உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – 2 (Post.9654)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9654

Date uploaded in London – –27 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

முதல் பகுதி நேற்று வெளியானது இதோ இரண்டாம் பகுதி.

மந்திரம் 8

எட்டாவது மந்திரத்தில் நிறைய அதிசய விஷயங்கள் வருகின்றன. இறைவனுடைய அருள், ஊமையைப்  பேச வைக்கும், முடவனை நடக்க வைக்கும் என்று சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகம் உள்ளது .

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்

யத் க்ருபா தம் அஹம் வந்தே பரமானந்த மாதவம்

मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं ।

यत्कृपा तमहं वन्दे परमानन्द माधवम् ॥

Muukam Karoti Vaacaalam Panggum Langghayate Girim |

Yat-Krpaa Tamaham Vande Param-Aananda Maadhavam ||

Meaning:

1: (I Remember with Devotion the Divine Grace of Krishna Who can make the) Dumb speak with Eloquence and the Lame cross high Mountains,

2: I Remember and Extol that Grace which flows from the Supreme Bliss manifestation of Madhava.

பொருள்

பேசமுடியாதவர் யார் கருணையால் பெரும் பேச்சாற்றல் மிக்கவர் ஆகிறாரோ முடவர் யார் கருணையால் பெரும் மலையைக் கடக்கிறாரோ அந்த பரமானந்த மாதவனை அடியேனும் வணங்குகிறேன்.

இதற்கான மூலம்  இந்த மந்திரத்தில் வருகிறது

முடவனான பராவிரஜனை நடக்கச் செய்தீர்கள், குருடனான ரிஜ்ராகவனைக் கண் பார்வை பெறச் செய்தீர்கள்,சப்பாணியான சுரோணனை நகரச் செய்தீர்கள் என்று குத்ச ஆங்கீரசன் அஸ்வினி தேவர்களைப் புகழ்கிறார்.

டுத்து வரும் நிகழ்வு – ஓநாயால் கவ்வப்பட்ட காடையை தப்பித்துப் பிழைக்கவைத்தீர்கள் என்பதாகும். இது வேறு சில பாடல்களிலும் வருகிறது .

வெள்ளைத் தோல் கோமாளிகள் சொல்லுவது என்ன   என்பதைக் கேளுங்கள்-

பரா விரஜன் என்பது ஒருவரின் பெயர் என்பது சாயனரின் விளக்கம். எல்லா இந்துக்களும் இதை ஏற்பர். ஏனெனில் மூக கவியும் , குமர குருபரரும் கடவுளின் அருளைப்பெற்று கவி பாடியதை இந்துக்கள் அறிவர். ஆனால் பென்பீ என்பவர் சொல்கிறார் “அஸ்தமன சூரியனைக் குருடன் என்றும் முடவன் என்றும்  இந்த மந்திரம் வருணிக்கிறது” .

இதுதான் வெள்ளைக்காரனுக்கும் சாயனருக்கும் உள்ள வித்தியாசம்.

என் கருத்து

மாக்ஸ்முல்லர் முதல் கீத் (A B Keith) வரை 20 கோமாளிப் பயல்கள் ரிக் வேதத்துக்கு பாஷ்யம் எழுதப் போனால், நான் , லண்டன் சாமிநாதன், என்ன மட்டமா?

ORIGIN OF ANIMAL FABLES

இதோ  எனது பாஷ்யம்:-

ரிக் வேதத்தில் பறவைகள், மிருகங்கள் பற்றி நிறைய அதிசயச் செய்திகள் வருகின்றன. ஆகவே முதல் முதலில் வியாசர், வால்மீகி , ஈசாப் , விஷ்ணு சர்மன் , புத்த ஜாதகக் கதைகளில் வரும் பிராணிகள் பற்றிய கதைக்கெல்லாம் மூலம் ரிக் வேதம்தான். பருந்து கொண்டுவரும் சோம ரச மூலிகை பற்றிப் பல மந்திரங்கள் உள்ளன .

இங்கே ஓநாயிடமிருந்து காப்பாற்றப்பட்ட காடை / கவுதாரிப் பறவையைக் காண்கிறோம்.இதுதவிர சிங்கம், மான் முதலிய பிராணிகள் பற்றி வினோத விஷயங்கள் வருகின்றன. ஆக முதல் முதலில் அனிமல் பேபிள்ஸ் (Animal Fabes) எழுதியவர் இந்துக்களே.

இதற்கு நான் எழுதும் பாஷ்யத்தில் இன்னும் ஒரு விளக்கமும் சொல்லுவேன் :-

கிரஹணம் என்பது என்ன என்று தெரிந்து கணக்குப் போட்டு பஞ்சா ங்கத்தில் நாள் குறித்த போதும் பாமர மக்களுக்காக ராகு என்னும் பாம்பு சந்திரனை விழுங்குவதாக கதை சொன்னார்கள். அது போல இதுவும் சூரிய கிரஹண குறிப்பு என்றே நான் கருதுகிறேன். “ஓநாயால் கவ்வப்பட்ட காடை” என்பது சூரிய கிரஹணமே . அடிக்கடி நடக்கும் சந்திர கிரஹணத்தை இது குறிப்பிட்டால் மேலும் நிறைய இடங்களில் இந்தச் செய்தி வந்திருக்கும். ஒரு சில இடங்களில் இது வருவதால் சூரிய கிரஹணமே.

ஒன்பதாவது மந்திரம்

சிந்து நதியில் இனிய நீர்ப் பெருக்கினை உருவாக்கினாய்;

‘மூப்பு இல்லாத’ நீங்கள் வசிஷ்டனைக் குணப்படுத்தினீர்கள்;

குத்சன், நர்யன், சுருதர்யனைக் காப்பாற்றினீர்கள் ;

இதற்கு விளக்க உரை/ பாஷ்யம் செய்த சாயனர் இவர்கள் அனைவரும் ரிஷிகள் என்கிறார். ஆனால் என்ன ,எப்படி, எதற்காக எங்கே குணப்படுத்தினார்கள் என்ற செய்தி எங்கும் இல்லை.

என் கருத்து

இந்த மந்திரம், இதற்கு முந்தைய மந்திரங்களில் ‘சு’ என்ற எழுத்துடன் பெயர்கள் வருவதைக் காண்கிறோம். இதை அப்படியே தமிழர்ளும் சங்க காலம் முதல் பின்பற்றி வருகின்றனர். ‘சு’ என்றால் ‘நல்ல’  இதை நாம் ‘ந’க்கீ ரன் , ‘ந’ப்பால த்தன் ,’ ந’ச்செள்ளை, ‘ந’ப்பசலை,’ ந’ப்பின்னை முதலிய பல பெயர்களில் காண்கிறோம். இன்றும் தமிழர்கள் சு-மதி, சு-கந்தி சு- ஹாசினி , சு- சீலா என்றெல்லாம் பெயர் சூட்டுவதைக் காண்கிறோம்.

இந்த மந்திரத்தில் மேலும் சில விளக்க முடியாத விஷயங்கள் உள்ளன. அஸ்வினி தேவர்கள் ஒளியைக் கொண்டு வ  ததாகவும், காற்று என்பது கடல் போல உள்ளதாகவும், அஸ்வினிகள் ஒளியால் காற்றை வேகமாக வீசச் செய்வதாவும் உரைகளில் வருகிறது. எதிர்கால அறிவியல் முன்னேற்றம் இதற்கு விடை கூறலாம்

பத்தாவது மந்திரம்

மந்திரம் 10ல் மேலும் ஒரு அதிசயச் செய்தி வருகிறது. விச்பலை என்ற பெண்ணுக்கு அஸ்வினி தேவர்கள் செயற்கைக் கால் (ARTIFICIAL LEG) கொடுத்த செய்தி. இதே செய்தி நிறைய பாடல்களில் வருவதால் அவள் உலோகத்தினால் ஆன கால் பெற்றதையும் நாம் அறிகிறோம். இது வேத காலத்தில் மருத்துவ விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறி இருந்தது என்பதைக் காட்டுகிறது. உலகிலேயே முதல் முதலில் செயற்கை மூக்கு ஆப்பரேஷன் செய்ததை சுஸ்ருதர் நூலில் இருந்து அறிகிறோம். கீரந்தை என்னும் பிராமணன் வீட்டை இரவில் தவறாகத் தட்டிய குற்றத்துக்காக பாண்டியன் தன கைகயை தானே வெட்டிக்கொண்டதையும் பின்னர் மருத்துவர்கள் அவருக்கு தங்கக்ககை பொருத்தியதையும் பொற்கைப் பாண்டியன் (Golden Handed Pandya King) கதை    மூலம் நாம் அறிவோம். வேதத்தில் சில பெயர்கள் ஹிரண்ய ஹஸ்தன் / பொற்கை என்று வருவதும் குறிப்பிடத்தக்கது . வேத கால இந்துக்கள் மிக உயரிய அறிவியல் ஆற்றல் பெற்றவர்கள் என்பதில் ஐயமில்லை.

பத்தாவது மந்திரத்தில் அசுவனின் மகன் வசன் பற்றியும் பாடுகினறனர் . இது என்ன கதை என்று தெரியவில்லை . வேதம் அவ்வளவு பழமையானது. பல விஷயங்களுக்கு விளக்கமே இல்லை. அவர்கள் மன்னரா, ரிஷிகளா என்றும் சொல்ல இயலவில்லை . ஆயிரம் என்ற டெசிமல் எண்ணும்  இதில் வருகிறது

மந்திரம் எண் 11

இதில் வணிகர் பற்றிய குறிப்பு வருகிறது. வேறொரு பாட்டில் தச்சர், நெசவாளர் பற்றி ஒரே மந்திரத்தில் வருகிறது. டாக்டர் என்று கடவுளை பல மந்திரங்கள் புகழ்கின்றன. இவை எல்லாம் வேத கால சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. மிக உயர்ந்த கல்வி கற்ற சமுதாயம் அது. 20 வெள்ளைக்கார கோமாளிகள் சொல்லுவது போல நாடோடிகள் அல்ல. பல மந்திரங்களில் நெல், பார்லி விவசாயம் பறறியும் கவிகள்  பாடுகின்றனர் . இதை எல்லாம் மொழி பெயர்த்த பின்னரும் வேத கால இந்துக்களை நாடோடி என்கின்றனர் 20 கோமாளிகள் அந்தக் கும் பலுக்குத் தலைவன் மாக்ஸ் முல்லர்.

இந்தப் பாடலில் உள்ள 25 மந்திரங்களில் 11-தான் பார்த்து இருக்கிறோம் .

தொடரும் …………………………………………

tags- வரலாற்று ஆசிரியர் -2, வரலாறு-2, ஓநாய், காடை

அகராதி “பிடித்த” சாமுவேல் ஜான்சன் (Post No.9653)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9653

Date uploaded in London – –27 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

SAMUEL JOHNSON

(1709 – 1784)

சாமுவேல் ஜான்சன் (SAMUEL JOHNSON)  முதல் ஆங்கில அகராதியை உருவாக்கினார். டாக்டர் ஜான்சன் லிச்ஃபீல்டு புத்தக்கடை உரிமையாளரின் மகன். லிச்ஃபீடில்(LICHFIELD) பள்ளிக் கல்வியை முடித்த பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். கல்விக்  கட்டணம் கட்ட முடியாததால் பட்டம் பெறுவதற்கு முன்னரே படிப்பை நிறுத்த நேரிட்டது. பின்னர் அவர் ஒரு நூல் வெளியீட்டாளரிடம் பணிபுரிந்தார். அவர், இவருக்கு சிறுதொகையை கொடுத்துவந்தார்.

26 வயதில் அவருடைய முதல் நூல் வெளியானது. இது ஒரு மொழிபெயர்ப்பு. அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதே ஆண்டில் அவர் திருமணம் செய்து கொண்டார்.

லிச்ஃபீல்டு அருகில் அவர் பள்ளிக்கூடம் துவக்கினார், அதிலும் வெற்றி கிட்டவில்லை. மூன்று மாணவர்களே வந்ததால் பள்ளிக்கூடத்தை மூட நேரிட்டது. ஆனால் அதில் ஒரு மாணவர் DAVID GARRICK பிற்காலத்தில் அவர் இங்கிலாந்தின் மிகப்பெரிய நடிகரானார்.

1737-ஆம் ஆண்டில் ஜான்சனும் கேரிக்கும் (Garrick) லண்டனுக்குச் சென்றனர். ஜான்சன் பல பத்திரிகைகளுக்கு எழுதினார். பின்னர் THE SPECTATOR என்ற பத்திரிகையையும் தொடங்கினார். அதே நேரத்தில் ஆங்கில அகராதியை தொடுக்கும் பணியிலும் இறங்கினார். அவருக்கு 46 வயதானபோது அவருடைய நூல் வெளியானது. இது அவரைப் புகழேணியின் உச்சிக்கு ஏற்றிவிட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அவருக்கு பட்டம் வழங்கியது.      

      இதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது தாயார் இறந்தார். சடலத்தை அடக்கம் செய்யக்கூட கையில் காசு இல்லை. ஒரே வாரத்தில் ஒரு நாடகம் எழுதி பணம் திரட்டினார்.

      இதற்குப் பின்னர்தான் அதிர்ஷ்ட தேவதையின் பார்வை அவர் மீது விழுந்தது. அகராதியை உருவாக்கிய அவர்தம் பெருமையை ஆங்கில உலகு உணர்ந்தது. அவருக்கு ஆண்டுக்கு 300 பௌன்ட் ஓய்வூதியம் அளிக்கப்பட்டது.

      ஜான்சனுக்கு 44 வயதானபோது ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பாஸ்வெல்லை (JAMES BOSWELL) சந்தித்தார். இவர்களுடைய நட்பு வளர்ந்து வேரூன்றியது. ஆங்கில மொழியில் புகழ்பெற்ற வாழ்க்கை வரலாறு உருவாக இது வழி வகுத்தது. ஜான்சனின் வாழ்க்கையை (LIFE OF SAMUEL JOHNSON) பாஸ்வெல் எழுதினார்.

      ஜான்சனுக்கு மரணத்தைக் கண்டு பயம். வாழ்நாள் முழுதும் மரணத்தை எண்ணி அஞ்சிய அவர் இறக்கும்போது அதைத் துணிவுடன் சந்தித்தார். வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

சாமுவேல் ஜான்சன் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

  1.  

Translate this page

7 Nov 2015 — Article Written by London swaminathan. Date: 7 November 2015. Post No:2308. Time uploaded in London :–7-58 AM. (Pictures in this article are taken by London swaminathan). DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!



அகராதி | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

  1.  

Translate this page

அவர்தான் எழுத்துச் சிற்பி சாமுவேல் ஜான்சன்! அவருடைய வரலாறு மிக மிகச் சுவையூட்டும் வரலாறு. சுருக்கமாகச் சொல்கிறேன். IMG_7860.



அடக்கமில்லாத | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

  1.  

Translate this page

10 Apr 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … பேரகராதியை முறையாகத் தயாரித்து பெரும்புகழ் பெற்றவர் சாமுவேல் ஜான்சன்.



தவிடுபொடி | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › த…

  1.  

Translate this page

11 Jul 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … ஆங்கில அகராதியை வெளியிட்ட அகராதித் தந்தை சாமுவேல் ஜான்சன் (SAMUEL JOHNSON) ஜெ J சொற்களையோ V …

–subham—

tags-ஆங்கில அகராதி , சாமுவேல் ஜான்சன்

என்ன அம்மணி! எதுவுமே வேண்டாமா? அரசனின் கேள்வி! (Post.9652)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9652

Date uploaded in London – –  –27 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

என்ன அம்மணி! எதுவுமே வேண்டாமா? அரசனின் கேள்வி!

ச.நாகராஜன்

ஸ்ரீ சத்யசாயி பாபா ஊட்டி, நந்தனவனத்தில் சத்யசாயி இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கிடையே 16-4-1988இல் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம் இது:-

உலகியல் இன்பங்கள் எல்லாமே நிலத்திருப்பவை அல்ல. வந்து செல்பவை அவை. இறைவன் ஒருவனே எல்லையில்லா ஆனந்தம் தருபவன்.

அரசன் ஒருவன் ஏராளமான கலைச் செல்வங்களையும் ஓவியங்களையும் கொண்ட பிரம்மாண்டமான கண்காட்சி ஒன்றை அமைத்தான். அனைத்து மக்களையும் அழைத்த மன்னன், உள்ளே செல்வோர் தங்களுக்குப் பிடித்த எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னான்.

அவ்வளவு தான், கூட்டம் அலைமோதியது. அவரவர் தங்களுக்குப் பிடித்த ஓவியத்தை அல்லது இதர பொருளை எடுத்துக் கொண்டு சென்றனர். ஆனால் ஒரு பெண்மணி மட்டும் கண்காட்சியிலிருந்து ஒரு பொருளையும் எடுத்துக் கொள்ளவில்லை. அவள் எதையும் எடுக்காமல் வெளியில் வந்தாள். வெளியே நின்றிருந்த அரசன் அவள் எதையும் எடுக்காமல் வந்ததைப் பார்த்தான். அவளை அழைத்தான். “என்ன அம்மணி, எதுவுமே வேண்டாமா?” என்றான். “எனக்கு ஒன்றுமே வேண்டாம்” என்றாள் அவள்.

“மிக அழகிய பொருள்கள் உள்ளே உள்ளனவே. அவற்றில் எதுவுமே வேண்டாமா?” என்றான்.

“உள்ளே மிக அழகிய பொருள்கள் இருக்கின்றன” என்று பதில் சொன்னாள் அவள்.

“அப்படியானால் ஒன்று கூட அவற்றில் உங்களுக்கு வேண்டாமா? என்று அரசன் கேட்டான். திட்டவட்டமாக வேண்டாம் என்றாள் அவள்.

“அப்படியானால் உங்களுக்கு என்ன தான் வேண்டும்? அதைச் சொல்லுங்கள் நான் தருகிறேன்” என்றான் அரசன்.

“அரசே! வாக்கு மாற மாட்டீர்களே! நான் கேட்டதைத் தருவீர்களா?” என்றாள் அந்தப் பெண்மணி.

“நான் வாக்குக் கொடுத்தால் கொடுத்தது தான்” என்று அரசன் உறுதி கூறினான்.

உடனே அந்தப் பெண்மணி, “அரசே! எனக்கு நீங்கள் தான் வேண்டும்” என்றாள்.

தான் கொடுத்த வாக்கின் படியே அரசன் அவளைப் பணிந்து வணங்கி தன்னை அவளுக்குக் கொடுத்து விட்டான்.

அரசனே அவளுக்குச் சொந்தமான பின்னர் அந்தக் கண்காட்சியில் இருந்த அனைத்துமே அவளுக்குச் சொந்தமாகி விட்டது.

இந்த பிரபஞ்சம் ஒரு பெரிய கண்காட்சி. அது இறைவனால் படைக்கப்பட்டது. இந்தப் பிரபஞ்சத்தில் நுழைபவர்கள் தங்களுக்குப் பிடித்தமானதை எடுத்துக் கொள்கிறார்கள். சிலருக்கு நல்ல வேலை பிடிக்கிறது. சிலருக்கு செல்வம் தேவைப்படுகிறது. ஆனால் எவருமே “ஸ்வாமி! இதில் ஒன்றை எடுத்துக் கொள்வதால் எனக்கு என்ன பயன் ஏற்படப் போகிறது. நீங்கள் என்னவராக ஆகி விட்டால் எல்லாமே எனக்குக் கிடைத்து விடுமே” என்று சொல்வதில்லைல்.

பிரபஞ்ச எக்ஸிபிஷனில் (COSMIC EXIBITION) நுழையும் நீங்கள் தெய்வீகத்தை வேண்ட வேண்டும். அப்போது பிரபஞ்சமே உங்களுடையதாகி விடும். எது ஒன்று மாறாததோ எது ஒன்று நிலைத்து நிற்பதோ அதையே நீங்கள் நாட வேண்டும். ஒன்றை விட்டு ஒன்றாக ஒன்றின் பின் ஒன்றாக நீங்கள் செல்லக் கூடாது. அதில் எப்போதுமே திருப்தி கிடைக்காது. இன்று கவர்ச்சியாக இருப்பது நாளைக்கு கவர்ச்சியாக இருக்காது. ஆனால் இறைவனைக் கொள்பவர்களுக்கோ அனைத்துமே கிடைத்து விடும்.

ஆசைகளைத் துறக்க மனிதன் தன் மனதை கடவுள் பால் திருப்ப வேண்டும். அதுவே திருப்தி, சந்தோஷம், எல்லையற்ற ஆனந்தம் அடைய வழி வகுக்கும்.

       ஆதாரம் ; Sri Sathya Sai Speaks Volume 21 chapter 11 (ஆங்கிலத்தில் உள்ள உரையின் சுருக்கம் மேலே தமிழில் தரப்பட்டுள்ளது)

ஓம், ஸ்ரீ சாயி சரணம்!

***

tags- அம்மணி, அரசன்,கேள்வி , சத்யசாயி பாபா

உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – 1 (9651)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9651

Date uploaded in London – –26 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

 ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – 1

ரிக்  வேதத்தில்  பத்து மண்டலங்கள் (புத்தகங்கள்) உள்ளன. அதில் 1000 பாடல்களுக்கு மேல் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் மந்திரங்கள் இருக்கும்; மொத்த மந்திரங்கள் பத்தாயிரத்துக்கும் சற்று அதிகம். இதில் முதல் மண்டலத்தில் உள்ள 112 ஆவது பாடல் முக்கியமானது. அதில் 25 மந்திரங்களில் ஏராளமான அற்புதங்களின் பட்டியலும், மன்னர்களின் பெயர்களும் வருகின்றன . இந்திய வரலாற்றை எழுதிய ஆங்கில அயோக்கியர்கள் இந்தியாவில் மன்னர்களே இல்லை என்றும் புத்தர் காலம் முதலே மன்னர்கள் பெயர்கள் உள்ளன என்றும் எழுதிவிட்டார்கள். அதை படித்துதான் நானும் மதுரைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் எம்.ஏ. பட்டம் பெற்றேன் . வெட்கக்கேடு.

கி.மு 2500ல் துவங்கிய சரஸ்வதி- சிந்து நதி தீர நாகரிகம் கி.மு 1700ல் வறட்சி, வெள்ளப் பேருக்கு முதலியவற்றால் அழிந்தது . வெள்ளைக்காரன் கணக்குப்படி 2000 ஆண்டுகளுக்கு மன்னரே கிடையாது. பெயரில்லாப் பூச்சி ஆட்சி செய்தது! அனால் இதே காலத்தில் பாபிலோனிய, எகிப்திய, சீன , மாயா மன்னர்களின் பெயர்கள் எல்லாவற்றையும் வெள்ளைத்  தோல்களே பட்டியல் போட்டுக் காட்டுகின்றன. புராணங்களோ வேனில் 140 தலைமுறையினரை கி.மு காலத்தில் காட்டுகின்றன. அவற்றை எல்லாம் அயோக்கியர்கள் ஒதுக்கிவிட்டனர். சூரிய வம்ச 140 +++ தலை முறை தவிர சந்திர வம்சம் வேறு உள்ளது !

மாக்ஸ்முல்லர் முதலிய 20 கோமாளிகள் ரிக் வேதத்தை மொழி பெயர்க்கப்  புறப்பட்டு “முழி பெயர்த்தனர்”. அவர்களுக்கிடையே மஹா குழப்பம் !!! தெரியாத ஒரு சொல் வந்தால் ஒரு கோமாளி அதை புழு பஎன்பான் . மற்றோரு கோமாளி அதை அரக்கன் என்பான். மூன்றாவது கோமாளி இது ஒரு தெய்வத்தின் பெயர் என்பான். ஒரே ஜோக் Joke மயம் . வாய்விட்டுச் சிரிக்கலாம். 700 ஆண்டுகளுக்கு முன்னர் சாயனர் என்ற மஹான், வேதத்துக்கு பாஷ்யம் எழுதினார். அதை ஆதாரமாக வைத்து எழுதுவதாகச் சொல்லும் ‘’மாக்ஸ்முல்லர் கும்பல்’ ஏராளமான இடங்களில் அவரை மறுப்பதோடு, சாயனருக்குத் தெரியாத ஆரிய- திராவிட வாதத்தை செய்யுளுக்குச் செய்யுள் சேர்த்துள்ளனர். அதாவது இவர்கள் மொழி பெயர்ப்பாளர் அல்ல. நாட்டைப் பிடிக்க வந்த, மதத்தைப் பரப்ப வந்த அயோக்கிய சிகாமணிகள்!

ரிக் வேதத்தை அனைவரும் படிக்க வேண்டும். முதல் மண்டல 112 ஆவது பாடலை (RV 1-112) கட்டாயம் படிக்க வேண்டும்.

உலகிலேயே பழமையான நூல் ரிக் வேதம். ஒவ்வொரு வெள்ளைத்தோல் கோமாளியும் அதற்கு ஒரு காலம்  சொல்லுவான். மாக்ஸ்முல்லர் முதலி ல் கி.மு.1200 என்று சொல்லி, மூஞ்சி மொகரை எல்லாம் குத்து வாங்கிய பின்னர் இது. கி.மு 1500 அல்லது அதற்கும் முந்தையது; எவராலும் இதன் காலத்தைக் கணிக்க முடியாது என்று சொல்லிவிட்டுச் செத்துப்போனார். இந்திய மண்ணை மிதிக்க அஞ்சி, வாழ் நாள் முழுதும் இந்தியா வராமலேயே ரிக் வேதத்துக்கு ‘பாஷ்யம்’ (COMMENTARY) எழுதினார். அதாவது கொட்டாம்பட்டி கிராம மேஸ் த்திரி நியுயார்க்கிலுள்ள உயர்ந்த கட்டிடம் பற்றி தீசிஸ் THESIS எழுதியது போல. நியூயார்க்குக்கு போகாமலேயே!!

முதல் மண்டல 112ஆவது பாடலைக் “கேட்டவர்” பெயர் கவிஞர் குத்ச ஆங்கீரசன். அவர் பாடிய கடவுள் உலகிலேயே முதலில் பிறந்த TWINS இரட்டையரான அஸ்வினி தேவர்கள். இவரைப் பற்றி  எல்லா வெள்ளைக்கார பயல்களும் ‘இவர்கள் புரியாத புதிர்கள்’ என்று எழுதிவிட்டனர். இவர்கள் செய்த அற்புதங்கள், கப்பல் பயணம், கடல் சாகசங்கள் எண்ணிலடங்கா. இந்த 112 ஆவது பாடலில் நீண்ட அற்புதப் பட்டியலும் மன்னர்களின் பெயர்களும் வருகின்றன. நாம் 25 மந்திரங்களையும் காண்போம் . வேத மந்திரங்கள் வானிலிருருந்து ரேடியோ அலைகள் போல “கேட்க”ப்பட்டவை. அவை கவிகள் எட்டுக்கட்டியதல்ல.

*****

மந்திரம் 1 (1-112-1)

குத்ச ஆங்கீரசன் செப்புகிறார் – நான் முதலில் வானத்தையும், பூமியையும், அக்கினி தேவனையும் வணங்குகிறேன் .அஸ்வினி தேவர்களே ! முன்னர் போரில் வெல்ல எந்த சங்க நாதம் எழுப்பினீர்களோ அத்துடன் வருக.

இதில் போர் வெற்றி, ‘கிடைத்த செல்வத்தைப் பங்கிடல்’ முதலிய செய்திகள் வருகின்றன.

மந்திரம் 2

இதில் ஒரு அருமையான வரி வருகிறது. புனித செயல்களில் ஈடுபட எங்களைத் தூண்டும் உத்திகளுடன் வருக. இன்னும் ஒரு அருமையான வரி வருகிறது ‘சொல் தேர்’-சொல் ரதம் ; தச்சன் தேர் கட்டுவது போல கவிகள் சொற்றேர் கட்டுகின்றனர் . தமிழிலும் இது உண்டு. சொல் தச்சன், கல் தச்சன்.

‘தச்சன்’, ‘தேர்’ என்பதெல்லாம் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் என்பது பலருக்குத் தெரியாது

தக்ஷ என்ற சொல்லிலிருந்து டெக்கனிகல், டெக்னாலஜி, ஆர்க்கி ‘டெக்ட்’ போன்ற நூற்றுக் கணக்கான சொற்கள் உண்டு. இந்த ஸம்ஸ்க்ருத்ச் சொல் சங்க இலக்கியத்திலும் உண்டு. ஒரே நாளில்  எட்டு தேர் செய்த தச்சன் பற்றிய பாடலைக் காண்க. தேர் என்பதன் கண்ணாடி உருவம் ரத . அதாவது ரத என்பதைக் கண்ணாடியில் பார்த்தால் தேர். இதை மொழி இயல் வல்லுநர்கள் Mirror Image மிர்ரர் இமேஜ் என்பர்.

ஜம்புநாதனின் தமிழ் மொழி பெயர்ப்பில் இன்னும் ஒரு உவமை வருகிறது ஆனால் கிரிப்பித் ( R T Griffith  ஆங்கில மொழி பெயர்ப்பில் அது இல்லை. அதாவது “அறிஞர்களின் மொழிகளைச் செவியுறும் மாணவர்களை போல அடியார்கள் அஸ்வினி தேவர்களின் தேருக்கு அருகில் நிற்கிறார்கள் ” என்பதாகும். இதற்கு ஆதாரம் எங்கு இருக்கிறது என்பதைக் காண வேண்டும். ஜம்புநாதன் எழுதியது சரி என்றால் ‘மாணவர் உவமை’ அக்கால  கல்வி நிலையைக் காட்டுவதாகும்.

வேதம் முழுதுமுள்ள உவமைகள், உருவகங்களைப் பார்க்கையில் உலகிலேயே உன்னதமான கலாசாரம் அதுதான் என்று தலை மேல் அடித்துச் சத்தியம் செய்யலாம். பாட்டுக்குப் பாட்டு தங்கம் (Gold)  பற்றி வருகிறது, கணவன் மனைவி காதல், தாய்- பிள்ளை பாசம், அரசன்- மக்கள் அன்பு, சகோதரன்-சகோதரி பாசம் என்ற உவமைகள் எண்ணிலடங்கா.

‘பத்து நூறு அடுக்கிய கோடி’ என்பதை திருக்குறளிலும் சங்கத் பாடல்களிலும் காணலாம். இந்த Decimal System டெசிமல் சிஸ்டம் ரிக் வேதம் முழுதும் நிரம்பி வழிகிறது . ஏனைய கலாசார பழங்கால நூல்களில் இதைக் காண முடியாது.

மந்திரம் 3

மூன்றாவது மந்திரத்தில் மலட்டுப் பசுவை பால் சுரக்கும் கறவை மாடாக அஸ்வினி தேவர்கள் மாற்றிய அற்புதம் வருகிறது. இதை நாம் ஞான சம்பந்தரின் அற்புதத்துடன் ஒப்பிடலாம். ஆண்  பனை மரம் காய்க்காது என்று சமண மத ஆள் கிண்டல் செய்யவே அவன் சம்பந்தரிடம் சொல்லி வருத்தப் பட்டான் . அதை அவர் செக்ஸ் சேஞ்ச் SEX CHANGE  செய்து காய்க்கும் மரமாக மாற்றினார்.

மந்திரம் 4

இங்கு நிறைய உருவகம் வருகிறது; காற்று என்பதை எங்கும் சுற்றுபவனாகவும் (Wanderer) அதன் குழந்தை (offspring) அக்கினி என்றும் வருகிறது. அத்தோடு அக்கினியை இரு தாய்மார்களின் புதல்வன் என்கிறது (Twin mother)அதாவது இரண்டு கட்டைகளை உரசி தீயை உண்டாக்கியதால் இரட்டைத் தாய். காற்று  வீசி தீ  பரவுவதால் அதன் புதல்வன் அக்கினி. இப்படியெல்லாம் வியாசர் காலத்துக்கு  முன்னே – கி.மு. 3150க்கு முன்னரே கவி பாடினால் அவர்கள் எவ்வளவு அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மந்திரம் 5

ஐந்தாவது மந்திரத்தில் கிணற்றில் தள்ளப்பட்ட ரேபனையும் வந்தனையும் அஸ்வினி தேவர்கள் காப்பாற்றியதாக ஒரு செய்தி உள்ளது. இது போல கண்வ மகரிஷி மீட்கப்பட்ட குறிப்பும் உள்ளது. முதல் மண்டலத்திலேயே  4 அல்லது 5 ரிஷிக்கள் கிணற்றில் தள்ளப்பட்டு மீட்கப்பட்டதாக பாடல் வருகிறது. “கிணற்றில் தள்ளுதல்” (Idiom and phrase) என்பது ஒரு மரபுச் சொற்றோடராக இருக்கலாம். ஒரு மணப் பெண் தவறான கணவனுக்கு வாக்குப்பட்டால் உடனே அவள் பிறந்தகத்துக்கு வந்து “என்னைப் பாழுங்கிணற்றில் தள்ளி விட்டீர்களே” என்று அழுவாள். அடுத்த வீட்டுக் காரர்களும் “கிளியை வளர்த்து பூனைக்கு கொடுத்துவிட்டார்களே”

என்று அங்கலாய்ப்பர். இது போல “கிணற்றில் தள்ளப்பட்டது” அறியாமை என்னும் கிணறாகவும் ஒளி என்பது ஞானம் என்றும் இருக்கக்கூடும். ஆயினும் அப்பர் வாழ்வில் மஹேந்திர பல்லவன் அவரை சுண்ணாம்பு சூளையில் தள்ளியதையும் அவர் சிவ பெருமான் அருளால் உயிர் பிழைத்ததையும் நாம் அறிவோம். அது போல கண்வ மகரிஷியும் பிழைத்திருக்கலாம்.

ஆனால் ‘ஜோக்’ என்னவென்றால் எந்த ஒரு நிகழ்சசியிலும் 20 அயோக்கிய சிகாமணிகளும் இன  வாதத்தைப் புகுத்தி இருப்பதுதான். உலகிலேயே  1500 ஆண்டுகளுக்குச்  சண்டை போட்ட  இனம் தமிழ் இனம்தான். சேர, சோழ , பாண்டியர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு செத்ததைப்  போல உலகில் வேறு எந்த இனமும் 1500 ஆண்டுகளுக்கு ஒருவரை ஒருவர் அழித்ததாக வரலாறு இல்லை.

அங்கு ஒருவரை ஆரியர் என்றும் மறறொருவரை திராவிடர் அல்லது பூர்வ குடிகள் என்றும் சொல்லவில்லை. ரோம சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்ஜியத்தில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு செத்து ஒளிந்ததையும் நாம் வரலாற்றில் படிக்கிறோம். அதை விட்டு விட்டு வில்சன் என்ற ஜோக்கர், ஒரு வேளை  பூர்வ குடிமக்கள் இந்து மதம் பரப்ப வந்த கண்வ மகரிஷியை குழிக்குள் தள்ளி இருக்கலாம் என்று எழுதுகிறார்.

இவர்களை ‘ஜோக்கர்கள்’ என்பதை விட விஷமிகள் என்றே சொல்ல  வேண்டும். ஆரி ய- திராவிட/தஸ்யூ மோதலை அதி கம் பிரஸ் தாபிப்பவர் மாக்ஸ்முல்லர். அதாவது விஷமிகள் கும்பலின் தலைவன்.

எல்லோரும் ரிக் வேதத்தைப் படிக்க வேண்டும். விருத்திரன், கி, சுஷ்ணன் , சம்பரன் முதலிய 30 அரக்கர்களை இந்திரன் கொன்றான். பத்து பாடல்களில் அவர்களை அரக்கர்கள், அதாவது பூர்வ குடிமக்கள் என்று எழுதிவிட்டு அடுத்த 10 ப்பாக்களில் இது வறட்சி, மேகம் என்று எழுதுகின்றனர். இந்திரன் என்பவனை ஒரே ஆளாக சித்தரிக்கின்றனர். இது பிழை என்பதை காஞ்சி  பரமாசார்யார், அரவிந்தர் விவேகானந்தர், மஹாத்மா காந்தி, அம்பேத்கார் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர். இவர்கள் எவரும் ஆரிய- திராவிட மோதல் வாதத்தை ஏற்கவில்லை

ஆறாவது மந்திரம்

இங்கு அந்தகன், பூஜ்யூ , கற்கண்டு, வய்யா ஆகிய நால்வர் பற்றிய செய்திகள் வருகின்றன. இவர்கள் எல்லோரும் அஸ்வினி தேவர்களின் உதவி பெற்றவர்கள். அந்தகன் ஏரியில் தள்ளப்பட்டபோது அஸ்வினிகளால் மீட்கப்பட்டவர். பின்னொரு பாடலில் த்ரிதன் என்பவனை சகோதர்களே கிணற்றில் தள்ளிவிட்டதாக வருகிறது. ஆக “கிணற்றில் தள்ளுதல் ” என்பதன் பொருள் வேறு.

‘வய்யா’ என்பதிலுள்ள ‘ய்யா’ தமிழ் செல்வாக்கைக் காட்டுகிறது. வேதங்களில் பல பெயர்கள் நம்ம ஊர் மாதவையா, அய்யா சாமி  , முருகையா என்பது போல முடிகிறது.இது சம்ஸ்க்ருதத்தில் இப்போது இல்லை. அனால் தமிழில் ஐயா ஒட்டு உண்டு. ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

ஆறாவது மந்திரத்தில் வரும் பூ ஜ் யூ , துக்ரா என்பவரின் மகன். அவனை அவர் கடலில் விட்டவுடன் அஸ்வினி தேவர்கள் மிகப்பெரிய கப்பலில் காப்பாற்றிக் கொண்டுவந்ததாக ரிஷிகள் பாடுகின்றனர். பிற இடங்களில் அவர் பற்றி வரும் செய்தியில் கப்பலின் முழு விவரமும் உள்ளது

ஏழாவது மந்திரம்

இதில் வரும் ஆட்களில் இருவர் பற்றி ஒரு விவரமும் எங்கும் கிடைக்கவில்லை. மாற்வர்களில் அத்ரி  மகரிஷியை அசுரர்கள் தீக்குழியில் தள்ளிவிட்டதாகவும் அஸ்வினிகள் காப்பாற்றியதாகவும் செய்திகள் கிடைக்கின்றன. ஆனால் சுச்சந்தி, பிருசினிக்கு பற்றி செய்தி எதுவும் இல்லை. மற்றோருவரான புருகுத்சன் அரசன் என்று தெரிகிறது  . இதுவரை குறிப்பிட்ட பெயர்களில் பல, அரசர்களுடைய பெயர்களாக இருக்கலாம். சிந்து – சரஸ்வதி தீர எழுத்துக்களை படித்தால் இந்தப் பெயர்கள் அங்கே கிடைக்கலாம்.

–தொடரும்

 tags- முதல் வரலாற்று ஆசிரியர்,  ரிக் வேதம்  ,  இந்திய வரலாறு 

OLDEST HISTORIAN IN THE WORLD; RIG VEDA REVEALS-1 (Post No.9650)

Reseaarch Article

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9650

Date uploaded in London – –26 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

OLDEST HISTORIAN IN THE WORLD; RIG VEDA REVEALS-1 (Post No.9650)

EVERYONE MUST READ AT LEAST  ONE HYMN IN THE RIG VEDA. IT IS IN THE FIRST MANDALA, HYMN 112. IT LISTS ALL THE MIRACLES THAT HAPPENED BEFORE 3150 BCE AND ALL THE HISTORICAL ANECDOTES. SO THE POET-SEER  KUTSA ANGIRAS IS THE OLDEST HISTORIAN .NEITHER HERODOTUS NOR BERORUS NOR KALHANA OF RAJA TARANGINI COULD CLAIM THIS TITLE.

IT HAS NOT ONLY HISTORICAL DETAILS BUT ALSO SCIENTIFIC DETAILS SUCH AS THE ECLIPSE AND EARTH QUAKES!

***

RIGVEDA 1-112- 1 TO 25

HYMN 1-112 HAS 25 MANTRAS OR STANZAS, ONE OF THE LONGEST IN THIS MANDALA (BOOK)

Rishi /Kavi/Seer/Poet Kutsa Angirasa address this hymn to the oldest Twins in the world ‘Asvini Devas’.

Mantra 1 (RV.1-112-1)

Kutsa Angiras says, let me first salute Heaven and Earth and  Agni/fire god.

O Asvins, come here ! you helped us to get the spoil in the battle with your war cry  .

Mantra 2 , RV.1-112-2

O Asvins, come here!

You help our thoughts to think about more holy acts.

Here is a beautiful line – the hymns are described as ‘AN ELOQUENT CAR’. That is like carpenters make a beautiful chariot by cutting and joining the wooden pieces and decorating it with pearls and gems so do we do construct poems. Tamils also use SOL THER=WORD CHARIOT and SOL THATCHAN= WORD CARPENTER.

Please note the Tamil words ‘thachchan’ and ‘ther’ are Sanskrit words.

Thaksha gives birth to 100s of English words such technology, technical, archi TECT, tactics, tect etc.

‘Ther’ is RATHA inverted, reversed . it is called mirror image of ‘rathe’

Mantra 3

O Asvins, come here.

You, HEROES made the barren cow yield milk.

The word hero is used 1000s of times in the Rig Veda. They not only called the gods heroes, but also prayed for heroic children in 100s of verses.

Here the barren cow/pasu is interpreted as rishi Sayu’s cow.

So we hear one ancient anecdote and even milk is interpreted as Soma rasa/juice.

So we see the first miracle of Asvins, world’s first TWINS here.

Mantra 4

Here Fire God Agni is described as ‘Two Mothered’.

Ancient seers rubbed two sticks and made fire – says the interpreter. 

We get so many words like this which shows Vedic Hindus were highly cultured, imaginative, poetic, eloquent and literate.

According to Sayana, the most often quoted commentator, here Wind god is described as Wanderer and Fire God as his child.

Veda is full of symbolism. Vedic Hindus were highly imaginative. They don’t say anything straight. They themselves sing in one of the hymns GODS LOVE MYSTERIOUS EXPRESSIONS. They are NOT nomadic as described by the 15 Western jokers/translators.

Here comes one word ‘triple lore’. Commentators believe that a saint come poet Kakshivan became a master of 3 things. Western commentator and translator R T Griffith says the ‘passage meaning is uncertain’. Words like ‘uncertain, obscure, not clear, inserted, interpolated, incorrect’ are found throughout Griffith’s Rig Vedic translation. He quotes at least 20 jokers / comedians/ translators of the West; we get beautiful jokes- one person describes a word as a worm, another a devil and third person it may be a deity.

Number symbolism came to Tamil during the period of Siddha poetry. But in the R V ., we see it from the very beginning to the end.

Mantra 5

‘Pushed into well, fallen into well’ – are phrases used by Vedic seers.

Rebha and Vandana are said to have been thrown into wells by the Asuras and Kanva also was thrown into well. Asvins rescued them all. In other passages we come across TRITA thrown into well. Westerners could not understand this phrase. So  they gave this phrase a racial tone. One of the jokers, WILSON, say that the ‘some of the first teachers of Hinduism tried to civilise people and they pushed them into wells. We see lot of jokes like this throughout Vedic translation.

My comments

‘Well’ is ignorance; Asvins helping some people to ‘see light’ is attaining wisdom. Later literature gives stories around this phrase.

But Asvins miracle list includes this as well.

SEA ADVENTURE

Mantra 6

This stanza contains the sea adventure, sea miracle which is quoted very often. We come across huge ships with different descriptions.

There are four anecdotes reported here. And most important of them is Asvins saving Bhujyu. He was son of Tugra and was let in the middle of the sea. At last, Asvins recued them.

This shows Vedic Hindus were great sea farers. Even before Columbus , Magellan and Captain Cook, they travelled to far off islands. It is reported in other stanzas and Ashtadhyayi of Panini and Kalidasa.

In this sixth stanza we come across Antaka, Karkandhu, Vayya who were all rescued by Asvins

Antaka was rescued by Asvins from a lake.

Vayya is referred to in RV 2-13; 4-19-6

MY COMMENTS

‘YYA’, ‘AYYA’ ending in several names show Tamil connection or influence.

Madhavayya, Ayyachchaami, Rajayya are common names

So in mantra 6, we come across four personalities with 4 miracles.

Mantra 7

Seventh mantra talks about four more people-

Asvin helped Sucanti ,Atri ,Purukutsa and Prsnigu .

Asvins gave Sucanti wealth and home.

Guarded Purukutsa and Prsnigu.

About Prsnigu and Sucanti nothing more is related.

Atri is referred to in 1-45-3 and 1-51-3  where in it is said he was thrown into a fiery pit by the Asuras .

Asuras throwing seers and poets into a well or a lake or a fire pit is strange. Asuras were described as cannibals in one hymn in the same Mandala. This shows they were barbarians. If we don’t take it literally it may mean different things.

But we have another historic anecdotes to compare it.

One of the greatest Saivite saints Appar alias Tirunavukkarasu was also thrown into fire pit by the greatest of the Pallava Kings Mahendra Varman at the instigation of bad Jains. But Appar enjoyed the burning lime kiln as a ‘cool pond in summer’ due to Lord Shiva’s grace. This is one of the miracles in the life of Appar. So it is possible that Atri also escaped from such a fiery ordeal .

Purukutsa  is referred to in RV 1-63-7.

Indra demolished seven castles in a war to gain victory for Purukutsa. So it is a historical incident.

Foreigners wrote wrong history of India and listed kings only from Buddha period- Sixth Century BCE. According them , India had NO kings from 2500 BCE, beginning of the Indus- Sarasvati Civilization.  When they have listed all the kings of Egyptian, Babylonian and Mayan Kings, they rejected 140 kings names in the Puranas. Even when I got M.A.in history from Madurai Kamaraj University in 1977 , I had to write that false history! What a shame!

Rig Veda lists lot of personalities. Most of them were kings or Priest Kings. We must include those kings and 140 generations of Solar Dynasty. Apart from this , there is Lunar dynasty as well.

About two of the above four names in the seventh mantra we do not know anything else.

There are Ten Mandalas/Books in the Rig Veda with over 1000 hymns and in those we have over 10,000 mantras!

I am dealing with only one hymn with 25 mantras.

(All the Rig Vedic verses are available free of cost in the websites; both in English and Sanskrit; I will give the full verse at the end of this essay)

To be continued ………………………….

tags- RV 1-112, History, Oldest, Historian

ஆங்கில அமெரிக்க நாவலாசிரியர் ஹென்றி ஜேம்ஸ் (Post.9649)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9649

Date uploaded in London – –26 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆங்கில அமெரிக்க நாவலாசிரியர் ஹென்றி ஜேம்ஸ்

Henry James

(1843 – 1916)

ஹென்றி ஜேம்ஸ் ஒரு ஆங்கில அமெரிக்க நாவலாசிரியர், – சிறுகதை ஆசிரியர். நியூயார்க்கில் பிறந்தார். இவரது தந்தை சமயம் தொடர்பான விஷயங்களை எழுதி வந்தார். பணம் படைத்தவர். இதனால் ஜேம்ஸ் அவர்களுக்கு விருப்பம் எதையும் செய்ய முடிந்தது.

      சிறுவயதிலேயே ஐரோப்பா சென்று வந்தார். இதனால் ஐரோப்பிய பண்பாட்டில் அவருக்குப் பற்றும் பாசமும் ஏற்பட்டது. அமெரிக்கவிலும் ஐரோப்பாவிலும் பல பள்ளிகளில் அவர் கல்வி கற்றார். பின்னர் ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் சட்டம் பயின்றார். படிப்பை முடித்த சிறிது காலத்தில் அவருடைய முதலவது நாவல் வெளிவந்தது. 30 வயதானபோது அமெரிக்காவிலிருந்து புறப்பட்டார். அடுத்த 20 ஆண்டுகள் லண்டனில் வாழ்ந்தார்.

      ஜேம்ஸின் படைப்புகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

      பழைய அமைதியான ஐரோப்பிய வாழ்க்கை முறைக்கும், புதிய முதிர்ச்சி பெறாத அமெரிக்க வாழ்க்கை முறைக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைச் சித்தரிக்கும் நாவல்கள் முதல் காலகட்டத்தில் எழுதப்பட்டன. “PORTRAIT OF A LADY”, “DAISY MILLER”, “THE BOSTONIANS” இவ்வகையைச் சேர்ந்தவை.

      இரண்டாவது காலகட்டத்தில் அவர் எழுதிய நாவல்கள் முழுக்க முழுக்க ஆங்கிலேயர்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டன. WHAT MAISIE KNEW, THE AWKWARD AGE ஆகிய நாவல்கள் இந்த காலத்தைச் சேர்ந்தவை.

மூன்றாவது காலகட்டத்தில் மீண்டும் அமெரிக்க ஆங்கிலேய மோதல்கள் முரண்பாடுகளை மையமாக வைத்து எழுதினார். “THE WINGS OF A DOVE”, THE AMBASSADORS ஆகியன இந்தக் காலத்தைச் சேர்ந்தவை.

ஜேம்ஸ் திருமணம் செய்துகொள்ளவே இல்லை. 1915-இல் அவர் பிரிட்டிஷ் குடிமகனானார். 1916-இல் “ORDER OF MERIT” விருது பெற்றார்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

tags– ஆங்கில, அமெரிக்க, நாவலாசிரியர், ஹென்றி ஜேம்ஸ், Henry James,

உண்மை வைஷ்ணவன் யார்?(Post No.9648)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9648

Date uploaded in London – –  –26 May   2021   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வைணவ அமுதத் துளிகள்!

உண்மை வைஷ்ணவன் யார்?

ச.நாகராஜன்

11 லட்சம் பேர் பார்த்து மகிழ்ந்த ஒரு யூ டியூப் பதிவு! 124 நாடுகளில் உள்ளோர் இந்தப் பாட்டைப் பாடுவதாக அபூர்வமான காட்சி அமைப்பு உள்ளது. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அனைவரும் பார்க்க வேண்டிய அவசியமான் வீடியோ பதிவு இது. 5 நிமிடம் 44 வினாடிகள் மட்டும் ஒதுக்குங்கள் போதும்!

எந்தத் தொடுப்பில் பார்க்கலாம்? இதோ இருக்கிறது தொடுப்பு:

பாடல் என்ன பாடல்? இதோ விவரம்:-

மஹாத்மா காந்திஜிக்கு மிகவும் பிடித்த பாடல் அது. நரசிம் மேத்தா என்ற மகான் எழுதிய ஒரு குஜராத்தி பாடல் அது. அதில் உண்மையான வைஷ்ணவன் யார் என்பதை கவிஞர் விளக்குகிறார். பாடல் இது தான்:-

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே

ஜே பீட பராயே ஜானேரே

பரதுக்கே உபகார் கரே தோயே

மன் அபிமான் ந ஆனே ரே (வைஷ்ணவ)

சகல லோக மான் சஹுனே வந்தே

நிந்தா ந கரே கேனீ ரே

வாச் கச்ச மன் நிஸ்சல ராகே

தன் தன் ஜனனீ  தேனே ரே (வைஷ்ணவ)

சம்திருஷ்டி நே த்ருஷ்ணா த்யாகி

பரஸ்த்ரீ ஜேனே மாத ரே

ஜிஹ்வா தகி அஸத்ய ந போலே

பர தன் நவ் ஜாலே ஹாத் ரே (வைஷ்ணவ)

மோஹ மாயா வ்யாபே நஹீ ஜேனே

த்ருட வைராக்ய ஜேனா மன்மாம் ரே

ராம் நாம் சூன் தாலீ லாகீ

சகல தீரத் தேனா தன்மாம் ரே (வைஷ்ணவ)

வண லோபீ  நே கபட-ரஹித சே

காம க்ரோத நிவார்யா ரெ

பனே நரசய்யொ தேனுன் தர்ஷன் கர்தா

குல் ஏகோதேர் தார்யா ரே

இதைத் தமிழில் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்கள் அழகுற மொழிபெயர்த்துத் தந்துள்ளார் இப்படி:-

வைஷ்ணவன் யார்?

வைஷ்ணவன் என்போன் யாரென கேட்பின்                                                         வகுப்பேன் அதனைக் கேட்பீரே                                                                                                               பிறருடையத் துன்பம் தனதென எண்ணும்

பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்

உறுதுயர் தீர்த்ததில் கர்வம் கொள்ளான்

உண்மை வைஷ்ணவன் அவனாகும்;

உறவென மனிதர்கள் உலகுள யாரையும்

வணங்குபவன் உடல்மனம் சொல்இவற்றால்

அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்;

அவனை பெற்றவள் அருந்தவத்தாள்.

விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை

விளங்கிட ஆசைகள் விட்டவனாய்

ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென

உணர்வோன் வைஷ்ணவன்; தன் நாவால்

உரைப்பதிற் பொய்யிலன்; ஒருபோதும் அவன்

ஊரார் உடைமையைத் தொடமாட்டான்;

வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ

அவனே உண்மை வைஷ்ணவனாம்.

மாயையும் மோகமும் அணுகா தவனாய்

மனத்தினில் திடமுள வைராக்யன்;

நாயக னாகிய ஸ்ரீராமன்திரு

நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து

போய், அதில் பரவசம் அடைகிற அவனுடைப்

பொன்னுடல், புண்ணிய தீர்த்தங்கள்

ஆயன யாவையும் அடங்கிய க்ஷேத்திரம்

ஆகும்; அவனே வைஷ்ணவனாம்.

கபடமும் லோபமும் இல்லா தவனாய்க்

காம க்ரோதம் களைந்தவனாய்,

தபசுடை அவனே வைஷ்ணவன்; அவனைத்

தரிசிப் பவரின் சந்ததிகள்

சுபமடைவார்கள்; எழுபத் தோராம்

தலைமுறை வரையில் சுகமுறுவர்;

அபமறப் புனிதம் அடைகுவர்; பிறப்பெனும்

அலைகடல் நீந்திக் கரைசேர்வார்.

இனி வைஷ்ணவ ஆசாரியரான நஞ்ஜீயர் அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.

அவர் எப்போதும் கூறுவது இது:- “ எந்த ஒருவனும் தன்னை உண்மையான வைஷ்ணவன் தானா என்பதை எப்போது வேண்டுமானாலும் சோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் துன்பப்படுவதைப் பார்த்து எப்போது அவன் இரக்கத்தால் கிளர்ச்சியுறுகிறானோ, “ஓ” என்று கத்துகிறானோ அப்போது அவன் உண்மையான வைஷ்ணவன் தான் என்பதை அறிந்து கொள்ளலாம். ஆனால் எப்போது அவனது நெஞ்சம் மற்றவர்கள் துன்பப்படுவதைப் பார்த்து இறுகி இருக்கிறதோ, அதைப் பார்த்து இன்புறுகிறானோ அப்போதே அவன் வைஷ்ணவன் என்ற சொல்லுக்கு உரியவருடன் சேர்ந்தவன் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். ஒரு வைஷ்ணவனாய் இருப்பது என்பது கடவுளைச் சேர்ந்தவனாய் இருப்பது என்று அர்த்தம். கடவுளைச் சேர்ந்தவனாய் இருப்பவன் என்றால் அவன் வைஷ்ணவனாய் இருக்கிறான் என்று அர்த்தம். அது அவன் எதை நம்புகிறானோ அதை நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறான் என்று அர்த்தம். அனைத்து உயிர்களுக்கும் நண்பன் என்பதே அந்த இலட்சியங்களுள் ஒன்றாகும்.

விடுமின் என்ற நம்மாழ்வாரின் பாசுரம் இது:

வீடுமின் முற்றவும்
வீடு செய்து உம் உயிர்
வீடு உடையானிடை
வீடு செய்ம்மினே

இதை விளக்க வருகையில் நஞ்சீயரைப் பற்றிய இந்த விஷயத்தை பகவத் விஷயம் நூல் தருகிறது.

முக்கியக் குறிப்பு: இந்தப் பாடலைப் பற்றிய ஒரு கட்டுரையை திரு சுவாமிநாதன் இதே ப்ளாக்கில் (www.tamilandvedas.com) எழுதியுள்ளார். கட்டுரை எண் 2133. பதிவான தேதி 7-9-2015 கட்டுரை தலைப்பு: அசலாம்பிகையின் அற்புதக் கவிதை!

***

tags- உண்மை , வைஷ்ணவன் , கவிஞர், வெ.ராமலிங்கம் பிள்ளை, நரசிம்ம  மேத்தா

  •  

Similes in Tamil Poet Tayumanavar’s Songs – Part 3 (Post No.9647)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9647

Date uploaded in London – –25 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

This is the third and last part

Axle-pin of Temple Car

Whatever may be happening to the soul, its original taint of sim remains as unmoving as the axle-pin of a temple car.

****

Bee

God as the soul’s lover approaches the grace-matured soul in the same way as a bee goes to the open flower and not to the bud

****

Beetle

God is active in man’s spirit as the beetle in the lotus bud.

It is to those who, like the beetle in a bud, find themselves attracted towards the fragrance of the flower Mownam/silence that God gives blessing.

****

Child

The soul in its original condition is startled into remembrance and sense impressions as a child in the cradle when pinched on its thigh feels pain.

Apart from God the soul is as a motherless child.

The soul feels God’s protection as a child is aware of its mother’s.

The devotee in times of depression feels lonely as a child slumbering in its cradle.

*****

Cloud

God is a cloud grace laden and descending on the devout in abundance of blessing.

God is the cloud watering the true religions.

****

Cotton

The poet fears that his critics may look upon his verse s as light as cotton.

The mind is moved about as a piece of cotton in the wind.

****

Cow

The soul, like a calf whose bleating s attract the cow, calls to God .

As the cow will seek out her lost calf, so God cares for souls.

As the cow is tender towards the calf , so God feels for souls.

****

Crow

As crows are put to flight by a stone thrown at them , so grace dispels Karma.

Crows feed together with other crows, so let all men come together to feed on the abundance of grace.

The Saints flee from the very words of worldliness asacrow at sight of a stone.

****

Deer

God assumes human shape to win men just as a tame deer is employed to decoy other deer

****

Eggs

The words are held up in space as marvellously as a magician balances on his hand eggs piled one top of another.

*****

Elephant

When closest to God and not to know Him to be so near is like the trainer looking inside an earthen pot for the elephant which is already in his keeping.

The uncontrolled mind is like a wild elephant.

By association with God man will be able to use divine wisdom as a man directs a once wild elephant

Forest

Desire is a forest in which one is likely to lose his way

****

Fragrance

As the pent up fragrance in the flower diffuses itself under a full moon when its time for doing so has come, so does joy possess the spirit of the grace matured.

God is in the soul as fragrance in the flower.

God is in all life and matter as fragrance in the flower.

****

Fair

Earthly ties are like acquaintances at a fair, meeting s in the market place.

****

Gold

As gold refined in the fire are those who daily disciplines their mind.

Grace transmutes the soul into the gold of Deity.

****

Hare

Unrealities are likened to the horn of a hare, lotus in mid-air and a mirage.

****

Hunters

The senses are to the soul as those who with bow and arrows seek game.

The figure of the soul being beset by the senses as an animal by hunters is used in the Bodham/ Sutra 3

****

Iron

The soul is drawn to god as iron by a magnet

(please read the similes given in the first two parts)

–subham—

 tags–Tayumanavar 3, similes 3

‘மோபி டிக்’ நாவல் எழுதிய ஹெர்மன் மெல்வில்(Post No.9646)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9646

Date uploaded in London – –25 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹெர்மன் மெல்வில். HERMAN MELVILLE

(1819 – 1891)

அமெரிக்க இலக்கியத்தின் தூண்களில் ஒருவர் ஹெர்மன் மெல்வில். இவருடைய புதினமான (MOBY DICK) மோபி டிக் உலகின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றாகும்.

      நியூயார்க் (NEW YORK) நகரில் மெல்வில் பிறந்தார். அவருடைய தந்தை பெரிய வியாபாரி. ஆனால் மெல்விலுக்கு 15 வயதானபோது தந்தையின் வியாபாரம் படுத்தது. அவர் நொடித்துப் போனார். இதனால் மெல்வில் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வயிற்றுப் பிழைப்புக்காக வேலைக்குப் போக நேர்ந்தது.

      எழுத்தாளராகவும் பண்ணைப் பணியாளராகவும் ஆசிரியராகவும் பல தொழில்களுக்கு மாறிய அவர் இறுதியில் திரைகடல் ஓடித் திரவியம் தேடப் புறப்பட்டார்.

      1839-இல் அமெரிக்காவிலிருந்து லிவர்பூல் நகரத்திற்கு (பிரிட்டன்) வந்தார். இந்த கடற்பயண அனுபவமே அவரது நாவல் RED BURN-க்கு கருப்பொருளாக அமைந்தது.

      இரண்டாவது முறையாக அவர் கடற்பயணம் சென்றது ஒரு திமிங்கில வேட்டைக் கப்பலில். இதை அடிப்படையாக வைத்து எழுதப் பட்டதுதான் MOBY DICK

      இதற்கடுத்த கடற்பயணத்தின்போது ஒரு தீவில் மனிதர்களை உண்ணும் காட்டு மனிதர்களிடத்தில் (CANNIBALS) இவர் மாட்டிக்கொண்டு விட்டார். அந்த தீவின் பெயர் MARQUESAS ISLANDS. காட்டு மனிதர்களுடன் தான் வாழ்ந்ததையே கதையாக எழுதினார். இதுதான் இவருடைய முதல் வெளியீடு (அச்சான முதல் நூல்)

      அந்தத் தீவுகளிலிருந்து இவரை ஒரு ஆஸ்திரேலிய கப்பல் மீட்டது. ஆனால் கப்பலுக்குள் கலகம் வெடிக்கவே இவரையும் கலகக்காரர்களையும் பசிபிக் கடல் நாடான TAHITI-யில் இறக்கிவிட்டு கப்பல் சென்றுவிட்டது. பின்னர் ஒரு அமெரிக்கக் கப்பலைப் பிடித்து ஹானலூலு (HONOLULU) தீவு வழியாக அமெரிக்கவுக்குச் சென்றார்.

      நியூயார்க்கில் வாழத்துவங்கிய அவர் 1847இல் திருமணம் செய்து கொண்டார். 1850இல் மாஸசூசட்ஸில் பிட்ஸ்பர்க் என்னும் இடத்தில் நிலம் வாங்கினார். அவருக்கு அருகிலேயே நத்தேனியல் ஹாதோர்ன் (NATHANIEL HAWTHORNE) என்ற புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியர் வாழ்ந்தார். MOBY DICK நாவலை எழுதமாறு இவரைத் தூண்டியது நத்தேனியல்தான்.

      ஒரு திமிங்கில வேட்டைக் கப்பலில் வேட்டைக்காரர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை MOBY DICK நாவல் விளக்குகிறது. மோபி டிக் என்னும் வெள்ளைத் திமிங்கிலத்தை (White Whale) அவர்கள் தேடுவதாக கதை அமைந்துள்ளது. இது திமிங்கில வேட்டைக் கதைபோலத் தோன்றினாலும் உண்மையில் இங்கு உருவகப்படுத்திய விஷயம் மனிதனின் வாழ்க்கைதான். தீயசக்திகள் எப்படி மனிதர்களைக் கவர்ந்து இழுக்கிறது – அவை எவ்வளவு கொடியவை என்பதை ஆசிரியர் சித்தரிக்கிறார். முதலில் இந்தப் புத்தகத்தைப் பலரும் புரிந்து கொள்ளவில்லை. அரைகுறையான பாராட்டுகளே கிடைத்தன.

      மெல்வில் தனது கடைசி 35 ஆண்டுகால வாழ்வில் எழுதியது மிகமிகக் குறைவே.

–subham–

மோபி டிக் , நாவல், ஹெர்மன் மெல்வில்,Herman Melville

அதிசயக் கனவுகள் (Post No.9645)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9645

Date uploaded in London – –  –25 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 24-5-2021 அன்று ஒளிபரப்பான உரை!

அதிசயக் கனவுகள்

     அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நாம் எல்லோருமே கனவு காண்கிறோம். சிலர் நான் கனவே காண்பதில்லை என்கின்றனர். ஆனால் என்ன கனவு கண்டோம் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள முடியாதவர்கள் தான் அவர்கள்! காலையில் எழுந்தவுடன் ஒன்றுமே ஞாபகத்தில் இல்லையென்றால் கனவு கண்டதாகச் சொல்ல முடியாதல்லவா?!

    ஆராய்ச்சியாளர்கள் ஒருவர் எப்போது கனவு காண்கிறார் என்பதை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து விட்டனர். இமைகளுக்கு அடியே கண்கள் அங்கும் இங்குமாக எவ்வளவு முறை இயங்குகின்றன என்பதை கண் இமைப்பின் மூலமாகத் துல்லியமாக அறிந்து, இப்படிப்பட்ட நேரங்களில் ஒருவர் கனவு காண்கிறார் என்பதை ஆராய்ச்சியாளர்கள் துல்லியமாகக் கூறி விட முடியும். இதற்குத் ‘துரித கண் இயக்கம்’ – Rapid Eye Movement –  என அறிவியல் பெயர் சூட்டி இருக்கிறது. தூங்குபவர் ஒருவரை உற்றுக் கவனிப்பதன் மூலமாக நாமே கூட இதை அறியலாம்!

    காலம் காலமாகக் கனவுகளின் முக்கியத்துவத்தை புராணங்களும் இதிஹாஸங்களும் விளக்கி உள்ளன. சிலருடைய கனவுகள் கடவுளிடமிருந்து வரும் செய்திகளாகக் கருதப்பட்டன. ஸ்வப்ன சாஸ்திரம் என்பது நம்மிடையே நுணுக்கமாக உள்ளது. சந்தியாவந்தன மந்திரத்தில் தினமும் கடைசியில் ரக்ஷை மந்திரமாக, அத்யா நோ தேவ ஸவித: ப்ரஜாவத் ஸாவீ: ஸௌபகம்! பரா துஷ்வப்னியஹும் ஸுவ| என்று உச்சரித்து ஸவித்ரு தேவனே, இப்போது எங்களுக்கு ஸந்ததிகளுடன் கூடிய சௌபாக்கியத்தை அருள வேண்டும். கெட்ட கனவின் நிமித்தத்தையும் பலனையும் விலக்கி அருள்வீர் என்று வேண்டுகிறோம். அப்போது நல்ல கனவுகள் வரட்டும் என்பது உள்ளார்ந்த அர்த்தமாகிறது.

     சிலரது கனவுகள் கனவு காண்போரின் ஆழ்மனதின் செய்திகளாகக் கருதப்பட்டன. இவைகள் பலிக்கும் போது ஆச்சரியத்தால் பிரமிக்கிறோம்.

     முதலில் ராமாயண இதிஹாஸத்தில் வரும் ஒரு முக்கியமான கனவைக் காண்போம். அசோகவனத்தில் கற்பின் கனலியாம் சீதை அல்லல் பட, விபீஷணனின் பெண்ணான திரிஜடை, தான் கண்ட கனவை சீதையிடம் கூறுவது பிரசித்தமானது. வால்மீகியும், கம்பனும் இதை அற்புதமாகச் சித்தரிக்கின்றனர்.

     ராமர் சீதையுடனும் இலக்குமணனுடனும் அனைவரும் துதிக்க எழுந்தருளுவதையும், ராவணன் மொட்டைத்தலையனாய், எண்ணெய் இட்டுக் கொண்டு, சிவந்த ஆடையுடன், குடித்து விட்டு, அலரிப்பூ மாலை அணிந்து, கறுப்பு ஆடை உடுத்திய பெண்ணால் இழுக்கப்படுவதையும், கழுதை பூட்டிய ரதத்தில் தெற்குத் திசை நோக்கிச் செல்வதையும் சுந்தரகாண்டம், இருபத்தேழாம் சர்க்கம் விவரிக்கிறது.

      கம்பனோ ஒரு படி மேலே போய், காட்சிப் படலத்தில் திரிஜடை சீதையிடம், “ நீ தூங்குவதே இல்லை என்பதால் உனக்குக் கனவே தோன்றுவதில்லை – துயில் இலை ஆதலின், கனவு தோன்றல – என்று சொல்லி விட்டு, நான் ஒரு கனவு கண்டேன் என்று தான் கண்ட கனவைச் சொல்லஆரம்பிக்கிறாள். கனவை விவரித்தவள், பாதிக் கனவில் என்னை நீ எழுப்பி விட்டாய்; ஆகவே கனவு முடியவில்லை – என்னை நீ உணர்த்தினை; முடிந்தது இல் – என்று கூற சீதை, “அன்னையே! அதன் குறை காண்- இன்னமும் துயில்க”, என்று கூறி மீதி கனவையும் காண வேண்டுவதாக நயம்படச் சித்தரிப்பது அனைவரும் படித்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும்!

     அடுத்து இலக்கியக் கனவு ஒன்றைப் பார்ப்போம்! இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் கனவிற்காகவே ‘கனாத்திறம் உரைத்த காதை’ என்று ஒரு காதையைப் படைத்துள்ளார்.

     கண்ணகி கோவலனைப் பிரிந்து பல நாட்களாகி விட்ட நிலையில் அவளது நிலை கண்டு தோழிமாரெல்லாம் வருந்தி இரங்க, பார்ப்பனத் தோழியான தேவந்தி என்பவள் கண்ணகி துன்பம் தீர்ந்து கணவனைப் பெற வேண்டும் என்று கோவில் சென்று இறைவனை வேண்டி பிறகு கண்ணகியிடம் சென்று, “கணவனைப் பெறுக” என்று வாழ்த்துகிறாள். அதற்கு கண்ணகி, “நீ இப்படிக் கூறுவதால் நான கணவனைப் பெறுவேன். ஆனால் நான் ஒரு கனவு கண்டேன். அதில் நானும் என் கணவரும் வேறொரு ஊருக்குச் செல்கிறோம். அங்கு அவர் பெயரில் வீண் பழி உண்டாகி, தீங்கு ஏற்பட, நான் அரசருடன் வாதிட்டேன். அதனால் அந்த ஊருக்கும் தீங்கு ஏற்பட்டது” என்கிறாள். இதற்குப் பரிகாரமாக சோமகுண்டம், சூரிய குண்டம் ஆகிய இரு துறைகளில் மூழ்கி காமவேள் கோட்டத்தைத் தொழுமாறு தேவந்தி வேண்ட, கண்ணகியோ, “பீடன்று” என்று கூறி அதை மறுத்து விடுகிறாள்.அதாவது கற்புடைப் பெண்டிருக்கு கணவனைத் தவிர இன்னொரு தெய்வம் இல்லை என்பதால் அப்படி மறுத்து விடுகிறாள்.

     கண்ணகியின் வாயிலாக இப்படி கோவலனுக்குப் பின்னால் ஏற்பட இருக்கும் தீமையை இளங்கோவடிகள் சுட்டிக் காட்டுவதோடு, மீண்டும் கோவலன் வாயிலாக கண்ணகி துயருறப் போவதையும் காட்டுகிறார்.

    மாடலன் என்னும் மறையோன் கோவலனிடம், “ இப்பிறவியில் நல்லதையே செய்த உனக்கு ஏற்படும் இந்தத் துன்பம் நீ செய்த முன் வினைப் பயனோ” என்று வருந்திக் கூற, கோவலன், “ மதுரையில் ஒரு வஞ்சகனால் தனக்குத் துன்பம் நேர்வதாயும், அதனால் கண்ணகி துன்பப்படுவதாயும் மாதவி மணிமேகலையை புத்தருக்கு அர்ப்பணிப்பதாகவும்” தான் கனவில் கண்டதாகக் கூறுகிறான்.

     அடுத்து கனவு இல்லாத நல்ல இலக்கியமே இல்லை.  உலகப் பொதுமறையாம் திருக்குறளில் திருவள்ளுவர் ‘கனவு’ என்ற சொல்லைப் பத்து இடங்களில் கையாள்கிறார்.  (குறட்பாக்கள் 819,1054,1211 முதல் 1220 முடிய காணலாம்). ‘கனவு நிலை உரைத்தல்’ என்று ஒரு அதிகாரத்தையே கனவினுக்குத் தந்து தலைவியின் கனவுகளையும் அதன் தேவையையும் அவர் உணர்த்துவது படித்து இன்புறத் தக்கது.

     இப்படி தமிழ் இலக்கியக் கனவுகளைத் தொகுத்தால் அதுவே ஒரு பெரிய நூலாகி விடும்.

     இப்படிப்பட்ட இலக்கியக் கனவுகள் ஒரு புறம் இருக்க, உலகத்திலுள்ள மிக பிரம்மாண்டமானதும்  முக்கியமானதுமான படைப்புகள் பல கனவுகள் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளன என்பது ஆச்சரியம் ஊட்டும் ஒரு உண்மையாகும்.

    உலக சரித்திரத்தையே ‘A Study of History’ என்ற பெயரில் 12 பாகங்களாக எழுதி வெளியிட்டார் பிரபல வரலாற்றுப் பேரறிஞரான ஆர்னால்டு டாயின்பி.

30 லட்சம் சொற்கள் அடங்கிய அற்புதமான இந்த நூலை ஆராய்ந்து எழுதுவது என்பது  மனித  முயற்சிக்கு அப்பாற்பட்ட ஒன்றாகும்.

 இதை எப்படி எழுத முடிந்தது என்று அவரே கூறி உள்ளார். படுத்தவுடன் கனவிலே பக்கம் பக்கமாகச் சொற்கள் அடங்கிய காட்சிகள் விரியுமாம். எழுந்தவுடன் அதை அப்படியே அவர் எழுதி விடுவாராம். கனவில் அகக் கண்ணில் விரிந்த காட்சிகள் படலம் படலமாக வர உலக சரித்திரம் மிளிர்ந்தது. இல்லையேல் இவ்வளவு துல்லியமான உலக சரித்திரத்தை ஆராய்ந்து எழுத யாரால் தான் முடியும்?

கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி விளக்கப் புகுந்த அவர் அதற்கு விடையாக அமைவது தனது கனவு ஒன்று தான் என்றும் கூறியுள்ளார்.

இந்தக் கனவில் யார்க்‌ஷைரில் ஆம்பிள்ஃபோர்த் அப்பேயில் (Abbey of Ampleforth) பெனிடிக்டின் பீடத்தின் மேல் உள்ள சிலுவையின் அடிப்பாகத்தைப் பிடித்துக் கொண்டு தான் இருப்பதை அவர் கண்டார். பிறகு தெளிவான லத்தீன் மொழியில் கம்பீரமான ஒரு அசரீரி ஒலித்தது : ஆம்ப்ளெக்ஸ் எக்ஸ்பெக்டா!

இதற்கு “பற்றிக் கொள்; காத்திரு – CLING AND WAIT –  என்று பொருள்.

இதையும் அவரே விவரித்துள்ளார்.

ராபர்ட் லூயி ஸ்டீவன்ஸனையும் அவர் எழுதிய டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்டர் ஹைட் (Doctor Jekyll and Mr Hyde)  என்ற உலக பிரசித்தி பெற்ற நாவலையும் அறியாதவர் இருக்க  முடியாது.  இதுவும் ஒரு கனவுப் படைப்பே தான்.

அவர் இது பற்றிக் கூறினார் இப்படி: “ மனிதனது இரட்டை பர்சனாலிட்டியை சித்தரிக்க வெகு காலம் முயன்று வந்தேன். The Travelling Companion என்ற ஒரு நாவலைக் கூட எழுதினேன். அசிங்கமாக இருக்கிறது என்று பதிப்பாசிரியர் திருப்பி அனுப்பி விடவே அதை எரித்து விட்டேன். இரண்டு நாட்கள் மூளையைக் கசக்கினேன். இரண்டாம் நாள் இரவு ஜன்னலில் ஒரு காட்சியைக் கண்டேன். அது இரண்டாகப் பிரிந்தது. அதில் ஹைட் ஒரு பொடியைச் சாப்பிட்டுத் தன்னைத் தேடி வருபவர்களுடன் இணைந்து அவர்களிலே ஒருவனாக மாறி விடுகிறான். மூன்று சீன்கள் கனவில் வந்தன. மீதி முழுவதையும் எழுந்தவுடன் எழுதி விட்டேன்”

     ஈரோட்டிலே மிகுந்த ஏழ்மையான ஒரு குடும்பத்திலே பிறந்து உலகையே தன் கணிதக் கண்டுபிடிப்புகளால் பிரமிக்க வைத்த சீனிவாச ராமானுஜன் தனது கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் காரணம் தனது குல தெய்வமான நாமகிரி அம்மன் தான் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.

நாமகிரி என் நாவில் எழுதுவாள்; கனவு மூலம் அவள் எனக்கு உள்ளொளி தருவாள் – Namakiri would bestow insight in dreams – என்று அடிக்கடி கூறுவது அவர் வழக்கம்.

பேப்பர் வாங்கக் கூட காசில்லாமல் தேற்றங்களை சிலேட்டில் எழுதி அழித்து நிரூபண முடிவுகளை மட்டும் படிகள் – STEPS – இல்லாமல் அவர் ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைக்க, அதை அவிழ்க்க முடியாமல் கணிதமேதைகள் இன்றும் திணறும் நிலையை ஏற்படுத்தினார் அவர். தான் விழித்தவுடன் தனது கனவில் வந்த அனைத்தையும் அவர் எழுதி விடுவது வழக்கம். ‘An equation has no meaning unless it expresses a thought of God – இறைசிந்தனையை ஒரு சமன்பாடு வெளிப்படுத்தவில்லையெனில் அது அர்த்தமில்லாத ஒன்று தான் – என்ற அவரது கூற்று எண்ணி எண்ணி வியப்புறத் தக்கது. கடவுளும் கணிதமும் ஒன்றியிருப்பதை விளக்கும் ஒரு கூற்று அது.

கணித மேதை பெர்ட்ரண்ட் ரஸ்ஸலும் திணற வைக்கும் பிரச்சினைகளுக்குத் தனது கனவுகளே தீர்வுகளைத் தந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

வேதியல் துறையில் மேதையாக விளங்கியவர் ஜெர்மானியரான ஃப்ரெடெரிக் கெக்குலே. 1865ஆம் ஆண்டு ஒரு நாள் மதியம் அவர் கனவிலே ஒரு பாம்பு தன் வாலைக் கடிப்பது போலக் கனவு கண்டார். இதிலிருந்து பென்ஸீன் அமைப்புக்கான கருத்து உருவாகி பென்ஸீன் வளையத்தைக் கண்டுபிடித்தார். அவரது சீடர்களில் மூவர் நோபல் பரிசை வென்றனர்.

பல பிரபலங்களின் மரணங்கள் கனவின் மூலமாக முன்னரேயே அறிவிக்கப்பட்ட செய்திகளை உலக வரலாறு பதிவு செய்திருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியான் ஆப்ரஹாம் லிங்கன் 1865ஆம் ஆண்டு ஏப்ரல்  மாதம் தான் கண்ட கனவைத் தனது நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொண்டார். அவர் வெள்ளை மாளிகையில் படுத்திருந்த போது அழுகின்ற ஒரு ஓலக்குரல் கேட்டு அது வந்த திசையில் செல்கிறார். அங்கு கிழக்குப் பக்க அறையில் ஒரு சவப்பெட்டி இருக்கிறது. மக்கள் வெள்ளம் அலை மோதி இருக்க ஓவ்வொருவராக சவத்தின் முகத்தைப் பார்த்து விட்டு நகர்ந்து சென்று கொண்டிருந்தனர். இறந்தது யார் என்று லிங்கன் அங்கிருந்த காவலரைக் கேட்க அவர் “நமது ஜனாதிபதி தான் அவர், அவரை ஒருவன் கொலை செய்து விட்டான்” என்கிறார். இந்தக் கனவை லிங்கன் கூறியதைக் கேட்ட அவரது நண்பரான வார்ட் ஹில் லமோன் (Ward Hill Lamon) என்பவர் கொலை நடந்த பிறகு எழுதப்பட்ட தனது நூலான Recollections of Lincoln என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

இப்படிப்பட்ட கனவுக் காட்சிகள் வெறும் தற்செயலான கற்பனைத் தோற்றங்கள் தானா? அல்லது இதற்கு அறிவியல் பூர்வமான விளக்கங்கள் உண்டா? அதை அடுத்துப் பார்ப்போம். நன்றி வணக்கம்

 ***

tags– அதிசய, கனவுகள்,