வள்ளுவர் தரும் ஊடல்-கூடல் அகராதி!நல்லதிலும் தவறு; கேட்டிலும் உறுதி! (10,619)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,619
Date uploaded in London – – 2 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

வள்ளுவர் தரும் ஊடல்-கூடல் அகராதி!
நல்லதிலும் தவறு; கேட்டிலும் உறுதி!
ச.நாகராஜன்

வள்ளுவரின் குறளை தினமும் ஓதி உணர்தல் வேண்டும். அப்போது
நவில்தொறும் நூல் நயம் (குறள் 783) என்பது என்ன என்று தெரியும்.
நல்ல செய்கை, தீய செய்கை பற்றிச் சொல்ல வருகிறார் வள்ளுவர்.
நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு அவரவர்
பண்பு அறிந்து ஆற்றாக் கடை
(குறள் 469 – தெரிந்து செயல் வகை அதிகாரம்)
நன்று ஆற்றல் என்பது பொதுவாக எல்லோருக்கும் கொடுத்தலையும் எல்லோரிடமும் இன்சொல் பேசுவதையும் குறிக்கும்.
ஆனால் அதைக் கூடப் பார்த்துச் செய் என்கிறார் வள்ளுவர்.
ஒவ்வொருவருடைய பண்பு அறிந்து பின்னர் ‘நன்று ஆற்றலை’க் கடைப்பிடி என்கிறார் அவர்.
ஒருவர் பெறுவதற்கு உரியர் அல்லார் எனில் கொடுக்காதே; இன்சொல் பேசாதே என்பது அவரது அறிவுரை.
அப்படி நல்ல செய்கையிலும் கூட தவறு உண்டு – பார்த்துச் செய்யாவிட்டால்!
ஒவ்வொரு சிறு செய்கையிலும் கூட உன்னிப்பாக நமது கவனம் இருக்க வேண்டும். இதுவே வெற்றிக்கு வழி!

ஆகவே இனிய உளவாக இன்னாத கூறல் (குறள் 100) கனி இருக்க காயை நுகர்வது போல என்று சொன்னாலும் யாரிடம் எதைச் சொல்ல வேண்டும், எவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் ஜாக்கிரதையாக இரு என்கிறார் வள்ளுவர்.

இனி அடுத்து நல்ல செய்கையை விடுத்து கேட்டிற்கு வருவோம்.
இப்போது பார்க்க வேண்டிய குறள் 796. (நட்பு ஆராய்தல் அதிகாரம்)
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
கேடு என்பது அளக்கும் ஒரு கருவி என்கிறார் வள்ளுவர்.
கேட்டிலும் கூட பெறக் கூடிய ஒரு நல்லறிவு உண்டு.
நமது நண்பர்களை எப்போது அளப்பது? எப்படி அளப்பது?
கேடு வரும் காலை எவன் ஒருவன் நமக்கு உதவிக்கு வருகிறான் என்று பார்.
நல்ல காலத்தில் கூட இருப்பவர் ஆயிரம் பேர்.
ஆனால் கெட்ட காலத்தில் உடுக்கை இழந்தவன் கை போல எவன் வருகிறான் – அவனே நண்பன்!
ஆக கேடு கூட ஒருவகையில் வாழ்க்கை அனுபவத்தில் ஒரு உதவி செய்யத் தான் செய்கிறது.

சரி, தவறு என்பதை எப்போதும் கவனிக்க வேண்டுமா?
இல்லை, ஐயா, கணவன் – மனைவி உறவு என்பது வேறு.
தலைவன் – தலைவி கூடும் போது உள்ள காதல் அகராதி வேறு.

வள்ளுவர் கூறுகிறார்:
புணர்ச்சி விதும்பல் அதிகாரத்தில் குறள் 1286இல்!

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை

கணவனைப் பார்க்கும் போது அவனிடம் ஒரு தவறு கூட இல்லை; தவறைப் பார்க்கவே முடியாது. அவனுடன் இன்பமாய் இருப்பது தவிர வேறொரு நினைப்பும் கிடையாது.
ஆனால் அவன் சற்று வேறிடம் சென்று விட்டால் அவனிடம் நினைப்பதற்கு ஒரு நல்லது கூட இல்லை. எல்லாம் தவறாய்த் தான் தெரிகிறது!
என்ன விசித்திரம்!!
தவறில் கூட அகராதியில் பொருள் வேறு படுகிறது.
உறவெல்லாம் கணவன்-மனைவி உறவு போல ஆகுமா?
இன்னும் 1154, 1321, 1325 ஆகிய குறள்களில் வரும் ‘தவறு’ குறள்களையும் ஒரு பார்வை பாருங்களேன்!

இல்லை தவறு அவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்குமாறு (குறள் 1321 ஊடல் உவகை அதிகாரம்)
தோழி கேட்கிறாள் : ஏன் இப்படி உன்னவரை இப்படித் தவறாகச் சொல்கிறாய் என்று.
பதில் வருகிறது தலைவியிடமிருந்து : “அவரிடம் தவறு இல்லை. என்றாலும் கூட இப்படி தவறு என்று சொல்வதால் அவர் தரும் இன்பம் பேரின்பம் ஆக இருக்கிறதே” ஆகவே ஊடுதல் சரியே. அது பின்னால் கூடும் போது எல்லையற்ற இன்பத்தை அல்லவா அளிக்கிறது!” – இதுவே தலைவியின் பதில்!

தவறு இலர் ஆயினும் தாம் வீழ்வார் மென் தோள்
அகறலின் ஆங்கொன்று உடைத்து
(குறள் 1325 ஊடல் உவகை அதிகாரம்)

தலைவி வேண்டுமென்றே தலைவனிடம் சிறிதோ பெரிதோ ஒரு தவறைச் சுட்டிக் காட்டுகிறாள்.
தலைவன், அங்கு பேசவா முடியும்!
ஊடலுக்கு ஒரு காரணம்.
பேசாமல் இருப்பது மென் தோள் வீழ்வாரது வழி.

அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல்
தேறியார்க்கு உண்டோ தவறு
(குறள் 1154 – பிரிவு ஆற்றாமை அதிகாரம்)

உன்னைப் பிரிய மாட்டேன், பயப்படாதே என்று பார்த்த முதல் நாளே சொன்னவர் தாமே பிரிந்து சென்றால், அவருக்குத் தான் தவறே அன்றி அதை உண்மை என்று நம்பியவர்க்கு தவறு (குற்றம்) உண்டோ?
யாரிடம் இருக்கிறது தவறு?

ஆக இப்படி வள்ளுவரை ஊன்றி அவர் சொல்லும் சொற்களின் கூடவே சென்றால் நாம் பெறுவது பேரின்பம்.
பல அகராதிகளை நாம் அவரிடம் காண்கிறோம். அத்தனையும் உண்மையான அகராதிகளே!


tags– வள்ளுவர் , ஊடல்-கூடல்,  அகராதி

மீண்டும் ‘அகராதி பிடித்த’ டாக்டர் ஜான்சன் (Post No.9958)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9958

Date uploaded in London – 10 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆங்கில அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் பற்றி முன்னரே பல கட்டுரைகள் இதே ‘பிளாக்’கில் எழுதி வெளியிட்டு விட்டேன். அவர் பற்றிய மேலும் சில குறிப்புகள் இதோ :

பிறந்த தேதி – செப்டம்பர் 18, 1709

இறந்த தேதி – டிசம்பர் 13, 1784

வாழ்ந்த ஆண்டுகள் – 75

பதினெட்டாம் நூற்றாண்டின் மிக முக்கிய இலக்கிய அறிஞர் சாமுவேல் ஜான்சன் DOCTOR SAMUEL JOHNSON. அவர் ஆங்கில அகராதியை முதல் முதலில் உருவாக்கினார். அவர் இலக்கிய விமர்சகர்,புலவர், மொழி பெயர்ப்பாளர்.

இங்கிலாந்தில் லிச்பீல்ட் (LICHFIELD)  என்னும் இடத்தில் பிறந்த அவர், தந்தையின் புஸ்தகக் கடையில் அமர்ந்து மணிக்கணக்கில் படித்தார் பள்ளியிலும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் சிறப்பாகப் படித்தபோதிலும் வறுமை காரணமாக பட்டப்படிப்பை முடிக்க முடியவில்லை.

ஜான்சன் பயந்த சுபாவம் உள்ளவர். மேலும் பழகும் விதமும் இங்கிதமும் அறியாதவர். சிறுவயதில் ஏற்பட்ட நோயால் பார்வைக்குறைவும் , செவிட்டுத் தன்மையும் இருந்தது. வேலை கிடைக்காமையால் அடிக்கடி மனச் சோர்வும் ஏற்பட்டது.

28 வயதில் லண்டனில் குடியேறி 20 ஆண்டுகளுக்குப் பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதினார். பிறமொழி எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்த்தார். அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளையும் எழுதினார். 53 வயதில் அரசாங்கம் ஒரு பென்சன்  கொடுக்கும் வரையில் அவரை வறுமை வாட்டியது.

இலக்கிய சேவைக்காக அரசு அவருக்கு பென்சன் கொடுத்தது. வருடைய நண்பர்  ஜேம்ஸ் பாஸ்வெல் JAMES BOSWELL  அவருடைய மேதாவிலாசத்தத்தை உலகிற்கு எடுத்துக்காட்டினார். பி காலத்தில் அவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தையும் எழுதினார்.

29 வயதில் ஜான்சன் எழுதிய லண்டன் LONDON என்ற கவிதை வெளியானது . இது லத்தீன் மொழிக்கு கவிஞர் யுவனல் (JUVENAL’S  THIRD SATIRE) கவிதையைத் தழுவியது. அதற்கு வரவேற்பு கிட்டவில்லை.அவருடைய மற் றொரு  கவிதையைத் தழுவி எழுதிய கவிதை (THE VANITY OF HUMAN WISHES), ஆசை வயப்பட்ட  மனிதன் படும் அல்லல்களை எடுத்துக்காட்டுகிறது.

‘ஆங்கிலப் புலவர்களின் வாழ்க்கை வரலாறு’ LIVES OF THE ENGLISH POETS  என்று அவர் எழுதிய நூலில்தான் அவருடைய திறமை வெளிப்பட்டது. ஒவ்வொரு புலவரின் கவிதைகளை அவர் விமர்சித்தது அவருடைய புலமையைக்  காட்டியது . அவருடைய நடையும் மிக நன்றாக இருந்தது .

ஏழு ஆண்டுகள் உழைத்து 40,00 சொற்களைக் கொண்ட முதல் ஆங்கில அகராதியை வெளியிட்டார். இதனால் ஆங்கில இலக்கிய உலகில் அழியாத இடம் பெற்றார்.

அவருடைய கவிதைகள் ,நூல்கள்…..

1738- LONDON

1744- AN ACCOUNT OF THE LIFE OF MR RICHARD SAVAGE

1749- THE VANITY OF HUMAN WISHES

1755- DICTIOARY OF THE ENGLISH LANGUAGE

1759- RASSELAS, PRINCE OF ABYSSINIA

1779-1781 – LIVES OF THE ENGLISH POETS.

PLEASE SEE THE LINKS FOR  MY OLD ARTICLES

அகராதி “பிடித்த” சாமுவேல் ஜான்சன் (Post No.9653 …

https://tamilandvedas.com › அகர…

27 May 2021 — சாமுவேல் ஜான்சன் (SAMUEL JOHNSON) முதல் ஆங்கில அகராதியை உருவாக்கினார். டாக்டர் …

–subham–

tags- அகராதி , டாக்டர் ஜான்சன், Dr Johnson

லண்டனில் பூனைக்கு ஒரு சிலை! ஒரு எழுத்தாளனின் சுவையான வரலாறு!

IMG_7857

Article Written by London swaminathan

Date: 7 November 2015

Post No:2308

Time uploaded in London :–7-58    AM

(Pictures in this article are taken by London swaminathan) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

IMG_7854

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் உலகப் புகழ்பெற்ற ஒரு நாய்க்கு ஒரு சிலை இருப்பது பற்றி முன்னரே எழுதியுள்ளேன். அதற்கு சிலை பெறும் தகுதி உண்டு. ஒரு பேராசிரியர் தினமும் அந்த நாயை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று ரயில் ஏறுவார். மாலையில் திரும்பி வரும்போது அவரை நாய்  வரவேற்கும். ஒரு நாள் அவர் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இறந்துவிட்டார். பாவம் ஹசிகோ என்ற பெயருள்ள அந்த நாய்க்கு எஜமானர் இறந்தது தெரியாது. ஒன்பதரை மாதங்களுக்கு தினமும் ரயில் வரும் அதே நேரத்துக்குச் சென்று காத்திருந்தது. பின்னர் இறந்து விட்டது. இன்று ஹசிகோ நாயைத் தெரியாதோர் ஜப்பானில் இல்லை. அது புகழுக்கு உரிய நாய்.

ஆனால் வேடிக்கை! ஒரு செயற்கரிய செயலும் செய்யாமலேயே சிலை பெற்று விட்டது ஹாட்ஜ் (Hodge) என்னும் பூனை. “பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்” – என்பது தமிழ்ப் பழமொழி. ஹாட்ஜ் செய்த புண்ணியம் என்ன தெரியுமா? அது உலகப் புகழ் பெற்ற ஆங்கில அகராதி மன்னன், பெரும் எழுத்தாளன், இலக்கிய விமர்சகன், ஷேக்ஸ்பியர் நாடகத் தொகுப்பாளன், பேச்சு மன்னன், நாவுக்கரசன் சாமுவேல் ஜான்சனின் Samuel Johnson (1709 – 1784) நெருங்கிய தோழன். அவ்வளவுதான். அவர் வளர்த்த பூனை என்பதால் அதற்கு, ஜான்சன் வீட்டுக்கு முன்னால், தெருவிலேயே ஒரு சிலை. அதைக் காண தினமும் ஒரு கூட்டம். நானும் போய்ப் புகைப்படம் எடுத்தேன்.

ஆனால் நான் போனது பூனையைத் தேடி அல்ல. புனைக்கதை மன்னனைத் தேடி! அவர்தான் எழுத்துச் சிற்பி சாமுவேல் ஜான்சன்! அவருடைய வரலாறு மிக மிகச் சுவையூட்டும் வரலாறு. சுருக்கமாகச் சொல்கிறேன்.

IMG_7860

சாமுவேல் என்ன சாதித்தார்? 1930 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி வருவதற்கு முன்னர், மிகப்பெரிய அகராதியைத் தயாரித்து ஆங்கில இலக்கிய வரலாற்றில் அழியாத இடம் பெற்றார். பிரான்சு நாட்டில் 40 அறிஞர்களைக் கொண்ட குழு, 40 ஆண்டுக் காலத்துக்கு உழைத்து பிரெஞ்சு மொழி அகராதியைத் தயாரித்தது. ஆனால் சாமுவேல் ஜான்சனோ மூன்றே ஆண்டுக் காலத்தில் ஒரு அகராதியைத் தயாரித்தார்.

கடன்கார எழுத்தாளன்!

இதற்காக அவரைப் பாராட்டி மூன்றாம் ஜார்ஜ் மன்னர் 300 பவுண்டு வருடாந்திய பென்ஷன் தொகை அளித்தார். அதை ஏற்க ஜான்சன் பயந்தார். மற்றொருவரின் கைப்பாவை ஆகி, எழுத்துச் சுதந்திரம் பறி போய்விடுமோ என்று அஞ்சினார். பின்னர் நண்பர்கள் சொற்படி அதை ஏற்றார். இத்தனைக்கும் அவர் கடன் பாக்கிக்காக இரண்டு முறை கைதானவர்!! ஒரு முறை 4 பவுண்டு, இன்னொரு முறை 40 பவுண்டு கடன் பாக்கிக்காக போலீசார் அவரைக் கைது செய்தனர். ஒவ்வொரு முறையும் அவரை நண்பர்கள் காப்பாற்றினர். அதுவும் எப்படி? இலவச அன்பளிப்புத் தொகை கொடுக்கவில்லை. இவர் ஏதேனும் ஒரு கதை, அல்லது இலக்கியப் படைப்பு எழுதித் தருவதாகச் சொன்னவுடன் அவர்கள் பிணைத் தொகையைக் கொடுத்து இவரை விடுவித்தனர்.

ஆனால் நாளடைவில் ஜான்சனின் புகழ் பரவவே, அவரைச் சுற்றி அறிஞர் கூட்டம் குவிந்தது. அவர் தொடங்கிய வாசகர் வட்டத்தில் சேர ‘கியூ’வில் நிற்கவும். சிபாரிசுக் கடிதம் பெறவும் தேவை ஏற்பட்டது.

ஜான்சனுக்கு ஸ்காட்லாந்துக்காரர்களைக் கண்டால் பிடிக்காது. ஆனால் ஸ்காட்லாந்திலிருந்து வந்த ஜேம்ஸ் பாஸ்வெல் என்ற அறிஞர் இவருடன் நண்பராகி ‘ஜான்சனின் வாழ்க்கை வரலாறு’ என்று புத்தகம் எழுதினார். அதனால் ஜான்சனின் புகழ் உச்சாணிக்குப் போய்விட்டது.

IMG_7865

ஜான்சன் சிறந்த பேச்சாளர்; நகைச்சுவை ததும்ப உரையாற்றுவார். அவருடைய இலக்கிய, அரசியல் விமர்சனத்தைக் கேட்க எப்பொழுதும் ஒரு கூட்டம் அவரைச் சுற்றி நிற்கும். அவர் சொன்னதை எல்லாம் பத்திரிகைகள் வெளியிடுமளவுக்குப் புகழ் பரவியது. அவரே ‘ராம்ப்ளர்’ என்றொரு பத்திரிக்கையும் நடத்தினார். ஆனால் பின்னர் அது மூடு விழா கண்டுவிட்டது.

ஜான்சன் ஆரம்ப காலத்தில் வறுமையில் வாடியதால் 17 வீடுகளுக்கு இடம் மாறினார். பிறந்ததோ லண்டனுக்கு வெளியே. இப்பொழுது அவர் வசித்த ஒரு வீட்டில் மியூசியம் இருக்கிறது அங்கு அவருடைய இரண்டு ஒரிஜினல் அகராதிகள் உள்ளன. மேலும் 4 நகல்கள் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளன.

IMG_7893

ஷேக்ஸ்பியர் நாடகத்தொகுப்பு

ஜான்சனுக்கு முன்னால் ஷேக்ஸ்பியர் நாடகங்களை வெளியிட்டோரும், நடித்தோரும், ஷேக்ஸ்பியரின் எழுத்துக்களை மக்களின் ரசனைக்கேற்ப அவ்வப்பொழுது மாற்றினர். ஜான்சன் மிகப் பெரிய முயற்சி செய்து ஷேக்ஸ்பியரின் ஒரிஜினலை அப்படியே வெளியிட்டார்.  ஷேக்ஸ்பியர் காலத்தில் அந்தச் சொற்களுக்கு என்ன பொருள் நிலவியதோ அதை விளக்கி எழுதி நல்ல பதிப்பைக் கொண்டுவந்தார். இன்று நாம் காணும் நாடகம் எல்லாம் ஜான்சன் வெளியிட்ட திருத்திய பதிப்பே!

லண்டன் “போர்” அடித்தால், வாழ்க்கையே ‘போர்’!

பிற்காலத்தில் ஜான்சனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிப் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாஸ்வெல், ஸ்காட்லாந்திருந்து லண்டனுக்கு இடம்பெயர்ந்து குடியேறத் தயங்கினார். லண்டனுக்கு வந்துவிட்டால் அது மிகவும் சலிப்பை ஏற்படுத்துமே என்றார். அதற்கு ஜான்சன் என்ன தெரியுமா பதில் சொன்னார்: “ஒருவனுக்கு லண்டன் மாநகரம் களைப்பையோ சலிப்பையோ எற்படுத்துமானால் அவர் வாழ்க்கையே சலிப்பானதுதான்” என்றார். லண்டனில் ‘போர்’ அடித்துப் போனவர் எவரும் இல்லை! . பின்னர், ஜேம்ஸ் பாஸ்வெல்லுடன், ஸ்காட்லாந்து முதலிய இடங்களைச் சுற்றிப்பார்த்தார்.

ஜன்சன் எழுதிய கதைகள், கட்டுரைகள், இலக்கிய விமர்சனக்கள் எல்லாம் புத்தக வடிவில் வந்துவிட்டன. ஆங்கிலக் கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை, இலக்கிய விமர்சனத்தோடு ஆறு பகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்.

IMG_7877   IMG_7878

உருவத்தில் பெரியவர்; விநோத நடை, உடை பாவனை!

1709 ஆம் ஆண்டில் லிட்ச்பீல்ட் என்னுமிடத்தில் பிறந்த ஜான்சன் ஆஜானுபாஹு. பலத்த உடல்வாகு கொண்டவர். கண்பார்வை மங்கியவர். புத்தகங்களை முகத்துக்கு அருகில் வைத்துப் படிக்கக்கூடியவர். ஒரு காதும் கேளாது. விநோதமான நடவடிக்கைகளை உடையவர். இதனால் அவரைப் பலரும் பைத்தியம் என்று நினைப்பர். வில்லியம் ஹோகார்த் என்ற ஓவியர் இவரைப் பார்க்க வந்த போது, சரியான மடையன் என்று நினைத்தார். அவர் பேசத் துவங்கிய பின்னர்தான் அவர் ஒரு அறிஞர் என்று தெரிந்தது. அவருடைய தந்தை புத்தகக்கடை வைத்திருந்தார். அவருடைய கண், காதிலிருந்த குறையை, அவர் மூளை ஈடு செய்தது. எதையும் ஒருமுறை படித்தவுடன் அது அப்படியே மனப்பாடம் ஆகிவிடும். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கப்போனவர், பணம் கட்ட முடியாததால் படிப்பைவிட்டு விட்டு ஆசிரியர் ஆனார். பின்னர் பத்திரிக்கையாளர் ஆனார்.

அவருடைய வாழ்வில் நடந்த இன்னொரு விநோதம், அவர் வயதைப் போல இரு மடங்கு வயதுடைய ஒரு விதவையைத் திருமணம் செய்துகொண்டதாகும். கையில் காசு இல்லததால் காப்பிக் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் பொழுதைக் கழித்த அவர் 1738ல் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அவர் ஒரு கவிஞரும் கூட.

அந்தக் காலத்திலிருந்த ஆங்கில அகராதிகள் தெளிவான விளக்கம் இல்லமல் குறைபாடுகளுடன் இருந்தன. ஆகையால் ஒரு புத்தகக் கடைக்காரர், ஜன்சனிடம் பணம் கொடுத்து, அவருக்கு ஆறு உதவியாளர்களையும் அனுப்பினார். ஜன்சனின் பல்துறை அபார அறிவினால் சில ஆண்டுகளில் அப்பணி முடிந்து அவருக்கு பெரும் புகழைக் கொடுத்தது. 1930 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட் அகராதி வெளிவரும்வரை அகராதி என்றால், அது ஜான்சனின் அகராதிதான் என்று பெயர் விளங்கியது. அவர் 43,000 சொற்களுக்கு விளக்கம் கொடுத்தார்.

IMG_7902  IMG_7918

1759 ஆமாண்டில் அவர் தாயார் இறந்தபோது இறுதிச் சடங்குகளுக்கு மட்டுமே அவரிடம் பணம் இருந்தது. ஒரு நாவல் எழுதித் தருவதாகச் சொல்லி பணம் கடன் வாங்கினார். சொன்னபடியே நாவலையும் முடித்துக் கொடுத்தார்.

ஆங்கிலக் கவிஞர்கள் வாழ்க்கையை இவர் எழுதுவதற்கு கொஞ்சம்தான் பணம் வாங்கிக் கொண்டார். தான் முப்பது ஆண்டுக் காலம் படித்ததை நினைவிற்கொண்டு அருமையாக எழுதி முடித்தார். இதைப் பார்த்துவிட்டு சிலர்,  “என்ன அநியாயம் இது? இவ்வளவு பெரிய பணிக்கு கொஞ்சம் பணம் கொடுதிருக்கிறார்களே?” என்று அங்கலாய்த்தனர். அதற்கு ஜான்சன் என்ன தெரியுமா பதில் சொன்னார்:- “அவர்கள் சரியாகத்தான் பணம் கொடுத்திருக்கிறார்கள். நான் தான் கொஞ்சம் அதிகமாக எழுதிவிட்டேன்” – என்றார்

பெருந்தன்மை மிக்கவர். மற்றவர்களுக்கு உதவி செய்தவர். ஆங்கில இலக்கிய உலகில் அழியா இடம் பெற்றவர் சாமுவேல் ஜான்சன்.

IMG_7909

IMG_7912

IMG_7908

–Subham–

அப்பாய் செட்டியாரின் அற்புத தமிழ் அகராதி

Compiled by London swaminathan

Article No.1840 Date: 1 May  2015

Uploaded at London time: 18-26

தமிழில் மேலும் ஒரு அதிசயம்

எதுகைத் தமிழ் அகராதி

தமிழ் இலக்கியத்தில் எவ்வளவோ அதிசயங்கள் உள்ளன. இது வரை எனது ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகளில் அவைகளைக் கொடுத்து வந்துள்ளேன். லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ள ஒவ்வொரு தமிழ் புத்தகமாகப் புரட்டிப் பார்த்து வருகையில் ஊத்தங்கரை பி ஆர் அப்பாய் செட்டியார் 1938 ஆம் ஆண்டில் வெளியிட்ட எதுகை அகராதியைக் கண்டேன். அது ஒரு அற்புதமான நூலாகும். தர்மபுரி ஸ்ரீ ராமலிங்கா பிரிண்டிங் ஒர்க்ஸில் அது அச்சிடப்பது. (தற்பொழுது சில பதிப்பகங்கள் இதை மறுபதிப்பு செய்துள்ளன).

“பல அகராதிகள் ஏற்கனவே இருந்தபோதிலும் தமிழ்க் கலைக்கு என்னாலியன்ற தொண்டாற்ற வெண்ணங்கொண்டு நூதன முறையில் அகர முதலாகவும் கடையெழுத்தொன்றியும் வார்த்தை களைத் தொகுத்து எதுகை அகராதி என்ற பெயரால்  இதனை வெளியிடலாயினேன்” – என்று செட்டியார் முன்னுரையில் எழுதியுள்ளார்.

தமிழில் ஓரெழுத்துக்கு உள்ள அர்த்தங்களைப் படிக்கையில் வியப்பு மேலிடும். ஆனால் முன் காலத்தவர் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் இரு விழிகள் போல எண்ணியதால், செட்டியார் தமிழ் சொற்கள் போலவே சம்ஸ்கிருதச் சொற்களையும் அகராதியில் சேர்த்துக் கொடுத்துள்ளார். 70 க்கும் மேல் ஓரெழுத்துக்கள் அகராதியில் உள்ளன.

எல்லாப் பொருட்களையும் கொடுக்காமல் ஒவ்வொரு எழுத்துக்கும் சில பொருளைத் தருகிறேன்.

தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்து, சிவன், விஷ்ணு, பிரமன், பெயர், வினை முற்று விகுதி, சுட்டிடைச் சொல், அன்மை, இன்மை, மறுதலை, குறைவு, சம்மதி, சுட்டு, தடை, பிறிது, வியப்பு,  ஆறாம் வேற்றுமை யுருப்பிடைச் சொல், சாரியை இடைச் சொல், சுக்கு, திப்பிலி, எட்டு

ஆகாயம், பிரமன், தலை, ஓரெழுத்து, அரசன், ஆன்மா, உடல், கந்தருவ சாதி, காமன், காற்று, சூரியன், செல்வன், திருமால், தீ, தொனி, நமன் மயில், மணம், விநாயகன், ஒன்று எண்ணும் எண், சரீரம், சுகம், நீர், நனைத்தல், பொருத்து, மேகம், விட்டுணு, மயிர், வியாதி, வாயு, பட்சி

குருணிக்குறி

கூடிய (உதாரணம்- சோமாக்கந்தர், சோமன்)

பிரான்ஸ் வெளியிட்ட பிரம்மா  தபால் தலை

குபேரன், பிரமன்

இன்மை, அன்மை, எதிர்மறை (உதாரணம்- அரூபம், அத்துவிதம், அதன்மம்)

இருபதிலோர் பாகத்தைக் காட்டும் ஓர் கீழ்வாய் இலக்கக் குறி, ஆற்று, சாபம், காவல் செய்தல், குடித்தல்

இயமன் இறந்தகால இடை நிலை (உ.ம்.-என்மர், ஒரு மந்திரம், காலம், சந்திரன், சிவன், நஞ்சு, நேரம், பிரமன், விட்டுணு

இறந்தகால இடை நிலை (உ.ம்.போயது)

இறந்தகால இடை நிலை

ஆச்சாமரம், இசை, இரக்கம், பெண் பசு, வினா விடைச் சொல், அந்தம், ஆக என்பதன் குறுக்கம்,இச்சை, ஆத்மா,வியப்பு, விலங்கின் பெண் பொது, ஆவது, பெண் எருமை

கா

அசைச் சொல், காத்தல் , காவடி, சோலை, துலை, பூந்தோட்டம், வருத்தம், வலி, பாதுகாப்பு, நிறை, சரசுவதி, கள், காலடித் தண்டு

சா

சாதல், சாவெனல், பேய், மரணம், தேயிலைச் செடி, இற, காய்ந்து போ

ஞா

கட்டு, பொருந்து

தா

கேடு, தாண்டுதல், கொடு, பகை, வருத்தம், வலி, அழிவு, கொடியன், பாய்தல், பிரமன், தாண்டு, படை

நா

நடு, நாக்கு, அயலார், சுவாலை, திறப்பு, மணி முதலியவற்றின் நா, அயலார், சுவாலை, பொலிவு, பூட்டின் தாள், வார்த்தை, தாரை, நாதசுரத்தின் ஊதுவாய்

பா

வெண்பா முதலிய பாட்டு, பஞ்சு நூல், பிரபை, நெசவு பா, அழகு, கடிகார ஊசி, கிழங்குப்பா, நிழல், பரப்பு, பஞ்சி நூல், பருகுதல், பாம்பு, தமிழ், தூக்கு, யாப்பு, காத்தல், சுத்தம், கப்பு, கை மரம்

மா

ஆண் குதிரை, அழகு, ஆண் பன்றி ஆண் யானை, இலக்குமி, கறுப்பு, சீலை, செல்வம், பெருமை, மாமரம், வண்டு, வயல், அறிவு, ஆணி, மாவு, நிறம், பரி, பிரபை, கட்டு, பெருமை, சரசுவதி, வலி, விலங்கின் பொது, வெறுப்பு, அருப்பம், மிகுதி, பிட்டம், பிண்டி, நுவனை

யா

ஒரு வகை மரம், வினாச்சொல், சந்தேகம், இல்லை

ரா

இராப் பொழுது, இரவு

வா

வருக எனல்

ஆண்பால், பெண்பால் பெயர் விகுதி (உ.ம்.பிறைசூடி, கண்ணி), முன்னிலை ஒருமை வினைமுற்று, அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி, அரை என்னும் எண்ணின் குறி

நி

அதிகம், இன்மை, உறுதி, எதிர்மறை, ஐயம், அமீபம், நிச்சயம், நிலை, பேறு, பூரணம், மிகுதி, வன்மை, விருப்பம்

பி

அழகு, பிரிவினை விகுதி

ஈ, கள், இலக்குமி, தேனீ, குகை, தாமரை இதழ், பாம்பு, அம்பு, அரை நாண், பார்வதி, தேனீ, சிறகு

கீ

கிளிக்குரல்

சீ

இகழ்ச்சிக் குறிப்பு, அடக்கம், பெண்,இலக்குமி, வியப்பு,சரஸ்வதி, பார்வதி, நித்திரை, பிரகாசம், விடம், விந்து, சளி, ஒளி, சிரீ, சிகரம், சீகம், தமரத்தை, புனல், திரை, கவிரி, சீதல், காந்தி, சம்பத்து

நீ

நீ என்னும் முன்னிலைப் பெயர், நீங்குதல், விடு, உலகத்தை மறு, தள்ளு

தீ

நெருப்பு, தீமை,அறிவு, நரகம், இனிமை, கோபம், விடம், ஞானம், விளக்கு, அங்காரகன், ஆரல், ஒளி, முளரி, வசு, வடவை, சிகி

பீ

அச்சம், மலம், தொண்டி, பெருமாரம்பவ்வி

மீ

ஆகாயம், உயர்வு, மேல், மகிமை, மேற்புரம்

வீ

விருப்பம், கர்ப்பந்தரித்தல், பறவை, பூ, சிவன், நீக்கம், கேடு, ஒழிவு

அகச் சுட்டு, புறச்சுட்டு, ஆச்சரியம், உருக்கம், கட்டளை, கோபம், சின, பிரமன், சிவ சக்தி பிள்ளையார் சுழி, எண் 2

கு

பூமி,குற்றம், சாரியை, சிறுமை, தடை, தொனி, நான்காம் உருபு, நிந்தை, பாவம், இனமை, நீக்க, நிறம்

சு

நன்மை (சுபுத்தி), சொந்தம் (சுதேசம்), அதட்டும் ஓசை, சுவ, சுய, வியப்புக் குறிப்பு

து

துவ்வென்னேவல், அசைத்தல், அனுபவம்,எரித்தல், கெடுத்தல், கசத்தல், பிரிவு, சுத்தம்

நு

தியானம், தோணி, நிந்தை, நேரம், புகழ்

ஊன், உணவு,சந்திர, சதை, தசை, சிவன், சமாக்கிய கலை, இறைச்சி

கூ

பூமி, கூக்குரல், மலங்கழித்தல், கூவுதல், கூச்சல்

சூ

விலங்குகளையோட்டும் குறிப்பு, சுளுந்து, வியப்புச் சொல்

தூ

சுத்தம், தூவென்னேவல், பகை,பற்றுக்கோடு, புள்ளிறகு, வெண்மை, தசை, மாமிசம், வலிமை, தூவு, இகழ்ச்சிக் குறிப்பு

நூ

ஆபரணம்,எள், யானை

பூ

மலர், அழகு, இடம், இந்துப்பு, இருக்குத்ல், இலை, ஓமாக்கினி, கண்ணோய், நரகம், தாமரை, தீப்பொறி, பிறப்பு, பூமி, நீலநிறம், மென்மை, தேங்காய்த் துருவல், நுண்பொடி, அரைக்கால், மகளிர் சூதகம், நிரம், பூப்பு, மூப்பு, அலரி, இணர், குசுமம், தாமம், போது, வீ

எழு, வினாவெழுத்து

சிவன், விஷ்ணு, செலுத்துதல், அடே, அம்பு, எண்ணின் குறிப்பு, அடுக்கு, பாணம், இகழ்ச்சிக் குறிப்பு, பெருக்கம், இறுமாப்பு, உயர்ச்சி, வலியுறுத்தல் (உ.ம்.அவனே வந்தான், நானே செய்தேன்)

சே

அழிஞ்சில் மரம், இடப ராசி, சிவப்பு, சேரான் மரம், காளை, வெருட்டுங் குறி, வெறுப்புக் குறி, புல்வாய், குதிரை, சேரான்

தே

கடவுள், கிருபை, கொள்ளுகை,நாயகன், மாடு துரத்தும் குறிப்பு

நே

அன்பு, ஈரம், நேசம்,உழை, நெகு

பே

நுரை, மேகம், பேகடம்- ஒருவகை மீன், இல்லை, பேகம்-தவளை, முகில்

மே

அன்பு

வே

வேவு

குலோத்துங்க சோழன்

அரசன், அழகு, ஆசான், இரண்டாம் வேற்றுமை உருபு, கடவுள், கோழை, சாரியை, சுவாமி, நுண்மை, யானையைப் பாகன் ஓட்டும் ஓசை, கடுகு, கடவுள், குரு, வியப்பு, வீரம், கணவன், சுவாமி, பிதா, யசமானன்

சை

சீ, கைப்பொருள்

நை

நொந்து போ, இகழ்ழ்சிக் உறிப்பு, நையென்னேவல்

அழைத்தல், வியப்பு, அனந்தம், கடித்தல், பூமி

கௌ

கொள்ளு, தீங்கு, மனஸ்தாபம், கிருத்தியம், கௌவென்னேவல்

கை

ஒப்பனை, ஒழுக்கம், கை, சிறுமை, வகுப்பு, இடம், உடனே, கட்சி, கைமரம், சேனை, ஆள், காந்தப்பூ, தங்கை, ஊட்டு, அலங்கரி, தோள், பாணி, சயம், விற்பிடி, முகுளம், சதுரம், இலதை, மான் தலை, சங்கு, வண்டு, அஞ்சலி, கற்கடகம், மகரம், கபோதம், விற்பிடி

தை

மாதம், பூச நாள்

பை

அழகு, பச்சை நிறம், பாம்பின் படம்

மை

அஞ்சனம், கருப்பு, பூமி, திசை, மலை, வச்சிராயுதம்

வை

கூர்மை, வைக்கோல், கீழெ வை என்னேவல்

ஒற்றுமையுடன் இரு, ஒன்றுபடு, ஒழிதல், ஒவ்வுதல்

இழிவு சிறப்பு, அடிசயவிரக்கச் சொல், எதிர்மறை, ஒழிபிசை, , வினா, நீக்க, மதகு நீர் தாங்கும் பலகை, மகிழ்ச்சிக் குறிப்பு, இரக்கக் குறிப்பு,  மடையடைக்கும் கதவு

நொ

துன்பப்படு, நோய், வருத்தம், நொய்ம்மை

அதிசய விரக்கச் சொல், இரக்கம், வினா விடைச் சொல் (உ.ம்.சாத்தனோ)

கொ

ஒலிக்குறிப்பு

கோ

அம்பு, அரசன், ஆண்மகன், எருது, ஆகாயம், கண், கிரணம், சந்திரன், சூரியன், பசு, மலை, மாதா, மேன்மை, வாணி, குசவன், சுவர்க்கம், வெந்நீர், தொடு, தறி, தடு, பொறி, தேவலோகம், கோமேத யாகம்,வச்சிராயுதம்

சோ

அரண், வியப்புச் சொல், வாணாசுரன் நகர்,உமை

நோதல், துக்கம், துன்பம், பலஹீனம், வியாதி

தோ

தோ- நாயைக் கூப்பிடும் ஒலி

நோ

இன்னம், சிதைவு, துக்கம், துன்பம், பலவீனம், வியாதி, வலி, வேதனைப் படு, நொந்து பேசு, துக்கப்படு, இன்மை

போ

அசைநிலை, போவென்னுதல்

சௌ

சௌபாக்கியவதி என்பதன் சுருக்கம், சிறுமி, சுமங்கலி

நௌ

மரக்கலம்

ஸ்ரீ

லெட்சுமி, பாக்கியம்

அப்பாய் செட்டியார் நிறைய சம்ஸ்கிருதச் சொற்களையும் சேர்த்திருக்கிறார். அதை நினைவிற் கொள்ளல் வேண்டும். அவர் மட்டுமின்றி அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும் வெளியாகும் எல்லா அகராதிகளிலும், நிகண்டுகளிலும் சம்ஸ்கிருதச் சொற்களையும் சேர்த்து தமிழாகக் கொடுத்திருப்பதிலிருந்து இரு மொழிகளையும் அவர்கள் இரு கண்கள் போல பாவித்ததும், இரு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்று அவர்கள் நம்பினர் என்பதும் வெள்ளிடை மலை. சுருங்கச் சொல்லின் வெள்ளைக்காரன் புகுத்திய ஆரிய-திராவிட இனவெறி வாதம் என்னும் விஷம் கலக்கும் வரை, தொல்காப்பியன் முதல் பாரதியார் வரை எல்லாக் கவிஞர்களும் அச்சமின்றி, கூச்சமின்றி சம்ஸ்கிருதத்தைக் கலந்தே எழுதினர். திரைப்படப் பாடல்களில் பிற மொழிக் கலப்பில்லாத படல்களைக் காண்பதும் அரிதே.

பாபநாசம் சிவன் எதுகை அகராதி

பாபநாசம் சிவன் சம்ஸ்கிருத எதுகை அகராதி ஒன்று தயாரித்து வெளியிட்டுள்ளார் அதைப்பற்றி தனி கட்டுரையில் தருகிறேன். அதைத் தயாரிக்க அவருக்கு ஆகிய காலம் எட்டு ஆண்டுகள். இதே போல அப்பாய் செட்டியார், அபிதான சிந்தாமணி வெளியிட்ட சிங்காரவேலு முதலியார் ஆகியோரும் பல்லாண்டுக் காலம் உழைத்ததன் பேரிலேயே நமக்கு அற்புத அகராதிகள், கலைக் களஞ்சியங்கள் கிடைத்தன.

–சுபம்–