TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- Part 5(Post No.9042)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9042

Date uploaded in London – –16 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி 5

Panini  Sutras from his Ashtadhyayi continued……………………………..

உலகம் முழுதும் புழங்கும் எல்லா பழைய மொழிச் சொற்களும் சம்ஸ்க்ருதம், தமிழ் ஆகியவற்றிலிருந்தே சென்றன என்பதை நிரூபிப்பதே இந்தக் கட்டுரைத் தொடரின் முக்கிய நோக்கம் 

XXXX

1-4-69

ACCHA – AGO; BEFORE

THIS IS ONLY MY GUESS; I NEED MORE PROOF TO SUSTATIATE MY CLAIM

XXX

கண்- தமிழ் சொல் இல்லை?

SUTRA 1-4-74

SAAKSHAAT – SIGHT; சாட்சாத்

SA+ AKSHA – MAKE IT VISIBLE WHICH IS NOT VISIBLE TO NAKED EYE/AKSHA

சாக்ஷி ; சாட்சி = கண்ணுக்குத் தெரியாதவற்றைப் புலப்பட வைத்தல் அக்ஷ= கண்  (மீனாக்ஷி, காமாக்ஷி, விசாலாக்ஷி )

IN TAMIL COURT WITNESSES ARE CALLED SAATCHI

EYE IS ALDSO A SANSKRIT WORD – AKSHA

IT BECOMES AANKH IN HINDI/SPOKEN FORM

அக்ஸ = ஐ/ஆங்கிலத்தில்  = ஆங்க் = திருப்பிப் படித்தால்  கண்

சாட்சி = சைட் /ஆங்கிலத்தில்

IF YOU REVERSE IT – MIRRORED – IT GIVES TAMIL WORD – KANN

SO AKSHA- EYE- AANKHAN—KAN ARE ALL COGNATE WORDS

SIGHT – SAATCHI- SAAKSHAATH

XXX

மனது – தமிழ் சொல் இல்லை?

1-4-75

MANAS – MIND – MANM – MANATHU மனஸ் =மனது மைண்ட் /ஆங்கிலம்

SANSKRIT WORD MANAM IS USED IN TAMIL FOR OVER 2000 YEARS. IT IS SANGAM TAMIL LITERATURE AND FAMOUS TIRUKKURAL.

THE BEAUTY IS IT COMES CLOSER TO ENGLISH THAN SANSKRIT

MANAs – MANAthu; S =T ஸ் =து

TION IN ENGLISH IS PRONOUNCED AS SION IN ALL THE WORDS; SO T=S

TAMILS ALSO CHANGE ALL S IN TO T WHEN IT COMES FROM SANSKRIT

MANAS – MANAthu; VAYAS- VAYAthu; MAASA/MONTH-MAAtha/ MANUSH-MANItha

S= T IN ALL THE ABOVE WORDS.

தமிழிலும் அங்கியத்திலும் மட்டும் ஸ் = த  ஆவது தமிழும் ஆங்கிலமும் எவ்வளவு நெருக்கம் என்பதைக் காட்டும்

ஆங்கிலத்தில் டியன் TION என்று ஸ்பெல்லிங் எழுதிவிட்டு SION ஷன் என்றே படிப்பர்

வயஸ் = வயது; மனஸ் = மனது; மாச =மாத ; மனுஷ் = மனித

SO ENGLISH FOLLWS TAMIL IN CONSTRUCTION IN MANY WORDS; BUT NOT ALL THE  WORDS.

SCHOLARS POINT OUT THAT THE SANSKRIT WORD MANUSHYA/ MAN IN ENGLISH/ MANITHAN IN TAMIL ARE DERIVED FROM MAN=THINK; MAN IS FAMOUS FOR HIS THINKING AND DECIDING WHAT IS GOOD AND WHAT IS BAD. THAT IS WHY IT IS CALLED MANU SMRTI; THAT MEANS GREAT THINKER’S GUIDE BOOK

மனதினால் எண்ணி நல்லது கெட்டதை முடிவு செய்யும் திறன் இருப்பவன் மனிதன் = மனஸ் உள்ளவன்; இதைச் சொன்னவரை மனு என்று சொல்வர்- அது ஆங்கிலத்தில் மேன் MAN ஆனது. நல்லது கெட்டதை முதல் முதலில் எழுதிய குறிப்புகளை மனு ஸ்ம்ருதி என்று அழைத்தனர். இதில் இடைச் செருகல்களை நீக்கிப் படித்தால் உலக மகா அறிஞனை — மனிதனைக் – காணலாம்

XXXX

1-4-75

URAS- CHEST/MIND

ULLAM IN TAMIL  – MIND ; R=L

உரஸ் = மார்பு ; உள்ளம்

ர=ல ; உலஸ் =உள்ள

XXX

1-4-76

MADHYA – MEDI- MEDI TERRANEAN SEA- MEDIATION- MEDIAL

TAMILS EVERYDAY USE MADHYAANAM- MID DAY; ALSO MADHYASTHAM/MEDIATION

LOT OF ENGLISH WORDS ARE THERE WITH MEDI=MADHYA

மத்திய தரைக்கடல் ; மத்தியஸ்தம் ; மத்தியானம்

மத்தி = நடு

XXX

திரு மணம் – தமிழ் சொல் இல்லை?

1-4-77

PAANI- HAND; HASTE=HAND; UPAYAMANA= WEDDING

PAANIGRAHANA/ PAANIKRTYA – MARRIAGE; LITERALLY HOLDING HAND

HASTEKRTYA – HOLDING HAND

KAIPPIDITHTHAN IN TAMIL WEDDED; LITERALLY HELD HAND

UPAYAMANA – IN TAMIL MANM IS SMELL AND WEDDING.

BECAUSE IT IS A HOLY UNION TAMILS CALLED IT TIRU- MANAM

UPAYA MANA = TIRU MANA

IN SANSKRIT WE CAN ALSO INTERPRET TWO MINDS COMING TOGETHER; TWO HANDS COMING TOGETHER

THE WORD PAANI IS USED IN TAMIL AS VERB PANNU- DO WITH YOUR HANDS SOMETHING

HASTA IS IN ENGLISH AS HAND

பாணி = கை ; ஹஸ்த = கை

பாணிக்ரஹணம் = கைப்பிடித்தல் = கல்யாணம்

ஹஸ்த/HAND க்ருதே = கைப்பிடித்தல் = கல்யாணம்

உபயமன = திரு மணம்

மன = மணம் = கல்யாணம்

பாணியால் செய்வது = பண்ணுவது

பண்ணு = செய்

XXX

1-4-78

PRAATVA= ROAD; WAY

BANDANE  =BOND, BIND; BONDED LABOUR

TAMILS USE BANDHU/RELATIVE; PAASA BANDHAM= RELATIONSHIP/ AFFECTION

பந்தம், பந்து, பந்தனம் , பாச பந்தம்

XXX

1-4-79

JEEVIKA = LIVE = EVE IN BIBLE= VIVE IN FRENCH

J BECOMES Y; YEEVE= JIVATMA (JESUS=YESU; JUDA=YUUDHA; JOSEPH= YUUSUF)

VIVE LA FRANCE – LONG LIVE FRANCE

READ MY RESEARCH ARTCLE SANSKRIT IN BIBLE IN TAMILANDVEDAS.COM

ADAM= ATMA/PARAMATMA, EVE=JEEV+ATMA ACCORDING TO KANCHI PARAMACHARYA (1894-1994) ; TH UPANISHAD STORY IS USED AS ADAM AND EVE IN THE BIBLE;

LEFT BONE BECAME WOMAN – VAAMA=LEFT

THE ARDHANAARI STOLEN IS ALSO USED IN BIBLE IN ADAM AND EVE STORY.

SEMETIC PEOPLE STOLE ALL HINDU CONCEPTS AND INCLUDED IN THE VERY FIRST CHAPTER OF THE BIBLE

MAN= MANUSHA; WOMAN= VAAMANA/LEFT PART OF MAN/LORD SHIVA

ARDHA NAARI = HALF SHIVA+HALF UMA/PARVATI

ஜீவ – வீவ் VIVE /பிரெஞ்சு = பை பிளில் EVE ஈவ்

கிறிஸ்தவ, யூத , இஸ்லாமிய மதங்கள் பரமாத்மா /ஆடம் ADAM/ATMA

ஜீவாத்மா =ஈவ் JEEVE= EVE என்று சொல்லுவது உபநிஷத்தில் ஒரே மரத்தில் உட்கார்ந்த இரு பறவைக் கதை என்பதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) விளக்கியுள்ளார்.

முதல் மனிதன் இடது விலா எலும்பை முறித்து பெண்ணை உருவாக்கினான் என்பதும் அர்த்த நாரி கதை ஆகும். வுமன் /பெண் = வாம/ இடது புறம்

WO MAN  VAAMA=LEFT RIB

பைபிளின் முதல் அத்தியாயமே இந்துக்களிடமிருந்து எடுக்கப்பட்ட கதை. மற்ற செமிட்டிக் மதங்களும் ஒப்புக் கொள்கின்றன ; முதல் அத்தியாயம் முழுதும் சஸ்கிருதச் சொற்கள் ; இது போல எழுப்பத்துக்கும் மேலான  சம் ஸ்கிருதம் இருப்பதை “பைபிளில் சம்ஸ்க்ருதம்” (Sanskrit in Bible) என்ற என்னுடைய ஆராய்சசிக் கட்டுரையில் காண்க

TO BE CONTINUED…………………………………….

GS- TAMIL WORDS-5

சௌபாக்யம் அருளும் சுக்கிரன் !!! -PART 1 (Post .9041)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 9041

Date uploaded in London – – 16 DECEMBER 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து திங்கள்கிழமை தோறும் ஒளிபரப்பாகும் ஞான மயம் நிகழ்ச்சியில்

14-12-2020 அன்று ஒளிபரப்பப்பட்ட உரை!

FOR LIVE SPEECH PLEASE GO TO FACEBOOK.COM/GNANAMAYAM

       சௌபாக்யம் அருளும் சுக்கிரன் !!!

                                       Kattukutty

அன்பர்கள் அனைவருக்கும் ஸ்ரீனிவாசன் அன்பான மாலை வணக்கம்

கேள்வி – மக்களை மகிழ்ச்சிகரமாக வைக்கும் கிரகம் எது???

உலகத்திலேயே மிக மிக சந்தோஷகரமான வாழ்க்கை அமையப் பெற்ற

அதிர்ஷ்டம் யாருக்கு தெரியுமா????

அதிக பணம் வைத்திருப்பவருக்கா??? அல்லது

எல்லா வசதிகளும் பங்களாக்கள், கார்கள் எஸ்டேட்டுகள் வைத்திருப்பவருக்கா???

அல்லது நினைத்ததை எல்லாம் நடத்தி வைக்கும், ஆட்கள் உடைய அதிகாரம்

உடைய அரசியல்வாதிகளுக்கா???

உலெகெங்கும் பத்திரிக்கைகளிலும், T V க்களிலும் தினசரி வரும் சினிமா ஸ்டார்களுக்கா?

இந்த கேள்விக்கெல்லாம் விடை…

மனதறிந்து நடக்கும் மனைவி இருந்தாலே போதும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு!!!

இதை கேட்கும் அல்லது tamilandvedas ஐ படிக்கும் அனைவருக்கும் நெஞ்சை

உறுத்திக் கொண்டிருக்கிற விஷயம் இது – “மனைவி” என்றவுடன், அதையெல்லாம்

மறந்து தான் உங்கள் பேச்சை கேட்க வந்திருக்கும் எங்களுக்கு அவளை மீண்டும்

ஞாபகப்படுத்தி துனபுறுத்தாதீர்கள்……….என்கிறீர்களா?

30-11-2020 தேதி. ஒருதினசரியில் மனைவியிடம் காப்பி கேட்டிருக்கிறான் கணவன்.

தராததால் அவன் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி…….

ப்பூ இவ்வளவுதானா??? எங்கள் வீட்டுல காப்பி கேட்டுக் காத்திருப்பது

தினசரி நடக்கிற விஷயமாச்சே……..

சரி. விஷயத்திற்கு வருவோம்.

சுக்கிரனின் சிறப்பு

நடனம், இசை, கவிதை,வரைகலை, சிற்பம் போன்ற 64 கலைகளுக்கு நாயகனும்,

களத்திர காரகனும் , காதல் மன்னனும் , கவர்ச்சி நாயகனும், என்றும் இளமைத்தோற்றம்

அளிப்பவனும், ஆடை அலங்காரத்திற்கும், வாசனை திரவியங்களுக்கு அதிபதியும்,

அரண்மனை போன்ற பெரிய வீடுகளுக்கும், விதம் விதமான வாகனங்களுக்கு அதிபதியும்,

பசு , பால் ,எல்லா வெண்ணிற பொருட்களுக்கும்,ஆடை, பட்டுத்துணிகளுக்கும்,

சுருக்கமாக சொல்லப்போனால் எல்லா சுகமளிக்கும் பொருட்களுக்கும்

சுக்கிரனே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு காரணம்!!!!

அயன, சயன, சுக, போக பாத்யாதிபதி சுக்கிரனே!!!!

எந்த கிரகமும் 1,4, 7, 10 ல் இருந்தால் “கேந்திராதிபத்ய தோஷம்”

உண்டு என்பார்கள் ஜோதிட வல்லுனர்கள்.

கேந்திராதி பத்ய தோஷமே இல்லாத ஒரே ஒரு கிரகம் சுக்கிரனே!!!(7ம் இடம் தவிர)

வெளி நாட்டினர் இதன் ஒளியை கண்டு மயங்கி அழகு தெய்வத்தின்

பெயரையும் இந்த கிரகத்தின் பெயரையும் “வீனஸ்”என்று

வைத்தனர்!!! மழையை வரவழைப்பதும இவரே…..இவருக்கு

“மழைக்கோள்” என்றும் பெயர்

சுக்கிரனின் பிறப்பு

பிரும்மாவின் மானஸ புத்திரர்களில் ஒருவரான “ப்ருகு” என்னும்

முனிவருக்கும் “புலோமிசை” என்பவளுக்கும் பிறந்தவர் தான்

பார்க்கவன்(சுக்கிர பகவான்)..

காசி சென்று பல காலம் லிங்கப் பிரதிஷ்டை செயது சிவனைக் குறித்து பலகாலம்

தவம் செய்தார் சுக்ரன்.

அவர் தவத்தை மெச்சி சிவபிரான் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி வாய்ந்த

“மிருத சஞ்சிவினி” என்ற மந்திரத்தை அவருக்கு உபதேசித்தார்.

பார்க்கவன் என்ற சுக்கிரனிடமிருந்த இந்த சக்தியை அறிந்து கொண்ட அசுரர்கள்

அவரைத் தங்கள் குருவாக ஏற்றுக்கொண்டார்கள்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அவ்வப்போது போர் நடக்கும்.

அசுரர்கள் பலர் இறந்தனர். அசுரர்களின் அரசன் விருஷ பர்வா,

குல குரு காலில் விழுந்து காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டான்.

அனவரையும் உயிர்ப்பித்தார் சுக்கிரன். அரண்டு, மிரண்டு போன தேவர்கள்

சிவனிடம் போய் முறையிட்டனர். சிவன் நந்தியை ஏவ, பார்க்வன் என்ற சுக்கிரனை

கொண்டு வர, அப்படியே விழுங்கி விட்டார் .

சிவ பெருமான் வயிற்றிலேயே ஆயிரம் ஆண்டுகள தவம் செய்தான் பார்க்கவன்.

அவன் தவ யோகத்தை மெச்சி அவனை வயிற்றிலிருந்து

வெளியே கொணர்ந்தார் சிவன்.

வெண்மை நிறமாக அதாவது சுக்கிலம் என்றால் வெண்மை வெளிப்பட்டதால் சுக்கிரன் எனப்

பெயர் பெற்றார் பார்க்கவன்.

அசுரர்களுக்கு ஆச்சாரியாராக இருந்ததால் “சுக்ராச்சாரியார்” என்ற பெயரையும்

பெற்றார் சுக்கிர பகவான்!!!

புராஜெக்ட் – சஞ்சீவினி !!!

தேவர்களுக்கு கவலையோ கவலை. இப்படி மிருத சஞ்சீவினி உடைய

அசுரர்களுடன் சண்டையிட்டால் நாம் ஜெயிக்க முடியாததுடன்

அழிந்தே போவோம் என்பதே அவர்கள் கவலை.

அனைத்து தேவர்களும், குருவான பிரஹஸ்பதியுடன் மந்திராலோசன நடத்தினர்.

கடைசியில், பிருஹஸ்பதியின் மகன் கசன் எனபவனை அசுரகுருவிடம் சிஷ்யனாக்குவது,

பிறகு அந்த மிருத சஞ்சீவினீ மந்திரத்தை தந்திரமாக கற்றுக் கொண்டு வந்து விடுவது…..

”புராஜக்ட் – சஞ்சீவினி” ரெடி!!!!

வெற்றிலை பாக்கு ஆயிரம் பழத்தட்டுகளுடன் சுக்கிராச்சாரியாரின்

காலில் விழுந்தான் கசன். யார் என்று கேட்டார் சக்கிராச்சாரியார்.

தான் இன்னாரென்ற முழு உண்மையைக் கூறி தன்னை மாணவனாக ஏற்றுக்கொள்ளும்படி

கூறினான் கசன்.

அக்கால வழக்கப்படி காலில் விழுந்து சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி

வேண்டிக் கொண்டதால், அவரும் முழு மனதுடன் சம்மதித்தார்.

தேவயானியின் ஒரு தலை ராகம்

இனிமேல் தான் வருகிறது காதல் கதை!!!

சுக்கிரச்சரியாருக்கு மிக மிக அழகான பெண்ஒருத்தி… பெயர் தேவயானி……

அப்பாவிற்கு தொண்டு செய்வாள் அவள்.

கரு கரு முண்டங்களான அசுர ஜன்மங்களையே பார்த்த அவள்

கண்களுக்கு சிவப்பான, அழகான, தேவகுமாரன் கசனைப் பார்த்ததும்

அவன் மேல் அவளுக்குக் காதல் உண்டாகிவிட்டது…….

பார்த்தார்கள் அசுரர்கள். இப்படி “எதிரி” கேம்பிலிருந்து ஒருவன்

வந்து துணிச்சலாக குருவிடம் பாடம் கற்க வந்ததும், குரு அவனை ஏற்றுக் கொண்டதும்

அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை…….

கொலை முயற்சி

அசுரர்கள் ஒரு நாள் அவனை கொன்று கிணற்றில் வீசி விட்டனர்.

கசனைக் காணாத தேவயானி சுக்கிராச்சாரியாரை நச்சரித்ததால் ஞான திருஷ்டியில்

கசன் கிணற்றில் கண்ட துண்டமாக கிடப்பதை அவர் கண்டார்.

தன்னை நம்பி வந்த சீடன் இப்படிக் கொலையுண்டதை

சகிக்காமல் அவனை உயிர்ப்பித்தார்.தேவயானிக்கு சந்தோஷம் பொங்கியது….

மறுநாள் காலையில் அசுரர்களுக்கு ஒரே ஆச்சரியம்

நேற்று வெட்டிப் போட்ட ஆள் இன்று கிளாசில் உட்கார்ந்திருக்கானே???

விஷயத்தை ஊகித்தறிந்த அசுரர்கள் பிளான் பி க்கு வந்தார்கள.

அதாவது கசனைக் கொன்று அவனை அவருடைய நாய்க்கே தீனியாகப் போட்டு விட்டார்கள்.

கிளாசில் கசனைக் காணாத

தேவயானி அழ, சுக்கிராச்சாரியார் ஞான திருஷ்டியில் பார்த்து

அதிர்ந்து போனார் .

அருமை நாயை இழக்க விரும்பாத அவர்

தேவயானியை கன்வின்ஸ் செய்யப் பார்த்தார்.

தேவயானி நான் கசனைக் காதலிக்கிறேன் என்றும், அவனில்லாமல் வாழமுடியாதென்றும்

கதறி அழ நாயின் வயிற்றிலிருந்து கசனை வரவழைத்து நாயையும்

காப்பாற்றினார். பார்த்தாரகள் அசுரர்கள் பிளான் “ சி “க்கு வந்தார்கள்…..

அதாவது கசனை கொன்று எரித்து சாம்பலை அவருடைய மதுபானத்திலேயே

கலந்து விட்டார்கள்.

மறுநாள் கசனை காணாத தேவயானி கதறி அழ, சுக்ராச்சாரியார்

கசா எங்கிருக்கிறாய்??? என்றார்.

நான் உங்க வயிற்றில் இருக்கிறேன் ஸ்வாமி !!! என்று குரல் வந்தது!

அதிர்நது போனார்கள் சுக்ராச்சாரியாரும், தேவயானியும்.

தேவயானி மனமுடைந்து கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு

முயற்சி செய்தாள். வேறுவழியே இல்லாமல் வயிற்றுக்குள் இருக்கும்

கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தை உபதேசம் செய்தார் சுக்ராச்சாரியார்.

வெளியே வந்த கசன் குரு த்ரோகம் செய்யாமல் அவர் உபதேசித்த சஞ்சீவினி

மந்திரத்தை அவரிடமே உபயோகித்து அவரை உயிர்ப்பித்தான்!!!.,

அவ்வளவுதான், தான் எதற்காக வந்தானோ அந்த வேலை முடிந்தது!!!

கசன் தன் குருவிடம் விடை பெறக் கிளம்பியதும் தேவயானி

கசனின் காலை பிடித்துக் கொண்டு கதறினாள்.

கசன் சொன்ன ஒரே பதில் – “நான் உன் தகப்பன் வயிற்றிலிருந்து வந்திருக்கிறேன்.

சரியாகச் சொல்லப் போனால், நான் உனக்கு சகோதரன் முறை ஆக வேண்டும்!!!”

அவ்வளவுதான் கசன், சுக்கரச்சாரியார் சொல்லச் சொல்ல, கிணற்றினில குதித்தாள் தேவயானி…

…அவ்வழியே வந்த குரு வம்சத்து அரசன் யயாதி என்பவன் அவளைக் காப்பாற்றினான்……

சுக்கிரச்சாரியாரின் சாபம்

எதிரியான தேவர்களுக்கு சஞ்சீவினி மந்திரம் போனதும், மகள்

கிணற்றில் விழுந்ததும், சுக்ராசாரியார் மனதை ரொம்பவுமே பாதித்தது.

வெகு நேர ஆராய்ச்சிக்குபின் மூல காரணம்”மது”அருந்தியதால்தான்

என்பதைக் கண்டு பிடித்தார் சுக்கிரச்சாரியார். மனது வெதும்பி

சாபம் இட்டார் அன்று. “எவன் எவனெல்லாம் மது அருந்துகிறானோ,

அவன் மதி இழந்து போகட்டும். அவன் பெண்களினால்

துன்பமுறட்டும். குடும்பத்தில் வறுமை வந்து கூத்தாடட்டும்”

இது தேவ லோகத்தில இருக்கிறவர்களுக்கு மட்டும் என்று

நினைச்சுகாதீங்கோ…….பூலோகத்தில இருக்கிற அமெரிக்கா,

லண்டன், ஜப்பான், இந்தியா உள்பட எல்லா நாடுகளுக்கும் தான்!!!

அவர் அன்று இட்ட சாபம் இன்றும் பலிக்கிறது. நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்

சுக்கிரனுக்குபிடிக்காத சமாசாரம்

“டிரிங்ஸ்”.

to be continued………………………………………………………………….

tags-   சுக்கிரன், சஞ்சீவினி மந்திரம்,  சுக்ராசாரியார்,  தேவயானி

மஹரிஷி தனுஸாக்ஷர்! (Post No.9040)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9040

Date uploaded in London – – 16 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹரிஷி தனுஸாக்ஷர்!

ச.நாகராஜன்

முன்னொரு காலத்தில் வாலதி என்ற முனிவர் ஒருவர் இருந்தார். மிகுந்த தவ வலிமை உடைய அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அது இறந்தும் போனது. இதனால் அவர் மிகுந்த துக்கம் அடைந்தார்.

ஆகவே இறப்பில்லாத சாஸ்வதமான புத்திரனை அடைய வேண்டுமென்று எண்ணம் கொண்ட அவர் உக்ரமான தவம் செய்தார். தேவர்கள் அந்த முனிவரிடம் கருணை மிகக் கொண்டனர். ஆனால் அவரது புத்திரனை தேவர்கள் போல சாஸ்வதமாய் இருக்கச் செய்ய மனமற்றவர்களாய் இருந்தனர்.

அவர்கள் அவரை நோக்கி, “ ஓ! முனிவரே, இறக்கக் கூடிய ஒருவனை எப்படியானாலும் இறப்பில்லாதவனாய் ஆக்குவதென்பது முடியாத காரியம்.

என்றாலும் கூட, உமது புத்திரனுடைய உயிரானது அவனது தேக அழிவைப் பொருத்ததாக இல்லாமல் வேறு வஸ்துவின் நாசத்தைச் சார்ந்ததாக இருக்கும்” என்று கூறினர்.

அதற்கு வாலதி முனிவர், “ஓ! தேவர்களே! இதோ இந்த மலைகள் ஆதி முதல் அழிவில்லாமல் அப்படியே இருக்கின்றன.அவைகளே என் புத்திரனின் உயிரிழப்பதற்குக் கருவி, காரணமாக இருக்கட்டும்” என்றார்.

“அப்படியே ஆகுக!” என தேவர்களும் அவருக்கு வரம் அளித்தார்கள்.

சில காலம் சென்ற பிறகு வாலதி முனிவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு மேதாவி என்று பெயர். அவன் இயற்கையிலேயே மிகுந்த கோபம் உடையவனாக இருந்தான். தனது பிறப்பு சம்பந்தமான விஷயங்களைக் கேட்ட அவன், இறப்பில்லாமல் இருப்போம் என எண்ணி, அகங்காரம் கொண்டு முனிவர்களை அவமதித்துக் கொண்டே இருந்தான். அவர்களுக்கு இடைஞ்சல்கள் செய்து உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்தான்.

      ஒரு நாள் மிகுந்த தவ சிரேஷ்டரான ‘தனுஸாக்ஷர்’ என்ற முனிவரை அவன் கண்டான். வழக்கம் போல மேதாவி அவரையும் துன்புறுத்தி இம்சை செய்தான். அவருக்கு அடங்காத கோபம் வ்ந்தது. அவனை நோக்கி அவர், “நீ சாம்பலாகக் கடவாய்” என்று சபித்தார். ஆனால் மேதாவி சாம்பலாகவில்லை.

உடனே தனுஸாக்ஷர் மேதாவியின் உயிர் போவதற்குக் காரணமாக அமையும் மலைகளை எருமைகளால் பிளந்தார். அம்மலைகள் பிளந்ததும் மேதாவி தன் உயிரை இழந்தான்.

மேதாவியின் தந்தை தன் மகனுக்கு நேர்ந்த கதியை நினைத்துத் துக்கம் தாளாமல் அவனைக் கட்டிக் கொண்டு அழுதார்.

அப்போது இதர முனிவர்கள் அவரை நோக்கி, “ஐயா! ஏன் இப்படி வீணாக அழுது புலம்புகிறீர்கள்? சாவுக்குட்பட்ட ஒருவன், விதியால் ஏற்படுவதை ஒரு போதும் எவ்விதத்தாலும் தடுக்க முடியாது” என்றனர்.

தனுஸாக்ஷர் எருமைகளைக் கொண்டு மலைகளைக் கூடப் பிளக்கும்படியான சக்தி உள்ளவராக இருந்தார்.

இந்த மாதிரி சிறிய தபஸ்விகள் வரங்களைப் பெற்று அதனால் கர்வம் கொண்டு சீக்கிரத்தில் நாசத்தை அடைகின்றனர்.

மஹாபாரதம் வன பர்வம் வாலதி ரிஷி பற்றிக் கூறுவதைக் காணலாம்.

***

tags — மஹரிஷி, தனுஸாக்ஷர்

LONDON (HINDUS) CALLING 13,14 DECEMBER 20 (Post.9039-C)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9039-C

Date uploaded in London – –15 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 TWO DAY BROACAST DETAILS ARE GIVEN BELOW:-

13-12-2020 SUNDAY – THAMIL MUZAKKAM/ TAMIL THUNDER

MRS DAYA NARAYANAN – PRAYER- TIRUPPAVAI

THIRUPPUGAZ- BY MRS JAYANTHI SUNDAR WITH SRIMATHY FAMILY (DAUGTERS) AND MRS LAKSHMI

MISS LAYASHRI KALYANASUNDARAM SANG A TAMIL SONG

BRHANNAYAKI – SPOKE ABOUY HOLY KASI- VARANASI

KALYANA PATTU FROM SARAS- BY DR RENUKA SUBRAMANYAM

“SAMBANDHI SAPPITAVE MAATTAAR”

MR RAMESH IYENGAR- REPORTED  FROM SRIVILLIPUTUR

MRS VAISHNAVI ANAND, CO PRODUCER READ  LONDON SWAMINATHAN’S ARTICLE “Tolkaappiyththil Varunan”.

MR NAGARAJAN –  SPOKE ON BHARATI IN FILM SONGS – PART 1

SRI L ANKA VIDEO RECORDING FROM AKSHAYA AND HER SISTER

PRODUCER – LONDON SWAMINATHAN AND CO PRODUCER MRS VAISHNAVI ANAND

XXXXXXXXXXXXXXXXXXXXXXX

xxxx

MRS KARPAGAM IYER, FLORIDA, USA SANG  MAITRIM BHAJATA -LIVE-

WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN AND IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

MR KATTUKKUTY SRINIVASAN SPOKE ON PANET SUKRA/VENUS

MISS LAYASHRI KALYANASUNDARAM

MR BALASUBRAHMANYAN RENDERED BRUHI MUHUN  DEHI OF SADASIVA BRAHMENDRAL

DR KANNAN SPOKE  ON “BHARATI ALVAN”

MRS NIRMALA NATARAJAN SANG TIRUPPAVAI

MRS ANNAPURANI PANCHANATHAN SANG KANNDA DEVOTIONAL FROM PURANDARADASA

SRI KALYANASUNDARA SIVACHARYA MADE AN ANNOUNCEMENT ABOUT GLOBAL RUDRA CHANTING ON 2, 3 KJANUARY 2021.

PRODUCER – LONDON SWAMINATHAN

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

NOW WE HAVE EXTENDED IT ON ONE MORE DAY, ON SUNDAYS.

BOTH OUR BROADCASTS ARE NON POLITICAL AND NON COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS A ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM

SUNDAYS  FOR TAMIL LANGUAGE

WHO DOES THIS?

I  (LONDON SWAMINATHAN) DO IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM  AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

PLEASE VISIT FACEBOOK.COM/GNANAMAYAM FOR THE PRODUCTIONS OF PAST WEEKS.

உலக இந்து சமய செய்தி மடல் 14-12-2020 (Post 9039-B)

COMPILED  BY LONDON SWAMINATHAN

Post No. 9039-B

Date uploaded in London – –15 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டிசம்பர் 14- ம்  தேதி —   திங்கட் கிழமை ,2020

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

XXXX

இந்த ஆண்டு நல்ல புனிதமான பண்டிகைகளுடன் நிறைவடையப் போகிறது ; டிசம்பர் 25-ம் தேதி வைகுண்ட ஏகாதசியும் டிசம்பர் 30- ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறும்

முதலில் அவ்விரு விழாச் செய்திகளைக் காண்போம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 25-ந்தேதி முதல் ஜனவரி 3-ந்தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.


இதற்காக ஆன்லைன் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கி தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஆன்லைனில் ரூ.300 கட்டணத்தில் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட் வீதம் மொத்தம் 2 லட்சம் பக்தர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வருகிற 24-ந்தேதி முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

அதன்படி ஒரு நாளைக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் என மொத்தம் 10 நாட்களுக்கு 1 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.

Xxxxx

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கொரோனா விதிமுறைகள் காரணமாக, 12 – 65 வயது உள்ளவர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகள், கர்ப்பிணியர் திருமலைக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது.இந்நிலையில், இவர்களுக்கும் தரிசன அனுமதி அளிக்கக் கோரி, தேவஸ்தான நிர்வாகத்துக்கு, பலரும் வேண்டுகோள் விடுத்தனர்.

இது குறித்து ஆலோசனை நடத்திய அதிகாரிகள், மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகள், கர்ப்பிணி உள்ளிட்டோருக்கும் தரிசன அனுமதி வழங்கிஉள்ளது.

Xxxx

திருப்பதி: ஏழுமலையான் லட்டு பிரசாதத்தை உலகம் முழுதும், ‘டோர் டெலிவரி’ செய்வதாக, சமூக வலை தளங்களில் விளம்பரம் வெளியிட்ட
போலி இணையதளம் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.


இந்த லட்டு பிரசாதத்தை உலகத்தின் உள்ள மூலை முடுக்குகளுக்கும் டோர் டெலிவரி செய்வதாக, ஒரு போலி இணையதளம் விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதனால், அந்த இணையதளத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, கண்காணிப்பு துறைக்கு உத்தரவிட்டு உள்ளார்.

Xxxx

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் திருப்பாவை பாசுரத்துடன் ஏழுமலையானை துதி எழுப்பும் நிகழ்ச்சி நடைபெறும்.

வைணவ திருத்தலங்களில் மார்கழி 1-ந்தேதி முதல் அம்மாதம் முழுவதும் சுப்ரபாத சேவை ரத்து செய்து ஆண்டாள் திருப்பாவை பாசுரம் பாடியபடி சாமியை துயில் எழுப்பக்கூடிய பூஜைகள் நடைபெறும்.

இந்நிலையில் வருகின்ற 16-ந்தேதி காலை 6.4 மணியளவில் மார்கழி மாதம் தொடங்குவதால் திருப்பதி கோவிலில் வருகிற 17-ந்தேதி முதல் சுப்ரபாத சேவை ரத்து செய்து 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தாயார் எழுதிய திருப்பாவை ஜீயர்கள் முன்னிலையில் பாடப்பட்டு சாமியை துயில் எழுப்பப்பட உள்ளது.

Xxxx

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை

பூலோக வைகுண்டம்என போற்றப்படும், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம், நாளை துவங்கி ஜனவரி, 4ம் தேதி வரை நடக்க உள்ளது.வரும், 25ம் தேதி அதிகாலை, 4:45 மணிக்கு, வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் என்ற, பரமபத வாசல் திறப்பு நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக, 24ம் தேதி மாலை, 6:00 முதல், 25ம் தேதி காலை, 8:00 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Xxxx

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா:

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சனீஸ்வரரை தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி விழா வருகிற 27-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு நடக்கிறது. அன்று சனீஸ்வரர், தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சனிப்பெயர்ச்சியன்று கோவில் சார்பில் 3 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Xxxx

உத்திரமேரூரில் கோயிலில் எடுக்கப்பட்ட தங்க புதையலை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஊர்மக்கள் முடிவு

தமிழ் நாட்டில் உத்திரமேரூரில் உள்ள கோவில் ஒன்றில் தங்கப் புதையல் கிடைத்துள்ளது. தங்கம் இருப்பதை அறிந்த சிலர்  அனுமதியின்றி கோவிலுக்குள் பூமியைத் தோண்டினர் . புதையல் செய்தி காட்டுத் தீ போல பரவவே மக்கள் கூ

ட்டம் வந்து கைகளில் கிடைத்ததை எல்லாம் எடுத்துச் சென்றது. இந்த செய்தியை அறிந்த வருவாய்த் துறை அதிகாரிகள் விரைந்து வந்து மக்களை எச்சரித்தனர்

கோயிலில் கிடைத்த நகைகள் அனைத்தும் அரசுக்கே சொந்தம் என்று அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோயிலில் கிடைத்த நகைகளை கொடுக்க பொதுமக்கள் மறுத்ததால் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து

கோயிலில் எடுக்கப்பட்ட தங்க புதையலை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஊர்மக்கள் முடிவெடுத்தனர்.

xxxx

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் வலிய படுக்கை என்ற மகா பூஜை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும்.

மாசி திருவிழாவின் 6-ம் நாள், பங்குனி மாத பரணி நட்சத்திரம் மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 முறை மட்டுமே நடைபெறும்.

அதன்படி கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பஞ்சாபிஷேகம், ,உஷத் கால  பூஜை, உச்சிக்  கால  பூஜை, வில்லிசை, அத்தாழ பூஜை, ஆகியன நடந்தன .

இதனை தொடர்ந்து வலிய படுக்கை என்னும் மகா பூஜை நடைபெற்றது.

Xxxxx

அச்சன்கோவில் ஆபரண பெட்டி தென்காசி வருகை ரத்து

அய்யப்பனின் ஐந்துபடை வீடுகளில் ஒன்றான அச்சன்கோவில் தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி முதல் தேதி முதல் 10-ந் தேதி வரை 10 நாட்கள் மண்டல மகோற்சவ திருவிழா நடைபெறும்.

இதனை முன்னிட்டு அய்யப்பனுக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த ஆபரணங்கள் அடங்கிய திரு ஆபரண பெட்டி கார்த்திகை மாதம் கடைசி நாள் அன்று புனலூர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள அரசு பாதுகாப்பு பெட்டக அரங்கில் இருந்து அதற்கென பிரத்யேகமாக அலங்கரிக்கபட்ட வாகனத்தில் தேவசம்போர்டு அதிகாரிகள் தலைமையில் கேரள போலீஸ் பாதுகாப்புடன் புறப்படும்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆபரண பெட்டி ஊர்வலத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆபரண பெட்டி புனலூரில் இருந்து புறப்பட்டு நேரடியாக அச்சன் கோவிலுக்கு சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

XXXXX

குடியரசு தின விழாவில் ராமர் கோவில் மாடல்

குடியரசு தின விழா, ஒவ்வொரு ஆண்டும், ஜன., 26ல், டில்லியில் விமரிசையாக கொண்டாடப்படும். ஒவ்வொரு மாநில அலங்கார ஊர்திகள், அந்த மாநிலத்தின் புகழை பறைசாற்றி, டில்லியில் ராஜபாதையில் வலம் வரும்.’இந்தாண்டு விழாவில், உத்தர பிரதேச மாநில ஊர்தியில், அயோத்தி ராமர் கோவிலின் மாடல் இடம் பெற வேண்டும்’ என, முதல்வர் யோகி ஆதித்யநாத் விரும்புகிறார்.

தீபாவளியன்று, அயோத்தி ராமர் கோவிலில் ஆறு லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன; இது, தங்கள் மாநில அலங்கார ஊர்தியில் பிரதிபலிக்க வேண்டும் என்பது யோகியின் ஆசை.

Xxx

அழகர்கோவில் உற்சவம்

வைணவத் திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் சிறப்பும் வாய்ந்த அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து, ராப்பத்து என்று விமரிசையாக நடத்தப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) தொடங்கி 24-ந் தேதி வரை பகல் பத்து உற்சவம் நடைபெறும்.

மேற்கண்ட நாட்களில் காலை வேளையில் சுவாமி கோவிலில் உள்ள கருடாழ்வார் சன்னதி எதிர்புறம் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இதனைத் தொடர்ந்து 25-ந் தேதி முதல் ஜனவரி 3-ந் தேதி வரை ராப்பத்து உற்சவம் நடைபெறும்.

Xxxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

tags–141220, உலக, இந்து சமய செய்தி ,மடல், வைஷ்ணவி ஆனந்த்

14-12-20 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH (Post No.9039-a)

COMPILED AND EDITED BY LONDON SWAMINATHAN

Post No. 9039-A

Date uploaded in London – –15 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Read by SUJATHA RENGANATHAN .

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

ONE pm London Time and 6-30 PM Indian Time Every Monday.

Even if you miss our live broadcast on Mondays, you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day. 

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

– Read by SUJATHA RENGANATHAN .

XXXXX

Eight-member expert panel set up to supervise Ram temple foundation-laying work

The Ram temple construction committee has set up an eight-member panel of India’s top engineers and structural experts headed by IIT-Delhi’s former Director V S Raju to supervise the foundation laying work for the temple.

The other members of the panel are CBRI-Rookie Director N Gopal Krishnan, NIT-Surat Director S R Gandhi, IIT-Guwahati Director T G Sitaram, IIT-Delhi’s professor emeritus B Bhattacharji, TCI advisor A P Mull besides Manu Santhanam of IIT-Madras and Pradipt Banerjee of IIT-Bombay.

XXXXXX

ISKCON monks cycle from Gurugram to Rajasthan

To primarily instil spiritual wisdom in those facing the consequences of COVID, five monks from  ISKCON Gurugram cycled to Bhiwadi in Rajasthan, carrying 100 spiritual books – from the Bhagavad Gita to a few written by ISKCON founder Acharya Srila Prabhupad – and no money.

Led by Padasevan Bhakta Das, the team comprising Kamal Madav Das, Pankaj Syam Das,; Parmatama Hari,; and Anup, started from Gurugram on December 2 and returned on December 4 . Pankaj, who filmed the trip and the video is up on ISKCON Gurugram’s YouTube page, SAID

“There was no bad part. The best part was meeting a daily wage earner, who sells nursery rhyme books and toy watches, probably earning Rs 300-400 a day. He took a few books and even invited us to his home in Alwar. There still are kind-hearted people in the world, and lack of resources is not a hindrance in offering service to someone.”

Xxx

Kerala’s Sivagiri to host virtual pilgrimage due to Covid-19

     

The annual Sivagiri pilgrimage at Sivagiri mutt here in Kerala, observed annually in memory of social reformer and sage, Sree Narayana Guru, will be virtual this time in view of the Covid-19 pandemic.

The 88th edition of the pilgrimage would be celebrated fully in adherence with the Covid protocols and guidelines.

It will be held on December 30, 31 and January 1 as virtual pilgrimage,”

To avoid heavy rush, only less than a thousand pilgrims would be allowed to enter Sivagiri daily, according to the Mutt officials

XXXX

Gold jewels discovered in Uthiramerur temple

Around 500-gm of gold ornaments were discovered from the historic Kujambeswarar temple in Uthiramerur village in Kancheepuram district. Reportedly built during the Chola period, the ornaments were found near the entrance of the temple during the ongoing renovation works.

According to local police, the ornaments were discovered on Saturday, however, it came to the public attention after videos and pictures of the same were shared widely on social media on Sunday. Revenue department officials carried out an inspection and took the ornaments to the Uthiramerur treasury, in the presence of a large police contingent.

Uthiramerur, a quaint village about 85 km from Chennai, suddenly found itself embedded into the foundation of democracy on Thursday when Prime Minister Narendra Modi spoke about the grassroots-level governance practiced there during the Chola period in the 10th century.

Xxx

Tirupati Balaji Temple to allow aged, children for darshan

The Tirumala Tirupati Devasthanams on Friday decided to relax the Covid-19 restrictions and allow children below 10 years of age, people above 65 years and pregnant women for darshan of Lord Venkateswara.

Temple Devasthanam started receiving a number of e-mails from devotees seeking relaxation of Covid restrictions to enable children, aged and pregnant women to have darshan of the Lord. Similar requests were also made by several devotees during the Dial Your Executive Officer programme. 
Generally, parents perform Annaprasana, tonsuring and ear-piercing to their children at Tirumala as part of fulfilment of their vows to the Lord. The aged devotees visit Tirumala for Shashtipurti, Shanti Pujas and other rituals for their well-being. Honouring the sentiments of devotees, the TTD decided to allow children and the aged for darshan, strictly adhering to the Covid-19 norms. 

xxxxx

Udupi Pejawar Swamiji meets Tamil Nadu governor

Pejawar Swamiji Shree Vishwaprasanna Theertha who is the trustee of Ayodhya Srirama Mandira Trust was on a visit to Tamil Nadu. The seer also visited the Tamil Nadu governor Banwarilal Purohit on Monday, December 7.

The governor who welcomed him expressed his happiness that the seer is shouldering the responsibility at a young age. He said that the sanctity of the Raj Bhavan is increased by the arrival of the seer.

The two later held discussions about Ayodhya Ram Mandir. The seer handed over to the governor a letter of the expectations of participation and support of all the Tamilians in the construction of Ram Mandir. He also invited the governor to Udupi.

The governor draped a shawl and presented a memento of Sri Krishna to him. Vishwa Hindu Parishad state president Srinivasan, private secretary Vishnumoorthi Acharya, Krishna Bhat and Vasudev Bhat Perampalli were present.

Xxx

Swiss man weds French-German woman in desi style

Villagers near Vanur near Viluppuram on Tuesday witnessed a Swiss groom and French-German bride tie the knot at a Shiva temple here. After the ceremony all guests were gifted books on Hindu traditions.

Yann Loosli (48) of Switzerland came to Auroville six years ago and befriended C Aurore Mabilat (43). Aurore was born to a French father and German mother in Auroville in Puduchery, where she now works as a primary school teacher.

Yann and Aurore eventually fell in love and tied the knot at Neela Kandeswarar temple in Kodur village near Vanur on Tuesday afternoon.

“We are devotees of Lord Shiva. The traditions and food culture of this land have a special place in our heart. We have a Lord Ganesha statue at our house entrance and many more idols of Hindu Gods in our pooja room,” Aurore said.

BJP Vanur union president Thanga Shivakumar told Express, “Based on the couple’s request, our partymen made all arrangements for the marriage.” The guests were all served south Indian meals, and later the couple was welcomed to their house with arthi.

xxxx

Hindus Britain mourn the passing away of Sri Jay Lakhani

Sri Dilip (Jay) Lakhani, a theoretical physicist and founder of the popular Hindu Academy, an organisation dedicated to the promotion of a comprehensive and rational vision of Hindu Dharma, passed away peacefully on 4th December in London.

Sri Lakhani was an inspirational figure for  Hindus across Britain.

Tributes and condolence messages poured in from Hindus and Dharma-followers across the world.

Gnanamayam team conveys its condolences to Lakhani’s family.

xxx

THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –

READ BY SUJATHA RENGANATHAN.

Please Wait for our Tamil News Bulletin

tags- sujata, world hindu news, 141220, 

—subham–

அடங்காத ஆத்திச்சூடியும் CONSULT ME TO INSULT-ம்-2 (Post.9038)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9038

Date uploaded in London – – 15 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அடங்காத ஆத்திச்சூடியும் CONSULT ME TO INSULT-ம் -2

Kattukutty

அடங்காத ஆத்திசூடி!

டங்கி நடக்காதே

தரிப்பது லாபம்

ராகு காலம் ஒண்ணரை மணி நேரம்.

என இளிக்கப் பழகு

தை கிடைத்தால் வாங்கிக் கொள்

ரோடு ஒத்து வாழாதே

மகண்டம் என்றைக்கும் உண்டு

ங்குவது இயற்கை

யோ பாவம்

ன்று பட்டால் உண்டு ஆபத்து

டு ஓடு ஓடிக் கொண்டே இரு

டதம் இல்லை அடிபட்டால்.

CONSULT ME TO INSULT  -2

(லுயிஸ் சேபியஸ் எழுதிய “2000 more insults” என்பதிலிருந்து சில துளிகள்)

அவனிடம் மூன்று மூக்குக் கண்ணாடிகள் உள்ளன. ஒன்று கிட்டப் பார்வைக்கு, இரண்டாவது தூரப் பார்வைக்கு, மூன்றாவது மற்ற

இரண்டையும் தேடுவதற்கு!!!

அவனுக்கு சிகரட் லைட்டரை விட தீக்குச்சியை உபயோகிப்பது

தான் பிடிக்கிறது. ஏனென்றால் சிகரட் லைட்டரால் பல்லைக் குத்த

முடிவதில்லையாம்!!!

‘வீட்டில் எஜமானனாக இருப்பது எப்படி?’ என்ற புத்தகத்தை வாங்கி

பல நாளாகியும் இன்னும் படித்து முடிக்கவில்லை……காரணம் அவன் மனைவி புத்தகத்தைப் படிக்க அனுமதி கொடுக்க மறுத்து விட்டாள்.

அவன் உயரம் 6 அடி.அது திடீரென்று ஐந்தரை அடியாக குறைந்து

விட்டது – காரணம் அவன்,சலூனுக்கு போய் வந்ததால்…….

அவனது மேலதிகாரி செய்வது எல்லாமே சரியான காரியமாகத் தான் இருக்கும்.முக்கியமாக அவர் தவறான காரியம் செய்யும் போது!!!.,

அந்தப் பணக்காரரின் நாய் குட்டி தொலைந்து போய்விட்டது.

ஆனால் பேப்பரில் விளம்பரம் போட மாட்டேன் என்கிறார். ஏனென்றால் அவர் நாய் குட்டிக்கு படிக்கத் தெரியாதாம்!!!

அவன் கஷ்டத்தில் இருக்கும் போது நீங்கள் அவனுக்கு உதவி செய்தால், அவன் உங்களை மறக்கவே மாட்டான்- முக்கியமாக

மறுபடியும் கஷ்டம் வரும் வரை……..

கண்டதும் காதல் ஏற்படவில்லை அவள் மேல் அவனுக்கு……..

இரண்டாம் முறை கண்டபோது தான் ஏற்பட்டது……காரணம்

முதன் முறை பார்க்கும்போது அவள் பணக்காரி என்று அவனுக்குத்

தெரியாது……

அவனிடம் நீங்கள் கைமாறாக பணம் கொடுத்தால் “சார், என்றும்

உங்களுக்கு கடன் பட்டிருப்பேன்” என்பான்.கடைசி வரை அது

உண்மையாகவே இருக்கும்!!!

அந்த வழுக்கைத் தலை மனிதருக்கு சலூன்காரர் மூப்பது ரூபாய்

சார்ஜ் செய்கிறார். கேட்டால் “முப்பது ரூபாய் முடி வெட்டுவதற்கல்ல, அதை தேடுவதற்குத் தான்” என்கிறார்!!!

tags- அடங்காத ஆத்திசூடி

***

சுதர்ஸன் நியூஸ் சேனலின் ஒலிபரப்புக்கு ஹைகோர்ட் தடை! (Post No.9037)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 9037

Date uploaded in London – – 15 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

சுதர்ஸன் நியூஸ் சேனலின் ஒலிபரப்புக்கு ஹைகோர்ட் தடை!

ச.நாகராஜன்

டெல்லி உயர் நீதி மன்றம் ஆகஸ்ட் 28, 2020 அன்று சுதர்ஸன் நியூஸ் சேனலின் ஒரு நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

எதைப் பற்றிய நிகழ்ச்சி?

சிவில் சர்வீஸில் முஸ்லீம்களின் ஊடுருவல் பற்றிய ஒரு செய்தி அது.

ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகம் அந்த செய்தி ஒலிபரப்பப் படக் கூடாது என்று ஒரு கேஸ் போட்டு தடை உத்தரவைப் பெற்றுள்ளது.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் எக்ஸாமினேஷனில் (UPSC) திடீரென்று ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் ஆகிய தேர்வுகளில் பாஸாகும் முஸ்லீம்களின் எண்ணிக்கை உயர்வதைப் பற்றியது அந்தச் செய்தி. திடீரென அதிகமாகும் முஸ்லீம்களின் எண்ணிக்கை பற்றி அந்த செய்தி விவரங்களைத் தர முன்வந்ததால் வந்த வினை அதற்கு – தடை!

இதைத் தொடர்ந்து ஐபிஸ் அசோஷியேஷனும் இப்படி “பொறுப்பற்ற விதத்தில்” ஒரு செய்தியை ஒலிபரப்பக் கூடாது என்று தன் பங்கிற்கு ஒரு கண்டனத்தை உடனே தெரிவித்து விட்டது.

பாரதத்தில் 80 சதவிகிதம் ஹிந்துக்களே.

நாம் செகுலர் நேஷன்!

ஒரு சின்ன புள்ளி விவரத்தைப் பார்ப்போம் இங்கு:

ஜனாதிபதி செக்ரடேரியட்டில் உள்ள மொத்த வேலை எண்ணிக்கை : 49

இதில் இப்போது முஸ்லீம், கிறிஸ்தவர்கள் 45 ஹிந்துக்கள் 4

துணை ஜனாதிபதி செக்ரடேரியட்டில் உள்ள மொத்த வேலை எண்ணிக்கை : 7

இதில் இப்போது முஸ்லீம், கிறிஸ்தவர்கள் 7 ஹிந்துக்கள் 0

காபினெட் செக்ரடரி மொத்த வேலை எண்ணிக்கை : 20

இதில் இப்போது முஸ்லீம், கிறிஸ்தவர்கள் 19 ஹிந்துக்கள் 1

பிரதம மந்திரி அலுவலகத்தில் உள்ள மொத்த வேலை எண்ணிக்கை : 35

இதில் இப்போது முஸ்லீம், கிறிஸ்தவர்கள் 33 ஹிந்துக்கள் 2

அக்ரிகல்சர் – இரிகேஷன் பிரிவில் உள்ள மொத்த வேலை எண்ணிக்கை : 274

இதில் இப்போது முஸ்லீம், கிறிஸ்தவர்கள் 259 ஹிந்துக்கள் 15

தற்காப்பு அமைச்சக பிரிவில் உள்ள மொத்த வேலை எண்ணிக்கை : 1379

இதில் இப்போது முஸ்லீம், கிறிஸ்தவர்கள் 1331 ஹிந்துக்கள் 48

சோஷியல் ஹெல்த் அமைச்சக பிரிவில் உள்ள மொத்த வேலை எண்ணிக்கை : 209

இதில் இப்போது முஸ்லீம், கிறிஸ்தவர்கள் 192 ஹிந்துக்கள் 17

நிதி அமைச்சக பிரிவில் உள்ள மொத்த வேலை எண்ணிக்கை : 1008

இதில் இப்போது முஸ்லீம், கிறிஸ்தவர்கள் 952 ஹிந்துக்கள் 56

ப்ளானிடரி அமைச்சக பிரிவில் உள்ள மொத்த வேலை எண்ணிக்கை : 409

இதில் இப்போது முஸ்லீம், கிறிஸ்தவர்கள் 377 ஹிந்துக்கள் 32

தொழிலாளர் அமைச்சக பிரிவில் உள்ள மொத்த வேலை எண்ணிக்கை : 74

இதில் இப்போது முஸ்லீம், கிறிஸ்தவர்கள் 70 ஹிந்துக்கள் 4

பெட்ரோ கெமிக்கல் அமைச்சக பிரிவில் உள்ள மொத்த வேலை எண்ணிக்கை : 121

இதில் இப்போது முஸ்லீம், கிறிஸ்தவர்கள் 112 ஹிந்துக்கள் 9

கவர்னர், லெப்டினண்ட் கவர்னர் மொத்த வேலை எண்ணிக்கை : 27

இதில் இப்போது முஸ்லீம், கிறிஸ்தவர்கள் 20 ஹிந்துக்கள் 7

வெளிநாட்டு தூதர்களின் மொத்த எண்ணிக்கை 140

இதில் இப்போது முஸ்லீம், கிறிஸ்தவர்கள் 130 ஹிந்துக்கள் 10

பல்கலைக் கழக துணைவேந்தர்களின் பதவிகளின் எண்ணிக்கை 108

இதில் இப்போது முஸ்லீம், கிறிஸ்தவர்கள் 88 ஹிந்துக்கள் 20

பிரின்ஸிபல் செக்ரடரி பதவிகளின் எண்ணிக்கை 26

இதில் இப்போது முஸ்லீம், கிறிஸ்தவர்கள் 20 ஹிந்துக்கள் 6

உயர்நீதி மன்ற நீதிபதிகளின் மொத்த பதவிகளின் எண்ணிக்கை 33ப்

இதில் இப்போது முஸ்லீம், கிறிஸ்தவர்கள் 326 ஹிந்துக்கள் 4

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 23

இதில் இப்போது முஸ்லீம், கிறிஸ்தவர்கள் 20 ஹிந்துக்கள் 3

ஐ ஏ எஸ் அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 3600

இதில் இப்போது முஸ்லீம், கிறிஸ்தவர்கள் 3000 ஹிந்துக்கள் 600

பி டி ஐ மொத்த பதவிகளின் எண்ணிக்கை 2700

இதில் இப்போது முஸ்லீம், கிறிஸ்தவர்கள் 2400 ஹிந்துக்கள் 300

அடடா, ஹிந்துக்கள் ஹிந்து எண்ணிக்கை அதிகம் உள்ள நாட்டில் கோட்டா கேட்க வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள்.

ஆனால் இது மறுக்கப்பட்டு, அனைவரும் பழைய முகலாயர் காலத்தில் நடந்த நடவடிக்கைகளுக்கு உள்ளாகும் காலம் விரைவில் வருமோ என்று சிலர் பயப்படுகின்றனர்.

ஆனால் இதைச் சொன்னால், ஊம், மூச்சு விடக் கூடாது!

உங்களுக்கு தடா! பேச்சுக்கு, எழுத்துக்கு தடா!

ஏன்?

ஏனெனில் இது செகுலர் நேஷன்!

***

நன்றி : ஆங்கில வார இதழ் ட்ரூத் – தொகுதி 88 இதழ் 14 தேதி: 9-10-2020

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- Part 4 (Post.9036)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9036

Date uploaded in London – –14 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி 4

Panini  Sutra 1-4-3

Vadhuu – bride ; v = b வதூ/ மணப்பெண்

Xxx

1-4-25 fear = bhaya பய

Xxx

1-4-26

Paraajayate- bored பராஜயதே – போர்  அடிக்கிறது

Xxx

1-4-27

Nivartyti

Vaarayati – avert , di ‘vert’

Xxx

1-4-30

Jan – to be born ஜன் /பிற

Generate, ஜெனெரேட் , ஜெனெரேஷன்

Lot of words with’gen’ஜனனி, ஜன, ஜன்ம , ஜனக

Xxx

1-4-33

Ruchi – rochate – like; r =l ருசி, ரசனை/ விருப்பம்

Rasikkiraan, rusikkiraan

Xxxரோ = ல ; லைக்

1-4-35

Dharayati- debted/ indebted

Xxx

1-4-38

Anudruhyati – injured

Xxx

1-4-41

Hota = host

Xxx

1-4-51

Odana – food ; ஓதன

Math- churn; maththu-tamil kitchen word; மத்து; சமுத்ரமர்த்தன

Xx

1-4-52

Aste, asayati- seated ஆஸ்தே  ; ஆசயதி ; ஆசனம் = ஸீட்

Vaahayati, vahanti –  vaahanam –  vehicle வாஹயதி / வாஹனம் ; வெஹிக்கிள்

Xxx

1-4-64

Bhushanam – decoration பூஷணம் ; சங்கிதபூஷணம்,

Alam krutya – alangkaaram அலங்காரம்

Alam – alavu/ another meaning ; அலம் = அளவு

Xxx

1-4-66

Manas- mind- manathu; மனஸ் – மனது — மைண்ட்

Hatva – hitting ஹத்வா – ஹிட் – அடித்து

Xxx

1-4-67

Puraskrtya – progress புரஸ்க்ருத்ய – ப்ராக்ரஸ்

Going forward; முன்னேற்றம்

Xxxx

1-4-71

Thirobhava – hiding, concealing , disappearing திரோபவ

திரை  மறைவில்

Thirai in Tamil—marai/hidden; திரை  = மறை

 tags- tamil words -4

To be continued……………………

பல்லு போச்சு – வாழ்க்கையே போச்சு!! (Post No.9035)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9035

Date uploaded in London – – 14 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பல்லு போச்சு – வாழ்க்கையே போச்சு!!!!

Kattukutty

மனிதனுக்கு அழகு முகம்!!! அந்த முகத்திற்கு அழகு பற்கள்!!!

பறகள் அழகுக்கு மட்டுமல்ல, சாப்பிடவும் தான்!!! சில பழங்களை,

காய்களை நறுக்கி சாப்பிடுவதைத் தவிர பற்களால் கடித்து

சாப்பிடுவதே தனி ருசி!!!

உதாரணம் கரும்பு, மாங்காய், கொய்யா!!!!

குழந்தைகளுக்கு இது ஒருஆயுதமும் கூட!!!

பற்கள் பற்றிய ஒரு ஜோக்……..

ஏ நாக்கே, நீ ஏதாவது பேசித் தொலைந்துவிடுகிறாய், கடைசியில்,

கடைசியில் உடைபடுவது நான் தான்!!!

பற்களால் மற்றொரு உபயோகம் பற்களைப் பார்த்து ஜோதிடமும்

சொல்லலாம்!!! பறகளின் அமைப்பு , பற்களின் அளவு, பற்களுக்கு

இடையே உள்ள இடை வெளி,பற்களின் நிறம் ஆகியவற்றின் மூலம்

ஒருவருடைய வாழ்கையையே கணிக்க முடியும்!!!!

இந்த பல் ஜோதிடத்திற்கு “டான்ட் சாஸ்திரம்” என்று பெயர்.

பற்கள் வெள்ளை வெளேறென்று வெண்மையாக இருந்தால் வாழ்க்கை வளமானதாகவும்,சந்தோஷகரமானதாகவும் இருக்கும். பலருடைய

நட்பும் கிடைக்கும். சந்திர ஆதிக்கம் பெற்ற இவர்கள் புகழ் பெற்று வாழ்வார்கள்.

மஞ்சள் நிற பற்களா உங்களுக்கு…..சனி ஆதிக்கம் பெற்றவர் நீங்கள்

ரொம்ப பந்தா காட்டுவீர்கள்!!! சனி ஆதிக்கம் மிகுந்த நீங்கள் நிறைய

பிரச்சினைகளையும், ஏமாற்றங்களையும் சமாளிக்க நேரிடும்.

பற்கள் சிவப்பு நிறமா??? ராஜ யோகம்தான் உங்கள வாழ்க்கை!!!

செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற நீங்கள், போலீஸ், ராணுவம் போன்ற

இடங்களில் உயர்ந்த பதவிகளைப பெறுவீர்கள்!!!

வெளிர் சிவப்பு நிறத்தில் பற்கள் அமைந்தால், கேட்கவே வேண்டாம்

உங்களை மாதிரி புத்திசாலி கிடையாது!!! அறிஞர் நீங்கள்!!!

காதல் திருமணத்தினால் வெற்றிகரமான வாழ்க்கை, வெளிநாடுகளுக்கு பயணம்!!! இறந்த பின்னும் உங்கள் புகழ் உலகம்

முழுவதும் பரவும்!!!

முன்வரிசைப் பற்களில் இடை வெளியா???நல்ல எதிர்காலமும், ராஜ யோகமும் உண்டு உங்களுக்கு!!! அதில் இடைவெளி இருந்தால்,வாழ்க்கை சவால் நிறைந்ததாகவும், கடைசியில் வெற்றி நிறைந்ததாக முடியும்!!!!

பற்கள் வரிசை தவறி தாறுமாறாக இருந்தால் அவர்களது வாழ்க்கை போராட்டமாகவே இருக்கும். மனக்குழப்பம் மிகுந்து காணப்படும்.

35 வயதுக்கு மேல் உங்களுக்கு ராஜயோகம் தான்!!!

சிறிய பற்கள் கொண்டவர்கள் வாழ்க்கையில் துன்பம் , திருமண

வாழ்க்கையில் பிரச்சினை, வரிசையாக நடக்கும்.

பெரிய , சிறிய பற்கள் மாறிமாறி இருந்தால் வாழ்க்கையில் ஏற்ற இறக்கத்தைக் காண்பார்கள்

பெரிய பற்கள் இருந்தால் திறந்த மனதுடையவர்கள். நிறைய நண்பர்களும் உண்டு.

கூர்மையான பற்கள் உடையவர்கள்அதிர்ஷ்டம் உடையவர்களாகவும்

அதி புத்திசாலியாகவும் இருப்பார்கள்.

உடனே உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள் , எந்த விதமான பற்கள் உங்களுக்கு???

வழ்க்கை வளமுற வாழ வாழ்த்துகிறோம்!!!!

 tags- பல்லு போச்சு

***