
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,384
Date uploaded in London – – 22 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
யோகி ஆதித்ய நாத் கேட்கும் ஒரு கேள்வி ? பதிலை செகுலரிஸ்டுகள் சொல்வார்களா?
ச.நாகராஜன்
யோகி ஆதித்யநாத் அவர்கள் தனது நிலை பற்றி இப்படித் தெளிவாகக் கூறுகிறார்.
1. ஒரு முஸ்லீம் எந்த அளவுக்கு ஹிந்து மதத்தை மதிக்கிறாரோ அதே அளவுக்கு நான் இஸ்லாத்தை மதிக்கிறேன்.
2. ஒரு முஸ்லீம் எந்த அளவுக்கு ஶ்ரீ ராமரை மதிக்கிறாரோ அதே அளவுக்கு நான் அல்லாவையும் மதிக்கிறேன்.
3. ஒரு முஸ்லீம் எந்த அளவுக்கு கீதைக்கும் இராமாயணத்திற்கும் மதிப்புக் கொடுக்கிறாரோ அதே அளவிற்கு நான் குர்-ஆனுக்கும் மதிப்புக் கொடுக்கிறேன்.
4. இஸ்லாமியர் எந்த அளவுக்கு ஹனுமான்ஜிக்கு மதிப்புக் கொடுக்கிறார்களோ அதே அளவுக்கு நான் மஹம்மது நபி அவர்களுக்கும் மதிப்புக் கொடுக்கிறேன்.
5. ஒரு முஸ்லீம் கோவிலை எந்த அளவுக்குப் புனிதம் என்று கருதுகிறாரோ அதே அளவிற்கு மசூதியை நான் புனிதம் என்று மதிக்கிறேன்.
6. இஸ்லாமிய ஆண்கள் ஹிந்துப் பெண்களுக்கு எந்த அளவு மதிப்பைத் தருகிறார்களோ அதே அளவிற்கு நான் இஸ்லாமியப் பெண்களுக்கும் மதிப்புத் தருகிறேன்.
7. இஸ்லாமியர் ஹிந்துப் பண்டிகைகளை எந்த அளவு மதிக்கிறார்களோ அதே அளவிற்கு நான் இஸ்லாமிய பண்டிகைகளை மதிக்கிறேன்.
இப்படி இருக்கும் போது என்னை மதவெறியன் என்று எப்படிச் சொல்ல்லாம்?
நன்றி : ட்ரூத் ஆங்கில வார தொகுதி 90 இதழ் 5 13-5-2022
இதன் ஆங்கில மூலம் இதோ:

I. Brilliant Yogi Adityanath says:
1. I respect Islam to the same extent that a Muslim respects Hinduism.”
2. “I respect Allah as much as a Muslim respects Lord Ram.”
3. “I give the same respect to the Quran as a Muslim gives to the Gita or Ramayana.”
4. “I respect Prophet Mohammed as much as Muslims respect Lord Hanumanji.”
5. “I consider a mosque as pure as a Muslim considers a Mandir pure.”
6. “I respect Muslim women as much as Muslim men respect Hindu women.”
7. “I respect Muslim festivals as much as Muslims respect Hindu festivals.” “
Then how can I be called communal?” –from Social Media
Thanks : Truth
Source : Truth Weekly Volume 90 Issue இதழ் 5 Dated 13-5-2022
***
புத்தக அறிமுகம் – 94
அறிவியல் அதிசயங்கள் (பாகம் 1)
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்

1. செவ்வாயில் மனிதன் இறங்குவது நிச்சயம்
2. செவ்வாயில் மனித முகம்
3. சூரியன் இறக்கும் நாள்
4. பூமியின் மீது 76 லட்சம் அணுகுண்டுகள் மோதும் நாள்
5. 2028ல் பூமி சுக்கு நூறாகச் சிதறுமா?
6. இன்னொரு பூமி எங்கே?
7. வானத்தில் வைரச் சுரங்கம்
8. மறைந்த விண்கலங்கள்
9. வால் நட்சத்திரத்தில் இறங்கத் திட்டம் 10. ராட்சஸ அலைகள் உண்மையே – ஒப்புக்கொள்ளும் விஞ்ஞானிகள்
11. மேகத்தில் பாக்டீரியாக்கள்!
12. பனி மனிதனின் கால்
13. தேவை நல்ல தூக்கம்
14. உலகை மாற்றிய ஆறு தாவரங்கள்
15. சார்லஸ் பாபேஜ்
16. வருகிறான் இயந்திரன்
17. மூளைக்கும் பயிற்சி தேவை
18. அறிவியல் புதிர்
19. மிஸ் மெமரி
20. பிளாஸ்டிக் நுரையீரல்
21. எதிர்காலத்தைக் கலக்க இருக்கும் சயின்டிஃபிக் சினிமா
22. கண்ணில் அணியும் சினிமா
23. மூளை உள்ள எதிர்கால வீடு
24. காற்றில் எழுதும் எழுத்தையும் பிடிக்கும் பேனா
25. ஆக்ஸிஜன் குளியல்
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
Knowing the human brain is the most important invention of the country and this book serves in understanding the left and right section of the human brain and its impact on the human behavior and actions. Researches have proved that a human brain is never utilized to 100% of its capability. This book answers the 100% utilization issue and tells us the ways and means for cent percent usage of our brains to the full capability. A must read of all age groups.
இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் சாதனை என்றால் அது மனித மூளை பற்றிய ஆராய்ச்சியாகத்தான் இருக்கும். இடப்பக்க, வலப்பக்க மூளைப் பகுதிகளின் குணாதிசயங்களும், அவை மனிதர்களின் பண்புகளில், நடவடிக்கைகளில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கும் நூல். மனிதர்களின் மூளை அதன் தகுதிக்கேற்பச் செயல்படுத்தப்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூளையின் முழுமையான செயல்பாட்டிற்கான முறைகள் இந்நூலில் எளிமையாக விளக்கிக் கூறப்பட்டுள்ளன. கூடவே, எதிர்கால நியூரல் எந்திரங்கள், மாற்று எரிபொருள், தாவரங்களின் அறிவு ஆகியவை பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கின்றன. அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்!
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் அதிசயங்கள் -பாகம் 1’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
*tags- யோகி ஆதித்யநாத்