கேரளத்தில் அதிசய சிவன்,  வெங்கடாசலபதி கோவில்கள்-47 (Post No.12,883)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,883

Date uploaded in London – –   4 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 47

கோவில் எண்கள் –7172737475

கேரளத்தில் வெங்கடாசலபதி கோவில்கள் – 47

71. எர்ணாகுளம் வெங்கடாசலபதி கோவில்

ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி பாலாஜி என்று போற்றப்படும் வெங்கடாசலபதி கோவிலுக்கு தமிழ் நாட்டிலும் ஆந்திரத்திலும் கோடிக் கணக்கில் பக்தர்கள் இருக்கிறார்கள். அவருக்கு கேரளத்திலும் கோவில்களும் பக்தர்களும் இருப்பது பலருக்கும் தெரியாது .

எர்ணாகுளம் நகருக்குள்ளேயே வெங்கடாசலபதி கோவில் இருக்கிறது . கெளட சரஸ்வதி பிராமணர்களுக்கு இவர் கண்கண்ட தெய்வம்.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில்  எட்டு நாட்களுக்கு விழா நடக்கும். ஒவ்வொருநாள் காலையிலும் 3 யானைகளுடன் பெருமாள் பவனி வருகிறார். 5, 6, 7 ஆவது நாட்களில் சப்பரத்தில் பவனி நடக்கும்.

கடைசி நாள் மதியத்தில் வஞ்சியெடுப்பு நடக்கும். இதில் படகுகளின் மாதிரிகள் கொண்டுவரப்படும். இந்த ஊர்வலம் கோவில் குளத்தில் முடிவுபெறும். இரவில் கருட வாகன தர்சனத்தைப் பல்லாயிரக்கணக்கான பக்த்ர்கள்  காண்பர் . பெருமாள், ரதத்தில் பவனி வருவார்.. மறுநாள் அதிகாலையில் தெப்போற்சவம் நடக்கும்.

மட்டாஞ்சேரி  பகுதியில் கோவில்; உள்ளது . இது ஒரு பெரிய கோவில்; கருவறைக்கு வெளியே நாலம்பலம் இருக்கிறது கோவில் குளத்தின் நடுவில் செப்பு/ தாமிரக் கூரை வேயப்பட்ட மண்டபம்  இருக்கிறது .மேல் அடுக்கு சுழலும்  வகையில் அற்புதமாக அமைந்துள்ளது

கோவிலின் வாசல் 70 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கும்.மூன்று நிலை கிழக்கு கோபுரமும் கவர்ச்சிமிக்கது .

இந்தக் கோவிலில் உள்ள வெண்கல மணி இந்தியக்  கோவில்களில் உள்ள மிகப்பெரிய மணிகளில் ஒன்றாகும்.

xxxx

72.வடக்கு பாரூர் வெங்கடாசலபதி கோவில்

இந்தக் கோவிலில் ஏப்ரலில் 6 நாள் உற்சவம் நடக்கிறது.3,4 ஆவது நாட்களில் திக் விஜயம் நடக்கும். பல்லக்கில் பெருமாளை எழுந்தருளச் செய்து கோவிலைச் சுற்றி எடுத்துவருவார்கள் ஐந்தாம் நாள் பள்ளி வேட்டை நடக்கும்.

ஆராட்டு , தெப்போற்சவத்துடன் விழா நிறைவு பெறும்.

xxxx

73.பல்லுருத்தி வெங்கடாசலபதி கோவில்

எர்ணாகுளத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் பல்லுருத்தி இருக்கிறது. சிவராத்திரி காலத்தில் பெருமாளுக்கு விழா எடுப்பது குறிப்பிடத் தக்கது. 5 நாள் விழாவுக்கு பல்லக்கு பிரதட்சிணம் என்று பெயர்.. பல்லக்கில் பெருமாள் பவனி வருகிறார் .

மேற் கூறிய எல்லா விழாக்களிலும் கேரளத்துக்கே உரித்தான கொட்டு மேளங்களும் தமிழ்நாட்டு நாதஸ்வரமும் இருக்கும்.

xxxx

74.ஆல்வாய் சிவன் கோவில்

எர்ணாகுளம் நகரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் பெரியாற்றங்கரையில் அமைந்த ஆல்வாய் சிவன் கோவில்  பல சிறப்புகளை உடையது.   சிவலிங்கம் கருவறையில் இல்லாது ஆற்றங் கரையில் நிற்கிறது . சிவராத்ரி உற்சவம் மிகப்பெரிய அளவில் நடக்கும். மறு நாளன்று முன்னோர்களுக்கு வாவுபலி கொடுப்பார்கள் .

உற்சவ காலத்தில் 14 நாட்களுக்கு சந்தை, கண்காட்சிகள் இடம்பெறும்.

xxxxx

75. உளியனூர் மஹாதேவர் கோவில்பொறியியல் அதிசயம்!!

ஆலவாயிலிருந்து 2 கி.மீ தொலைவில் பெரியாற்றங்கரையில் அமைந்த கோவில் இது .

இதே ஊரைச் சேர்ந்த பெருந்தச்சன் கட்டிய கோவில் ஆகும் . கேரளத்தின் மிகப்பெரிய கட்டட சிற்பி பெருந்தச்சன்.

இந்தக் கோவில் பொறியியல் கலையின் அதிசயம். ஸ்ரீ கோவில் என்னும் கருவறை 42 மீட்டர் சுற்றளவு கொண்டது;   கிழக்கு நோக்கி சிவ பெருமானும் மேற்கு நோக்கி பார்வதியும் காட்சி அளிக்கிறார்கள்.

கூரையில் இருக்கும் இறை வாரக்கை,கைமரம்,அல்லது உத்தரங்கள் எண்ணிக்கை 64; இந்து மத நூல்களில் 64 என்பது சிறப்புடைத்து; மதுரை சிவ மெருமானின் திருவிளையாடல்கள் 64. வாத்ஸ்யாயனரின் காம சூத்திரத்தில் பெண்கள் கற்க வேண்டிய 64 கலைகளின் பட்டியல் (FIRST WOMAN’S SYLLABUS IN THE WORLD)  உள்ளது. ஆய கலைகள் 64-கையும் தருபவள் சரஸ்வதி என்கிறது தமிழ்ப்பாடல்  இந்தக் கோவிலின் 64 இறைவாரக்கைக்கையும் ஒரே இடத்தில் சந்திக்கும் வகையில் நுட்பமாகக் கட்டப்பட்டுள்ளது .

கருவறையில் உள்ள 4 வாசல்களும் 4 வேதங்களைக் காட்டி நிற்கின்றன..

பிரதான கோவிலிலிருந்து சிறிது தூரத்தில் மேலும் ஒரு சிவன் கோவில் உள்ளது;.பரசுராமர் ஸ்தாபித்த சிவலிங்கம் என்பது ஐதீகம். கேரளத்தை உண்டாக்கியவர் பரசுராமர் என்பதால் அவர் சம்பந்தம் எல்லா இடத்திலும் இருக்கும் . இந்தியாவில் உள்ள பழைய சிவலிங்கங்களில் இதுதான் பெரியது என்பது மக்கள் நம்பிக்கை. தஞ்சாவூரில் ராஜ ராஜ சோழன் எழுப்பிய பெருவுடையார் என்னும் மிகப்பெரிய லிங்கம் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதிஷ்டை ஆனது. இங்குள்ள சிவலிங்கமோ அதற்கும் முந்தியது என்பது நம்பிக்கை. தற்காலத்தில் உலகம் முழுதும் மிகப்பெரிய சிவலிங்கங்கள் நிறுவப்படுவதை பத்திரிக்கைகளில்  படிக்கிறோம் .

மஹா கணபதி கோவிலையும்  புதிதாக எழுப்பியுள்ளனர் .

சிவன் கோவில் விழா  ஆண்டுதோறும் ஜனவரியில் 10 நாட்களுக்கு நடைபெறும் .

–SUBHAM—

TAGS- பொறியியல் அதிசயம், உளியனூர் மஹாதேவர் கோவில், வெங்கடாசலபதி கோவில்கள், PART 47, கேரள கோவில்கள்- 47, பெருந்தச்சன்

Leave a comment

Leave a comment