கொடுங்கல்லூர் பகவதி கோவில்/ கண்ணகி கோவில் – 33 (Post No.12,832)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,832

Date uploaded in London – –   14 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 33

கோவில் எண்–32 

32.கொடுங்கல்லூர் பகவதி கோவில்

கொடுங்கல்லூர் எங்கே இருக்கிறது?

திருச்சூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. மத்திய கேரளம் என்று சொல்லவேண்டும். கேரளத்தின் தென் கோடியில் திருவனந்தபுரமும் வட கோடியில்  காஸர்கோடும் இருக்கின்றன. மத்தியில் திருச்சூர் இருக்கிறது. கொச்சியிலிருந்து 50.கி.மீ. ஒரு தீவின் நடுவில் 7 ஏக்கர் பரப்பில் கோவில் வியாபித்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

கொடுங்கல்லூர் பகவதி என்றே அழைக்கப்பட்டாலும் இதையும் திருச்செ

ங்குன்றூர் போல கண்ணகி கோவில் என்று சொல்லுவார்கள்; ஆயினும் இதற்கு ஆதாரம் ஏதுமில்லை .

இங்கு முதலில் இருந்தது சிவன் கோவில்; பின்னர் பகவதி சிலையும் வந்தது என்பார்கள்.

இங்கு தமிழ்நாட்டில் நடக்கும் காமன் பண்டிகை போலவே ஆபாச பாடல்களுடன் நடந்து வந்த பரணி விழாவில் இப்போது ஆபாச அம்சங்கள்  தடை செய்யப்பட்டுவிட்டன .

அதே போல ஏராளமான கோழிகளைப் பலியிட்டு வந்ததும் தடுக்கப்பட்டுவிட்டன.

கோவில் வரலாறு

சிவன் கோவில் உள்ள திருவஞ்சிக்குளம் அருகில் உள்ளது; இதைத்தான் கிரேக்கர்கள் முசிரிஸ் என்று அழைத்த னராம் . ஆங்கிலத்தில் கிராங்கனூர் Cranganore என்றே எழுதுவார்கள். ஆயினும் சேரர் தலைநகர் வஞ்சி என்பது கரூர் என்று பேரறிஞர் டாக்டர்  இரா. நாகசாமி போன்றோர் எழுதியதையும் மறந்துவிடக்கூடாது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் முசிரிஸ், வஞ்சி, கொடுங்கல்லூர் , திருச்செங்குன்றூர் , கண்ணகி கோவில் என்பதெல்லாம் முடிவில்லா வாதப்  பிரதிவாதங்களில் சிக்கித்  தவி க்கின்றன.

கொடுங்கல்லூர் பகவதி தோற்றம்

இங்கு சிவன் சந்நிதி கிழக்கு நோக்கியும் காளி ரூபத்திலுள்ள பகவதி வடக்கு நோக்கியும் உள்ளன. கேரள கோவில்களில் பக்தர்கள் அமரும் மேடையும் மண்டபமும் சிவனுக்கு முன்னால் இருப்பதால் அதுதான் முதல் கோவில் என்பது ஒரு கருத்து. மேலும் இதை உறுதி செய்யும் வகையில் முதல் அபிஷேகமும் நைவேத்தியமும் சிவ பெருமானுக்கே செய்கின்றனர்.

குரம்ப காவு என்பது கோவிலின் வட்டாரப் பெயர்.

தேவியின் உயரம் 6 அடி ; அவளுக்கு 8 கரங்கள்.இந்த உருவம் பலா மரத்தால் செய்யப்பட்டது; எட்டு  கரங்களிலும் ஆயுதங்கள்; உடல் முழுதும் தங்க, இரத்தின நகைகள் தேவியை அலங்கரிக்கின்றன.அமர்ந்த நிலையில் உள்ள தேவியின் உருவம் அச்சத்தையும் பக்தியையும் ஒருங்கே தோற்றுவிக்கும்.

ஒரு கதை

தாருகன் என்ற அசுரனையும் அவனது கும்பலையும் தேவி அழித்தாள் ;

இது பற்றிய கதை பின்வருமாறு

அசுர அணியில் தனமதி , தாருமதி என்ற இரண்டு பெண்மணிகள் மட்டும் எஞ்சினர்; அவர்கள் வம்சம் தழைக்க பிரம்மாவின் அருளை வேண்டவே அவர் கயிலாயம்  செல்லும்படி கட்டளையிட்டார் இரு பெண்களும் சிவ லோகத்தில் இருந்த இருவரை மணந்து காரகன் , தாருகன் என்ற இருவரைப் பெற்றனர். அவர்களில் தாருகன் பெண்களைத் தவிர வேறு எவரும் கொல்ல முடியாத வரத்தை வாங்கிக்கொண்டான்.

தாருகன் ஆணவம் பெருகவே, அவனை ஒடுக்க 6 தேவிகள் படைக்கப்பட்டனர் . அவர்களுடன் சிவன் நெற்றிக் கண்ணில் உதித்த காளி / பகவதியும் சேர்ந்து தாருகனை அழித்தார்கள்.  தற்போது கர்ப்பகிரகம் அருகில் சப்த மாத்ரிகா உருவங்கள் 4 கைகளுடன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்கள் .

ரகசிய அறை

இந்தக் கோவிலுக்கு சிறப்பூட்டும்  இன்னும் ஒரு அம்சம் ரகசிய  அறை  SECRET CHAMBER ஆகும். இங்கு ஒரு அறையும் அதன் கீழ் சுரங்கமும் உள்ளன. அதைக் கருங்கல் சுவர், கூரை மூலம் பாதுகாக்கின்றனர் ; சுரங்கப் பாதையின் முடிவு 100 கஜ தூரத்தில் முடிவடைகிறது அந்த இடத்தையும் கருங்கல் பலகைகளால் மூடியுள்ளனர். யானைகள் அணிவகுப்பு வரும்போதும் கூட இதைத்தாண்டிச் செல்லாமல் திரும்பிவிடும். நிலத்தடி அறைக்கு சேதம் ஏற்படாமலிருக்க இப்படிச் செய்கிறார்கள் இது இறந்தோர் புதைக்கப்பட்ட பெருங் கற்காலச் சின்னம் என்பது சிலர் கருத்து . உள்ளே மந்திர சக்கரங்கள் இருப்பதாக மேலும் சிலர் கூறுவார்கள் .

கோவிலைக் காக்கும் க்ஷேத்ர பாலர் உருவம் 12 அடி உயரம் கொண்டது இது தவிர நோய் தீர்க்கும் வைசூரிமாலை சிலையும் இருக்கிறது; ஒவ்வொரு சிலை பற்றியும் கதைகள் இருக்கின்றன.

XXXX

இரண்டு திருவிழாக்கள்

தால பொலி , பரணி ஆகிய இரண்டு திருவிழாக்களும் மிகவும் பிரபலமானவை .

தால பொலி திருவிழா மகர சங்கராந்தி அன்று துவங்கி  4 நாட்களுக்கு நடக்கும் ஜனவரியில் நடக்கும் இந்த விழா தமிழ் நாட்டின் பொங்கல் பண்டிகை போன்றதே ; போகிப் பண்டிகையில் இந்துக்கள் பழையானவற்றை  எரிப்பது போல எரிப்பார்கள்;  புத்தரிசியை இறைவனுக்குப்  படைப்பார்கள்

மகர சங்கராந்தி அன்று, கொங்கணி பேசும் குடுமி ஜாதியினர் ஒன்று கூடி  வாண வேடிக்கைகளுடன் 4 நாள் விழாவினைத் தொடங்குவர். பின்னர் ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் யானை ஊரவலங்கள் நடக்கும்

அரை கி.மீ தொலைவிலுள்ள குரும்பயம்மா கோவிலில் துவங்கும் ஊர்வலத்தில் தாலம் (தட்டு) ஏந்தி பெண்கள் வருவர். ஒரு யானையின் மீது குடை ஏந்திய தாலம் /தட்டு இருக்கும் .

திகைப்பூட்டும் பரணி விழா

பிப்ரவரி- மார்ச்சில் நடக்கும் பரணி திருவிழா மூலமாகத்தான் இந்தக் கோவில் பிரசித்தமானது. இதே காலத்தில் வடக்கில் ஹோலி பண்டிகை, தமிழ் நாட்டில் காமன் பண்டிகைகள் நடக்கின்றன ; தமிழ் நாட்டில் காமன் பண்டிகையின்போது காம சம்பந்தமான  நடனங்கள் ஆடல், பாடல்கள் நடக்கும்; இறுதியில் சிவன் எல்லோருடைய காம வெறியை அடக்க மன்மதனை எரிப்பார் .. அது போல இங்கும் பரணி விழாவில் பலர் குடிபோதையில் கும்மாளம் அடித்து காமக் காட்சிகளை அரங்கேற்றுவர் ; இப்பொழுது இந்துக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டு இவைகளை அடக்கிவிட்டனர்; அதே போல எண்ணற்ற கோழிகளை பலியிடுவதும் தடுக்கப்பட்டுவிட்டன  இது சம்பந்தமான சடங்குகள் மிகவும் விரிவானவை. பலிகளுக்கு மறுநாள் கோவில் சுத்தம் செய்யப்பட்டவுடன் நம்பூதிரிகள் மீண்டும் கோவிலுக்குள் வருவார்கள்.

பரணி விழாவில்  பழங்குடி  மக்களும் கலந்துகொண்டு  மஞ்சள் உடை அணிந்து மஞ்சள் பொடி பூசி ஊர்வலமாகச் செல்லுவார்கள் . இடுப்பில் மணிகள் கட்டிய பெரிய பெல்ட்டுகள் இருக்கும். கையில் வாளேந்தி தலை முடியை பறக்கவிட்டு ஆக்ரோஷமாக வருவார்கள்.; வெளிச்சப்பாடு என்னும்  ஆருடங்களை  சிலர் மொழிவர் ; தேவியின் மீது தங்களுக்குள்ள அசைக்க முடியாத பக்தியைக் காட்ட, பலரும் வாளால் நெற்றியில் காயம் ஏற்படுத்தி ரத்தத்தை தேவிக்கு அர்ப்பணிப்பார்கள்.லட்சக் கணக்கானோர் விழாக் காலங்களில்  இங்கே கூடுவர்; இந்தக் காட்சிகளைக் காண்போர் வியப்பிலும் பிரமிப்பிலும் திகைப்பிலும் மூழ்கிவிடுவார்கள்

–subham—

Tags- பரணி விழா, தாலப்பொலி , கொடுங்கல்லூர், பகவதி, கண்ணகி , கோவில்,

அப்பர் கூறும் நரிவிருத்தக் கதை! (Post No.12,831)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,831

Date uploaded in London –  –  14 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

தேவாரச் செல்வம்

அப்பர் கூறும் நரிவிருத்தக் கதை!

ச.நாகராஜன்

அப்பர் பிரான் சிறந்த உவமைகள் மூலமும் கதைகள் மூலமும் ஆன்மீக உயர் சிந்தனைகளைத் தருபவர்.

ஐந்தாம் திருமுறையில் அவர் பாடிய ஆதிபுராணத்

திருக்குறுந்தொகையில் ‘வேதநாயகன்’ என்று தொடங்கும் திருப்பதிகத்தில் ஏழாவது பாடலாக அமைகிறது இந்தப் பாடல்:

எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசன


துருவ ருக்கம தாவ துணர்கிலார்


அரிய யற்கரி யானை அயர்த்துப்போய்


நரிவி ருத்தம தாகுவர் நாடரே

எரி என்பது வேள்வித் தீ. இறைவனது அட்டமூர்த்த வர்க்கங்களில் தீயும் ஒன்று.

வேள்விகளில் அக்கினி வளர்ப்பார்கள். அந்த அக்கினி இறைவன் திருமேனி வகையாவது என்பதை உணராதவர்கள் அல்லது உணரும் ஆற்றல் இல்லாதவர்கள் திருமாலுக்கும் பிரமனுக்கும் அரிய கடவுளான சிவபிரானைக் காண்பதற்கு அயர்த்து நரி விருத்தம் ஆகுவர்.

அது என்ன நரிவிருத்தம்?

 இதில் தான் அப்பர் ஒரு கதையையே விதைக்கிறார்.

கதையோ பழம் பெரும் கதை! 

காட்டில் வேடன் ஒருவன் யானையைக் கொல்ல ஒரு அம்பை எய்து விட்டு மற்றொரு அம்பை வில்லில் பூட்டிக் கொண்டிருந்தான். அந்த வேளையில் பாம்பு ஒன்று அவனைக் கடித்தது. தன்னைக் கடித்த பாம்பை அவன் வாளால் வெட்டிக் கொன்றான். அதே நேரத்தில் பாம்பு விஷம் ஏற அவனும் மூர்ச்சித்து கீழே விழுந்து இறந்தான். ஒரே நேரத்தில் யானையும் பாம்பும் இறந்தன. அதே நேரத்தில் வேடனும் இறந்தான்.

நரி ஒன்று அவ்வழியே வந்தது. நடந்தைப் பார்த்த நரிக்கு அளவற்ற மகிழ்ச்சி. ஒரே நேரத்தில் இறந்து கிடந்த யானை, வேடன்,பாம்பு!

யானையின் உடல் ஆறு மாதத்திற்கு உணவாகும்.

வேடனின் உடல் ஒரு வாரத்திற்கு உணவாகும்.

பாம்பு ஒரு நாளைக்கு உணவாகும்.

இப்படி எண்ணிய நரி,  இப்போதைய பசிக்கு இந்த வேடனின் கையில் உள்ள வில்லில் உள்ள நரம்பாலாகிய நாண் போதும்; அதைக் கடித்துச் சுவைத்து உண்ணலாம் என்ற எண்ணத்துடன் வில்லில் பூட்டியிருந்த நாணை ஆவலோடு கடித்தது. உடனே வில்லில் இழுத்துக் கட்டப்பட்டிருந்த நாண் அறுந்து வில் திடீரென நிமிர்ந்த வேகத்தில் நரியின் வாயைக் கிழித்தது. நரியும் இறந்தது. அதன் எண்ணக் கோட்டைகள் தகர்ந்தன.

ஒவ்வொரு மனிதனும் மனதில் பல கோட்டைகள் கட்டுகிறான். ஒன்று நினைக்க ஒன்றாக முடிகிறது.

பழங்காலத்திலிருந்து இந்தக் கதை வழங்கி வருகிறது.

இந்தக் கதையை அப்பர் இங்கு நன்கு கூறி ஒரு அரிய உண்மையை விளக்குகிறார்.

இதே கதையை திருத்தக்கதேவரும் ஒரு விருத்தப் பாடலால் பின்னால் பாடியுள்ளார்.

திருவதிகை வீரட்டானத்தில் இன்னொரு பாடலிலும் நரியை அவர் உவமையாகக் கூறுகிறார்.

 நரி வரால் கவ்வ சென்று நல் தசை இழந்தது ஒத்த

தெரிவரால் மால் கொள் சிந்தை தீர்ப்பது ஓர் சிந்தைசெய்வார்
வரி வரால் உகளும் தெண் நீர் கழனி சூழ் பழன வேலி
அரிவரால் வயல்கள் சூழ்ந்த அதிகைவீரட்டனாரே

நரி ஒன்று வாயில் கவ்விய ஊனுடன் ஒரு நீர் நிலையைக் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு வரால் மீனைக் கண்டது. உடனே பேராசை கொண்டது. அதைக் கவ்வ விரும்பிய அது தனது வாயில் இருந்த ஊனையும் இழந்தது. அது போல மக்கள் கிட்டாத பொருள் செல்வத்திற்கு ஆசைப்பட்டு எளிதில் கிடைக்காத சிவச் செல்வத்தை – சிவ பக்தியை இழந்து விடுகின்றனர். சிவபிரான் அத்தகையோருக்கும்  அருள் புரிவார்.

 எரியினாரிரையார் என்ற பாடலில் ‘நரியினார் பரியா மகிழ்கின்றதோர் பெரியனார்’ என்று நரியினைப் பரியாக்கி மகிழும் பெரியவர் என்று மாணிக்கவாசகரைக் கூறுகிறார் அவர். (திருவீழிமலை – கரைந்து எனத் தொடங்கும் பதிகம்)

நரி பிரியாததோர் சுடலையானை என்று நரிகள் சூழ்ந்திருக்கும் சுடுகாட்டில் இருப்பவன் என்று சிவபிரானை ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். (தொழற்பாலதே என்னும் திருக்குறுந்தொகையில் விடலையானை எனத் தொடங்கும் பாடலில் காண்க)

 நரியை வைத்து அப்பர் நமக்குக் கூறும் கதையும் உவமையும் சுவை படைத்தவை என்பதில் ஐயமில்லை.

உணர்வோம்; உய்வோம்!

***

HINDU GODS IN SAUDI ARABIA?

LIFTED ARTICLE FROM OP INDIA 13

Saudi social media divided over ‘promoting’ Trinity of ancient Arabian goddesses amid revival of National Heritage, sparks religious outrage against ‘pagan-worshippers’

FOR PICTURES GO TO OP INDIA .COM

Several Saudi accounts claimed that the Saudi government is taking away the Kingdom from its religious identity in the name of recent reforms and building a nationalist narrative.

For the past few weeks, a large number of social media users in Saudi Arabia have been advocating for the revival of ancient Arabian deities as an integral aspect of the Kingdom’s national heritage, as highlighted by Middle East Monitor. Incidentally, this new social media movement promoting the Trinity of ancient Arabian goddesses coincides with Saudi PM Mohammad Bin Salman’s efforts to transform the kingdom’s identity from a religious one to a more nationalist identity.

Taking to X, one user shared pictures of the ancient Arabian goddess ‘Al-Uzza’. The picture shows people surrounding the ancient statues on display in Saudi museums. The user stressed that irrespective of the fact that they are Muslims or not, ancient history is also Arabic History. The user added that the Saudi government is giving importance to the ancient Arabian gods as their past is a part of their future, seemingly hinting at the tourism aspect of it. 

The user whose bio and geo-tagged locations say, Saudi Arabia, wrote, “From past to future al uzza is always there. we’re as Saudi Arabians, deeply connected with our past. doesn’t matter if we’re Muslims or not. It’s an arabic history. Saudi government gives so much importance for the ancient Arabian gods. our past is a part of our future.”

In another tweet, the user and several other friendly handles noted that there were three main ‘goddesses’ of the pre-Islamic polytheistic pantheon namely ‘Al-Lat’, ‘Manat’, and ‘Al-Uzza’. They described the Feminine Trinity as their own ancient history and symbols of female empowerment. The user claimed that females were sacred and integrated in Arabs as well and worshipping Females as divine had flourished. It was contrary to the stereotype of carrying out female infanticide, the user added. 

Justifying the pre-Islamic practice of burying young daughters, the user argued that female infanticide was not because of shame, as some claim it to be, instead it was to offer “girls as sacrifices” to the “feminine trinity”.

The tweet read, “Al-Lat, Manat, and Al-Uzza are our ancient history. Since ancient times, Arabs have sanctified the female entity. We should be proud of our history and abolish the stereotypical and distorted image of female infanticide. Women were the ideal, integrated entity among the Arabs. They made them a feminine trinity, offering girls as sacrifices to them. Female infanticide was not due to shame, as some claim.”

As recently as on 13th December, an X user shared a picture of the ancient Arabian goddess seemingly in a Saudi Museum while responding to the ongoing debate on Saudi social media regarding the promotion of ancient Feminine deities. 

The user wrote, “Why do you have a problem with your faith? Are you afraid that you will see an idol and worship it, God forbid? Collection of idols at the Antiquities Museum in Riyadh, under the direction of the Minister of Culture, under the supervision of Crown Prince Mohammed bin Salman, for antiquities related to the past, especially since they are contemporary with events in the Holy Qur’an.” 

Further, some Saudi social media users blamed the Sahwa (Awakening) movement for not embracing the Pre-Islamic history and utilising the ancient Arabian goddesses and related antiquities for advancing tourism and national heritage. 

One purported Saudi social media user argued that the ‘Awakening’ movement erased the history from the minds of Saudi people. The user added that it altered the concept of history, civilisation, heritage, antiquities, and identity. The user highlighted the recent transformation in the Saudi Kingdom noting that a few years back discussing antiquities could have been construed as talking about polytheism or reviving idol worship. 

Incidentally, a flurry of Saudi social media accounts did exactly the case and called the promotion of ancient Arabian deities as pagan idol worshipping and secularisation of the society.  

The user said, “The Awakening did not destroy Saudi Arabia socially and take away the rights of Saudi women. Only its influence reached down to history. It obliterated it and erased it from the memory of the Saudi person. It distorted the concept of history, civilization, heritage, antiquities, and identity. How many years ago, anyone who spoke about antiquities seemed as if he was talking about something polytheistic or about bringing back the worship of idols and idols to Saudi Arabia.”

The user further noted that Saudi Arabia missed the chance to talk about its treasures and very ancient civilisations instead, the academic curricula presented the history and civilisations of neighboring countries, hinting to include pre-Islamic history in the curriculum and promoting it for tourism. 

Several social media users supported the claim that the Sahwa movement and a few other things destroyed the Kingdom of Saudi Arabia and brainwashed its people. One user asserted that extremists like the Muslim Brotherhood and Sahwahs controlled their education and the media adding that it was a mistake of Saudi Arabia to give refuge and place to those who were exiled from other countries.

Notably, the Sahwa (Awakening) was a political Islamic movement that consisted of religious scholars and figures. It had a dominating influence over the kingdom’s policy for several decades. It is said that the movement flourished after the 1960s. It was partly influenced by Muslim exiles from countries like Egypt.

However, since 2017, Saudi Crown Prince Mohammed Bin Salman has been cracking down on this movement and taking stern actions against the ‘scholars’ associated with it. These actions on key Sahwa figures has been a part of MBS’ grander strategy to make Saudi Arabia a follower of moderate Islam. In line with that, the Saudi Kingdom has been easing restrictions on Saudi society and the entertainment industry. 

The changes in Saudi Arabia include social and economic reforms, such as granting women the right to drive, diversifying the economy away from oil dependence, and encouraging foreign investments. These moves have ushered in a wave of opportunities and a sense of modernity. 

Further, Saudi Arabia is trying to open its society to harness the potential of the tourism sector. The Kingdom has been developing its national heritage sites which incidentally include the recovery of artifacts depicting the ancient Arabian goddesses’ pantheon. 

However, the Saudi government and its supporters have maintained that these efforts are simply the preservation of the kingdom’s history and national Heritage arguing that it should take pride in its history. 

Barrage of Saudi social media users call it an ‘attempt to revive the Idol-worshipping of Pagan Gods’

The efforts of the Saudi government and promotion of the Trinity of ancient Arabian goddesses by several purported Saudi accounts have sparked a sharp religious outrage. Responding to these calls advocating for ancient history and its artifacts, a slew of Saudi social media users have slammed it calling it an attempt to revive polytheistism and Idol worshipping which Islam opposes and abhors.  

Several Saudi accounts claimed that the Saudi government is taking away the Kingdom from its religious identity in the name of recent reforms and building a nationalist narrative. 

Voice of the Ummah published a blog noting these current trends in Saudi Arabia. The blog titled ‘Saudi Re-Introduce Idolatry to the Land of Tawheed’ called upon the Ummah to see the implications of “secularisation” and “liberalisation” of the Kingdom of Saudi Arabia. 

The blog stated, “The Ummah must recognise the broader implications of such actions. The resurgence of idolatrous symbols is not isolated; it aligns with a broader agenda – Vision 2030. This vision, while purporting economic and social reforms, carries the insidious plan of removing Islam from the public sphere, paving the way for secularism and liberalism.”  

It further argued that the recent reforms and calls for the promotion and return of ancient Arabian deities are concerted efforts to dilute the Islamic identity of the Arab world. 

It added, “As Muslims, we must not be naive in isolating this act from the larger narrative unfolding in Saudi Arabia. The push for secularism and the promotion of a nationalistic narrative that predates Islam are components of a concerted effort to dilute the Islamic identity of Muslim countries.”

Likewise, a Muslim American YouTuber and writer Daniel Haqiqatjou claimed that the secularisation of Muslim countries is taking place by creating a “nationalistic narrative”. 

According to him, highlighting that there was an ancient and long-lost forgotten religion that predates Islam is the secularisation of a country. He argued that with Securalisation of Saudi Arabia, the authorities have been allowing the revival of “pagan idols that Islam destroyed.” 

Meanwhile, some Saudi users went on to blame “Zionists”, and ‘Hindutva’ for the recent trend in Saudi social media. According to them, the recent trend is some kind of a ‘Zionist’ or ‘Hindutva’ conspiracy to ‘Secularise’ and ‘liberalise’ the Arab world. They have claimed that the several users who have advocated for the promotion of the Trinity of ancient goddesses and idols for tourism are being either run by non-Muslims or they could be ‘bot’ accounts supported and sponsored by the Saudi government, as pointed out by Middle East Monitor.  

However, a Saudi Twitter user posted a long series of tweets on the recent phenomenon being witnessed in Saudi social media. In the thread, the user included several such posts and reactions to these posts. The user argued that even if the handles that made these remarks or advocated the promotion of Ancient history are not Saudi social media users, the reactions and ones propagating their views are authentic Saudi accounts that have started to consider that it is normal to return to polytheism. 

The user who notes that the idols should have not been kept in Saudi museums but rather should have been destroyed, wrote, “The cities are also full of people who criticise Muslims for criticising the tweet and who consider it completely normal to promote these idols. These tweets receive a lot of “Fav/Rt”. The user further added that such accounts are being widely followed in Saudi, and Arab world and are getting positive responses.

—-SUBHAM—-

Rare Pictures from India’s Past, 1927- Part One (Post 12,830)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,830

Date uploaded in London – –   13 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

India’s Past

By  A A Macdonell

Year 1927

Beautiful Pictures of Lord Kartikeya  from Tamil Nadu

Sanchi stupi

Vedic mantras on Birch Bark

Brahmi Inscriptions

Chittur Victory Tower.

Vadnakar Arch Gujarat

 Thanjavur Big Temple

Mariamman Temple Tank, Madurai

Victory Tower t Chitor, Rajasthan

Madurai Mariamman Teppakulam/ Tank

—subham—

Tags-  A Macdonell, India’s Past, Rare pictures, Vadnakar, Katikeya

QUIZ காஷ்மீர் பத்து QUIZ (Post No.12,829)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,829

Date uploaded in London – –   13 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

QUIZ SERIAL NUMBER—86

1.காஷ்மீர் தலை நகர் ஸ்ரீநகருக்கு ஏன் தேவியின் பெயர் ஏற்பட்டது ?

Xxxxx

2.காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்த அரசியல் சட்ட விதி என்ன சொன்னதுசிறப்பு விதியை யார் எப்போது நீக்கினார்கள்?

xxxxx

3. காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் எங்கே இருக்கிறது மாநிலத்திலுள்ள புனிதத் தலங்கள் எவை ?

XXXX

4.அந்த மாநில தலை நகர் ஸ்ரீநகரில் உள்ள ஏரிக்கு என்ன பெயர்அதன் புகழுக்கு காரணம் என்ன ?

xxxx

5.காஷ்மீரின் எவ்வளவு சதுர மைல் பகுதியை பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ளது நேரு செய்த மிகப்பெரிய தவறு என்ன?

XXXX

6.இந்துக்கள் பகுதியான காஷ்மீர் மாநிலத்தை எப்போது முஸ்லீம்கள் கைப்பற்றினார்கள் ?

XXXXX

7.நேருஜி குடும்பத்தின் பண்டிட் ஜாதி என்பது என்ன ?

XXXX

8.காஷ்மீர் மாநில வரலாற்றைக்கூறும் மிகச் சிறந்த நூல் எதுஅதை யார் எழுதினார் ?

xxxxx

8.ராஜதரங்கிணி என்றால் என்ன?

xxxxx

9. மாநிலத்திலுள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்கள் எவை?

xxxxx

10.காஷ்மீர் படுகொலை KASHMIR GENOCIDE என்பது என்ன?

Xxxxx

விடைகள்

1.ஸ்ரீநகரில் ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரத்தை ஸ்தாபித்ததால் அந்த நகருக்கு தேவியின் பெயரும் உலகப்புகழூ ம்  உண்டாக்கியது ; அங்கு சங்காரச்சார்யார் பெயரில் ஒரு குன்றும் உள்ளது; அவர் வழிப்பட்ட கோவில்கள் ஸ்ரீ நகரிலும் அதற்கு அப்பால் இமய மலையிலும் இருக்கின்றன. அதை சங்கரருக்கும் இதே நகரில் கோவில் இருக்கிறது அவர் 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார் என்பர்; ஆயினும் காஞ்சி மகா சுவாமிகள் தன்னுடைய நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை மூலம் ஆதி சங்கரர்  2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்றும் காட்டுகிறார்.

xxxxx

2.அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ன் படி ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு கடந்த 1954ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை சிறப்பு அந்தஸ்து மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. அதை நரேந்திர மோடி அரசு ரத்து செய்தது ; இந்திய சுப்ரீம் கோர்ட்டும் அது செல்லுபடியாகும் என்று 2023 டிசம்பரில் தீர்ப்பு அளித்துவிட்டது ; முன்னர் இருந்த தனிக்கொடி , முதலமைச்சரை காஷ்மீர் பிரதர் என்று அழைப்பது எல்லாம் காலாவதியாகிவிட்டது. பிற மாநில மக்கள் குடியேறக்கூடாது, சொத்துக்கள் வாங்கக்கூடாது என்ற விதிகளும் குப்பைத் தொட்டிக்குள்  போடப்பட்டன; சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் 1400ம்- ஆண்டுக்கு முந்தைய இந்து ஆட்சி மீண்டும் செயலுக்கு வந்து விட்டது

xxxxx

3.இந்தியாவின் வடகோடி மாநிலம் காஷ்மீர்; அதற்கு அப்பால் நாட்டின் வட அரணாக விளங்குவது இமயமலை.

ஸ்ரீ நகரில் உள்ள டால் ஏரிக் கரையில் கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. 240 படிக்கட்டுகள் உள்ளன.  . இங்கு சிவபெருமான் சிவலிங்க வடிவில் மிகவும் கம்பீரமாக வீற்றிருக்கிறார். இதனை ஜோதீஷ்வரர் கோவில் என அழைக்கின்றனர். இக்கோவில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் மீண்டும் கட்டப்பட்டது. ஆதிசங்கரர் இங்குதான்  சௌந்தர்யலஹரி என்னும் அம்பாள் ஸ்தோத்திரப் பாடலை இயற்றினார் .

காஷ்மீரின் வரலாறு கூறும் நூல்  ‘ராஜதரங்கிணி’ ;அதை எழுதிய  கல்ஹணர் இக்கோவில் 2400 ஆண்டுகளுக்கு முன்னர்   மன்னர் கோபாதித்யா  கட்டினார் என்பார் . பின்னர், கர்கோடக  வம்சத்தின் லலிதாதித்யா என்பவர் திருப்பணிகளை செய்தார்

Kheer Bhawani Temple. கீர் பவானி கோவில்

Shankaracharya Temple. சங்கராசார்யா கோவில்

Sharika Devi Temple. சாரிகா தேவி  கோவில்

Martand Temple.மார்த்தாண்ட சூரியன்  கோவில்

Amarnath Cave.அமர்நாத் பனிக்கட்டி லிங்க  கோவில்

Mamleshwar Temple in Pahalgam.பக்லஹாமில் உள்ள மாமகேஸ்வர் சிவன் கோவில்

Rani Mandir in Gulmarg. குல்மார்க் ராணி மந்திர்

Pandrethan near Srinagar. ஸ்ரீ நகர் அருகில் பண்ட்ரீ தான்  கோவில்

ஜம்மு பகுதி கோவில்கள்

Vaishno devi temple வைஷ்ணவ தேவி குகைக் கோவில்

Shri Raghunathji Temple. ரகுநாத் கோவில்

Shri Ranbireshwar Temple. ராணா வீரேஸ்வர் கோவில்

Panchvaktar Temple. …பஞ்ச்வக்தர் கோவில்

Rani Kalhuri Devi Temple. …ராணி கஸ்தூரி

Ram Talai Temple. …ராமதலாய் கோவில்

Radha Krishan Rukmani Temple. …ராதா கிருஷ்ணா ருக்மிணி கோவில்

Panjthirthi. பஞ்ச தீர்த்த கோவில்

ஜம்முவிலிருந்து 45 கி.மீ தொலைவிலுள்ள வைஷ்ணவ தேவி குகைக் கோவில் அமர்நாத் பனிலிங்கம் போலவே  பல்லாயிரக் கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது

ஜம்மு பகுதியில் ரகுநாத் கோவில் மிகப்பெரிய கோவில்

xxxxx

4.ஸ்ரீநகர் ஜீலம் ஆற்றின் கரையில் இருக்கிறது அங்குள்ள ஏரிக்கு தாள் ஏரி என்று பெயர். மக்கள் சிக்காரா என்னும் படகு வீடுகளில் வசிக்கின்றனர். அதில் சென்று காய்கறி, பழ ங்களை விற்கிறார்கள் ; சுற்றுலாப்பயணிகள் அதில் சென்று பல இடங்களைப் பார்க்கலாம்  இதன் சுற்றளவு 10 மைல் ; ஏரியின் பரப்பளவு 6 சதுர மைல் . ஏரியில் மிதக்கும் தோட்டங்களும் கரையில் மொகலாய மன்னர்கள் அமைத்த புகழ்பெற்ற தோட்டங்களும் அமைந்துள்ளன

xxxxx

5.வெள்ளைக்காரன் செய்த சூழ்ச்சியால் இந்தியா மூன்று துண்டாகியது மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான், இந்தியா என்று ஆனது ; கிழக்கு பாகிஸ்தானை இந்திராகாந்தி விடுவித்து வங்க தேச நாட்டை உருவாக்கினார்; மேற்கு பாகிஸ்தான் காஸ்மீர் மீது படை எடுத்து அதையும் சேர்க்க முயன்றது; அப்போது ஹிந்து மன்னர் (HARI SING)  இந்திய ராணுவ உதவியை நாடி ஸ்ரீ நகர் முதலிய பகுதிகளை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதற்குள் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றி சுதந்திர காஷ்மீர் / ஆஜாத் காஷ்மீர் என்று பெயரிட்டது ;அதன்பரப்பளவு 13.300 சதுர கிலோமீட்டர் 13,297 km2 (5,134 sq mi)

இந்தியா -பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரிக்கவே காஷ்மீர் மக்களுக்கு வோட்டெடுப்பு அடிப்படையில் சுய நிர்ணய உரிமை (SELF DETERMINATION) செய்யலாம் என்று ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்ற நேருஜி வகைசெய்தார்; ஆனால் இருநாட்டு ராணுவங்களும் வெளியேற வேண்டும் என்ற நிபந்தனை போடப்பட்டது ; இரு நாடுகளும் அதைச் செய்யவில்லை; வரலாற்று ரீதியில் 3000 ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் இந்து பூமி என்பதை காஷ்மீரின் ராஜ தரங்கிணி , நீலமத புராணம் ஆகியன சொல்கின்றன. அப்படியிருந்தும் நேருஜி இப்படிச் சொன்னார்.

xxxxx

6.ராஜ தரங்கிணி ஏன்னு வரலாற்று நூலின்படி கலியுகம் துவங்கிய காலம் முதல் இந்துக்கள் ஆண்ட காஷ்மீர் 1200 முதல் முஸ்லீம்களின் தொடர் தாக்குதலுக்கு உள்ளது கடைசி இந்து மன்னரின் பெயர் உதயண தேவன்; அவன் மனைவி கோதா ராணி பின்னர் ஆண்டாள்;அவள் 1339ல் இறந்தவுடன் சுல்தான் ஷாமாஷ் உத்தீன் ஆட்சியைப் பிடித்தான் ; நரேந்திர மோடி அரசு 2019ல் மீணடும் இந்து ஆட்சியை ஏற்படுத்தியது

xxxxx

7.காஷ்மீர் பண்டிட் KASHMIRI PANDITS/ PUNDITS

காஷ்மீர பண்டிதர்கள் (Kashmiri Pandits) எனும் காஷ்மீர பிராமணர்கள், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் சமவெளியில் வாழ்ந்த இந்துக்கள் ஆவர்.. இந்தியாவின் முதல் பிரதமர்  ஜவஹர்லால் நேரு காஸ்மீரி பிராமணர்.

xxxxx

8.காஷ்மீரின் வரலாற்றைக் கூறும் நூல் ராஜதரங்கிணி — இதை கல்ஹணர் என்ற காஷ்மீரி பிராமணர் எழுதினார் — இது வடமொழியில் எழுதப்பட்டது. இதில் 3449 சுவைமிகு ஸ்லோகங்கள் உள்ளன. காஷ்மீர் வரலாறு நமக்கு எதற்கு என்று பல தமிழர்கள் நினைக்கலாம். இலங்கை மன்னரையும் சோழனையும் தோற்கடித்த மிஹிரகுலன் என்ற காட்டுமிராண்டி மன்னன் பற்றிய சுவையான செய்திகள், இலங்கை வரை ஆட்சிச் சக்கரத்தை பரவ விட்ட லலிதாதித்யன் போன்ற மன்னர்கள் பற்றிய செய்திகள் இதில் உள.

 பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவும் ஒரு காஷ்மீரி பிராமணர். அவருடைய மைத்துனர் ஆர்.எஸ்.பண்டிட் இதை வடமொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். எங்கு தெரியுமா? சிறையில் உடகார்ந்து கொண்டு! அப்பொழுது நேருவும் சிறைவாசம் செய்தார். 1934 ஆம் ஆண்டில் அவர் இந்த ஆங்கில மொழி பெயர்ப்புக்கு டேராடூன் சிறையில் இருந்தே முன்னுரை எழுதினார். புத்தகத்தை சாஹித்ய அகாடமி வெளியிட்டது. 

Xxxxx

9.ஸ்ரீநகர், குல்மார்க், சோன் மார்க், பஹல் காம் ; இங்கு பூங்கா க்கள் , துலிப் தோட்டங்கள், பனிச் சறுக்கு விளையாட்டுகள் , இயற்கைக் காட்சிகள் , படகு சவாரிகள், குதிரை சவாரி, மலை ஏறுதல்  என்று பல கவர்ச்சிகள் உள்ளன.

XXXX

10.காஷ்மீர பண்டிதர்கள் (Kashmiri Pandits) எனும் காஷ்மீர பிராமணர்கள், காஷ்மீர் பிரிவினைவாதிகளால் தங்களின் உயிருக்கும் உடைமைகளுக்கு அச்சம் ஏற்பட்ட காரணத்தினால், காஷ்மீர் சமவெளியை விட்டு, ஜம்மு, தில்லி போன்ற நகரங்களில் 1985-ஆம் ஆண்டு முதல் அகதிகளாக வாழ்கின்றனர்.காஷ்மீரை விட்டு தங்களை விரட்டியடிக்கப்பட்ட போது ஆயிரக்கணக்கான காஷ்மீரப் பண்டிதர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்குகளை மீண்டும் விசாரிக்கக் கோரி போராட்டங்கள் மூலம் இந்திய அரசிடம் கோரிக்கைகள் வைத்துள்ளனர். 1990-ஆம் ஆண்டில் மட்டும் காஷ்மீரிலிருந்து 1,40,000 காஷ்மீர பண்டிதர்களில் சுமார் 1,00,000 பேர் காஷ்மீரை விட்டு அகதிகளாக வெளியேறினார்கள். வேறு சில குறிப்புகளிலிருந்து 1,50,000 முதல் 3,50,000 பேர் வரை காஷ்மீரை விட்டு வெளியேறியதாக புள்ளி விவரங்கள் உள்ளதுமனித உரிமை அமைப்புகள் காஷ்மீரில் நடந்த இனப்படுகொலை, அகதிகள் வெளியீரம் பற்றி வாய் திறக்கவில்லை. பாரதீய ஜனதா தவிரவுள்ள இந்திய அரசியல் கட்சிகளும்  மெளனம் சாதித்தன .

XXXXX SUBHAM XXXXX

tags- காஷ்மீர் , குவிஸ், இந்துக்கள் படுகொலை, ராஜதரங்கிணி, ஸ்ரீ நகர், ஆதிசங்கரர் , படகு வீடு, தால்  ஏரி , பண்டிட், நேருஜி, Pandit, Nehru

புனர் ஜனனி குகை:திருவில்வாமல ராமர்  கோவில் மேல் விவரம்-Part 32 (Post No.12,828)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,828

Date uploaded in London – –   13 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 32

கோவில் எண்–31  தொடர்ச்சி

31.திருவில்வாமல ராம லட்சுமண கோவில்  பற்றி மேல் விவரம்

ஸ்ரீ வில்வாத்ரி மஹாத்ம்யயம் என்ற சம்ஸ்க்ருத நூலில் 18 அத்தியாயங்கள் இருக்கின்றன. அதன்படி கிழக்கேயுள்ள பெருமாள் கோவில்தான் முதல் கோவில் ;  பரசுராமர் ஸ்தாபித்தது ; இதை இப்போது லட்சுமணர் கோவில் என்கிறார்கள்

ஆமலகன் கதை

மேற்கு நடாவில் உள்ள பெருமாள்   ஸ்வயம்பூ / தானாகாத் தோன்றியது. மனிதர்கள் வடிவமைக்கவில்லை இது பற்றியும் ஒரு கதை இருக்கிறது . இதுவும் வில்வாத்ரி மஹாத்ம்யத்தில் உள்ள கதைதான். காஸ்யப பிரஜாபதியின் மகன் ஆமலகன் மஹாவிஷ்ணுவை வேண்டி கடுந்தவம் இருந்தான் இந்திரனுக்கு பயம் வந்துவிட்டது; யாராவது கடும் தவம் புரிந்தாலோ அஸ்வமேத யாகங்கள் செய்தாலோ , தன்னுடைய பதவியைப் பறிக்கத்தான் அவர்கள் தவம் இருக்கிறார்கள் என்று அஞ்சுவான். உடனே தவத்தைக் கலைப்பதற்காக ரம்பா, ஊர்வசி, திலோத்தமா ஆகியோரை அனுப்பினான். அவர்கள் டான்ஸ் ஆடியும் கூட ஆமலகன் ஆடாது அசங்காது தவம் செய்தான். உடனே ஆடல் அழகிகள் இந்திரனுக்கு ரிப்போர்ட் கொடுத்தனர். ஆமலகனுக்கு பதவி ஆசை ஏதும் கிடையாது. அவன் உண்மை பக்தன் என்று. ரிப்போர்ட்டைப் படித்த இந்திரனும் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அடுத்த படியாக அசுரர்கள் பயந்தார்கள். அவர்கள் ஆமலகன் தவத்தைக் கலைக்க முயற்சி செய்தனர். அப்போது அவர் கண்களைத் திறக்கவே அசுரர்கள் எரிந்து கல்லானார்கள்;  அந்த இடத்தை இப்போதும்   ராக்ஷஸ பாறை என்கிறார்கள் .

ஆமலகன் தீவிர தவத்தை மெச்சி விஷன் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். இன்றுபோல் என்றும் தரிசனம் தருக என்று ஆமலகன் சொன்னவுடன் தன்னுடைய சக்தியை சிலை மீ து பிரயோகித்தார்  அதுவே மேற்கு நோக்கி நிற்கும் ராமர் அல்லது மஹாவிஷ்ணு கோவில் எனப்படுகிறது.

கேரளத்தில் உள்ள மூன்று ராமர் கோவில்களில் இது ஒப்பற்றது லட்சுமணனுக்கு இங்குள்ள ஒன்றைத் தவிர வெண்ணி மலாவில் ஒரு கோவில் இருக்கிறது. கோட்டயத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள அந்தக் கோவில் பிரபலம் அடையவில்லை.

இங்கு கணபதி, சாஸ்தா, சிவன்-பார்வதி ஆகிய மூர்த்திகளும் இருக்கிறார்கள். கோவில் முழுதும் தரையில் கற் பலகைகள் வேயப் ப்பட்டுள்ளன .வட புறத்தில் குளமும் கோவிலுக்குள் கிணறும் இருக்கின்றன.

புனர் ஜனனி குகை

கோவிலிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் நீளமான புனர் ஜனனி குகை இருக்கிறது இதை பரசுராமர் வேண்டுதலின்பேரில் விஸ்வகர்மா உண்டாக்கினார். இது வழியாகச் செல்வோருக்கு மறு ஜென்மம் கிடையாது . ஆயினும் ஆண்டுக்கு ஒரு முறையே இதைத் திறப்பார்கள் ; நவம்பர்- டிசம்பரில் வரும் குருவாயூர்  ஏகாதசியன்று  பக்தர்கள் குகைப் பயணம் செய்கிறார்கள் ; ஏனைய நாட்களில் இங்கு தீய சக்திகள் உலவுவதாக மக்கள் சொல்லுவர்.

இந்தக்  குகை மேடு பள்ளம் நிறைந்தது.சில இடங்களில் மிகவும் குனிந்தும் ஊர்ந்தும் செல்லவேண்டும். சில இடங்கள் மிகவும் இருட்டானவை; மூச்சு விடுவதும் சிரமம்; ஆயினும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் ராம நாமம் சொல்லிக்கொண்டே முன்னேறுவார்கள்; குகையைக் கடக்க குறைந்தது 45 நிமிடங்கள் ஆகும். குகைக்கு வெளியே வந்தவுடன் பாப நாசினி, பாதாள தீர்த்தம் அம்பு தீர்த்தம்,கொம்பு  தீர்த்தம் ஆகியவற்றில் குளிப்பார்கள்.

கேரள கங்கை

கேரளத்துக்கு பரசுராமர் கங்கை நதியைக் கொணர்ந்ததாகவும் அதுவே பரதப் புழா என்னும் நதி என்றும் சொல்லுவார்கள்; அதை மெய்ப்பிக்கும் வகையில் திரு வில்வமலா, திருச்சிக்குழி, தீர்த்தலா, திருநாவாயி, திருமி ட்டக்கோடு ஆகிய புனித தலங்கள் நதிக்கரை நெடுகிலும் இருக்கின்றன. ; இவை தவிர மேலும் பல சிவ, விஷ்ணு கோவில்களும் எதிர்க்கரையில் இடம்பெறுகின்றன. காசியில் மணிகர்ணிகா  படிக்கட்டு எவ்வளவு மகிமை பொருந்தியதோ  அவ்வளவு மகிமை மிக்கது திருவில்வ மங்களா (பரதப் புழா) நதித்தித்துறை  .

பாண்டவ சகோதரர்களும்  குருக்ஷேத்திரப் போருக்குப் பின்னர் நீத்தார் கடன் நிறைவேற்ற வியாசரின் ஆலோசனைப்படி  இங்கு வந்து பித்ரு கடன்களைச்  செய்தனராம் ; அவர்களும் சோமேஸ்வரம், ஐவர் மடம் , கோத்தகுருச்சி ஆகிய கோவில்களை நிர்மாணித்ததாக ஐதீகம்.

ஏகாதசி திருவிழா

கும்ப மாத ஏகாதசி விழாதான் பெரிய பண்டிகை பிப்ரவரி – மார்ச்சில் வரும் ஏகாதசி, அதற்கு முன்னர் அஷ்டமி நவமி நாட்களில் விளக்கு அலங்காரம் நிராமாலா / மாலை அலங்காரம், யானை ஊர்வலம் நடக்கும். ஏகாதசி அன்று பத்தர்கள் உண்ணாவிரதம் இருந்து இரவு முழுதும் கண்விழித்து பெருமாள் நாமத்தைக் சொல்லுவார்கள் .

ஒரு காலத்தில்  கொச்சி மகாராஜா, கோழிக்கோடு ஜாமோரின் (இந்து மன்னர்கள்), திருவனந்தபுரம் மஹாராஜா ஆகியோர் ஆளுக்கு ஒரு நைவேத்தியம் படைக்கும் பணியைச் செய்து வந்தார்கள். தற்காலத்தில் அவை நடைபெறாவிட்டாலும் பெருகி வரும் பக்தர் எண்ணிக்கை கோவிலின் புகழைப் பரப்பி வருகிறது.

திப்பு சுல்தான் தாக்குதல்

கர்நாடகத்திலும் கேரளத்திலும் திப்புவின் துலுக்கப்படைகள் நிறைய கோவிலைத் தாக்கி அழித்தன அல்லது சேதப்படுத்தின. 1789ம் ஆண்டில் திருவில்வமங்கலா கோவிலைத் தாக்கிய முஸ்லீம் படைகள் அதை முக்கால் வாசி அழித்துவிட்டன ; அவரது நட்பு மன்னரான கொச்சி மஹாராஜா கோவில் அது என்று தெரிந்தவுடன் கர்ப்பக்கிரகத்தை மட்டும் மிச்சம் விட்டனர்

 1861ம் ஆண்டு கொச்சி மஹாராஜா இதை செப்பனிட்டு குடமுழுக்கு நடத்த திட்டமிட்ட நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு கோவிலைச் சேதமாக்கியது. கேரள கோவில்கள் மரங்களினால் கட்டப்படுவதால் கோவில் தீ விபத்து என்பது அடிக்கடி கேட்கப்படும் செய்திதான்.

கிழக்கு நடையில் இருந்த விக்கிரகத்தை அருகிலுள்ள குளத்தில் போட்டு தீயிலிருந்து பாதுகாத்தனர். மேற்கு நடா பெருமாளை காப்பாற்ற முடியவில்லை. 25 நாட்களுக்குப் பின்னர் தீ அவிந்தபோது விக்கிரகததை சோதித்தனர்; அது சேதம் அடையாமல் இருந்தது ; பின்னர் திருப்பணி செய்து 1885ல் கும்பாபிஷேகம் செய்தனர்.

பரசுராமர் காலத்திலேயே கோவில் பராமரிப்பு, பூஜைகள் முதலியன  சிற்சில இல்லங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் பரம்பரை பரம்பரையாக அப்பணிகளைச் செவ்வனே செய்துவந்தனர். பின்னர் இரண்டு மன்னர்கள் பொறுப்பேற்றவுடன் வாக்குவாதம் ஏற்பட்டது; பிரிட்டிஷாரை, சமரசத்துக்கு அழைத்தபோது அவர்கள் சக்தி வாய்ந்த கொச்சி பக்கம் தீர்ப்பு வழங்கினார்கள் ; தற்காலத்தில் கொச்சி தேவ  ஸ்வம்போர்டு இதை நிர்வகிக்கிறது.

—–சுபம் —-

TAGS-திரு வில்வ மங்கலா , வில்வாத்ரி , கோவில், தொடர்ச்சி, திப்பு சுல்தான் தாக்குதல் ,புனர் ஜனனி குகை

ஆயுர்வேதம் தெரிவிக்கும் அடிப்படை உண்மைகள்! (Post No.12,827)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,827

Date uploaded in London –  –  13 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஹெல்த்கேர் டிசம்பர் 2023 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை

நோய்சிகிச்சைவைத்தியர்நோயாளி பற்றி ஆயுர்வேதம் தெரிவிக்கும் அடிப்படை உண்மைகள்!

 ச.நாகராஜன்

வைத்தியரின் நான்கு தகுதிகள் 

வைத்தியருக்குத் தேவையான அடிப்படையான தகுதிகள் நான்கு.

(குண சதுஷ்டயம் என்று கூறப்படுவது) அவையாவன:

1) ஸ்ருதே பர்யவதாதத்வம் – மருத்துவம் பற்றிய மிகச் சிறப்பான அறிவு

2) பஹூஷோ த்ருஷ்டகர்மதா – மிக மிக அதிகமான செயல்முறை அனுபவம்

3) தாக்ஷ்யம் – திறமை

4) சௌசம் – சுத்தம்

சரகர் இது பற்றி கூறும் ஸ்லோகம்:-

ஸ்ருதே பர்யவதாதத்வம் பஹுஷோ த்ருஷ்டகர்மதா |
தாக்ஷ்யம் சௌசமிதி ஞேயம் வைத்யே குணசதுஷ்டயம் ||

–    சரக சூத்ரம் IX -6 

நோயாளியிடம் வைத்யரின் நான்கு அணுகுமுறைகள் 

ஒரு நோயாளியிடம் நல்ல ஒரு வைத்தியர் அணுக வேண்டிய முறைகள் நான்கு உண்டு. அவையாவன:

1) மைத்ரி – நட்புடன் 2) காருண்யம் – தயையுடன் 3) ப்ரீதி – அன்புடன் அணுகுதல் 4) உபேக்ஷணம் – இரக்கத்துடன்

சரகர் இது பற்றி கூறும் ஸ்லோகம்:-

மைத்ரிகாருண்யமார்தேஷு ஷக்யே ப்ரீதிருபேக்ஷணம் |

ப்ரக்ருதிஷ்தேஷு பூதேஷு வைத்யவ்ருத்திசதுர்விதா: ||

–    சரக சூத்ரம் IX -26

நோய் பகுப்பாய்தல் நான்கு விதம்

ஒரு வைத்தியர் நோயை பகுத்து ஆராயும் முறைகள் (Diagnosis)

நான்கு. அவையாவன:

1) ஆகம: – கேட்டல் (நோயாளியிடம் அவருக்கு என்ன செய்கிறது என்று நுணுகிக் கேட்டறிதல்)

2) வ்யவஹாரம் – அவருடன் உரையாடுதல் (நோய் சிகிச்சையை ஆரம்பிக்கு முன்னர் நோய் மற்றும் நோயாளி பற்றி நன்கு அறிய நட்பு கலந்த உரையாடல் அவசியம்)

3) சிகித்ஸா – சிகிச்சை

4) நிர்ணயா – சிகிச்சை பற்றி முடிவு கட்டுதல்

ஆகம: ப்ரதமம் கார்யோ வ்யவஹாரபதம் தத: |

சிகித்ஸா நிர்ணயச்சைவ தர்ஷனம் ஸ்யாச்சதுர்விதம் ||

–    நாரத ஸ்மிருதி I – 36

வியாதிகள் நான்கு விதம்

பொதுவாக வியாதிகளை நான்கு விதமாகப் பிரிக்கலாம்.

அவை:

1) ஆகந்தவ: – தொற்று வியாதி

2) சாரீர: – உடல் சம்பந்தமானது

3) மானஸா: – மனம் சம்பந்தப்பட்டது

4) ஸ்வபாவிகா: – இயற்கையானது

இதை சுஸ்ருதர் இப்படி விவரிக்கிறார்:

துக்க சம்யோகா வ்யாத்யய: சதுர்விதா: – ஆகந்த்வ: ஷாரீரா: மானஸா: ஸ்வாபாவிகாஷ்ரோதி || 

–        சுஸ்ருதர் சூத்ரம் I – 23

உடல்பயிற்சியின் லக்ஷணம் நான்கு

உடல்பயிற்சி செய்யும் போது ஏற்படும் அறிகுறிகள் (வ்யாயாம லக்ஷணம்) நான்கு விதமாகும்.

அவை :

1) ஸ்வேதா – வியர்வை

2) ஸ்வாச வ்ருத்தி – ஆழ்ந்த சுவாசம்

3) காத்ர லாகவம் – உடல் லேசாக ஆதல்

4) ஹ்ருதய உபரோத: – இதய ஒடுக்கம் (Inhibition of the heart)

இதை சரகர் இப்படி விவரிக்கிறார்:

ஸ்வேதாகம: ஸ்வாஸவ்ருத்திர்காத்ராணாம் லாகவம் ததா |

ஹ்ருதயாத்யுபரோதஸ்ச இதி வ்யாயாமலக்ஷணம்

–    சரக சூத்ரம் VII – 33

எந்த விதமான வைத்தியர்களை அணுகக் கூடாது?

ஐந்து விதமான வைத்தியர்களை அணுகக் கூடாது. யார் அவர்கள்? இதோ விவரணம்:

1) குசேல: – சரியாக உடை அணியாமல் இருப்பவர்

2) கர்கஸ: – முரட்டுத்தனமாக இருப்பவர்

3) ஸ்தப்தா: – பிடிவாதமாக இருப்பவர் (Stubborn)

4) க்ராமணீ – வக்கிரமானவர் (pervert)

5) ஸ்வயமாகதா – கூப்பிடாமல் தானாகவே வருபவர்

இந்த ஐந்து விதமான வைத்யர்களை பூஜிக்க – மதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதைப் பற்றித் தெரிவிக்கும் ஸ்லோகம் இது:

குசேல: கர்கஷ: ஸ்தப்தோ க்ராமணீ ஸ்வயமாகத: |

பஞ்ச வைத்யா ந பூஜ்யந்தே தன்வந்தரிஸ்மா அபி ||

உடல் அங்கங்களுக்குரிய தேவதைகள்!

மனித உடலில் ஒவ்வொரு அங்கத்திற்கும் உரிய தேவதை ஒன்று உண்டு. அதைத் தொழுவது நமக்கு நல்லது.

ஐந்து முக்கிய அங்கங்களுக்கு உரிய தேவதைகள் இவை:

1) வாக் – பேச்சுக்கு அக்னி

2) பாணி – கைகளுக்கு இந்திரன்

3) பாயு – ஜனன உறுப்புகளுக்கு விஷ்ணு

4) குடா – குதத்திற்கு சூர்யன்

5) சிஸ்னா – ஆண் ஜனன உறுப்பிற்கு ப்ரஜாபதி

இப்படி நமது நூல்கள் நோய், டாக்டர், சிகித்ஸை முறை ஆகிய அனைத்தும் பற்றி நுட்பமாக விளக்குகின்றன. அத்துடன் மருந்துகள், அவற்றைத் தயாரிக்கும் விதம், இயற்கையில் கிடைக்கும் மூலிகைகள், அவற்றின் பயன்கள் ஆகியவை பற்றியும் ஏராளமான நூல்கள் விவரிக்கின்றன.

இவை அனைத்தையும் படித்து ஓர்ந்து அதைத் தன் சிகிச்சை முறையில் பயன்படுத்தும் அனுபவம் வாய்ந்த வைத்தியர்கள் ஆயிரக் கணக்கில் பாரத தேசத்தில் பண்டைய காலத்தில் இருந்தனர் என்பது நிஜமான ஒரு உண்மை!

***

திருவில்வாமல ராம, லட்சுமண கோவில்-31 (Post No.12,826)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,826

Date uploaded in London – –   12 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 31

கோவில் எண்–31  

31.திருவில்வாமல ராம லட்சுமண கோவில்

கேரளத்தில் 3 ராமர் கோவில்கள் சிறப்புடையவை ; அவை

1.திருபிரையார் / த்ரிப்ரயார்  ராமர்  கோவில்

2.திரு வண் வண்டூர்  ராமர் கோவில்

3.திரு வில்வாமல ராம லட்சுமண  கோவில்

இன்று திரு வில்வாமல ராம லட்சுமண  கோவில் பற்றிக் காண்போம்

எங்கே இருக்கிறது ?

த்ரி சூரிலிருந்து 29 கி.மீ.; பாலக்காட்டிலிருந்து 20 கி.மீ

சிறப்பு அம்சங்கள்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் என்பது தமிழ்ப் பழமொழி ; இங்கு ஒரே இடத்தில் இரண்டு கோவில்கள்; உள்ளே உறையும் ஆண்டவன் பெருமாள் என்றாலும் ஒன்றை ராமராகவும் மறறொன்றை லட்சுமணராகவும் பார்க்கிறோம்.

ஒரு கிலோ மீட்டர்  தொலைவில் கேரளத்தின் கங்கை எனக் கருதப்படும் பரத நதி ; மலையாளிகள், பரதப்புழா என்பார்கள் .அருகில் பிரபல மலையாளக் கவிஞர் குஞ்சசன் நம்பியார் பிறந்த கிள்ளிக் குறிச்சி மங்கலம் இருக்கிறது

இது ஒரு மலைக் கோவில்; ஆயினும் கோவில் வரை சாலை வசதி இருக்கிறது.

கோவிலின் பெயர்—திருவில்வாமல/  வில்வாத்ரிநாத கோவில் Thiruvilwamala Vilwadrinatha Temple

சதுர வடிவிலான 2  அடுக்கு கோவில்களும் தனித்தனியே உள்ளன; ஆனால் பிரதட்சிணம் செய்கையில் இரண்டையும் சேர்த்தே  வலம் வரவேண்டும் என்பது சம்பிரதாயம் .

ஒரு காலத்தில் இது பணக்கார கோவிலாக இருந்தது; ஆண்டுக்கு ஒரு லட்சம் பரா நெல்லை முன்னோர்கள் விட்டுச் சென்றனர் ஆயினும் இந்து விரோத அரசுகள்  வந்து கோவிலை மொட்டை ஆண்டி ஆக்கிவிட்டன .

ஒரு காலத்தில் 7 நிலைக் கோபுரத்துடன் இந்தக் கோவில் விளங்கியது; இடி விழுந்த பின்னர் மொட்டை ஆனது ; இப்போது முறையான கோபுரமோ கொடிமரமோ இல்லாத கோவில் இது;  அந்தக் காலத்தில் 40 கி.மீ தொலைவிலும் இந்தக் கோவிலின் விளக்குகளைப் பார்க்க முடிந்ததாம்

பெரிய அரசமரம்

இந்தக் கோவிலின் இன்னுமொரு சிறப்பு, மண்ணே இல்லாத பாறைப் பிரதேசத்தில் பிரம்மாண்டமான அரச மரம் தழைத்து வளருவதாகும் .

கிழக்கு வாசலுக்குப் பக்கத்தில் இருக்கும் 5 அடி அனுமன் சிலை வெள்ளிக் கவசத்துடன் ஜொலிக்கிறார்; எங்கெல்லாம் ராமன் நாமம் ஓலிக்கிறதோ  அங்கெல்லாம் ஆனந்தக் கண்ணீர் சொரிய அனுமன் கைகூப்பிய வண்ணம் அமர்ந்திருக்கிறான் என்று பிரபல சம்ஸ்க்ருத ஸ்லோகம் சொல்லும் ; அது உண்மையே.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்

பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்’

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் = எங்கெங்கெல்லாம் ராமனின் புகழ் பா டப்படுகிறதோ

தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம் = எங்கெங்கெல்லாம் கை கூப்பிய வண்ணம்

பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்= கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கிய வண்ணம் உள்ள

 மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்’= ராக்ஷஸர்களின் எமனான மாருதியை/ அனுமனை வணங்குவோமாக.

கிழக்கு நோக்கிய கோவில் லட்சுமணப் பெருமாள்; மேற்கு நோக்கிய கோவில் ராம பிரான் ; ஆயினும் இரண்டு மூர்த்திகளும் நான்கு கைகள் உடைய விஷ்ணுவே; சங்கு சக்ர கதா தாரி ; நாலாவது கையில் தாமரை..

இரண்டு கோவில்களிலும் தாமிரத்தகடுகளால் கூரையை வேய்ந்துள்ளனர்

வில்வாத்ரி கோவில்

பரசுராமர் தன்னுடைய பித்ருக்களை (நீத்தார்) கடைத்தேற்ற சிவபெருமானை வேண்டினார்.  அவர் கொடுத்த விஷ்ணு மூர்த்தியை பரசுராமர் பிரதிஷ்டை செய்தார்; பின்னர் பூத மலையில் தவம் செய்து  முக்தி அடைந்தார்; அந்த பூதன்மலா அருகில் இருக்கிறது

ராமபிரான் என்று வணங்கப்படும் மேற்கு நோக்கிய சிலை தங்கத் தகட்டால் கவசம் இடப்பட்டுள்ளது ; ஒரு முறை அர்ச்சகர், அபிஷேக ஆராதனைகளைச் செய்கையில் சிலை சேதமுற்றதாகவும் ஆகையால் இரண்டு துண்டுகளை கவசத்தால் போர்த்தி  இணைத்து விட்டனர் என்பதும் இதன் பின்னுள்ள கதை ஆகும்.

வில்வ ஆமலக பெயர்க் காரணம்

சிலைக்குக் கீழ் ஒரு பள்ளம் இருந்ததாகவும் அதிலுள்ள தீர்த்தமே பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. ஒரு முறை அந்த தீர்த்தப்பள்ளத்தில் விழுந்த கதலி (வாழை) பழத்தை அர்ச்சகர் எடுக்க முயன்றபோது பெரிய சப்தம் எழும்பி எல்லாம் பூமிக்கடியில் சென்றதால் இப்போது அந்த இடம் வறண்டு விட்டதாகவும் சொல்லுவார்கள்; கோவிலுக்கு அடியில்  குகை இருப்பதாகவும் அங்கே தங்க வில்வ மரம் இருப்பதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்

(இலங்கை கோவில்கள் பற்றி நான் எழுதிய கட்டுரைகளிலும் இது போன்ற விஷயங்களைக் காணலாம்.; பல கோவில்கள் மலைக்குகைகளின் மேல் அமைந்துள்ளன; அவற்றின் கீழ் சுண்ணாம்புப் பாறைகளினால் ஆன குகைகள் இருக்கின்றன; அவற்றில் தேங்கும் தண்ணீர், அவற்றைக் கரைக்கும்போது அவை இடி ஓசையுடன் பள்ளங்களை ஏற்படுத்துகின்றன. ; இது விஞ்ஞான விளக்கம்).

பக்தர்கள் சொல்லும் கதை

வில்வாத்ரி நாத பெயருக்கு வேறு ஒரு கதையும் உண்டு

விஷ்ணுவின் சக்தி பெருகியவுடன் அசுரர்கள் பயந்து போய் ஒரு தந்திரம் செய்தனர்; ஒருவன் பிராமண உருவத்தில் வந்து மற்றவர்களுடன் உலவினான் ; இரவு நேரத்தில் தன்  கைவரிசையைக் காட்டினான். பசுக்களைக் கொன்று சாப்பிட்டுவிட்டு  எலும்புகளை ஓரிடத்தில் தூக்கி எறிந்தான் ; அவை மலைபோலக் குவிந்த இடம் மூரி குன்னு ( மாடுகள் குன்று ) என்று அழைக்கப்படுகிறது ; கும்ப மாதத்தில் ஒரு நாள் அந்த அசுரன் விக்கிரகத்தையே உடைக்க முயன்றபோது பெருமாள், நரசிம்மாவதாரம் எடுத்து அசுரனை வதைத்தார் ; நரசிம்ம மூர்த்தியின் பயங்கர ஓசையை அடக்கி அவரை சாந்தப்படுத்துவதற்கு வில்வமங்கள் சுவாமிகள் துதி பாடினார் . அப்போது அவரை வில்வ அத்ரி நாத என்று புகழ்ந்தால் வில்வாத்ரி நாத என்ற நாம கரணம் சூட்டப்பட்டது .

தொடரும் ………………………..

Tags– வில்வாத்ரிநாத, திருவில்வாமலக , ராம லட்சுமண கோவில் , அரசமரம் , அனுமன் சிலை, யத்ர யத்ர ரகுநாத , கேரள கோவில் எண் 31

லவ குசரின் ஜன்ம பூமி சீரமைக்கப்படும்! (Post No.12,825)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,825

Date uploaded in London –  –  12 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

லவ குசரின் ஜன்ம பூமி சீரமைக்கப்படும்! 

ச.நாகராஜன் 

ஒரு நல்ல செய்தி.

இதை ஹிந்துஸ்தான் டைம்ச் தனது 26-10-2023 இதழில் வெளியிட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத் அரசு கான்பூரில் பிடூரில் (Bithoor)  உள்ள வால்மீகி ஆசிரமத்தை வசப்படுத்தி அதை புனருத்தாரணம் செய்ய இருக்கிறது.

இந்த ஆசிரமத்தில் தான் ஶ்ரீ ராமரின் புத்திரர்களான லவ மற்றும் குச ஆகிய இருவரும் பிறந்ததாக நம்பப்படுகிறது.

இதை அரசு வசப்படுத்த ஒருகோடியே ஐம்பது லட்சத்தை உ.பி. அரசு ஒதுக்கி இருக்கிறது. தக்க ஒரு ஏஜென்ஸிக்கு ஈ-டெண்டர் முறைப்படி இது தரப்படும்.

இதைச் செய்ய முன் வரும் முகமைகள் (ஏஜென்ஸிகள்) டெண்டரில் பங்கு கொள்ள ரூ 3.12 லட்சம் செலுத்த வேண்டும்.

அரசின் அகழ்வாராய்வு பிரிவு மதுராவில் உள்ள ராஜா சீதாராம் மஹல் மற்றும் ஃபதேபூரில் உள்ள சிவராஜ்பூர் ராசிக் பிஹாரி ஆலயம் ஆகியவற்றையும் புனருத்தாரணம் செய்யத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

ராஜா சீதாராம் மஹலை புனருத்தாரணம் செய்வதற்கு அரசு ஒரு கோடியே இருபத்தொன்பது லட்சத்தை ஒதுக்கியிருக்கிறது. இந்த டெண்டரில் பங்கு கொள்ள விரும்பும் முகமைகள் ரூ 4.04 லட்சத்தை EMD பணமாகச் செலுத்த வேண்டும்.

தெர்ந்தெடுக்கப்பட்ட முகமை வேலையைச் செய்ய அகழ்வாராச்சிப் பிரிவு அது சரிவர நடக்கிறதா என்று மேற்பார்வை பார்க்கும்.

டெண்டர்களை பரிசோதிக்க இரு மதிப்பீடுகள்  செய்யப்படும். ஒன்று இதைச் செய்யும் முறையும் உத்தியும் சரியாக இருக்கிறதா என்று ஆராய்வதற்காக டெக்னிகல் ஆய்வு. அடுத்ததாக இதன் நிதி ஆதாரத் தேவை சரிதானா என்று சரிபார்க்க ஒரு நிதிக்குழுவின் ஆய்வு.

மக்கள் இதை வரவேற்கின்றனர்.

ஒரு புறம் தமிழ்நாட்டில் சனாதனத்தை ஒழிப்பேன் என்று திராவிட மாடல் அரசியல்வாதிகள் மேடையில் முழங்கும் போது சனாதனம் தனது வீரியத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருப்பதைக் காண்கிறோம்.

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை நாடே ஆவலுடன் எதிர்பார்க்கிறது. இந்த வகையில் 2024ஆம் ஆண்டு ஹிந்து தர்ம வரலாற்றில் ஒரு குறிப்பிடத் தகுந்த இடத்தைப் பெற்று விடும்.

அடுத்து இந்த வாரம் ( 5-12-2023 அன்று) பாராளுமன்றத்தில் வடக்கில் உள்ள மாநிலத்தில் உள்ளவர்கள் பசுமூத்திரத்தைச் சாப்பிடுபவர்கள் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கூற பெரும் சர்ச்சை வெடித்தது.

மக்கள் மனம் புண்படும் அளவில் பேசிய எம்.பி.யை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரே கண்டித்து விட்டார்.

இப்படிப்பட்ட வெறுப்பு பேச்சுக்கள் அதிகமாக அதிகமாக ஹிந்துக்களின் ஒற்றுமை ஓங்கி வருகிறது.

விநாசகாலே விபரீத புத்தி என்று ஒரு பழமொழி உண்டு. வீழும் காலம் வரும் போது புத்தி நிலை தடுமாறும்.

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று கூறக் கூற அது அதிக வீரியத்துடன் முன் எப்போதும் இல்லாத வலிமையுடனும் பொலிவுடனும் ஜொலிக்கும் என்பதில் ஐயமில்லை.

ஹிந்துக்கள் அனைவரும் ஓரிழையில் இணைந்தால் ஹிந்து பாரதம் உருவாகும்.

மகாகவி பாரதியார் சத்ரபதி சிவாஜி தன் படைவீரருக்குக் கூறியதாக, படைத்த கவிதை இங்கு நினைவு கூரத் தகும்.

அதில் ஒரு பகுதி நடக்கப் போகும் முடிவையும் தருகிறது.

அது இது தான்:

வம்மினோ துணைவீர் மருட்சி கொள்ளாதீர்

நம்மனோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும்

புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்?

மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின்

இன்னருள் நமகோர் இருந்துணை யாகும்

பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும்

வீமனும் துரோணனும் வீட்டுமன் தானும்

இராமனும் வேறுள இருந்திறல் வீரரும்

நற்றுணை புரிவர் வானக நாடுறும்

வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம்!

*****

Rare Pictures from 1907 Book: Saint, Potter, Weaver, Blacksmith ,Fakir, Barber Carpenter (Post No.12,824)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,824

Date uploaded in London – –   11 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Native Races of the British Empire , Northern India has got rare pictures of all kinds of workers. It was published in 1907 by W Crooke

Natives of Northern India

W Crooke, 1907

We have pictures of Hindu saint on nails reminding us of Bhisma on Bed of arrows; we have also toddy seller, goat sacrifice, snake charmers, woman on spinning wheel. I have published some pictures like dancers, Hindu girl, Dancing troupe etc. Here are some more pictures :

 Hindu Merchant

Naga Warriors

Muslim Fakir

Barber

Carpenter

Goat sacrifice

Potter

Rajput King

Sacred Drum

Snake charmer

Spinning Wheel

Toddy seller

Weaver 

–subham—

Natives of north India, pictures, Hindu saint, weaver, spinning, goat sacrifice, rare, 1907 book, W Crooke