ஞான சீன மொழிகள்-99 (Post No.11,121)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,121

Date uploaded in London – 20 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

சீனாவின் பெரும் தொழிலதிபரான செல்வந்தர் “ஜாக் மா” கூறுகிறார்:-

நீங்கள் குரங்கின் முன்னால் வாழைப்பழங்கள் மற்றும் நிறைய பணம் வைத்தால், குரங்கு வாழைப்பழத்தை தான் எடுக்கும், பணத்தை அல்ல.ஏனென்றால் அந்த பணத்தால் நிறைய வாழைப்பழங்கள் வாங்க முடியும் என்பது அந்த குரங்குக்கு தெரியாது.

அதேபோல், உண்மையில் இன்று இந்திய மக்கள் தங்கள் தனிப்பட்ட சுயநலன்களை நிறைவேற்றவும், தேசிய பாதுகாப்புக்கும் இடையே தேர்வு செய்யவும் கேட்டால், அவர்கள் தங்கள் தனிப்பட்ட சுயநலன்களை தான் தேர்வு செய்வார்கள். தேசம் பாதுகாப்பாக இல்லை என்றால் அவர்களின் தனிப்பட்ட நலன்களின் மூட்டையை எங்கே கொண்டு செல்வார்கள் என்பதை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியாது.

இந்த நாட்களில் இந்தியாவில் இதுபோல பல முரண்பாடான போக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன :-ஜாக்மா

————————————-

சீனா தொழிலதிபர் ஜாக்மா இந்தியாவை பற்றி சொன்னது நூறு சதவீதம் உண்மை.

#முதல்:-

இந்தியா ஒரு ஏழை நாடு எனவே புல்லட் ரயில் தேவையில்லை.

ஆனால்,

மில்லியன் கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பல ஆண்டுகளாக உபசரித்துவரும் அளவுக்கு இந்தியா பணக்கார நாடு!

#இரண்டாவது:-

வக்ஃபு வாரியம் மற்றும் கிருஸ்தவ சபைகள் சார்பாக வாதிட நாட்டின் மிக விலையுயர்ந்த ஐம்பத்தாறு வழக்கறிஞர்கள். ஆனால், கோயில்கள் சார்பில் வாதிட வக்கீல் பராசரன் மற்றும் சுப்பிரமணிய சுவாமி என இருவர் மட்டுமே !!

#மூன்றாவது:-

நாட்டில் ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு உள்ளது.

ஆனால், பெருகிவரும் மக்கள் தொகைக்கு எதிரான போராட்டத்தை எப்போதாவது பார்த்தீர்களா ???

#நான்காவது :-*

நகைச்சுவை.

என்னவென்றால்,

2 குழந்தைகளை மட்டுமே கொண்டவர்கள் வரி செலுத்துகிறார்கள்.

ஆனால், மானாவாரியாக 7-8 குழந்தைகளைக் கொண்டவர்கள் மதத்தின் பெயரால் சிறுபான்மை என காட்டி மானியங்களை எடுத்துக்கொள்கிறார்கள் !!!!

மேற்கூறிய விஷயங்களை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம், ஆனால், இது நிச்சயமாக கருத்தில் கொள்ளத்தக்கது !!!

“இன்னும் ஒரு உண்மை”

இந்தியா பெரியது … ஹீரோக்களின் சுரங்கம். இன்னும் நம் மீது படையெடுத்து வந்த முகலாயர்களின்,பிரிட்டிஷாரின் அடிமை புத்திகள் ….. ஏன் ??

“ஏனெனில்..,

“ஒரு இந்து மன்னர் தன் தனிப்பட்ட எதிர்ப்பின் காரணமாக மற்றொரு இந்து அரசனிடமிருந்து விலகி முகலாயர்களை , பிரிட்டிஷாரை ஆதரிப்பதில் உறுதியாக இருந்தார்கள்”.

உதாரணமாக,14-ஆம் நூற்றாண்டில் சகோதரர்கள் சுந்தர பாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையே இருந்த பங்காளி சண்டையில் வீர பாண்டியனை வீழ்த்த அவரது சகோதரர் சுந்தர பாண்டியன் முகலாய சுல்தான் மாலிக்காபூரை ஆதரித்தார்.அதன் விளைவு பாண்டிய சாம்ராஜ்யமே அதோடு முடிவுக்கு வந்து முகலாயர்களால் மதுரை கைப்பற்றப்பட்டு பல ஆயிரம் கோயில்கள் இடிக்கப்பட்டு இந்துக்களின் இரத்த வெள்ளத்தில் தமிழர் பூமியே நரக பூமியானது.

இன்றும் அதே நிலைதான்.மோடி இந்துத்துவாவை ஆதரிக்கிறார்.

ஆனால் அந்நிய சித்தாந்தங்களால் குழப்பமடைந்த இந்துக்கள் சிலர் இந்துத்துவாவை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறார்கள் .. !!!!

Xxx subham xxx

Tags-  ஜாக்மா, சீனா, சீன மொழிகள்

Leave a comment

Leave a comment