அனிமல் ஃபார்ம் (ANIMAL FARM) புகழ் ஜார்ஜ் ஆர்வெல் (Post No.9863)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9863

Date uploaded in London –18 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆங்கில நாவல் ஆசிரியரும், கவிஞரும் கட்டுரையாளருமான ஜார்ஜ் ஆர்வெல்( GEORGE ORWELL ) லின்  உண்மைப் பெயர் எரிக் ஆர்தர் பிளேர்( ERIC ARTHUR BLAIR ) ஆகும். அவர் எழுதிய அனிமல் ஃபார்ம் (ANIMAL FARM)  மற்றும் நைன்டீன் எய்ட்டி போர் (NINETEEN EIGHTY FOUR) (1984) ஆகிய இரண்டும் புகழ் பெற்ற நாவல்கள் ஆகும். அரசியல் நிலவரத்தை ( SATIRE) கேலியும் கிண்டலும் செய்யும் பழி கரப்பு  அங்கதம் நிறைந்தவை அவை.

“எல்லா பிராணிகளும் சமமானவை (சம உரிமை உள்ளவை); ஆனால் சில பிராணிகள் மற்றவற்றைவிட கொஞ்சம் கூடுதல் சமத்துவம் உடையவை “ (All animals are equal, but some are more equal than others) என்ற இவருடைய பொன்மொழி அரசியலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சமத்துவம் என்று சொல்லிக்கொண்டு ஏற்ற தாழ்வுகளை ஆதரிக்கும் அரசியல்வாதிகளை சாடும் வாசகம் இது.

ஆங்கில தம்பதியருக்கு இந்தியாவில் பிறந்தவர் ஜார்ஜ். ஆயினும் குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். லண்டனில் ஈடன் (Eton College) கல்லூரியில் படித்த பின்னால் 1922 முதல் 1927 வரை பர்மாவில் போலீஸ் வேலையில் இருந்தார் . ஐரோப்பாவுக்குத் திரும்பி வந்த பின்னர் குறைந்த சம்பள வேலைகளை மேற்கொண்டு அதே நேரத்தில் தான் எழுதியவற்றை அச்சிட முயன்றார்.

முப்பது வயதில் முதல் புஸ்தகம் (DOWN AND OUT IN PARIS AND LONDON)

வெளியானது. அதில் தன்னுடைய வாழ்க்கையை விவரித்தார். பின்னர் எழுதிய நாவல் (THE ROAD TO WIGAN PIER) ஒன்றில் அந்தக் காலத்தில் பிரிட்டனில் உழைக்கும் வர்க்கம் பட்ட கஷ்டங்களை சித்தரித்தார்.

ஸ்பெயின் நாட்டின் உள் நாட்டு யுத்தத்தில் (Spanish Civil War) )  இடது சாரி ரிபப்ளிகன் தரப்பில் போரிட்டு காயம் அடைந்தார். இடதுசாரி எண்ணங்கள் இருந்தபோதும் ரிபப்ளின்களை ஆதரித்த கம்யூனிஸ்டுகளை வெறுத்தார் . அவர்களைத் தாக்கி ஒரு நாவலும் (HOMAGE TO CATALONIA)  எழுதினார்.

இரண்டாவது உலகப் போர் காலத்தில் ராணுவ சேவை செய்யும் தகுதி இல்லாததால் பி.பி.சி.யில் பணியாற்றினார்.உலகப் போர் முடியும் தருவாயில் அனிமல் பார்ம் (Animal Farm)  கதை எழுதினார். இதில் மனித ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடும் பிராணிகள் அவர்களைத் தூக்கி எறிந்துவிட்டு புது ஆட்சி அமைக்கின்றன. பன்றிகள் ஆட்சியாளர் பதவியில் அமர்கின்றன அதாவது புரட்சி என்பது எப்படி கேலிக் கூத்து ஆகிவிடும் என்பதை படம்பிடித்துக் காட்டுவதே அவர் நோக்கம்.

‘1984’ என்ற தலைப்பில் நாவல் எழுதிய பின்னர் காச நோயால் (TB) இறந்தார். 1984 நாவலில் சர்வாதிகார ஆட்சியில் எப்படி பயந்து சாக வேண்டி இருக்கிறது என்பதை வருணிக்கிறார். எப்போதும் (Big Brother is Watching You) பெரிய ஆசாமி உன்னைக் கவனித்துக் கொண்டு இருக்கிறான் என்ற வசனம் அதில் திரும்பத்  திரும்ப வரும். இதுவும் பிற்காலத்தில் அடிக்கடி பயன்படும் பொன்மொழியாக மாறியது.

ஜார்ஜ் ஆர்வெல்

பிறந்த தேதி – ஜனவரி 23, 1903

இறந்த தேதி – ஜனவரி 21, 1950

வாழ்ந்த ஆண்டுகள் – 46

அவருடைய நூல்கள்:–

1933- DOWN AND OUT IN PARIS AND LONDON

1934 – BURMESE DAYS

1935 – A CLERGYMAN’S DAUGHTER

1936- KEEP THE ASPIDISTRA FLYING

1937- THE ROAD TO WIGAN PIER

1938- HOMAGE TO CATALONIA

1939- COMING UP FOR AIR

1945 – ANIMAL FARM

1949- NINETEEN EIGHTY- FOUR

–subham–

tags- அனிமல் ஃபார்ம் ,  ஜார்ஜ் ஆர்வெல், George Orwell

எவன் உண்மையான சாது? (Post No.9862)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9862

Date uploaded in London – 18 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டாக்டர் டி.எஸ்.கௌரிபதி திரிபாதி அவர்கள் தேர்வு செய்து வழங்கிய சில சுபாஷிதங்கள் தரப்பட்ட முந்தைய கட்டுரை எண் 9824 (வெளியான தேதி: 7-7-2021)

 எவன் உண்மையான சாது? 

ச.நாகராஜன் 

சம்ஸ்கிருத அறிஞரான டாக்டர் டி.எஸ்.கௌரிபதி சாஸ்திரி (Dr.T.S. Gouripathi Sastri)   அவர்களிடம் ஆந்திரா பல்கலைக்கழகம் நல்ல சில சுபாஷிதங்களைத் தேர்ந்தெடுக்குமாறு (1978இல்) பணிக்க, அவர் 36 சுபாஷிதங்களைத் தொகுத்துத் தந்தார். அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பையும் அவரே செய்துள்ளார். அவற்றில் முதல் பதினைந்து சுபாஷிதங்களை சென்ற கட்டுரைகளில் கண்டோம். அடுத்த ஐந்து சுபாஷிதங்கள் இதோ:-

வ்ரதே விவாதம் விமதிம் விவேகே ஸத்யேதிஷங்காம் வினயே விகாரம் |

குணேவமானம் குஷலே நிஷேதம் தர்மே விரோதம் ந கரோதி சாது: ||

 ஒரு சாது விரதங்களைப் பற்றி எதிர்த்து விவாதம் செய்ய மாட்டான். விவேகமான ஒன்றைப் பற்றி எதிர்க்க மாட்டான். ஸத்யத்தைப் பற்றி முடிவே இல்லாத சந்தேகத்தைக் கொள்ள மாட்டான். வினயத்தை விகாரமாக எடுத்துக் கொள்ள மாட்டான். குணத்தை அவமதிக்க மாட்டான். புனிதமான ஒன்றைத் தடுக்க மாட்டான். எது தர்மமோ அதை எதிர்க்க மாட்டான்,

The virtuous man does not quarrel or adversely argue in the case of a religious vow, does not show dissent in the case of discrimination, never entertains an endless doubt in the case of a reality, never takes benevolence as an unnatural quality, never insults a merit, never prohibits an auspicious thing and never opposes what is right or proper.

*

கல: சம்ஷபமாத்ராணி பரசித்தத்ராணி பஷ்யதி |
ஆத்மனோ பில்வமாத்ராணி பஷ்யன்னபி ந பஷ்யதி ||

மற்றவர்களிடம் உள்ள கடுகு போன்ற சிறு குறைகளைக் கூட ஒரு கெட்ட மனிதன் கூறி விடுவான். ஆனால் பில்வப் பழம் போல பெரிதாக இருக்கும் தன் குறைகளைக் காண மாட்டான்.

The Wicked man locates the defects in the case of others even though they are as small as mustard seed and fails to notice his own defects although they are as big as Bilva fruits.

*

ந நரஸ்ய நரோ தாஸோ தாஸ ச்ரார்தஸ்ய பூபதே |

கௌரவம் லாகவம் சாபி தனாதனநிபந்தனம் ||

ஓ, மன்னா! ஒரு மனிதன் ஒரு போதும் இன்னொரு மனிதனுக்கு அடிமை இல்லை. கௌரவமோ அவமதிப்போ ஒருவனிடம் பணம் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதைப் பொறுத்தே காண்பிக்கப்படுகிறது.

O King! Never is a human being slave to another human being. Respect or insult (shown to a person) are only due to (his having) money or absence of money.

*

வயோவ்ருத்தாஸ்தபோவ்ருத்தா ஞானவ்ருத்தாஸ்ச யே பரே |

தே சர்வே தனவ்ருத்தஸ்ய த்வாரி திஷ்டந்தி கிங்கரா: ||

வயதினால் பெரியவர்களும், தவத்தினால் பெரியவர்களும், அறிவினால் பெரியவர்களும் இதர நற்குணங்களால் பெரியவர்களும் செல்வத்தினால் பெரியவன் வீட்டு வாசலில் வேலைக்காரர்கள் போல நிற்கின்றனர்.

All those that are great by the age, great by their penance and great by their wisdom and great by other merits keep standing as peons at the doors of a man who is great by his wealth.

*

யத்ததாஸி விசிஷ்டோப்யோ யச்யாஷ்நாஸி தினே தினே |

தத்தே வித்தமஹம் மன்யே சேஷமன்யஸ்ய  ரக்ஷஸி ||

தகுதி உடையோருக்கு தானம் செய்யும் பணமும், தினமும் நீ உண்பதும் அதாவது  ஒவ்வொரு நாளும் நீ அனுபவிப்பதும் உனக்கே உரித்தாகுகிறது. உனது மற்ற அனைத்து சம்பாத்தியமும் அதைக் காப்பாற்றுவதும் ‘மற்றவர்களுக்காக மட்டுமே’ தான்!

Of your wealth whatever you donate to the deserving and what you eat, i.e., enjoy day after day really belongs to you. The rest you are earning and protecting ‘only’ for others.

***

INDEX

உண்மையான சாது யார்?

தன் குறை காணாமல் பிறர் குறை காண்பவனே கெட்ட மனிதன்

பணம் இருப்பதைப் பொறுத்தே கௌரவமும் அவமதிப்பும்

செல்வந்தன் வீட்டு வாசலில் வேலைக்காரர் போல அனைவரும் நிற்பர்

மற்ற்வர்களுக்கான சம்பாத்தியமும் உனக்கான சம்பாத்தியமும் எவை எவை?

Tags- உண்மையான, சாது,

மூன்று சகோதரிகள் ; மூவரும் நாவல் ஆசிரியை; 38 வயதுக்குள் இறந்தார்கள்!(9861)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9861

Date uploaded in London –17 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிராண்டி சகோதரிகள் (Bronte Sisters) மூவருக்கும் இடையேயான மிகப்பெரிய ஒற்றுமைகள் – மூவரும் நாவல் எழுதினர். மூவரும் 38 வயதுக்குள் இறந்தார்கள்!

ஆங்கிலத்தில் அதிகம் படிக்கப்பட்ட நுல்களில் Jane Eyre ஜேன் அயர் நாவலும் Wuthering Heights வுதெரிங் ஹைட் நாவலும்  குறிப்பிடத்தக்கவை உணர்ச்சி வசமூட்டும் நாவல்கள்  இவை .

****

ஷாலட் பிராண்டி CHARLOTTE BRONTE

பிறந்த தேதி – ஏப்ரல் 21, 1816

இறந்த தேதி – மார்ச் 31, 1855

வாழ்ந்த ஆண்டுகள் – 38

படைப்புகள் PUBLICATIONS

1847 – JANE EYRE

1849- SHIRLEY

1853 – VILLETTE

PUBLISHED AFTER SHE DIED-

1857 –  THE PROFESSOR

XXXXX

எமிலி EMILY BRONTE

பிறந்த தேதி -ஜூலை 30, 1818

இறந்த தேதி – டிசம்பர் 1, 1848

வாழ்ந்த ஆண்டுகள் – 30

படைப்புகள் PUBLICATIONS

1847- WUTHERING HEIGHTS

XXXX

ஆன் ANNE BRONTE

பிறந்த தேதி – ஜனவரி 17, 1820

இறந்த தேதி – மே 28, 1849

வாழ்ந்த ஆண்டுகள் – 29

படைப்புகள் PUBLICATIONS

1847- AGNES GREY

1848 – THE TENANT OF WILDFELL HALL

XXXX

மூவரும் வடக்கு இங்கிலாந்தில் யார்க்ஷைர் பொட்டல்காட்டுப் பகுதியில் பிறந்தார்கள்.மூத்தவள் ஆன் Anne பிறந்தவுடன் தாயார் இறந்தார்.

அவருடன் பிறந்த 4 சகோதரிகளையும் ஒரு சகோதரனையும் தந்தையும் அத்தையும் வளர்க்க வேண்டியதாயிற்று . அவரோ சமயப்  பிசாரகர். இரண்டு மூத்த சகோதரிகள் இளம் வயதில் இறந்தனர். ஏனையோர் வீட்டிலேயே கல்வி கற்றனர். புதர்க் காடுகளில் (மூர் moor ) விளையாடி பொழுதைக் களித்தனர். வீட்டிலுள்ள புஸ்தகங்களை எல்லாம் படித்து முடித்தனர்.பள்ளிக்கூடம் சென்ற நாட்கள் அதிகம் இல்லை. ஆயினும் ஆசிரியராகப் பணியாற்றினர் அல்லது பள்ளி நிர்வாகி பதவி வகித்தனர். சாலட் , எமிலி ஆன் ஆகிய மூன்று சகோதரிகளும் சேர்ந்து 846ல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டனர்.அவற்றில் எமிலியின் கவிதைகள் சுடர்விட்டுப் பிரகாசித்தன. அவை விற்று முடிப்பதற்குள் மூன்று சகோதரிகளும் கதை எழுத உட்கார்ந்தனர்.ஆளுக்கு ஒரு நாவலை எழுதி 1847ல் வெளியிட்டனர்.

ஆன், வயது 27,   எழுதியது அக்கனஸ் க்ரே.

எமிலி , வயது 29,   எழுதியது வுதெரிங் ஹைட்ஸ்

ஷாலட் , வயது 31, எழுதியது  ஜேன் அயர்

மூவரும் தன்  சொந்த அனுபவங்களை உணர்ச்சி பொங்க எழுதினார்கள் . இம்மூன்றில் கடைசி இரண்டு  நாவல்களும் பெரிய வரவேற்பைப் பெற்றன.

ஒரு துணிச்சலான ஏழைப் பெண், கடுமையான குணம் உடைய நிலச் சுவான்தார் மீது காதல் கொண்ட கதை ஜேன் அயர் கதையாகும்.

யார்க் க்ஷைர் பொட்டல் காட்டில் (Yorkshire Moor)  நடக்கும் காதல், வெறுப்பு , பழிவாங்குதல் ஆகியவற்றை வர்ணிக்கிறது வுதெரிங் ஹைட்ஸ் .  இதன் மொழி அமைப்பு வேகம் மிக்கது.வேறு எந்த விக்ட்டோரியன் கால நாவலிலும் இத்தகைய வன்மொழியைக் காணமுடியாது.

1849ம் ஆண்டில் எமிலியும்,ஆனும்  சகோதரனும் டிபி TB எனும் காச நோயால் இறந்தனர்.. 1854ல் ஷாலட்டு ஒரு மதப் பிரசாரகரை மணந்தார். மறு ஆண்டில் பிரசவ வேதனையில் இறந்தார் .

–SUBHAM–

TAGS – மூன்று சகோதரிகள், எமிலி, ஸாலட், ஆன் , பிராண்டி

ரிக் வேதத்தில் 19 நாட்டிய நாடகங்கள் (Post No.9860)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9860

Date uploaded in London –17 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நாடகத்தின் தோற்றம் ரிக்வேதத்தில் உள்ளது. இந்திய நாட்டிய நாடகங்கள்  அனைத்தும் சமயம் சம்பந்தப்பட்டவை. கிரேக்க நாடகங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் எள்ளவும் இல்லை.

ரிக் வேதத்தில் 19 உரையாடல் கவிதைகள் உள்ளன. அவை 12 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை தொடர்ந்து நடந்த வேள்விகளின்  போது கேளிக்கைக்காக நடித்து ஆடப்பட்டன. அதாவது மேடை நாடகங்கள் அல்ல. காமன் பண்டிகைகளின் போது தமிழ் நாட்டின் தெருச்  சந்திப்புகளில் நடக்கும் கூத்து போல இவை நடந்தன. ஏனெனில் வேதங்களுக்கு உரை எழுதிய சாயனரும் இவைகளை மதச் சடங்குகளுடன் தொடர்புபடுத்தவில்லை. அதிலிருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளே என்பது புலனாகிறது.

இந்துக்களை மட்டம் தட்டுவதற்காக கிரேக்க நாடகங்களை இந்தியர்கள் ‘காப்பி’ அடித்ததாக வெள்ளைக்காரர்கள் எழுதினர். அது தவறு என்பதை தமிழ் இலக்கியங்களை ஊன்றிப் படிப்போர் உணர்வர். கிருத யுகத்தில் நாட்டியம் இல்லை என்றும் திரேதா யுகத்தில்தான் நாட்டிய நாடகம் தோன்றியதாகவும் பரத முனி எழுதிய நாட்டிய சாஸ்திர நூல் பகரும். ஆகையால் ரிக்வேத உரையாடல் கவிதைகள் மேடை நாடகங்கள் அல்ல, தெருக்கூத்து போன்ற கேளிக்கை நாட்டியங்களே என்று தெரிகிறது.

***

முதல் கட்டம் கி.மு. 3000

ரிக்வேத சம்பாஷணைக் கவிதைகள்.

கிரேக்க மொழியின் முதல் காவியமே கி.மு 800-ல்தான் வந்தது என்பதையும் தமிழ் மொழியின் முதல் நூலே கி.மு 100 ஒட்டித்தான் வந்தது என்பதையும் நினைவிற் கொள்க. தமிழுக்கும் முன்னர் லத்தின் மொழி , எபிரேய மொழி, சீன மொழி நூல்கள் உள்ளன. இவை அனைத்த்துக்கும் முந்தியவை சம்ஸ்க்ருத நூல்கள். ரிக்வேத சம்பாஷணைக் கவிதைகள்.

***

இரண்டாவது கட்டம் கி.மு. 1000க்கு முன்

யஜுர்வேத சாகையான வாஜசநேயி சம்ஹிதையில் நடிகரைக் குறிப்பிடும் சைலூச என்ற சொல் வருகிறது. இது சிலாலின் என்பவர் எழுதிய நட சூத்திரத்துடன் தொடர்புடைய சொல். இதை பாணினியும் தனது சூத்திரத்தில் குறிப்பிடுவதால் 2700 ஆண்டுகளுக்கு முன்னரே நடிப்போருக்கான சூத்திரங்கள், அதாவது ஒரு வழிகாட்டிப் புஸ்தகம் (HAND BOOK) இருந்தது தெரிகிறது.

பாணினி எழுதியது இலக்கண புஸ்தகம். ஆகையால் அதில் ஒரே ஒரு குறிப்புதான் கிடைக்கிறது.

போதாயன தர்மசூத்திரமும் நாடக நடிகர்களை ஆதரிக்கவில்லை. அது சமயத்துக்குப் புறம்பான செயல் என்பது போல அதைத் தள்ளி வைக்கிறது. ஆகையால் நாடகம், நடனம் என்பது பற்றிய அக்கால சமயக் கருத்து தெளிவாகிறது.

****

மூன்றாவது கட்டம் , கி.மு 3000- கிமு.1000

திரேதா யுகத்தில்தான் முதல் முதலில் நாட்டிய நாடகங்கள் இடம்பெற்றதாக பரத முனி கூறுகிறார். இதற்குச் சான்று ராமாயணத்தில் கிடைக்கிறது. லவனும் குசனும் ராமாயணக் கதையை ராமன் முன்னரே வாத்தியக் கருவிகளுடன் நடித்துக் காட்டினார்கள். இதைத் தொடர்ந்து அப்படிப் பாடுவோரின் இனத்தை குசி லவ பாடகர் என்று அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.

****

நாலாவது கட்டம் கி.மு 4-ம் நூற்றாண்டு

அர்த்த சாஸ்திரத்தை எழுதிய கௌடில்யர் எனப்படும் சாணக்கியர் நடன, நாட்டிய , நாடக சொற்களை விரிவாகவே பேசுகிறார். இவர் பாணினிக்கு 300 ஆண்டுகள் பிற்பட்டவர். இவர் சொல்லும் விஷயங்கள் அக்காலத்தில் எந்த அளவுக்கு நாடகம் பரவி இருந்தது என்பதைக் காட்டுகிறது. இதோ அவர் தரும் விவரங்கள் :-

பாணினி இசைக்குழு /ஆர்கெஸ்ட்ரா பற்றியெல்லாம் பேசுகிறார். கௌடில்யர் அதற்கு மேல்  ஒரு படி செல்கிறார்.

நட = நடிகர்கள்

நர்த்தக – நடனம் ஆடுவோர்

காயக = பாடுவோர்

வாதக = வாத்தியம் வாசிப்போர்

வாக் ஜீவன = கதா காலட்சேபம் செய்வோர்

குசி லவ = பாணர்கள்

ப்லவக = கழைக் கூத்தாடிகள்

செளபிக = அதிரடிச் செயல் செய்வோர், மாஜிக் செய்வோர்

சாரணர் = ஊர் ஊராகப் போய்ப் பாடும் பாணர்கள்

இதுமட்டுமின்றி இவை அனைத்துக்கும் கலா = கலை என்று பெயர்கொடுத்து இப்படி சம்பாத்தித்து வாழ்க்கை நடத்துவோரை ‘ரங்கோப ஜீவினி = அரங்க வாழ்வுடையோர்’ என்றும் சொல்கிறார் கௌடில்யர்.

சுருங்கச் சொல்லின் சம்ஸ்க்ருத நாடகங்கள், முழுக்க, முழுக்க இந்தியாவில் தோன்றி இந்தியாவில் வளர்ந்தவையே. பாணினி இலக்கணத்துக்கு  மஹாபாஷ்ய உரை எழுதிய பதஞ்சலியும் கம்சனைக் கிருஷ்ணனின் கொன்ற நாடகத்தையும் ரசிகர்களையும் வருணிக்கிறார் .

இதற்கெல்லாம் நமக்கு வேறு வட்டாரங்களில் இருந்தும் சான்று கிடைக்கிறது. வடநாட்டில் இருந்து மல்யுத்தம் புரியவந்த மள்ளர்கள் பற்றி சங்க இலக்கியம் பாடுகிறது. ஆரியக் கூத்தாடிகள் வந்ததையும் அவை செப்புகின்றன.

உலகிலேயே முதலில் பெண்களுக்கு SYLLABUS சிலபஸ் போட்ட காம சூத்திர நூல் ஆசிரியர் வாத்ஸ்யாயனர், 64 கலைகளை பெண்களுக்கான பாட  திட்டத்தில் பட்டியல் போட்டுள்ளார். இதை சிலப்பதிகாரமும் பகர்கிறது. மேலும் பல பழைய சம்ஸ்க்ருத நூல்களும் உரைக்கின்றன.

அரை வேக்காட்டு வெள்ளைக்காரர்கள் இந்தியாவின் சிறப்பு மிகு 1000 நூல்களை 400 ஆண்டுகளில் வந்ததாக – கி.மு.2ம் நூற்றாண்டு முதல்- கி.பி 2ம் நூற்றாண்டு வரை வந்ததாக உளறிக்கொட்டி இருக்கின்றனர். மொழியியல் ரீதியிலும் இது தவறு ; கலை வளர்ச்சி வேகத்தைப் பார்க்கிலும் இது தவறு என்று எவரும் அறிவர்.

****

கிரேக்கர்களிடம் நாம் ஜோதிடத்தைக் கற்றோம், நாடகத்தைக் கற்றோம், காவியம் எழுதும் கலையைக் கற்றோம் என்று எழுதாத வெள்ளைக்காரன் இல்லை. இவர்கள் எவருக்கும் தமிழ் தெரியாது. தமிழில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே வட இந்திய மல்லர்களும் , ஆடுநரும் , பாடுநரும் வந்ததை சங்க இலக்கியம் முதல் திரு விளையாடல் புராணம் வரை மொழிகின்றன . அவை எல்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை என்பதை அப்பர் தேவாரம், கல்லாடம், சிலப்பதிகாரம் ஆகியன நமக்குக் காட்டுகின்றன.

சிலப்பதிகாரத்தையும் பரத சாஸ்திர நூலையும் ஒப்பிட்டு ஆராய்ந்தால் மேலும் தெளிவான சித்திரம் கிடைக்கும்.

கிரேக்க நாடகங்களுக்கும் நமக்கும் ஸ்னானப் பிராப்தி கூட இல்லை.

1.கிரேக்க நாடகங்கள் சமயத்துக்குப் புறம்பான நாடகங்களை, குறிப்பாக அரசியல் கிண்டல், ‘செக்சி’ SEXY  நாடகங்கள். சம்ஸ்கிருத நாடகங்கள் சமயம் தொடர்பானவை .

2. கிரேக்கர்கள் சோக நாடகங்களையும் எழுதினார்கள் . சம்ஸ்கிருத நாடகங்கள் சுப முடிவானவை. இன்றைய திரைப்படங்கள் போல அன்றே ‘சுபம்’ என்று நாடகங்களை முடித்தன

3.சம்ஸ்க்ருத, கிரேக்க நாடகங்களின் அமைப்பு முற்றிலும் வேறுபட்டவை. நம்முடைய நாடகங்களில் பிராமண விதூஷகர்/ COMEDIANS காமெடியன்ஸ் உண்டு. இதனால்தான் சமீப காலம் வரை பிராமண கிண்டல் திரைப்படங்களில் இருக்கிறது. இதை காளிதாசன் நாடகங்களிலும் காணலாம்.

4.சம்ஸ்க்ருத நாடகங்கள் முதலில் டைரக்டர்/ சூத்ரதாரர் அறிமுகத்துடன் துவங்கும். அவர் நாடகத்தை அறிமுகம் செய்து என்ன வரப்போகிறது என்பதைக் கோடிட்டுக்காட்டுவார். கிரேக்க நாடகங்களில் இப்படி திட்டமிட்ட அமைப்பு கிடையாது .

5. சம்ஸ்க்ருத நாடகங்கள், பரத வாக்கியம் என்னும் தேசீய கீதத்துடன் நிறைவு பெறும் . இதில் மன்னர் வாழ்க, குடி மக்கள் வாழ்க, வளம் சுரக்க என்றெல்லாம் கீதம் இசைப்பர்.

கி.மு காலத்தில் தோன்றிய பாஷாவின் நாடகங்களையும் காளிதாசரின் நாடகங்களையும் பார்க்கையில் இதை அறியலாம். காளிதாசன் காலம் 2000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை பிரபல சம்ஸ்க்ருத அறிஞர்கள் காட்டியுள்ளனர். நானும் சங்க இலக்கிய உவமைகள் மூலம் காட்டியுள்ளேன்.

சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய 11 ஆடல்களும்  இந்து  மத புராணக் கதைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. தமிழை எள்ளி நகையாடிய பிருஹத் தத்தன் என்ற வட நாட்டுக்காரனை அழைத்து குறிஞ்சிப் பாட்டு பாடிக் காண்பித்தார் கபிலர் என்னும் சம்ஸ்க்ருதம் தெரிந்த பிராமணப் புலவர் . இது காளிதாசன் காவிய நடையின் செல்வாக்கில் பிறந்தது என்பதை ஜி.யூ . போப் போன்றர்  பார்த்த மாத்திரத்திலேயே எழுதிவிட்டனர். சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு சம்ஸ்கிருதம் தெரியும் என்ற செய்தியும் வருகிறது ஆகையால் அக்காலத்தில் காளிதாசனை தமிழ் மக்கள் அறிந்திருப்பர். அவருடைய நாடகங்களையும் படித்திருப்பர். அவருடைய 1500 உவமைகளில் குறைந்ததது 200 உவமை கள் அப்படியே தமிழில் உள்ளன.

எல்லாக்  கலைகளும் வளர்ச்சி  அடையும்; அதுவும் பிற கலாசாரங்க்ளில் உள்ள நல்ல அம்சங்களைக் கடன் வா ங்கத் தயங்காது என்பதை உலக இலக்கியங்கள் காட்டுகின்றன. அவ்வகையில் கண்டோமானால் பிற்கால சம்ஸ்கிருத நாடகங்களில் சில அம்சங்கள் கிரேக்க நாடகங்களில் இருந்து வந்திருக்கலாம். மேலும் யவன என்ற சொல் துவக்க காலத்தில் ரோமானியர்கள் போன்ற அனைத்து வெளிநாட்டினரையும் குறித்தது. ஆகையால் யவனிகா என்ற திரைச் சீலை சொல்லை  மட்டும் வைத்து பெரிய கற்பனைக் கோபுரம் கட்டுவது பொருந்தாது.

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் ரிக் வேத உரையாடல் கவிதை பட்டியலைத் தருகிறேன்..

–தொடரும்

–சுபம்—

TAGS- நாடகம், தோற்றம், ரிக்வேதம், உரையாடல் , கவிதைகள்

செப்பு மொழி பத்து : பொன்னொளிர் பாரதம்! (Post No.9859)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9859

Date uploaded in London – 17 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

செப்பு மொழி பத்து : பொன்னொளிர் பாரதம்!

ச.நாகராஜன் 

01)   உலகின் ஆதி நூல் பிறந்த இடம் பாரதம் தான். இவை வேதங்கள் எனப் படுகின்றன. ஆச்சரியமான விஷயம், இவை அனைத்தும் என்று பிறந்ததோ அதே வடிவில், அதே உச்சரிப்புடன் , வாய் மொழியாகவே பரம்பரை பரம்பரையாக வந்து இன்றளவும் காக்கப்பட்டு வருகின்றன!

02)   உலகின் மாபெரும் இதிஹாஸங்கள் பாரதத்திலேயே தோன்றியுள்ளன. அவையாவன: 1) மஹாபாரதம் 2) ராமாயணம்.

கிரேக்க இதிஹாஸங்களான இலியட் மற்றும் ஒடிஸியை விடப் பெரியது மஹாபாரதம்!

03)   தேசம் என்ற கருத்தை மிகச் சாதாரணமாக நமது முன்னோர்கள் கூறி விட்டனர். “மாதா பூமிஹி, புத்ரோஹம் ப்ருதிவ்யாஹ” – “இந்த பூமியே நமது அன்னை; நான் இதன் புதல்வன்” – இந்தக் கருத்தை பன்னெடுங்காலம் முன்பே கூறிய பூமி பாரதமே!

04)   நமது பழம் பெரும் புராணமான பாகவதம் கூறுகிறது : “கோடிக்கணக்கான ஆண்டுகள் சுவர்க்கத்தில் வாழ்வதை விட ஒரு சில கணங்கள் பாரதத்தில் வாழ்வது சாலச் சிறந்தது”

05)   பல தத்துவங்கள், பல மொழிகளைப் பேசுவோர் இணக்கமாக வாழும் நம ஒருமைப் பாட்டை பழம் பெரும் வேதமான அதர்வண வேதம் கூறி இருக்கிறது :”நமது இந்த அன்னை பூமி பல மொழிகளைப் பேசுவோருக்கும், பல தத்துவங்களைப் பின்பற்றுவோருக்கும் சமமான புகலிடத்தைத் தருகிறது.”

ஜானம் பிப்ரத பஹுதா விவாசஸ்ம்

நானா தர்மாணம் ப்ரித்வி ய்தோகுசம்

06)   உலக அன்னை இந்தியா

நம் இனத்தின் தாயகம் பாரதம். ஐரோப்பிய மொழிகளுக்கெல்லாம் தாய் சம்ஸ்கிருதம். நம் தத்துவ சாஸ்திரத்தின் தாய் இந்தியா. கிறிஸ்துவ சமய லட்சியங்களுக்கெல்லாம், புத்தரின் மூலம் உதவிய தாய் இந்தியா. சுய ஆட்சிக்கும் ஜனநாயகத்திற்கும், கிராம சமுதாயத்தின் மூலம் வழிகாட்டிய தாய் இந்தியா. இந்திய மாதா நம் அனைவருக்கும் அநேக வழிகளில் தாய்.

       -வில் டியூரண்ட், தத்துவ சாஸ்திர அறிஞர்

07)இந்தியாவின் காரியம் உலகத்தின் காரியம்; இறைவனின் காரியம். இறைவனே நம் மாலுமி. நம் லட்சியத்தை நோக்கி நம்மை அவன் இட்டுச் செல்வான்.

       –  மஹரிஷி அரவிந்தர்

07)     ந்தப் பூவுலகில் புனிதமான புண்ணிய பூமி என்று உரிமை கொன்டாட ஏதாவது ஒரு நாடு இருக்குமானால்பூவுலக ஆன்மாக்கள் தம் கர்ம பலன்களைக் கழிக்க வேண்டிய ஒரு நாடு என்று இருக்குமானால்இறைவழியை நோக்கிச் செல்லும் ஒவ்வோர் ஆன்மாவும் தன் இறுதி வீடாக வந்தடைய வேண்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால்மனிதகுலம் அன்பின் சிகரத்தைபரந்த உள்ளத்தின் உச்ச நிலையைதூய்மையின் உயரத்தைஅமைதியின் எல்லையைஎல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மீக உள்நோக்கின் சிகரத்தை எட்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால் – அது தான் பாரதமாகும்.

08)      

– ஸ்வாமி விவேகானந்தர் (எழுமின், விழிமின் நூலிலிருந்து தொகுப்பு திரு ஏகாநாத்ஜி ரானடே தமிழில் ஆர். கோபாலன்)

09) புராதன இந்தியா அசாதாரணமான சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

                                 –   தார்ன்டன் (Mr Thornton)

10) எல்லா எழுத்தாளர்களின் ஒருமித்த கருத்துப்படி இந்தியா உலகில் அனைவரும் ஏற்கும் வசிப்பிடமாகும். உலகின் மிக இன்பமான ஒரு பகுதியாகும். அதன் புழுதி காற்றை விட சுத்தமானது. அதன் காற்றோ தூய்மையைக் காட்டிலும் தூய்மையானது

    அப்துல்லா வஸாஃப் – 14ஆம் நூற்றாண்டில் இந்தியா வந்த வரலாற்று ஆசிரியர் ( Abdulla Wassaf – 14th Century Historian)

***

INDEX

பாரதம், ஆதிநூல் வேதம், இன்றும் இருப்பவை;மஹாபாரதம், இராமாயணம்,

சுவர்க்க வாழ்வை விட பாரத வாழ்வு சிறந்தது, பல தத்துவங்களுக்கும் சமமான இடம்,சம்ஸ்கிருதம், புத்தர், அனைவருக்கும் தாய், இந்தியாவின் காரியம் உலகத்தின் காரியம், அரவிந்தர், ஆன்மாவின் இறுதி வீடு, புனித புண்ணிய பூமி, விவேகானந்தர், எழுமின் விழிமின் நூல், ஏக்நாத்ஜி ரானடே, R. கோபாலன், தார்ன்டன், பாரத புழுதி காற்றை விட தூய்மை; காற்று தூய்மையை விட தூய்மை, அப்துல்லா வஸாஃப்

tags – பொன்னொளிர் ,பாரதம், 

LONDON CALLING (HINDUS) 19-7-2021 (Post No.9872)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9872

Date uploaded in London –19 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

19-7- 2021 MONDAY PROGRAMME as broadcast

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5 MTS

PRAYER – LONDON SINGER Mrs Harini Raghu, COMPOSITION BY LONDON DR A NARAYANAN

தோழிப்பாட்டு (PRAYER)

மயில் மீது  வருவானடி  தோழி

மலை மீது   நின்றானடி   தோழி    (பாடும்போது முதல் 2 அடிகளைத்திரும்பப்பாடவும்)                                                                                 

அவன் வஞ்சியரிருவர்  கொஞ்சிய நிலையில்

தஞ்சமடைந்தானடி தோழி  

தன்னையும் மறந்தானடி  தோழி

கார்த்திகைக் குமரிகள் கை வளர்ந்த வேலன்

வேதியர்கள்  போற்றும் ஞானசிவபாலன்

கருணை  விழியும் கனிவு  தோற்றமும்

கண்டவுடனே கரையும் குறையெலாம்

மயில் மீது  வருவானடி  தோழி

மலை மீது   நின்றானடி   தோழி

பன்னிருகை வேலன்

பார் வதி குமாரன்

பரமசிவபாலன்

பக்தபரிபாலன்

சித்தர்களின் நித்தன்

சிங்கார வேலன்

எந்த ஊருமவன் சொந்த ஊரே  

எந்த  நாடுமவன் சொந்த நாடே

குன்றிருப்பின்னது குமரன்  நாடே

மயில் மீது  வருவானடி  தோழி

மலை மீது   நின்றானடி   தோழி

DR A NARAYANAN, LONDON

நாராயணன்

Talk by B.KANNAN, DELHI on “அன்னையின் உருவில் இறைவனைக் காண்போம்!”- 14 mts

ABHANGAM BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT SAMARTHA  RAMADASA

– 14 MTS

ASHTAPATHI -23 BY LONDON SRI BALA SUBRAHMANYAN -7 mts

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -7

MANGALAM – 3 MTS

TOTAL TIME- APPR. 55 MINUTES

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS.

–subham–

tags- broadcast1972021

LONDON CALLING (TAMILS) 18-7-2021 (Post.9871)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9871

Date uploaded in London –19 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

LONDON CALLING TAMILS  18-7-2021

18-7-2021 SUNDAY PROGRAMME

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer MISS MAHISHA SRINIVAS, PARIS, FRANCE

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON Hampi Anjaneya Temple8 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND GROUP–  10 mts

***

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN,London

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL  by RANI SRINIVASAN

–25 MINUTES

***

TALK BY  SRI THIRUKOODAL MUKUNTHA RAJAN ON ALVARKAL  SARITHTHIRAM -15 MTS

DURATION-  Appr. 65 minutes 

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

 tags- broadcast18721

PLEASE JOIN US TODAY MONDAY 19-7-2021

19-7- 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5 MTS

PRAYER – Mrs Harini Raghu, COMPOSITION BY LONDON DR A NARAYANAN

Talk by B.KANNAN, DELHI on “அன்னையின் உருவில் இறைவனைக் காண்போம்!”- 14 mts

ABHANGAM BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT SAMARTHA  RAMADASA

– 14 MTS

ASHTAPATHI -23 BY LONDON SRI BALA SUBRAHMANYAN -7 mts

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -7

MANGALAM – 3 MTS

TOTAL TIME- APPR. 55 MINUTES

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS- PUBLICITY19721

உலக இந்து சமய செய்தி மடல் 18-7-2021 (Post No.9866)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9866

Date uploaded in London –18 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை JULY 18 -ஆம் தேதி —  ,2021


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN


 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN

tags- tamilhindu,

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

அமர்நாத் பனிலிங்க தரிசனம் டிவியில் நேரடி ஒளிபரப்பு



ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் இமயமலையில் உள்ள அமர்நாத் குகையில் ஆண்டு தோறும் ஜூன் – ஆகஸ்ட் மாதங்களில் பனி லிங்க வடிவில் சிவபெருமான் அருள்பாலித்து வருகிறார். இந்த பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் நாடு முழுதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் நலன் கருதி, இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் அமர்நாத் பனி லிங்க தரிசனம், பூஜை ஆகியவற்றில் ‘ஆன்லைன்’ வழியாக பக்தர்கள் பங்கேற்க, அமர்நாத் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.


‘பனி லிங்கத்துக்கான பூஜை செய்யவும், பிரசாதம் பெறவும் பக்தர்கள் ஆன்லைனில் தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.

‘கோவில் அர்ச்சகர், பக்தர்களின் பெயரில் பனி லிங்கத்துக்கு அர்ச்சனை செய்வார். தபால் வழியாக பக்தர்களின் வீட்டுக்கு பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்’ என, கோவில் வாரியம் அறிவித்தது.

இதையடுத்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘ஜியோ டிவி’ பனி லிங்கத்தை பக்தர்கள் நேரடியாக தரிசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.’ஜியோ டிவி’ செயலியில் இதற்கென தனி சேனல் துவக்கப்பட்டு, அமர்நாத் பனி லிங்கத்துக்கு நடக்கும் பூஜைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

XXX

கைலாசா நாட்டுக்கு ஐ.நா. சபை அங்கீகாரம்? நித்யானந்தா வீடியோவால் பரபரப்பு

இந்தியாவில்  பல வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார். அவர் ஒரு தீவை விலைக்கு வாங்கி கைலாசா என பெயர் சூட்டி இருப்பதாக தகவல் வெளியானது. சமூக வலைத்தளங்களில் அவர் தனது சீடர்களுடன் சத்சங்கம் மூலம் உரையாடி வருகிறார். அவரது சொற்பொழிவுகள் அடிக்கடி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அவர் தான் உருவாக்கிய கைலாசா நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெறும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்தன. 

கைலாசா நாட்டை யூனியன் பிரதேசமாக ஐ.நா.சபை அங்கீகாரம் வழங்கி இருப்பதாக அவரது பக்தர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிடும் பதிவுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான குழு கைலாசா நாட்டை அங்கீகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக நித்யானந்தாவும் வீடியோவில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- விவேகானந்தரும் விரும்பினார், யோகா நந்தரும் இயங்கினார், அரவிந்த்தரும் வாழ்வெல்லாம் அலறி துடித்து முயற்சித்தார். சதாசிவன் செய்து முடித்தார். ராமகிருஷ்ணன், விவேகானந்தர், யோகாநந்தர், அரவிந்தர், காஞ்சன் காடபத்ம ராமதாஸ், ரமண மகரிஷி போன்ற எல்லோரும் செய்த ஒரு கலெக்டிவ் முயற்சி. சதாசிவன் அருளால் இப்போது நித்யானந்தன் நிறைவேற்றி இருக்கிறார். இது உங்கள் வாழ்க்கையின் நோக்கம் அல்ல. மனித உயிர் வாழ்க்கையின் நோக்கம் அல்ல. உயிர் இனத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகின்றான்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார். 

XXXX

சர்வதேச சுற்றுலா மையமாகிறது அயோத்தி!

அயோத்தி: அயோத்தியில் சரயு நதியில் தீபாவளி பண்டிகை முதல், படகு சவாரி துவங்கும் என்றும், சர்வதேச தரத்தில் பிரமாண்ட விமான நிலையம் அமைக்கப்படும் என்றும், பிரதமர் மோடியிடம், உத்தர பிரதேச அரசு தாக்கல் செய்த அயோத்தி வளர்ச்சி திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி., மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, அங்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து அயோத்தியை சர்வதேச ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்ற, பல கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

அயோத்தி வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதல்வர் ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகளுடன், பிரதமர் மோடி சமீபத்தில் ஆய்வு செய்தார். அப்போது அயோத்தியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் அடங்கிய அறிக்கையை பிரதமரிடம் ஆதித்யநாத் சமர்ப்பித்தார்.


அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
* அயோத்தியில் ராமர் பெயரில் பிரமாண்டமான சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. அத்துடன், அயோத்தியில் ஓடும் சரயு நதியில் தீபாவளி பண்டிகை முதல், படகு சவாரியை துவக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

* ராமபிரான் 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்ததை நினைவுப்படுத்தும் வகையில், அயோத்தியில் அரசு – தனியார் பங்களிப்புடன் சரயு நதிக்கரையில், ‘ராமாயண் வனம்’ உருவாக்கப்பட உள்ளது

* மேலும், 1,200 ஏக்கரில் ‘வேதிக்’ நகரம் அமைக்கப்பட உள்ளது. அங்கு டில்லி சாணக்யா புரியில் உள்ளது போல், மாநில மற்றும் வெளிநாட்டு இல்லங்கள் அமைக்கப்பட உள்ளன

* உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையம் அமைக்கப்படுவதுடன், அயோத்தியில் தினமும் இரண்டு லட்சம்பக்தர்கள் வந்து தங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட உள்ளன

* ராமர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடக்கும் போது, அயோத்தியின் முகமே முற்றிலும் மாறியிருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

XXXXXXXXXXXXXXX

ஜகா‘ திரைப்பட போஸ்டர் விவகாரம்மன்னிப்பு கேட்டார் இயக்குனர்

சுவாமி சிவபெருமானை அவமதிக்கும் வகையில் வெளியான ‘ஜகா’ என்ற திரைப்பட போஸ்டருக்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அப்பட இயக்குனர் ஆர்.விஜயமுருகன் மன்னிப்பு கேட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக ஹிந்து கடவுள்களையும், மத நம்பிக்கை களையும் கேலி செய்யும் விதமாக சினிமா எடுத்து வருகின்றனர். தற்போது ஓம் டாக்கிஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் விஜயமுருகன், நடிகர் ‘ஆடுகளம்’ முருகதாஸ், சாய் பாஸ்கர் இசையில், விளம்பர வடிவமைப்பு ஜோசப் ஜாக்சன் ஆகியோர் வெளியிட்டுள்ள ‘ஜகா’ திரைப்பட போஸ்டரில் ஹிந்துக்கள் போற்றி வணங்கும் சிவபெருமானுக்கு முகக்கவசம், ஆக்சிஜன் சிலிண்டர் போன்றவைகளுடன் தோன்றியுள்ளார்.

இதற்கு ஹிந்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.சென்னை பாரத் முன்னணி நிறுவன தலைவர் சிவாஜி கூறியதாவது: ‘ஜகா’ என்ற திரைப்படத்தின் போஸ்டர் ஒட்டுமொத்த ஹிந்து மக்களின் மனதை காயப்படுத்தும். மத உணர்வை புண்படுத்தும். இந்திய இறையாண்மைக்கு எதிராக, மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குரோத எண்ணத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, சர்ச்சைக்குரிய போஸ்டரை வெளியிட்ட ஓம் டாக்கீஸ் நிறுவனம் உரிய விளக்கம் அளித்து, ஒட்டு மொத்த ஹிந்துக்கள், சிவ பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் பட நிறுவனம், தயாரிப்பாளர் ஆறுபடையான் மீது வழக்கு தொடரப்படும், என்றார்.பட போஸ்டருக்கு தொடர்ந்து பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததையடுத்து பட இயக்குனர் ஆர்.விஜயமுருகன் மன்னிப்பு கேட்டார்.

XXXX

கோவில்களை குறிவைத்து இடிப்பதா ? கோவையில் இந்து முன்னணியினர் போராட்டம்

கோவையில் இந்து கோவில்களை மட்டும் குறிவைத்து இடிப்பதாக மாநகராட்சியை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்த இந்து முன்னணியினர் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மாநகராட்சியினர் இந்து கோவில்களை குறிவைத்து இடிப்பதாக இந்து முன்னணியினர் குற்றம் சாட்டினர். இதனை எதிர்த்து டவுன்ஹால் பகுதியில் இந்து முன்னணி கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தன. ஆனால், இப்போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர். இதனையடுத்து, கோவை மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு, இந்து முன்னணி கட்சியை சேர்ந்தவர்கள் குவிந்தனர். அப்போது, மசூதிகளை இடிக்காமல் இந்து கோவில்களை மட்டும் மாநகராட்சி குறிவைத்து இடிப்பதாக முறையிட்டனர்.


இந்து முன்னணியனரை எதிர்த்து, எஸ்.டி.பி.ஐ.,யினரும் திரண்டால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. கூட்டத்தினரை கட்டுப்படுத்த, போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதாக  இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர்.

XXXXX

தத்வ நிர்ணய சதுஷ்டயம்  நூல் வெளியீட்டு  விழா

விழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டு சிவஶ்ரீ வீரட்டநாத சிவாசாரியார் திருமதி. பர்வதவர்த்தனீ தம்பதிகள் சதாபிஷேக வைபவத்தில், அகோர சிவாசாரியாரின் சைவசித்தாந்த சாத்திர நூல்களில் போஜராஜர் ஸத்யோஜோதி சிவாசாரியார் முதலிய மகான்களால் உரையெழுதப்பட்ட தத்வநிர்ணய சதுஷ்டயம் தொகுப்புநூல் வெளியிடப்பட்டது.

இந்நூலை சதாபிஷேக தம்பதிகளின் திருக்குமாரர் வடமொழிப்பேராசிரியர், டாக்டர் வீ. அபிராமசுந்தர சிவம் அவர்கள் தமிழுரையுடன் ஆக்கினார்.

பெங்களூர் வாழும்  கலைப்பயிற்சி   மையம் வேதாகமசம்ஸ்க்ருத பாடசாலையின் சார்பில் ஶ்ரீஶ்ரீஶ்ரீ குருஜியின் ஆதரவுடன் முதல்வர் சிவஶ்ரீ சுந்தரமூர்த்திசிவம் இந்நூலைப்பதிப்பித்தும் வெளியீட்டுவிழாவை நேர்த்தியாகவும் நிகழ்த்தினார்கள். நேரிலும், இணையவழியிலும் சிவாசாரியப்பெருமக்களும், ஆகம ஆர்வலர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முதல்பிரதியை ஆதிசைவகுலப்பிதாமகர் பெங்களூர் சிவஶ்ரீ சபேசசிவாசாரியார் வெளியிட, சிவபுரம் ஶ்ரீகுருநாதர் பெற்று மகிழ்ந்தார்கள்.

XXXX

விஸ்வ இந்து பரிஷத் தலைவராக ரவீந்திர நாராயண சிங் தேர்வு

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் முதல் பணியாற்றி வந்தவர், விஸ்ணு சதாசிவ கோக்ஜே (வயது 82). இவர் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்பியதால் புதிய தலைவர் தேர்வு நடந்தது

இதில் துணைத்தலைவராக இருந்த ரவீந்திர நாராயண சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகாரை சேர்ந்த இவர் எலும்பு மருத்துவ நிபுணர் ஆவார். இந்த துறையில் சிறந்த பணிக்காக பத்மஸ்ரீ விருதையும் இவர் பெற்றுள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத்தின் புதிய தலைவராக டாக்டர் ரவீந்திர நாராயண சிங் தேர்வு செய்யப்பட்ட தகவலை அமைப்பின் இணை பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதைப்போல அமைப்பின் தற்போதைய பொதுச்செயலாளரான மிலிந்த் பாரண்டே, மீண்டும் அந்த பொறுப்புக்கு தேர்வாகி இருப்பதாகவும் ஜெயின் கூறினார்.

xxxx

திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 12,415 பேர் சாமி தரிசனம்

திருப்பதி பாலாஜி வெங்கடேஸ்வரர்  கோவிலில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஜூலை 16 ஒரே நாளில் 12,415 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்றும்  ஒரே நாளில் ரூ.2.20 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளது என்றும்  திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN

நன்றி, வணக்கம்

XXXXXXXXXXXXX

news round up, 18july21,

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH 18-7-2021 (Post No.9865)

VHP PRESIDENT

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9865

Date uploaded in London –18 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Compiled from popular newspapers of India

Read by SUJATHA RENGANATHAN .

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

Read by SUJATHA RENGANATHAN .

XXX

Padma Shri awardee Rabindra Narain Singh elected as VHP president

The Vishva Hindu Parishad has elected Rabindra Narain Singh, an orthopaedic surgeon and a Padma Shri awardee, as its new president on Saturday. Singh replaced 82-year-old Vishnu Sadashiv Kokje, who has been in the post since April 2018.

“Kokje ji is now 82 years old. He wanted to be relieved of his responsibilities as the VHP president. The election has been conducted as per his wishes and our constitution,” VHP’s joint general secretary Surendra Jain said at a press conference.

Rabindra Narain Singh was the vice president of VHP. In 2010, he received Padma Shri for his contribution to the field of medical sciences. Elections were also held for the post of the general secretary and Milind Parande, the outfit’s current general secretary, was unanimously re-elected.

During the meeting, the outfit discussed the “condition of Hindus” in Haryana’s Mewat and issued a statement demanding that the state government must ensure “protection of Hindus” in the Muslim-dominated region.

Jain said Haryana Chief Minister Manohar Lal Khattar, after visiting Mewat last year, had announced that his government would bring a law against forced religious conversion, effectively implement the law against cow slaughter, constitute a Dharmada Board to look after the religious estate of Hindu-minority areas and set up a camp of paramilitary forces in Mewat district.

“It has been a year since his announcement, but nothing has yet been done so far,” the VHP leader said while appealing to the Haryana chief minister to act on his promises “to establish rule of law” in Mewat.

XXXX

Lucknow University to get new faculty on Shaivism

The Academic Council of Lucknow University has approved setting up of a new faculty by upgrading the status of Abhinavagupt Institute of Aesthetics and Shaiva Philosophy.

The council also approved new courses from next session. 

The Abhinavagupt Institute of Aesthetics and Shaiva Philosophy, named after the philosopher, mystic and aesthetician from Kashmir, was constituted in LU for research in Shaivism. 

Till now, it was an autonomous institute, but now it will have faculty status. The institute will have more power and resources for teaching and research. It will run a full-fledged paper on Shaiva Philosophy and Aesthetics in MA (Sanskrit) course and  conduct doctoral studies. 

This is LU’s eleventh faculty. Other faculties include arts, science, commerce, law, education, fine arts, engineering, Unani, ayurveda and yoga and alternative medicine. 

XXXX

748 acres deleted from records of Simhachalam Temple says the Inquiry team

The three-member inquiry committee constituted by the Special Commissioner of Endowments to probe irregularities in Simhachalam temple and MANSAS lands in Andhra Pradesh, has gathered evidence to prove that 748 acres belonging to Simhachalam temple were deleted from 22A of the records in 2016. The committee completed its inquiry into the temple lands  on Tuesday. It went to Vizianagaram on Wednesday to probe the issue of MANSAS lands.

The committee comprising Deputy Commissioner E Pushpavardhan,and two more members , visited Sri Varaha Lakshmi Narasimha Swamy temple in the morning and verified the land records.
Pushpavardhan told TNIE that there was a prima facie case even before they began inquiry into the temple lands. 

“We have gathered all the evidence with regard to irregularities in the land records. The deletion of lands from Section 22A, which prohibits sale and fresh registration, was done in 2016. Though the temple executive officer was not empowered to delete the lands from 22A, the then EO had done it,” Pushpavardhan said. 

“No constructions have been taken up in the said land and the entire land in question is located in Visakhapatnam district,’’ he said, adding that the inquiry went on smoothly as the land records of both Simhachalam temple and MANSAS were digitised.

xxxxxx

Drop one-child norm from draft population policy, VHP tells UP govt

Raising concern over the draft Uttar Pradesh population control bill released by the state law commission Friday, the Vishwa Hindu Parishad (VHP) has asked the panel to delete the one-child norm from the draft.

In a letter to the UP Law Commission, Alok Kumar, working president of the VHP, said they have read the draft of the UP Population (Control, Stabilization and Welfare) Bill, 2021 inviting suggestions for modification.

 “The preamble of the Bill states that this is a Bill (6) inter alia to stabilize the population and (ii) promotion of two child norm. The Vishva Hindu Parishad (VHP) agrees with both objects.” the letter says.

However, the VHP has raised objections to Sections of the bill that “incentivise public servants and others to have only one child in the family go well beyond the said objectives”.

The Uttar Pradesh government released the first draft of the proposed ‘UP Population (Control, Stabilization, and Welfare) Bill, 2021’ Friday and has invited suggestions from the public by 19 July.

The proposed law offers multiple incentives to families that follow the two-child norm. This includes two additional increments during service for government employees, subsidised purchase of plot or house, and 3 per cent increase in EPF.

There is more on offer for those who have just one child, including two additional increments and free healthcare for the child till he/she attains the age of 20 years. A single child will also be given preference for admission in all education institutions.

Special incentives for parents who have only two children, and restrictions from availing of government schemes for those who have three or more — these are among the provisions of the draft Uttar Pradesh population control bill released by the state law commission Friday.  

The draft bill proposes some stringent measures to restrict couples from having more than two children, and promises cheaper home loans and free education for voluntary sterilisation.

Those who follow the proposed two-child norm would be offered incentives like tax rebates. 

Xxx

Uttar Pradesh govt cancels Kanwar Yatra

Kanwar yatra is an annual pilgrimage of Shiva devotees, known as Kanwariyas, to Haridwar, Gaumukh and Gangotri in Uttarakhand to fetch Ganga waters to anoint lord Shiva lingams at Shiva Temples at their respective places.

On Friday, the Supreme court gave the state government time till Monday to reconsider its decision of going ahead with allowing the pilgrimage.

While asking the UP government to reconsider allowing even a symbolic physical yatra this year, the apex court on Friday had underlined that “the health of the citizenry of India and their right to ‘life’ are paramount”.

Meanwhile, the Centre, in reply to the court notice, said that the states, instead of allowing the Yatra, must make arrangements to supply Gangajal to devotees at designated locations.

The Uttarakhand government on Tuesday too suspended the Kanwar Yatra amid threats of a possible third wave of Covid-19.

XXX

ONE TON FLOWERS USED TO DECORATE THE FLORAL PALANQUIN in Balaji Temple

On the occasion of Anivara Asthanam, Pushpa Pallaki Seva took place with utmost religious fervour in Tirumala on Friday evening along the four Mada streets  .

Decorated with dazzling jewels, colourful silk vastrams, flanked by Sridevi and Bhudevi, Sri Malayappa Swamy took out a celestial ride to bless the devotees on this finely decked floral palanquin.

Varieties of flowers weighing about one ton are used to create this colourful palanquin by 15 florists for three days. The palanquin carried the images of Sri Rama, Sri Krishna and anjaneya Swamy which stood as a special attraction. 

TOTAL PILGRIMS WHO HAD DARSHAN ON 16th July was : 16,787

9,329 people had Tonsures

Hundi collection on that day was  Rs.1.40 Cr

XXXXX

Bonalu festivities in Telangana

The annual Ashada Bonalu festivities commenced at the Goddess Jagadamba Temple atop the Golconda Fort in Hyderabad on Sunday with the offering of Bonam in a decorated brass pot to the deity. Ministers A Indrakaran Reddy and Talasani Srinivas Yadav, and Hyderabad Deputy Mayor Srilatha Reddy presented silk robes to the Goddess on behalf of the Telangana State government

As part of the festival, a colourful procession was taken out from Langer Houz to the Golconda Fort.  Women in colourful robes carried the ‘bonam’ on their heads to the temple. 

Sri Ujjaini Mahankali Bonalu on July 25

The famous Sri Ujjaini Mahankali Bonalu celebrations at Secunderabad will be held on July 25 and in Hyderabad including Old City on August 1. The Telangana government gave the status of ‘State festival’ to Bonalu after the formation of the new State in June 2014.

Bonalu is celebrated to ward off diseases and usher in good health, peace and prosperity.

XXXXXX

THAT IS THE END OF NEWS FROM AKASA DHWANI

READ BY SUJATHA RENGANATHAN

PLEASE WAIT FOR TAMIL NEWS

tags-  hindunews, roundup, 1872021,