யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸா! – 2 (Post No.11,850)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,850

Date uploaded in London –   29 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

நித்யானந்த மர்மம்!

 யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸா! – 2 

ச.நாகராஜன் 

ஜெனிவாவில் உள்ள ஐக்கியநாடுகளின் சபையில் அவ்வப்பொழுது பல மாநாடுகள், கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.

சென்ற மாதம், பிப்ரவரி 2023இலும் அப்படிப்பட்ட கூட்டங்கள் நடைபெற்றன.

Committee on Economic, Social and Cultural Rights (CESCR) மற்றும் Committee on the Elimination of Discrimination against Women (CEDAW) ஆகியவற்றின் கூட்டங்களும் ஜெனிவாவில் யு.என். தலைமை அலுவலகத்தில் நடைபெற்றன.

 வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பலாய்ஸ் வில்ஸன் (Palais Wilson Building) கட்டிடத்தில் மாநாடுகளின் பங்கு பெறுவோர், என் ஜி ஓக்கள், நிரந்தரமான குழுக்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை பல நாடுகளிலிருந்தும் வந்திருக்க, அந்த அறையே ஜே  ஜே என்று இருந்தது.

அதில் ஒரு விசித்திரமான காட்சி இந்தத் தடவை இருந்தது. பத்து பன்னிரெண்டு பெண்மணிகள்  ஆரஞ்சு வண்ண சேலைகளைக் கட்டிக் கொண்டு தங்க நகைகளை அணிந்து கொண்டு முடி அலங்காரம் செய்து கொண்டு திலகம் தீட்டிக் கொண்டு வந்திருந்தனர்.  அவர்கள் பின்னால் இருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன்னால் இருந்த போர்டு ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸா” என்று இருந்ததால் அந்த நாட்டைச் சேர்ந்த பெண்மணிகள் அவர்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. விஜயபிரியா நித்யானந்தா தான் அந்த நாட்டின் நிரந்தர தூதுவர்.

அவர்கள் தங்களது சுப்ரீம் மதகுரு எப்படி எல்லாம் ஹிந்து விரோத சக்திகளால் கொடுமைப்படுத்தப் படுகிறார் என்று எடுத்துரைக்க ஆரம்பித்தனர்.

சோஷியல் மீடியா அசந்து போனது.

கைலாஸா நாடு இல்லவே இல்லையே உலக வரைபடத்தில்?

நித்யானந்தா தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வேடர் அருகே ஒரு இடத்தை வாங்கி ‘கைலாஸாவை’ நிர்மாணித்தார் என்று சொல்லப்படுகிறது.

ஈக்வேடாரோ அவர் வந்தது உண்மை தான் என்று ஒப்புக் கொண்டது.

ஆனால் எந்தத் தீவையுமோ அல்லது இடத்தையோ அவருக்கு விற்கவில்லை என்று உறுதிபடச் சொன்னது.

ஈக்வேடாருக்கு ஏன் நித்யானந்தா சென்றார்? அந்த நாட்டுடன் தேவையானோரை திருப்பி அழைக்கும் உடன்படிக்கையை இந்தியா செய்து கொள்ளவில்லை என்பது தான். ஆகவே அங்கு சென்று புகலிடமாக அதை அடைந்த ஒருவரை இந்தியாவிற்கு நினைத்தபடி மீண்டும் கொண்டு வர முடியாது.

அது சரி, ஐநா சபை கூட்டங்களில் கைலாஸா நாட்டினர் எப்படிக் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்?

இதற்கு ஐ நா அதிகாரிகள் பதில் கூறி விட்டனர்.

இது போன்ற கூட்டங்களில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம், தங்கள் பிரச்சினைகளைப் பற்றி மனுக்களைத் தரலாம். அவற்றைப் பெற்ற பின்னர் அவற்றின் உண்மைத் தன்மை பற்றி அதற்கான குழுக்கள் ஆராயும் என்றனர் அவர்கள்.

VIJAYAPRIYA

இது ஒரு புறமிருக்க கைலாஸா நாடு அமெரிக்காவில் உள்ள 30 நகரங்களுடன் பல்வேறு ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது.

நெவார்க் நகரம் (Newark City) ‘Sister City’ ஒப்பந்தம் ஒன்றை கைலாஸா நாட்டுடன் செய்து அலுவலக சீல் சகிதம் நிறைவேற்றியுள்ளது.

ஒப்பந்தம் முடிந்த ஆறாம் நாளில் தான் அந்த நகரம் கைலாஸா நாடு பற்றிய ‘உண்மையை’ அறிந்து திகைத்தது. தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று அறிந்து சங்கடப்பட்டது.

ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அனுப்பிய கைலாஸா நாட்டு ஈமெயில் தாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை என்று தெளிவு படுத்தியுள்ளது.

கைலாஸா நாடு எல்லையே இல்லாத சேவையையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு உண்மையான நாடு என்று அது தெளிவுபடுத்தியது.

கைலாஸா நாடு ஒவ்வொரு ஆண்டும் வரும் ஜனவரி 3ஆம் தேதியை நித்யானந்தா டே என்று அறிவித்துள்ளது.

கைலாஸா நாட்டிற்கு யார் வேண்டுமானாலும் அதன் அதிகாரபூர்வமான விமான சர்வீஸான கருடாவில் ஏறிச் செல்லலாம்.

மூன்று நாட்கள் தங்கலாம்.

தங்குமிடம், உணவு இலவசம்.

பாஸ்போர்ட், விசா எல்லாம் உண்டு.

என்றாலும் கூட கோவிட் பாதிப்பு உலகையே கலக்கிய காலத்தில் இந்தப் பயண அனுமதி நிறுத்தப்பட்டது.

யார் என்ன சொன்னாலும் நித்யானந்தாவின் உறுதியான சீடர்கள் உலகெங்கும் உள்ளனர். சென்னையிலும் உள்ளனர்.

அவர்களில் பலர் – பெண்மணிகள் உட்பட – நித்யானந்தாவின் உருவத்தைத் தங்கள் கைகளில் பச்சை குத்திக் கொண்டுள்ளனர்.

 உலகின் ஒரே ஹிந்து தேசம் என்று தன்னை உறுதிபடச் சொல்லும் கைலாஸா தங்கள் நாடு சிறந்த முறையில் திறம்பட உலக நன்மைக்காக இயங்குகிறது என்று கூறுகிறது.

**

நன்றி, ஆதாரம் : டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரை, 26-3-2023 இதழ்

கட்டுரை தலைப்பு:

“Decoding the fictional country of Kailasa that catfished 30 US cities”

By Mohua.Das@timesgroup.com                                                              இந்தக் குறுந்தொடர் முற்றும்

Part 7 of Kumbakonam Wonders :Picture Ramayana on Temple Walls (Post No.11,849)

Sita Devi blessing Hanuman

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,849

Date uploaded in London – –  28 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Lakshmana and Ravana getting ready for afi

Dont insult ambassador Hanuman; it is against law, warns Vibhishana.

Ten Headed Ravana shoting an arrow.

This is the last part of the Paintings on the walls of Ramaswami Temple at Kumbakonam in Tamil Nadu.

I did not take the pictures of all the 220 paintings. I just took only about 100 pictures with my I pad in half hour.

There are two huge paintings, well protected in a locked room which we can see from out side.

Like I said  before, a full book is required with exact details. Please don’t allow any foreigner to do it. Only Hindus must do it or allowed to do it.

I have lots of books here in London , in the British Library and SOAS, University of London Library, mocking at us, while giving beautiful pictures. Since they believe in Non Hindu religions, they do it subtly.

Many of the foreigners are anti Hindu fanatics and they attack Hinduism very subtly, when writing about temples. They don’t have faith, but good technology and resources.

Our illiterate Bhattars (priests) and temple authorities open the gates for them without a single question, but deny access to us completely. I know about the Selfi maniacs amongst us and bad Dravidians.  We should not allow them as well. But genuine Hindu scholars must be given access and the copy right should rest with the temple and not with the individual.

Vibhishana’s Coronation

Monkey Brigade/ Vanara Sena in happy mood

Rama Lakshmana Anjaneya

Indra, Brahma, Shiva, Surya and all come to welcome Rama, Sita

Vibhishana Saranagathi

This is not old painting. ; a modern one,

Rama calling the Ocean God Varuna

Huge Anjaneya paintinh

another ancient painting.

Please save and preserve the beautiful sculptures and paintings for our future generations.

–subham—

Tags-Part 7, Ramayana Paintings, Chitra, Picture, Ramayana, Ramaswami Temple

நமஸ்தே, வணக்கம் பொருள் என்ன? (Post No.11,848)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,848

Date uploaded in London – –  28 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பாதுகா பட்டாபிஷேகம் என்ற தலைப்பில் திருமுருக கிருபானந்த வாரியார் ஒரு ராமாயணச்  சொற்பொழிவு நடத்தினார். அதில் துவக்கத்திலேயே இரண்டு அருமையான விஷயங்களை வழங்கினார்.

ராமனின் தலைக்கு மேல் இருந்தது மணி மகுடம். ராமனின் காலுக்கு அடியில் இருந்தது பாதுகைகள், அதாவது காலணி . இந்த இரண்டையும் இணைத்தான் பரதன் ; (பாதுகைகளை வைத்து 14 ஆண்டு அரசாண்டான்) ஆக, பாதுகா பட்டாபிஷேகத்தின் பொருளே, சமுதாயத்தில் மேலே உள்ளவர்களும் கீழே உள்ளவர்களும் இணைய வேண்டும் என்பதுதான். ஆட்சியாளர்களும் கீழ்மட்டத்திலுள்ளவர்களும் இணைந்து ஒன்றுபடவேண்டும் .

xxx

இடது கையை எதற்குப் பயன்படுத்துகிறோம் ? தூய்மை செய்ய, உடலைச் சுத்தப் படுத்தப் பயன்படுத்துகிறோம்.. வலது கையை எப்படி உபயோகிக்கிறோம் ? உண்ணுவதற்காக உபயோகிக்கிறோம் .

ஆனால் கோவிலுக்குப் போனவுடன் வலது கையுடன் இடது கையையும் இணைத்து இறைவனை வணங்குகிறோம். இரண்டுக்கும் சம மரியாதை .

எங்காவது அகில இந்திய இடது கைகள் மகாநாடு நடந்தது உண்டா? அங்கே அவர்கள் வாரத்துக்கு ஒருமுறை நாங்கள் வேலை செய்யமாட்டோம். நாங்களும் இடது கையை உண்ணுவதற்குப் பயன்படுத்துவோம் என்று தீர்மானங்களை நிறைவேற்றினவா? இல்லையே.!

இப்படி நமஸ்தேவணக்கம் சொல்லி இரு கைகளையும் கூப்புவது ஏன்?

கீழான வேலை செய்வோரும் மேலான வேலை செய்வோரும் சமுதாயத்தில் இணைந்து செயல்படவேண்டும் என்பதே ய் இதன் பொருள்.

Xxx

எனது கருத்து

நமஸ்தே/ வணக்கம் பற்றி எவ்வளவோ தத்துவ விளக்கங்களைப் படித்து உள்ளோம்.

முதலில் ஒருவருக்கு ஒருவர் மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறோம். எவ்வளவு பெரியவர் ஆனாலும் அவர்களும் பதிலுக்கு நமஸ்தே சொல்லுவது அவர்களின் பணிவைக் காட்டுகிறது. மேலும் எல்லோரிடத்திலும் இறைவன் உள்ளான் என்ற இந்து மத தத்துவத்தை நமஸ்தே விளக்குகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்பதே இதன் பொருள். தமிழிலும் வணக்கம் என்பது அதையே குறிக்கிறது.

 ஞானேஞ்த்ரியம் ஐந்தும் கர்மேந்த்ரியம் ஐந்தும் இணைந்து இறைவனை அடைவதைக் குறிக்கிறது என்றெல்லாம் தத்துவ விளக்கம் சொல்வதைவிட இழிவான வேலை  செய்யும் இடது கையும் மேலான வேலை  செய்யும் வலது கையும் இல்லாமல் உடல் இயங்காது. சமுதாயமும் அப்படித்தான். ஆனால் தாழ்வு, உயர்வு என்பதெல்லாம் நம் மனக் கற்பனையே என்பதே பொருத்தமாக இருக்கிறது.

வாரியார் சுவாமிகள் சொல்லுவது போல இடதுகைகள் மஹாநாடு கூட்டி ஸ்டிரைக் STRIKE செய்வதற்கு தீர்மானித்தாலோ அதே போல வலது கைகள் மகாநாடு கூட்டித் தீர்மானித்தாலோ என்ன ஆகும்?

இவையெல்லாம் தவறு என்பதை இரு கைகள் கூப்பி வணங்குவது காட்டுகிறது. நமஹ= வணங்குதல் என்ற சொல் வேத மந்திரங்களிலேயே இருக்கிறது.

CORONA DANGER

ஏனைய கலாசாரங்களில் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவது, கன்னத்தில் முத்தமிட்டு அன்பைக்  காட்டுவது எல்லாம் இருக்கிறது. இவை எல்லாம் சுகாதாரக் கேடானவை, நோய் பரப்பும் கருவிகள் என்பது CORONA கொரோனா என்னும் சீன வைரஸ் பரவியவுடன் தெரிந்தது. இப்போது நமஸ்தேயை உலகமே ஏற்கிறது .

வாரியார் சுவாமிகள் அளித்த விளக்கம் எல்லோருக்கும் புரியும். அவர்தம் உரைகளைக்  கேட்டுப் பயன் அடைவோமாக!

Xxxx

வாரியார் நகைச் சுவை

மேலும் சில வாரியார் சொற்பொழிவுப் பொன்மொழிகள் :–

குளத்தில் இருந்தால் நீர்; அதுவே வியாபாரியின் குடத்தில் இருந்தால் மோர்!

xxx

கணவன் வீட்டுக்கு வந்தால் மனைவி பையைப் பார்ப்பாள்;

தாயோ அவனுடைய வயிற்றைப் பார்ப்பாள்

( என் மகன் சாப்பிட்டானானா , இல்லையா என்று கவலைப்படுவதால்)

xxx

கேதாரம் சென்றால் சேதாரம் வாராது

(கேதார்நாத் சிவனைப் பார்த்தால் அழிவே இல்லை)

xxx

எத்தனை வயது மகன் வீட்டுக்கு வந்தாலும் அம்மாவுக்கு அவன் குழந்தை

மனைவியோ கிழவன் வந்துவிட்டான்; அப்புறம் உன்னிடம் பேசுகிறேன் என்று அடுத்த வீட்டு அம்மணியிடம் சொல்லுவாள்

xxx

–subham—

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸா! – 1 (Post No.11,847)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,847

Date uploaded in London –   28 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

நித்யானந்த மர்மம்!

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸா! – 1 

ச.நாகராஜன்

டைம்ஸ் ஆஃப் இந்தியா 26-3-2023 தேதியிட்ட இதழில்  ஒரு புதிய “நாடு” பற்றிய சுவையான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

நம்புவதும், நம்பாததும் படிப்பவரது இஷ்டம்.

ஆனால் அது சுட்டிக் காட்டும் கைலாஸ நாடு நம்மை, புல்லரிக்க வைக்கிறது.

செய்தித் தொடரில் சில முக்கிய விஷயங்கள் :

விஜயப்ரிய நித்யானந்தா!

பெயரைச் சொன்னாலே உருகிப் போகும் பக்தர்கள் கூட்டம் ஒரு புறம்.

ஆள் எங்கே என்று பிடிக்க அலையும் அதிகாரிகள் கூட்டம் மறுபுறம்.

கற்பழிப்பு, குழந்தைக் கடத்தல், கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் சித்திரவதை செய்தல் உள்ளிட்ட இன்ன பிற குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நித்யானந்தா இந்தியாவை விட்டு 2019ஆம் ஆண்டு தப்பி ஓடினார்.

இன்று வரை ஆளைப் பிடிக்க முடியவில்லை.

தன்னைத் தானே இந்து மதத்தின் உயரிய சாமியார் என்று கைலாஸா நாட்டில் அறிவித்துக் கொண்டார் அவர். (Supreme Pontiff of the Hindu country KAILASA) தன்னை ஹிந்துக்களை எதிர்க்கும் கூட்டம் அழிக்கப் பார்க்கிறது என்றும் அவர் கூறினார். அவரது பக்தர்கள் அதை ஆமோதித்தனர்.

அவரை உலகம் வியப்புடன் பார்க்கிறது. ஏன்?

குரங்குகள், சிங்கங்கள், புலிகள், பசுக்கள் ஆகியவற்றைத் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஒரு வருடத்திற்குள் பேச வைப்பேன் என்று அவர் உறுதி மொழி கூறினார்.

சூரியனை நாற்பது நிமிடங்கள் தாமதமாக தான் உதிக்க வைத்ததாக அவர் கூறினார்? ஏன் இந்த தாமதம்?  ஏனென்றால் அவர் தியானம் செய்து கொண்டிருந்தாராம். ஆகவே சூரியனும் அவருக்கு கீழ்ப்படிந்து நடந்ததாம்!

பூமியைப் பற்றி இதுவரை யாரும் அறியாத ரகசியங்களை அவர் தெரிவிக்கப் போகிறாராம். அயல்கிரகவாசிகள், நாம் இதுவரை காணாத நாகரிகங்கள் நமது பூமியில் உண்டாம்!

அவரது “ME” வாக்கியம் பிரசித்தி பெற்ற ஒன்று. அது என்ன “ME” வாக்கியம்? இதோ:

‘ME’ resides in ‘me’ is residing in all of that as ‘me’, so that ‘me’ through this ‘me’, is talking to ‘me’.

கைலாஸா நாடு எங்கு இருக்கிறது.

அது இருக்கிறது, ஆனால் இல்லை!

அதாவது உலக வரைபடத்தில் நீங்கள் அந்த நாட்டைப் பார்க்க முடியாது.

அது இருக்கும் இடம் யாருக்கும் தெரியாது. ஆனால் அங்கு செல்ல விமானத்தில் மட்டும் போக முடியும்.

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸா என்று தங்கள் நாட்டைப் பற்றி அந்த நாட்டின் குடி மக்கள் கூறுகின்றனர்!

அது ஒரு முக்கோண வடிவக் கொடியைக் கொண்டுள்ளது.  நித்யானந்தா மற்றும் நந்தியை அடையாளமாச் சின்னமாக (Emblem) அது சித்தரிக்கிறது.

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸாவிற்கு தேசிய கீதம் ஒன்று உண்டு.

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸாவிற்கு அரசியம் சட்டமும் உண்டு.

கல்வி, சுகாதாரம், வீடு அமைப்பும் உள்ளிட்ட 15 அரசு இலாகாக்கள் அங்கு உள்ளன.

அதனுடைய புழக்க நாணயத்தின் பெயர் ஸம்ஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா. ஆங்கிலத்தில் கைலாஸியன் டாலர்.

ஹிந்து பக்தர்களின் நாணயப் புழக்கத்திற்கென அந்த நாட்டில் ஒரு ரிஸர்வ் வங்கியும் இருக்கிறது.

‘இலவச ஆன்மீக சேவைக்காக’ (free spiritual services) அது கூகில் (Koogle) வழியே மின் பாஸ்போர்ட்களையும் (e-passports) வழங்குகிறது.

***                   தொடரும்

Part 6 of Kumbakonam Wonders Picture Ramayana on Temple Walls (Post No.11,846)

Hanuman  giving Rama’s ring to Sita Devi in Lanka

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,846

Date uploaded in London – –  27 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 6

Pictures of Ramayana incidents and anecdotes were painted on Ramaswami Temple walls at Kumbakonam in Tamil Nadu.

About 220 pictures from the Ramayana were painted a few hundred years ago.

Here are some more pictures:

Rama asking Sugreeva to send his army for his help

Dangerous Nikumbha Cave Yaga to finish Rama

Hanuman searching Sita devi in Ravana’s Palace

Hanuman fighting with Angaradhara

Ravana asking Rakshasis to persuad Sita

Ravana’s source of strength is explained to Rama by Angathan and Jambavan

Hanuman fighting with Seven Sons

Indrajit shooting Brahmastra on Hanuman 

Hanuman fighting with Akshayakumara

Indrajit, binds Hanuman with Brahmastra

—subham–

Pictures, Ramayana, Ramaswami Temple, Kumbakonam, Part 6

கரும்பு ஆயிரம் பிள்ளையார் கோவிவிலில் தரிசனம் (Post.11,845)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,845

Date uploaded in London – –  27 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பிள்ளையாருக்கு உள்ள வினோத அடைமொழிகள் போல வேறு எந்த இந்துக் கடவுளுக்கும் விசித்திரமான அடைமொழிகள் இல்லை என்றே சொல்லலாம். ஒவ்வொரு பெயருக்கும் பின்னர், ஒரு கதை அல்லது சம்பவம் இருக்கும். மதுரை மேல மாசிவீதி பிள்ளையார் கோவிலில் நேருஜி பெயர் ஒட்டிகொண்டது ! சாமியே கும்பிடாத காஷ்மீரிப் பார்ப்பான் ஜவஹர்லால் நேரு. ஒரு காங்கிரஸ்கார கவுன்சிலர் சொன்னதற்காக மதுரையில் நேருவின் கார் அங்கே நின்றதாம். இதனால் நேருவின் பெயர் ஒட்டப்பட்டது.

அட , இது புது வழக்கம் என்று நினைத்து விடாதீர்கள்.   இது புது வழக்க ம் அல்ல. திருவண்ணாமலைக் கோவிலுக்குள்நுழைந்தால் ஒரே கோவிலுக்குள் பல பிள்ளையார் பெயர்களைக் காணலாம். அவ்வளவு பிள்ளையார் பெயர்களுக்கும் விளக்கம்  எழுத ஒரு ‘என்சைக்ளோபீடியா’ தேவைப்படும். இது 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ராஜ ராஜன் சோழன் காலத்திலிருந்து இருந்து வருகிறது. நம்பி ஆண்டார் நம்பியைத் திருப்திப் படுத்துவதாற்காக சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்ட பொல்லாப் பிள்ளையார் முதல் மதுரை மீனாட்சி  கோவில் முக்குறுணி விநாயகர், விபூதிப்  பிள்ளையார் வரை  சொல்லிக்கொண்டே போகலாம்.

லண்டனில் வசிக்கும் சாமிநாதன் என்ற நண்பர், கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் ஆலயம் கோவிலில் நீண்ட நெடுங்காலம் பூ ஜை செய்த பட்டரின் மகன் ஆவார். அவர் இந்தப் பிள்ளையாரின் மஹிமை பற்றி ஏற்கனவே சொல்லியிருந்த தால். இந்த முறை இந்திய விஜயத்தில் அவரைச் சந்தித்து ஒரு ஸலாம் (சல் யூட்).போடத்  தீர்மானித்தேன். அதன்படி ஒரே நாளில் 6 கோவில் தரிசன சூறாவளி சுற்றுப் பயணத்தில் 19-3-2023 அன்று நாங்கள் 3 பேர் அந்தக் கோவிலில் பிள்ளையாரைத் தரிசி த்து அருளாசி பெற்றோம். நல்ல சாந்நித்யம் உள்ள கோவில். நாமே வைப்ரேஷன்VIBRATIONSகளை உணரலாம். சுமாரான கூட்டம்; எளிதான தரிசனம்.

Xxxx

இதோ அவர் கதை  :

இக்கோயில் பற்றி திருக் குடந்தைப்  புராணம் போற்றுவதைக் கீழ்க்கண்ட பாடலில் காணலாம்.

அருகரும்புத் தரும்வியப்ப அவனியொரு

கோட்டுநுனி அமைத்துத் தீயோர்

திருகரும்புக் கிடங்கொடாச் செங்கண்வரி

கமும்கிழத் தேதே யென்று

வருகரும்புட் குலமுழக்கு மலர்க்கேழற்

புனற் கோட்டார் வணிகன் பாங்கர்

ஒருகரும்புக் காயிரங்கொண் டுறுகரும்பா

யிரக்களிற்றை உளங்கொள்வோமே“

பிரசித்திபெற்ற கும்பேஸ்வரர் ஆலயத்துக்கு அணித்தே உள்ளது கரும்பாயிரம் பிள்ளையார் கோவில் . ஒரு காலத்தில் வராகப் பிள்ளையார் என்ற பெயர்தான் இருந்தது. ஏனெனில் அருகிலுள்ள வராகப் பெருமாள் கோவிலை ஒட்டி அதற்காக அமைக்கப்பட்டது. பின்னர் பிள்ளையார் செய்த லீலையால் கரும்பு ஆயிரம் ஒட்டிக்கொண்டது.

அது என்ன கதை?

ஒரு வியாபாரி ஆயிரக்கணக்கான கரும்புகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு கரும்பு ஆலைக்குச் சென்று கொண்டிருந்தான். யானைக்கு கரும்பு என்றால் கொ ள்ளை ஆசைதானே ! ஆனை  முகப் பிள்ளையார் ஒரு சிறுவன் வேடத்தில் வந்து ஒரே ஒரு க ரும்பைக் கேட்டார். எச்சில் கையாலும் காகத்தை ஓட்டா தக் கஞ்சன் அந்த வியாபாரி . ஒரு கருபம்பைக் கூடத்  தர மாட்டேன் என்றான். மேலும் அதற்காக சில பொய்களையும் சொல்லிவிட்டுப் போனான். ஆனால் அவன் கரும்பாலைக்குச் சென்றபோது அவை எல்லாம் தரக்குறைவானவை என்று நிராகரிக்கப்பட்டன. கவலை அடைந்த வியாபாரியின் கனவில் பிள்ளையார் தோன்றி , அவனது கஞ்சசத்தனத்தால் விளைந்த கருமம் இது என்று விளக்கினார். பின்னர் அவனும் மனம் திருந்தி பிள்ளையாரை கரும்பு சகிதம் வந்து வணங்கினான் ; அது முதற்கொண்டு புதுப்பெயருடன் புகழ் பெற்றார் ஆயிரம் கரும்புப் பிள்ளையார்!

கோவில்களும் இத்தகைய கதைகளும் நமக்குப்  போதிப்பது என்ன?

பிறருக்கு உதவி செய்; ஐயமிட்டு உண் ; யாராவது , எதையாவது கேட்டால் , உன்னிடம் அதிகம் இருந்தால், அதைப் பிறருக்கும் கொடு.ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுங்கள்.

–subham—

Tags- கும்பகோணம், கரும்பாயிரம் பிள்ளையார், கோவில் , ஆயிரம் கரும்பு

உண்மையான மகன் யார்? மனைவி யார்? நண்பன் யார்? (Post.11,844)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,844

Date uploaded in London –   27 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுபாஷிதச் செல்வம்

உண்மையான மகன் யார்மனைவி யார்நண்பன் யார்?

ச.நாகராஜன்

உண்மையான மனைவி யார்?

ஒரு உண்மையான மனவிக்கான இலக்கணம் என்ன? யாரை மகன் என்று கூற முடியும்? ஒரு நல்ல நண்பன் என்று கூறத் தக்கவன் யார்?

இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரு பாடலில் விடை தரப்படுகிறது.

ய: ப்ரீணயேத்சுசாரிதை: பிதரம் ச புத்ரோ

      யத்பர்த்ருரேவ ஹிதமிச்சதை தத்களத்ரம் |

தன்மித்ரமாபதி சுகே ச சமக்ரியம் ய-

     தேதத் த்ரயம் ஜகதி புண்யக்ருதோ லபந்தே ||

இந்த சுபாஷிதத்தின் பொருள்:

தனது மேன்மையான நடத்தையால் எந்த ஒருவன் தனது தந்தையை சந்தோஷப்படுத்துகிறானோ அவனே புத்திரன் எனச் சொல்லப்படுவான்.

தனது கணவனின் ஹிதத்தை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் ஒருத்தியே மனைவி எனப்படுவாள்.

 வளமாக சுகத்துடன் இருக்கும் காலத்திலும் அபாயகரமான காலத்திலும் எவன் ஒருவன் உதவி செய்கிறானோ அவனே நண்பன் எனப்படுவான்.

இந்த மூவரும் யாருக்குக் கிடைக்கும் எனில் புண்யம் செய்தவர்களுக்கே இப்படிப்பட்ட மூவர் கிடைப்பார்கள்.

இங்கு திருவள்ளுவரின்

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு”    – (குறள் எண் 788)

என்ற குறளை ஒப்பு நோக்கலாம்.

 காலால் தொடாதே!

எதையெல்லாம், யாரையெல்லாம் காலால் மறந்தும் தொடக் கூடாது.

ஒரு பட்டியலையே தருகிறார் கவிஞர்:

பாதாப்யாம் ந ஸ்ப்ருஷேதக்னிம் ந குரும் ப்ராஹ்மணம் ததா|

ந காம் ச ந குமாரிம் ச ந சிஷும் ந ச தேவதாம்.

பாதத்தால் தீயைத் தொடாதே.

அது மட்டுமல்ல பாதத்தால் தொடக் கூடாதவர்கள் இதோ;

குரு

ப்ராஹ்மணர்

பசு

குமாரி

குழந்தை

(தெய்வ) தேவதைகள்

சொர்க்கம் செல்ல வேண்டுமென்றால்….

சொர்க்கத்திற்குச் செல்ல யாருக்குத் தான் ஆசை இருக்காது.

சொர்க்கத்திற்குச் செல்வது பற்றி ஒரு கவிஞர் ‘டிப்ஸ்’  (TIPS) தருகிறார் இப்படி:

கொடுக்கப்படாததை மனதால் கூட இச்சிக்கக் கூடாது.

மதுபானத்தை அருந்தக் கூடாது.

உயிருள்ளவற்றை இம்சிக்கக் கூடாது.

தவறானவற்றைச் சொல்ல கூடாது.

அடுத்தவர் மனைவியை மனதாலும் விரும்பக் கூடாது. அடைய முயற்சிக்கக் கூடாது.

இவற்றை எல்லாம் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புவோர் க்டைப்பிடிக்க வேண்டும்.

கடைப்பிடித்தால்,

பிறகென்ன, சொர்க்கம் நிச்சயம் தான்!

நாதத்தமிச்சேன்ன பிபேச்ச மத்யம்

     ப்ராணான்ன ஹிம்ஸென்ன வதேச்ச மித்யா |

பரஸ்ய தாரான்மனசாபி நேச்சேத்ய:

    ஸ்வர்காமிச்சேஎதூக்ருஹவத்ப்ரவேஷ்டம் ||

பண்டிதன் யார்?

பண்டிதன் என்று யாரைச் சொல்லலாம். கவிஞர் வழி காட்டுகிறார்:

எவன் ஒருவனின் செயல்கள் தடைகளைச் சந்திக்கவில்லையோ அவனே பண்டிதன்.

தடைகள் என்பவற்றில் கீழ்க்கண்டவையும் அடங்கும்:

குளிர்,

வெப்பம்,

பயம்,

பற்று,

வளம்,

வளமின்மை

இந்தத் தடைகள் அனைத்தையும் கடந்து தாண்டித் தன் செயல்களைச் செய்பவனே பண்டிதன் ஆவான்.

யஸ்ய க்ருத்யம் ந விதந்தி ஷீதமுஷ்ணம் பயம் ரதி: |

சம்ருத்திரசம்ருத்திர்வா ச வை பண்டித உச்யதே ||

கிடைக்கவே கிடைக்காதது எது?

ஒருவனுக்கு  இன்னொரு வளமான வாழ்வு கிடைக்கலாம்.

இன்னொரு நண்பன் கிடைக்கலாம்.

இன்னொரு மனைவி கிடைக்கலாம்.

இன்னொரு நிலம் கிடைக்கலாம்.

இந்த எல்லாமும் கூட கிடைக்கலாம். ஆனால்

ஒருவனின் உடல் கிடைப்பதென்பது முடியவே முடியாது.

புனர்வித்த்தம் புனர்மித்ரம் புனர்பார்யா புனர்மஹீ |

ஏதத்சர்வம் புனர்லப்யம் ந சரீரம் புன: புன: ||

***

Part 5 of Kumbakonam Wonders; Chitra Ramayana on Temple walls (Post No.11,843)

Sugreeva is advised by Rama

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,843

Date uploaded in London – –  26 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Rama and Lakshmana getting permission to leave for the forest.

Sugreeva has been crowned as the King of Kishkinda

Maya Sita, Magically created Sita, was cut by Indrajith

Yatra Dhanam given by Rama Lakshmana;

Ruma and Tara met  by Lakshmana

Rama piercing Seven Trees with one arrow

Vali- Sugreeva Fight; Rama gave garland symbol to Sugreeva

Ramayana pictures on the walls of Ramaswami Temple at Kumbakonam Over 200 Ramayana scenes are painted on the walls in three tiers.

Part 5

Sugreeva carrying Vali to crematoriumm

Vali was killed  by Rama.

Lakshmana’s Wedding

Bharata’s Wedding

Sathrunan Wedding

Dasaratha with his wives

–subham–

Tags- Chitra Ramayana, Wall paintings, Ramaswami Temple

Tags- Chitra Ramayana, Wall paintings, Ramaswami Temple

கோவிந்தபுரத்தில் பகவந்நாம போதேந்திராள் அதிஷ்டானம் (11,842)

Anjaneyar temple at theAdhistanam

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,842

Date uploaded in London – –  26 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

சம்பிரதாய பஜனை செய்வோர் அனைவருக்கும் தெரிந்த மகானின் பெயர் பகவந் நாம போதேந்திராள் . இவருடைய அதிஷ்டானத்துக்குச் செல்லும் பாக்கியம் பிப்ரவரி 2023 இந்திய விஜயத்தின்போது கிடைத்தது. முதலில் கும்பகோணத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருவிசை நல்லூருக்குச் சென்று கங்கை நதி பெருக்கெடுத்த ஸ்ரீதர ஐயாவாள் வீட்டுக் கிணற்றையும் கோவில் போன்று அருள்பொங்கும் மடத்தையும் தரிசித்துவிட்டு திருவிடை மருதூருக்கு அருகிலுள்ள கோவிந்தபுரத்துக்கு வந்தோம். ஒரு புறம் விட்டல் மந்திர் ; அதன் எதிர்ப்புறம் ஆயிரம் பசு மாடுகளைக் கொண்ட கோ சாலா. அருகிலேயே எல்லா சாமியார்களின் மடங்கள். அவற்றில் நாம் தரிசிக்கப்போவது போதேந்திராள் அதிஷ்டானம். அதாவது அவர் சமாதி மீது எழுப்பப்பட்ட கோவில் போன்ற புனித இடம்.

கோவிந்தபுரம் புனித மணம் கமழும் இடம் என்பதால் ., பல சாமியார்களை பின்பற்றுவோரும் அங்கு மடம் அமைத்து , பிரசாரம் செய்து வருகின்றனர்.

Bhavannama Bodhendral Adhistanam

பகவந்  நாம போதேந்திராள் (1638- 1692) , காஞ்சி காமகோடி மடத்தின் 59ஆவது பீடாதிபதியாக விளங்கிய மஹான். அவர் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். திருவிசை நல்லூர் ஸ்ரீதர ஐயாவாளின்  சமகாலத்தவர்.இறைவனை அடைய அவருடைய நாமத்தைச் சொல்லி ஆடிப்பாடினாலே போதும்; பக்திதான் முக்கியம் என்று வலியுறுத்தியவர். போதேந்திராள்.. இதில் ஜாதி, இன  வேறுபாடுகள் கிடையாது..

போதேந்திராள் அதிஷ்டானத்தில் பெரிய, உயரமான ஆஞ்சனேயர் கோவில் இருக்கிறது. நாங்கள் சென்றபொழுது, நைவேத்தியம் செய்து தயிர்சாதம் வழங்கினர்.அதிஷ்டானத்தில் கோ சாலையும் இருக்கிறது..

XXX

FOLLOWING MATTER IS ALREADY POSTED IN THIS BLOG BY S.NAGARAJAN

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 58வது பட்டம் பெற்று அந்தப் பீடத்தை அலங்கரித்தவர்  ஸ்ரீ விஸ்வாதிகேந்த்ர ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் ஆவார். அவரிடம் கேசவ பாண்டுரங்கர் என்ற ஒரு பிராமணர் கைங்கரியம் செய்து வந்தார். அவருக்கு வெகுகாலம் வரை மகப்பேறு இல்லாமல் இருந்தது. இறைவனை வேண்டஇறைவனின் திருவருளால் அவருக்கு ஒரு ஆண் குழந்தை 1610 ஆம் ஆண்டு பிறந்தது. காஞ்சியில் மண்டனமிஸ்ரர் அக்ரஹாரத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு புருஷோத்தமன் என்ற பெயர் சூட்டப்பட்டது. குழந்தையை கேசவ பாண்டுரங்கர் தம் குருநாதரிடம் காட்டக் கொண்டு வந்தார். குழந்தையை ஆசீர்வதித்த ஆத்ம போதேந்திரர் அந்தக் குழந்தையை  ஸ்ரீமடத்திற்கு அர்ப்பணம் செய்யும்படி கேசவரிடம் கூறினார். அவரும் அதற்கு இசைந்தார். ஆனால் தன் மனைவியைக் கேட்கவில்லையே என்ற அவர் மனதில் ஒரு தவிப்பு ஏற்பட்டது. வீட்டில் வந்து நடந்ததைச் சொன்ன போது பதிவிரத சிகாமணியான அவரது மனைவி சுகுணா, ‘அது நமது பாக்கியமே என்று கூற அவர் மிகவும் மகிழ்ந்தார்.

குழந்தை புருஷோத்தமன் பக்தியோடு வளர்ந்ததுதனது சேவையைச் செய்ய ஆரம்பித்தது. 15 வயதிற்குள் வேததர்மசாஸ்திரங்களை முற்றுமாகக் கற்றுத் தேர்ந்தார் புருஷோத்தமர்.

சில வருடங்கள் கழிந்தன. அப்போது  ஸ்ரீஜகத்குரு காசிக்கு யாத்திரையாகச் சென்றார். புருஷோத்தமனும் காசிக்கு யாத்திரை சென்று குருநாதரை தரிசிப்பது என்று தீர்மானம் செய்து கொண்டார். தனது நெருங்கிய நண்பரான ஞானசாகரனையும் காசிக்கு அழைத்தார்அவரும் உடன் வர இணங்கினார். அவர்கள் இருவரும் ஒரு சங்கல்பம் செய்து கொண்டனர். “காசிக்குச் செல்லும் போது இருவரில் யாரேனும் ஒருவர் இறந்து விட்டால்அடுத்தவர் அவருக்கு ஈமக்கிரியைகளைச் செய்து விட்டு தானும் தனது உயிரைத் தியாகம் செய்து விட வேண்டும் – இப்படி இருவரும் முடிவு செய்தனர். துரதிர்ஷ்டவசமாக செல்லும் வழியிலேயே ஞானசாகரன் இறந்து விடவேஅவருக்கு உரிய கிரியைகளைச் செய்த புருஷோத்தமன் காசி சென்று தன் குருநாதரை தரிசித்து நடந்ததைச் சொல்லி தான் தனது உயிரை கங்கை நதியில் தியாகம் செய்யப் போவதாகவும்அதற்கு குருதேவரின் அனுமதி வேண்டும் என்றும் வேண்டினார்.

ஆசார்யாள்புருஷோத்தமன் சொல்வது அனைத்தையும் கேட்டு விட்டுப் பின்னர், “நீ பிராண தியாகம் செய்ய வேண்டாம். எப்போது ஒருவன் சந்யாசம் வாங்கிக் கொள்கிறானோ அப்போதே அவன் மறு ஜென்மம் எடுத்ததாக ஆகி விடுகிறது. அப்போது தர்ம சாஸ்திரத்தை ஒட்டி உனது சத்தியத்தைக் காப்பாற்றியதாக் ஆகி விடுகிறது என்று கூறி அருளினார். உடனே புருஷோத்தமனும் அதை ஏற்று சந்யாசம் மேற்கொண்டார். அவர் பகவன் நாம போதேந்திராள் என்ற யோகபட்டத்தையும் பெற்றார்.

ஆசார்யரின் ஆக்ஞைப் படி அவர் காஞ்சிக்குத் திரும்பிச் சென்றார்.

போதேந்திரரின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத் தகுந்த சம்பவம் அந்தக் காலத்தில் நடைபெற்றது. இஸ்லாமியரின் ஆதிக்கமும் அட்டூழியமும் நிறைந்த காலம் அது. தக்ஷிண தேசத்திலிருந்து ஒரு பிராமணர் தன் மனைவியுடன் வட தேச யாத்திரைக்குக் கிளம்பினார். வழியில் அவர்கள் இருவரும் ஒரு கிராமத்தில் இரவு தங்கினர். நள்ளிரவில் பிராமணரின் மனைவியாகிய அந்த அழகிய பெண்ணை இஸ்லாமியன் ஒருவன் வாயைப் பொத்தி கூக்குரலிட முடியாதபடி செய்து தூக்கிச் சென்று விட்டான். காலையில் மனைவியைக் காணாது திகைத்து அழுது புலம்பிய பிராமணர் தன் யாத்திரையைத் தொடர்ந்தார்காசிக்குச் சென்றார்.

முரடர்களிடம் உள்ள பயத்தினால் அந்தக் கிராம மக்கள் எதையும் அந்த பிராமணரிடம் சொல்லவில்லை. காசிக்குச் சென்று தன் யாத்திரையை முடித்த அந்த பிராமணர் மீண்டும் திரும்பி வரும் போது அதே கிராமத்திற்கு வந்தார். அந்த ஊரில் காலையில் ஒரு குளத்தில் குளித்து விட்டு குளக்கரையில் தனது அனுஷ்டானங்களைச் செய்ய ஆரம்பித்தார்.

அப்போது  அங்கு முஸ்லீம் ஆடை அணிந்து வந்த ஒரு பெண்மணி அவரிடம் வந்து கதறி அழுதாள். “நான் தான் உங்கள் மனைவி. ஒரு மஹாபாவி என்னை இந்த கதிக்கு ஆளாக்கி விட்டான். அவன் வருவதற்குள் நாம் தப்பி ஓடி விடலாம் என்றாள் அவள். அத்தோடு தன்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் ஒரு வேலைக்காரியாகவாவது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவள் அழுது புலம்பினாள். அவளது நிலையைக் கண்டு வருந்திய பிராமணர்இந்த பாவத்திற்கு பிராயச்சித்தம் ஏதேனும் உண்டா என்று பார்க்கலாம் என்றார். அங்குள்ள சிலர் அதே ஊரில் இருக்கும் ஜகந்நாத கவியைச் சந்தித்துக் கேட்டால் அவருக்கு தக்க விடை கிடைக்கும் என்றனர். ஜகந்தாத கவியைச் சந்தித்த தம்பதி நடந்ததைக் கூறஜகந்நாதர் மூன்று  முறை ராம ராம ராம என்று கூறினால்

போதும்அவளை ஏற்றுக் கொண்டு விடலாம் என்றார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜகந்நாத கவியின் அன்னையார் அங்கு வந்தார். அவர் அத்வைத மகரந்தம் உள்ளிட்ட பல நூல்களை எழுதிப் புகழ் பெற்ற பண்டிதரான லக்ஷ்மிதரர் என்னும் பிரசித்தமான கவிஞரின் மனைவி. அவர் தனது மகனான ஜகந்நாத கவியிடம், “ மூன்று முறை வேண்டாமே! எத்தனை பாவமானாலும் ஒரு முறை ராம நாமத்தை உச்சரித்தாலே போதுமேஅனைத்துப் பாவங்களும் தீருமே என்றார்.

வழிப்போக்கராக அந்த கிராமத்திற்கு வந்து இதையெல்லாம் திண்ணையிலிருந்து கேட்டு கொண்டிருந்த பகவந்நாம போதேந்திரர் ஜகந்நாதரிடம் இதற்கு ஆதாரம் உள்ளதா என்றார்.

உடனே ஜகந்நாதர் தனது தந்தையான லக்ஷ்மிதரர் இயற்றிய ‘பகவந்நாம கௌமுதி என்ற நூலை ஆதாரமாகக் காட்டினார்.

பொழுது விடிந்தது. அங்கு வந்த பிராமணர் தனது மனைவியைக் குளத்தில் இறங்கி ராம நாமத்தை உச்சரிக்கச் சொன்னார். அவரது மனைவியும் ஸ்நானம் செய்து கொண்டே ராம நாமத்தை உச்சரித்தார். என்ன ஆச்சரியம்!  முன்போலவே காதில் தோடு அணிந்தும்நெற்றியில் குங்குமப் பொட்டுடனும்பழையபடி புடவையை உடுத்தியும் அவரது மனைவி காட்சி அளித்தாள். கண் எதிரே பிரத்யக்ஷமாக ராம நாமத்தின் மஹிமையைப் பார்த்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அன்றே அவள் கையினாலேயே பிக்ஷையை வாங்கிக் கொண்ட போதேந்திரர் பகவந்நாம கௌமுதி நூலின் பிரதி ஒன்றையும் வாங்கிக் கொண்டு காஞ்சி வந்து சேர்ந்தார்.

குருவான ஆத்ம போதேந்திரர் தனது சீடரான பகவந்நாம போதேந்திரரை பீடாரோகணம் செய்வித்தார். அவர் ஸ்ரீ காஞ்சி பீடத்தின் 59வது ஆசார்யராக பீடம் ஏறினார். சுமார் 50 வருடங்கள் பகவந்நாம மஹிமையை உலகெங்கும் உபதேசித்து அனைவரையும் நாம சங்கீர்த்தனம் செய்யச் செய்தார் போதேந்திரர்.

ஸ்ரீஜகத்குரு போதேந்திராளும் அவரது குருவும் இராமேஸ்வர யாத்திரையை மேற்கொண்டனர். அப்போது கெடில நதி தீரத்தில் குரு சித்தி அடைந்தார். அவரது சமாதி இருப்பதை வடவாம்பலம் கிராமத்தில் காஞ்சி காமகோடி பெரியவாள் 68வதுபீடாதிபதி  ஸ்ரீ சந்த்ர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தனது தீர்க்க திருஷ்டியால் கண்டு பிடித்து 1927ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிருந்தாவன பிரதிஷ்டை செய்வித்தார்.

போதேந்திரர்தனது குருவின் மனோரதமாகிய இராமேஸ்வர யாத்திரையை பூர்த்தி செய்தார். திரும்பி வரும் போது திருவிடைமருதூர் க்ஷேத்திரத்தில் இருந்து கொண்டு திருவிசைநல்லூர் ஐயாவாளின் மஹிமையை அறிந்து கொண்டார். அவருடன் அறிமுகம் ஏற்பட இருவரும் பகவன் நாம கீர்த்தனையை செய்து ஆனந்தமாய் அதைப் பரப்பிய வண்ணம் இருந்தனர்.

பிறகு இருவரும் ஒரு முறை பிரம்பூர் என்ற கிராமத்திற்குச் சென்று சில நாட்கள் தங்கினர். அங்கு ஒரு ஊமைப் பையன் இருந்தான். அவனைப் பேசும்படி அருள் பாலித்து அவர்அவனைப் பேசச் செய்தார். அந்தப் பையனும் இராம பஜனை செய்யத் துவங்கினான். அந்த ஊரில் அவர் ஒரு ஆஞ்சனேயரையும் பிரதிஷ்டை செய்தார்.

ஸ்வாமிகள் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய  ஸ்ரீமடத்தின் பொறுப்பை தனது சீடரான அத்வைதாத் பிரகாசகரிடம் ஒப்படைத்து அவரை 60வது பீடாதிபதியாக ஆக்கினார். நாம சங்கீர்த்தன மஹிமையை உலகிற்கு போதிப்பதில் அதிகம் ஈடுபட்டார்.  ஸ்வாமிகள்  ஸ்ரீதர ஐயாவாளின் மறைவுக்குப் பின்னர் அதிகம் பேசுவதை நிறுத்திக் கொண்டார். திருவிடைமருதூரில் சில காலம் வசித்தார். அருகிலுள்ள கோவிந்தபுரமும் அவரைக் கவர்ந்தது. ‘பகவன் நாம ரஸோதயம் உள்ளிட்ட எட்டு நூல்களை அவர் இயற்றியுள்ளார். தினமும் லட்சத்திற்கும் மேற்பட்ட முறை ராம நாமத்தை உச்சரிப்பது அவரது அன்றாடப் பழக்கம்.

ஸ்வாமிகள் காலத்தில் பல அபூர்வ நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஸ்வாமிகள் எப்போதும் தனிமையில் இருப்பார். மாலை நேரத்தில் காவேரிக் கரையில் சிறுவர்களுடன் சேர்ந்து தாமும் விளையாடுவார். அந்தச் சமயத்தில் பல அதிசயங்களை அவர் செய்வார். அதைப் பார்த்து சிறுவர்கள் மகிழ்வர்.

கோடை காலத்தில் குழி தோண்டி மண்ணை வண்டி வண்டியாக எடுப்பது மக்களின் வழக்கம். அப்போது அந்தக் குழியில் அமர்ந்து சிறுவர்களை விட்டு மண்ணைப் போட்டு மூடச் சொல்வது போதேந்திரரின் வழக்கம். ‘யாரிடமும் சொல்லாதீர்கள்நாளை வந்து பாருங்கள் என்று அவர்அந்தச் சிறுவர்களை அனுப்பி விடுவார். மறுநாள் சிறுவர்கள் குழியிலிருந்து மண்ணை எடுத்து அப்புறப்படுத்த போதேந்திரர் வெளியே வருவார். அடிக்கடி இப்படி நடந்தது. ஒரு நாள் ஸ்வாமிகளைக் காணாத ஊர் மக்கள் அவரைத் தேடத் தொடங்கவே சிறுவர்கள் முதல் நாள் நடந்த நிகழ்ச்சியைக் கூறி ஆற்றுக்கு அழைத்துச் சென்றனர். ஊர் மக்கள் குழியிலிருந்த மண்ணை அகற்ற முற்பட்டனர். ஆனால் அப்போது ஒரு ஒலி எழுந்தது: “நாம் இவ்விடத்திலேயே ஞானமயமான சித்த சரீரத்தில் இருந்து கொண்டு ஜீவன் முக்தராக யோக சக்தியால் உலக நலனுக்காக பகவன் நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டே இருப்போம். இதற்கு விக்னம் செய்ய வேண்டாம். இந்த இடத்தில் எவர் ஒருவர் தினமும் லட்சத்து எண்ணாயிரம் தரம் நாம ஜபத்தைச் செய்கிறாரோ அந்த பக்குவமுடைய பக்தருக்கு நாம் தரிசனம் தருவோம். இந்த இடத்தில் பிருந்தாவனம் அமைத்து ஆராதித்தும் வரலாம்.

இந்த அருளுரைப்படியே அவர் பிருந்தாவனம் அமைக்கப்பட்டது.

கோவிந்தபுரம் கிராமத்தில் சாலிவாஹன சகாப்தம் பிரஜோத்பத்தி வருடம் ப்ரோஷ்டபத மாதம் பௌர்ணமி அன்று ஸ்வாமிகள் நிர்விகல்ப சமாதி அடைந்து  பிரம்ம ஸ்வரூபமாய் விளங்க ஆரம்பித்தார்அது 1692ஆம் ஆண்டாகும்.

புரட்டாசி மாதம் மாளய பக்ஷத்தில்  ‘யதி மஹாளயம் என்று கூறப்படும்  கிருஷ்ண பக்ஷ துவாதசியில்  வருடந்தோறும் போதேந்த்ராளின் ஆராதனை இன்றளவும் நடை பெற்று வருகிறது. பக்தர்கள் அவருடைய ஆராதனையை அங்குள்ள பிருந்தாவனத்தில் கூடி சிறப்பாக இன்றளவும் நடத்தி வருகின்றனர்.

இன்று அங்குள்ள அதிஷ்டானத்திற்கு செல்வோர் பாரம்பரிய முறைப்படி மேலாடை இன்றி பயபக்தியுடன் உள்ளே சென்று வணங்குவது மரபாக இருக்கிறது.

another saint samadhi in govindapuram adhistanam

இந்த அதிஷ்டானத்தில் அருகில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பிரம்மாண்டமான ஸ்ரீ விட்டல் ருக்மிணி மந்திர் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.சேங்காலிபுரம் ப்ரஹ்ம ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதரின் பேரனும் ஸ்ரீஹரிதாஸ் கிரி ஸ்வாமிகளின் சீடருமான ப்ரஹ்ம ஸ்ரீ விட்டல் தாஸ் ஜயகிருஷ்ண தீக்ஷிதர் அவர்களின் அரும் முயற்சியால் இந்த பிரம்மாண்டமான ஆலயம் அமைக்கப்பட்டது. இந்தக் கோவிலையும் அதிஷ்டானத்தையும் தரிசிக்க கோவிந்தபுரத்திற்கு பக்தர்கள் திரளாக வருகை புரிகின்றனர். ‘கலௌ சங்கீர்த்ய கேசவம் என்ற அருள் மொழிக்கு இணங்க கலியுகத்தில் கடைத்தேற நாம சங்கீர்த்தனம் ஒன்றே சுலபமான வழி என்பதை போதிக்க அவதரித்துள்ள மகான்களில் போதேந்திரர் மிகவும் பூஜிக்கத் தகுந்த சிறப்பான மகான். அவரை வணங்கி நாம ஜபம் செய்வோம்நலம் பெறுவோம்

— SUBHAM— 

 tags- சம்பிரதாய பஜனை, பகவந் நாம போதேந்திராள் .,கோவிந்தபுரம்

யமுனா நதியில் குளியல்! (Post No.11,841)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,841

Date uploaded in London –   26 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

யமுனா நதியில் குளியல்!

ச.நாகராஜன் 

அழகிய யமுனை நதி.

நினைத்தாலே நெஞ்சம் பரவசமாகும். ஶ்ரீ கிருஷ்ணரின் நினைவு. கோபிகைகளின் பக்தி அனைத்தும் நெஞ்சத்தை நிறைக்கும்.

காலம் காலமாக பக்தர்கள் அலைமோதி அங்கு சென்று யமுனா ஸ்நாநம் செய்து ஜன்ம சாபல்யம் பெற்று வந்துள்ளதை நினைத்தாலே நெஞ்சம் பரவசமாகும்.

ஒரு பக்தர். அவர் பெயர் பி.என் மாலிக் தாதா (B.N.Maik Dada).

அவர் பெரிய மகானான அனந்த ஶ்ரீ ஶ்ரீ தாகூர் சீதாராம்தாஸ் ஓம்கார்நாத் தேவ் அவர்களின் சீடரும் கூட. (Ananta Sri Sri Thakur Sitaramdas Onkarnathdev).

 அவர் தனது யமுனா ஸ்நாநம் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அதன் சாரம் தான் இந்தக் கட்டுரை.

அவரது எழுத்திலேயே அவர் கூறுவதைப் பார்ப்போம்:

 சைத்ர சங்கராந்தி தினம். இடம் டெல்லி.

ஶ்ரீ ஶ்ரீ பாபா டெல்லிக்கு விஜயம் செய்திருந்தார்.  யமுனா நதியில் ஸ்நாநம் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார்.

இருபது வருட காலமாக நான் டெல்லியில் வசித்து வந்தாலும் கூட ஒரு தடவை கூட யமுனா நதியில் நான் குளித்ததில்லை.

பாபா எனது தயக்கத்தைப் புரிந்து கொண்டார்.

“உனக்கு கங்கை தான் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால் இன்று யமுனைக்குச் செல்வோம்” என்றார் அவர்.

யமுனைக்குச் சென்றோம்.

இடுப்பளவு ஆழத் தண்ணீரில் இறங்கினோம்.

பாபா 12 தடவை யமுனா நதியில் மூழ்கி எழுந்தார்.

நான் மூன்று தடவை மூழ்கி எழுந்தேன்.

அதற்கு மேல் என்னால் முடியவில்லை.

நீர் சகதியும் சேறுமாக இருந்தது.

பாபாவோ சந்தோஷமாகக் காணப்பட்டார். அழகிய முகம் பிரகாசமாக இருந்தது. தூய்மையாகவும் காணப்பட்டது.

நானோ உள்ளுக்குள் புழுங்கினேன். மிக மோசமாக உணர்ந்தேன்.

இன்னும் இரு இடங்களுக்கு நாங்கள் சென்றோம். பாபாவோ பிரகாசமாக இருந்தார்.

என்னாலோ பேசவே முடியவில்லை. சகதியும் அதிலிருந்த துர்நாற்றமும் என்னைத் தொந்தரவு செய்து கலங்க வைத்தது.

பாபா தங்கி இருந்த  லக்ஷ்மி நாராயணன் ஆலயம் சென்ற போது, அவரிடம் விடை பெற்று சட்டென்று என் வீடு நோக்கி விரைந்தேன்.

எனது வீடு பக்கத்தில் தான் இருந்தது.

நல்ல வெந்நீரில் பல தடவை என்னை சுத்தம் செய்து கொண்டேன்.  சோப்பை நன்றாகப் போட்டுத் தேய்த்துத் தேய்த்துக் குளித்தேன்.

நிறைய தண்ணீரை மொண்டு எடுத்துக் குளித்துக் கொண்டே இருந்தேன்.

ஓரளவு சுத்தமாக ஆகி விட்டோம், துர்நாற்றமும் தொலைந்தது என்ற உணர்வு வந்தவுடன் தான் குளிப்பதை நிறுத்தினேன்.

சுத்தமான நல்ல ஆடைகளை அணிந்து கொண்டேன்.

பாபாவைப் பார்க்க ஆலயம் சென்றேன்.

அவர் என்னைப் பார்த்தவுடன், “வா, வா, உனக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன். எங்கே போனாய் இவ்வளவு நேரம்? யமுனா நதி குளியல் எவ்வளவு அழகாக இருந்ததுஅதில் குளிக்க நீயோ தயங்கினாய்?!” என்றார்.

நான் கம்மிய குரலில், “ஆமாம், ஆமாம், பிரமாதம். நன்றாக  இருந்தது” என்றேன்.

ஶ்ரீ கிருஷ்ணரும் கோபிகைகளும் குளித்த யமுனா நதியில் பாபா குளித்து விட்டு வந்திருந்தார்.

நானோ டெல்லி சாக்கடை நீரெல்லாம் கலந்த அழுக்கும் நாற்றமும் உடைய யமுனா நதியில் குளித்து விட்டு வந்திருந்தேன்.

5000 ஆண்டுகளாக யமுனை அன்னை அதே மாதிரியாகத் தான் பாய்ந்து ஓடிக் கொண்டிருக்கிறாள். அதிலே தான் பாபா குளித்தார். சுத்தமாக ஆனார்.

ஆனால் எனக்கோ அதே யமுனா நதி தான் இன்றைய அழுக்கு நீராக இருந்தது.

கடவுள் அழுக்கு நீரைச் சுத்தமாக ஆக்குகிறார். மனிதனோ நல்ல நீரை அழுக்காக ஆக்குகிறான்!

நன்றி : ட்ரூத் 30-12-2022 இதழ்

Source & Thanks Truth Kolkata Weekly Issue 30-12-2022 Vol 90 No 36

***