வரலாற்றுப் புதிரும் 2 புதிய கல்வெட்டுகளும் (Post No.8622)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8622

Date uploaded in London – –3 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்த மாபெரும் பாரத பூமியில் இன்னும் புதிய கல்வெட்டுகளும், பழங்கால நாணயங்களும் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. இந்த 2020 ஆகஸ்ட்- செப்டம்பரில் இரண்டு புதிய கல்வெட்டுகள் கிடைத்ததை பத்திரிகைகள் வெளியிட்டன . இதில் ஒன்று பாடல் கல்வெட்டு.

இதற்கிடையில் தேவாரம் திருவாசகப் பாடல்பெற்ற தலங்கள் தோறும் விஜயம் செய்து , சுவாமி தரிசனம் செய்வதோடு , நம்மைப் போன்றோருக்காக புகைப்படங்களையும் ஊடகங்களில் வெளியிடும் லால்குடி வேதா குன்னாண்டார்கோவிலில் சந்நிதிக்கு இருபுறமும் வெவ்வேறு நிலையில் துவார பாலகர் இருப்பதை வெளியிட்டு இந்தப் புதிருக்கு விடை என்ன? என்று வினவியுள்ளார். விடை    தெரிந்தால் பகருங்கள் ; எல்லோருக்கும் பகிருங்கள்

துவார பாலகர் சிலைகள் இரு புறமும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் குன்னாண்டார் கோவிலில் வெவ்வேறு பாணியில் அமைந்துள்ளது

லண்டனில் பணி யாற்றிய  லால்குடி திரு. வேத நாராயணன் இப்பொழுது தமிழ் நாட்டில் உள்ளார்.

******

2 புதிய கல்வெட்டுகள்

1.சடையவர்மன் சுந்தர பாண்டியனின் 13ஆவது ஆட்சியாண்டுக்  கல்வெட்டு வந்தவாசிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது,   இது கி.பி.1266ம் ஆண்டுக்கு கல்வெட்டு . இது வரி விலக்கு முதலிய செய்திகளைத் தந்தபோதும் , சுவையான விஷயம் என்ன வென்றால் இது குறிப்பிடும், திருவானைக்காவும் ஆதித்த மங்கலமும் சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஊர்களாகும்.

2. இரண்டாவது கல்வெட்டு பாடல் பெற்ற தலமான காளையார் கோவிலில் கிடைத்த பாடல் கல்வெட்டு ஆகும். கல்வெட்டுச் செய்தி தமிழில் இருப்பதால் வாசகர்களே படித்து அறிய முடியும்

Tags-  புதிய கல்வெட்டு, பாடல் கல்வெட்டு, துவாரபாலகர், சுந்தர பாண்டியன், குன்னாண்டார் கோவில்.

–SUBHAM—-

Leave a comment

Leave a comment