லவ குசரின் ஜன்ம பூமி சீரமைக்கப்படும்! (Post No.12,825)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,825

Date uploaded in London –  –  12 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

லவ குசரின் ஜன்ம பூமி சீரமைக்கப்படும்! 

ச.நாகராஜன் 

ஒரு நல்ல செய்தி.

இதை ஹிந்துஸ்தான் டைம்ச் தனது 26-10-2023 இதழில் வெளியிட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத் அரசு கான்பூரில் பிடூரில் (Bithoor)  உள்ள வால்மீகி ஆசிரமத்தை வசப்படுத்தி அதை புனருத்தாரணம் செய்ய இருக்கிறது.

இந்த ஆசிரமத்தில் தான் ஶ்ரீ ராமரின் புத்திரர்களான லவ மற்றும் குச ஆகிய இருவரும் பிறந்ததாக நம்பப்படுகிறது.

இதை அரசு வசப்படுத்த ஒருகோடியே ஐம்பது லட்சத்தை உ.பி. அரசு ஒதுக்கி இருக்கிறது. தக்க ஒரு ஏஜென்ஸிக்கு ஈ-டெண்டர் முறைப்படி இது தரப்படும்.

இதைச் செய்ய முன் வரும் முகமைகள் (ஏஜென்ஸிகள்) டெண்டரில் பங்கு கொள்ள ரூ 3.12 லட்சம் செலுத்த வேண்டும்.

அரசின் அகழ்வாராய்வு பிரிவு மதுராவில் உள்ள ராஜா சீதாராம் மஹல் மற்றும் ஃபதேபூரில் உள்ள சிவராஜ்பூர் ராசிக் பிஹாரி ஆலயம் ஆகியவற்றையும் புனருத்தாரணம் செய்யத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

ராஜா சீதாராம் மஹலை புனருத்தாரணம் செய்வதற்கு அரசு ஒரு கோடியே இருபத்தொன்பது லட்சத்தை ஒதுக்கியிருக்கிறது. இந்த டெண்டரில் பங்கு கொள்ள விரும்பும் முகமைகள் ரூ 4.04 லட்சத்தை EMD பணமாகச் செலுத்த வேண்டும்.

தெர்ந்தெடுக்கப்பட்ட முகமை வேலையைச் செய்ய அகழ்வாராச்சிப் பிரிவு அது சரிவர நடக்கிறதா என்று மேற்பார்வை பார்க்கும்.

டெண்டர்களை பரிசோதிக்க இரு மதிப்பீடுகள்  செய்யப்படும். ஒன்று இதைச் செய்யும் முறையும் உத்தியும் சரியாக இருக்கிறதா என்று ஆராய்வதற்காக டெக்னிகல் ஆய்வு. அடுத்ததாக இதன் நிதி ஆதாரத் தேவை சரிதானா என்று சரிபார்க்க ஒரு நிதிக்குழுவின் ஆய்வு.

மக்கள் இதை வரவேற்கின்றனர்.

ஒரு புறம் தமிழ்நாட்டில் சனாதனத்தை ஒழிப்பேன் என்று திராவிட மாடல் அரசியல்வாதிகள் மேடையில் முழங்கும் போது சனாதனம் தனது வீரியத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருப்பதைக் காண்கிறோம்.

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை நாடே ஆவலுடன் எதிர்பார்க்கிறது. இந்த வகையில் 2024ஆம் ஆண்டு ஹிந்து தர்ம வரலாற்றில் ஒரு குறிப்பிடத் தகுந்த இடத்தைப் பெற்று விடும்.

அடுத்து இந்த வாரம் ( 5-12-2023 அன்று) பாராளுமன்றத்தில் வடக்கில் உள்ள மாநிலத்தில் உள்ளவர்கள் பசுமூத்திரத்தைச் சாப்பிடுபவர்கள் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கூற பெரும் சர்ச்சை வெடித்தது.

மக்கள் மனம் புண்படும் அளவில் பேசிய எம்.பி.யை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரே கண்டித்து விட்டார்.

இப்படிப்பட்ட வெறுப்பு பேச்சுக்கள் அதிகமாக அதிகமாக ஹிந்துக்களின் ஒற்றுமை ஓங்கி வருகிறது.

விநாசகாலே விபரீத புத்தி என்று ஒரு பழமொழி உண்டு. வீழும் காலம் வரும் போது புத்தி நிலை தடுமாறும்.

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று கூறக் கூற அது அதிக வீரியத்துடன் முன் எப்போதும் இல்லாத வலிமையுடனும் பொலிவுடனும் ஜொலிக்கும் என்பதில் ஐயமில்லை.

ஹிந்துக்கள் அனைவரும் ஓரிழையில் இணைந்தால் ஹிந்து பாரதம் உருவாகும்.

மகாகவி பாரதியார் சத்ரபதி சிவாஜி தன் படைவீரருக்குக் கூறியதாக, படைத்த கவிதை இங்கு நினைவு கூரத் தகும்.

அதில் ஒரு பகுதி நடக்கப் போகும் முடிவையும் தருகிறது.

அது இது தான்:

வம்மினோ துணைவீர் மருட்சி கொள்ளாதீர்

நம்மனோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும்

புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்?

மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின்

இன்னருள் நமகோர் இருந்துணை யாகும்

பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும்

வீமனும் துரோணனும் வீட்டுமன் தானும்

இராமனும் வேறுள இருந்திறல் வீரரும்

நற்றுணை புரிவர் வானக நாடுறும்

வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம்!

*****

Leave a comment

Leave a comment