ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது சப்த மோக்ஷபுரிகளில் ஒன்றும் பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ள, அவந்திகா என்று பழைய காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த உஜ்ஜயினி ஆகும். மத்யபிரதேசத்தின் தலைநகரான போபாலிலிருந்து இது 192 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தூரிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
ஒவ்வொரு யுகத்திலும் இது ஒவ்வொரு பெயரைக் கொண்டது என்பதால் இது யுகம் கடந்த நகரம் என்பதை அறியலாம். கனகசிருங்கா அதாவது பொன் வேய்ந்த வீடு என்றும்,குசஸ்தலி அதாவது விசேஷ தர்ப்பை தலம் என்றும், பத்மாவதி அதாவது தாமரை மலர்களை முழுதுமாகக் கொண்ட இடம் என்றும் அமராவதி அதாவது என்றும் அழியாத தேவர்களின் இருப்பிடம் என்றும் இவ்வாறாகப் பல பெயர்களைக் கொண்ட திவ்ய நகரம் இது!
க்ஷிப்ர நதிக் கரையில் அமைந்துள்ள அற்புத ஸ்தலம் இது. க்ஷிப்ர என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு இமைப்பொழுது என்று பொருள். இந்த புண்ணிய நதியில் ஸ்நானம் செய்தால் இமைப்பொழுதில் ஒருவன் செய்த பாவங்கள் அனைத்தும் பறந்தோடும். இங்கு நடக்கும் கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு புண்ய ஸ்நானம் செய்வது வழக்கம்.
இந்த தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. தூஷணன் என்ற வேதாளம் ஒன்று, அவந்தி நகர் அதாவது உஜ்ஜயினி நகர் வாழ் மக்களைக் கொடுமைப்படுத்தி வந்தது. மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அங்கு வேதத்தில் வல்ல ஒரு அந்தணரிடம் சென்று முறையிட்டனர். அவர் மக்கள் படும் துன்பத்தைக் கண்டு இரங்கி ஒரு யாகம் செய்தார். அவரது தவத்தை மெச்சிய சிவபிரான் பூமியைப் பிளக்கச் செய்தார். அதிலிருந்து மஹாகாலர் தோன்றினார்; தூஷணனை வதைத்தார். அங்கு பூமிக்கு அடியிலேயே கோவில் கொண்டார். அது தான் நாம் இன்று காணும் மஹாகாலேஸ்வர் ஆலயம் ஆகும். இதன் வெளி பிரகாரம் பரந்து அகன்றது. இதன் தல விருட்சம் சித்தவடம் என்னும் ஆலமரம் ஆகும். இந்த மரத்தைத் தொன்று தொட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
ஐந்து அடுக்குகள் கொண்ட இந்தக் கோவிலில் மூன்று அடுக்குகளில் மூன்று லிங்கங்களைக் காணலாம். பூமிக்குக் கீழே இருந்து அருள் பாலிப்பவரே மஹா காலர். ஜோதிர் லிங்கமான இவர் பூமிக்கு அடியில் இருப்பதால் படியில் இறங்கிச் சென்று இவரை தரிசிக்க வேண்டும். அவருக்கு மேலே இருப்பவர் ஓம்காரேஸ்வரர். அவருக்கும் மேலே இருப்பவர் தாரகேஸ்வரர்.
மஹாகாலேஸ்வரர் கோவிலில் இருக்கும் கோடி தீர்த்தத்தை எடுத்து நாமே அவருக்கு அபிஷேகம் செய்யலாம். இதற்காக குளக்கரையில் செம்பினால் ஆன சொம்புகள் உண்டு.
மஹாகாலேஸ்வரர் நிலை கொண்டுள்ள புள்ளி வழியாகத் தான் பூமியின் முதலாவது தீர்க்க ரேகை செல்கிறது. இதை வைத்துத் தான் கால நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆகவே தான் இவர் மஹாகாலேஸ்வரர் ஆகிறார். உலகெங்குமுள்ள வானவியில் நிபுணர்களுக்கு மூலாதாரம் இந்தப் புள்ளியே.
கோவிலுக்கு தெற்கில் உள்ள கோடி தீர்த்தம் அபூர்வமான ஆற்றல் கொண்டது. இராவணனை வதைத்த இராமபிரானின் பட்டாபிஷேகத்திற்கென அனைத்து தீர்த்தங்களையும் சேகரித்து வந்த ஹனுமான் க்ஷிப்ர நதி வந்த போது இந்தத் தலத்தில் காகபுஜண்ட மஹரிஷி தவம் செய்து கொண்டிருந்தார். ஹனுமான் தீர்த்தத்தை எடுக்க முயன்ற போது அவர் தவம் கலைய, அவரது தபோபலத்தால் ஹனுமாரால் தீர்த்தத்தை எடுக்க முடியவில்லை. ரிஷியை வணங்கிய ஹனுமார் தான் வந்த காரியத்தைப் பணிவுடன் கூற, கொண்டு வந்த பல்வேறு தீர்த்தங்களில் ஒரு துளியை அங்கு விடுமாறு பணித்தார் ரிஷி. ஹனுமான் அப்படியே செய்ய அவரால் தீர்த்தத்தை எடுக்க முடிந்தது. அவர் மனம் மிக மகிழ்ந்தார். இந்த தீர்த்தத்தில் சரும வியாதி உள்ளவர்கள் குளித்தால் அந்த வியாதிகள் போகும் என்பது அனுபவ உண்மையாக அமைகிறது.
இந்தத் தலத்தில் தான் சாந்தீபனி மஹரிஷி தன் குருகுலத்தை நடத்தினார். பலராமரும் கிருஷ்ணரும் குருகுல வாசம் செய்தது இந்த முனிவரின் ஆசிரமத்தில் தான். இது உஜ்ஜயினி நகரின் வெளியில் உள்ளது.
விக்ரமாதித்தன் உலகம் வியக்கும் வண்ணம் சிறப்பாக ஆண்ட இடம் உஜ்ஜயினியே. இங்கு அவன் வழிபட்ட ஹர்சித்தி ஆலயம் மிக சக்தி வாய்ந்த சக்தி பீடங்களில் ஒன்று. தட்சனின் யாகத்தின் போது சிவபிரான் வீசி எறிந்த தேவியின் உறுப்புகளில் அவள் விலா எலும்பு விழுந்த இடம் இது. அங்காரகன் எனப்படும் செவ்வாய் பிறந்த இடமும் உஜ்ஜயினி தான். அவனுக்கு இங்குள்ள குன்றின் மேல் சிறிய கோவில் ஒன்று உண்டு. உலகம் வியக்கும் மஹாகவி காளிதாஸன் காளி அருள் பெற்று கவி மழை பொழிந்து வாழ்ந்த இடமும்
இதுவே. மேகதூதத்தில் மேகத்தை நோக்கி, ‘நீ மாலை நேரத்தில் அங்கே இருந்து இரவில் இடிமுழக்கத்தால் மஹா காலருடைய பறையைத் தொட்டு வணங்கி விட்டுப் பின் மேலே செல்வாயாக” என்று சொல்வதோடு இன்னும் பலவாறாக உஜ்ஜயினியை அவர் போற்றிச் சித்தரிக்கிறார். மாபெரும் மன்னனாக இருந்து பின்னர் உலகைத் துறந்து மஹரிஷியாக மாறிய பர்த்ருஹரி தவம் செய்த குகையையும் ஊருக்கு வெளியே காணலாம்.
உலகெங்கிலும் உள்ள அறிஞர்களும் யாத்ரீகர்களும் இங்கு வந்து வியக்கும் வண்ணம் நல்லறிவு மற்றும் அனைத்துக் கலைகளின் தலைநகரமாகத் திகழ்ந்தது இது!
காலம் காலமாக கோடிக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி வரும், மஹா காலேஷ்வரும் மஹா காளியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். மஹாகவி பாரதியாரின் அருள் வாக்கு – “யாதுமாகி நின்றாய் காளீ, எங்கும் நீ நிறைந்தாய்! காளி மீது நெஞ்சும் என்றும் கலந்து நிற்க வேண்டும்! அன்னாய் வாழ்க நின்றன் அருளே! நன்றி வணக்கம்!
Tiruppugaz -BY Mrs JAYANTHI SUNDAR AND HER DISCIPLES
FILM DIRECTOR CHENNAI MR AMSHAN KUMAR’S INTERVIEW
INTRODUCED BY LONDON Mr. PATHMANATHAN IYER- (30+5)
LONDON Mr.BALA SUBRAHMANYAN’S – RASAM PAATTU (5)
Bharati Episode BY SRI VIDHYA FROM DUBAI (8)
APPR. 70 MINUTES
Amshan Kumar is an Indian filmmaker and writer. He has won a National Film Award for his documentary film Yazhpanan Thedchanamoorthy – Music beyond boundaries in the year 2015.[1][2][3] This is a lone Tamil non-fiction film to win a National Award in the past 17 years prior to this award [4] He is also a writer on films, his book Cinema Rasanai on film appreciation is being used as a textbook in many universities.[5] His debut feature film Oruththi was selected for the 2003 International Film Festival of India and was screened in the Indian Panorama section.[6][7][8] His second feature film Manusangada was screened in the 39th Cairo International Film Festival and also in the 48th International Film Festival of India (2017) in the Indian Panorama section.[9][10] He lives in Chennai.
Amshan Kumar has made more than twenty five documentaries including Badal Sircar`s Third Theatre, Modern Art in Tamil Nadu,[11] Mangrove Forests, Nobel Laureate C.V.Raman, U.Ve.Saminatha Iyer, Tamil Poet Subramania Bharati[12] and Manakkal S.Rangarajan. His first directorial feature film in Tamil Oruththi selected for was shown in Indian Panorama based on a short novel by the renowned writer Ki. Rajanarayanan . It won the best film awards from Government of Pondicherry and Tamil Association of New Jersey.[13] His documentary on the Tavil Maestro Yazhpanam Thedchanmoorthy won the national award for the best arts/ cultural film in 2015.[3] It is the first Tamil non-feature film to win a National Award in 17 years.[14]
WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.
LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.
BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.
WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.
IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.
TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME
DAYS- MONDAYS AND SUNDAYS
MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)
SUNDAYS FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)
XXX
WHO DOES THIS?
I (LONDON SWAMINATHAN) DO IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.
SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM (Producer) AND MRS VAISHNAVI ANAND AND MRS SUJATHA RENAGANATHAN ARE CO-PRODUCERS FOR TAMIL PROGRAMMES
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
DEAR GOD,
I KNOW THAT I AM NOT PERFECT, I KNOW SOMETIMES I FORGOT TO PRAY, I KNOW I HAVE QUESTIONED MY FAITH, I KNOW I SOMETIMES I LOOSE MY TEMPER, BUT, THANK YOU FOR ALL FOR LOVING ME UNCONDITIONALLY GIVING ME ANOTHER DAY
TO START AGAIN !!! XXXX
WHEN I WAS A YOUNG BOY, I WAS SCARED OF DARK. NOW , WHEN I SEE THE ELECTRIC BILL I AM SCARED OF LIGHTS !!!
XXX
YOU KNOW THE MEANING OF A B. C. D. E. F. G. H. ???????? A Boy Can Do Everything For Girl. !!!
XXXX
REVERSE THE MEANING OF G. F. E. D. C. B. A…………. Girls Forget Everything Done & Catch new-Boy Again!!!
XXX
YOUR LIFE BECOMES MASTER “PIECE”, IF YOU LEARN TO MASTER “PEACE”
XXXX
ARGUING WITH A WOMAN IS LIKE GETTING ARRESTED, EVERY THING YOU SAY CAN AND WILL BE USED AGAINST YOU !!!
XXXX
HAPPINESS IS LIKE A BUTTERFLY, THE MORE YOU CHASE IT, THE MORE IT WILL ELUDE YOU, BUT IF YOU KEEP TURN YOUR ATTENTION TO OTHER THINGS, IT WILL COME AND SIT SOFTLY ON YOUR SHOULDER !!!
XXXX
ONE QUARTER WHAT YOU EAT KEEPS YOU ALIVE, THREE FOURTH QUARTER KEEPS YOUR DOCTOR ALIVE !!!
XXXX
MONEY SAYS EARN ME, CALENDAR SAYS TURN ME, TIME SAYS PLAN ME, FUTURE SAYS LEARN ME, BEAUTY SAYS LOVE ME, BUT GOD SIMPLY SAYS, WORK HARD AND TRUST ME!!!
XXX
OUR GENERATION’S SLEEPING SCHEDULE DEPENDS ON, THE TIME OF BATTERY REMAINING IN THE PHONE !!!
XXXX
POSITIVE THINKING POEM.
LITTLE BIRD IN THE SKY, DROPPING SHIT ON YOUR HEAD, YOU DONT WORRY, YOU DONT CRY, YOU JUST THANK GOD THAT COW DO NOT FLY !!!!
XXX
EVERYBODY KNOWS HOW TO BUILD A BEAUTIFUL HOUSE BUT ONLY A FEW PEOPLE KNOW HOW TO LIVE BEAUTIFULLY IN THE HOUSE
XXXX
BOYS ARE ALWAYS MORE INTELLIGENT THAN GIRLS WHAT IS THE PROOF ? OK, READ THIS……… WE ALWAYS SAY INTELLI “GENTS”……… HAVE YOU EVER HEARD INTELLI “GIRLS”!
XXX
AS YOU START A NEW BUSINESS, I WISH THAT FAILURE IS BEHIND YOU……
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ENGLISH VERSION FOLLOWS TAMIL MATTER
விஷ்ணு சஹஸ்ரநாமத்தை ரிகார்ட் செய்தது யார்? ENGLISH & TAMIL(Post.
ச.நாகராஜன்
1940களிலோ அல்லது 1950 களிலோ ஒரு நாள் ஒருவர் காஞ்சி மஹாபெரியவாளை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு டேப் ரிகார்டரைப் பயன்படுத்தி பேட்டியை ரிகார்ட் செய்து கொண்டிருந்தார். அப்போது பெரியவாள் ஒரு கேள்வியைக் கேட்டார்: யாருக்காவது உலகின் மிகப் பழைய டேப் ரிகார்டர் எது என்று தெரியுமா?”
ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. பின்னர் மஹாபெரியவாள் இன்னொரு கேள்வியைக் கேட்டார் : “விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?” ‘பீஷ்ம பிதாமஹர் நமக்குக் கொடுத்தார்’, என்று ஒருவரிடமிருந்து பதில் வந்தது. அனைவரும் இதை ஒப்புக்கொண்டனர். பின்னர் மஹாபெரியவாள் இன்னொரு கேள்வியைக் கேட்டார் : “போர்க்களத்தில் அனைவரும் பீஷ்ம பிதாமஹர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த போது குருக்ஷேத்திரத்தில் யார் அதை எழுதிக் கொண்டிருந்தார்?”
ஸ்ரீ மஹாபெரியவாள் விளக்க ஆரம்பித்தார் : “பீஷ்ம பிதாமஹர் கிருஷ்ணரை ஆயிரம் நாமங்களால் (சஹஸ்ரநாமம்) போற்றிக் கொண்டிருந்த போது கிருஷ்ணரும் வேத வியாஸ முனிவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் ஆயிரம் நாமங்களை முடித்த பின்னர் தான் அனைவ்ரும் கண்களை விழித்தனர். அப்போது முதலில் பேசியவர் யுதிஷ்டிரர் தான்! அவர் கூறினார் : “பிதாமஹர் வாசுதேவரின் ஆயிரம் நாமங்களை உச்சரித்தார். நாம் அனைவரும் அதைக் கேட்டோம். ஆனால் ஒருவருமே அதை எழுதி வைத்துக் கொள்ளவில்லையே! அந்த நாம வரிசை இப்போது இல்லையே!”
உடனே அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்து அவரது உதவியை நாடினர்.
வழக்கம் போல அவர், “நானும் எல்லோரையும் போலக் கேட்டுக் கொண்டிருந்தேன். இப்போது நாம் என்ன செய்வது?” என்றார். அனைவரும் கிருஷ்ணரைச் சூழ்ந்து கொண்டு எப்படியாவது அந்த அருமையான நாமங்களை மீண்டும் பெறுவதற்கு உதவ வேண்டும் என்று வேண்டினர்.
“அது சஹாதேவன் ஒருவனால் மட்டுமே முடியும். அதை அவன் சொல்ல வியாஸர் எழுதிக் கொள்ளட்டும்” என்றார் கிருஷ்ணர்.
அனைவருக்கும் சஹாதேவனால் மட்டும் அதை எப்படிச் செய்ய முடியும் என்று ஆச்சரியம். அவர்கள் அதை கிருஷ்ணரிடமே கேட்டனர்.
கிருஷ்ணர் கூறினார் இப்படி :” இங்கு கூடியிருந்த அனைவருள்ளும் சஹாதேவன் ஒருவனே சுத்த ஸ்படிகத்தைத் தரித்துக் கொண்டிருந்தான். அவன் சிவனை நோக்கி தியானம் செய்து பிரார்த்தித்தால் ஸ்படிகத்தை ஒலி அலைகளாக மாற்ற முடியும்; அதை வியாஸர் எழுதலாம்”
உடனே வியாஸரும் சஹாதேவனும் பீஷ்ம பிதாமஹர் வாசுதேவனைக் குறித்து உச்சரித்த விஷ்ணு சஹஸ்ரநாமம் சொன்ன இடத்திலேயே அமர்ந்தனர். சஹாதேவன் ஸ்படிகத்தில் இருந்த ஒலி அலைகளைப் பெற தியானம் செய்ய ஆரம்பித்தார்.
ஸ்படிகத்தின் இயற்கை என்னவெனில், ஒரு அமைதியான சூழ்நிலையில் ஸ்படிகம் ஒலி அலைகளை அப்படியே கிரஹிக்கும்; ஸ்வேதாம்பரராகவும் ஸ்படிகமாகவும் விளங்கும் மஹாதேவரை முறைப்படி தியானம் செய்தால் அதை மீண்டும் பெற முடியும். ஆகவே உலகின் முதல் டேப் ரிகார்டர் ஸ்படிகம் தான்; அது தான் நமக்கு அருமையான விஷ்ணுசஹஸ்ரநாமத்தைத் தந்தது!
மஹா பெரியவாள் இப்படி விளக்கிய பின்னர் அனைவரும் பிரமித்து நின்றனர். ஸ்படிகம் ரிகார்ட் செய்ய, வேத வியாஸர் மூலமாக விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்குக் கிடைத்தது!
ஆதாரம், நன்றி : ட்ரூத், கல்கத்தா ஆங்கில வார இதழ்; தொகுதி 88 இதழ் 24 தேதி 1-1-2021
*
இந்தக் கட்டுரையின் ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது :
Who recorded the Vishnu Sahasranamam?
Once, way back in the 1940’s or 50’s, someone was interviewing Sri Maha Periyava. That gentleman recorded the interview using a tape recorder. Periyava then posed a question, “Does anyone know which is the oldest known tape recorder?”
Nobody was able to answer. Then Sri Maha Periyava asked another question, “How did Vishnu Sahasranamam come to us?” Someone said that Bheeshma Pitamah gave it to us. All agreed. Then Sri Maha Periyava posed another question, “When all were listening to Bheeshma on the battlefield, who took the notes at Kurukshetra?”Again silence.
Sri Maha Periyava explained, “When Bheeshma Pitamah was glorifying Sri Krishna with Sahasranamam, everyone was looking at him including Sri Krishna and the sage, Veda Vyasa. After he finished the 1000 Namas, all opened their eyes. The first to react was Yudhistirar. He said, “Pitamah has chanted 1000 glorious names of Vasudeva. All of us listened to it but none of us have noted it down. The sequence is lost.” Then all turned to Sri Krishna and asked for His help.
As usual He said, “I was also listening like the rest of you. What can we do?” Then all beseeched Sri Krishna to help them recover the precious rendition. Then Sri Krishna said, “It can only be done by Sahadeva and Vyasa will write it down.”
Everyone wanted to know how Sahadeva could do it. Sri Krishna replied, “Sahadeva is the only one amongst us wearing the Shuddha Sphatika. If he prays to Shiva and does dhyanam, he can convert the Sphatika into waves of sound and Vyasa can write it down.”
Then both Sahadeva and Vyasa sat in the same place under Bheeshma Pitamah, where he had recited the Vishnu Sahasranamam. Sahadeva started doing the dhyanam to rocover the sound waves from the Sphatika.
The nature of Sphatika is that it will capture sounds in a calm environment which can be got back with proper dhyanam of Maheswara who is Swethambara and Sphatika. So, the world’s earliest tape recorder is this Sphatika which gave us the wonderful Vishnu Sahasranamam.
When Sri Maha Periyava explained this all were stunned. From the Sphatika recording, the grantha came to us through Veda Vyasa.
[Compiled by Jagadguru Sri Maha Periyava– Kanchi Paramacharya.] Source : English Weekly : TRUTH VOL. 88 NO. 24
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வீணைக் கொடியுடைய வேந்தனே!
கொடிகளைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்கள். சின்னங்கள் முத்திரைகளைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்கள் ; வாகனங்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்தவர்கள் இந்துக்கள் (READ MY OLD RESEARH ARTICLES ON VAHANAS, SYMBOLS AND FLAGS PLEASE). தொல்காப்பியத்திலேயே பலராமனின் பனைக்கொடி உளது.
புறநானூற்றுப் பாடல் 56, மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனாரால் பாடப்பட்டது அதில் சிவனின் ரிஷபக் கொடி, முருகனின் மயில் கொடி, பலதேவனின் பனைக்கொடி, விஷ்ணுவின் கருடக் கொடி ஆகிய அனைத்தும் குறிப்பிடப்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள் அதி தீவிர இந்துக்கள் . அவர்களுக்கு ராமாயண, மஹாபாரத, புராணக் கதைகள் அத்துபடி!! திருப்பறங்குன்றத்தில் இருந்த இந்திரன்-அகலிகை ஓவியத்தை ஒரு கிராமத்தான், அவனுடைய மனைவிக்கு விளக்கிய பரிபாடல் காட்சி மூலமும் இது தெரிகிறது
துரியோனாதணனுக்கு பாம்புக் கொடி ; ராவணனுக்கு வீணைக் கொடி என்பதும் நமக்குத் தெரியும் .
ஆயினும் திருக்குறள் காலம் வரை யாழ் பற்றிய குறிப்பே கிடைக்கிறது. சங்கம் மருவிய காலத்தில் எழுத்து வடிவில் உருவான சிலப்பதிகாரத்தில்தான் முதல் முதலில் வீணையை சந்திக்கிறோம்.(6-18). ‘நாரதர் வீணை’ (6-18, 22) பற்றி இளங்கோ பாடுகிறார். பின்னர் மணிமேகலையில் (CHAPTER 29) காண்கிறோம் . ஆனால் கம்பன் பல இடங்களில் வீணைக் கொடியைக் குறிப்பிடுகிறான்; பாடுகிறான்
சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தில் வரும் இராவணன் பற்றிய பாடல் எல்லோரும் கேட்டு ரசித்த பாடல் …………….
வீணைக் கொடியுடைய வேந்தனே
வீரமே உருவாகிடும் இசை வெள்ளமே
உயிரெனவே நினைந்து உலவும் வீணைக் கொடியுடைய வேந்தனே
ஆனந்தகான அமுத மழையே
பொழிந்து மனம் தனை உருக வழி செய்த
வீணைக் கொடியுடைய வேந்தனே (பாடல் – ஏ.மருதகாசி
வால்மீகி ராமாயணத்தில்தான் இதற்கான மூலம் உளது. ஸீதையைத் தேடிச் சென்ற அனுமன், ராவணனின் அந்தப்புரத்தில் நுழைந்த போது, ‘விபஞ்சி’ என்ற ஒரு வகை வீணையுடன் பல பெண்கள் தூங்குவதைக் காண்கிறான். ஒரு பெண்மணி வீணை வாசித்த களைப்பில் அதைக் கட்டிக்கொண்டு உறங்கும் காட்சியும் வருகிறது . இவை சுந்தர காண்டத்தில் உளது. ஆயினும் இராவணன் சாம கானப் பிரியன், சிவ பக்தன் , வீணை வாசிப்பதில் வல்லவன் என்று கேட்டபோதிலும் அவன் வீணை வசிக்கும் காட்சியை வால்மீகி வருணிக்கவில்லை. அவனுக்கும் வீணாவுக்கும் உள்ள தொடர்பை ஒரு அற்புத உவமை விளக்குகிறது. அவன் போர்க் களத்தையே வீணை வாசிப்பதற்கு ஒப்பிடுகிறான்.
யுத்த காண்டத்தில் வரும் வால்மீகி ஸ்லோகம் ஒரு புதுமையான உவமை! போர்க்களம் என்பது ‘வீணை யாம்’ . அதில் அவன் பயன்படுத்தும் வில், அம்புகள் வீணை வாசிக்கும் கருவியாம் . இதைப் புரிந்துகொள்ள ராவணன் வைத்திருந்த விநோத வகை வீணையை நாம் அறியவேண்டும். அவனிடம் ‘ராவண ஹஸ்தக’ என்ற விசேஷ வகை வீணை இருந்தது. இதை வயலின் வாசிப்பது போல அவன் (violin bow)வில்லால் வாசிப்பானாம். ஆகையால்தான் போர்க்களத்தை வீணைக்கு ஒப்பிடும் உவமையை வால்மீகி பயன்படுத்துகிறார்.
கம்பனும் ‘ராவணன்- வீணை’ தொடர்பை பல பாடல்களில் ‘வீணைக்கொடி’ மூலம் விளக்குகிறான் .
இடி முழக்கத்துடன் பறந்துவந்து, சிறகுகளால் ராவணன் தலைகளைத் தள்ளிவிட்டு , நீண்ட வீணைக்கொடியைப் பழித்து ஒடித்து , அச்செயல் மூலம் தேவர்களின் வாழ்த்துக்களைப் பெற்றான்
Xxx
பின்னரும் சடாயு உயிர் நீத்த படலத்தில் கொடியை மறக்கவில்லை கம்பன் …
இராமனும் இலக்குவனும் தெற்கு நோக்கி பயணம் செய்கையில் சடாயு இறந்த இடத்தில் வீணைக்கொடி ஒன்று தரையின் மீது கிடந்ததைக் கண்டனர்
“பாக வீணையின் கொடி ஒன்று கிடந்தது பார்மேல் “–
இதற்கு அடுத்த சில பாடல்களில் சடாயுதான் சீதையைக் கவர்ந்த பகைவருடன் போரிட்டு இதைச் செய்திருக்க வேண்டும் என்று இலக்குவனிடம் சொல்லி கண்ணீர் விடுகிறான்.
Xxxx
கம்ப இராமாயண யுத்த காண்டத்தில், முதற் போர் புரி படலத்தில் வரும் பாடல் இதோ ………………………
ஏழிசைக் கருவி வீற்றிருந்தது என்னினும்
சூழிருந்திசைகளைத் தொடரும் தொல்கொடி
வாழிய உலகு எலாம் வளைத்து வாய் இடும்
ஊழியின் அந்தகன் நாவின் ஓங்கவே
பொருள் ……….
“தேரிலே ஏழிசைக் கருவியாகிய வீணையின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது .அந்தக் கொடி காற்றில் திக்குகள் தோறும் படபடத்தது. அது யமனுடைய நாக்கு போல இருந்தது ஊழிக் காலத்தில் உலகத்தை எல்லாம் தனது வாய்க்குள் போட்டு விழுங்கும் யமனின் நாக்கு போல உயர்ந்து விளங்கியது”.
யுத்த காண்டத்தில், இன்னும் ஒரு பாடலில் வீணைக்கொடியின் அவல நிலையைப் பாடுகிறான் கம்பன் …
எழுத்து வீணை கொடு ஏந்து பதாகை மேல்
கழுகும் காகமும் மொய்த்தன
பொருள்
வரையப் பெற்ற வீணையைச் சின்னமாகக் கொண்ட ராவணனின் கொடி மீது காகமும் கழுகும் மொய்த்தன .
XXXX
MY OLD ARTICLE………
அகத்தியரும் வீணை வாசிப்பதில் வல்லவர்
நச்சினார்க்கினியர் சொல்லும் இராவணன் வீணைக் கதை
ராவணன் – பாண்டியர் சமாதான …
tamilandvedas.com › 2014/06/24 › ர…
24 Jun 2014 — ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை ! pandya-flags. Pandya Flags drawn by me. தமிழ் இலக்கியத்தில் ஓர் அதிசயத் தகவல்!! ஆராய்ச்சிக் …
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புராணத் துளிகள் இரு பாகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. மிகப் பரந்து விரிந்து கிடக்கும் 18 புராணங்களில் உள்ள சில சிறந்த பகுதிகளைத் தொகுத்துத் தருவதே நமது நோக்கம். அந்த வகையில் மூன்றாம் பாகத் தொகுப்பு இப்போது தொடர்கிறது.
புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 2
ச.நாகராஜன்
2. பரமபதம் அடைவது எப்படி?
பரமபதம் அடைவது எப்படி என்பதை துருவ சரித்திரத்தில் நாரதர் விளக்குவதைக் கண்டோம். மஹாகவி பாரதியாரின் கவிதைப் பகுதி இதே கருத்தை வலியுறுத்துவதை இங்கு கண்டு மகிழலாம்.
எங்கள் மதம் (உயிர் பெற்ற தமிழர் பாட்டு)
தோன்றி அழிவது வாழ்க்கை – இதில்
துன்பத்தோடின்பம் வெறுமையென்றோதும்
மூன்றில் எது வருமேனும் – களி
மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி
3. நமது துக்கத்திற்குக் காரணம்!
நமது துக்கத்திற்குக் காரணம் என்ன என்பதை துருவனின் தாயான ஸுநீதி அவனிடம் கூறுகிறாள்:
“அப்பா! பிறர் மேல் அபராதத்தை நினைக்காதே! எவன் பிறருக்குத் துக்கத்தை விளைவிக்கின்றானோ, அவன் தானும் அந்த துக்கத்தையே அனுபவிப்பான். நாம் ஜன்மாந்தரங்களில் எவருக்கு என்ன துக்கத்தை விளைவித்தோமோ, இப்பொழுது அதன் பலனை அனுபவிக்கின்றோம். ஆகையால் இது நம்முடைய பாவத்தின் பலனேயன்றி வேறன்று. இதற்கு நாம் பிறர் மேல் தோஷத்தை நினைக்கலாகாது.”
பாகவதம் சதுர்த்த ஸ்கந்தம் எட்டாம் அத்தியாயத்தில் இடம் பெறுவது இந்த உரையாடல்.
4. முக்தி அடைய உள்ள மூன்று யோகங்கள்!
தேவி பாகவதத்தில் ஏழாம் ஸ்கந்தத்தில் 37ஆம் அத்தியாயத்தில் வருவது இது:
தேவியானவள் பர்வதராஜனுக்குக் கூறுவது : “மோக்ஷத்தை அடைவதற்குச் சொல்லப்பட்ட வழிகள் மூன்று. கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகியவையே அவை. இம்மூன்றும் எப்போதும் சுலபமாக சுவாதீனம் செய்து கொள்ளலாம்.
5. மூவகை பக்தி
தேவியானவள் மேற்கொண்டு பக்தியின் மூன்று வகைகளை விளக்குகிறாள் இப்படி:-
மனிதர்களின் குண பேதங்களால் பக்தி யோகமானது தாமஸ பக்தி என்றும், ராஜஸ பக்தி என்றும் சாத்விக பக்தி என்றும் மூவகைப்படும்.
தாமஸ பக்தியாவது : பிறர் வருந்தவேனும், டம்பமாகவேனும் மாச்சரியத்தினாலும், குரோதத்தினாலும் என்னிடம் விஸ்வாசம் வைத்துச் செய்யும் செயல்களாம்.
ராஜஸ பக்தியாவது : பிறருக்குத் துன்பம் செய்யாமல் தனக்கு மாத்திரம் நன்மையான செயல்களைச் செய்து கொண்டும் ஏதேனும் ஒரு இச்சையை நாள்தோறும் எண்ணியும் புண்ணிய பலன்களை அனுபவிக்கும் பொருட்டும் பேத புத்தியினால் என்னை உபாசித்தல் ஆகும்.
சாத்விக பக்தியாவது : பாவ நிவர்த்தியின் பொருட்டு எல்லாச் செயல்களையும் ஈஸ்வரார்ப்பணமாகச் செய்வதாகும். இச்செயல் வேதோக்தம் என்பதால் இதை எப்போதும் செய்ய வேண்டும் என்கிற நிச்சய புத்தியை உடையவனாக ஆதல், ஆண்டான் அடிமை என்கிற பேத புத்தியோடு தெய்வத்தினிடத்தில் பிரியம் உடையவனாக இருத்தல் முதலியனவாம்.
6. தேவியின் ஒரு இமை கொட்டும் காலம், மனிதர்களின் காலத்தோடு ஒப்பிட்டால் எவ்வளவு?
தேவி பாகவதம் ஒன்பதாம் ஸ்கந்தம் அத்தியாயம் எட்டில் வரும் அற்புதமான கால அளவைகள் கீழே தரப்படுகின்றன.
மனிதர்களுக்கு ஒரு வருஷம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும். மனிதர்களுக்கு முன்னூற்றறுபது யுகம் கழிந்தால் அது தேவர்களுக்கு ஒரு யுகமாகும்.
எழுபத்தோரு தேவ யுகம் ஒரு மன்வந்தரமாகும்.
அது இந்திரனுடைய காலத்துக்குச் சமமாகும்.
இருபத்தெட்டு இந்திரகாலம் கழிந்தால் அது பிரம்மாவுக்கு ஒரு நாளாகும்.
நூற்றேட்டு வயதானால் பிரம்மாவுக்கு ஆயுள் முடிந்து விடும்.
அப்போது பிராகிருத பிரளயம் ஏற்படுகிறது. பூமி ஜலத்தினால் மூடப்பட்டு விடும்.
மும்மூர்த்திகளும், மஹரிஷிகளும், சகல ஞானிகளும் சத்ய ரூபமான சிதாத்மாவில் ஐக்கியமாகின்றனர்.
‘வாமி; என்றால் பெண் மிருகங்கள்; அது ஆங்கிலத்தில் வுமன் ஆயிற்று .
வாம பாகம் = இடது பாகம் = பெண்கள் = VAMA= WOMA N வுமன்
FEMALE IS ALSO = VAAMI; F=V
XXXX
3-1-45
SILPINI – SILPAM- SIRPAM- SCULPTURE
SIRPAM, SIRPI USED IN TAM.
சில்பிணி – சிற்பம் – சிற்பி.
ஸ்கல்ப்சர்
XXX
3-1-146
GAATHAKAH= ONE WHO SINGS
காதக – காதகி
GAATHAKI – FEM
GATHA IN PERSIAN IN PRAKRIT
GATHA- POEMS FOR SINGING
காதா = பாட்டு
GAAYANAHA- SINGER
GAAYANI – SINGER – FEMALE
காயனஹ – காயனி
XX
3-1-149
PRAVAKA – PROGRESS
ப்ரவக – முன்னேற்றம்
LAVAKA – LAAVAKAM
லாவக – லாவகம்
XXX
3-1-150
JEEVAKA – LIVE; LONG LIVE
ஜீவக – வாழ்க்கை J=Y/I
NANDAKA – BE HAPPY
நந்தக – மகிழ்சசி ‘ஆனந்தா’க்கள்
ANANDA SUFFIX IN MANY NAMES , PARTICULARLY IN ASCETICS’ NAMES
XXX
3-2-1
MAAMISAM – MEAT
மாம்சம்
KALYAANA – GOOD
கல்யாண
THEY ARE USED IN TAMIL AND OTHER LANGUAGES
XXX
3-2-3
ANGULI- THUMB FINGER SIZE
அங்குலி – கட்டை விரல்
அங்குல ம் = விரற்கடை
ANGHULI- FINGER
XXX
ஆமை அதிசயம் , பாம்பு அதிசயம்
3-2-4
DWIPAHA – USING TWO BODY PARTS TO DRINK
த்விப = இரு கை வேழம்
பா- குடித்தல்
இரு செயல்களைக் கொண்ட உறுப்பா ல் குடித்தல் (சுவாசம்; நீர் எடுத்தல்)
TAMILS TRANSLATED IT AS IRU KAI YAANAI WHICH MEANS LONG HAND AND HAND USED FOR TWO PURPOSES
இரு கை வேழம் (திருவாசகம்)
நீண்ட கை ; குடிப்பதற்கு இரண்டு செயல்கள்; துதிக்கை உறி ஞ்ச்சும்; வாய்க்குள் கொண்டு சென்று ஊற்றும்
PAATHAPAHA – FOOT DRINKERS – USING FEET FOR DRINKING- THAT IS TREE; USE THE BOTTOM PARTS
பாதபகா – காலால் குடித்தல் = மரங்கள் – வேரால் தண்ணீர் உறிஞ்சுவதால் இந்தப் பெயர்
KACHCHAPAHA – TORTOISE/TURTLE கச்சப- ஆமை – கண்களுக்கு அடியிலுள்ள சுரப்பிகள் உப்பை பிரித்து எடுத்து கண்ணீர் வழியே வெளியேற்றுவதால் அவைகளை கச்சப என்று அழைத்தனர்
THEY DRINK SEA WATER AND THE SALT IS FILTERED AND SHED AS EYE TEARS. THE GLANDS ARE NEAR EYES. THIS SCIENTIFIC FACT IS KNOWN TO HINDUS AND THEY NAMED TURTLES AS KACHCHAPAHA MEANING DRINKING THROGH SIEVES;
இதே போல அகச் சிவப்பு INFRA RAD RAYS கதிர்களை பயன்படுத்துவதால் பாம்புகள் நாக ரத்தினத்தைக் RUBY RED கக்கி ஈறி தேடுவதாக சொன்னார்கள்; அதற்கு கண்களே செவி — கட்செவி — என்ற பெயரும் இதனால்தான் வந்தது.
கண்களுக்குக் கீழே இதற்கான விசேஷ உறுப்பு உளது ( எனது பழைய கட்டுரைகளில் முழு விவரம் உளது கட் செவி என்பது ஸம்ஸ்க்ருதச் சொல்லின் மொழி பெயர்ப்பு
XXXX
3-2-5
TUNDHA- THONTHI IN TAMIL
துந்த = தொந்தி
தொப்புள் – டம்மி/ஆங்கிலம்
ALSO TOPPUL – TUMMY
VAARTTIKA GIVE ‘AALASYA’ – LAZY
ஆலஸ்ய = லேஸி /ஆங்கிலம் = சோம்பேறி
XXX
3-2-8
SAMKYA – SAMIKNGAI IN TAM.
சம் க்யா = சமிக்கை
SIGN LANGUAGE IN ENG.
XXX
3-2-9
SURAAPA- SURAAPI- MALE AND FEMALE DRINKER
SITUPA – SITUPI – SITU DRINKER
SITUPA – JUICE, STARCH
சுரபா –சுரபி
சிடுப – சிதுப்பி
தமிழர்களும் பெண்பாலைக் குறிக்க ‘இ’ சப்தம் சேர்ப்பர்
AMSA – A PART, FACTOR
அம் சம்
VAARTTIKA ADDS…………….
SAKTI – SPEAR, EETTI IN TAM.
சக்தி – ஈட்டி
LAANGULA –‘ ER’ IN TAM.
லாங்குல – ஏர்
TOMARAM – HEAVY WOOD; MENTIONED AS WEAPON IN TAMIL LIT.
தோமரம் – மதிலில் உள்ள ஆயுதங்கள் பட்டியலில் இது வரும்
GHATA- POT ; MUSICAL INSTRUMENT GHATAM
கடம் ; கடம் வாசித்தல்
SUTRAGRAHAKA- ONE WHO HOLDS THREAD.
நூல் பிடிப்போர்
இந்துக்கள் பிரமிடுகளைக் கட்டினார்களா? என்ற எனது 2012-ம் ஆண்டு ஆராய்சசிக் கட்டுரை காண்க.
நேர் கோட்டைக் கண்டு பிடிக்க ஒரு கல்லில் நூலைக் கட்டி தொங்க விடுவர் . நூல் பிடித்து யாக குண்டம் கட்டுவர்
PYRAMID BUILDERS ALSO USED THIS WORD; USED TO MEASURE STRAIGHT LINES; PLUMB LINES
(read my article posted in 2012; Did Hindus build Egyptian Pyramids?)