பொறுமைக்கு உதாரணம் பூமாதேவி – தமிழன் கண்ட உண்மை (Post No.10,575)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,575

Date uploaded in London – –    18 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை 11

பொறுமைக்கு உதாரணம் பூமாதேவி – தமிழன் கண்ட உண்மை

PATIENCE AND EARTH

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப்  பொறுத்தல் தலை –குறள் 151

அதர்வண வேத பாடல் / மந்திரம் 28 வரை கண்டோம். 63 மந்திரங்கள் உள்ள இந்த துதியில் இதோ 29-ஆவது மந்திரம் :-

மந்திரம் 29

விம்ருக்வரீம் ப்ருதிவீ மா வதாமிம் க்ஷமாம் பூமிக்கு ப்ரஹ்மணா வாவ்ருத்தானாம்

ஊர்ஜம் புஷ்டம் பிப்ரதிம்மன்னபாகம்  க்ருதம் த்வாபி  நி ஷீதேம பூமே -29

பொருள்

பொறுமையின் சின்னமே பூமியே! தூய்மை செய்பவளே! ஆன்மீக பலத்தால் வலு அடைபவளே ! சக்தி, வளம் ஆகியன உடையவளே ,  உணவையும் நெய் யையும் உடையவளே! உன் மீது உட்கார்ந்து ஓய்வு எடுக்கலாமா? 

இந்த மந்திரத்தில் பூமியின் பொறுமை போற்றப்படுகிறது. இந்த அற்புத விஷயத்தை இமயம் முதல் குமரி வரையுள்ள புலவர்கள் பாடியுள்ளனர். இது இந்துக்களின் சொந்தக் கண்டுபிடிப்பு.

எத்தனை வெட்டுகிறோம், எத்தனை தோண்டுகிறோம்; அப்படியும் அம்மாவை எட்டி உதயும் குழந்தை போல எங்களை அணைக்கிறாயே என்று இந்துக்கள் வியக்கின்றனர். ஆகையால் மீண்டும் மீண்டும் கும்பிடு போடுகின்றனர்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப்  பொறுத்தல் தலை –குறள் 151

பரிபாடல் என்னும் சங்க இலக்கிய நூலிலும் (2-55) இதே கருத்து வருகிறது

‘நோன்மை நாடின் இருநிலம் யாவர்க்கும்’ (உன்னுடைய பொறுமை நிலத்தைப் போன்றது)

சம்ஸ்க்ருதத்தில் எண்ணற்ற இடங்களில் வருகிறது

ரகு வம்சம் (18-9) என்னும் காவியத்தில் காளிதாசனும் க்ஷமா என்று பூமியைக் குறிப்பிடுகிறான்

XXX

WATER AND PURITY

மந்திரம் 30

சுத்தா ந ஆபஸ்தன்வே க்ஷரந்து ந யோ னஹ ஸேதுரப்ரியே தம் நி தத்மஹ

பவித்ரேண ப்ருதிவி மோது புனாமி –30

சென்ற பாட்டில் உள்ளது போலவே இங்கும் தூய்மை போற்றப்படுகிறது

  எங்கள் உடல் சுத்தம் டைய தூய நதி நீர் பெருக்கெடுக்கட்டும். எங் களை ஆக்கிரமிக்க நினைப்போர் விஷயத்தில் வாளாவிருக்க மாட்டோம். நான் என்னையும் சுத்தம் செய்து கொள்கிறேன்

இந்துக்களின் வாழ்வில் நீர் என்பது பிறப்பு முதல் இறப்புவரை தொடர்புடையது. அதை ரிக் வேதமும் மீண்டும் மீண்டும் விதந்து ஓதுகிறது ; ஆகையால் அவர்கள் தினமும் குளிக்கும் வெப்ப மண்டலத்தைச் TROPICAL zone சேர்ந்தவர்களே; குளிர்ப் பிரதேசத்திலிருந்து வந்தவர்கள் இல்லை.

Xxxx

STUMBLING BLOCKS

மந்திரம்/ பாடல் 31

யாஸ்தே ப்ராசீஹி ப்ரதிசோ யா உதீசிர் யாஸ்தே பூமி அதராத் யாஸ்ச பஸ்யாத்

ஸ்யோநாஸ்தா மஹ்யம் சரதே பவந்து மா நி  பப்தம் புவனே நிஸ்ரியாணஹ –31

பொருள்

உன்னுடைய கிழக்கு திசையில் வசிப்போரும் , வடக்கு, தெற்கு, மேற்கு திசைகளில் வசிப்போரும்

என்னிடம் இனிமை பாராட்டட்டும். அங்கு நான் இன்பமாக பயணிப்பேன் ஆகுக; இந்த உலகில் நான் வாழும் காலம் வரை தடுமாறக்கூடாது”.

இது மிகவும் பொருளுள்ள பாடல். கவச மந்திரங்களை போல நான்கு திசைகளில் இருந்தும் நன்மையே வந்தெய்துக என்று வேண்டிவிட்டு, ‘தடுமாறக்கூடாது என்று சொல்லுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

1. இவ்வாறு நான் நாலு திசையிலும் செல்லும்போது உடல் ஆரோக்கியம் இருக்க வேண்டும்

2. உள்ளத்தில், செய்கையில், சொல்லில் தடுமாறக்கூடாது. அதாவது திரிகரண சுத்தி; மனம், மொழி, மெய் மூன்றிலும் தூய்மை இருக்க அருள்வாயாகுக. ஏற்கனவே சொன்ன தடுமாறக் கூடாது என்ற பதங்கள் மீண்டும் வருவதைக் கருத்திற்கொள்ள வேண்டும். ஒரு முறை, உடல் தடு மாற்றத்தையும் இரண்டாம் முறை, உள்ளது தடுமாற்றையும் மனதிற் கொண்டு பாடியிருப்பார் போலும் !

இதில் இன்னொரு சுவையான மொழி இயல் LINGUISTICS MATTER  விஷயமும் வருகிறது. பிராமணர்கள் தினமும் மூன்று முறை  செய்யும்  சந்தியா வந்தன மந்திரத்தில் அவர்கள் 4 திசைகளையும் நோக்கி மந்திரங்களைச் சொல்லுவார்கள்.அதிலும் பிராச்யை , தக்ஷிணாயை, பிரதீச்யை, உதீச்யை என்றே சொல்லி நமஸ்கரிக்கின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்து திசை வழிபாடு இருக்கிறது. அதுமட்டுமல்ல ,

புறநானூற்றில் கூடலூர்க் கிழார் பாடிய அற்புதப் பாடல் வருகிறது (புறம் 229); சேர மன்னன் மாந்தரஞ் சேரல் இறக்கப்போவதை முன் கூட்டியே அறிவித்தது ஒரு எரி கல் . அதில் ‘பிராச்யை’ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லை ‘பாசி என்றும்’ உதீச்யை என்ற சொல்லை ‘ஊசி’ என்றும் தமிழ் மயமாக்கியது வியக்கத்தக்க ஒன்று. கூடலூர்க் கிழார் சம்ஸ்க்ருத மன்னன்!!

அவர் தமிழ்ப்படுத்தினாலும் அது மற்றவர்களுக்கும் புரிந்து இருப்பது இமயம் முதல் குமரி வரை சம்ஸ்க்ருதம் புழங்கியதைக் காட்டுகிறது. மேலும் இதே பாட்டில் பங்குனி மாதம், மேஷராசி முதலிய விஷயங்களும் வருவதால் யவனர்களிடமிருந்து இந்துக்கள், நாள் கிழமைகளை கற்றுக்கொண்டனர் என்ற பொய்மை வாதம் தவிடு பொ டி ஆகிறது.

XXXX

பாடல் 32

மா நஹ பஸ்சான்மா  புரஸ்தான்னுதிஷ்டா மோத்தராத்தராதுத

ஸ்வஸ்தி பூமே நோ பவ மா விதன் பரிபந்தினோ வரீயோ யாவயா வதம் –32

பொருள்

மேற்கு திசையில் இருந்தோ கிழக்கு திசையில் இருந்தோ எங்களைத் தள்ளாதே; வடக்கு, தெற்கு திசையில் இருந்தோ எங்களைத் தள்ளாதே”.

பூமாதேவியே எங்களிடம் கருணை காட்டு; வழிப்பறி செய்யும் கொள்ளையர் எங்களைக் காணாமல் போகட்டும்; அதி பயங்கர ஆயுதங்களை எங்களிடமிருந்து தொலைவில் வைப்பாயாகுக –32

கிட்டத்தட்ட சென்ற பாடல் போன்றதே. திசைகளைத் தவிர வழிப்பறி கொள்ளையரும் வருகின்றனர் இது பழங்கால இந்தியாவின் நிலையைக் காட்டுகிறது மஹாபாரதத்தில் தமயந்தி சென்ற வழியில் கொள்ளையர் நடத்திய தாக்குதல் விரிவாக உள்ளது. சங்கத் தமிழ் நூல்களில் வழிப்பறி கொள்ளையர் வருகின்றனர். இப்போதும் கடற்கொள்ளையர்கள் கப்பல்களைக் கடத்திச் சென்று கொள்ளை அடிப்பதை பத்திரிக்கையில் படிக்கிறோம்.; ஆயுதமற்ற அமைதியான சமுதாயத்தை வேண்டுவதும் இப்பாடலின் அச்சிறப்பே.

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் என்று பாரதிதாசன் பாடினார் . காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் எழுதிய ஸம்ஸ்க்ருதக் கவிதையை எம்.எஸ். சுப்புலட்சுமி, ஐக்கிய நாடுகள் சபையில் பாடியதால் அது உலகம் முழுதும் ஒலிபரப்பாகியது . உலக நட்புடன் துவங்கும் அந்த மைத்ரீம் பஜத பாடல் யுத்தம் த்யஜத   என்ற வரிகளுடன் முடிகிறது . ‘போர் செய்வதைக் கைவிடுங்கள்’ என்ற அவ்வரிகளின் SOURCE ‘மூலம்’ வேதத்தில் உள்ளது. அதர்வண வேதத்தில் ஆயுதங்கள் தொலைவில் ஒழியட்டும் என்ற வரிகள் உள்ளன..

இமயம் முதல் குமரி வரை நம் சிந்தனை ஒன்றே.

TO BE CONTINUED…………………

TAGS- பூமி, பொறுமை, அகழ்வாரை , பூமிஸூக்தம்-11

ஆதி சங்கரரின் சுப்ரமண்ய புஜங்கம் (Post.10,574)

WRITTEN BY DR. A. NARAYANAN, LONDON

Post No. 10,574

Date uploaded in London – –   18 JANUARY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆதி சங்கரரின் சுப்ரமண்ய புஜங்கம்

                                                                 ( தமிழாக்கம்)

Translated into Tamil by Dr A Narayanan , London, UK

                                 (ஆதி சங்கர பகவத் பாதர் திருவடிகளே சரணம்)

நலம் தர வேண்டுவோமோ  நான்முகனும்

இந்திராதி தேவர்கள்  நாடிப்போற்றும் மலை

போன்ற இடையூறுகளைக்  களைய கணபதி

எனும் ஆனைமுகம் கொண்ட பால சிங்கனே                    1

சொல்லும் பொருளும் அறியாதோன் இயற்றவோ

செய்யுளும் உரை நடையும் இயலான் நாவிலோ

செந்தில் முருகன் வீற்றிருக்க வருமோ வியப்பாக

சொல்லும் பொருளும் இணைந்த கவிதை                            2

மலை மீதமர்ந்தோன் மறையுள் மறைந்தோன்

மனதைக் கவர்ந்தோன் சித்தத்தில் விரிந்தோன்

ஓதும் வேதத்துட்பொருளோனான முருகனும் பரம 

சிவபாலனுமான லோகபாலனைத் துதிக்கிறேன்               3 

முறையிட்டு வருவோரை  பிறவிக்கடல்

கரை சேரவே செந்தூர் கடலோரம் கோயில்

கொண்ட சக்திக் குமரனே புனிதனான

உன் சரணையடைகின்றேன்                                                       4

ஓங்கி எழும் அலைகள் கரை மோதி

உரு த்தெரியாப் போவது காட்டுவதோ

பெருந்துயரும் மறையும் கோயிலில்

செந்தூரான் கழலடியே கரையானதாலே                                5

கந்தமா மலை முகட்டில் பந்தமாய்  நின்ற

கந்தனை ஏறி வந்து அடி பணிவோர் வாழ்வு

உயர்வற உயர்நலமருளும் அறுமுகனை

அயருறா அனவரதமும் துதிப்பேனே                                      6

இன்னல்கள் யாவும் ஈடேறும் கடற்கரையில்

சென்னிய முனிவர்களுக்குகந்த கந்தம்

கமழும் சுகந்த மலைக்குகையில் ஒளி வீசும்

குகன் கழலடி பணிவோம்                                                         7

மாணிக்கம் பதித்தப் பட்டு மஞ்சத்தில் வீற்று

வேண்டுவதெல்லாம் ஈன்றிடும் தேவர்களின்

தெய்வ நாயகனாய் ஆயிரம் ஆதவன் போல்

ஒளியூரும் கார்த்திகேயனே நினைவாகிறான்                    8

செந்தாமரைக் கழல்களீணைந்த சதங்கைகள்

அழகும் அவையுரைத்தெழுப்பும் அமிருத தாரை

ஒலியில் சித்தம் கவரும் நித்தன் பத கமலத்தில்

மனம் துவளும் வண்டாய் மகிழ்வேனே                              9



பொன் வண்ண ஆடையும் பசும்

பொன் பட்டியும் இடை தழுவிய

மேகலையின் கிங்கிணி ஒலியில்

கண் கூசக் காட்சி தரும் கந்தனே                                      10

கழலடிகள் பற்றுமடியார்களை காக்கும்

கந்தனே தாரகசூரனை வதைக்க வேட்டுவ

மன்னனின் வார்குழல் வஞ்சி வள்ளி குங்கு

மப்பூத்தோய்ந்த மார்பகமிருகத்தழுவ செந்

தோளனான செந்திலோனைப் பணிகிறேன்                 11

பிரமனைத் தண்டித்துலகம் படைத்த கரங்களே

போர் வாரணங்களை வதைத்துப் பகைவரையழிக்க

வாசவனுக்கு வலமாயிருந்துலகம் காத்த

வலிவான கரங்களாவதால் சரணடைகிறேன்               12

முகில் காணா சரத் கால வானில் ஆறு

முழு மதிகளாய் மாசிலா ஒளியோனாய்

ஆறு சந்திரங்களுக்கொப்பானவன்

ஆறு முகங்களிணைந்த கந்தனே                                      13

புன்னகை பொழியும் மலர் தாமரையொத்த 

ஆறுமுகங்களில் பொன் வண்டுக்கூட்டங்களய்

ஒளிரும்பார்வையும் கொவ்வைப்பழ உதடொடு

ஒழுகும் அழகன் ஆறுமுகனையே பணிகிறேன்            14

கருணையே வடிவான கந்தனே!

காதுவரை நீண்டகன்ற பன்னிரண்டு

கண்களின் கனிந்த பார்வையால் கழலடி

பணிவோரை காண உனக்கென்ன தீங்கு                        15

அழகே வடிவாய் அரன் அங்கத்தினிற் தோன்றி

ஆறு முறை உச்சி முகர்ந்து அரனே ஆசி கூறி

ஆறு முகங்களில் அகமகிழ ஒளி வீசும் கிரீடங்கள்

அலங்கரித்த உலகைக்காப்போனைப் பணிகிறேன்   16

பொங்கும் மேனி அழகில் தங்கும் ரத்னத் தோள் வளைகள்

எங்கும் ஒளி வீச செவியிலசையும் குண்டலங்களிலொளிரு

மிரு கன்னங்களும் இடைத்தழுவிய மஞ்சப் பட்டாடையும் கை

தாங்கிய வேலோடு சிவபாலன் ஒழுகுக என்னகமும் புறமும்           17

குழந்தைக் குமரன் கூப்பிட்டத் தருணமேத்

தாய் மடியினின்றுத் தாவினானோ விரித்த

தந்தை இரு கைகளணைப்பில் ஆனந்தித்த

தளிர் மேனிக் குமரனைச் சரணடைகிறேன்           18

குமரனே!  சிவகுமரனே! கந்தனே! சேனாபதியே!  

கோலமயில்வாகனனே!  குகனே!வேலனே!

வள்ளி நாயகனே!அடியார்கள் அல்லல் தீர்ப்போனே!

தாரகனை வதைத்தவனே! எம்மை என்றும் காப்பாயாக     19

அடங்கியதோ ஐம்பொறிகள் செயலற்றதாக

அடித் தொண்டை சளி வாய் வெளித்தள்ள நடுங்கி

ஆடிய உடல் அனாதையாகி மரணமெனுமச்சத்தில்

ஆட்கொள்வாயோ குகனே !என் முன்னுடனே தோன்றி          20

சினங்கொண்ட யமதூதர்கள் மரணத்தருவாயில்

சீறி வெட்டு குத்து கொளுத்து என்றென்னை

அச்சுறுத்தும்போது அஞ்சாதே என்று வேலேந்திய

ஆறுமுகனாய் மயிலேறி எனைக் காக்க வருவாயோ             21

தலைவா! என் தலையுன் தாளிணைந்து வேண்டுவதோ

நிலை குலைந்தென்னுயிர் பிரியும் இறுதி காலத்திலுன்

நினைவில் நாவேதும் நவிலாதினும் பொருட்படுத்தாது

எனைக் காப்பாயோ கருணைக்கடல் கந்தனே!                          22

பத்மாசூரன் தாரகாசுரன் சிம்மமுகன் எனும் அசுரர்கள்

கொண்ட வர வலிமையில் விண்ணோரும் மண்ணோரும்

கொடுமையில் கொந்தளிக்க  வேலேடுத்தவ்வசுரர்களை

வதைத்த கந்தனே! என் மனவேதனையழிய நீயே கதி            23

துயரமெனும் சுமையால் தொய்து நிற்குமெனக்குத்

தோளிணைந்த உறவினனாய் என்றுமென்னுடன்

துணைவனான உமை பாலனே! நானிரப்பதோ

தீய எண்ணங்களிடையுரா பக்திக்கருள் புரிவாயே                 24

தாரகனை மாய்த்தவனின் திரு நீறு மடித்த இலைக்

கண்டவுடன் அபஸ்மாரம், மேகநோய் குஷ்டம்,காசம்,

குன்மம்,பைத்தியம் போன்ற கொடிய நோய்களும்

பிசாசுகளும் பறந்து போவது திரு நீறின் மகிமையே               25

காண்பதெல்லாம் கந்தனாக, செவி கேட்பதெல்லாம்

கந்தன் புகழாக வாய் மொழிவதவன் கீர்த்தி சரிதமாக

கந்தனுக்கே கைகள் தொண்டு புரிய காலமெல்லாம்

காயத்தை கந்தனுக்கற்பணிக்க அருள்வாயோ குகனே        26

பக்தியெனும் பாதைகள் பலவாக விருப்பத்திற்கேற்ப

பல தெய்வங்களைத் தொழுபவரோ முனிவர்களும்

சில மனிதர்களுமாக பாமரராயிழிந்தோர் பக்திக்குத்

தன்னையே தந்திடும் நீயே கண் கண்ட கடவுள்

குமரனே! உற்றாரும் உறவினர்களும் மற்றுமென்

குடும்பத்தாரும் ஆடவரும் பெண்டிரும் விலங்

குட்பட கந்தனையே சிந்தனையில் வைத்துத்

துதித்து சரணடைய அருள்வாயே                                          28

கிரௌஞ்ச மலையுருவாயிருந்து அல்லல்கொடுத்த

அசுரனைக் கொடும் வேலால் கொன்றது போலென்

உடல் துயருறும் மிருகங்களையும் நாய்களையும்

புட்களையும்(தீ வினைகள்)*  வேலால் களைவாயோ        29

*உட்கருத்து

தாய் தந்தையர் தனையர் பிழை பொறுத்துத்

தவிர்பது போல் தேவசேனாபதியே !தரணிக்கே

தந்தையாகிய நீயுன் தனயங்களுளிச்சிறிய

தனயன் பிழைகளைப் பொறுப்பாயாக                              30

கந்தனே! உன்னோடிணைந்ததில் பெருமையடையும்

கடலுமதை சார்ந்த சிந்து தேசமான செந்தூருக்கும்

வேலுக்கும் சேவலுக்கும் மயிலுக்கும் ஆட்டிற்கும்

மீண்டும் மீண்டும் என் வணக்கங்கள்

அளவிலாப் புகழுடன் ஆனந்த வடிவாய்

அகண்ட ஒளியாய் ஆனந்தக் கடலாய்

அனைத்துயிர்க்கும் முத்தியளிக்கும்

சக்திக் குமனுக்கென்றும் வெற்றி

வளம்பெறவாழ்விற்கு நன் மக்களையும்

மனையாளையும் நீங்காத செல்வமும்

நீண்ட ஆயுளும் ஈன்றிடுமே குகப்

பெருமானின் இத்தோத்திரம்                                  33 

நாராயணன் 

XXXX

தைப் பூசம்

திங்களோர் பூசம்

தைத்திங்கள் தனிப்பூசம்

நேசமாய்  நம்முடனிரு ந்து

தேசம் பலவற்றில்

மோசமான நோய் பீடிக்க

வீசுகின்ற வேலில்

நாசமாகுமோ பசியும் பிணியும்

தேசுடன் வாழ 

பாசம் பொழிபவனோ

பழனியப்பன்

நாராயணன் 

XXXX

மறையோ திரையோ

திரையின் பின் நிற்கும்

பறை தரும் நீ அறிவாயே

முறையிடுமடியார்கள் உன்

மறை முகம் கண்டு

கரை சேரும் காலம்

நிறைவாகும் பொழுதும் நீ

வரையறுத்ததுதானே

நாராயணன்

–SUBHAM—

tags- ஆதி சங்கர,  சுப்ரமண்ய புஜங்கம்

Efficacy of Vishnu Sahasranamam! (Post No.10,573)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,573
Date uploaded in London – – 18 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Efficacy of Vishnu Sahasranamam!
Santhanam Nagarajan

After the Kurukshetra war Yudhishthira went to see Bhishma. Bhisma was lying in arrow bed. Lord Krishna advised Yudihisthira to seek advise from Bhishma. He did so.
The dialogue between them is narrated in Anusasayan Parva of Mahabharata. Bhishma gives the Lord’s thousand names in Vishnu Sahasranama.

There are 108 verses in Vishnusajasranama. Each and every name has got its own hidden potentials.
Learned saints have prescribed certain names for curing certain ailments. They have also prescribed certain verses for recitation to fulfill one’s desired desire.
I am giving below one portion of the above details for the benefit of all.

Education: to gain knowledge
Vedo veda-vidha-vyango vedango veda-vit-kavih || Sloka 14
To cure stomach ache
Bhrajishnu rbhojanam bhokta sahishnu rajaga-dadijah | Sloka 16
For enthusiasm
Ateendriyo maha-mayo mahotsaho maha-balah || Sloka 18
To get shukshma buddhi
Maha-buddhir-maha-veeryo maha-shaktir-maha-dyuthih | Sloka 19
Eys sight improvement

Sahasra-moordha vishvatma saha-srakshah saha-srapat || Sloka 24
To gain great respect
Satkarta satkruta-sadhuh jahnur-narayano narah || Sloka 26
To fulfill one’s desires
Siddhar-thah siddha-sankalpah siddhida siddhi-sadhanah || Sloka 27

For Marriage
Kamaha-kama-krutkantah kamah kama-pradah prabhuh || Sloka 32
Great job
Vyava-sayo vyava-sthanah sams-thanah sthanado dhruvah | Sloka 42
To get over Fear of Deatth
Vaikunthah purushah pranah pranadah pranavah pruthuh | Sloka 44
To gain Wealth

Artho-nartho maha-kosho maha-bhogo maha-dhanah || Sloka 46
To have good mind (Buddhi)
Sarva-darshee nivru-tatma sarva-gno gnana muttamam || Sloka 48
To have Ananda (pleasure)
Anando nandano nandah satya-dharma trivi-kramah || Sloka 56
For Kshemam

Anivarthee nivru-ttatma samkshepta kshema-krutchhivah | Sloka 64
To get away from all Shoka (pain, difficulties)
Bhooshayo bhooshano bhooti vishoka shoka-nashanah || Sloka 67
To cure diseases
Poornah poorayita punyah punya-keerti rana-mayah || Sloka 73
For Liberation (Moksha)

Sadgati satkruti-satta sadbhooti satpa-rayanah | Sloka 75
Chhatru jayam (Victory over enemies)
Sulabha suvratah siddhah shatruji chhatru-tapanah | Sloka 88
To distance oneself from all accidents
Amoorti ranagho chintyo bhaya-krudbhaya-nashanah || Sloka 89
For Mangalam

Svastida svasti-krut svasti svastibhuk svasti-dakshinah || Sloka 96
To avoid bad dreams
Uttarano dushkrutiha punyo dussvapna nashanah | Sloka 99
For Papa nasam
Devakee nandana srashta kshiteeshah papa-nashanah || Sloka 106
It is desirable to chant the full thousand names regularly in the morning or evening hours so that all round properiety will be ensured.
From time immemorial, thousands and thousnads have benefitted by reciting this regularly. It is a regular practice in religious homes of Hindus.

Our sastras/ scriptures like Siddhisaram karma vibhaga samuchchayam etc have prescribed Vishnusahasranamam for pariharams ( to remove various illness/thoshas)
If we devote sometime, we will be able to find more and more information to remove all of our thoshas!

NOTE
Published in http://www.ezinearticles.com on 7-12-21
Article Source: https://EzineArticles.com/expert/Santhanam_Nagarajan/19574 Article Source: http://EzineArticles.com/9434905

OLD ARTICLES

Three Books on a ‘Deity with a Thousand Names’: Vishnu …https://tamilandvedas.com › 2015/04/17 › three-books-…17 Apr 2015 — Compiled from London swaminathan Post No 1806; Date 17th April 2015 Uploaded in London at 15-24 The first book review is from my old paper …

யோகாசனத்தை நமக்குக் கற்றுக் கொடுத்தது மிருகங்கள் ! (Post 10,572)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,572

Date uploaded in London – –    17 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

முக்கியமான ஆசனங்களில் இருபதுக்கும் மேலான ஆசனங்களுக்கு பிராணிகள், பறவைகள், பாம்பு, தேள் முதலிய பெயர்கள் இருப்பதைக் காணலாம். மேலும் பல ஆசனங்களுக்கு மலர்களின் பெயர்கள் இருப்பதையும் காணலாம்.  அவர்களிடமிருந்து இந்த ஆசன ரஹஸ்யங்களைக் கற்றுக் கொண்டதற்காக மக்கள் நன்றியுடன் பெயரிட்டான் என்றும் சொல்லலாம்.

பிராணிகளைக் கவனித்து அவைகளிடமிருந்துதான் மனிதன் ஆசனங்களை அறிந்தான் என்று நான்கு வேதங்களை மொழிபெயர்த்த எம்.ஆர். ஜம்புநாதன் எழுதிய யோகாசனப் புஸ்தகத்தில் கூறுகிறார். அவர் சொல்லுவது சரியே என்பதற்கு நானும் சில காரணங்களை சொல்கிறேன்.

நான் கூறும் சில காரணங்கள்:

உலகிலேயே அதிக காலம் வாழும் பிராணி ஆமை (TORTOISE) தான் . சுமார் 300 ஆண்டுகளுக்கு ஆமை உயிர் வாழ்வதை மனிதன் பதிவு செய்து வைத்துள்ளான். இன்று ஆமைதான் அதிக காலம் வாழும் பிராணி என்று சாதனை நூல்கள் (RECORD BOOKS) சொன்னாலும் அதைக் கண்டு பிடித்தவன் இந்துதான் !

புலன் அடக்கம் பற்றிச் சொல்ல வந்த கிருஷ்ண பரமாத்மா, முதல் முதலில் இதைச் சொன்னார். அவரைத் தொடர்ந்து மனு தனது மனு ஸ்ம்ருதியில் ஆமை பற்றி பேசுகிறார். அதை அப்படியே அவருக்குப் பின் வந்த திருவள்ளுவரும் சொன்னார். காலத்தால் பிற்பட்ட திரு மூலரும் ஆமை ரஹஸ்யத்தைக் குறிப்பிடத் தவறவில்லை.

பகவத் கீதை 2-58

மனு ஸ்ம்ருதி  7-105

திருக்குறள் 126

திருமந்திரம்  2360

XXX

தவளை அதிசயம்

கரடி, பாம்பு, தவளை போன்ற சில பிராணிகள் குளிர்காலத்தில் பேருறக்க (HIBERNATION) நிலைக்குச் சென்றுவிடுகின்றன. அவை தூங்கும்போது வளர்சிதை மாற்றத்தின் வேகமும் உடலில் குறைந்துவிடுகிறது. அவை உணவு இல்லாமலேயே 4 முதல் 6 மாதம் வரை நீண்ட உறக்கத்தில் — கும்ப கர்ணன் — நிலையை அடைந்து வசந்த காலம் வந்தவுடன் உயிர்த் துடிப்புடன் எழுந்து விடுகின்றன. ரிக் வேதத்தில் வரும் (7-103) நல்ல பிரசித்தமான பாடல் தவளைப்பாட்டு ஆகும். வேதம் ஓதும்  பிராமணர்களையும், வசந்த காலம் வந்தவுடன் சப்தம் செய்யும் தவளைகளையு ம் ஒப்பிடும் நக்கல்- நையாண்டிப் பாட்டு இது. இதில் ஒரு விஞ்ஞான உண்மையும் இருக்கிறது. வேதத்தை மொழிபெயர்த்த வெளிநாட்டுக்கு கும்பலுக்கு அறிவியல் தெரியாது. அதுகள் இதை கிண்டல் என்று எழுதிவைத்துவிட்டன.. உண்மையில் மழைக்கால நான்கு மாதங்கள் ‘சாதுர்மாஸ்ய விரதம்’ எனப்படும். அப்போது சன்யாசம் எடுத்த சந்யாசிகள் ஒரே இடத்தில் தங்குவர். அது முடியும் காலத்தில்  பிராமணர்கள் புதுப் பூணுல் அணிந்து மீண்டும் வேதம் கற்பத்தைத் துவங்குவர். அதாவது 4 மாத பேருறக்க நிலைக்குப் பின்னர் தவளைகளும் ஒலி எழுப்புவது போல.

இதைக் கவனித்த ரிஷி முனிவர்கள் நாமும் அப்படி இருக்கலாமே என்று மூச்சு அடக்கப் பயிற்சியைத் துவக்கினர் அப்படித் தவம் இருந்த வாலமீகி போன்ற முனிவர்கள் மீது புற்றுக்கள் கூட வளர்ந்துவிட்டன . ஆக இந்த ஹைபர் நேஷன் HIBERNATION எனப்படும் பேருறக்க நிலைஐயை மனிதர்களும் பயன்படுத்த முடியும் என்று பிராணிகளிடம் கற்றுக் கொண்டனர்..

திரு ஜம்புநாதன் எழுதிய யோகாசனப் புஸ்தகத்தில் சொல்லும் காரண்  ங்கள் வேறு :

ஒரு களைப்படைந்த குதிரை படுத்துக் கொண்டு ஓய்வு பெற, புத்துணர்ச்சி பெற என்னவெல்லாம் செய்கிறது எனப்தைக் காட்டுகிறார். பூனை, நாய் முதலிய பிராணிகள் எப்படி உடம்பை முன்னோக்கியும் பின்னோக்கியும் இழுத்து பயிற்சி செய்கின்றன என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும் என்கிறார்.. குரங்குகள் மரத்துக்கு மரம் தாவுகையில் எந்த பயமும் இன்றி உடலை எப்படி லாவகமாக பயன்படுத்துகிறது என்றும் ஜம்பு நாதன் காட்டுகிறார்.

அவர் எழுதிய புஸ்தகத்தில் வெளியிடப்பட் ட சுமார் 50 ஆசனப்  படங்கள், செய்முறைகள், பலன்களை ஆங்கிலக் கட்டுரைகளில் வெளியிட்டேன். அவற்றை இரண்டு நாட்களுக்கு வாசித்து  பின்னர் அவற்றை யோகாசன ஆசிரியர் மூலம் கற்றுப்  பயன்படுத்தலாம்.

–SUBHAM–

tags- யோகாசனம், பிராணிகள் , உறக்க நிலை, புலன் அடக்கம்

Animals taught us Yogasanas -1 (Post.10,571 A)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,571-A

Date uploaded in London – –    17 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

M R Jambunathan who translated all the four Hindu Vedas into Tamil says that humans learnt Yogasana from animals. He gives several examples to support his finding. He is right . I can cite more examples. The longest living animal is tortoise. They live up to 300 years . Lord Krishna in the Bhagavad Gita (2-58), Manu in Manu Smrti (7-105), Tamil poet Tiruvalluvar in his Tirukkural (Kural 126), Tirumular in his Tamil Tirumanthiram (2360) use the image of Tortoise to teach us self control. Unless they observed it for several generations, they wouldn’t have referred to it. They knew very well that the tortoises live longer than any other animal on earth because of breath control only. The most popular Frog poem (RV.7-103) in the Rigveda sows us how observant our ancestors were. There the Vedic Rishi refers indirectly to the hibernation of frogs. Vedic students begin or restart their Vedic studies after four month Chaturmasya Vratha time (rainy season). This is similar to hibernation of frogs. Several animals go into hibernation and stop their metabolic activities almost to nil.

Over 20 popular Yogasanas are named after animals, birds, insects and reptiles.

Let me give the examples shown by Sri Jambunathan. He says,

“Have you ever noticed a tired horse? It lies down completely and take some comfortable poses to refresh itself. Yoga is nothing but this activity  scientifically applied.  A weak man can never see the real Almighty says the Kathopanishad. Strength is greater than knowledge. Worship the strength said Sanatkumara to Rishi Narada.

I am the thunderbolt. I am the lion, eagle and what is all that are strong, said Sri Krishna to the valiant Arjuna. The object of the Yoga is to attain this mighty strength in and out.”

“God has endowed small animals with the faculty of protecting themselves from harm and of being happy. When we represent animals in limbs and form, in instinct and mind, what harm is there in copying some of the main activities which they do to protect and prolong their lives. If we observe all these animals, we can find that they keep themselves physically fit and enjoy happiness by adopting certain Asanas according to time and space.”

“There is no more beautiful sight in this world than that of a cat, tiger, lion sleeping or resting. It is the perfect picture of a repose with all the muscles relaxed. Thus, these animals get new life and vigour and enjoy life almost to perfection. In ancient times many Rishis in their wanderings in the forests observing carefully all the postures of wild animals, putting them to practical tests and finding them immediately profitable by their experiences , had given us these secrets in the Upanishads.”

“When a cat awakes it is a common sight to see stretching it’s body and then bringing it back in form of an arch standing stiff on all four feet. This is an everyday occurrence. It is only after assuming this posture that cat starts on its business. Instinct prompts this cat to adopt this Asana.

We may see it in a dog as well. When it turns lazy it stretches its body towards the front throwing all the weight forward and stretching it’s back without moving from the original place it throws all the weight in the rear. Thus, many animals do. Observe the monkeys adopting naturally many varieties of poses. They do take many postures like our professional athletes. They jump from one branch to another without fear and with great pleasure.”

“The question why we should copy the animals may appear to be not a reasonable one. But if you carefully study the universe and all other creations you will find that man is a representative of nature. The eye stands for the sun, the ear the sky, mind the moon, body the earth, and breath the air. Thus human body is a counterpart of all the elements of Nature.

Chandilyopanishad gives us a grand eulogism of the Asanas. Although Asanas are many in number we have only shown chiefly those that are very important. With illustration or each Asanna.”—M R Jambunathan 15-6-1933

Xxx

 I am posting the Asanas in two of my blogs. Part A is published in tamilandvedas and part B is published in swamiindology.blogspot .com.

Please visit both the blogs to get all the 48++++ Asanas.

Tags- Asana, Yogasana, animal postures, Jambunathan book

‘விசித்திர யானை மீது வருபவரையே மணப்பேன்’- கக்ஷீவான் கதை (10,570)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,570
Date uploaded in London – – 17 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹரிஷி கக்ஷீவான் : விசித்திர யானை மீது வருபவரையே மணப்பேன் என்ற கன்னியை மணந்தவர்!
ச. நாகராஜன்

மஹரிஷி தீர்க்கதமஸ் என்பவரின் குமாரர் கக்ஷீவான்.

அவருக்கு உபநயனம் முடிந்த பின்னர் மஹரிஷி உதங்க முனிவரிட்ம் நான்கு வேதங்கள், சாஸ்திரங்கள், இதிஹாஸ புராணங்களை அனைத்தையும் கற்றார்.

குருகுலவாசம் முடிந்தது.

விடைபெறும் தருணத்தில் உதங்கர் கக்ஷீவானைப் பார்த்து, “ நீ உனது வீட்டிற்குப் போக அனுமதி கொடுக்கிறேன்.
உனது திருமணம் பற்றிய ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அதைக் கவனமாகக் கேள்.

ராம சேதுவாகிய கந்தமாதனத்திற்குச் செல். அங்கு அகஸ்திய தீர்த்தத்தில் ஸ்நானம் செய். மூன்று வருட காலம் அங்கு அனுஷ்டானங்களைச் செய்து வாசம் செய். நான்காவது வருஷம் நான்கு தந்தங்களுடனும், பருத்த சரீரம் கோண்ட சரத் கால மேகம் போன்ற வெள்ளை நிறமுடைய ஒரு பெரிய யானை அந்தப் புண்ணிய தீர்த்தத்திலிருந்து வெளியே வரும்.
அப்போது அந்த தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து அதன் மீது ஏறி அமர்ந்து கொள். கவநயன் என்ற அரசனின் நகருக்குச் செல். அங்கு அவனுடைய மகளாகிய மனோரமை என்னும் கன்னி நான்கு தந்தங்கள் கொண்ட வெள்ளையானை மீது வருபவனையே மணப்பேன் என்று சபதம் செய்திருக்கிறாள்.
அவளை நீ காண்பாய். அவளது தந்தை இந்த சபதத்தினால் பெரிதும் வருந்தி இப்படி ஒரு அபூர்வ யானை இந்த உலகத்திலேயே இல்லையே, அது தேவ லோகத்தில் அல்லவா உள்ளது என்று வருந்திக் கொண்டிருக்கிறான். அவன் இப்படி வருத்தமுற்றிருக்கையில் ஒரு நாள் நாரத மஹரிஷி அவன் இருக்குமிடம் வந்தார்.

அவரை வரவேற்று பூஜித்த மன்னன் தன் வருத்தத்தைச் சொல்லிப் புலம்பினான்.
உடனே மஹரிஷி நாரதர், “வருந்தாதே. கக்ஷீவான் என்ற பிராமணரின் மகன் உனது மகள் சொன்ன யானை மீது ஏறி வருவான். அவனுக்கு உன் பெண்ணை மணம் முடிப்பாயாக” என்று கூறி அருளினார்.” என்று இவ்வாறு உதங்க முனிவர் கூறியதைக் கேட்ட கக்ஷீவான் அவர் கூறிய படியே சேதுவிற்கு வந்து அகஸ்திய தீர்த்தத்தில் நீராடி தன் அனுஷ்டானங்களைச் செய்யத் தொடங்கினார்.

மூன்று வருடம் கழிந்தது. மூன்றாம் வருட கடைசி நாள் இரவு விடிய ஒரு ஜாமம் இருக்கும் போது ஒரு பெரிய சப்தம் உண்டாயிற்று. கடல் கொந்தளிப்பது போன்ற அந்த சப்தத்தைக் கேட்ட கக்ஷீவான் கண் விழித்துப் பார்த்தார்.

என்ன ஆச்சரியம்!
நான்கு தந்தங்களுடைய பெரிய வெள்ளை யானை அவர் அருகில் வந்து நின்றது.

அவர் உடனே தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து அந்த யானையின் மீது ஏறி அமர்ந்து கவநயனின் நகருக்குப் புறப்பட ஆயத்தமானார்.

ஆனால் அதே சமயம் மதுராபுரி மன்னனான கவநயன் காட்டுக்குச் சென்று வேட்டையாடி விட்டு தனது மந்திரி சேனையுடன் அகஸ்திய தீர்த்தம் அருகே வந்திருந்தான்.

அப்போது வெள்ளையானை மீது அமர்ந்து புறப்படச் சித்தமாகி இருந்த கக்ஷீவானைக் கண்டு மகிழ்ச்சி கொண்டான்.
நாரதர் கூறியது இவராகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணி அவரை எங்கு செல்கிறீர்கள் என்று கேட்க கக்ஷீவான் தான் கவநயன் மகளான மனோரமையை மணக்கப் போவதாகவுவும் அதற்காகக் கிளம்பிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

உடனே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட் கவநயன் அவரைத் தன் நகருக்கு வருமாறு அழைத்தான்.
கக்ஷீவான் கோரிய படி தனது புரோகிதரை தீர்க்கதமஸ் இருக்கும் இடத்திற்கு அனுப்பி அவரைத் திருமணத்திற்கு வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தான்.

அவரும் மகிழ்ச்சியுடன் கிளம்பி மகனிடம் வந்து அவனை ஆரத் தழுவினார்.
அனைவரும் மதுராபுரி வந்தடைந்தனர்.
மனோரைமை தான் சபதம் செய்த படியே நான்கு தந்தம் கொண்ட வெள்ளையானை மீது வந்த கக்ஷீவானைப் பார்த்து அவரை மணக்கச் சம்மதித்தாள்.

உதங்க முனிவரும் திருமணத்திற்கு வந்து சேர்ந்தார்.
ஒரு நல்ல சுப முகூர்த்த தினத்தன்று திருமணம் கந்தமாதன பர்வதத்தில் நடை பெற்றது.

சீர்வரிசையாக ஏராளமான தன கனக வாகனாதிகளை கவநயன் தர அவற்றைப் பெற்றுக் கொண்டு தீர்க்கதமஸ் தன் இருப்பிடமான வேதாரண்யத்திற்கு மகனுடனும் மருமகளுடனும் வந்து சேர்ந்தார்.

மன்னன் தன் ராஜதானியான மதுராபுரி சென்றான். உதங்க முனிவரும் விடை பெற்றுக் கொண்டு தன் இருப்பிடம் ஏகினார்.

அப்போது வெள்ளை யானையானது அகஸ்திய தீர்த்தத்தில் மறைந்து போனது.

இந்த ஆச்சரியமான சரித்திரம் ஸேது மாஹாத்மியத்தில் உள்ளது.

அகஸ்திய தீர்த்தத்திற்கு இணை அகஸ்திய தீர்த்தமே தான்!


tags- மஹரிஷி, கக்ஷீவான் , விசித்திர யானை, வெள்ளையானை

சங்க இலக்கியத்தில் புதிய டாக்டர்; வேதத்தில் பழைய டாக்டர் (Post No.10569)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,569

Date uploaded in London – –    16 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகிலேயே பழைய புஸ்தகம் ரிக் வேதம்; அதற்கு ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும்  சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் கி.மு 4000 முதல் 6000 வரை தேதி குறித்தனர் (Herman Jacobi and B G Tilak). மாக்ஸ்முல்லர் கும்பல் கி.மு 1200 க்குப் பின்னர் இதை யாரும் வைக்கமுடியாது என்று சொன்னது. பேராசிரியர் வில்சன், கோல்ட்ஸ்டக்கர் போன்றோர் கொடுத்த அடியில் “இல்லை இல்லை; நான் சொன்னதன் கருத்து என்னவென்றால் அதற்கும் பின்னர் யாரும் காலம் சொல்ல முடியாது என்பதுதான். உண்மையில் அது கி.மு 1500 அல்லது அதற்கும் முன்னதாக இருக்கலாம்” என்று சொல்லி நழுவிக்கொண்டார் மாக்ஸ்முல்லர். அப்படிப்பட்ட பழைய வேதத்தில் டாக்டர் , மருந்து, மூலிகைகள்,சாவா மருந்து/அமிர்தம், அற்புத மருந்து /சோமம் , ஆயுர்வேத மருந்துகள் பற்றி நிறைய மந்திரங்கள் உள்ளன. ராமாயணக் கதை அறிந்த சின்னக் குழந்தைக்குக் கூட ஹநுமார்த்தான் உலகில் முதல் டாக்டர் என்பது தெரியும். லெட்சுமணன் மயக்கம் போட்டவுடன் இமயமலைக்குப் பறந்து போய் சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்தார்.. லெட்சுமணனும் குணமடைந்தார் .

ரிக் வேதக் கவிதைகள், யஜுர் வேதக் கவிதைகளில் பேஷஜம் / மருந்து, பிஷக்/டாக்டர் என்ற சொற்கள் வருகின்றன. இது அக்கால மருத்துவ அறிவைக் காட்டுகிறது. இதை மெய்ப்பிக்கும் விதத்தில் சுஸ்ருதர், சரகர் என்ற மருத்துவர்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவ நூல்களையும் சம்ஸ்க்ருத மொழியில் எழுதிக் குவித்தனர். பிற்காலக் கவிஞர்கள் “நோய் என்பது பிறவித் தளை என்றும் அந்த ஜனன -மரண சுழற்சி நோயைப் போக்கவல்ல மருத்துவர் கடவுள்” என்றும் கூறிப் போந்தார்கள்

.

தமிழன் வழி தனீ ………………………. வழி

சங்க இலக்கியத்தின் காலம் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமேயில்லை. அவர்களுக்கும் மருத்துவம், நோய்கள், அதற்கான காரணம் என்பதெல்லாம் நன்கு தெரியும்.. ஒரு புலவன் மிகவும் சாதுர்யமாக ‘பசிப்பிணி == பசி என்னும் நோய்’ என்ற சொல்லைக் கண்டுபிடித்து அந்த நோய்க்கு மருந்து கொடுக்கும் (உணவு) டாக்டர் இந்த ஊரில் இருக்கிறார் என்றும் பாடுகிறார்.

விவரங்களைப் படிப்பதற்கு முன்னர் ஒட்டு மொத்தக் கருத்து என்ன என்பதைக் காண்போம். அதாவது நோய் என்ற ஒன்று உண்டு; அதற்கு மருந்து என்று ஒன்று உண்டு. அதைத் தீர்க்கும் வைத்தியர் ஒருவர் உண்டு.

அதாவது வேத காலம் முதல் தற்காலம் வரை மனிதர்களுக்கு உடல்நல பிரச்சினை முக்கியமாகக் கருதப்பட்டது.

xxx

ரிக் வேதம்

1-43-2- Rudra’s medicines ரிக் வேதம் (ரி.வே.) 1-43-2 ருத்ரன் என்னும் சிவனின் மருந்துகள் பற்றிப் பேசுகிறது

1-43-4-Rudra, the possessor of healing remedies. Prayer for health and wealth. 1-43-4 ருத்ரனிடம் குணப்படுத்தும் மருந்துகள் உண்டு என்று சொல்கிறது. மேலும் ஆரோக்கியம் வேண்டும் என்றும் கோருகிறது.

வேதம் முழுதும் ஏராளமான மந்திரங்கள் 100 ஆண்டுக்கால ஆரோக்கியமான வாழ்வு வேண்டும் என்றும் பிராரத்னை வருகிறது

இது ஒரு எடுத்துகக்கட்டு. இது போல நிறைய எடுத்துக்கட்டுகள் உள்ளன

Xxxx

ரிக் வேதத்துக்கு அடுத்தாற்போல் வருவது யஜுர் வேதம் இதிலுள்ள ருத்ரம்- சமகம் என்ற பகுதியில்தான் சைவர்களின் தாரக மந்திரமான ‘ஓம் நம சிவாய’ வருகிறது. அதில் சிவன், பவன், ருத்ரன் முதலிய அத்தனை பெயர்களும் ஒரே இறைவனைக் குறிக்கிறது என்பது தெளிவாகிறது. தமிழ் தெரியாத வெள்ளைக்காரர்கள் சிவன் வேறு, ருத்ரன் வேறு என்று உளறிக்கொட்டினார்கள். ருத்திரன் என்பது வேத காலத்திலேயே இப்படி இரண்டு பெயர்களில் (ருத்ரன்- சிவன்)  என்று  பரவியது. தமிழிலும் சிவன் என்பது 1500 ஆண்டுகளுக்கு முன்னர்வந்த பெயர்தான். சங்க இலக்கியம், தொல்காப்பியயத்தில் சிவன் என்ற சொல் கிடையாது.  ரிக்வேதம் போலவே முக்கண்ணன்(திரயம்பகன்), நீல கண்டன் முதியன உண்டு. சுருங்கச் சொல்லின் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இடத்தலும் ஒரு பெயர் சிறப்பிடம் பெறுகிறது. இப்போதும் கூட பார்வதி தேவியை பகவதி முதல் பவானி வரை ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் வழி படுகிறார்கள்

இந்தப் புகழ் மிகு ருத்ரத்தில் கடவுளை– சிவ பெருமானை – பேஷஜ ம்,பிஷக் — மருந்து , மருத்துவன் என்று போற்றுகின்றனர்.

பிற்காலத்தில் வந்த விஷ்ணு ஸஹஸ்ர நாமம் முதலியவற்றிலும் பேஷஜம், பிஷக், வைத்ய என்ற சொற்களால் இறைவனைப் போற்றுகின்றனர். ஆயினும் ஆதி சங்கரர் போன்ற உரை ஆசிரியர்கள் பிறவி என்னும் நோய்க்கு — அதாவது மீண்டும் பிறவாத நிலைக்கு — மருந்து கொடுக்கும் டாக்டர் இறைவன் என்று உரை எழுதினார்கள். இதை ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களிலும் காண்கிறோம்.

xxxx

தமிழன் கண்ட பசிப்பிணி மருத்துவன்

தமிழ் நாட்டில் ஊர் தோறும் வைத்தியர்கள்/ மருத்துவர்கள் இருந்திருக்க வேண்டும். இதனால்தான் வள்ளுவனும் மருந்து என்று ஒரு அத்தியாயமே எழுதிவிட்டார். புறநானூற்றுப் புலவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாடிய  பாடலில் பசிப்பிணி மருத்துவன் என்று சிறுகுடி பண்ணன் கிழானைப் பாடுகிறார்.

பசிப்பிணி மருத்துவன் இல்லம்

அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே — புறம் 173

என்று பாடுகிறார்.

xxx

மேலும் சில யஜுர் வேத கருத்துக்கள்

மனிதர்கள் மட்டுமன்றி பிராணிகளும் நலமுடன் வாழ வேண்டும் என்று யஜுர் வேதம் வேண்டுகிறது.

வயது முதிர்ந்தோர் வரை பிறந்த குழந்தைகள் வரை ந லமுடன் வாழவும் முனிவர்கள் வேண்டுகின்றனர்.

இந்திரன் என்ற சொல் ஆயிரத்துக்கும் மேலான இடங்களில் ரிக் வேதத்தில் மட்டுமே வருகிறது. அங்கு சுமார் 10,000 மந்திரங்கள்தான் . இது தவிர மற்ற மூன்று வேதங்களில் இன்னும் 10,000 மந்திரங்கள் உள்ளன. இந்திரன் என்றால் தலைவர், தலையாய சக்தி, இறைவன், மன்னன் என்ற பல பொருட்கள் உண்டு. தமிழிலும் கூட இறைவன், கடவுள் என்பதை மன்னனுக்கும் பயன்டுத்துகிறோம். இடி, மழைக்கு  அதிதேவதை இந்திரன். அவனுடைய மகன் மருத் Marut ; அதாவது காற்று , மின்னல் .மருத் என்னும் கடவுள் பற்றியும் பல துதிகள் உள்ளன. அவரையும் “கடல் , மலை மீதுள்ள மருந்துகளைக் கொண்டுவருமாறு வேத முனிவர்கள் வேண்டுகின்றனர். பிற்காலத்தில்  மாருதி என்னும் அனுமன் மருந்து கொண்டுவருவதற்கான பீடிகை போலும் இது!

—-subham—-

tags- பசிப்பிணி, மருத்துவன், டாக்டர், ருத்ரன், பேஷஜம், பிஷக், பிறவித் தளை

பகவத்கீதை சொற்கள் INDEX-38; கீதை மூலம் சம்ஸ்க்ருதம்-38 (Post.10,568)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,568

Date uploaded in London – –    16 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

துர்  நிரீக்ஷ்யம் 11-17  காணுதற்கு கூசும்படி

துர்  புத்தேஹே 1-23  கெட்ட புத்தியுள்ள

துர்  மதிஹி  18-16  கெட்ட புத்தி

துர்  மேதாஹா 18-35   அறிவுகெட்டவன்

துர்  யோதனஹ  1-2  துர்யோதன  5

துர்  லபதரம் 6-42   அடைதற்கு அரிது

துஷ்க்ருதாம் 4-8  துஷ்டர்களை

துஷ் க்ருதினஹ  7-15  பாவச் செயலுடைய

துஷ் டாம் 1-41  கெட்டால்

துஷ் பூரமஹ 16-10 பூர்த்தி செய்ய முடியாத    10

துஷ் பூரேண 3-39 பூர்த்தி செய்ய முடியாத

துஷ் ப்ராப 6-36  அடைதற்கு அரிது

துக்கதரம்    2-36  துன்பம் மிகுந்தது

துக்க யோநயஹ 5-22  துன்பத்துக்கு பிறப்பிடமானவை

துக்க சோகமய பிரதாஹா 17-9 துன்பம், துயர், பிணி -இவற்றைத்

தருவன   15

துக்க ஸம்யோக வியோகம் 6-23

துக்கஹா 6-17  துன்பம் துடைப்பதாக

துக்கம் 18-8 துக்கம்;  also 12-5

துக்காந்தம்  18-36  துக்கத்தின் முடிவை

துக்காலயம் 8-15 துன்பத்துக்கு இருப்பிடம் 20

துக்கேன   –துக்கத்தினால்

துக்கேஷு 2-56  துன்பத்தில்

தூரஸ்தம்  13-15 தூரத்திலுள்ளதும்

தூரேண  2-49  வெகு தூரம்

த்ருட நிஸ்சயஹ 12-14 திடமான நிச்சயம் உடையவனாய்            25

த்ருட வ்ரதாஹா 7-28  உறுதியான நோன்புடையவர்களாய்

த்ருடம்  6-34  அடக்க முடியாதது

த்ருடேன  15-3  திடமான

த்ருஷ்ட பூர்வம் 11-47  முன்னால் காணப்பட்டது

த்ருஷ்டவான் 11-52  கண்டவன்               30

த்ருஷ்டிம் 16-9 இந்த நோக்கத்தை

த்ருஷ்ட்வா 1-2  பார்த்து

தேவ 11-15   தேவா/ கிருஷ்ணா

தேவதாஹா 4-12   தே வதைகளை

தேவ தத்தம்  1-15   தேவதத்தம் என்னும் சங்கு      35

தேவ தேவ 10-15   தேவர்களின் தேவனே

தேவ தேவஸ்ய  11-13  தேவ தேவனுடைய

தேவ த்விஜ குரு ப்ராக்ஞ பூஜனம்  17-14 தேவர், பிராமணர், குரு ,அறிவாளிகள் – இவர்களுடைய பூஜையும்

தேவ போகான் 9-20  தேவர்களுக்குரிய போகங்களை

தேவ ரிஷிஹி  10-13 தேவ ரிஷி  40

தேவ ரிஷீணாம் 10-26  தேவரிஷிகளுக்குள்

தேவலஹ 10-13  தேவலர்

தேவ வர 11-31  தேவ சிரேஷ்டனே

தேவ வ்ரதாஹா  9-25  தேவர்களை வழிபடுவோர்

தேவம்     11-11 பிரகாசமானது   45

தேவானாம்  10-2  தேவர்களுக்கும்

தேவான்  3-11  தேவர்களை

தேவேச 11-25  தேவர்களுக்கு இறைவா

தேவேஷு 18-40   தேவர்களிடையில்

தேசே   6-11   இடத்தில்          50

தேஹ ப்ருதா  18-11  உலகப் பற்றுடையவனால்

தேஹ ப்ருதாம் 8-4  உடல் தாங்கியவர்களுள்

தேஹ ப்ருத் 14-14  தேகம் உடையவன்

தேஹ வத்பிஹி 12-5  உடல் பற்றுடையோரால்

தேஹ ஸமுத்பவான் 14-20 தேகத்தை உண்டாக்கிய 55

தேஹம்  4-9    உடலை

தேஹாந்தர ப்ராப்திஹி 2-13  வேறு உடல் அடைவதும்

தேஹாஹா  2-18   உடல்கள்

தேஹினம்  3-40  உடலில் உறையும் ஜீவனை

தேஹினாம் 17-2  மனிதர்களுக்கு   60

தேஹினஹ 2-13  உடலில் உறையும் ஆன்மாவுக்கு

தேஹி   2-22  உடலில் உறைபவன்

தேஹே 2-13 உடலில்

தைத்யானாம் 10-30  திதி வம்சத்தவருள்

தைவம்    4-25  தேவதைக்கு உரிய     65

தைவஹ  16-6 தெய்வத் தன்மை

தைவீ   7-14 தெய்வ சக்தி வாய்ந்தது

தைவீம் 9-13  தெய்வத் தன்மை உடைய

தோஷவத் 18-3  தீமையைப் போல     70

தோஷம் 1-38  கெடுதல்

தோஷேன 18-48  குண தோஷத்தால்

தோஷைஹி 1-43  கொடுஞ்செயல்களால்

த்வாவ ப்ரதிவ்யோ  11-20  வானுக்கும் மண்ணுக்கும்

                                74 words are added in part 38

tags– gita word index 38

நிகழ்காலத்தில் வாழ்க! (Post No.10,567)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,567
Date uploaded in London – – 16 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

சம்ஸ்கிருதச் செல்வம் : சுபாஷிதம்

நிகழ்காலத்தில் வாழ்க!
ச.நாகராஜன்

கதே ஷோகோ ந கர்தவ்யோ பவிஷ்யம் நைவ சிந்தயேத் |
வர்தமானேன காலேன வர்தயந்தி விசக்ஷணா: ||

One should not lament over the past nor should one think about the future. The wise always live in the present;

கடந்த காலத்தைப் பற்றி ஒருவன் வருந்துவதோ அல்லது எதிர்காலத்தைப் பற்றி நினைப்பதுமோ கூடாது. அறிஞர்கள் நிகழ்காலத்திலேயே எப்போதும் வாழ்வர்.

*
அநுகூலே விதௌ தேயம் யத: பூரயிதா ஹரி: |
ப்ரதிகூலே விதௌ தேயம் யத: சர்வே ஹரிஷ்யதி ||

One should go on giving when fortune is favourable, because Lord is the supplier. One should give away even when fortune is not favourable, because (fate) is going to take away (everything).

அநுகூலமான காலத்தில் ஒருவன் இருக்கும் போது அவன் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் ஹரி தான் கொடுப்பவன். அநுகூலமில்லாமல் ப்ரதிகூலமாக காலம் இருக்கும் போதும் ஒருவன் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் விதி அனைத்தையும் எடுத்து விடப் போகிறது.
*
ஸ்தான ப்ரஷ்டா ந ஷோபந்தே தந்தா: கேஷா நகா நரா: |
இதி விஞாய மதிமான் ஸ்வஸ்தானம் ந பரித்யஜேத் ||

Teeth, hair, nails and men do not look graceful if they abandon their respective place. Knowing this a wise person should not leave his place.

பற்கள், தலைமுடி, நகம், மற்றும் மனிதர்கள் தங்களது உரிய இடத்தை விட்டு அகன்றால் சோபிக்க மாட்டார்கள். இதை அறிந்து புத்திசாலியான ஒருவன் தனது ஸ்தானத்தை விட்டு ஒரு போதும் அகலக் கூடாது.
(தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை என்ற திருக்குறளை இங்கு ஒப்பு நோக்கலாம். குறள் எண் 964)
*
பரோக்ஷே கார்யஹந்தாரம் ப்ரத்யக்ஷே ப்ரியவாதினம் |
வர்ஜயேத்தாத்யஷம் மித்ரம் விஷகும்பம் பயோமுகம் ||

One should abandon a friend who causes harm (to one’s work) behind one’s back and speaks sweet words in front of one, like a pitcher filled with poison, containing milk, only on the surface.

ஒரு குடத்தில் விஷத்தை நிரப்பி மேலே மட்டும் பால் இருப்பது போல, முன்னால் சிரித்த வண்ணம் இருந்து பின்னால் ஒருவனது வேலைக்கு தீங்கு இழைக்கும் நண்பனை ஒருவன் துறந்து விட வேண்டும்.
*
ருணஷேஷச்சாக்னிஷேஷ: சத்ருஷேஷஸ்ததைவ ச |
புன: புன: ப்ரவர்தந்தே தஸ்மாச்சேஷம் ந ரக்ஷயேத் ||

The debt that is left (unpaid), the remains of (unextinguished) fire, and the surviving enemies always grow again. Therefore the remains of such things should not be protected.

கொடுக்காமல் பாக்கி வைத்திருக்கும் கடனும், முழுவதுமாக அணைக்காமல் விட்டு விட்ட நெருப்பும், இன்னும் இருக்கும் எதிரிகளும் மீண்டும் வளர்ந்து விடுவர். ஆகவே மீதமிருக்கும் படி அவற்றை விட்டு விடக் கூடாது.
**

tags – சுபாஷிதம், நிகழ்காலம்

DR RUDRA IN THE RIG VEDA (Post No.10,566)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,566

Date uploaded in London – –    15 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Rig Veda (RV) is the oldest book in the world dated between 6000 BCE and 1500 BCE. Scholars say it should have taken at least 500 years ‘to compose’ them or ‘put together’ in the present form. That means we must give the oldest part  of it 2000 BCE if we accept 1500 BCE as the date of RV. But Hindu Panchangas (almanacs) are crystal clear about the date of Veda Vyasa and they give him 3150 BCE. That means Vedas are in current form for at least 5000 years. Vyasa was the saint who divided Vedas into four and entrusted them to four of his disciples.

God is called Doctor and Medicine in the Rig Veda. Though mantras dealing with all Vedic Gods associate them with medicine and cure, Rudra commands the highest position in the field of Medicine. He was called Bhisak/ Doctor and Bhesajam/Medicine. Later we come across Dhanvantri, the Father of Medicine. We should call him the ‘father of MODERN medicine’. He is considered as Vishnu or his Avatar. Hindus call any one with some Divine Qualities an Avatar/incarnation of God.

Tamil poet Valluvan also confirms it in his Kural couplet 50. Tiru Valluvar (Valluvan) justifies all the 10 to 24 Avatars of Vishnu by this couplet. So Dhanvantri is Vishnu.

The words BHESAJAM and BHISAK occur in Vishnu Sahasranama as well. But there they mention the birth and death cycle as disease and God is described the physician who cures that disease. Later Tamil and Sanskrit poets use this concept throughout their devotional literature. One Sangam Tamil poet extended this to a philanthropist and called him ‘You are the Physician who cures the disease called Hunger’. This is in 2000 year old poem. But the same Vishnu Sahasranama called God as Vaidya (doctor) and Oshadi (herbal medicine).

All these show the concern of Hindus regarding one’s health, whether it is spiritual, mental or physical.

But if we go by the number of references to Doctor and Medicine then Rudra comes first. Rudra is Lord Siva. 2000 year old Sangam Tamil literature confirms it. Like Rig Veda Tamils never used SIVA until sixth century CE for Rudra. They used only his attributes such as Three Eyed, Blue Necked etc. In the same way Three Eyed -Trayambaka is in Rig Veda; Siva/auspicious as adjective is also in the Rig Veda.

xxx

References to Rudra in the Vedas

Yajur Veda (YV) has a part called Rudram-Chamakam. That is recited by all orthodox Saivite Hindus every day. The priests use it during Abishek of idols in all Siva Temples. Most sacred mantra OM NAMA SIVAYA and Trayambaka Mantra occur in it. God is praised as Bhesajam and Bhisak in it. But RV is older than YV.

Let us look at some of the mantras where physician and medicine occur in RV:-

1-43-2- Rudra’s medicines

1-43-4-Rudra, the possessor of healing remedies. Prayer for health and wealth.

xxxx

Yajur Veda -Vajasaneyi Samhita 16-48; Taittriya samhita5-10-1

Prayer to Rudra for men and beasts to be prosperous and free from disease.

2    Prayer to obtain what health and wealth father

Manu acquired

5  Rudra carries in his hands the best remedies.

7  Prayer not to kill he old men, boys, fathers, mothers, adults, foetus, and our bodies.

8   Prayer not to kill our sons, grand sons, and men, cows ad horses.

2-33-1

May we increase in offering O Rudra

2   Prayer  for 100 years of life by Rudra’s blissful medicines. Put away far from us  sickness in all directions.

One YV mantra mentioned  Rudra has 1000 remedies.

Xxx

Maruts and Medicine

Maruts /wind are considered sons of Rudra; he also has link   with medicine. Here are some RV references to Maruts and Medicine

RV 2-33-13

O Maruts, those pure medicines of yours.

RV 5-53-14

You shower down health and wealth, water and medicine, O Maruts.

RV 8-20-3

O bounteous Maruts, bring us some of your

Marut medicines

8-20-25

Whatever medicine there is on the

Sindhu , on the Askini , in the seas, on the mountains.

xxxxx

10-77-7

The man who offers gifts  to the Maruts , gains health and wealth, blessed with offspring.

This is not comprehensive. There are many more mantras linking Siva and Maruts with medicine. In addition we have other gods associated with medicine and medicine men. There are hundreds of mantras where Soma, herbs and Amrita are praised.

–subham–

tags – Dr Rudra, Medicine, Physician, Doctor, in Rig Veda