உலக இந்து சமய செய்தி மடல் 18-7-2021 (Post No.9866)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9866

Date uploaded in London –18 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை JULY 18 -ஆம் தேதி —  ,2021


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN


 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN

tags- tamilhindu,

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

அமர்நாத் பனிலிங்க தரிசனம் டிவியில் நேரடி ஒளிபரப்பு



ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் இமயமலையில் உள்ள அமர்நாத் குகையில் ஆண்டு தோறும் ஜூன் – ஆகஸ்ட் மாதங்களில் பனி லிங்க வடிவில் சிவபெருமான் அருள்பாலித்து வருகிறார். இந்த பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் நாடு முழுதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் நலன் கருதி, இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் அமர்நாத் பனி லிங்க தரிசனம், பூஜை ஆகியவற்றில் ‘ஆன்லைன்’ வழியாக பக்தர்கள் பங்கேற்க, அமர்நாத் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.


‘பனி லிங்கத்துக்கான பூஜை செய்யவும், பிரசாதம் பெறவும் பக்தர்கள் ஆன்லைனில் தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.

‘கோவில் அர்ச்சகர், பக்தர்களின் பெயரில் பனி லிங்கத்துக்கு அர்ச்சனை செய்வார். தபால் வழியாக பக்தர்களின் வீட்டுக்கு பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்’ என, கோவில் வாரியம் அறிவித்தது.

இதையடுத்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘ஜியோ டிவி’ பனி லிங்கத்தை பக்தர்கள் நேரடியாக தரிசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.’ஜியோ டிவி’ செயலியில் இதற்கென தனி சேனல் துவக்கப்பட்டு, அமர்நாத் பனி லிங்கத்துக்கு நடக்கும் பூஜைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

XXX

கைலாசா நாட்டுக்கு ஐ.நா. சபை அங்கீகாரம்? நித்யானந்தா வீடியோவால் பரபரப்பு

இந்தியாவில்  பல வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார். அவர் ஒரு தீவை விலைக்கு வாங்கி கைலாசா என பெயர் சூட்டி இருப்பதாக தகவல் வெளியானது. சமூக வலைத்தளங்களில் அவர் தனது சீடர்களுடன் சத்சங்கம் மூலம் உரையாடி வருகிறார். அவரது சொற்பொழிவுகள் அடிக்கடி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அவர் தான் உருவாக்கிய கைலாசா நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெறும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்தன. 

கைலாசா நாட்டை யூனியன் பிரதேசமாக ஐ.நா.சபை அங்கீகாரம் வழங்கி இருப்பதாக அவரது பக்தர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிடும் பதிவுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான குழு கைலாசா நாட்டை அங்கீகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக நித்யானந்தாவும் வீடியோவில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- விவேகானந்தரும் விரும்பினார், யோகா நந்தரும் இயங்கினார், அரவிந்த்தரும் வாழ்வெல்லாம் அலறி துடித்து முயற்சித்தார். சதாசிவன் செய்து முடித்தார். ராமகிருஷ்ணன், விவேகானந்தர், யோகாநந்தர், அரவிந்தர், காஞ்சன் காடபத்ம ராமதாஸ், ரமண மகரிஷி போன்ற எல்லோரும் செய்த ஒரு கலெக்டிவ் முயற்சி. சதாசிவன் அருளால் இப்போது நித்யானந்தன் நிறைவேற்றி இருக்கிறார். இது உங்கள் வாழ்க்கையின் நோக்கம் அல்ல. மனித உயிர் வாழ்க்கையின் நோக்கம் அல்ல. உயிர் இனத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகின்றான்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார். 

XXXX

சர்வதேச சுற்றுலா மையமாகிறது அயோத்தி!

அயோத்தி: அயோத்தியில் சரயு நதியில் தீபாவளி பண்டிகை முதல், படகு சவாரி துவங்கும் என்றும், சர்வதேச தரத்தில் பிரமாண்ட விமான நிலையம் அமைக்கப்படும் என்றும், பிரதமர் மோடியிடம், உத்தர பிரதேச அரசு தாக்கல் செய்த அயோத்தி வளர்ச்சி திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி., மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, அங்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து அயோத்தியை சர்வதேச ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்ற, பல கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

அயோத்தி வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதல்வர் ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகளுடன், பிரதமர் மோடி சமீபத்தில் ஆய்வு செய்தார். அப்போது அயோத்தியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் அடங்கிய அறிக்கையை பிரதமரிடம் ஆதித்யநாத் சமர்ப்பித்தார்.


அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
* அயோத்தியில் ராமர் பெயரில் பிரமாண்டமான சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. அத்துடன், அயோத்தியில் ஓடும் சரயு நதியில் தீபாவளி பண்டிகை முதல், படகு சவாரியை துவக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

* ராமபிரான் 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்ததை நினைவுப்படுத்தும் வகையில், அயோத்தியில் அரசு – தனியார் பங்களிப்புடன் சரயு நதிக்கரையில், ‘ராமாயண் வனம்’ உருவாக்கப்பட உள்ளது

* மேலும், 1,200 ஏக்கரில் ‘வேதிக்’ நகரம் அமைக்கப்பட உள்ளது. அங்கு டில்லி சாணக்யா புரியில் உள்ளது போல், மாநில மற்றும் வெளிநாட்டு இல்லங்கள் அமைக்கப்பட உள்ளன

* உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையம் அமைக்கப்படுவதுடன், அயோத்தியில் தினமும் இரண்டு லட்சம்பக்தர்கள் வந்து தங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட உள்ளன

* ராமர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடக்கும் போது, அயோத்தியின் முகமே முற்றிலும் மாறியிருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

XXXXXXXXXXXXXXX

ஜகா‘ திரைப்பட போஸ்டர் விவகாரம்மன்னிப்பு கேட்டார் இயக்குனர்

சுவாமி சிவபெருமானை அவமதிக்கும் வகையில் வெளியான ‘ஜகா’ என்ற திரைப்பட போஸ்டருக்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அப்பட இயக்குனர் ஆர்.விஜயமுருகன் மன்னிப்பு கேட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக ஹிந்து கடவுள்களையும், மத நம்பிக்கை களையும் கேலி செய்யும் விதமாக சினிமா எடுத்து வருகின்றனர். தற்போது ஓம் டாக்கிஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் விஜயமுருகன், நடிகர் ‘ஆடுகளம்’ முருகதாஸ், சாய் பாஸ்கர் இசையில், விளம்பர வடிவமைப்பு ஜோசப் ஜாக்சன் ஆகியோர் வெளியிட்டுள்ள ‘ஜகா’ திரைப்பட போஸ்டரில் ஹிந்துக்கள் போற்றி வணங்கும் சிவபெருமானுக்கு முகக்கவசம், ஆக்சிஜன் சிலிண்டர் போன்றவைகளுடன் தோன்றியுள்ளார்.

இதற்கு ஹிந்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.சென்னை பாரத் முன்னணி நிறுவன தலைவர் சிவாஜி கூறியதாவது: ‘ஜகா’ என்ற திரைப்படத்தின் போஸ்டர் ஒட்டுமொத்த ஹிந்து மக்களின் மனதை காயப்படுத்தும். மத உணர்வை புண்படுத்தும். இந்திய இறையாண்மைக்கு எதிராக, மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குரோத எண்ணத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, சர்ச்சைக்குரிய போஸ்டரை வெளியிட்ட ஓம் டாக்கீஸ் நிறுவனம் உரிய விளக்கம் அளித்து, ஒட்டு மொத்த ஹிந்துக்கள், சிவ பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் பட நிறுவனம், தயாரிப்பாளர் ஆறுபடையான் மீது வழக்கு தொடரப்படும், என்றார்.பட போஸ்டருக்கு தொடர்ந்து பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததையடுத்து பட இயக்குனர் ஆர்.விஜயமுருகன் மன்னிப்பு கேட்டார்.

XXXX

கோவில்களை குறிவைத்து இடிப்பதா ? கோவையில் இந்து முன்னணியினர் போராட்டம்

கோவையில் இந்து கோவில்களை மட்டும் குறிவைத்து இடிப்பதாக மாநகராட்சியை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்த இந்து முன்னணியினர் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மாநகராட்சியினர் இந்து கோவில்களை குறிவைத்து இடிப்பதாக இந்து முன்னணியினர் குற்றம் சாட்டினர். இதனை எதிர்த்து டவுன்ஹால் பகுதியில் இந்து முன்னணி கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தன. ஆனால், இப்போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர். இதனையடுத்து, கோவை மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு, இந்து முன்னணி கட்சியை சேர்ந்தவர்கள் குவிந்தனர். அப்போது, மசூதிகளை இடிக்காமல் இந்து கோவில்களை மட்டும் மாநகராட்சி குறிவைத்து இடிப்பதாக முறையிட்டனர்.


இந்து முன்னணியனரை எதிர்த்து, எஸ்.டி.பி.ஐ.,யினரும் திரண்டால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. கூட்டத்தினரை கட்டுப்படுத்த, போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதாக  இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர்.

XXXXX

தத்வ நிர்ணய சதுஷ்டயம்  நூல் வெளியீட்டு  விழா

விழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டு சிவஶ்ரீ வீரட்டநாத சிவாசாரியார் திருமதி. பர்வதவர்த்தனீ தம்பதிகள் சதாபிஷேக வைபவத்தில், அகோர சிவாசாரியாரின் சைவசித்தாந்த சாத்திர நூல்களில் போஜராஜர் ஸத்யோஜோதி சிவாசாரியார் முதலிய மகான்களால் உரையெழுதப்பட்ட தத்வநிர்ணய சதுஷ்டயம் தொகுப்புநூல் வெளியிடப்பட்டது.

இந்நூலை சதாபிஷேக தம்பதிகளின் திருக்குமாரர் வடமொழிப்பேராசிரியர், டாக்டர் வீ. அபிராமசுந்தர சிவம் அவர்கள் தமிழுரையுடன் ஆக்கினார்.

பெங்களூர் வாழும்  கலைப்பயிற்சி   மையம் வேதாகமசம்ஸ்க்ருத பாடசாலையின் சார்பில் ஶ்ரீஶ்ரீஶ்ரீ குருஜியின் ஆதரவுடன் முதல்வர் சிவஶ்ரீ சுந்தரமூர்த்திசிவம் இந்நூலைப்பதிப்பித்தும் வெளியீட்டுவிழாவை நேர்த்தியாகவும் நிகழ்த்தினார்கள். நேரிலும், இணையவழியிலும் சிவாசாரியப்பெருமக்களும், ஆகம ஆர்வலர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முதல்பிரதியை ஆதிசைவகுலப்பிதாமகர் பெங்களூர் சிவஶ்ரீ சபேசசிவாசாரியார் வெளியிட, சிவபுரம் ஶ்ரீகுருநாதர் பெற்று மகிழ்ந்தார்கள்.

XXXX

விஸ்வ இந்து பரிஷத் தலைவராக ரவீந்திர நாராயண சிங் தேர்வு

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் முதல் பணியாற்றி வந்தவர், விஸ்ணு சதாசிவ கோக்ஜே (வயது 82). இவர் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்பியதால் புதிய தலைவர் தேர்வு நடந்தது

இதில் துணைத்தலைவராக இருந்த ரவீந்திர நாராயண சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகாரை சேர்ந்த இவர் எலும்பு மருத்துவ நிபுணர் ஆவார். இந்த துறையில் சிறந்த பணிக்காக பத்மஸ்ரீ விருதையும் இவர் பெற்றுள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத்தின் புதிய தலைவராக டாக்டர் ரவீந்திர நாராயண சிங் தேர்வு செய்யப்பட்ட தகவலை அமைப்பின் இணை பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதைப்போல அமைப்பின் தற்போதைய பொதுச்செயலாளரான மிலிந்த் பாரண்டே, மீண்டும் அந்த பொறுப்புக்கு தேர்வாகி இருப்பதாகவும் ஜெயின் கூறினார்.

xxxx

திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 12,415 பேர் சாமி தரிசனம்

திருப்பதி பாலாஜி வெங்கடேஸ்வரர்  கோவிலில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஜூலை 16 ஒரே நாளில் 12,415 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்றும்  ஒரே நாளில் ரூ.2.20 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளது என்றும்  திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN

நன்றி, வணக்கம்

XXXXXXXXXXXXX

news round up, 18july21,

உலக இந்து சமய செய்தி மடல் 4-7-2021 (Post.9815)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9815

Date uploaded in London –4 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை JULY 4-ஆம் தேதி —  ,2021


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN


 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXX

ராம ஜென்ம பூமி நில பேரத்தில் ஊழல் இல்லை – சுவாமி கோவிந்த தேவ கிரி அறிவிப்பு

ராம ஜென்ம பூமி கோவில் வளாகத்துக்கு நிலம் வாங்கியதில் ஊழல் இருப்பதாக சில கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன. அவர்களை, ஆதாரம் இருந்தால் வழக்கு தொடருங்களேன் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் சவால் விட்டது. இதுவரை எந்த அரசியல் கட்சியும் கோர்ட்டில்  ராம ஜென்ம பூமி அறக்கட்டளைக்கு எதிராக வழக்கு தொடரவில்லை

இதற்கிடையில் ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ர ட்ரஸ்ட் பொருளாளர் சுவாமி கோவிந்த தேவ் கிரி வியாழக்கிழமை நிருபர்களைச் சந்தித்தார்.; கடந்த மூன்று நாட்களில் நில பேரம் தொடர்பான எல்லா பத்திரங்களையும் நுணுகி ஆராய்ந்ததாகவும் எந்த ஊழலும் நடக்கவில்லை என்பது உறுதியானது என்றும் கூறினார். இருந்தபோதிலும் எல்லா நடவடிக்கைகளும் பகிரங்கமாக நடத்தப்படும் என்றார் தன்னுடன் மேலும் இரண்டு ட்ரஸ்ட் மெம்பர்களையும் வைத்துக்கொண்டு மூன்று நாட்களுக்கு பத்திரங்களை ஆராய்ந்ததாகவும் ஊழல் புகார் சொன்னவர்கள் ஆதாரம் இல்லாமல் பேசி இருக்கின்றனர் என்றும் சொன்னார்.

புகார் கொடுத்தவர்கள் நாங்கள் கொடுத்த விலையைவிட குறைவான விலையில் நிலம் வாங்கித் தந்தால் அவர்களுக்கு என்றென்றும் நன்றிக கடன்பட்டவர்களாக இருப்போம் என்றும் சுவாமி கோவிந்த தேவ் கிரி கூறினார்

XXXX

வேறு ஜாதி திருமணத்திற்கு தடை: காஷ்மீர் சீக்கியர்கள் கோரிக்கை

ஜம்மு – காஷ்மீரில், வேறு ஜாதி திருமணங்களுக்கு தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என, சீக்கியர்கள் கோரியுள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரில், சீக்கிய மதத்தை சேர்ந்த நான்கு பெண்கள், சமீபத்தில் முஸ்லிமாக கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், சீக்கிய ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜக்மோகன் சிங் ரெய்னா, ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

ஜம்மு – காஷ்மீரில் மத மாற்ற சம்பவங்கள் தொடர்வதால், மதமாற்ற தடுப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதேபோல் இங்கு, வேறு ஜாதியினரை திருமணம் செய்து கொள்வதை தடுக்கவும் சட்டம் இயற்ற வேண்டும். இதுபோன்ற சட்டங்கள், மத மற்றும் இன நம்பிக்கை உள்ளோரை காப்பாற்றுவதாக அமையும். இவ்வாறு, அவர் கூறினார்.

காஷ்மீரில் நடந்த கட்டாய மத மாற்றக் கல்யாணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஜம்மு காஸ்மீர் மற்றும் டில்லியிலுள்ள சீக்கியர்கள் பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சீக்கிய மதத் தலைவர்களும் பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களும் அடங்கிய குழு மத்திய உட்துறை அமைச்சர் அமித் ஷா, கிஷன் ரெட்டி ஆகியோரைச் சந்தித்து மனுவும் கொடுத்தனர்.

XXX

ராம்தேவ் பேசியது என்ன? விபரம் கேட்கிறது கோர்ட்!

யோகா குரு ராம் தேவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் சில நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது

அலோபதி மருத்துவத்துக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, ‘ராம்தேவ் பேசியது தொடர்பான உண்மையான முழு பதிவை தாக்கல் செய்ய வேண்டும்’ எங்கே’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

யோகா குருவான பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தார். அவர் மீது, இந்திய மருத்துவர் சங்கத்தின் பல கிளைகள் சார்பில் பீஹார், சத்தீஸ்கர் என, பல மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.



 

இந்த வழக்குகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, டில்லிக்கு மாற்றக்கோரியும், அந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க தடை கோரியும், ராம்தேவ் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது.’ராம்தேவ் பேசியது தான் என்ன; பேச்சின் முழு பதிவை தாக்கல் செய்ய வேண்டும்’ என, அமர்வு குறிப்பிட்டது. நாளை ஜூலை-5ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

XXXX

நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

சொந்தமாக கோயில் கட்டி சிறப்பாக கும்பாபிஷேகம் செய்து முடித்திருக்கிறார் நடிகர் அர்ஜூன்.

நடிகர் அர்ஜுன் சென்னை போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டி இருக்கிறார். அவருக்கு சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவு உள்ள தோட்டத்தில் ஒரு ஏக்கரில் இந்த கோவிலை கட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் கொய்ரா என்ற கிராமத்தில் 200 டன் எடை கொண்ட ஒரே கல்லில் 28 அடி உயரம் 17 அடி அகலத்தில் ஆஞ்சநேயர் உட்கார்ந்து இருப்பது போன்று சிலையை வடித்து, 22 சக்கரங்கள் கொண்ட ராட்சத டிரக்கில் ஏற்றி கெருகம்பாக்கத்துக்கு கொண்டு வந்தனர்.

சில விஷேச பூஜைகள் நத்தப்பட்டபின்னர்  கடந்த சில நாட்களுக்கு  கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக குறிப்பிட்ட சிலரை மட்டுமே அழைத்த அர்ஜுன், தனது யூ-டியூப் சேனல் மூலம் நேரடி ஒளிப்பரப்பை செய்தார். பின்னர் அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி திருமதி துர்கா ஸ்டாலினும் கும்பாபிஷகத்தில் கலந்து கொண்டார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே ராகவேந்திரர் கோவிலை கட்டி உள்ளார்.

நடிகர் அர்ஜூனும் சென்னை போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டி இருக்கிறார்.

XXXX

2 மாதங்களுக்கு பிறகு வழிபாட்டுக்கு அனுமதி: திருத்தணி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் 63 நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருக்கோவில் மலை மேல் அமைந்துள்ளது. இந்த கோவில் தமிழக அரசின் கொரோனா கால ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி மூடப்பட்டது. ஆனாலும் தமிழக அரசின் உத்தரவின் பேரில், திருக்கோவிலில் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெற்று வந்தது.

தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் குறைந்து வருவதை முன்னிட்டு, முதற்கட்டமாக 4 மாவட்டங்களில் கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளித்தது., திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவில் முழுவதும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்பணி செய்யப்பட்டது.

காலை 6 மணி முதல் இந்த கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்ய வந்தனர். 63 நாட்கள் கழித்து முருகப்பெருமானின் தரிசனத்தைக் காண பக்தர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

XXXXXX

இதோ தினமலர் நாளேட்டிலிருந்து ஒரு செய்தி

சத்குருவை மீண்டும் வம்பிழுத்த அமைச்சர்; டுவிட்டர் பதிவு தூசு தட்டிவருணனை

ஈஷா நிறுவனர் சத்குரு, ஆறு ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட, ‘மண்புழு ஓர் ஹிந்து’ என்ற டுவீட்டை தற்போது பகிர்ந்து, கேலியாக பதிலளித்து, அவரை வம்பிழுத்துள்ளார், தமிழக நிதியமைச்சர் தியாகராஜன்.

கடந்த 2015ம் ஆண்டு, சத்குரு டுவிட்டரில், ‘ஹிந்து என்பது புவியியல் அடையாளம். ஒரு யானை ஆப்ரிக்காவில் இருந்தால், அது ஆப்ரிக்கன். இந்த நிலத்தில் (இந்தியா) ஒரு மண் புழு இருந்தால், அது ஹிந்து’ என, பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவை தற்போது பகிர்ந்து, பதிலளித்துள்ள அமைச்சர் தியாகராஜன், ‘ஆப்ரிக்கா ஒரு கண்டம், இந்தியா ஒரு நாடு, குடியரசு (நிலம் என்பது இங்கு இந்தியாவைக் குறிக்கிறது).

இந்து என்பது மதம், நம்பிக்கை. யானை என்பது முதுகெலும்புள்ள பாலுாட்டி, மண்புழு முதுகெலும்பற்றது, நிலத்தில் வாழக்கூடியது. அதுபோல, ‘சார்லடன்’ என்பதற்கு, தன்னிடம் இல்லாத சிறப்பு அறிவையோ, திறமையையோ இருப்பதாக போலியாகக் கூறிக்கொள்ளும் பகட்டுக்காரர் எனப் பொருள். பன்முக பகட்டுக்காரர்’ என, குறிப்பிட்டுள்ளார் தியாகராஜன்.



தியாகராஜன் அமைச்சராகப் பொறுப்பேற்ற புதிதில், சத்குருவை தொடர்ந்து விமர்சித்து வந்தார். திடீரென சில வாரங்கள் அவரை விமர்சிக்காமல் அமைதி காத்தார். தற்போது மீண்டும், பழைய, அதுவும் ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய டுவிட்டை தோண்டி எடுத்து, விமர்சித்து வம்பிழுத்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், கோவாவை விமர்சித்தது தொடர்பாக, அமைச்சர் தியாகராஜனுக்கும், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனுக்கும், டுவிட்டரில், ‘வார்த்தைப்போர்’ வெடித்தது. அப்போது, ‘பிறவிப் பொய்யர்’ என வானதியை விமர்சித்தார். தற்போது சத்குருவை, ‘பன்முக பகட்டுக்காரர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

XXXX

சித்ர கூடத்தில் முக்கிய ஆர். எஸ். எஸ். கூட்டம்

ராமாயணப் புகழ் சித்ரகூடம் மத்திய பிரதேசத்தில் உள்ளது.அங்கு ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் முக்கியக் கூட்டம் ஜூலை 9ம் தேதி முதல் ஐந்து நாட் களுக்கு நடைபெற உள்ளது.

இது அகில பாரதீய பிரா ந்த  பிரச்சாரகர்  கூட்டம். இதில் ஆர்.எஸ். எஸ். தலைவர்கள் நாட்டை எதிநோக்கியுள்ள முக்கிய பிரச்சனைகளை அலசி ஆராய்வார்கள். அருகிலுள்ள உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில முக்கிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு மாநில சட்ட சபைத்  தேர்தல் நடைபெற உள்ளது. உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்ய நாத் அரசு எதிர்நோக்கும் பிரச்சனைகளை கூட்டம் விவாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN

நன்றி, வணக்கம்

 tags- Tamil Hindu, News round up, 472021,