தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும்! – 1 (Post.9192)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9192

Date uploaded in London – –27 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞானமயம் சார்பில் கந்தனைப் போற்றும் ஆறு நாட்கள் விழாவில் ச.நாகராஜன் 24-1-2021 அன்று ஆற்றிய உரை!

தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலி நீர் ஞாலத்து இருள் அகற்றும் ஆங்கவற்றுள்

மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது

தன்னேர் இலாத தமிழ்!

தெய்வத் தமிழுக்குச் சிறப்பைத் தருவது அதில் அமைந்துள்ள இறைவனைப் பாடித் துதிக்கும் அற்புதப் பாடல்களே.

இந்தப் பாடல்களில் புதிய ஒளியையும் புதிய சந்தத்தையும் புதிய மெருகையும் தந்தவர் அருணகிரிநாதர். வாக்கிற்கு அருணகிரி என்று போற்றப்படும் அருணகிரி நாதர் முருகனைப் போற்றித் துதிக்கும் பதினாறாயிரம் திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளினார். அதில் இன்று நமக்குக் கிடைத்திருப்பது 1324 அற்புதமான பாடல்கள். தனி ஒரு சந்தத்தில் துள்ளு நடை போட்டு இறைவனின் விளையாடல்களை அள்ளித் தரும் திருப்புகழில் 857 சந்தங்கள் உள்ளன; 178 தாள அமைப்புகள் உள்ளன என்பது அதிசயிக்கத் தக்க ஒரு விஷயமாகும்.

அருணகிரிநாதர் திருப்புகழை எப்படிப் பாடுவது என்று தியானம் செய்த நிலையில் முருகனே முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக்குருபர என அடி எடுத்துக் கொடுத்தான்.

அருணகிரிநாதர் இயற்றி அருளிய திருப்புகழ் என நாம் சொல்லும் போது அருணகிரிநாதரும் சற்று நகைக்கிறார்; முருகனும் சற்றுப் புன்முறுவல் பூக்கிறான்.

ஏனெனில் அருணகிரிநாதரே கூறுகிறார்,

யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்தததனால் என்று கந்தர் அனுபூதியில்! (பாடல் 17)

ஆக அருணகிரிநாதர் நாவால் முருகனே அருளிய தெய்வீகப் பாடல்கள் திருப்புகழ் அமிர்தமாகும்.

அருணகிரிநாதர் ஒவ்வொரு தலமாகச் சென்று அந்தத் தலத்தின் மஹிமையையும் அங்கு நடந்த இறைவனின் அருள் விளையாடல்களையும் அற்புத சந்தம் அமைத்துப் பாடியுள்ளார். இப்படி அவர் சென்ற தலங்கள் சுமார் 200 தலங்களாகும்.

இந்தத் திருப்புகழை தினமும் ஓதுங்கள் என அருளாளர்கள் கூறியதோடு அவற்றின் மகிமையையும் தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளனர்.

வேதம் வேண்டாம் சகல வித்தை வேண்டாம் கீத

நாதம் வேண்டாம் ஞான நூல் வேண்டாம் – ஆதி

குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றும்

திருப்புகழைக் கேளீர் தினம்

என்பதன் மூலம் வேதம், சகல வித்தை, கீத நாதம், ஞானம் ஆகிய அனைத்தும் இதில் உள்ளது என்பது பெறப்படுகிறது.

அத்தோடு இதைப் பாடி என்ன பெறலாம் என்பதற்கும் பதில் உண்டு:

ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந்நாளும்

வானம் அரசாள் வரம் பெறலாம் – மோனவீ

டேறலாம் யானைக் கிளையான் திருப்புகழைக்

கூறினார்க் காமேயிக் கூறு

என்ற பாடலின் மூலம் வளமும் நலமும் பெறுவதோடு முக்திப் பேறும் கிடைக்கப் பெறும் என்பது உறுதியாகிறது.

வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர்

சீலம் ஏத்திய சித்த பிரஸித்தரே என்று கூறுகிறது சித்து வகுப்பு.

அருணகிரிநாதர் சரித்திரத்தில் ஏராளமான அற்புதங்கள் உண்டு. அவர் வாழ்ந்த காலத்தில் தேவி உபாசகனான சம்பந்தாண்டான் என்பவன் அவர் மீது பொறாமை கொண்டு அருணகிரிநாதரை ஆதரித்த பிரபுடதேவமாராஜனிடம் அவரை பொது மன்றத்தில் முருகனைக் காட்டுமாறு வற்புறுத்த அதை சிரமேற்கொண்டு அருணகிரிநாதர், “கந்தப் பொழில் திகழ் குருமலை மருவிய பெருமாளே! சந்தச் சபைதனில் எனதுளம் உருகவும் வருவாயே” என்று பாட முருகன் அனைவரும் முன் காட்சி தந்தார். தேவியைக் காட்ட இயலாத சம்பந்தாண்டான் தெளிவு பெற்றான். மக்களும் மன்னனும் மகிழ்ச்சி அடைந்தனர்.

‘அதல சேடனார் ஆட அகில மேரு மீதாட’ என்று ஆரம்பிக்கும் திருப்புகழில் உதய தாம மார்பான பிரபுடதேவ மாராஜன் உளமும் ஆட வாழ் தேவர் பெருமாளே என அவர் பாட மயிலும் ஆடி தானும் ஆடி வந்தான் முருகன் என்கிறது வரலாறு.

அன்றாடம் காலை எழுந்ததிலிருந்து இரவு உறங்கப் போகும் வரை அத்தனை அனுஷ்டானங்களுக்கு உகந்த திருப்புகழ் பாடல்கள் உண்டு. எழுந்தவுடன் முருகன் குமரன் குகன் என்று  மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய் என்பார் அவர்.

திருநீற்றை எழுந்தவுடன் நெற்றியில் இட வேண்டும். ‘நீறதிட்டு நினைப்பவர் புத்தியில் நேசம் மெத்த அளித்தருள் சற்குரு’ என்பார் முருகனை அவர். துணையாய்க் காவல் செய்வாய் என்ற திருப்புகழை ஓதி உறங்கினால் காவலுக்கு இருப்பான் வேலவன்! இப்படி காலை முதல் இரவு வரை பாட வெண்டிய திருப்புகழ் பாடல்கள் பல உண்டு.

முருகனைத் துதிப்போருக்கு நோய்கள் அண்டா; கர்மவினையால் வரும் நோய்களைப் பட்டியலிடுகிறார் அருணகிரிநாதர்.

இருமல் உரோகம் முயலகன் வாதம்

எரிகுண நாசி   விடமே நீர்

இழிவு விடாத தலைவலி சோகை

எழுகள மாலை இவையோடே

பெருவயிறினை எரிசூலை சூலை

பெருவலி வேறும் உள நோய்கள்

பிறவிகள் தோறும் எனை நலியாத

படி உனதாள்கள் அருள்வாயே

என்று பாடும் போது நோய்கள் நம்மை அண்டா; அண்டியவையும்  நம்மை நலியச் செய்யா என்பது உறுதி.

அருணகிரிநாதருக்கு ஜெபமாலை கொடுத்து அருளியவன் குமரன்.

அபகார நிந்தைப் பட்டுழலாதே அறியாத வஞ்சரைக் குறியாதே

உபதேச மந்திரப் பொருளாலே உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ

என அவர் உருகுகிறார்; நம்மையும் உருக வைக்கிறார்.

இபமாமுகன் தனக்கு இளையோனே இமவான் மடந்தை உத்தமி பாலா

ஜெபமாலை தந்த சற்குருநாதா திருவாவினன் குடி பெருமாளே என்று கூறி அவருக்கு முருகன் ஜெபமாலை தந்ததைக் கூறி அருளுகிறார்.

முருகனை எப்படி அறிவது?

அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே என்கிறார் அவர். நுண்ணறிவால் அறிய வேண்டியதை அறி; ஸயின்ஸ் கூறும் நுண்ணறிவைப் பயன்படுத்தி அவனை அறி; பின்னர் அவன் இருதாள் இறைஞ்சு; அப்போது உன் இடர் களையும் என்ற ரகசியத்தைக் கூறுகிறார்.

விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் உரிய முறையில் இணைத்த மகான் அவர்.

அணுவில் அசைவாய் என்று அவர் கூறும் போதே நவீன அறிவியல் இப்போது கண்டுபிடித்த அணு அசைவை ஆடம் மற்றும் பார்டிகிளை அன்றே அவர் கண்டு உரைத்ததை நினைத்து வியக்கிறோம்.

அருணகிரிநாதர் நமக்கென வேண்டுவதில் சமர்த்தர்.

இகபர சௌபாக்யம் அருள்வாயே என்று கூறுவதால் பக்தர்களுக்கு இகவாழ்வும் சிறக்க வேண்டும் பர வாழ்வும் கிடைக்க வேண்டும் என்று கூறி அவ்விரண்டும் முருகனைத் துதித்தால் கிடைப்பது உறுதி என்று அறுதியிட்டு உரைக்கிறார்.

என்றனுயிர்க்காதரவுற்றருள்வாயே,  நீடு கழலிணைகள் சேர அருள்வாயே

செஞ்சொற் தருவாயே          அடியிணை தந்து நீ ஆண்டருள்வாய்

மலர் தாள் கமலம் அருள்வாயே  வந்து நீ அன்பில் ஆள்வாய்

சந்தப் பதம் வைத்தருள்வாயே   என இப்படி ஒவ்வொரு பாடலிலும் நமக்கு வேண்டியதைக் கேட்டு நம்மைப் பாடித் துதிக்க வைப்பது அவர் சிறப்பாகும்.

சுப்ரமணியன் என்றாலேயே வெற்றி அருள்பவன் என்றே பொருள் என்பதை மஹாபாரதம் விவரிக்கும்.

அசுரருடன் போருக்குச் செல்கையில் மற்ற தேவர்களின் பின்னே வெற்றி தேவதை செல்லும். ஆனால் முருகன் சூரபன்மனுடன் போருக்குச் செல்கையில்  அவனுக்கு முன்னே வெற்றி தேவதை சென்றதாம். அதாவது Cause and effect – அதாவது காரண காரியம் என்பது முறை. இங்கு செயலுக்கு முன்னேயே வெற்றி உறுதி செய்யப்படுகிறது என்கிறார் வியாஸ பகவான் முருகனைப் பற்றிச் சொல்லும் போது.

ஆகவே தான் வெற்றி வடிவேலனை வெற்றி அருள்வாய் என்று வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

உயர் திருப்புகழ் விருப்பமெனச் செப்பன என்னக்கருள்கை மறவேனே என்று முருகனின் அருளை நினைத்து உருகுகிறார்.

to be continued…………………………..

tags-தித்திக்கும் திருப்புகழ்-1

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 30 (Post No.9191)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9191

Date uploaded in London – –26 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -30

Sutra 3-3-64

Ni pata – studying ; in Tamil ‘padi’= study

பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உபயோகித்த மாணவ, பாடம், படி, பாடசாலை ஆகியவற்றை இன்றும் தமிழர்கள் உபயோகிக்கின்றனர். இலங்கையில் எல்லா பள்ளிக்கூடங்களும் பாடசாலை என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லால் அழைக்கப்படுகிறது. தமிழ் நாட்டில் வேத பாட சாலைகளுக்கு மட்டும் அப்பெயர் இருக்கிறது.

Pati, paatam/lesson, mmanava/student are all in panini.

Tamils use all these Sanskrit words.

Sri lankan tamils even use paatasaalai, but tamil nasu tamils use this only for vedic schools- veda paata saalaa

Naatham – sweet sound is used in all Indian languages

நாதம் – இனிய ஒலி , கீதம், ஓசை

Xxx

3-3-65

Panini use the word veena

We come across naradar veenai from the days of silappadikaram

வீணை என்பது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை தமிழில் இல்லை. குறளில்கூட யாழ் தான் . சிலப்பதிகாரத்தில் முதல் முதலில் வீணை வருகிறது. பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்துகிறார்.

Xxx

3-3-66

Pana – handful

Paana – business, coomerce; already explained;

Related to pana, karsha pana, money, paanis of rig veda etc

பண – கையளவு

மூல பண – கையளவு முள்ளங்கி

மூல – முள்ளங்கி

பாண = பணம்

MULA PANA – HANDFUL OF RADISH

Xxx

3-3—67

Matha – proudness

Matha – madness

Un’matha’ – mad

மத – செருக்கு, கர்வம்

உன்’மத்த’MAD – பைத்தியம்

யானைக்கு ‘மதம்’ பிடித்தது

Xxx

3-3-69

Samaaja – gathering

Brahmana samaajam

Sangeetha samajam

Used all over india.

சமாஜம் -குழு, கூட்டம்,

பிராமண சமாஜம்

மதுரையில் இசைக்கல்லூரி – ‘சத்குரு சங்கீத ஸமாஜம்’ என்று அழைக்கப்படுகிறது

Sadguru Sangeetha samaajam is in Madurai.

Xxxxx

3-3-75

HavE – ‘hey’ calling someone

ஹவே = ஹே /ஆங்கிலம்; ஏய் /தமிழ்

Xxx

3-3-82

Ayas – metal, iron

அயஸ் என்றால் உலோகம்; அதாவது பொன்

ஐம்பொன் என்பதால் 5 உலோகங்களை போன் என்று அழைத்தோம். வள்ளுவரும் ஓரிடத்தில் தங்கம் என்றும் இன்னுமொரு இடத்தில் இரும்பு என்றும் பயன்படுத்துகிறார். வெள்ளைக்காரர்கள் ரிக் வேதத் தை மொழிபெயர்த்தபோது எல்லா ‘அயஸ்’ சொல்லையும் இரும்பு என்று மொழி பெயர்த்து மஹா குழப்பத்தை உண்டுபண்ணினர் ; இப்போது தெளிவு பிறந்து வருகிறது ; அயஸ் என்பதிலிருந்து ஆங்கிலச் சொல் ஐரன் /அயன் வந்தது

In Tamil iron is called pon.

Pon is used as iron and gold in Tirukkural

Pon is used with five mtals

Even in Vedas it is used for metals

WE WRITE IRON, BUT PRONOUNCE ‘AYAN’ WHY???

Xxxx

3-2-86

Sanga – assembly, kuuttam/crowd

Sangam – already explained

KEY WORD IN TAMIL CHRONOLOGY

Xxx

3-3-91

Panini uses ‘swap’- sleep

Swapna – dream

Somna – sleep  (SLEEP WALKING – SOMNAMBULISM)

SWAP=SOMNA=SWAPNA= SOPPANA IN TAMIL

Xxx

3-3-94

Deepti – light ; deepa – light, lamp

தீபம் – விளக்கு

மதி- அறிவு ; புத்திமதி ;

மதி கெட்டவனே ! வசவு

Mathi – knowledge

Xxx

3-3-95

Sangeet – music; sangeetam

சங்கீ த் =சங்கீதம்

Xxx

3-3-97

Keerti – fame

கீர்த்தி  is used in all languages

Xxx

3-3-102

Loluuyaa – often cutting

Related to people who shout hallelluuyaa ;

May be saying everyday meat eaters

லோலுயா – அடிக்கடி வெட்டுவோன் ‘

தினசரி மாமிசம் உண்போன் ; ஹல்லல்லேயுயா கூச்சல்

வெட்டு வெட்டு என்பதாக இருக்கலாம்

Xxxx

3-3-105

Sinthi – think ; tamils use it

சிந்தி – எண்ணு எண்ணிப்பார்

Puj – do puja பூஜி =புகழ் , துதி பாடு

Kath – speak; tamils use kaththinann

கத் = பேசு

கத்தினான் – சங்கத் தமிழில் இல்லை.

பிற்காலத்தமிழில் உரக்கக் கத்தினான், கத்திப் பேசினான் உளது.

TO BE CONTINUED…………………………….

tags – Tamil words in Panini 30

சிரிப்பதில் கூட கஞ்சத்தனமா ? நல்லா சிரிங்க! (Post No.9190)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9190

Date uploaded in London – – 26 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டலிலுள்ள என் சகோதரன் காதில் கேட்கும்படி சத்தம் போட்டுச்

சிரிங்க . நான்  50 வருஷமா உங்களுக்காக பீரோவில் பூட்டி ப்

பாதுகாத்து வரும் பழைய சிரிப்புத் துணுக்குகள் !

 நல்லா சிரிங்க!

tags- சிரிப்பதில் ,  கஞ்சத்தனமா, 

ஒளிவட்ட(AURA) உண்மைகள்! (Post No.9189)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9189

Date uploaded in London – –26 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திங்கள் தோறும் லண்டனிலிருந்து இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 25-1-2021 அன்று ஒளிபரப்பப்பட்ட உரை இது. இதை யூடியூப் மற்றும் facebook.com/gnanamayam தொடுப்பில் எந்த நாளும், எந்த நேரமும் காணலாம்!

ஒளிவட்ட உண்மைகள்!

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். இன்று AURA எனப்படும் ஒளிவட்டம் பற்றிய உண்மைகளைப் பற்றிப் பார்ப்போம்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் ஒரு ஒளிவட்டம் -அவ்ரா – AURA-  உள்ளது. இது பழங்காலம் தொட்டே இருந்து வரும் ஒரு நம்பிக்கை. எல்லா மதத்தினரும் இதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அனைத்து மத ஸ்தாபகர்கள், மகான்கள், ஞானிகள், பெரியோர்கள் ஆகியோரின் உருவங்களைச் சுற்றி ஒரு ஜோதி வட்டம் எல்லாப் படங்களிலும் போடப்பட்டிருப்பதே இதற்கான சான்று!

அவ்ராவை – ஒளி வட்டத்தை – மனித உடலிலிருந்து உடலைச் சுற்றிலும் நிரந்தரமாக வரும் ஒளிவீச்சு (Permanent Radiation from Human Body) என்று விவரிக்கின்றனர்.

இது நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. 1. நிம்பஸ் (Nimbus) 2. ஹாலோ (Halo) 3. அரோலா (Aureola 4)  க்ளோரி (Glory).

நிம்பஸும் ஹாலோவும் தலையிலிருந்து வருபவை.அரோலா முழு உடலிலிருந்தும் வருவது. க்ளோரி தலை மற்றும் உடலிலிருந்து வருவது ஆகும்.

பிரம்மஞானசபையை – Theosophical Society-ஐச் சேர்ந்தோர் இதை ஐந்தாகப் பிரிக்கின்றனர் இப்படி: 1. ஆரோக்கிய ஒளிவட்டம் (Health Aura) 2. முக்கிய ஒளிவட்டம் (Vital Aura) 3. கர்ம ஒளிவட்டம் (Karmic Aura) 4. குணாதிசய ஒளிவட்டம் (The Aura of Character) 5. ஆன்மீக ஒளிவட்டம் (The Aura of Spritual Nature)

 எல்லா ஒளிவட்டங்களிலும் வண்ணங்கள் பல காணப்படுகின்றன.

இந்த வண்ணங்களை வைத்துக் குறிப்பிட்ட மனிதனின் குணாதிசயங்களைக் கண்டுபிடிப்பதோடு அவன் உடலில் ஏற்பட்டுள்ள வியாதிகளையும் கூற முடியும்!

பிரகாசமான சிவப்பு நிறம் கோபம் மற்றும் வன்மையைக் குறிக்கிறது. மங்கலான சிவப்பு நிறம் காமம் மற்றும் அடங்கா இச்சையைக் குறிக்கிறது. பழுப்பு நிறம் பேராசையையும் ரோஸ் நிறம் அன்பையும், மஞ்சள் நிறம் மிக உயரிய அறிவுத் திறனையும், இளஞ்சிவப்பு ஆன்மீகத்தையும் பச்சை ஏமாற்றுதல், பொறாமை ஆகியவற்றையும் அடர்த்தியான பச்சை இரக்கத்தையும் குறிக்கின்றன.கருமை ஒளிவட்டம் எதிர்பாராத மரணம் சம்பவிப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

ஒளிவட்டம் உண்மையே என்று அறிவியல் பூர்வமாக முதலில் கண்ட விஞ்ஞானி டாக்டர் வால்டர் ஜே. கில்னர் (Walter J.Kilner) ஆவார். இவர் 1847இல் பிறந்தார். 1920ஆம் ஆண்டு மறைந்தார். லண்டன் செயிண்ட் தாமஸ் மருத்துவ மனையில் மருத்துவராக இவர் பணி புரிந்தார்.

‘Thr Human Aura’ என்ற இவரது நூல் மிகவும் பிரசித்தி பெற்ற நூல். ஏராளமான பரிசோதனை ஆய்வுகளின் முடிவுகளை விளக்கமாகக் கூறும் நூல் இது.

1908ஆம் ஆண்டே மனித ஒளிவட்டம் பற்றிய கருத்து கில்னரின் மனத்தில் ஊன்றி விட்டது. கோல்தர் டை எனப்படும் டிக்யானினை (Coal Tar dye – Dicyanin)

வைத்து அவர் ஒளிவட்டத்தைக் காண வகை செய்தார். நூற்றுக்கணக்கான சோதனைகளைப் பொறுமையாக நடத்திய பின்பே 1911ஆம் ஆண்டில் தாம் கண்ட ஆய்வு முடிவுகளை ‘The Human atmosphere’ என்ற நூலாக எழுதி வெளியிட்டார். ஒளிவட்டம் காணும் முறையை இதில் அவர் விளக்கி எழுதியிருந்தார்.

வழக்கம் போலவே இதை நம்பாதோரின் கடுமையான விமரிசனத்திற்கு இந்த நூல் இலக்காயிற்று. ஆனால் தனது  முயற்சியில் சிறிதும் மனம் தளராத கில்னர் இதை மேலும் தொடர்ந்து ஆராய ஆரம்பித்தார்.

1914இல் பிரபல அறிஞர் சர் ஆலிவர் லாட்ஜ் இவர் சோதனைகளில் அக்கறை செலுத்தினார். 1920இல் திருத்தப்பட்ட பதிப்பாக இவரது நூல் மீண்டும் வெளியிடப்பட்டது. 23-6-1920 அன்று தனது 73ஆம் வயதில் மறைந்த இவர் தனது நூல் வெளியிடப்பட்டதைப் பார்க்க முடியவில்லை. பிரபல அறிவியல் இதழான ‘ஸயிண்டிபிக் அமெரிக்கன்’ இதழ் 1922இல் இவரைப் பாராட்டி ஒரு கட்டுரையை வெளியிட்டது.

உயிர் இருக்கும்  வரை ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் இருக்கும் ஒளிவட்டம் உயிர பிரிந்தவுடன் மறைந்து விடுகிறது.

ஒரு மனிதனின் ஒளிவட்டத்தை எப்படிக் காண்பது?

இதற்கு இரண்டு கண்ணாடி ஸ்கிரீன்கள் வேண்டும். இவற்றின்  மீது டிக்யானின் டை உள்ள ஆல்கஹால் கரைசல் தடவப்பட வேண்டும். கண்ணாடியில் ஒன்று அடர்ந்த பூச்சுடனும் மற்றது லேசான பூச்சுடனும் இருத்தல் வேண்டும். இந்த ஸ்கிரீன்களை, உபயோகிக்காதபோது அவற்றை இருட்டில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் கெமிக்கல்கள் அழிந்து அவை பயனற்றுப் போய்விடும்.

இந்த கண்ணாடி வழியே யாரைப் பார்த்தாலும் அவரின் உருவத்தைச் சுற்றிப் பனி போல இன்னொரு உருவச்சுற்று தெரியும். பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்டோருக்கு ஸ்கிரீனே தேவை இல்லை. வெறும் கண்ணாலேயே ஒளி வட்டத்தைப் பார்க்க முடியும். ஆனால் ஒளி உருவத்தைப் பார்க்கவே முடியாதவர் அடந்த பூச்சுக் கண்ணாடி வழியே முதலில் பார்த்து விட்டு பிறகு லேசான பூச்சுக் கண்ணாடி வழியே பார்த்தால் ஒளி உருவம் இருப்பது தெளிவாகத் தெரியும்.

ஒளிவட்டத்தை விவரிப்பது என்பது இன்னொரு விஷயம்! அதற்குச் சில நிபந்தனைகள் உண்டு. வெளிச்சம் அதிகப் பிரகாசமாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு நபரையும் பொறுத்தே ஒளிவட்டத்தின் அளவு நிர்ணயிக்கப்படும். வெளிச்சம் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குப் போகும் முறையில் இருப்பதே சிறந்த முறை. அதாவது ஒளிவட்டம் பார்க்கப்பட வேண்டியவர் ஜன்னலுக்கு முதுகைக் காட்டியபடி நிற்க ஒளிவட்டம் பார்ப்பவர் ஜன்னலை நோக்கி நிற்க வேண்டும்.

இந்த ஒளிவட்ட சோதனை மூலம் வியாதிகளை இனம் கண்டு சிகிச்சை செய்ய முடியும் என்பது தான் இதன் சிறப்பு அம்சம்.

நல்ல ஆரோக்கியம் உள்ள மனிதரின் ஒளிவட்ட வண்ணம் நீலம் மற்றும் சாம்பல் கலந்த ஒன்றாக இருக்கும். தலையைச் சுற்றி எட்டு அங்குலம் ஒளிவட்டமும் மற்ற இடங்களில் ஐந்து அங்குலமும் ஒரு பிரபல விளையாட்டு வீரருக்கு இருந்தது. அப்போது அவருக்கு வயது 33. இதே அளவு அவருக்கு முன்னும் பின்னும் ஒளி பரவி இருந்ததையும் பார்க்க முடிந்தது.

அடுத்து ஆரோக்கியம் உள்ள ஒரு பெண்மணிக்கு வெளி ஒளிவட்டம் நாலரை அங்குலமாக இருக்க, கால் அருகே நான்கு அங்குலமாகக் குறைந்து இருந்தது. நீலம் கலந்த சாம்பல் நிற உள் ஒளிவட்டத்தைச் சுலபமாகத் தனியே பார்க்க முடிந்தது. மூன்றரை அங்குலம் முன்பின் அனைத்துப் பக்கமும் இருந்தது. கைகால்களில் மட்டும் அது மூன்று அங்குலமாகக் குறைந்திருந்தது.

ஐலீன் காரட் (Eileen Garrett) என்னும் பெண்மணி ஒளிவட்டத்தைப் பார்ப்பதில் வல்லவர். அவர் ஒரு க்ளர்வாயண்ட் (Clairvoyant). அதாவது கட்புலனுக்குப் புலனாகாமல் உள்ளவற்றை காணும் திறன் கொண்டவர். தமது சுயசரிதையில் தாம் கண்ட காட்சிகளை அவர் விவரிக்கிறார்:

குழந்தையாக இருக்கும் போதே மனிதர்களின் குணாதிசயங்கள் அவர்களின் சுற்று ஒளியை (Surround) பொறுத்தே இருக்கும் என்று தெரிந்து கொண்டேன் என்று அவர் கூறுகிறார்.

“அவர்களின் ஒளியின் தரத்தைப் பொறுத்தும் அதன் வண்ணங்களைப் பொறுத்தும்  அவர்களது பர்ஸனாலிடியை என்னால் நிர்ணயிக்க முடியும் . சிலர் மிளிரும் ஒளியுடன் நடக்கும் போது இன்னும் சிலரோ மங்கலான ஒளியுடன் நடப்பார்கள்.  மிருகங்களுக்கும், தாவரங்களுக்கும் கூட இது உண்டு. அவைகளைச் சுற்றி இருக்கும் ஒளியைப் பொறுத்து மரங்கள் மற்றும் பூக்களுக்கு ஜீவத்தன்மை இருக்கிறது. மிருகங்கள் ஒன்றுக்கு ஒன்று எப்படி நடந்து கொள்கின்றன என்பதைக் கவனித்தேன். அவைகளால் ஏனையவற்றின் சுற்று ஒளியை உணர முடிகிறது என்று என்னால் கூற முடியும். பருந்தைக் கண்டு எலி எப்படி உடனே ரீ-ஆக்ட் ஆகிறது?! அதே போல நண்பர்கள் மற்றும் எதிரிகளை இனம் காண இந்தச் சுற்று ஒளி அவற்றிற்கு உதவி புரிகிறது” என்று இப்படி விளக்கமாகக் கூறுகிறார் அவர்.

இன்னொரு சுவையான சம்பவம். இது ஸ்ரீ சத்ய சாயிபாபாவைப் பற்றிய ஒன்றாகும். உலகின்  மிகப் பிரபலமான விஞ்ஞானி பாரனோவ்ஸ்கி ஒரு முறை புட்டபர்த்திக்கு வந்தார். அவர் வெறும் கண்களாலேயே ஒளிவட்டத்தை நன்கு பார்க்க வல்லவர். ஸ்ரீ சத்ய சாயிபாபாவைப் புட்டபர்த்தியில் பார்த்த பின்னர் அங்கு ஒரு கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது அவர் கூறினார் : “நான் ஜனாதிபதி ஃபோர்டு, எலிஸபத் மஹாராணி, கிரீஸ் தேசத்து ராணி போன்ற பிரபலமானவர்களுடன் ஒரே மேடையில் பேசியவன். என்றாலும் இன்றைய எனது அனுபவம் விநோதமான ஒன்றாக இருக்கிறது. பாபாவின் ஒளிவட்டம் ஆகாயத்தை எட்டும் இளஞ்சிவப்பு வண்ணமாக இருக்கிறது. இதுவரை நான் இப்படிப்பட்ட ஒரு ஒளிவட்டத்தை -அவ்ராவை – என் வாழ்நாளில் கண்டதே இல்லை. அவர் நடக்கும் போது அந்த பிரம்மாண்டமான இளஞ்சிவப்பும் ஆகாயத்தை ஊடுருவிச் செல்கிறது. அன்பின் உருவான இளஞ்சிவப்பாகவே இவர்  இருப்பதால்

இவரை ‘Love Walking on two feet’ – ‘நடமாடும் அன்பின் உருவம்’ என்றே அழைக்கலாம் என்றார் அவர்.

ஒளி வட்டத்தைக் காண உதவும் காமராக்கள் இப்போது அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன. சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொருவரது ஒளிவட்டத்தையும் இந்த காமரா மூலம் படம் எடுத்து அதை பரிசோதித்து அவரவர் பலனை அறிய இப்போது முடிகிறது!

நோயாளிகள் தங்களது நோயை இனம் கண்டு அதற்குரிய சிகிச்சையைப் பெற முடியும்; நோய் வருவதை முன்கூட்டியே அறிய முடியும்; ஆகவே அதிலிருந்து ஒருவர் வரப்போகும் அபாயத்திலிருந்து தன்னை ஒருவர் காத்துக் கொள்ள முடியும்.

ஆன்மீக முன்னேற்றத்தை விரும்பும் ஒருவர் தனது கோபம் போன்ற தீய குணங்களை அறவே அகற்ற இந்த ஒளிவட்டத்தைக் கண்டு தனது முன்னேற்றத்தையும் அறிந்து கொள்ளலாம். இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் கொண்ட ஜோதி ஒளிவட்டத்தை அடையலாம்!

ஒளிவட்டம் பற்றி அறிந்து கொள்வது என்பது அறிவியல் நமக்குத் தந்த பரிசுகளில் முக்கியமான ஒன்றாகும்!

நன்றி, வணக்கம்!

***

tags- ஒளிவட்டம், aura,

LONDON CALLING (HINDUS) 25-1-2021 (Post No.9188)

MRS SINDHUJA CHANDRAMOULI
MRS VAISHNAVI ANAND

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9188

Date uploaded in London – –25 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

THE HIGHLIGHT OF GNANAMAYAM BROADCAST ON MONDAY 25TH JANUARY 2021 WAS THE TALK INTERVIEW BY GUEST SPEAKERS:-

1.DR KAUSHIK CHANDRA MALLIK FROM KOLKATA

 
Dr. Kaushik Chandra Mallik 

Dr. Kaushik Chandra Mallik MS,FRCS,Consultant Urologist practising in kolkata, West Bengal.

His association with Shastra Dharma Prachar Sabha, founded by Shrimat Upendramohan has been since his birth, so he has practically grown up within the Sabha.

Jayanti Shastrani,Drabanti dambhika,Hrisyanti shanto, Nipatanti nastikah is his motto. 

He spoke about the concept of India existed even before British came to India. He cited lot of example from the life of great philosopher Adi Shnakara. He told the listeners Shankar’s march from Kaladi in south to Bhadrikashram in the Himalayas and his establishen of Four Mutts in four corers of Bharath showed his concept of India. He wiped out Durmathas and cleanded the Hindu practices

Mr Showan Sengupta

Following him Mr Showan Sengupta of Kolkata rendered an excellent Sanskrit hymn on Krishna.

Mrs Sindhuja Chandramouli from Chennai

2.Second Guest speaker of the day was Mrs Sindhuja Chandramouli from Chennai. She is one of the youngest Upanyasakas of Tamil Nadu. She has lectured on 150 topics. Her approach was to show that patriotism and devotion to gods are like two eyes. So she started covering unconventional subjects such as freedom fighters, social reformers and even shrines and festivals in addition to conventional topics touching Puranas and Itihasas. . She explained with great humour how she was sucked into this field of giving discourses. She became crazy with Tirukkural after memorising the 1330 couplets to win a competition. Her mother forced her to learn them. Later hearing a Bhagavathar’s talk on Kanchi Paramacharya she started lecturing with his blessing on the same stage with songs.

She also demonstrated how the Upanyas began in those days and how she does it in modern days. She gave examples from the life of Ramana Maharishi and Swami Vivekananda to show how even small bytes of information can attract the attention of the devotees. With her traditional knowledge in music, she became a shining example to others. Mrs Vaishnavi Anand introduced her and asked her  relevant questions to elucidate good information within half hour.

WEBSITE HAS HER CONTACT DETAILS

ekambaramsindhuja@gmail.com

www.facebook.com/sindhujaharikataha

Her 150 topics performed so far

KATHA BYTES

WWW.SINDHUJHA.COM

INTRODUCTION BY MRS VAIHNAVI ANAND

ஆடல் பாடல் கதை கவிதை இவற்றின் துணை கொண்டு கதை சொல்லி ஒருவரின் பெருமை மற்றும் அவரது பராக்கிரமங்களை நமக்கு தெரிவிக்க வல்ல கலையே ஹரிகதை அல்லது கதாகலாக்ஷேபம் எண்பதாவது.

இக்கலை பழங்காலம் தொட்டு நம் பழக்கத்தில் இருந்து வருகிறது. லவனும் குசனும் ராமாயண கதையை ஸ்ரீ ராமரு க்கு வர்ணித்தது ஹரிகதைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

ஸ்ரீமதி  சிந்துஜா சந்திரமௌலி  மஹாபெரியவரினுடைய  தீவிர பக்தி கொண்டவர் . தனது சிறு பிராயம் முதலாக கதாகாலஷேபம்  செய்வதில் அவரின் அருள் கொண்டு தேர்ச்சி பெற்றவர். இவர் ஒரு சைல்ட் prodigy  என கூறினால்  அது மிகை ஆகாது .

ஸ்ரீமதி  சிந்துஜா சந்திரமௌலி  கிட்டத்தட்ட 17 வருடங்களாக ஹரிகதை நிகழ்ச்சிகளை தமது தாயார்  ஸ்ரீமதி  உஷா ஏகாம்பரம் அவர் அவரின் துணை கொண்டு செய்து வருகிறார் .

ஆல் இந்தியா ராடியோ  இவருக்கு ‘ஏ ‘ grade in   ஹரிகதை என அறிவித்திருக்கிறது.

இவர்

   தமிழக அரசின் ‘கலைவளர்மணி”

    திருக்குறளின் 1330 குறளையும் 100 வகையாக  ஒப்புவித்தமைக்காக  வேர்ல்ட்  திருக்குறள் forum வழங்கிய  “திருக்குறள் மாமணி”

   தெய்வ தமிழ் இசை மன்றம் மற்றும் கிருஷ்ண கான  சபா  வழங்கிய “ஹரிகதை வித்தகர் ” போன்ற விருதுகள் பெற்று இருக்கிறார்.

ஸ்ரீமதி சிந்துஜா சந்திரமௌலி அவர்கள்  பிரம்ம கான  சபா , கிருஷ்ண காண சபா, தி மியூசிக் அகாடமி, நாரத கான  சபா போன்ற பல முக்கிய சபைகளில் கதாகாலஷேபம்  செய்ந்திருக்கிறார்.

ஸ்ரீலங்கா,அபுதாபி, துபாய், போன்ற நாடுகளுக்கும் இந்தியாவின் இலக்கிய  பொக்கிஷங்களை ஹரிகதை யின் வாயிலாக கொண்டு சேர்த்திருக்கிறார்.

நந்தனார் சரித்திரம்,  தீர ஆஞ்சநேயர் சமவாதம், மஹாபலி வைபவம், தமிழிசையில் நவபக்தி போன்ற 150கும் மேற்பட்ட தலைப்புகளில் கதாகாலஷேபம்  செய்திருக்கிறார்.

ஆன்மீக பணியில் ஈடுபடுவதையே தனது பாக்கியமாக கருதும் சிந்துஜா அவர்கள் , கடவுள் பக்திக்கு நிகரானது தேச பக்தி என்று வலியுறுத்துகிறார்.  அதோடு நிற்காமல் தனது கதாகாலக்ஷேபத்தை ராமாயண மஹாபாரத கதைகளோடு நிறுத்திக்  கொள்ளாமல் இன்றைய தன்னலமில்லா தேச தலைவர்களின் பெருமைகளையும் ஹரிகதையின் வாயிலாக நமக்கு எடுத்து கூற தவற வில்லை.

இன்று ஞானமயம்  நிகழ்ச்சியில்  நமது சிறப்பு விருந்தினராக தமது அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொள்ள இணைகிறார்   ஸ்ரீமதி சிந்துஜா சந்திரமௌலி 

 வணக்கம் சிந்துஜா

Gnanamayam promised the guest speakers of the day that they would be  given more time during their next appearance.

Mr S Nagarajan of Bengaluru spoke about the Auras and Dr N Kannan spoke about the Vaishnavites’ fascination with the Tamil language.

Producer Kalayana sundara Sivacharya spoke about the ongoing Tiruppugaz Recitation to celebrate oncoming Thaipusam festival.

Mrs Lakshmi Ramaswami’s disciples sang Tiruppugaz for prayer.

xxx

25-1-21 MONDAY- GNANA MAYAM CHANNEL

ANNOUNCEMENT & PRAYER- 5 mts

XXX

TWO GUEST SPEAKERS :-

1.MRS SINDHUJA CHANDRAMOULI INTERVIEW/TALK –HALF HOUR -25+5 (INTRODUCED BY MRS VAISHNAVI ANAND)

2.TALK BY Dr Kaushik Chandra Mallik from Kolkota and

DEVOTIONAL SANSKRIT SONG BY  MR SHOVAN SENGUPTA- BOTH 15 MINUTES

XXX

MR. S.NAGARAJAN’S TALK- 8 on AURAS

KALYANJI’S announcement ABOUT THAIPUSAM-4

DR KANNAN’S TALK ON ALVARS

APPRX. 70 MINUTES

XXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

(FORMER BBC BROADCASTER, SENIOR SUB EDITOR, DINAMANI, FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL)

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- showan sengupta, Kaushik Chandra Mallik, Sindhuja, Chandramouli, Upanyas, Vaishnavi

LONDON CALLING (TAMILS) 24-1-2021 (Post No.9187)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9187

Date uploaded in London – –25 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

THE TAMIL THUNDER BROADCAST KNOWN AS THAMIL MUZAKKAM BROADCAST THE FOLLOWING PROGRAMMES ON SUNDAY 24TH JANUARY 2021 AS PART OF ITS  WEEKLY TAMIL BROADCAST.

WORLD HINDU NEWS ROUND UP WAS READ BY MRS SUJATHA RENGANATHAN IN ENGLISH AND BY MRS VAISHNAVI ANAND IN TAMIL.

THE SPECIAL FEATURE OF THE BROADCAST WAS THE SONGS OF THE POST PONGAL FESTIVAL KANU PONGAL . IT IS KANU, KANUPPIDI AND KAANUM PONGAL. ALL MAKE SENSE BECAUSE THEY DISPLAY COLOURED RICE FOR THE CROWS AND SPARROWS AND WICH THE FAMILY TO LIVE HAPPILY SHARING EVERYTHING LIKE THE CROWS.

USUAL TEMPLE VIEW – ALAYAM ARIVOM – COVERED THE MOST FAMOUS KRISHNA TEMPLE IN KERALA (GURUVAYUR)..

AS USUAL THIRUPPUGAZ WAS RENDERD BY MRS JAYANTHI SUNDAR AND MISS KEERTHANA RAMALINGAM.

LONDON SWAMINATHAN’S THIRUPPUGAZ RESEAARCH ARTICLE—LIST OF PEOPLE WHO GO TO HELL ACCORDING TO ARUNAGII WAS READ BY MRS VAISHAVI ANAND.

EALIER PRAYER WAS RENDERED BY MASTER KUMARAGURUPARAN THYAGARAJA OF MALAYSIA AND THIRUPPUGAZ WAS RENDERED BY THE DISCIPES OF MRS LAKSHMI RAMASWAMY OF CHENNAI.

KANU SONGS WERE SUG BY MRS ANNAPURANAI PANCHANATHAN, DAYA NARAYANAN AND SWARNALATHA.

KANU SONGS IN TAMIL

கணுப் பண்டிகை பாடல் :

( அனைத்து சகோதரிகளுக்கும் சமர்ப்பணம் )

கணுப் பிடி வெச்சேன்

காக்காப் பிடி வெச்சேன்.

கணுப் பிடியும் 

காக்காப் பிடியும்

கலந்து நானும் வெச்சேன்.

பார்த்து வெச்சேன் பரப்பி வெச்சேன்

பச்சை இலையில் நிரப்பி வெச்சேன்.

மஞ்சள் இலையை விரிச்சு வெச்சேன்

மகிழ்ச்சி பொங்க பிரிச்சு வெச்சேன்.

காக்கைக்கும் குருவிக்கும் 

கல்யாணம்னு சொல்லி வெச்சேன்.

கலர் கலரா சாதம் வெச்சேன்

கரும்புத் துண்டும் கலந்து வெச்சேன்.

வகை வகையா சாதம் வெச்சேன்

வாழைப்பழம் சேர்த்து வெச்சேன்.

அண்ணன் தம்பி குடும்பமெல்லாம்

அமோகமாய் வாழ அழகாய் வெச்சேன்.

இனிப்பு புளிப்பு தேங்காய் சாதம்

இன்பமாய் நானும் எடுத்து வெச்சேன்.

எள் சாதம் எலுமிச்சை சாதம்

ஏகாந்தமாய் நானும் வெச்சேன்.

கூட்டு பொரியல் அவியல் வெச்சேன்

கூட்டுக் குடும்பமாய் வாழ வெச்சேன்.

தூப தீபம் காட்டி வெச்சேன்

தூய மனதோடு நானும் வெச்சேன்.

கற்பூரம் ஏத்தி வெச்சேன்

கடவுளை வணங்கி வெச்சேன்.

ஆரத்தி எடுத்து வெச்சேன்

ஆண்டவனை வேண்டி வெச்சேன்.

கணுப் பிடி வெச்சேன்

காக்காப் பிடி வெச்சேன்.

கணுப் பிடியும் காக்காப் பிடியும்

கலந்து நானும் வெச்சேன்.

காக்கைக் கூட்டம் போல

எங்கள் குடும்பமும் பிரியாதிருக்க வெச்சேன்

 THIRUMATHY SWARNALATHA

XXXXXXXXXXXXXXXXXX

AGENDA

THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER (PART OF GNANA MAYAM CHANNEL)

24-1-2021 SUNDAY

PRAYER- MASTER KUMARAGURUPARAN THYGARAJA, MALAYSIA

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN’S TALK ON TEMPLES- GURUVAYUR

Thiruppugaz  by MRS JAYANTHI SUNDAR & MS KEERTHANA RAMALINGAM

XXX

WORLD HINDU NEWS ROUND UP–

IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN

IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

XXX

LONDON SWAMINATHAN’S ARTICLE READ BY MRS VAISHNAVI ANAND (LIST OF PEOPLE WHO GO TO THE HELL ACCORDIN TO THIRUPPUGAZ)

KANU SONG BY MRS SWARNALATHA

KANU SONG BY MRS DAYA NARAYANAN

KANUP SONG BY MRS ANNA PANCHANATHAN

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

(FORMER BBC BROADCASTER, SENIOR SUB EDITOR, DINAMANI, FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL)

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM / GNANAMAYAM

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS – கணுப் பண்டிகை பாடல், KANU SONGS, BROADCAST24121

திருப்பாவை அதிசயம் 3- கம்பனுக்கும் ஆண்டாளுக்கும் பிளாக் ஹோல் எப்படித் தெரியும் ? (Post No.9186)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9186

Date uploaded in London – –25 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருப்பாவை அதிசயம் 3- கம்பனுக்கும்  ஆண்டாளுக்கும் BLACK HOLE பிளாக் ஹோல் எப்படித் தெரியும் ?

எப்போது பார்த்தாலும் ஐன்ஸ்டைனையே ALBERT EINSTEIN புகழ்வது நியாயமா? ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு முன்னரே நம்மவர்தான் எல்லாம் சொல்லி விட்டார்களே! இனி வரப்போகும் கண்டு பிடிப்புகளை நான் முன்னரே எழுதிவிட்டேன். அதாவது ஒளியின் வேகத்தை மிஞ்சசுவது மனோவேகம், வெளி உலகத்தாரின் ஏழு பண்புகள்; அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் உண்டு என்றும் எழுதிவிட்டேன். பூமி-சந்திர- செவ்வாய் பற்றிய தொடர்புகள் நவ கிரஹ ஸ்தோத்திரத்தில் இருப்பது பற்றியும் சொல்லிவிட்டேன் . மொழி விஷயத்தில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சொல்லியது போல தமிழுக்கும் சம்ஸ்கிருதத்து க்கும் மூலம் ஒன்றுதான் என்றும் உலக மொழிகளுக்கு எல்லாம் நாம்தான் மூலம்  என்றும் எழுதிவிட்டேன்.

ஆயினும் கம்பராமாயணத்தை மூன்றாம் முறையாகப் படித்தபோது flash of thought பிளாஷ்! அமெரிக்காவிலுள்ள நண்பர்களுக்காக ஸ்கைப் கிளாஸ்/

Skype Class நடத்திய போது இந்த எண்ணம் பளிச்சிட்டது ; மறுநாள் திருப்பாவையை 10, 15 அல்லது 100 ஆவது படித்த முறையும் அதே பிளாஷ் FLASH  அடித்தது. இது லண்டன் நண்பர்களுக்கான நடத்திய Skype Class ஸ்கைப் கிளாஸ்.

முன்னர் படித்த பொழுது எல்லாம் தோன்றாத எண்ணம்  இரண்டு தினங்களில் திடீரெனத் தோன்றியதற்குக் காரணம் “அதிகமாகப் படிச்சு படிச்சு கிறுக்குப் பிடிச்சு போச்சு” என்ற சினிமா பாடல் கதைதான்.

இதோ சப்ஜெக்டு-SUBJECT– க்கு வருகிறேன்

ஆண்டாளும் கம்பனும் வானத்தில் உள்ள அதிசய கருந்துளைகள் பற்றிப் பாடியுள்ளனர்

xxx

BLACK HOLE கருந்துளைகள்- பிளாக் ஹோல் என்றால் என்ன?

கருங்குழி (Black Hole) அல்லது கருந்துளை என்பது, இவற்றின் எல்லைக்குட் செல்லும், ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்பு சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும். மேற் குறிப்பிட்ட எல்லை நிகழ்வெல்லை (event horizon) எனப்படும். இந்த நிகழ்வெல்லைக்குள் இருந்து பார்க்கக்கூடிய ஒளி அலைகள் போன்ற மின்காந்த அலைகள் கூடத் தப்பி வெளியேற முடியாது என்பதால் உள்ளே நடப்பவை எவற்றையுமே வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது. இதனாலேயே இதனைக் கருங்குழி என்கின்றனர். கருங்குழிகள் பெரிய  நட்சத்திரங்களின் பரிணாமத்தின் இறுதிக்கட்டமாகக் கருதப்படுகிறது. இதற்குக் கன அளவோ, மேற்பரப்போ கிடையாது. ஆனால் இதன் பிரம்மாண்டமான திணிவு (mass) காரணமாக இது முடிவில்லாத  அடர்த்தியைக் கொண்டுள்ளது.

ஒளியைக் கூடத் தப்பவிடாத அளவுக்கு வலுவான ஈர்ப்பு சக்தி கொண்ட பொருள் பற்றிய விஷயத்தை  1783 ஆம் ஆண்டில் பிரித்தானிய வானியல்  அறிஞர்  ஜான் மிச்சல் (John Michell) என்பவர் முன்வைத்தார். பின்னர் ஐன்ஸ்டைன் கொள்கைகள்மூலம் இது விளக்கப்பட்டுள்ளது

இதைக் காணமுடியாவிட்டாலும்  இதன் சேஷ்டைகள்/ விஷமங்கள்  மூலம் இதை அறிய முடிகிறது . இதற்குள் இழுக்கப்பட்ட பிரம்மாண்டமான சூரியன்கள்/ நட்சத்திரங்கள் என்ன ஆகின்றன என்பது பற்றி பல்வேறு  ஊகங்கள் உள (இதில் விக்கிபீடியா விளக்கத்தையும் சேர்த்துள்ளேன்).

Xxxx

கம்ப ராமாயணம்

சூழு மாகடல்களும்  திடர்படதுகள் தவழ்ந்து

ஏழு பாரகமும் உற்றுளது  எனற்கு எளிது அரோ

ஆழியான் உலகு அளந்தஅன்று தாள்சென்ற அப்

பூழையோடே  பொடித்து அப்புறம் போயதே

-எதிர்கொள் படலம், பால காண்டம், கம்ப ராமாயணம்

பொருள்

படைகளால் எழுந்த புழுதி, உலகத்தைச் சூழ்ந்துள்ள பெரிய கடல்கள் தூர்ந்து போகும்படி , இந்தப் பூமியில் உள்ள ஏழு தீவுகளுக்கும் சென்றது. இப்படிச் சொல்லுவதுதான் எளிதாக இருக்கிறது. ஏன் தெரியுமா ?

திருமால், வாமன அவதாரம் எடுத்து, த்ரிவிக்ரமனாக மாறி, உலகங்களை அளந்த அந்தக் காலத்தில் அவனது திருவடி ஒன்று மேலே சென்று அண்டத்தின் மேற்பகுதியைத் துளைத்த அந்த வழியே , படைகளின் புழுதி சென்று அண்டத்துக்கு அப்பாலும் பரவியது.

இதிலுள்ள சொற்களை கவனிக்க வேண்டும் . இந்த உரைகள் 1000 ஆண்டுக்கும் மேலாக வழி  வழியாக சொல்லப்படுவது . இதில் ‘அண்டம்’ என்று சொன்னபோதே இந்த யுனிவர்ஸ் universe – பிரபஞ்சம் வட்ட வடிவில் இருப்பதை நாம் அறிந்தோம் என்று சொல்கிறது. ஏழு கண்டங்கள் எப்படி உருவாயின என்பதை சூசகமாகத் தெரிவிக்கிறது. வானத்தில் (sky hole) ஓட்டை இருப்பதாகவும் அதன் வழியாக அண்டத்துக்கு அப்பால் (beyond universe) செல்ல முடியும் என்றும் சொல்கிறது. மேகத்தில் துளை என்று சொல்லி இருந்தால் ஆச்சர்யப்பட்டிருக்க மாட்டோம். அண்டத்தில் துளை, அதன் வழியாக தூசி போதல் என்பது இப்போதைய பிளாக் ஹோல் Black hole வர்ணனையை ஒத்திருக்கிறது. மேலும் மூன்று அடியால் உலகளந்த விஷயம் ரிக் வேதத்திலேயே உள்ளது. அப்போது அர்த்தம் கற்பித்தோருக்கு இன்றைய  விஞ்ஞானம்  தெரியாததால் பலவகையாகப் பொருள் கூறினார்கள்.

ஆக கம்பன் காலத்திலேயே ‘அண்டம்’, ‘துளை’ என்ற வருணனை இருந்திருக்கிறது. இதை பகவத் கீதை விஸ்வரூப தரிசனம் விளக்கமாகக் காட்டுகிறது.

பாரகம் – பூமி, கரை, திரைச் சீ லை, தோணி   ; பூழை — துவாரம் , துளை .

கம்பனுக்கு பல நுறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஆண்டாள், கம்பன் போல விரிவாகச் சொல்லாவிட்டாலும் 17-ஆவது திருப்பாவையில் ‘கருந்துளைகள்’ பற்றிப்   பாடுகிறார்.

அம்பரமே தண்ணீரே சோறே ……

….

……..

அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த

உம்பர் கோமானே !

அம்பரம் – ஆடை, ஆகாயம்

ஊடு  – இடம், அம்பரம் ஆகாயம் , அறுத்து – துளையிட்டு

ஆக கம்பனுக்கும் ஆண்டாளுக்கும் ஆகாயத்தில் black hole துளை உண்டு என்பது தெரியும். அதை திருமாலின் அவதாரத்தால் ஏற்பட்டதாகக் கூறினும் அது பிற்கால விளக்கம் என்பது பெறப்படும் என்னை?

எப்படியெனில், ரிக் வேதத்திலேயே ‘மூன்று அடி உலகளந்த வரிகள்’ வருகின்றன !

இந்துக்கள் Time காலம் என்பதை வட்டப்பாதையில் Circular  செல்வதாகக் காண்பர். அதுவே சரி. அதாவது கருந்துளைக்குள் சென்றது மீண்டும் புதுவடிவுபெறும்.  அறிவியல் வளர, வளர நமது பழைய பாட்டுகளுக்கு புது விளக்கம் பெற முடிகிறது. இப்படிச் சமயப் புஸ்தகங்களில் உள்ளதைப் படித்து விளக்கம் காணும் முன்னர், போஜன் போன்ற மாபெரும் அறிஞ ர்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய சம்ஸ்க்ருத விஞ்ஞான புஸ்தகங்களை விஞ்ஞானிகள் படித்தால் வருங்காலக் கண்டுபிடிப்புகளை இன்றே சொல்லமுடியும்.

–SUBHAM –

Tags-  ஆண்டாள், திருப்பாவை, அதிசயம் 3, கருந்துளை, பிளாக் ஹோல், கம்பன், Black Hole

“போர்” என்பவன் யார்? (Post No.9185)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9185

Date uploaded in London – – 25 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

போர்என்பவன் யார்?

Kattukutty

மூன்றாம் நபரைப்பற்றி ஒருவன் பேசினால் அவன் “அரட்டை”

நம்மைப் பற்றி பேசுபவன் சிறந்த “பேச்சாளன்”.

தன்னை பற்றியே பேசுபவன் “போர்”

ஒரு நிமிஷத்தில் சொல்ல வேண்டிய விஷயத்தை ஒரு மணி

நேரத்தில் சுருக்கமாகச் சொல்பவன்!!!

மணி என்ன என்று கேட்டால், கடிகாரம் தயாரிப்பது எப்படி

என்பது பற்றி பேச ஆரம்பிப்பவன்!!!

ஒரு மணி நேரத்தை ஒரு யுகமாக மாற்றுபவன்…….

மேற்கொண்டு எதுவும் பேசுவதற்கில்லை என்ற பிறகும்

விடாமல் பேசுபவன்!!!

“போய் வருகிறேன்” என்ற இரண்டு வார்த்தையைத் தவிர,

ஆயிரம் வார்த்தைகளைக் கொட்டுபவன் !!!

“சமூகம்” என்பது இரு வகை மனிதர்களைக் கொண்டது்

ஒருவர் “ போரடிப்பவர்”.

மற்றொருவர் “ போரடிக்கப்படுபவர்”.

நாம் நம்மைப் பற்றி பேச விடாமல், தன்னைப் பற்றியே

பேசுபவன்

“போர் மன்னன்” என்ற பட்டத்தை பெறுவது எப்படி????

உங்களுக்குத் தெரிந்ததையெல்லாம் பற்றி மூச்சு

விடாமல் சொல்வது்.

“போர் “ அடிப்பவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

முதல் வகை- ஒரு விஷயத்தைப் பிடித்துக் கொண்டு அதைப்

பற்றியே பேசுபவர்கள்

இரண்டாவது வகை – இவர்களுக்கு விஷயமே தேவையில்லை

மணிக்கணக்காக பேசுவதற்கு……..

நீங்கள் சுவையாக ஒரு விஷயத்தை சொல்வதாக நினைத்து

சொல்லிக் கொண்டிருக்கும் போது, மற்றவருக்கு கொட்டாவி

வந்தால், சந்தேகமே இல்லை, நீங்கள் ஒரு “போர்”!!!!

போர் அடிப்பவர்களுக்கு ஒரு சாபம் தாங்கள் ஒரு போர் என்று

உணரவே முடியாதது தான்!!!

நீங்கள் அடிக்கும் “போர்”, உங்களாலேயே தாங்க முடியவில்லை

என்றால் நீங்கள் “உலக மகா போர்”!!!!

***

tags – உலக,  மகா போர், 

நடந்தவை தான் நம்புங்கள் – 4 (Post No.9184)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9184

Date uploaded in London – –25 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் – 3 வெளியான தேதி : 15-1-2021; கட்டுரை எண் : 9145

நடந்தவை தான் நம்புங்கள் – 4

ச.நாகராஜன்

1

பிரபலமான ஒரு உபந்யாசகர் கடவுளைப் பற்றியும் கடவுளைப் போற்றி வணங்க வேண்டியது பற்றியும் அருமையாக உபந்யாசங்கள் செய்து வந்தார். மக்கள் பெரிதும் அவரை மதித்தனர். அவர் உரையைக் கேட்க திரளாகக் கூடுவர்.

அவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று நினைத்த நாத்திகக் கும்பல் ஒரு ஆளை தயார் செய்தது. ஒரு கூட்டத்தில் அவர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த அவன் எழுந்து வேகமாகச் சென்று மேடை மீது ஏறினான். மேஜைக்கு முன்னால் இருந்த மைக்கைப் பிடித்துப் பேச ஆரம்பித்தான்.

“கடவுள், கடவுள் என்கிறீர்களே, அவரை உங்களால் எங்களுக்கு இங்கே காட்ட முடியுமா? நான் ஒரு பகுத்தறிவுவாதி. கண்களால் காணப்படுவதைத் தான் என்னால் நம்ப முடியும்? என்று இப்படி ஆர்ப்பாட்டமாகப் பேசி நிறுத்தினான் அவன்.

கூட்டத்தில் இருந்தோர் திகைத்தனர்.

அவனை உபந்யாசகர் புன்முறுவலுடன் கோபப்படாமல் பார்த்தார்.

அவரது சாந்தமான முகத்தைப் பார்த்தவுடன் பகுத்தறிவுவாதி, மிகவும் சத்தமாக, “நான் ஒரு பகுத்தறிவுவாதி” என்று கத்தினான்.

அவனைப் பார்த்த உபந்யாசகர், “சரி, கண்களுக்குப் புலனாகும் எதையும் தான் நீ நம்புவாயா? இதோ இங்கு உன் பகுத்தறிவைக் கொஞ்சம் காண்பியேன். இதோ இந்த மேஜை மீது அதை வைத்துக் காண்பி. அதைக் காண்பித்தால் தானே அதை நான் நம்ப வேண்டும். அது தானே உன் கொள்கை!” என்றார்.

கூட்டத்தினர் ஆரவாரித்துக் கை தட்டினர். பகுத்தறிவு தலை குனிந்து மேடையை விட்டு இறங்கி வெளியே போக ஆரம்பித்தது. அவன் வெளியேறும் வரை கூட்டத்தினர் கை தட்டிக் கொண்டே இருந்தனர்.

2

பேரறிஞர் பெர்னார்ட் ஷா புத்திகூர்மை உள்ளவர் மட்டுமல்ல; உடனுக்குடன் பதில் கொடுப்பதிலும் வல்லவர்.

ஒரு முறை பிரபலமான ஆங்கில வரலாற்றாசிரியர் சர் பேசில் ஹென்றி லிடல் ஹர்ட் (Sir Basil Henry Liddel Hart) பெர்னார்ட் ஷாவை நோக்கி, “உங்களுக்கு ஒன்று தெரியுமா?” என்று ஆரம்பித்தார். Sumac, Sugar ஆகிய இரண்டே இரண்டு வார்த்தைகள் தான் ஆங்கில மொழியிலேயே Su என்று ஆரம்பித்தாலும் Shu என்ற உச்சரிப்பு கொண்டவை” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

உடனே பெர்னார்ட் ஷா, “Sure” என்று சிரித்தவாறே சொன்னார்.

(Sumac என்பது ஒரு விதமான புதர் (is a type of bush). Suவில் ஆரம்பித்தாலும் ஷூர் என்றே Sure உச்சரிக்கப்படுகிறது. பெர்னார்ட் ஷா போட்டார் ஒரு போடு ஷீர் என்று சொல்லி!

 3

பிரபலமான ஏ.எஸ்.பி. ஐயர் வரலாறு படைத்த ஒரு நீதிபதி. அவரது அறிவும், உடனுக்குடன் நகைச்சுவையுடன் பதிலளிக்கும் பாங்கும் என்றும் பேசப்படுபவை.

அவரைப் பற்றி வி.ஆர். கிருஷ்ண ஐயர், 23-1-1999 அன்று தேதியிட்ட ஹிந்து நாளிதழில், A.S.P. Ayyar – A Judicial paradigim’ என்ற தலைப்பில் அருமையான ஒரு கட்டுரையை எழுதினார்.

அது அனைவரையும் கவர்ந்தது. ஏ.எஸ்.பி. ஐயரை அடிக்கடி சந்தித்து அளாவி மகிழ்ந்த சென்னையைச் சேர்ந்த சி.வி.நரசிம்மன் என்பவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஒரு முறை அவர் நரசிம்மனிடம் ஒரு வக்கீலின் தவறுக்கும் ஒரு டாக்டரின் தவறுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று கேட்டார். அவரே அதற்கான பதிலையும் சொன்னார் இப்படி: “ ஒரு வக்கீலின் தவறு தரைக்கு ஆறு அடிக்கு மேலே தொங்கும். ஒரு டாக்டரின் தவறு தரையிலிருந்து ஆறு அடிக்கு கீழே புதைக்கப்படும்” (“A lawyer’s mistakes hangs six feet above the ground. A doctor’s mistake isburied six feet below the ground.”)

இப்படி வாழ்நாள் முழுவதும் அவர் கூறிய நகைச்சுவை வாக்கியங்கள் ஏராளம், ஏராளம்.

(திரு C.V.Narasimhan’s letter appeared in Letters to the Editor Column on 28-1-1999)

***

TAGS – நடந்தவை , நம்புங்கள் – 4 , 

PLEASE JOIN US TODAY 25-1-21 MONDAY

PLEASE JOIN US TODAY 25-1-21 MONDAY

25-1-21 MONDAY- GNANA MAYAM CHANNEL

ANNOUNCEMENT & PRAYER- 5 mts

XXX

TWO GUEST SPEAKERS :-

1.MRS SINDHUJA CHANDRAMOULI INTERVIEW/TALK –HALF HOUR -25+5 (INTRODUCED BY MRS VAISHNAVI ANAND)

2.TALK BY Dr Kaushik Chandra Mallik from Kolkota and

DEVOTIONAL SONG BY  Mrs Shovan Sen- BOTH 15 MINUTES

XXX

MR. S.NAGARAJAN’S TALK- 8 on AURAS

KALYANJI’S announcement ABOUT THAIPUSAM-4

DR KANNAN’S TALK ON ALVARS

APPRX. 70 MINUTES

XXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

(FORMER BBC BROADCASTER, SENIOR SUB EDITOR, DINAMANI, FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL)

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM / GNANAMAYAM

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS- PUBLICITY25121