
WRITTEN BY R. NANJAPPA
Post No.7830
Date uploaded in London – – 15 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 7 – உணவுக் கனவு!
R.Nanjappa

உணவுக் கனவு!
வீட்டுப் பிரச்சினையை எவ்வளவு எளிதாகத் தீர்த்துவிட்டார் கவிஞர்! நிஜ உலகில் வீடு இல்லையென்றால் என்ன? கனவுலகில் பெறலாமே!
சரி, வீடு வந்தாயிற்று, உணவு?
இதையும் தருகிறார் கவிஞர் ஷைலேந்த்ரா– ஆம், கனவில்!
ஒர் இளைஞன்– ஏழை, வேலை கிடைக்கவில்லை, சாப்பாட்டுக்கு வழியில்லை. என்ன செய்வது?
கற்பனைக் குதிரையில் ஏறுகிறான். சேரிக் குழந்தைகளைக் கூட்டிக்கொள்கிறான், பாடுகிறான்!
Suraj zara aa paas aa,
Aaj sapno(n) ki roti pakayenge hum
Ae aasmaan tu bada meherbaan,
Aaj tujh ko bhi dawat khilayenge hum.
Chulha hai thanda pada, aur pet me aag hai
Garma garam rotiya(n) kitna hasi(n) kwaab hai!
Aaloo tamatar ke saath, imli ki chutney bane,
Roti karari si ke, ghee uspe asli lagey!
Baite kahin chaaon mein Aa aaj picnic sahi
Aise hi din ki sada, humko tamanna rahi
அப்பா சூர்யனே! சற்று அருகில் வா!
இன்று கனவில் ரொட்டி சுடுவோம்!
ஓ வானமே– நீ கருணை நிறைந்தவனில்லையா!
இன்று உனக்கும் விருந்து தருகிறோம்!
அடுப்பில் நெருப்பில்லை குளிந்திருக்கிறது (அதனால் என்ன)
வயிற்றில் தான் அக்னி எரிகிறதே!
சுடச் சுட ரொட்டி தயார்– ஓ என்ன அழகான கனவு!
உருளைக்கிழங்கும் தக்காளியும் கலந்து ‘சப்ஜி“!
அதனுடன் புளியம்பிஞ்சு சட்னியும் தயார்!
அடுப்பிலிருந்து சுடச்சுட ரொட்டி–
அதன்மேல் அசல் நெய் தடவுவோம்!
அடே அப்பா, என்ன மணம்!
இப்படி எங்கோ நிழலில் அமர்ந்து
பிக்னிக் போக வேண்டும்!
அப்படிப்பட்ட நாட்களும் வருமா–
அதுவே எங்கள் ஆசையாக இருக்கிறது!
Song: Suraj zara Film: Ujala 1959 Lyricist: Shailendra
Music: Shankar Jaikishan Singer: Manna Dey


கனவு என்றால் கூட ,கற்பனையே என்றாலும் எத்தனை யதார்த்தம் பாருங்கள்!
ஏதோ ‘கல்யாண சமையல் சாதம்‘ என்று பாடவில்லை. நாம் சாதாரணமாக உண்பதையே கேட்கிறார்!
“Seeking the food he eats” என்று ஷேக்ஸ்பியர் பாடவில்லையா!
சமையல் என்னும் சடங்கு!
சாதாரண ரொட்டி என்றாலும் அதை யாரோ சமைத்துத் தானே ஆகவேண்டும்?
அம்மா தானே உணவு சமைப்பவள்!
தினமும் அடுப்படியில் புகையுடனும் நெருப்புடனும் ரொட்டி சுடக் கஷ்டப்படுகிறாள்.
ஒரு சிறு பையன், இதைக் கவனிக்கிறான். அவனுக்கு சட்டென்று ஒரு ஐடியா!
அம்மாவிடம் ஓடுகிறான்–சொல்கிறான்:
मुन्ना बड़ा प्यारा, अम्मी का दुलारा
कोई कहे चाँद, कोई आँख का तारा
इक दिन वो माँ से बोला क्यूँ फूँकती है चूल्हा
क्यूँ ना रोटियों का पेड़ हम लगालें
आम तोड़ें रोटी तोड़ें रोटी–आम खालें
काहे करे रोज़–रोज़ तू ये झमेला
अम्मी को आई हंसी, हँसके वो कहने लगी
लाल मेहनत के बिना रोटी किस घर में पकी
जियो मेरे लाल, जियो मेरे लाल
ओ जियो जियो जियो जियो जियो मेरे लाल
முன்னா படா ப்யாரா, அம்மி கா துலாரா
கோயி கஹே சாந்த் , கோயீ ஆங்க் கா தாரா
இக் தின் வோ மாஸே போலா– க்யூ(ன்) ஃபூங்க்தீ ஹை சூல்ஹா
க்யூ ந ரோடியோ(ன்) கா பேட் ஹம் லகாலே(ன்)
ஆம் தோடே ரோடீ தோடே ரோடீ–ஆம் காலே(ன்)
காஹே கரே ரோஜ் ரோஜ் தூ யே ஜமேலா!
அம்மீ கோ ஆயி ஹ(ன்)ஸீ, ஹன்ஸ்கே யே கஹனே லகீ
லால் மேஹனத் கே பினா ரோடீ கிஸ் கர் மே பகீ
ஜியோ மேரே லால், ஜியோ மேரே லால்–
துஜ் கோ லகே மெரீ உம்ரு ஜியோ மெரே லால்
அம்மாவின் செல்லக் குழந்தை! அம்மாவுக்கு மிகவும் பிரியம்!
சிலர் சந்திரன் என்பர், சிலர் கண்ணின் மணி என்பர்!
ஒரு நாள் அம்மாவிடம் சொன்னான்:
“அம்மா, நீ ஏன் இப்படி தினம் தினம் அடுப்பை ஊதிக்கொண்டிருக்கிறாய்.?
நாம் ரொட்டி மரத்தை வைத்துவிட்டால் என்ன!
கொஞ்சம் மாம்பழம், கொஞ்சம் ரொட்டி–
இப்படிக் கலந்து சாப்பிடலாமே!
நீ ஏன் இப்படி தினமும் அடுப்பைக் கட்டிக்கொண்டு அவதிப் படுகிறாய்?”
இதைக்கேட்டு அம்மாவுக்கு சிரிப்புத்தான் வந்தது!
சிரித்துக்கொண்டே அவள் சொன்னாள்:
என் செல்லமே, உழைக்காமல் யார் வீட்டிலப்பா சோறு வரும்?
நீ நீண்ட ஆயுளுடன் வாழ்வாயாக!
என் ஆயுளும் சேர்ந்து உனக்காகட்டும்!
Song: Munna bada pyara Film: Musafir 1957 Lyricist: Shailendra
Music: Salil Chaudhury Singer: Kishore Kumar.


[ இது டைரக்டர் ரிஷிகேஷ் முகர்ஜியின் முதல் படம். லட்சியக் கலைஞர். Decent and sensitive. சாதாரண மக்களைப் பற்றியே கதை. ஆபாசம் இருக்காது–குடும்பத்துடன் பார்க்கலாம். ]
என் ஆயுளும் சேர்ந்து உனக்காகட்டும்– துஜ் கோ லகே மெரீ உம்ரு – இது வட இந்தியாவில் பெரியவர்கள் குழந்தைக்குச் சொல்லும் ஆசி வசனம்
என்ன கற்பனை–கருத்து பாருங்கள்!
தாய் படும் கஷ்டத்தைச் சகிக்காத சிறு பையன்!
இதெல்லாம் நாம் சிறுவயதில் பார்த்தது தானே– விறகு அடுப்பு, கரிக் கும்மட்டி, ஊதி ஊதி யாக வேண்டும், புகையுடன் இருந்தே பழகவேண்டும். அன்று மின்சார அடுப்பா, கேஸ் அடுப்பா?
ஆனாலும் அவனுக்கு உழைப்பின் உயர்வைச் சொல்லித் தரும் தாய்!
ஷைலேந்த்ரா சோஷலிசக் கவிஞர் என்றாலும் ‘நீ சும்மயிரு, உனக்குச் சோறு போடவேண்டியது அரசின் கடமை‘ என்று உபதேசம் செய்யவில்லை!
இன்று பாருங்கள்– நமது அரசியல் கட்சிகளெல்லாம் எல்லோரையும் எதற்கும் சர்க்காரையே நம்பி வாழும் பிச்சைக்காரர்களாக்கி விட்டன! மழையோ, புயலோ– அரிசி, பருப்பெல்லாம் வீட்டிற்குப் பையில் வந்து சேர வேண்டும்!
கனவு தீர்த்த பிரச்சினைகள் !
எல்லாம் சரிதான்– கனவு பிரச்சினையைத் தீர்த்துவிடுமா?
தீர்த்திருக்கிறது என்று சாஸ்திரத்தில் படிக்கிறோம். மனதால் கோயில் கட்டிய பூசலாரையும் அங்கு வந்த சிவபெருமானையும் பற்றி பெரிய புராணத்தில் படிக்கிறோம்!
ஐயா, இதெல்லாம் கட்டுக்கதை என்கிறீர்களா?
இன்று விஞ்ஞானமும் இதையே சொல்கிறது– ஆம் கனவு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்!
கனவில் தீர்வுகண்ட பத்து விஷயங்கள் பார்க்கலாமா?
1. மேரி ஷெல்லி Mary Shelley என்ற கவிஞருக்கு ஃப்ராங்கின்ஸ்டீன் Frankensteinஎன்ற கதை கனவில் வந்தது!
2. ராபர்ட் லூயி ஸ்டீவென்ஸன் Robert Louis Stevenson என்ற நாவலசிரியருக்கு டாகடர் ஜெகில் மிஸ்டர் ஹைடு Dr.Jekyll & Mr.Hyde என்ற கதை கனவில் வந்தது!
3. பால் மக்கார்ட்னீ Paul McCartney என்ற பீடில்ஸ் Beatles பாடகருக்கு “யெஸ்டர்டே” Yesterday என்ற ஹிட் பாட்டு கனவில் வந்தது.
இவர்கள் எல்லாம் கற்பனை உலகில் சஞ்சரிப்பவர் தானே, இதில் என்ன அதிசயம் என்பீர்களா?
கனவில் பிரச்சினைக்கு விடை கண்ட விஞ்ஞானிகளின் வரிசை இதோ-

4. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்: Albert Einstein ஓளியின் வேகத்தை Speed of Light கனவிலேயே கன்டறிந்தார்
Imagination is everything.
It is the preview of life’s coming attractions.
Imagination is more important than knowledge.
Never give up on what you really want to do.
The person with big dreams is more powerful than one with all the facts.
It is the preview of life’s coming attractions.
Imagination is more important than knowledge.
Never give up on what you really want to do.
The person with big dreams is more powerful than one with all the facts.
–Albert Einstein
5. நீல்ஸ் போர்: Niels Bohr அணுவின் இயல்பை கனவிலேயே கண்டார்
6. எலியாஸ் ஹோவ் : Elias Howe தையல் மிஷினில் ஊசியின் கண் எங்கு இருக்கவேண்டும் என்பதை கனவில் கண்டார்!
7. நமது கணித மேதை ராமானுஜம்: பல சூத்திரப் புதிர்களுக்கு விடை கனவிலேயே கண்டார்.

Srinivasa Ramanujam:
“While asleep I had an unusual experience. There was red screen formed by flowing blood as it were.I was observing it. Suddenly a hand began to write on the screen. I became all attention. That hand wrote a number of results in elliptic integrals. They stuck to my mind. As soon as I woke up, I committed them to writing.”
8ஓட்டொ லோவி ; Otto Loewi நரம்புகளின் இயக்கத்தை Nerve Impulse கனவில் கண்டறிந்தார்
9.ஆகஸ்ட் கெகூலே: August Kekule பென்ஃஜீன் மாலிக்யூலின் அமைப்பை structure of Benzene molecule கனவில் கண்டறிந்தார்.
10. ஃப்ரெடெரிக் பான்டிங்க்: Frederic Banting இன்சுலினை Insulin கனவில்தான் கண்டுபிடித்தார்.
இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லலாம்
அதனால் தான் நமது வேதாந்தத்தில் கனவைத் துச்சமாக நினைத்து ஒதுக்குவதில்லை. விழிப்பு நிலை, தூக்கம்– அது கடந்த நிலை போன்று கனவு நிலைக்கும் அங்கீகாரம் தந்திருக்கிறார்கள்.
ஆனால் பகற் கனவு அல்ல! இவர்கள் அனைவருமே கடின உழைப்பாளிகள்.
கனவு காணவேணும்– ஆனால் அது நமக்கு எஜமானனாகி விடக்கூடாது!
கனவு– வெற்று மனக்கோட்டையல்ல!
“If you can dream – and not make dreams your master;
If you can think – and not make thoughts your aim;
If you can meet with Triumph and Disaster
And treat those two impostors just the same;”
Yours is the Earth and everything that’s in it,
And—which is more—you’ll be a Man, my son!
என்று எழுதினார் ருட்யார்ட் கிப்லிங்க். Rudyard Kipling
Take time to Work – It is the price of success.
Take time to Dream – It hitches the soul to the stars.
கனவு வெற்றுக் கனவாக இருக்கக்கூடாது. இதை ஷேக்ஸ்பியர் அழகாகச் சொல்கிறார்:
O, who can hold a fire in his hand
by thinking of the frosty Caucasus?
Or cloy the hungry edge of appetite
by bare imagination of a feast?
Or wallow naked in December snow
by thinking of fantastic summer heat?
O,no, the apprehension of the good
gives but the greater feeling to the worse.
[Shakespeare: Richard II]
உழைப்பும் வேண்டும். அத்துடன் கற்பனை வளமும் லட்சிய நோக்கும் Imagination வேண்டும்!
****