இறைவனின் அருளுக்கு ஜாதி பேதம் கிடையாது, உயர்ந்தோர், பட்டியல் இனத்தோர் என்ற வேறுபாடு கிடையாது என்பதை நமது பண்டைய இலக்கியம் தெளிவு பட விளக்குகிறது.
பின்னால் அரசியல் காரணங்களுக்காக வேறுபாடு உருவாக்கப்பட்டு பல்வேறு சொற்றொடர்களில் அமைக்கப்பட்டு பட்டியல் இனத்தோர், தலித், ஹரிஜன், முன்னேறிய வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் என்றெல்லாம் சொல்லப்பட்டு பிளவை ஏற்படுத்தியது.
சுந்தர மூர்த்தி நாயனார் வாழ்வில் இடம் பெற்ற ஒரு சுவையான வரலாறு இறைவனின் அருள் எல்லோருக்கும் பொது என்பதை விளக்குகிறது.
இறைவனே பள்ளன் ஆன நிஜ வரலாறு இது.
சுந்தரர் தனது உளத்திலிருந்து எழுந்த அருள் பாடல்களைப் பாடியவாறே ஒவ்வொரு தலமாகச் சென்று சிவபிரானைத் தரிசித்து வந்தார்.
‘சுந்தரர் பாடிக் கொண்டே வருகிறார். அவருக்குத் தேவையான பொன்னைக் கொடுக்க என்னிடம் பொன் இல்லையே’ என்று ஒளிந்தாற் போல ஒரு திருவிளையாடலை நடத்தத் திருவுள்ளம் கொண்ட பட்டிப் பெருமான் ஒளிந்து கொண்டார்.
இந்த வரலாறு நடந்ததும் கொங்குமண்டலத்திலே தான் என்று பெருமையுடன் இதைப் பதிவு செய்கிறது கொங்குமண்டல சதகம் பாடல் எண் 18.
பாடல் :
கடுவாள் விழியினை யாரூர்ப் பரவை கலவிவலைப்
படுவார் தமிழ்சுந் தரர்பாடற் கீயப் பரிசின்மையால்
நெடுவாளை பாயும் வயலூடு போகி நெடியபள்ள
வடிவாகி நின்றதும் பேரூர்ச்சிவன் கொங்கு மண்டலமே
பொருள் : ‘சுந்தரர் பாடி வருவார், அவருக்குக் கொடுக்க பொன் இல்லையே நம்மிடம்’ என்று ஒளிந்தார் போலப் பட்டிப் பெருமானார், பள்ள வடிவு கொண்டு ஒளிந்ததும் பேரூரில், அந்தப் பேரூரும் கொங்குமண்டலத்தைச் சார்ந்ததே என்பதாம்.
கோவை மாநகரிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி பேரூர் பட்டீஸ்வர கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் கரிகால் சோழ மன்னனால் கட்டப்பட்டது. பச்சைநாயகி அம்மன் பட்டிஸ்வரருடன் இருந்து அருள் பாலிக்கும் தலம் இது. இங்குள்ள லிங்கம் ஸ்வயம்பு லிங்கம்.
இதற்கு பிப்பலாரண்டயம், பட்டிபுரி, காமதேனு புரி எனப் பல பெயர்கள் உண்டு.
ஒரு முறை பிரம்மா அயர்வுற்று, தூங்கி, படைப்புத் தொழிலைச் செய்யவில்லை. இதை அறிந்த மஹாவிஷ்ணு காமதேனுவை அழைத்து, ‘நீ சிவனை நோக்கித் தவமிருந்து அவர் அருள் பெற்று படைப்புத் தொழிலைச் செய்வாயாக’ என்றார். அதன் படி காமதேனு இமயமலையில் சிவனை நோக்கித் தவம் செய்ய ஆரம்பித்தது. ஆனால் சிவன் அருள் சித்திக்கவில்லை.
நாரதர் ஒரு சமயம் அங்கே சென்றார். ஆதிலிங்க மூர்த்தியாக காஞ்சியில் அருள் பாலிக்கும் சிவபெருமான் பற்றிச் சொல்ல, காமதேனு அங்கு சென்று தினமும் சிவபெருமானுக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது.
ஒரு நாள் காமதேனுவின் கன்றான பட்டி அந்த லிங்கத்தின் மேல் எழுந்திருந்த புற்றை விளையாட்டாய்க் கலைத்து விட்டது.
கன்றின் குளம்படி சிவபெருமானின் திருமுடியின் மீது படிந்து விட்டது.
இதை அறிந்த காமதேனு பெரிதும் வருத்தமுற்றது.
காமதேனுவின் வருத்தத்தைப் போக்க சிவபிரான் காமதேனு முன் தோன்றினார்.
“கவலையுற வேண்டாம். பட்டியின் குளம்படித் தழும்பை நான் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்.இங்கே தொடர்ந்து நீ தவம் செய். எனது நடன தரிசனத்தை நீ எப்போதும் இங்கு காணலாம். இந்தத் தலம் பட்டீஸ்வரம் என இனிப் புகழ் பெறும்.” என்று கூறி அருளினார்.
இன்றும் சிவபிரான் திருமுடியில் இந்தக் குளம்படித் தழும்பு உள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக இறைவன் பட்டீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார்.
இந்தத் தலத்தில் பல அருளாளர்களும் வருகை புரிந்து பாடல்களைப் பாடித் தொழுதுள்ளனர்.
இன்றும் பக்தர்கள் அனைவரும் வருகை புரிந்து சிவபிரானை வணங்கும் மாபெரும் தலமாக பட்டீஸ்வரம் உள்ளது.
உலகத்தில் தோன்றிய காவியங்களில் முதல் காவியம் வால்மீகி ராமாயணம் ஆகும். இது ஆதி காவியம் என்று அழைக்கப்படுகிறது . இதில் 7 காண்டங்கள் உள்ளன; அவை ஒவ்வொன்றும் சர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன . எளிய சம்ஸ்க்ருதம்; ஆனால் அற்புதமான கதையும் சொல்லாக்கமும் உடையது. சம்ஸ்க்ருதத்தில் பிற்காலத்தில் எழுதிய எல்லோரும் ஏதாவது ஒரு விஷயத்தில் அவரைப் பின்பற்ற்றியதைக் காணலாம். சங்க காலத்திலேயே தமிழ்நாட்டில் ராமாயணம் பரவியிருந்ததை அகநானூற்றுப் புறநானூற்றுப் பாடல்களில் காண்கிறோம். ராவணனை அரக்கன் என்றும் சங்கப் புலவர் வசை பாடுகிறார். பிற்காலத்தில் தேவாரம் பாடிய மூவரும் ராவணனை வசைபாடுவதோடு ராமனைப் புகழ்வதையும் காண்கிறோம். அதே போல ஆழ்வார்களின் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திலும் படிக்கிறோம் .
ராமாயணத்திலுள்ள 7 காண்டங்கள் – பால, அயோத்தியா , ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த, உத்தர காண்டங்களாகும். இதில் கடைசி காண்டம் உத்தர காண்டம். இதை சிலர் பிற்சேர்க்கை என்றும் வால்மீகி எழுதாதது என்றும் செப்புவர். ஆனால் இது பிற்சேர்க்கையாக இருந்தாலும் வால்மீகி தான் எழுதியிருக்க வேண்டும் என்பது சம்ஸ்க்ருத மொழியை அறிந்தோரின் வாதம். எது எப்படியாகிலும் அதிலுள்ள சுவையான விஷயங்கள் உண்மையில் நடந்தவையே.
இந்து மத்தில் நிறைய நாய்க் கதைகள் இருக்கின்றன. இது ரிக் வேதத்தில் துவங்குகிறது. சரமா, சரமேயஸ் என்ற நாய்கள் பற்றி ரிக் வேதத்தில் படிக்கிறோம். மஹாபாரதத்தில் பாண்டவர்கள் ஐவரும் வடக்கு நோக்கி நடந்து உயிர் விடுகையில் யுதிஷ்டிரனை கடைசி வரை ஒரு நாய் தொடர்ந்து சென்ற கதையை நாம் கேட்கிறோம். அது போலவே ராமாயண உத்தர காண்டத்தில் ஒரு நாய்க் கதை வருகிறது. பலரும் கேட்டிருக்க மாட்டார்கள்.
காலையில் செய்யவேண்டிய கடமைகளை முடித்த பின்னர் பிராமணர்களையும் , BUSINESS COMMUNITY பிசினஸ் கம்யூனிட்டியைச் சேர்ந்த வர்த்தகர்களையும் சந்தித்து ராமர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
பின்னர் லெட்சுமணனை அழைத்து இன்று நம்மிடம் மனுக்கொடுக்க வந்துள்ள பொதுமக்களை அழைத்து வா என்கிறார்.
(இதில் கவனிக்க வேண்டிய விசயங்கள் — ராமபிரான் அரசன் என்ற முறையில் பிஸினஸ் கம்யூனிட்டி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தியதாகும் . அதற்குப்பின்னர் பொது மக்களை சந்திக்க நேரம் ஒதுக்கியதையும் கவனிக்க வேண்டும் ).
இவ்வாறு கூறப்பட்ட லட்சுமணன் அரண்மனையிலிருந்து வெளியே சென்று ஒரு நாய் நிற்பதைக் கண்டான் ; புத்திசாலியான அவன், நாயை உள்ளே அழைத்துச் சென்று ராமனிடம் நாயை அறிமுகம் செய்துவைத்தான் .
அதா பச்யத தத்ரஸ்தம் ராமம் ச்வா பின்ன மஸ்தகஹ
ராமஸ்ய வசனம் ச்ருத்வா ஸாரமேயோ அப்ரவீத் இதம்
உடைந்த தலை யுடைய அந்த நாய், ராமரைப் பார்த்தது .
ராமரின் அனுமதி பெற்ற பின்னர் பேசத் தொடங்கியது.
பிக்ஷூ ஸர்வார்த்த சித்திச்ச பிராஹ்மணா வஸதே வஸத்
தேன தத்தஹ ப்ரஹாரோ மே நிஷ்காரண மாநாகசஹ
ஸர்வார்த்த சித்தி என்ற ஒரு பிராஹ்மண பிக்ஷூ ,அக்ரஹாரத்தில்
வசித்து வந்தான் . ஒரு பாவமும் அறியாத என்னை அவன் காரணமின்றி அடித்துவிட்டான்
மன்மதன்- ரதி பற்றி அறியாத இந்துக்கள் எவருமில்லை. சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் ஒரே வருணனைதான் காணப்படுகிறது. அவனிடம் 5 மலர் அம்புகள் உள்ளன. அதை அவன் எய்தால் ஒருவர், காதல் வசப்படுவர். பின்னர் அவர்கள் செய்யும் வேலையை அப்பர் சுவாமிகள் முதல் பலரும் வருணித்துள்ளனர். அப்பர் இந்தக் காதலை சிவன் மீதுள்ள காதலாக வருணிக்கிறார். அவரோ காமனை எரித்தவர். பற்றுக பற்றற்றான பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு என்ற வள்ளுவன் வாக்கினுக்கிணங்க சிவனை நினைத்தவர் மன்மத லீலையில் இருந்து விடுபடுவர்.
வேறு எங்கும் சொல்லாத ஒரு விஷயத்தை அம்பலவாணர் கற்பனை செய்து சொல்லுவது நன்கு ரசிக்கத்தக்கது. அதாவது ஒவ்வொரு மலரும் காதல் வயப்பட்டோரின் உடலில், மனதில் என்ன செய்யும் என்பது கவிஞரின் புது கற்பனை.
Xxxxx
காதல் வயப்பட்ட ஆணோ பெண்ணோ என்ன செய்வார்கள் என்று வடமொழியில் ஒரு அழகான ஸ்லோகம் இருக்கிறது
அஷ்டாங்க மைத்துனம்
ஸ்மரணம் கீர்த்தனம் கேலி: ப்ரேக்ஷணம் குஹ்யபாஷணம்
சங்கல்போ(அ)த்யவசாயஸ்ச க்ரியாநிஷ்பத்திரேவ ச
——விருத்த வசிஷ்டர்
பொருள்:-
ஒரு பெண்ணை நினைத்த்ல், அவளைப் பற்றிப் பிதற்றல், , அவளுடன் விளையடல், அவளைப் பார்த்தல் (அடிக்கடி), அவளுடன் கிசுகிசு ரஹசியம் பேசல் (மொபைல்போன், பேஸ்புக், ஈ மெயில் மூலம்), அவளுடன் அனுபவிக்க வேண்டியது பற்றி எண்ணுதல்/கனவு காணுதல், அவைகளை அடைய திட்டமிடல்/முயற்சி செய்தல், இதன் காரணமாக செய்ய வேண்டிய கடமைகளை மறந்துபோதல் என்று அஷ்டாங்க மைதுனம் (எண்வகைப் புணர்ச்சி) பற்றி முது வசிட்டன் சொல்லுகிறான்.
இந்தக் கருத்துகளை அப்பர் பெருமான் தனது தேவாரப் பாடலில் அப்படியே வடித்துள்ளார்:. இதுதான் மன்மத லீலை.
அப்பர் தேவாரம்
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னம் அவளுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்;
அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தே ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்
தலைப் பட்டாள் நங்கை தலைவன் றாளே
—–தேவாரம், ஆறாம் திருமுறை, பாடல் 258
சங்க இலக்கியத்தில் அகப்பாட்டுகளைப் படித்தோருக்கு காதலன், காதலியின் நிலை விளங்கும். அப்பர் கூறிய பக்திப் பித்தை, பைத்தியத்தை அங்கும் காணலாம்..
Xxxxxxxxxxxx
தமிழ் நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கிய எம். கே தியாகராஜ பாகவதர் பாட்டு
மன்மத லீலையை வென்றார் உண்டோ?
திரைப்படம் : ஹரிதாஸ்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1944
மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
நின்மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என்மதி மயங்கினேன் நான்
என்மதி மயங்கினேன் மூன்று உலகிலும்
என்னுடனே நீ பேசினால் வாய்முத்துதிர்ந்து விடுமோ? – உனை
செழுஞ்சூதமுடன் அசோகம், தளவம், மலர்நீலம் இவை ஐந்துமே மாரவேள்
கணைகள் ஆம் – தாமரை, வளமிகுந்த மா, அசோகு, முல்லை, மலர்ந்த நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும், இவை
செயும் குணம் – இவை (உயிர்களுக்கு) ஊட்டும் பண்புகள், முளரி மனதில்
ஆசையை எழுப்பும் – தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும்,
வினவில் ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும் – வினவுமிடத்துச்
சிறப்புடைய மாமலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும், அசோகம் மிகத் துயர்செயும் – அசோக மலர் மிகவும்
துன்பத்தைத் கொடுக்கும், குளிர் முல்லை வீழ்த்திடும் – குளிர்ந்த முல்லைமலர் (படுக்கையில்) விழச்செய்யும், நீலம் உயிர் போக்கிவிடும் – நீலமலர் உயிரை ஒழிக்கும், மேவும் இவை செயும் அவத்தை – பொருந்தும் இவை உண்டாக்கும்
நிலைகளாவன : நினைவில் அதுவே நாக்கம் – எண்ணத்தில் அதுவே
கருதுதல், வேறு ஒன்றில் ஆசை அறல் – மற்றொன்றில் ஆசை நீங்கல்,
நெட்டுயிர்ப்பொடு பிதற்றல் – பெருமூச்சுடன் பிதற்றுதல், நெஞ்சம் திடுக்கிடுதல்- உள்ளம் திடுக்கிடல், அனம் வெறுத்திடல் – உணவில் வெறுப்பு, காய்ச்சல் -உடல் வெதும்புதல், நேர்தல் – மெலிதல், மௌனம் புரிகுதல் – பேசாதிருத்தல்,அனைய உயிர் உண்டு இல்லை என்னல் – ஆசையுற்ற உயிர் உண்டோ
இல்லையோ என்னும் நிலையடைதல், ஈரைந்தும் ஆம் – (ஆகிய இவை)
பத்தும் ஆகும்.
xxxxx
அறப்பளீசுர சதகப் பாடல் எண் 91. காமன் துணைப்பொருள்கள்
வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;
மேல்விடும் கணைகள் அலராம்;
வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;
வேழம்கெ டாதஇருள் ஆம்;
வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடிய
வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;
மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;
மனதேபெ ரும்போர்க் களம்;
சஞ்சரிக இசைபாடல்; குமுதநே யன்கவிகை;
சார்இரதி யேம னைவிஆம்;
தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்
தவறாதி ருக்கும் இடம்ஆம்;
அஞ்சுகணை மாரவேட் கென்பர்; எளியோர்க்கெலாம்
அமுதமே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) எளியோர்க்கு எலாம் அமுதமே – ஆற்றல் அற்றவர்கள்
2 Nov 2022 — Hinduism is the only religion in the world that showed sex is holy and necessary. They included in the four values of life Dharma, Artha, KAMA …
Tags-மன்மதன், ரதி, லீலை, அம்பலவாணர், சதகம், ஐந்து மலர் அம்பு
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மஹாபாரத மர்மம்
பாண்டவர் ஐவர் ஒருத்தியை மணக்கலாமா?
ச.நாகராஜன்
பாண்டவர் ஐவர் திரௌபதி ஒருத்தியை மணம் புரிந்தது சரியா?
காலம் காலமாகக் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு மஹாபாரதத்திலேயே பதில் உள்ளது.
மஹாபாரத கதாபாத்திரங்களுக்கும் இந்த சந்தேகம் வர அது கேட்கப்பட்டது; உரியவரால் உரிய பதில் அளிக்கப்பட்டது.
வேதமே அனைத்து தர்மங்களுக்கும் ஆதாரம்.
“வேதத்தில் அன்னையைத் தெய்வமாகக் கொள், தந்தையை தெய்வமாகக் கொள்” எனக் கூறப்பட்டுள்ளது.
ஆகவே தாயும் தந்தையும் எதைச் சொல்கிறாரோ அதைச் செய்ய வேண்டுமென்பது பெறப்படுகிறது.
ஆனால் அதே வேதத்தில் இதற்கு முரணான ஒன்றும் காணப்படுகிறது.
“அயுக்தமாக – அதாவது யுக்திக்குப் பொருந்தாத – ஒன்றைப் பெரியோர் சொன்னால் அது பெரியோர் வாக்கியமாயினும் , குரு வாக்கியமாக இருந்தாலும் அதை அங்கீகரிக்கக் கூடாது” என்று இப்படி வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
இப்படி இரு வகையான அறிவுரைகள் ஒன்றுக்கொன்று முரண்பாடு போல உள்ளவை கூறப்பட்டுள்ளனவே என்ற சந்தேகம் யாருக்கும் எழலாம்.
ஆனால் சாஸ்திரம் நன்கு அறிந்தவர்கள், சாஸ்திரங்களை முற்றிலுமாகப் படித்து உணர்ந்தவர்கள் இதை முரண்பாடான வாக்கியங்களாகக் கருதவில்லை.
யுக்திக்குப் பொருத்தமில்லாத ஒன்றை குரு சொன்னாலும் அதைக் கேட்கும் அவசியம் இல்லை என்பது யாருக்குப் பொருத்தமானது?
குரு சொல்வதை அப்படியே கேட்டுக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது யாருக்குப் பொருந்தும்?
குரு சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற வாக்கியம் குருவையே அண்டி அவருடனேயே வசிக்கும் பிரம்மசாரிகளுக்கே பெரிதும் பொருந்தும்.
குரு வாக்கியமும் தள்ளத் தக்கதே என்ற வாக்கியம் பிரம்மசாரி அல்லாத இதர ஆச்ரமங்களில் உள்ளவர்களுக்கே பொருந்தும்.
இதற்கு ஆதாரமாக உள்ள மனு வாக்கியம் இதோ:
“அக்நியாதானம், பூமியில் சயனம், பிக்ஷாடனம், குரு சொல்வதைச் செய்தல் ஆகிய இவைகளை உபநயனமான குருகுலவாசம் செய்யும் பிரம்மசாரியானவன், அவன் குருகுலவாசம் முடியும் வரையில் செய்து தீர வேண்டும்.”
இது அதிகாரி நிர்ணயத்தின் கீழ் வந்திருப்பதால் குரு சொல்வதைச் செய்தே ஆக வேண்டும் என்று ஏற்படுகிறது.
இந்த குருத்வம் மூவகையாகச் சொல்லப்படுகிறது.
,மாதா, பிதா, குரு ஆகிய இம்மூவர்களுமே குரு என நிர்ணயிக்கப்படுகிறது.
ஒரு வேளை தந்தை இறந்து போனால் அந்த குருத்வமும் தாயிடமே வந்து சேரும்.
அதே போல ஒரு ஆசார்யர் தன் சீடர்களை யாரிடம் ஒப்புவித்திருக்கிறாரோ அவரும் குருவே தான்.
முதலில் பாண்டு மஹராஜன் குந்தியிடம் பாண்டவர்கள் ஐவரையும் ஒப்புவித்தான். துரதிர்ஷ்டவசமாக மாண்டு போனான்.
பின்னர் ஆசாரியர் துரோணர் வந்தார். அவரும் பாண்டவர் ஐவரையும் குந்தியிடமே ஒப்புவித்தார்.
ஆக இப்படி பாண்டவர்களை நோக்கும் போது குந்தி தேவியின் குருத்வம் மூன்று வகையாலும் நிரம்பி உள்ளது.
அவளுக்கு மூன்று வகை குருத்வ அதிகாரம் ஏற்பட்டுள்ளபடியால், குந்தியின் வார்த்தையைத் தட்டவே முடியாது என்பது பெறப்படுகிறது.
அர்ஜுனன் வில்லை வளைத்து லக்ஷியத்தை நோக்கி அடித்து பந்தயத்தில் வென்றவுடன் திரௌபதி அவனுக்கு உரியவளாகி விட்டாள்.
அன்னையிடம் தாங்கள் வென்றதைச் சொன்ன போது, குந்திதேவி, “ஐவரும் புஜியுங்கள்” என்று கூறினாள்.
ஆகவே ஐவரும் திரௌபதியை மணம் செய்து கொள்ள வேண்டியதாயிற்று.
ஆனால் துருபதனோ இதை ஆக்ஷேபிக்கிறான்.
யுதிஷ்டிரர் தனது தாயின் சொல்லையே கேட்பேன் என்ற திடத்துடன் இருந்தார்.
ஜடிலை, ஸப்த ரிஷிகளிடம் இருந்ததையும் அவர் சொல்கிறார்.
அப்போது வியாஸர் அங்கு வருகிறார். நளாயினியே குந்தி தேவி என்ற ரகசியத்தை அவர் கூறி அருள்கிறார்.
சங்கரர், நளாயினிக்கு அவள் ஐந்து முறை கேட்டதால் ஐந்து கணவரை வரமாக அளித்தார்.
இப்படி விவரமாக வியாஸர் கூறியதைக் கேட்ட துருபதன் திரௌபதியை பாண்டவர் ஐவருக்கும் மணம் முடித்துத் தர சம்மதித்தான்.
பாண்டவர் வரிசைப்படி கிருஷ்ணையை (திரௌபதியை) மணம் செய்து கொண்டனர்.
திரௌபதியை பந்தயத்தில் ஜெயித்து வந்த போது, ‘ஐவரும் புசியுங்கள்’ என்று தான் சொன்ன வாக்கியம் நடக்காமல் போய்விடக் கூடாது என்ற கவலையுடன் இருந்த குந்தி தேவி கூறினாள் :
“தர்மசாரியாகிய யுதிஷ்டிரர் சொல்லுவது உசிதமே. நான் அந்ருதத்திலிருந்து எப்படி விடுபடப்போகிறேனோ, எனும் பயம் எனக்கு மிகவும் உள்ளது. இந்த அந்ருதத்திலிருந்து எப்படி விடுபடப்போகிறேனோ”
இப்படி தன் தாயான குந்தி தேவி வருத்தப்படுவதைக் கேட்டுப் பொறுக்காத தர்மர், ஐவர் ஒருத்தியை மணம் புரியக்கூடாது என்பது சரியே என்றாலும் கூட, பிதா, மாதா, குரு ஆகிய மூவரின் குருத்துவமும் ஒருங்கே கொண்ட தன் தாயான குந்தியின் வார்த்தையின் படி நடக்காமல் போனால் அதுவே மஹாபாபம் என்பதை உணர்ந்து ஐவரும் ஒருத்தியைக் கல்யாணம் செய்வதை ஏற்றுக் கொள்ளத் துணிந்தார்.
துருபதன் கூறுகிறான்” “ ஓ, குருநந்தனரே, ஒருவனுக்குப் பல மனைவி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருத்திக்குப் பல கணவன்மார்கள் விதிக்கப்பட்டதாக ஓரிடத்திலும் காணப்படவில்லையே”
“ஓ, கௌந்தேயரே! உலகத்திற்கும் வேதத்திற்கும் எதிராக உள்ள அதர்மத்தைத் தர்மம் போலச் செய்வது சரியல்ல. உமக்கேன் இப்படி புத்தி போகிறது?” என்று இப்படி துருபதன் தர்மரை நோக்கிச் சொல்ல,
அவர் பதில் கூறுகிறார்:-
“ஓ! மஹாராஜனே! தர்மம் மிக்க சூக்ஷ்மமாய் உள்ளது. இதன் கதியை எம்மால் அறிய இயலவில்லை. முன்னோர்கள் சென்ற வழியை அநுசரிக்கின்றோம்.
என் வாக்கு அந்ருதத்தில் செல்வதில்லை. மனம் அதர்மத்தில் செல்லாது. இவ்விஷயத்தில் என் மனம் செல்லுகின்றபடியால் இது எந்த வகையிலும் அதர்மமாகாது.”
முன்னோர் வழியையே பின்பற்றுவேன் என்பதனால் ஶ்ரீ ராமர் எவ்வளவு பாபமாயினும் பிரம்மசாரியானவன் குரு சொன்னபடி நடப்பதே தர்மம் என வாழ்ந்து காட்டியதைச் சுட்டிக் காட்டுகிறார். தாடகையை பெண் என்ற போதும் கூட குரு வாக்கியத்தை மேற்கொண்டு வதம் செய்தார் ஶ்ரீராமர்.
“குருவின் வாக்கியமே தர்மம் என தர்ம தத்துவம் உணர்ந்த பெரியோர் சொல்லுகின்றனர். மூன்று வகையாலும் குருவாயுள்ள எனது தாயே எமக்குப் பரம குரு” என்கிறார் தர்மர்.
இதுவே தர்ம ரஹஸ்யம்.
இதைக் கேட்ட வியாஸர், “இதுவே விஹித தர்மமாம். யாதொரு காரணத்தினால் இதுவே சனாதனமோ, தர்ம புத்திரர் எப்படிச் சொல்கின்றாரோ அப்படியே தர்மம் உள்ளது. இதில் சந்தேகமில்லை.”
என்று உறுதிபடக் கூறுகிறார்.
இப்படிப்பட்ட இதிஹாஸ நிகழ்ச்சிகளினாலேயே, முரண்பாடு உள்ளது போலத் தோன்றும் நிகழ்வுகளில், உள்ளே புதைந்திருக்கும் தர்ம ரகசியங்களை அறிய முடிகிறது.
இனி, ஐவருடன் சேர்ந்து வாழ திரௌபதி பல நிபந்தனைகளை விதித்தாள். இதனால் கதையில் பல நிகழ்வுகள் ஏற்பட்டன. அதை மஹாபாரதத்தில் படித்து பிரமிக்கலாம்.
இனி விதண்டாவாதிகளுக்கு ஒரே பதில் தான்:
“ஐவர் ஒருத்தியை மணந்த போது நாங்கள் விதண்டாவாதிகள் ஐவரும் ஒருத்தியை மணக்கப்போகிறோம். இதில் என்ன தப்பு?” என்று கேட்டால் பதில் இது தான்: “ நீங்கள் ஐவரும் தர்மர், பீமன், அர்ஜுனன், நகுல, சகாதேவன் போன்றவர்களைப் போன்ற வீரமும் இதர குணாதிசயங்களுக் கொண்டவர்கள் என்றால், நீங்கள் மணக்கத் துடிக்கும் பெண்ணும் யாக அக்கினியில் திரௌபதியைப் போல நெருப்பிலே உதித்தவள் என்றால், உங்கள் ஐவரின் அன்னை, அதற்குச் சம்மதித்தால் அப்படியே செய்யலாம்” என்பதே.
கிரிமினலான புத்தி தரும் விதண்டாவாதம் எப்போதும் தோற்கும்! தர்மமே வெல்லும்.
Poet Valmiki’s Ramayana is considered Aadhi Kavya; it means the oldest Kavya and Original one. He did not copy any one. It is in beautiful but simple Sanskrit. His one sloka/ couplet in Kishkindaa Kaanda, Fourth Chapter in his Ramayana, shows how clever he is and how he visualises scenes like a film director.
Hindus are banned from showing death scene on stages. Bharata’s Natya Shastra bans all inauspicious things on stage and says death can be hinted by someone crying for the loss of near and dear one. So Indian film directors showed only an oil lamp going off to mean some one is dead. In the same way, Indian censor board don’t allow rape scenes in films. So the film directors show a crushed rose flower or a withering flower to indicate that someone lost her virginity.
Steven Spielberg showed us the water in the bowl sending ripples with bang, bang noises in the background and then showed us the huge dinosaurs in his 1993 Jurassic Park film. All these people followed the great poet Valmiki.
Before going into his sloka, I would like to tell one more thing about Hindu Shakuna Shastra; it is the book about good and bad omens. One of the omens is twitching eyes or throbbing eyes. If the left eye throbs it is good for women and bad for men.
Here is the scene in Kishkinda kanda of Valmiki Ramyana. Hanuman, minister of Monkey king Sugreeva ,introduced his king Sugreeva to Rama and requested a friendship agreement. Rama agreed to it because Sugreeva was also in same condition like Rama. Like Rama’s wife Sita was abducted by demon king Ravana, Sugreeva’s wife was abducted by his brother Vali.
When the Friendship Treaty was finalised in front of Fire , three left eyes throbbed, says Valmiki. Sita’s, Vali’s and Ravana’s left eyes twitched at the same time. It portends the death of Ravana and vali and release of Sita from Ravana’s Lanka. Because left eye throbbing is good for women.
Had it been our film directors they would have shown all the three people on the same screen and got the appreciation of one and all. But they will never tell anyone where from they stole the idea.
Here is the famous sloka/ couplet:
सीता कपीन्द्रक्षणदाचराणां
राजीवहेमज्वलनोपमानि।
सुग्रीवरामप्रणयप्रसङ्गे
वामानि नेत्राणि समं स्फुरन्ति4.5.32।।
सुग्रीवरामप्रणयप्रसङ्गे while Sugriva and Rama were making a friendly alliance, सीताकपीन्द्रक्षणदाचराणाम् Sita’s, Vali’s and also Ravana’s, राजीवहेमज्वलनोपमानि lotuslike and blazing like gold, वामानिनेत्राणि left eyes, समम् equally, स्फुरन्ति throbbed.
While Sugriva was making a friendly alliance with Rama, Sita’s left eye, like lotus, Vali’s left eye glittering like gold and Ravana’s left eye blazing (like fire) twitched at the same time for a moment (Twitching of left eye is considered auspicious to a woman and ominous to a man).
Xxxx
Throbbing Eye or Eye Twitching
Four years ago I wrote an article here,s howing how Sangam Tamil poets also copied Kalidasa and Valmiki in this matter. The belief is same from Kashmir to Kanyakumari in India. Though Greeks, Shakespeare and Jonathan swift also talked about eye ‘itching ‘and the bad bad news that followed. they were slightly different in this matter because hey did not say ‘twitching’ . But Sangam Tamil poets approached it in the same way as their counter parts in the North.
கண்துடிப்பு (Twitching eye, throbbing eye) சாஸ்திரம் பற்றி உலகெங்கிலும் நம்பிக்கை இருக்கிறது. கிரேக்க அறிஞர், ஆங்கில நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர், கதாசிரியர் ஜொனதான் ஸ்விப்ட் (Shakespeare and Jonathan Swift) ஆகியோர் சொன்னதை என்னுடைய 2018-ம் ஆண்டுக் கட்டுரையில் சொன்னேன். அத்தோடு சங்கப் புலவர் கபிலன், அவருக்கு முந்தைய காளிதாசன் ஆகியோர் சொன்னதையும் எழுதினேன்.
ஆனால் இவர்களையெல்லாம் தோற்கடித்து விடுகிறார் வால்மீகி முனிவர்;
அவரிடமிருந்துதான் (Bollywood, Hollywood ) பாலிவுட், ஹாலிவுட் டைரக்டர்கள் எல்லாம் சில உத்திகளைக் கற்றார்கள் போலும்.
மனிதர்கள் இறந்து போகும் காட்சிகளை மேடையில் காட்டக்கூடாது என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பரத முனிவர் (Natya Shastra by Bharata Muni) சம்ஸ்க்ருத நாட்டிய சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறார். அதை ஒருவர் அழுகை, ஓலமிடுதல் மூலமே குறிப்பால் உணர்த்தலாம். தமிழ் சினிமா டைரக்டர்கள் இதே செய்தியை ஒரு விளக்கு அணைவது மூலம் காட்டினார்கள் . அதேபோல ஒரு பெண் கற்பழிக்கப்பட்ட காட்சியைக் காட்டாமல் ரோஜா மலர் கசங்கி அழிவதையோ வாடி வதங்கி விழுவதையோ காட்டினார்கள்.
1993-ம் ஆண்டில் ஜுராஸ்ஸிக் பார்க் திரைப்படம் எடுத்து டைனோசர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய (Jurassic Park directed by Steven Spielberg) ஸ்டீவன் ஸ்பீல்பர்க் என்ன செய்தார்? முதலில் டைனோசர் என்னும் ராட்சத மிருகங்களைக் காட்டாமல், பிரமாண்டமான சப்தத்தையும் அப்போது மேஜை மீதிருந்த கண்ணடிக் கோப்பையில் தண்ணீர் சலசலப்பதையும் காட்டினார். இவர்களுக்கு எல்லாம் கற்றுக்கொடுத்தவர் வால்மீகி முனிவர். கிஷ்கிந்தா காண்டத்தில் ஒரு அற்புதமான ஸ்லோகத்தை நமக்கு அளிக்கிறார்.
மூன்று கண் துடிப்புகள்
ராமனும் சுக்ரீவனும் நட்புறவு ஒப்பந்தம் செய்துகொண்டபோது மூன்று பேரின் கண்கள் ஒரே நேரத்தில் துடித்ததாம்.
வாலி, ராவணன், சீதாதேவி ஆகிய மூன்று பேரின் இடது கண்களும் துடித்தன என்று ஸ்லோகம் செய்து இருக்கிறார். பெண்களுக்கு இடது கண்ணும், ஆண்களுக்கு வலது கண்ணும் துடித்தால் நல்ல சகுனம்; ஆனால் இங்கே மூன்று பேர்களுக்கும் இடது கண் துடிப்பதை அவர் அப்படியே மனக் கண்களில் பார்த்து பாடல் செய்கிறார். இதன் மூலம் ராவணன், வாலி ஆகியோரின் மரணத்தையும் சீதைக்கு விடிவு காலம் வந்து விட்டது என்ற செய்தியையும் அழகுபட மொழிகிறார்.
இதோ அந்த ஸ்லோகம் ,
सीता कपीन्द्रक्षणदाचराणां
राजीवहेमज्वलनोपमानि।
सुग्रीवरामप्रणयप्रसङ्गे
वामानि नेत्राणि समं स्फुरन्ति4.5.32
ஸீதா கபீந்த்ர க்ஷண தாசராணாம்
ராஜீவ ஹேமஜ்வல நோபமாநி
ஸுக்ரீவ ராமப்ரணய ப்ரஸங்கே
வாமானி நேத்ராணி ஸமம் ஸ்புரந்தி
——–கிஷ்கிந்தா காண்டம் , ஐந்தாம் சர்க்கம் வால்மீகி ராமாயணம்
பொருள்
சுக்ரீவனும் ராமனும் தோழமை கொண்டபொழுது தாமரை மலர்போன்ற ஸீதையின் இடது கண்ணும் , தங்க நிறமுள்ள வாலியின் இடது கண்ணும், நெருப்பைப் போன்ற ராவணனின் இடது கண்ணும் ஒரே சமயத்தில் துடித்தன. .
என்ன அற்புதமான வருணனை ; நம்மூர் திரைப்பட டைரக்டர்கள் உடனே மூவரையும் மியூசிக் ஸஹிதம் மாற்றி, மாற்றி காண்பித்திருப்பார்கள். உடனே பத்திரிகை விமர்சனங்களும் அடடா! அடடா! அற்புதம்! என்று அந்த டைரக்டரைப் புகழ்ந்து தள்ளி இருப்பார்கள்; இந்த ஐடியாவை எங்கிருந்து திருடினார் என்பதை டைரக்டரும் சொல்லமாட்டார்!!!!!!
எதை எதை காசு கொடுக்காமல் பெறக்கூடாது என்றும் எதை எந்த ஜாதியினர் கொடுத்தாலும் வாங்கலாம் என்றும் முதல் பாடலில் சொல்கிறார் அம்பலவாணர். பிரமணர்களைத் திட்டினால் ஆயுள் குறையும் என்றும் எச்சரிக்கிறார்.
அடுத்த பாடலில் தத்துவங்கள் என்ன என்று எண்ணிக் காட்டுகிறார்.
மின்னுவதெல்லாம் பொன் அல்ல;
வெளுத்தது எல்லாம் பால் அல்ல ;
பூணுல் அணிந்தவர் எல்லாம் ஐயர் அல்ல;
உயர்ந்தோர் HIGHER ஹையர் = ஐயர் ;
நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை,
திமிர்ந்த ஞானச் செருக்குடையோர் ; எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுவோர் பிராமணாள்; வறுமையில் வாடினாலும், என் ஜாதியை கீழ் ஜாதி பட்டியலில் சேருங்கள் என்று கேட்காதவர், கெஞ்சாதவர் உண்மையிலேயே HIGHER ஹையர் தானே?
ஆகவே, அம்பலவாணர் சொல்லும், ஒழுக்கம் உடைய அந்தணருக்கு ஆதரவு தாருங்கள்.
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகு என்ற என்னுடைய பழைய கட்டுரை இதோ::–
பேரறிவாளன், உலகின் முகல் பொருளாதார நூல் எழுதிய நிபுணன் ஆகிய சாணக்கியன் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ப்ராஹ்மணாள் பற்றி ஒரு பெரிய எச்சரிக்கை விடுக்கிறான்.:
இரண்டு பிராமணர்கள் நின்று கொண்டிருந்தால் குறுக்கே போகாதே!
பிராமணன் இருந்தால் அவனுக்கு எதிரே கால் நீட்டாதே. ;
பொருள்—“இரண்டு பிராமணர்களுக்குக் குறுக்கே போகாதே; ப்ராஹ்மணனுக்கும் அக்னிக்கும் (தீ) குறுக்கே போகாதே போகாதே; அவ்வாறே கணவன்– மனைவி, எஜமானன்–சேவகன் (முதலாளி- தொழிலாளி), உழுகலன் (ஏர்)- காளை மாடு இவர்களுக்கு இடையிலும் செல்லாதே.
பாதாப்யாம் ந ஸ்ப்ருசேதக்னிம் குரும் ப்ராஹ்மணமேவ ச
நைவ காம் ந குமாரீம் ச ந வ்ருத்தம் ந சிசும் ததா
சாணக்கிய நீதி, அத்தியாயம் 7, ஸ்லோகம் 6
பொருள்
அக்னி, ஆசிரியர், ப்ராஹ்மணன், பசு மாடு, இளம் பெண், முதியவர், குழந்தை ஆகியோருக்கு முன்னால் காலை நீட்டி உட்காராதே, படுக்காதே..
xxx
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகு!
அந்தக் காலத்தில் ப்ராஹ்மணர்கள் தூய ஒழுக்கத்தின் சின்னமாக விளங்கினர்; அந்தக் காலத்தில் மூவேந்தர்களும் கூட ப்ராஹ்மணர்களைக் கண்டு அஞ்சினர்.; சங்க இலக்கியத்தில் அதிகமான பாடல்களை இயற்றிய கபிலரையும் பரணரையும் கண்டு சேர சோழ பாண்டியர்கள் மரியாதையுடன் கூடிய பயம் கொண்டனர். ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்று தமிழ்ப் பார்ப்பான் கபிலனை சங்கப் புலவர்கள் புகழ்ந்து, தலைமேல் வைத்துக் கூத்தாடினர்.
‘’குணம் என்னும் குன்று ஏறி நிற்கும் பார்ப்பனர்கள் வெகுளி கணம் ஏயும் காத்தல் அரிது’’ என்பதால் பயந்தனர். அந்தக் காலத்தில், அவர்கள் வாயில் நல்ல சொற்கள் வந்தால் அது பலிக்கும்; சுடு சொற்கள் வந்தால் அது ஒருவனுடைய குலத்தையே வேர் அறுக்கும் என்பது உண்மையாக இருந்தது. .
நவ நந்தர்களை வேருடன் அறுத்து, அலெக்ஸ்சாண்டரும் கண்டு அஞ்சிய மாபெரும் மகத சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த சாணக்கியன் இதற்கு உதாரணம்..
xxxxx
இதனால் வேளாண் குடி மக்களுக்கு திரிகடுகம் ஆசிரியர் நல்லாதனார், ஒரு நல்ல புத்திமதி செப்பினார்::-
சூதாட்டத்தில் பணம் கிடைக்க வேண்டும் என்று காத்திராதே; விரும்பாதே; பார்ப்பனர்களை தீ என்று கருது;
அகலாது அணுகாது குளிர் காய்பவர் போல இரு;
உழவுத் தொழிலை கடனே என்று செய்யாமல், விரும்பிச் செய்.
கழகத்தால் வந்த பொருள் காமுறாமை
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல்- ஒழுகல்
உழவின்கண் காமுற்று வாழ்தல் இம்மூன்றும்
அழகென்ப வேளாண் குடிக்கு
–திரிகடுகம், நல்லாதனார்
உண்மையில் இந்த தீக்காயும் உவமையை முதல் முதலில் பயன்படுத்தியவர் ஆதி சங்கரர் ஆவார். அவர் எழுதிய பாஷ்யங்களில் இந்த உவமை வருகிறது..
பகவத் கீதை 9-29 ம் ஸ்லோகத்துக்கு அண்ணா எழுதிய உரையில் இதை மேற்கோள் காட்டுவார்::-
“அக்னியைப் போல் நான் உளேன்; எட்டி நிற்பவர் குளிரை அக்னி போக்குவதில்லை; ஸமீபித்து வருவோர் குளிரைப் போக்குகிறது. இது அக்னியின் பாரபக்ஷமன்று. அது போலவே பக்தர்கள் என் அருள் பெறுவதும். மற்றவர் பெறாததும்”-
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
88. பல்துறை, அறப்பளீசுர சதகம்
தாம்புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர்
தங்களுக் கவைத ழுவுறா!
சற்றும்அறி வில்லாமல் அந்தணரை நிந்தைசெய்
தயவிலோர் ஆயுள் பெருகார்!
மேம்படு நறுங்கலவை மாலைதயிர் பால்புலால்
வீடுநற் செந்நெல் இவைகள்
வேறொருவர் தந்திடினும் மனுமொழி யறிந்தபேர்
விலைகொடுத் தேகொள் ளுவார்!
தேன்கனி கிழங்குவிற கிலையிவை யனைத்தையும்
தீண்டரிய நீசர் எனினும்
சீர்பெற அளிப்பரேல் இகழாது கைக்கொள்வர்
சீலமுடை யோர்என் பரால்!
ஆன்கொடி யுயர்த்தவுமை நேசனே! ஈசனே!
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) ஆன் கொடி உயர்த்த உமை நேசனே – ஏற்றுக்கொடியை
கொடையையும் புகழுவோர் தங்களுக்கு அவை தழுவுறா – தாங்கள் செய்த தவத்தினையும் ஈகையையும் புகழ்ந்து கூறிக்கொள்வோருக்கு அவை கிடையாமற் போய்விடும், சற்றும் அறிவு இல்லாமல் அந்தணரை நிந்தை செய்
தயவு இலோர் ஆயுள் பெருகார் – சிறிதும் அறியாமல் அந்தணரைப் பழிக்கும் இரக்கமிலோர்க்கு ஆயுள் குறையும், மேம்படு நறுங்கலவை மாலை தயிர் பால்,
புலால் வீடு நல் செந்நெல் இவைகள் – உயர்ந்த மணமிக்க கலவைச் சந்தனம்,மாலை, தயிர், பால், ஊன், வீடு, நல்ல செந்நெல் ஆகிய இவற்றை,வேறு ஒருவர் தந்திடினும் மனுமொழி அறிந்தபேர் விலை கொடுத்தேகொள்ளுவார் – மற்றொருவர் கொடுத்தாலும் மனு கூறிய முறையை அறிந்தவர்கள் விலை கொடுத்துத் தான் வாங்குவார்கள், தேன் கனி கிழங்கு
விறகு இலை இவை அனைத்தையும் தீண்ட அரிய நீசர் எனினும் சீர் பெற
4) மஹேஸ்வரன் காம மயக்கத்தினாலும் மோஹத்தினாலும் குரு பத்னிகளிடத்தில் மயங்கலாமா?
5) பரசுராமர் சொந்தத் தாயை கொல்லலாமா?
6) சந்திரன் குரு பத்னியை சேர்த்துக் கொள்ளலாமா?
7) பகவான் கிருஷ்ணர் கோபிகளை ரமிக்கலாமா?
இவர்களே இப்படிச் செய்தால் சாமானியனான ஒருவன் அப்படிச் செய்தால் என்ன தப்பு?
விளக்கம் தேவை.
இதிஹாஸ, புராணங்களைப் போற்றுவோருக்கு எழும் நியாயமான சந்தேகங்களை அவர்கள் கேட்கின்ற போது அவர்களைத் திட்டி, அவமானப்படுத்தி அப்புறப்படுத்தி விடக் கூடாது.
தக்க விளக்கங்களை அளிக்க வேண்டும்.
முதலில் இவர்களே இப்படிச் செய்தால் சாமானியனான நான் இது போலச் செய்தால் அதில் என்ன தப்பு என்ற கேள்வியைக் கவனிப்போம்.
இதே சந்தேகம் எழுந்தபோது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள சந்தேகம் கொண்டவர்கள், போதாயன மஹரிஷியை அணுகினர்.
அவர் மிகத் தெளிவாக ஒரு விஷயத்தைக் கூறினார்.
“தேவர்களைப் போல நடக்க முயலாதே;
அவர்கள் சொல்லியதைப் போல நட”
“தேவர்களால் எது அனுஷ்டிக்கப்பட்டதோ, முனிவர்களால் யாது அனுஷ்டிக்கப்பட்டதோ அது மனிதர்களால் கடைப்பிடிக்கக் கூடியதல்ல. அவர்கள் சொல்லியதை அனுஷ்டிக்க வேண்டும்.
ஏன் நாம் அப்படிச் செய்யக் கூடாது?
இதற்கு மனு காரணத்தை (ஹேது) கூறி விட்டார்:
“முன்னோர்களாகிய அந்த மஹான்களின் சரீரங்களும் இந்திரியங்களும் தேஜோ மயங்கள். ஆகையால் தாமரை இலையானது ஜலத்தினால் பற்றாமல் இருப்பது போல, அவர்கள் தோஷத்தினால் பற்றப்படுகின்றவர்கள் அல்ல”
நம் போன்றவர்களின் அறிவுக்கு எட்டாத யோகப் பெருமை பெற்றவர்கள் அவர்கள். அவர்களது வடிவம், உருவம், அமைப்பு, குணாதிசயங்கள் மனித விதிகளுக்கு உட்பட்டதல்ல.
அது மட்டுமல்ல, ஒவ்வொரு சரிதத்தையும் எடுத்து உன்னிப்பாக ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால் நமக்குக் கிடைக்கும் உண்மைகள் நம்மை வியப்படையவே செய்யும்.
பரசுராமர் தந்து தந்தையின் சொற்படி கேட்டார்; சித்தி பெற்றார்.
யாக்ஞவல்க்யர் ஆதித்தனை நோக்கித் தவம் செய்தார், சுக்ல யஜூர் வேத உபதேசத்தைப் பெற்றார்.
இந்திரன் மூன்று லோகங்களும் க்ஷேமம் அடையவேண்டியதன் பொருட்டு அதன் நிமித்தமாகவே பிரம்மஹத்தி தோஷத்தைத் தானே அங்கீகரித்துக் கொண்டான்.
உண்மையில் பார்த்தால், ஆதிசேஷ பகவானாகிய இறைவன் தேவர்கள் மற்றும் பிராமணர்களின் நன்மைக்காகவே அவர்களின் காரியத்தை முன்னிட்டே சுக்ல யோனி சம்பந்தமாக உள்ள யோனியை அடைந்து பலபத்ரராகப் பிறந்தான்.
பாண்டவர் ஐவரும் தனது தாயின் வசனம் சத்தியமாக ஆதல் வேண்டும் என்பதன் பொருட்டாகவே ஆச்சரியமான பல நிபந்தனைகளோடு திரௌபதியுடன் இல்லறம் நடத்தினர்.
சந்திரன் தனது தவத்தால் மஹேஸ்வரனுடைய பரம கருணைக்கு ஆளானதோடு மிகுந்த மேன்மையை அடைந்தான்.
பிரும்ம தேவன் சத் புத்திரன் ஜனிப்பதால் ஏற்படும் அபாரமாகிய சித்தியை விளக்கிக் காட்டினான்.
இவை எல்லாம் சாஸ்திரத்திற்கு விரோதமான செய்கைகள் அல்ல. புனிதமான செயல்களே. .
AHALYAA SAAPA VIMOCHANAM
இப்படி தைத்திரீய உபநிஷத் தீபிகையில் விளக்கத்தைக் காணலாம்.
சாஸ்திரங்களையும் வேத, இதிஹாஸ புராணங்களையும் நன்கு கற்றறிந்த சங்கரானந்த சரஸ்வதி போன்ற மஹான்களால் எழுதப்பட்டுள்ள விளக்கவுரைகளைப் படித்தால் நமக்குப் பல உண்மைகள் புரியும்; சந்தேகங்கள் விலகும்.
இனி இது பற்றி விளக்கமாக இனி வரும் கட்டுரைகளில் பார்ப்போமே