மரங்களை வளர்த்தால் சொர்க்கம் கிடைக்கும் (Post No.11,453)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,453

Date uploaded in London – 18 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

“परोपकाराय फलन्ति वृक्षाः परोपकाराय वहन्ति नद्यः ।

परोपकाराय दुहन्ति गावः परोपकारार्थ मिदं शरीरम् ॥”

Paropakārāya Falanti Vr̥kṣāḥ Paropakārāya Vahanti Nadyaḥ.

Paropakārāya Duhanti Gāvaḥ Paropakārārtha Midaṁ Śarīraṁ.

பரோப காராய பலந்தி வ்ருக்ஷாஹா பரோப காராய வஹந்தி நத்யஹ

பரோப காராய துஹந்தி காவஹ பரோபகாரார்தம் இதம் சரீரம்

பிறர் நலனுக்காகவே மரங்கள் பழுக்கின்றன

பிறர் நலனுக்காகவே ஆறுகள் பாய்கின்றன

பிறர் நலனுக்காகவே பசுக்கள் பாலைத் தருகின்றன

பிறர் நலனுக்காகவே நமது உடலும் (படைக்கப்பட்டுள்ளன)

இமயம் முதல் குமரி வரை, தமிழும் ஸம்ஸ்க்ருதமும் பழு மர உவமைகளைக் (Fruit Tree similes) கையாளுகின்றன. வேறு எந்த நாட்டு பழங்கால இலக்கி யத்திலும் இதைக் காண முடியாது

Xxxx

“तडागकृत् वृक्षरोपी इष्टयज्ञश्च यो द्विजः ।

एते स्वर्गे महीयन्ते ये चान्ये सत्यवादिनः ॥”

Taḍāgakr̥t Vr̥kṣaropī Iṣṭayajñaścha Yo Dvijaḥ.

Ete Svarge Mahīyante Ye Chānye Satyavādinaḥ.

தடாக க்ருத் வ்ருக்ஷரோபி  இஷ்ட யக்ஞஸ்ச யோ த்விஜஹ

ஏதே ஸ்வர்க மஹீயந்தே யே சாந்யே  ஸத்ய வாதினஹ

யாருக்கு சுவர்க்கம் கிடைக்கும்? உண்மை பேசுவோருக்கும், மரங்களை நடும் , குளங்களை வெட்டும், வேள்விகளைச் செய்யும் இரு பிறப்பாளருக்கு சுவர்க்கத்தில் பெரிய வரவேற்பு  கிடைக்கும்..

இரு பிறப்பாளர் : பிராமண, க்ஷத்ரிய வைஸ்யர்கள் 

Xxxx

“तस्मात् तडागे सवृक्षा रोप्याः श्रेयोऽर्थिना सदा।

पुत्रवत् परिपाल्याश्च पुत्रास्ते धर्मतः स्मृताः ॥”

Tasmāt Taḍāge Savr̥kṣā Ropyāḥ Śreyo’rthinā Sadā.

Putravat Paripālyāścha Putrāste Dharmataḥ Smr̥tāḥ

தஸ்மாத் தடாகே ஸ வ்ருக்ஷா ரோப்யாஹா ஸ்ரேயோ ர்த்தினா  ஸதா

புத்ரவத் பரிபால்யாஸ் ச புத்ராஸ்தே தர்மதஹ  ஸ்ம்ருதாஹா

தனக்கு நன்மை கிடைக்க வேண்டுமாயின், ஒருவர் செய்யவேண்டிய  சிறந்த செயல், குளங்களுக்கு அருகில் மரங்களை நட்டு அவைகளைச் சொந்த மகன்கள் போல போற்றி வளர்க்கவேண்டும் . ஏனெனில் மரங்கள், ஒருவரின் மகன்களுக்குச் சமம் என்று தர்ம சாஸ்திரங்கள் செப்புகின்றன.

Xxx

வேள்விக்கான மரங்கள்

பலாச பல்குன் யக்ரோதாஹா ப்லக்க்ஷா அச்வத்தா விகங்ருதாஹா

உதும்பரஸ் ததா பில்வஹ சந்தனோஞ  யாக்ஞயாஸ்ச யே

ஸ ஹலோ தேவதாருஸ்ச  சாலஸ் ச கதிரஸ் ததா

ஸமிதர்த்தே ப்ரஸஸ்தாஹா ஸ்யுஹு  ஏதே வ்ருக்ஷாஹா விசேஷதஹ

வாயு புராணம்

வேள்விகளில் ஸமித்துகளாக  சில வகை மரங்களின் குச்சிகளைப் பயன்படுத்துவதே சாலச்  சிறந்தது .

அவை புரசு, பல்குனீ , ஆல் , இத்தி, அரச மரம், விகங்கதம், அத்தி, வில்வம், சந்தனம்  ஆகியன யாகத்துக்கானவை.

ஸஹல , தேவதாரு, சால மரம், கதிர , கருங்காலி, இவைகள் ஹோம ஸமித்துக்கள் .

எனது கருத்து :

புராணத்தில் எவ்வளவு பயனுள்ள விஷயங்கள் இருக்கின்றன என்பதற்கு இந்த இரண்டு ஸ்லோகங்கள் எடுத்துக்காட்டு . ஒரு மரம் பத்து மகன்களுக்குச் சமம் என்ற மத்ஸ்ய புராண ஸ்லோகத்தை முந்திய கட்டுரையில் கண்டோம். இங்கு 14 வகை மரங்களைப் பற்றி பேசப்படுகிறது. பிராமணர்களுக்கு இவை மட்டுமின்றி வேறு பல தாவரங்களை பற்றியும் தெரிந்து இருந்தது எடுத்துக்காட்டாக பிள்ளையாருக்குப் பயன்படுத்தும் 21 இலைகள்/ பத்திரங்கள் ஆகும்.

இப்போது பெரும்பாலோருக்கு மரம் எது, கொடி எது என்று கூடத்  தெரியாது தாவரவியல் (Botany) தெரிந்து இருந்ததால் இந்த மரங்கள்தான் யாக, யக்ஞங்களுக்குச் சிறந்தவை என்பதை அவர்களால் சொல்ல முடிந்தது. 2000, 3000ஆண்டுகளுக்கு முன்னர் வேறு எந்த மத நூல்களிலும் இவ்வளவு விஷயங்கள் இராது. புராணங்களை ஒதுக்காமல் பாதுகாப்பது நம் கடமை.

XXX

மனுவின் “மர  மண்டை”!! Green Headed Manu !

விவசாயிகளிடையே அடிக்கடி வரும் தகராறு, என்னுடைய நிலத்தின் எல்லையை மீறி நீ பயிரிட்டாய் அல்லது மாடுகளை மேயவிட்டாய் என்பதாகும். இதற்கு மனு (Manu)  ஒரு அழகான யோஜனையைச் சொல்கிறார்.

லண்டனில் என் தோட்டத்துக்கு இரண்டு புறங்களில் மர பலகைகளினால் வெளி போட நான் இரண்டாயிரம் பவுன்களுக்கு மேல் செலவிட்டேன் (2020-ம் ஆண்டில்). என்னுடைய தோட்டத்தைப் பார்த்து  நிற்கும்போது வலது புற முள்ள வேலி  எனக்குச் சொந்தம். இடது புறமுள்ள வேலி அடுத்த வீட்டுக்காரருக்குச் சொந்தம் (in semi-detached houses or row type houses). ஆகையால் அவற்றைச் செப்பனிடுவது, பராமரிப்பது அவரவர் கடமை. பின்புறமுள்ள வேலியும்  என்னுடையதே.ஒட்டியுள்ள வீடுகளில் இந்த விதி பொருந்தும். தனித்தனி வீடுகளாக (Detached Hoses) இருந்தால் முழுச் செலவும் நம்முடையதே.

அந்தக் காலத்தில் ஏதேனும் மரங்கள் அல்லது செடிகள்தான் வேலி . ஒரு செலவும் கிடையாது. இப்பொழுது அடுத்தவீட்டு, நாய், பூனை, சிறுவர் சிறுமியர் வந்து பிரச்சனை  செய்யக்கூடாது என்பதற்காக தண்டச் செலவு.

விவசாய வேலி தொடர்பான சண்டைகளைத் தவிர்க்க அரசாங்கமே மரங்களையும், குளங்களையும் வேலிகளாகச் செய்ய வேண்டும் என்கிறது மனு ஸ்ம்ருதி. மநு சொல்லாத விஷயமே இல்லை.

மன்னரானவன் ஆல மரம், அரச மரம் முள் முருங்கை , இலவம் , சால மரம், பனை மரம் ஆகியவற்றால் வேலிகளை அமைக்கலாம் என்கிறார் மநு.

sImAvR^ikShA.nshcha kurvIta nyagrodhAshvatthaki.nshukAn |

shAlmalIn sAlatAlA.nshcha kShIriNashchaiva pAdapAn |

सीमां प्रति समुत्पन्ने विवादे ग्रामयोर्द्वयोः ।

ज्येष्ठे मासि नयेत्सीमां सुप्रकाशेषु सेतुषु ॥ ८.२४५॥

सीमावृक्षांश्च कुर्वीत न्यग्रोधाश्वत्थकिंशुकान् ।

शाल्मलीन् सालतालांश्च क्षीरिणश्चैव पादपान् ॥ ८.२४६॥

——மனு ஸ்ம்ருதி 8-46

8-246. Let him mark the boundaries (by) trees, (e.g.) Nyagrodhas, Asvatthas, Kimsukas, cotton-trees, Salas, Palmyra palms, and trees with milky juice- MANU SMRITI

அந்தப் பணியை ஆனி ( ஜேஷ்ட) மாதத்தில் செய்ய வேண்டும் என்றும் மநு விளம்புகிறார். ஏனெனில் அப்பொழுது நல்ல வெளிச்சம் உடைய நீண்ட பகற்பொழுது இருக்கும். எவ்வளவு பிராக்டிகலாக (Practical approach) மனு ஒவ்வொரு விஷயத்தையும் அணுகுகிறார் என்பற்கு இதுவும்  ஒரு எடுத்துக்காட்டு.

Xxx

புறச்சூழல் வாழ்க ; அசுத்தம் செய்யாதே

नाप्सु मूत्रं पुरीष वाष्ठीवनं वा समुत्सृजेत्।

अमेध्यमलिप्तमन्यद्वा लोहतं वा विषाणि वा।”

Nāpsu Mūtraṁ Purīṣa Vāṣṭhīvanaṁ Vā Samutsr̥jet.

Amedhyamaliptamanyadvālohataṁ Vā Viṣāṇi Vā.

நாப்ஸு மூத்ரம் புரீஷ வாஷ்டிவனம் வா ஸமுத்ஸ்ருஜேத்

அமேத்யமலிப்த மன்யத்வா லோஹதம் வா விஷாணி வா

மலம், மூத்திரம் குப்பை, ரத்தம், விஷம் முதலியவற்றை நீர்நிலையில் கலக்கக்கூடாது. அவை புறச்சூழலை மாசு படுத்துவதோடு மனிதர்களின் நலனுக்கும் கேடு செய்யும்.

–subham—

Tags– மரம் ,வளர்ப்பு , சுவர்க்கம் , சொர்க்கம் மநு , வேலி , மாசு, அசுத்தம் , புறச்சூழல்

Leave a comment

Leave a comment