Compiled by london swaminathan
Date: 10 April, 2016
Post No. 2711
Time uploaded in London :– 8-47
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
‘அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்’- வெற்றிவேற்கை
ஸ்கட்லாந்தில் எடின்பர்க் நகரத்தில் கல்லூரி முதல்வர் ஜான் கேர்ன்ஸ் பற்றி அறியாதோர் எவருமிலர். ஒருமுறை ஒரு பெரிய பொதுக்கூட்டத்துக்கு அவர் அழைக்கப்பட்டார். அவர் அடக்கத்தின் சின்னம்; பணிவின் இலக்கணம்; எளிமைக்கு எடுத்துக்காட்டு.
அவர் கூட்டத்தில் நுழைந்தவுடன் ஒரே கரகோஷம்! அவர், இது தனக்காக இல்லை, வேறு யாரோ ஒருவருக்கு என்று நினைத்து பின்னால் திரும்பிப் பார்த்தார். ஊர் பேர் தெரியாத ஒரு குள்ளமான ஆசாமி அவர் பின்னால் வந்தார். பிரின்ஸிபால் கேர்ன்ஸ், தலையை பவ்யமாகக் குனிந்து, சிரம் தாழ்த்தி, கரம் குவித்து, அவரை முன்னே போகவிட்டார். அவர்தான் அன்றைய கூட்டத்தின் கதாநாயகர் என்று கேர்ன்ஸ் நினைத்தார். இப்படி அவர் பணிவுடன் நடந்ததைப் பார்த்த மக்கள் கூட்டம் விண்ணதிர கைதட்டி ஆரவாரம் செய்தது. அந்த மண்டபமே இடிந்து விழும் அளவுக்கு கரகோஷம்; பின்னர்தான் தெரிந்தது தனக்குத் தான் அந்த வரவேற்பு என்பது! கூட்டத்தை ஏற்பாடு செய்தோர், கேர்ன்ஸை மரியாதையுடன் மேடைக்கு அழைத்துச் சென்று இருக்கையில் அமரவைத்தனர்.
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் – வள்ளுவன் குறள் 125.
Xxxx
முற்றும் உணர்ந்தவரில்லை முழுவதூஉங்
கற்றனம் என்று களியற்க – சிற்றுளியாற்
கல்லும் தகரும், தகரா கனங்குழாய்!
கொல்லுலைக் கூடத்தினால் (நீதிநெறி விளக்கம்)
அடக்கமில்லாப் பெண்!
ஆங்கிலப் பேரகராதியை முறையாகத் தயாரித்து பெரும்புகழ் பெற்றவர் சாமுவேல் ஜான்சன். அவருடைய அறையில் சுவையான பல விஷயங்கள் விவாதிக்கப்படும். ஒரு முறை, அந்த விவாதம் ‘பலான’ விஷயங்களை நோக்கித் திசை திரும்பியது. உடனே ஒரு பெண்மணி, மிகவும் நல்ல பத்தினி போல, முகத்தைச் சுழித்துக்கொண்டு, வெளியேறினார்.
உடனே ஜான்சன் சொன்னார்:
“இப்போது போனாளே, ஒரு பதிவிரதை, அவள்தான், இந்த அறையிலேயே அடக்கமில்லாத பெண்”.
–சுபம்–
You must be logged in to post a comment.