
கர்னல் ஷெராக் (Col Sherag) தெரிவிக்கிறார்:-
01) 1.5 லக்ஷம் ஹிந்து-சீக்கிய குடும்பங்கள் ஜம்மு-காஷ்மீரில் குடியிருப்போராக ஆகி விட்டனர்.
02) உமர் அப்துல்லா, மெஹ்பூபாவிகு வழங்கப்பட்ட சலுகைகள்/வசதிகள் நீக்கப்பட்டு விட்டன.
03) ஜம்மு காஷ்மீர் நேஷனல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மீதும் காஷ்மீர் கட்டுப்பாடுகள் விதிப்பது நீக்கப்பட்டது.
04) ஹிந்து புனிதத்தலங்களின் மீதான காஷ்மீரின் கட்டுப்பாடு நீங்கியது.
05) 1990இல் ஹிந்துக்கள் காஷ்மீரில் விட்டு விட்ட சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளோரின் மீது, தானாகவே நடவடிக்கை எடுக்க அதற்குரிய அதிகாரமையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06) ஜம்முகாஷ்மீரில் உள்ள அனைத்து கோல்ஃப் மற்றும் இதர கிளப்புகளின் மீதான கட்டுப்பாடை காஷ்மீர் இழந்தது.
07) பல்கலைக் கழக விஷயங்களில் காஷ்மீர் முதல் அமைச்சரின் பங்கு இனி இருக்கவே இருக்காது.
08) தேச விரோதிகளுக்கு ஜம்முகாஷ்மீரில் 42 வருடங்களுக்கு முன்னர் தரப்பட்டிருந்த சட்டரீதியான பாதுகாப்பு நீக்கப்பட்டது.பப்ளிக் சேஃப்டி ஆக்ட், 1978இன் படி நடவடிக்கைக்கு உள்ளாகியிருப்போர் ஜம்மு காஷ்மீருக்கு வெளியிலும் கூட எந்தச் சிறையிலும் இனி அடைக்கப்படலாம்.
09) ஜம்முவிலிருது அரசு அலுவலகம் இனி காஷ்மீருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஜம்முவிலிருந்தே செயல்படலாம். (ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்த அலுவலகம் -பைல்கள் உட்பட- காஷ்மீருக்கு மாறுவது வழக்கம்)
10) பரூக், உமர், ஆஜாத், மெஹ்பூபா உள்ளிட்ட பழைய முதல் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள், வசதிகள் நீக்கப்பட்டன. இதில் குடியிருப்பு, வாகனங்கள் உள்ளிட்டவையும் அடங்கும்.
11) அனைத்து பல்கலைக்கழகங்களும் இனி நியூ டெல்லியின் கட்டுப்பாட்டுக்கு வந்து விட்டன. இங்குள்ள பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் காஷ்மீரை மையமாகக் கொண்டிருப்பது இனி இல்லை. மாற்றப்படலாம்.
12) தர்மாத் ட்ரஸ்டின் கட்டுப்பாட்டிலோ அல்லது அந்தத் தலத்திற்கான தல வாரியத்தின் கட்டுப்பாட்டிலோ இதுவரை ஹிந்து புனிதத் தலங்கள் இருந்தன.இனி இந்த வாரியங்கள் நியூ டெல்லியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும்.
13) ஜம்மு காஷ்மீர் வக்ஃப் போர்ட் கூட நியூ டெல்லியினால் எடுக்கப்பட்டு விட்டது. அதன் முழு சொத்துக்கள் இதுவரை காஷ்மீர் முஸ்லீம்களின் நன்கொடைகளால் உருவாக்கப்பட்டிருந்தன. இனி நியூ டெல்லியின் கட்டுப்பாட்டுக்குள் இவை வரும்.
14) பண்டிட்களிடமிருந்து வாங்கப்பட்ட சொத்துக்களைக் கொண்டிருக்கும் உள்ளூர் மக்களை வெளியேற்ற உள்ளூர் நிர்வாகத்திற்கு நியூ டெல்லி அதிகாரத்தை வழங்கியுள்ளது. இதற்கான விற்பனைப் பத்திரங்கள் செல்லாது என அறிவிக்கப்படலாம்.
15) கோல்ஃப் மைதானங்கள் மட்டுமல்ல, அனைத்து காட்டு நிலங்களும் கூட நியூ டெல்லியின் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டது. டூரிஸ்ட் டெவலப்மெண்ட் அதிகாரிகளும் இனி டெல்லியின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பர். இந்தியாவிலிருந்தே இனி நிலங்களை லீசுக்கு விடலாம். வசதிகளை யாருக்கும் தரலாம்.
16) முன்பிருந்ததைப் போல் அல்லாமல் ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி வாரண்ட் ப்ரெஸிடென்ஸில் (Warrant of Precedence) 15ஆம் நிலைக்கு இறக்கப்பட்டிருக்கிறார்.
17) ஜம்மு காஷ்மீர் முதன்மந்திரியினால் பல்கலைக்கழக போர்ட் மற்றும் வக்ஃப் போர்டுக்கு செய்யப்பட்ட நாமினேஷன்கள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டன.
18) அனைத்து காஷ்மீர் ஐஏஎஸ் அதிகாரிகளும் குறைந்த முக்கியத்துவம் கொண்டுள்ள நிலைகளில் வைக்கப்பட்டதோடு, உள்ளூர் வாசிகள் அல்லாத அதிகாரிகள் நிர்வாகத்தை இயக்க ஜம்முவிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.
19) ஆயிரக்கணக்கான லேண்ட் பேங்குகள் (Land Banks of thousands of Kanals) இந்த மாநிலம் சாராத மற்றவருக்கு ‘Investment and Industry’ என்ற பெயரில் தரப்படும்.
நமது MHA (Ministry of Home Affairs) அதிக விளம்பரப்படுத்தாமல் ஆர்ப்பாட்டமின்றி, ஓசையின்றி இவை அனைத்தையும் அமுல் படுத்தியுள்ளது.
சாதனை தான்!
***
INDEX
ஜம்மு காஷ்மீர் சட்டங்களில் மாற்றம்.
19 மாற்றங்களின் பட்டியல்
ஜம்மு காஷ்மீர் பாரதத்தின் முழுமையான பகுதியான ஆகி விட்டதற்கான சான்றுகள்!
Source and Thanks to Truth Vol 89 No 12 Dated 2-7-2021 – https://m.facebook
Tags- ஜம்மு ,காஷ்மீர், மாற்றம்
