
Post No. 12,341
Date uploaded in London – – 29 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இந்தக் கட்டத்தில் 8 சொற்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் .

கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்
1. இந்நூல் முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட நூல் ஆகும். குலோத்துங்க சோழனின் படைத்தலைவனும் அமைச்சனுமாயிருந்த கருணாகரத் தொண்டைமான் கி.பி. 1112-ஆம் ஆண்டில் போரில் வென்ற செய்தியே நூற்பொருள். இது செயங்கொண்டார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.
2. அருணகிரிநாதரால் எழுதப்பட்டது. காப்புச்செய்யுள் உட்பட 102 பாடல்கள் உள்ளன. அனைத்தும் யமகம் முறையில் அமைந்த முருகன் மீதான அந்தாதிப் பாடல்கள்.
3.பன்னிரண்டாம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாசாரியார் என்பவரால் முருகன் பற்றி எழுதப்பட்டது.
4.சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு ;5 திணைகள் தலைப்பில் 5 புலவர்கள் பாடியது
5.தமிழில் உள்ள ராமகாதை
6. கல்லாடர் என்பவரால் இயற்றப்பட் ட சைவ நூல் . ஒன்பதாம் திருமுறைகளில் ஒன்றான இந்த நூல் 11ஆம் நூற்றாண்டில் தோன்றியது.
7.இந்து சமய பதினெண் புராணங்களில் பதினேழாவது புராணமாகும். வைணவ புராணமான இதில் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது. மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி இதன் இரண்டாம் பகுதி விளக்குகிறது.
8.இடைச் சங்க கால நூல்; அழிந்து போன நூல் என்பதால் பெயர் மட்டுமே கிடைத்தது. க என்னும் எழுத்தில் துவங்கி ரை என்னும் எழுத்தில் முடியும் பெயர்
| 1 | ||||||||||||
| 8 | 2 | |||||||||||
| 8 | ||||||||||||
| 7 | க | 3 | ||||||||||
| 6 | 4 | |||||||||||
| 5 |


| ணி1 | ||||||||||||
| ர | ||||||||||||
| 8 | ப | தி2 | ||||||||||
| ரை | து | தா | ||||||||||
| வி | த் | ந் | ||||||||||
| யா | க | ர | ||||||||||
| ரி | ங் | த | ||||||||||
| ள | லி | ந் | ||||||||||
| ம்7 | ண | ரா | பு | ட | ரு | க | ந் | த | பு | ரா | ண | ம்3 |
| ல் | ம் | லி | ||||||||||
| லா | ப | த் | ||||||||||
| ட | ரா | தொ | ||||||||||
| ம் | மா | கை | ||||||||||
| 6 | ய | 4 | ||||||||||
| ண | ||||||||||||
| ம்5 |
விடைகள்
1.கலிங்கத்து பரணி ;2.கந்தரந்தாதி ;3.கந்தபுராணம் ;4.கலித்தொகை ;5.கம்பராமாயணம் ;6.கல்லாடம்; 7.கருடபுராணம்; 8.களரியா விரை
—subham—-