

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.8202
Date uploaded in London – 18 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
மநு நீதி நூல் – பகுதி 52
மானவ தர்ம சாஸ்திரம் என்றும், மனு ஸ்மிருதி என்றும் அழைக்கப்படும் மநு நீதி நூலின் கடைசி அத்தியாயத்தில் 12 ஆவது அத்தியாயத்தில் – 73 ஸ்லோகங்களை மே 9 ம் தேதி பதிவிட்டேன். மொத்தமுள்ள 2685 ஸ்லோகங்களில் மீதி உள்ள 73 ஸ்லோகங்களை இன்று காண்போம். கடைசி இரண்டு மூன்று அத்தியாயங்கள் பிரமாணர்களுக்கானது. ஆயினும் சில விஷயங்கள் பொதுவானவை.
இன்றுடன் மானவ தர்ம சாஸ்திரம் என்னும் உலகின் முதலாவது சட்டப் புஸ்தகம் நிறைவடைகிறது; இது 52-வது பகுதி . இதை நிறைவு செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று!
முதலில் Bullet Points புல்லட் பாயிண்டுகளில் சில சுவையான விஷயங்கள்:–
.
மநு தர்ம சாஸ்திரத்தின் ஸ்லோகங்கள் அனைத்தும் பிருகு என்னும் முனிவர் வாய் வழியாக வருகிறது. மநு நேரடியாக நம்மிடம் பேசவில்லை. சட்டப் புஸ்தகத்தை முடிக்கும் முன்பாக அவர் கூறுகிறார் –
“வேதங்கள் மனிதர்களின், முன்னோர்களின், கடவுளரின் சாஸ்வதமான கண்கள்.அவைகளை எவரும் முழுதாக அறிய முடியாது” (அவ்வளவு மறை பொருள் உடையன) -12-94
**
வேதங்கள்தான் மனித இனம் தழைக்க, நிலைத்து நிற்க உதவுகின்றன.12-99
**
எவன் ஒருவன் வேதத்தின் உட்பொருளை உணர்கிறானோ அவன் மோட்சத்தை அடைவான் 12-102
**
12-103 ல் மிக அழகாக சொல்கிறார்:- “வேதங்களைப் பற்றி தெரியாமலே இருப்பதை விட அதைப் படிப்பவன் மேலானவன்.;வேதத்தை பொருளே தெரியாமல் பாராயணம் செய்தாலும் நல்லதுதான். ஆனால் அதைவிட நல்லது அதை நினைவிற் வைத்துக் கொள்வது . அதையும் விட சிறந்தது வேத தர்மத்தைக் கடைப்பிடித்து ஒழுகுவதாகும்”. 12-103
இதை வள்ளுவனும் கூறுகிறான் :-
மறப்பினும் ஒத்துக்கொள்ளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் –குறள் 134
(வேதத்தை மறந்தாலும் கற்றுக்கொள்ள முடியும்; வேத தர்மம் சொல்லும் ஒழுக்கத்தைக் கைவிட்டால் விமோசனமே இல்லை–குறள் -134 )
வள்ளுவன் சொல்லும் பார்ப்பானின் பிறப்பொழுக்கம் என்ன என்றும் இதே அத்தியாயத்தில் மனு சொல்லி விடுகிறார் . அவை ஆறு குணங்கள் – ஸ்லோகம் 12-83
***
இரண்டு வகையான வேத தர்மங்கள் உண்டு; அவை பிரவ்ருத்தி மார்க்கம், நிவ்ருத்தி மார்க்கம் என்று சொல்லி அவற்றையும் 12-88 முதலான ஸ்லோகங்களில் விளக்குகிறார்.
***

ஜனநாயகம் வாழ்க !
பத்து பேர் கொண்ட அறிஞர் சபை மூலம் முடிவெடுக்கச் சொல்லி ஜனநாயக அசெம்பிளிக்கு பிள்ளையார் சுழி போடுகிறார் -ஸ்லோகம் 12-111 முதல் 12-115 வரை
ஆயிரம் முட்டாள்கள் உடைய அசெம்பிளியை விட ஒரு அறிஞன் சொல்லுவது மேல் என்றும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் .
**
பகவத் கீதை கருத்துக்களையும் காண்கிறோம் 12-91 மற்றும் 12-125.
**
இறுதியில் எவன் ஒருவன் இந்த நீதி நூலைப் பின்பற்றுகிறானோ அவன் வாழ்வாங்கு வாழ்ந்து நல்ல கதியை அடைவான் என்றும் சொல்லுகிறார் . பிராமணர்களுக்கு மநு விதிக்கும் கட்டுப்பாடுகள் மற்ற மூன்று ஜாதியினரையும் விட மிகக் கடுமையானது என்பதை 12 அத்தியாயங்களையும் படித்தவர்களுக்கு நன்கு விளங்கி இருக்கும் .
மனு நீதி நூல் 12-126 உடன் நிறைவு பெறுகிறது.
முழு ஸ்லோக மொழிபெயர்ப்புகளை இணைப்பில் காண்க:-











tags –வேதமே கண்கள், நூல் நிறைவு, மநு நீதி நூல் – பகுதி 52
