியாவில் உள்ள மூல வர்மனின் ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகளிலும் பிராஹ்மணர்களுக்குக் கட்டித் தங்கமும் 10,000 பசுமாடுகளும் தானம் கொடுத்த செய்தி உள்ளதால் 10,000 பசுக்கள் 100 ஒட்டகங்கள் என்பதே பொருத்தம் என்பது எனது துணிபு.

 

ஒட்டகம் பற்றி உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் மேலும் பல பாடல்கள் உள.

 

சிந்து சமவெளியில் முழு ஒட்டக எலும்புக்கூடு கிடைத்தது. ஆனால் அது மேல்  மட்டத்தில் கிடைத்ததாகச் சொல்லி அது பற்றி பிரஸ்தாபிப்பதே இல்லை. அது ஆராயப்படாத மர்மம் ஆகும். மற்ற அகழ்வராய்ச்சிகளிலும் ஒட்டக எலும்புகள் கிடைத்தன.

 

 

காளிதாசனில் ஒட்டகம்

 

காளிதாசன் படைப்பான ரகுவம்ச காவியத்தில்  (5-32) கௌத்சர் என்ற மஹரிஷிக்கு ரகு கொடுத்த 14 கோடிப் பொன்களை நூற்றுக் கணக்கான ஒட்டகங்கள், குதிரைகள் மீது  வர் ஏற்றிக் கொண்டு சென்றார் என்று சொல்லப்பட்டுள்ளது.

 

பஞ்ச தந்திரக் கதைகள், கதாசரித் சாகரம் (கதைக் கடல்) ஆகிய நூல்களிலும் ஒட்டகம், ஒட்டகக் குரல், ஒட்டக வடிவ மட்பாண்டங்கள் பேசப்படுகின்றன.

மஹாபாரதத்தில் ஒட்டகக் கதை

ஒட்டகத்தைப் பாலைவனக் கப்பல் என்று அழைப்பர்; இது கசப்புள்ள முள் செடிகளை விரும்பித் தின்னும். அரேபிய, இந்திய ஒட்டகங்களுக்கு ஒரு திமிலும், மத்திய ஆசிய, வட ஆப்ரிக்க ஒட்டகங்களுக்கு இரண்டு திமில்களும் உண்டு.

 

சோம்பலுள்ள ஒரு ஒட்டகம் இரை தேட விரும்பவில்லை. பிரம்மனை நோக்கி தவம் இருந்தது; பிரம்மன் அதற்கு இருந்த இடத்திலிருந்தே இழை, தழைக ளைச் சாப்பிட நீண்ட கழுத்தை அருளினன். ஒரு முறை மழை கொட்டியது. அதற்கு அஞ்சி ஒரு குகைக்குள் கழுத்தை விட்டது. அங்கேயுள்ள நரி அதைக் கடித்துக் குதறியதால் ஒட்டகம் இறந்தது– மஹாபாரதம்- சாந்தி பர்வம் (ஆதாரம் சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி)

 

பைபிளில் ஒட்டகம்

ஊசியின் காதில் (ஊசித்வாரம்) ஒட்டகம் நுழைவதை விட பணக்கார்கள் கடவுளின் உலகத்தை அடைவது கடினம் என்று ஏசு கிறிஸ்து (மாத்யூ 19-24) சொன்னதாக பைபிள் கூறும். அதாவது ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையவும் முடியாது; பணக்காரர்கள் சொர்கத்துக்குச் செல்லவும் முடியாது என்பது பொருள்.

சிலர் இது தவறான மொழி பெயர்ப்பு என்று வாதிடுவர். ஏனெனில் ஏசு கிறிஸ்து பேசிய அராமிய மொழியில் ‘கம்லா’ என்றால் ஒட்டகம், கயிறு என்று இரண்டு பொருள் உண்டு. ஆகையால் ஊசியின் காதில் தடித்த கயிறு போவதைவிட என்றும் மொழி பெயர்ப்பர். (கம்லா= ஸMஸ்க்ருத க்ரமேல= ஆங்கில CAMEL ‘கேமல்’ தொடர்பைக் காண்க)

 

ஆனால் ஊசியின் காதில் ஒட்டகம் என்பதே சரி என்று வாதாடவும் ஆதாரமுண்டு. பபிலோனிய தால்முத் (BABYLONIAN TALMUD) தில் (யூதர்களின் மதப் புஸ்தகம்) இதே போல ஒரு வாசகம் வருகிறது. ஒரு ‘ஊசியின் காதில் யானை நுழைவதைப் போல கஷ்டமானது’ என்பது அந்த வாசகம். ஆக இப்படி அடைய முடியாத , நடக்க முடியாத விஷயங்களைக் குறிப்பிடுவது மேற்காசியாவில் இருந்தது என்பது உண்மையே..

 

புனித அகஸ்டின் (கிறிஸ்தவ அகஸ்த்யர்) ஒட்டகத்தை கிறிஸ்தவ கிரஹஸ்தர்களின் அடையாளமாக உருவகித்தார். ஏனெனில் அவர்களும் ஒட்டகம் மாதிரி குடும்ப பாரத்தைச் சுமக்கின்றனர்.

ஒட்டக வாஹனம்

அஷ்ட திக் தேவதைகளில் தென் மேற்கு திசைக்கு நைத்ருதி என்னும் தேவதை அதிபதி; அவளுக்கு ஒட்டகம் அல்லது கழுதை வாஹனம் என்பர்.

 

சில கோவில்களில் அனுமாருக்கும் ஒட்டகம் வாஹனமாகக் காட்டப்பட்டுள்ளது. இவையெல்லாம் சாஸ்திர ஆதாரமற்றவை. உள்ளூர் பக்தர்களின் அருட்கதைகளில் இருந்து பிறந்தவை.

 

பாணினியில் ஒட்டகம்

 

உலக மஹா இலக்கண வித்தகன் பாணினி. 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்தார். இன்றுள்ள உலக இலக்கண புஸ்தகங்களில் அவர் எழுதிய பாணீனீயம் அல்லது அஷ்டாத்யாயீ என்பதே பழையது. அவர் நால் வகைப் படைகளுடன் ஒட்டகப் படை இருந்ததையும் இலக்கண விதிகளைக் கற்பிக்கும்போது உதாரணம் காட்டுகிறார். பெரும்பாலும் சுமை தூக்க இவைகள் உதவி இருக்கலாம். மேலும் மலைக் கணவாய்களையும் பாலைவனங்களையும் கடக்கப் பயன்பட்டிருக்கலாம்.

 

 

ராஜஸ்தானில் (PUSHKAR IN RAJASTHAN) உலகின் மிகப் பெரிய ஒட்டகச் சந்தை ஆண்டுதோறும் நடை பெறுகிறது.

 

புத்தர் இறந்தவுடன் யானை, ஒட்டகம், நீர் எருமை, புலி ஆகியனவும் துக்கம் தெரிவித்ததாக புத்த மத நூல்களில் வருவதால் அவர்களும் ஒட்டகத்தை நன்கு அறிந்து இருந்தனர்.

 

மநு ஸ்ம்ருதியில் ஒட்டகம்

சுமார் 18 இடங்களில் மநு, தனது சட்டப் புத்தகத்தில் ஒட்டகத்தைக் குறிப்பிடுகிறார்

 

MANU SMRTI: 2-204; 3-162; 4-115; , 120; 5-8, 18; 8-146, , 239, 296, 9-48, 11-69, 138, 155, 157, 200, 202; 12-55, 57.

 

அவர் சொல்லும் விஷயங்களின் சாராம்சம்:–

 

ஒட்டக வண்டி பற்றி சொல்கிறார். ஒட்டகப் பால் பற்றியும் பேசுகிறார். ஒட்டகத்தின் மீது சவாரி செய்துகொண்டு வேதம் சொல்லக் கூடாது என்கிறார். ஒட்டக மாமிசம் ஒட்டகக் கொலை ஆகியன பற்றியும் குறிப்பிடுகிறார். இவற்றைத் தனியே குறிப்பிடாமல் ஏனைய ஆடு மாடு குதிரை  ஆகியவற்றுடன் பேசுவதால் அந்தக் காலத்தில் ஒட்டகம் சர்வ சாதாரணமாக இருந்தது என்றும் அறியலாம்..

வயலுக்கு வேலி அமைப்போர் ஒட்டகம் எட்டிப் பார்க்காத உயரம் வரை அமைக்கலாம் என்பதால் அக்காலத்தில் ஒட்டகம் எல்லோருக்கும் தெரிந்த மிருகம். மேலும் ஸம்ஸ்க்ருத கதைப் புத்தகத்திலும் ஒட்டகக் கதைகள் உண்டு. அக நானூற்றில் குறிப்பிடப்பட்டதில் வியப்பொன்றும் இல்லை.

 

 

எனது முடிபுகள்:

 

  1. ரிக் வேத காலம் முதல் இந்துக்களுக்கு ஒட்டகம் பற்றித் தெரியும்

2.பசுக்களைப் போல ஒட்டகங்களும் தானம் கொடுக்கப்பட்டதால் அவற்றின் புனிதம் புலப்படுகிறது

3.ஒட்டகங்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டது மநு நீதியில் தெளிவாக உளது.

  1. சங்க இலக்கியத்தோடு தமிழின் மிகப்பழைய நூல் என்று கருதப்படும் தொல்காப்பியத்திலும் ஒட்டகம் உளதால் 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டிலும் ஒட்டகங்கள் வளர்க்கப்பட்டன

5.’க்ரமேல என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து அராபிய கமலாவும் ஆங்கில CAMEL கேமலும் வந்திருக்கலாம். ஸம்ஸ்க்ருத உஷ் ட் ர- வில் இருந்து ஒட்டகம் என்று வந்ததும் வெளிப்படை

 

6 சில இந்துக் கடவுளருக்கு ஒட்டகம் வாஹனம் என்பதாலும் இதன் புனிதம் விளங்குகிறது

 

7.பஞ்சதந்திரக் கதைகள், கதா சரித் சாகரம், நியாயக் களஞ்சியம் ஆகியவற்றிலும் ஒட்டகம் வருவதால் சிறுவர்கள் முதல் கிராம மக்கள் வரை ஒட்டகத்தை அறிவர்.

 

8.பாணிணி ஒட்டகப் படை பற்றிப் பேசுவதால் 2700 ஆண்டுகளுக்கு முன், முதல் ஒட்டகப் படையை அமைத்தது இந்துக்களே!

9.மஹாபாரத ஒட்டகக் கதை அதற்கு இதிஹாசச் சிறப்பையும் அளித்துவிட்டது. இதுபோல ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கள ஒட்டைச் சிவிங்கி பற்றியும் ஒரு கதை சொல்லுவர்; ஒப்பிட்டு மகிழ வேண்டிய ஒன்று.

10.மநு ஒட்டகப் பால், ஒட்டக வண்டி, ஒட்டக சவாரி பற்றியெல்லாம் பேசுவது அவரது பரந்த அறிவினைக் காட்டுகிறது.

வாழ்க ஒட்டகம்!

-subham–

BLIND POET MILTON AND DEAF INVENTOR THOMAS ALVA EDISON! (Post No.5296)

Compiled by London swaminathan

Date: 7 August 2018

 

Time uploaded in London – 10-51 am  (British Summer Time)

 

Post No. 5296

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

When Milton’s enemies mocked his blindness, the poet with great heat replied,
“I prefer my blindness to yours, yours is sunk into your deepest senses , blinding your minds, so that you can see nothing that is sound and solid. Mine takes from me only the colour and surface of things, but does not take away from the minds contemplation what is in those things of true and constant. Moreover, how many things are there which I would not see. How many which I can be debarred the sight without repining! How few left which I much desire to see! Vile men! Who mock us! The blind have a protection from the injuries of men, and we are rendered almost sacred.”

 

JOHN MILTON

Born on 9 th December 1608

Died on 8th November 1674

Age at death 65

 

Publications

1629- on the Morning of Christ’s Nativity

1631- L’Alegro

Il Penseroso

1634 Comus

1637 Lycidas

1645 Poems

1667 Paradise Lost

1671 Paradise Regained

1671 Samson Agonistes

 


John Milton was one of the greatest English poets. He was born in London and educated at Cambridge University. His father was a successful lawyer and composer who was wealthy enough to afford a second house in the country. Milton spent six years in private study thereafter finishing university in 1632. He had given up his original ambition to become a priest and decided to devote his life to God as a poet instead.

Milton began to write poetry while he was at college. He completed one of his major works, Lycidas, perhaps the finest short poem in English at the age of 29. Five years later in 1642 the Civil War divided the country as Oliver Cromwell fought to overthrow the king. At the outbreak of war Milton stopped composing poetry and threw himself into writing political essays supporting Cromwell’s aims. in the same period Milton also became aware that he was slowly going blind.

 

In 1660 the monarchy was restored, and Milton retired to devote himself poetry. His ambition had always been compose an epic poem to rival the works of ancient writers such as Homer and Virgil. By then completely blind, he began dictating his poem, Paradise Lost , to his wife and daughters. The work published, when he was 55, was immediately recognised as an outstanding achievement. It tells the story of how Satan was thrown out of Heaven and how he came to earth to corrupt Adam and Eve. The themes of war and religious conflict it explores constantly remind the reader of the troubled times Milton lived through.

Source: Who wrote what when?, The Diagram Group,  Simon and Schuster, 1999

 
Xxx

DEAF EDISON!

Thomas Alva Edison (February 11, 1847 – October 18, 1931) was an American inventor and business man. He had 1093 US patents in his name.

Thomas Edison was deaf but only a few of his friends were aware that in his case deafness was more psychological than physical. Once a specialist in diseases of the ear called upon Mr. Edison and unfolded a plan of treatment which he was sure would restore his hearing. To the proposition that he submit to the treatment, however, was opposed by Mr Edison. He gave an emphatic negative.

“What I am afraid of, said he, is that you would be successful. Just think what a lot of stuff I would have to listen to that I don’t want to hear! To be a little deaf and be the only one who knows just how deaf you are has its advantages. I prefer to let well enough alone”.


. Xxxx subham xxxx

தலையில் குட்டிக் கொண்டு விநாயகரை வணங்குவது ஏன்? (Post No.5295)

Written by S NAGARAJAN

Date: 7 August 2018

 

Time uploaded in London – 7-35 AM  (British Summer Time)

 

Post No. 5295

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

தலையில் குட்டிக் கொண்டு விநாயகரை வணங்குவது ஏன்?

 

ச.நாகராஜன்

 

தலையிலே குட்டிக் கொண்டு விநாயகரை வழிபடுவது ஏன்?

இதற்கான சுவையான வரலாறு ஒன்று உண்டு.

 

அகத்தியர் காவிரியை ஒரு கலசத்தில் அடக்கிக் கொண்டு வந்தார். அப்போது அந்த காவிரி நீர் அடங்கிய கலசத்தைக் கவிழ்த்து ஒரு காகம் பறந்தோடியது. இதனால் வெகுண்டார் அகத்திய முனிவர். யார் அந்தக் காக்கை என்று அறியப் பின் தொடர்ந்தார். காக்கை ஒரு சிறுவனாக உரு மாறியது. அந்தச் சிறுவன் யார் எனப் பார்த்த அகத்தியர் விநாயகரே அப்படி காக்கை உருக் கொண்டு வந்துள்ளார் என்பதை அறிந்தார். சிறுவனைக் குட்டுவதற்காகப் பின் தொடர்ந்த அகத்தியர் விநாயகரை நோக்கி, “ அறியாமல் உங்களைக் குட்டுவதற்காகப் பின் தொடர்ந்த என்னை மன்னிக்க வேண்டும்” என்று இறைஞ்சி வேண்டினார். அத்தோடு, “அந்தக் குட்டு எனக்கே ஆகுக” என்று கூறி இரு கைகளையும் சேர்த்து அகத்தியர் குட்டிக் கொண்டார். ‘இது போலக் குட்டிக் கொண்டு வணங்குவோரின் வணக்கத்திற்குப் பெரிதும் மகிழ்ந்து அருள் புரிதல் வேண்டும்’ என்றும் அகத்தியர் விநாயகப் பெருமானை வேண்டிக்கொண்டார். “அவ்வாறே அருள் புரிகின்றோம்” என்று விநாயகர் வரத்தைத் தந்தார். அது முதல் குட்டிக் கொண்டு விநாயகரை வழங்கும் பழக்கம் தோன்றியது. இந்தச் சம்பவம் நடந்த இடம் கொங்கு நாடு. ஆக இப்படிக் குட்டிக் கொண்டு வழிபடும் முறை கொங்கு நாட்டிலேயே முதலில் தோன்றியது.

அந்தப் பெருமை உடைத்து கொங்கு மண்டலம் என்று கொங்கு மண்டல சதகம் ஒன்பதாம் பாடல் பெருமை படக் கூறுகிறது.

பாடலைப் பார்ப்போம்:

 

ஐங்கைப்புத் தேளைத் தொழுகின்ற பேர்க ளகங்கசிந்து    செங்கைத் துணைமுட்டி யாய்த்தலை யிற்குட்டிச் சீர்பெறுநற் றுங்கப் பணிவிடை முற்றோன்று தானஞ் சுரர்மகிழு       மங்குற் பொழிறிகழ் காவேரி சேர்கொங்கு மண்டலமே

 

பொருள் : விநாயகக் கடவுளை வணங்குவோர், தலையிற் குட்டிக் கொள்ளும் பழக்கமானது, முதலில் உண்டான இடம் கொங்கு மண்டலம் என்பதாம்.

 

(ஸ்)காந்தம் காவிரி நீங்கு படலத்தில் வரும் ஒரு பாடல் இதைக் கூறுகிறது :

என்னே தமியே னெனவே யினிநின்

முன்னே நுதலின் முறையா லிருகை

கொன்னே கொடுதாக் குனர்தங் குறைதீர்த்

தன்னே யெனவந் தருள்செய் யெனவே

 

தலையில் குட்டிக் கொண்டு விநாயகரை வழிபடும் பழக்கத்திற்கான காரணம் இது தான்!

***

CAMELS IN PANINI, MANU AND MAHABHARATA (Post No.5294)

Research Article Written by London swaminathan

Date: 6 August 2018

 

Time uploaded in London – 14-10  (British Summer Time)

 

Post No. 5294

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

CAMEL MYSTERY IN SANSKRIT AND TAMIL LITERATURE-PART2

(FIRST PART WAS POSTED YESTERDAY).

CAMELS IN ASHTADYAYI OF PANINI (7TH CENTURY BCE)

“The organisation of the army included a camel corps. Camels are referred to in the Vedas as being native to the soil but there is no specific mention of fighting camels. Camels are of two varieties, the single humped one, now seen in upper India and in Arabia, (where it was probably introduced from India) and the double humped Bactrian camel which was later introduced in the Middle East and North Africa.

Panini is familiar with the camel corps known in his time as Austraka or Ushtra-sadi (ushtra =camel). A mixed corps of camels and mules (asvatari) , was known as ushtra-vani. It would appear that the camels were mostly used as army transports over the difficult sandy terrain, frequently come across in the Indus basin and in Rajaputana

Source, Arya Tarangini ,page 342; Volume one, A Kalyanaraman , Asia Publishing House, 1969

Xxxx

 

Camel in Mahabharata

We find an interesting story about camel in the Shanti parva of Mahabharata. A lazy camel did not want to go out to get food. So it stayed in a place and prayed to Brahma. He gave him a long neck so that it can eat all the plants up above the trees without much effort. The lazy camel tried that way and in greediness it protruded its neck into a cave. A fox inside he cave bit the head of the camel and killed it.

 

This is to teach a lesson to the lazy people, probably included in the Mahabharata at a later date.

 

Camel Vahana

Camel Fair in Pushkar is famous in Rajastha. It attracts a large number of local people and foreign tourists.

 

Though camel is found only in desert areas. strangely it became the vahana (mount) of Hindu god Anjaneys (Maruti). There are some local stories to justify it. We can see such camel figures in Chennai Hyderabad and other Hanumar temples.

 

One of the Ashta Dik Devatas ( Eight Gods in charge of Eight Directions) is Naitruti in charge of South West. Camel is the Vahana of Naitruti.

 

Camel in Manu Smrti

MANU ON CAMELS

 

These slokas must be read with interpretation or in the right context. What I can say is that Manu has used camels in nearly 20 places. He even spoke about the fence up to a  height of a camel. That means camels were well known and very widely used and they were like common domestic cattle. Even Brahmins were riding on the camels which we know from Manu’s ban on reciting Vedas sitting on a camel. If we look at each sloka or its commentary, we can make a picture of the society during Manu’ days.

 

Following are couplets From Manu smrti (2-204 means second chapter 204th sloka)

 

2-204. He may sit with his teacher in a carriage drawn by oxen, horses, or camels, on a terrace, on a bed of grass or leaves, on a mat, on a rock, on a wooden bench, or in a boat.

 

3-162. A trainer of elephants, oxen, horses, or camels, he who subsists by astrology, a bird-fancier, and he who teaches the use of arms, (DON’T ENTERTAIN THEM IN SRARDHA)

 

4-115. A Brahmana shall not recite (the Veda) during a dust-storm, nor while the sky is preternaturally red, nor while jackals howl, nor while the barking of dogs, the braying of donkeys, or the grunting of camels (is heard), nor while (he is seated) in a company.

 

4-120. Let him not recite the Veda on horseback, nor on a tree, nor on an elephant, nor in a boat (or ship), nor on a donkey, nor on camel, nor standing on barren ground, nor riding in a carriage.

 

5-8. The milk of a cow (or other female animal) within ten days after her calving, that of camels, of one-hoofed animals, of sheep, of a cow in heat, or of one that has no calf with her,(AVOID THEM; DON’T OFFER IT TO GOD)

 

5-18. The porcupine, the hedgehog, the iguana, the rhinoceros, the tortoise, and the hare they declare to be eatable; likewise those (domestic animals) that have teeth in one jaw only, excepting camels.

 

8-146. Things used with friendly assent, a cow, a camel, a riding-horse, and (a beast) made over for breaking in, are never lost (to the owner).

 

8-239. (The owner of the field) shall make there a hedge over which a camel cannot look, and stop every gap through which a dog or a boar can thrust his head.

 

8-296. If a man is killed, his guilt will be at once the same as (that of) a thief; for large animals such as cows, elephants, camels or horses, half of that.

 

9-48. As with cows, mares, female camels, slave-girls, buffalo-cows, she-goats, and ewes, it is not the begetter (or his owner) who obtains the offspring, even thus (it is) with the wives of others.

11-69. Killing a donkey, a horse, a camel, a deer, an elephant, a goat, a sheep, a fish, a snake, or a buffalo, must be known to degrade (the offender) to a mixed caste (Samkarikarana).

11-138. But for killing carnivorous wild beasts, he shall give a milch-cow, for (killing) wild beasts that are not carnivorous, a heifer, for killing a camel, one krishnala.

 

11-155. A twice-born man, who has swallowed the urine or ordure of a village pig, of a donkey, of a camel, of a jackal, of a monkey, or of a crow, shall perform a lunar penance.

11-157. The atonement for partaking of (the meat of) carnivorous animals, of pigs, of camels, of cocks, of crows, of donkeys, and of human flesh, is a Tapta Krikkhra (penance).

11-200. He who has been bitten by a dog, a jackal, or a donkey, by a tame carnivorous animal, by a man, a horse, a camel, or a (village-) pig, becomes pure by suppressing his breath (Pranayama).

11-202. A Brahmana who voluntarily rode in a carriage drawn by camels or by asses, and he who bathed naked, become pure by suppressing his breath (Pranayama).

 

12-55. The slayer of a Brahmana enters the womb of a dog, a pig, an ass, a camel, a cow, a goat, a sheep, a deer, a bird, a Kandala, and a Pukkasa.

12-67. For stealing a deer or an elephant a wolf, for stealing a horse a tiger, for stealing fruit and roots a monkey, for stealing a woman a bear, for stealing water a black-white cuckoo, for stealing vehicles a camel, for stealing cattle a he-goat.


Camel in The Bible

St Augustine, 354-430 CE, made the camel a symbol of humble Christian shouldering life’s burden without complaint.

In images of Magi the camel appears as a beast of burden.
A camel began to speak in support of the wish of St. Cosmos and St Damian that they may be buried in the same grave; the Devil however, assumed the form of a giant camel to plague Macarius the Egyptian.
It has been that a mistranslation may have produced Christ’s statement that “ it is easier for a camel to go through the eye of the needle than for a rich man to enter into the kingdom of god” . Mathew 19-24
In Aramaic gamla means camel and rope.
It seems camel is more correct, when we look at another image.
In the Babylonian Talmud a similar image is used in reference to those who achieve the impossible: they make “an elephant pass through the eye of a needle “.

GAUTAMA BUDDHA

In Asian mythology, camel joined the water buffalo, the elephant and the tiger in mourning the death of Gautama Buddha.

Symbolism of camel

“The animal by its largely undemanding nature, made it possible for humans to cross the steppes and the deserts of North Africa. The camel became a symbol of moderation and sobriety.

Because of its physiognomy, which appears to the human eye appears haughty, it also came to symbolise arrogance and selfishness. Because it would accept only those burdens that it could actually carry, the camel came to stand for discernment. It stood for laziness too. Its ability to kneel obediently was taken as a positive characteristic”.

Source
Dictionary of Symbolism. Hans Biedermann, 1989

 

Conclusion:

1.From the days of Rig Veda Hindus know about camels

2.Camels were also part of gift/Daana like cows.

3.Camels have been used for transport

4.Oldest Tamil book also mentioned camels in addition to Sangam Literature

5.English words and Tamil words might have been derived from Ustra and Kramela (Sanskrit words for camels)

6.Camels are also shown as Vahana of Hindu Gods giving it some sanctity.

7.Camels were part of Pancha tantra fables and Katha Sarit Sagara stories and so even children knew about it.

7.Panini who lived 2700 years ago mentioned Camel Corps and so it was part of Hindu Army.

8.Mahabharata story about camels show that it was part of epic literature.

 

-Subham–

 

 

 

 

 

இந்துக்கள் பாம்புகளை கும்பிடுவது ஏன்? விஞ்ஞான விளக்கம் (Post No.5293)

Written by London swaminathan

Date: 6 August 2018

 

Time uploaded in London – 9-51 AM  (British Summer Time)

 

Post No. 5293

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

இந்த ஆண்டு (2018) ஆகஸ்ட் 15ம் தேதி நாக பஞ்சமி வருகிறது. நாடு முழுதும் இந்துக்கள் பாம்புகளைக் கும்பிடுவார்கள்.

நாக பஞ்சமி என்றால் என்ன?

எப்போது?

ஏன் பாம்புகளை வழிபட வேண்டும்?

இது பற்றிய இரண்டு கதைகள் என்ன?

கொஞ்சம் ஆராய்சி செய்வோமா?

 

சில பகுதிகளில் நாக பஞ்சமியை ஒரு மாதம் வரை கொண்டாடுகிறார்கள். ஆடி மாத பஞ்சமியிலிருந்து ஆவணி சுக்ல பக்ஷ பஞ்சமி வரை கொண்டாடுகிறார்கள்.

 

நாக பஞ்சமி தினத்தன்று என்ன செய்வார்கள்?

பாம்புகளை வழிபடுவார்கள்;

 

பாம்புப் புற்றுகளில் பால் வார்ப்பார்கள்

 

பாம்பு, பறவைகளின் படங்களை சுவர்களிலும் கோலங்களிலும் வரைவார்கள்.

 

பருப்பு, கோதுமைகளை அரைத்து அதில் புல்லை முக்கி பாம்பு போல செய்வார்கள். அத்தோடு இனிப்புகளைப் பாம்புப் புற்றுகளில் இடுவார்கள்.

 

மானஸா தேவி என்னும் நாக தேவதையை வழிபடுவார்கள்

 

நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வழக்கம் இருக்கிறது

 

இது பற்றி இரண்டு கதைகள் உண்டு

ஒரு பிராஹ்மணப் பையனை பாம்பு கடித்து விட்டது. அவனைக் காப்பாற்ற அவனது இரண்டு சஹோதரிகளும் மானஸாதேவியை வழிபட்டனர். அந்தப் பையனுக்கு மீண்டும் உயிர் வந்தது. அவனும் சஹோதரிகளுக்கு விருந்து வைத்தான் ஆகையால் இது சஹோதர-சஹோதரி விருந்து நாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.

 

இரண்டாவது சம்பவம்

 

சந்த் என்ற வணிகனுக்கு மானஸா தேவி மேல் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. அவனது ஒவ்வொரு குழந்தையும் பாம்பு கடித்து இறந்தபோதும் அவன் வழிபட மறுத்தான். மீண்டும் ஒரு மகன் பிறந்தான்.

அந்த மகனுக்கு கல்யாண நாள் நிச்சயிக்கப்பட்டது. அந்த தினத்தில் மானஸா தேவி அந்த வணிகனுக்குப் பாடம் கற்பிக்க அந்த மணமகனைக் கடித்தாள்; அதாவது பாம்பு கடித்து அந்த மணமகன் இறந்தான்.

 

ஆனால் புது மணப்பெண், அந்த சடலத்தை எரிக்க வேண்டாம் என்று சொல்லி விரதம் இருந்தாள். அவளும் உடல் இளைத்து எலும்புக்கூடாகும் தருணத்தில் மானஸா தேவி மனம் இறங்கி அருள் பாலித்தாள். பிண மகன் மீண்டும் மணமகன் ஆனான். வணிகன் பெயர் சந்த். மணமகனை மீட்ட கற்புக்கரஸியின் பெயர் வெஹுலா.

 

இப்படி நாடு முழுதும் பாம்புக்கடி மரணங்களும் அவர்கள் மீண்டு வந்த அற்புதங்களும் உண்டு. நாயன்மார் ஆழ்வார் கதைகளிலும் பாம்புக் கதைகள் இருக்கின்றன. இவற்றைத் தனியே எழுதியுள்ளேன்.

 

நாக பஞ்சமி மூலம் இந்துக்கள் எப்படி இயற்கையைப் பாதுகாக்கிறார்கள், போற்றுகிறார்கள் என்று இப்பொழுது வெளிநாட்டினரும் புகழத் துவங்கி விட்டார்கள்; அறிவியல் ரீதியில் பார்த்தால் பெரும்பாலான பாம்புகள் விஷமற்றவை. மக்களின் பயமும் பீதியும் வெளியாட்களின் பிரச்சனையும் தான் சிக்கலை உருவாக்குகிறது. மேலும் பாம்புகள் மனிதனின் எதிரிகள் அல்ல;  தானாக வந்து எவரையும் தாக்குவதில்லை. அதைத் தாக்கும்போதோ மிதிக்கும்போதோ அவை தற்காப்புக்காகத் திருப்பித் தாக்குகின்றன. குழந்தைகளும் பாம்புகளும் விளையாடும் படங்களைப் பார்க்கிறோம்; ஏனெனில் அவை நண்பனுக்கு நண்பன்; எதிரிக்கு எதிரி.

 

150 ஆண்டுகளுக்கு முன் வெளியான வெள்ளைக்காரர் புஸ்தகங்களில் சில படங்கள் இருக்கும்;

 

காளி கோவிலில் குழந்தைகளைப் பலி கொடுக்கும் படம்

பெண்களை, கணவனின் சிதையில் தூக்கி எறியும் படம்

மரங்களையும் பாம்புகளையும் பெண்கள் வழிபடும் படம்

 

இப்பொழுதும் இவைகள் பழைய புஸ்தகங்களிலும் பத்திரிக்கைகளிலும் உள. நான் அடிக்கடி லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரியிலும் லண்டன் யுனிவெர்ஸிட்டி லைப்ரரியிலும் பார்த்துப் பார்த்துச் சிரிப்பேன்;

 

இவை எல்லாம் உண்மையில் நடந்திருந்தால் இன்று இந்துக்களே உலகில் இருந்திருக்க மாட்டார்கள். கோடியில் ஒன்று நடந்தது உண்மைதான். இன்று மேலை நாடுகளில் இதைவிடக் கூடுதல் கொடுமைகள் நடப்பதை லண்டனில் பத்திரிக்கைகளில் தினமும் படிக்கிறோம்.

 

ஏனைய விஷயங்களை புறத்தே ஒதுக்கி வைத்து விட்டு பாம்பு வழிபாடு பற்றி மட்டும் பார்ப்போம்.

 

உலகில்  அறிவியல் அடிப்படையில் அமைந்த மதம் இந்து மதம்; எல்லாப் பண்டிகைகளுக்கும் அறிவியல் விளக்கம் உண்டு.

இந்தியா ஒரு விவசாய நாடு. மக்களின் மிகப்பெரிய தொழில் விவசாயம்.

உழுதுண்டூ வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின் செல்பவர் (குறள் 1033)

உழவர்களே  தன்னுரிமையோடு வாழ்வார்கள்; மற்றெல்லோரும் பிறர் முன்னால் கைகட்டி, வாய் புதைத்து வாழ்பவர்கள்; இயல்பாகவே உழவர் பின்னால் செல்பவர்கள்.

 

விவசாய உற்பத்தி குறைந்தால் பஞ்சம் வெடிக்கும்; அராஜகம் பிறக்கும் ஆகையால் விவசாய உற்பத்தியைப் பாதுகாப்பது அவசியம்.

எலிகள் மூலம் ஏற்படும் சேதம் மிக மிக அதிகம். அதோடு பூச்சிகளும் சேதம் விளைவிக்கும். இவைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது பாம்புகளே (Vital link in the food production chain) .

 

ஆதிகாலத்தில் வீட்டுக்குள் பாம்புகளைக் கண்டாலும் கூட அவைகளைக் கொல்ல மாட்டார்கள். பானைக்குள் அல்லது பெ ட் டிக்குள் பிடித்து வயற்காட்டில் விட்டு விடுவார்கள் அல்லது பாம்புப் பிடாரனை அழைத்து அவன் கையில் அந்தப் பணியை ஒப்படைப்பர்.

வயல் வெளிக்குள் நடந்து செல்வோரும் இரவில் ஒத்தையடிப் பாதையில் வருவோரும் கைகளைத் தட்டிக்கொண்டே வருவர் பாம்புகள் விலகி ஓடி விடும்! (பாம்புகளுக்கு காதுகள் உண்டா? அவைகளால் கேட்க முடியுமா என்பதை வேறு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கிவிட்டேன்; அதன் விஞ்ஞான விளக்கத்தை கட்செவி (கண்ணே செவி/காது) என்னும் ஆய்வுக் கட்டுரையில் காண்க)

ஆக எலிகளைக் கொல்ல பாம்புகள் உரிய அளவில் இருக்க வேண்டும் என்பது இந்துக்கள் அறிந்த உண்மை.

 

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி; ஆனால் நல்லோர் அவையில் புகுந்த பாம்புகளையும் அவர்கள் கொல்ல மாட்டார்கள் என்று ஸம்ஸ்க்ருத, தமிழ்ப் பாடல்கள் சொல்லும். ஆக பாம்புகளின் மீதுள்ள பயத்தை எப்படிப் போக்குவது?

குறிப்பாக பெண்களும் சிறுவர்களும் பயப்படுவர். ஆண்டு தோறும் பண்டிகை நடத்தி நாக பஞ்சமி கொண்டாடுவதன் மூலமும் வெள்ளிக் கிழமைதோறும் புற்றிலுள்ள பாம்புகளுக்குப் பால் வார்ப்பதன் மூலமும், நாக பஞ்சமி தினத்தன்று பாம்பு படங்களைக் கோலம் வரைபடம் ஆகியவற்றில் வரைவதன் மூலமும், கோவில் தோறும் நாகர் சிலைகளை வைப்பதன் மூலமும் மக்களை உளவியல் ரீதியில் (psychologically prepared)  இந்துக்கள் தயார்படுத்த்தினர்.

பாம்புகளைக் கட்டித் தழுவுங்கள்; கொஞ்சிக் குலவுங்கள் என்று நான் சொல்ல வரவில்லை; அதை அவஸியமின்றி அடித்துக் கொன்று அழிக்காதீர்கள்; அவைகளையும் இயற்கை எனும் சங்கிலியில் ஒரு வளையம் என்பதை உணருங்கள்.

 

பாம்புகளை அழித்தால் வயல் வெளியில் எலிகள் பெருகும்; எலிகள் பெருகினால் உணவு உற்பத்தி குறையும்.

 

வாழ்க நாக பஞ்சமி; வளர்க நாகங்கள் (புற்றுக்குள் மட்டும்)!!!

–subham–

 

சூரி நாகம்மா! (Post No.5292)

Written by S NAGARAJAN

Date: 6 August 2018

 

Time uploaded in London – 6-09 AM  (British Summer Time)

 

Post No. 5292

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சூரி நாகம்மா!

 

ச.நாகராஜன்

 

ஒரு பெரிய அவதாரம் நிகழும் போது அது ஆற்ற வேண்டிய பணிக்காக கூடவே சீடர்களும் பல்வேறு விதங்களில் பிறக்கின்றனர்.

 

மஹரிஷி ரமணர் திருவண்ணாமலையில் இருந்த போது அவரது வாழ்க்கை நிகழ்வுகளையும் உபதேசங்களையும் பல பக்தர்கள் பதிவு செய்தனர்.

அவர்களில் மிக முக்கியமானவர் சூரி நாகம்மா.

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட அவர் குண்டூர் மாவட்டத்தில் மங்களகிரிக்கு அருகில் இருக்கும் கொலனுகொண்டா என்ற கிராமத்தில் 1902 ஆகஸ்ட் மாதம் பிறந்தார். நான்கு வயதில் அவரது தகப்பனாரும் பத்து வயதில் அவரது தாயாரும் காலமாகி விட்டார்கள். அந்தக் கால வழக்கப்படி அவருக்கு பதினொன்றாம் வயதில் கல்யாணம் நடந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரே வருடத்தில் அவர் கணவனை இழந்தார்.

 

வாழ்நாள் முழுவ்தும் விதவையாக வாழ வேண்டிய துர்ப்பாக்கியம். அதை இறை நினைப்பில் ஈடுபடுத்தி தன்னை அதில் அர்ப்பணித்து வாழ்வை சிறக்க வைத்துக் கொண்டார் அவர்.

 

தனக்கான குருவாக ரமணரை வரித்தார். ஆசிரமத்திலேயே வசிக்க ஆரம்பித்தார். அவரது அண்ணன் சாஸ்திரி அவரை ஆசிரமத்தில் நிகழும் நிகழ்வுகளையும் மஹரிஷியின் உபதேசங்களையும் எழுதுமாறு கூறினார்.

 

இயல்பாகவே தெலுங்கில் கவிதை எழுதும் ஆற்றல் அவருக்கு இருந்தது. ஆனால் ஆசிரம நிகழ்வுகளை எழுதலாமா என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. அந்த நிகழ்வுகளைத் தனக்குக் கடிதமாக எழுதி அனுப்பலாமே என்ற சிறிய சகோதரரின் யோசனை அவருக்குப் பிடிக்கவே அவர் கடிதங்களை எழுதலானார்.

 

 

இன்று நமக்கு பொக்கிஷமாக கிடைத்திருக்கும் ‘லெட்டர்ஸ் ஃப்ரம் ரமணாச்ரமம்’ இப்படிப் பிறந்தது தான்!

சூரி நாகம்மா ஆசிரமத்திற்கு வருவதற்கு முன்னர் முனகால வெங்கடராமய்யா ஆங்கிலத்தில் ஆசிரமத்தில் நடப்பனவற்றை டைரியாக எழுதத் தொடங்கினார். சில காலம் எழுதிய பின்னர் டைரி நின்று விட்டது.

 

 

இன்னொரு அணுக்க பக்தரான தேவராஜ முதலியாரும் ஆசிரம நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார்.

இன்று நமக்கு ரமண உபதேசமாக கிடைப்பவை இவர்களது அரும் பதிவுகளினால் தான்.

 

1945ஆம் வருடம் நவம்பர் மாதம் 21ஆம் தேதி தனது கடிதம் எழுதும் பணியை சூரி நாகம்மா தொடங்கினார்.

எந்த நல்ல காரியமும் விக்கினம் இல்லாமல் முன்னேறாது என்பது உலக நியதி போலும்!

 

ஆசிரமத்திலும் கூட பொறாமை பிடித்தவர்கள் இருப்பார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடைபெற்றது.

ஆசிரமம் அமைந்தவுடன் அதன் நிர்வாகப் பொறுப்பை சர்வாதிகாரியாக ஏற்றார் ரமண மஹரிஷியின் பூர்வாசிரம சகோதரர். நிரஞ்ஜனானந்த ஸ்வாமி என்ற பெயருடன் அவர் நிர்வாகத்தை நடத்தி வந்தார். சின்ன ஸ்வாமிகள் என்று அவரை அனைவரும் அழைப்பது வழக்கம்.

 

ஒரு நாள் அவர் சூரி நாகம்மாவை அழைத்து . “ இனி இத்துடன் நிறுத்து’ என்றார். அப்போது அவரது கடிதங்கள் புத்தகமாக அச்சிடப்பட்டு வந்ததை ரமணரின் முன்னால் படித்து வர ஏராளமான பக்தர்கள் அதைக் கேட்டு மகிழ்ந்து வந்தனர்.

நாகம்மா படிப்பதை நிறுத்தினார். ஏன் என்று மஹரிஷி கேட்க சின்ன ஸ்வாமி கூடாது என்று சொல்லி விட்டார் என்றார் அவர்.

அப்படியா என்ற அவர் அருகிலிருந்த ராஜகோபாலய்யங்கார் என்பவரைப் பார்த்து, “நாம் படிக்கச் சொல்லுவது.அவர் கூடாதென்கிறது. இதெல்லாம் நன்றாயிருக்கு. இனி நாம் யாரையும் படிக்கச் சொல்லக் கூடாது போல இருக்கிறது! என்றார்.

 

 

இதை ராஜகோபாலய்யங்கார் அலுவலகத்தில் சொல்ல, படிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. எழுதுவதைத் தான் நிறுத்தச் சொன்னேன்” என்றார் சின்ன ஸ்வாமி.

மறுபடியும் படிக்கத் தொடங்கிய நாகம்மா மூன்று நாட்களில் கடிதங்களைப் படித்து முடித்தார்.

 

சின்ன ஸ்வாமியின் சொல்படி தனது கடிதங்களை ஆசிரமத்தின் வசம் ஒப்படைத்தார்.

 

சில நாட்கள் கடிதங்கள் எழுதுவதை நிறுத்திய அவர் பின்னர் மீண்டும் எழுதத் தொடங்கினார்.

 

 

அவை பின்னால் ரமணாசிரமக் கடிதங்கள் என்ற பெயரில் ஆசிரமத்திலிருந்தே அச்சிடப்பட்டு வெளி வந்தன.

கடிதங்கள் படிப்பதற்குச் சுவையாக இருப்பதுடன் ஆசிரம நிகழ்வுகளையும் பகவானின் பல உபதேசங்களையும் தருவதாக அமைந்துள்ளன.

 

இன்று ரமணரைப் பற்றி அதன் மூலம் அறிந்து கொள்வோர் அவருக்கு நன்றி பாராட்டாமல் இருக்க முடியாது.

சிறு வயதில் சொந்த வாழ்க்கையில் நேர்ந்த சொல்லவொண்ணா துக்கத்தைச் சுமந்தாலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு ரமண உபதேசங்களை வழங்கிய பெறும் பேற்றைப் பெற்றார் அவர்.

 

சூரி நாகம்மாவின் கடிதங்கள் ரமண பக்தர்களுக்கு ஒரு பொக்கிஷம்!

***