மலையாள பழனி கோவில்- 54 (Post No.12,905)

picture of Thodupuza Sri Krishnan Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,905

Date uploaded in London – –   11 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 54

கோவில் எண்கள் –101,102, 103, 104

இடுக்கி மாவட்ட கோவில்கள்

101. உரவப்பாறா கோயில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில்

கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா அருகில் ஓல மட்டம்

என்னும் இடத்தில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது . இதை

மலையாள பழனி   என்று அழைப்பார்கள். இங்கு வனவாச காலத்தில் பாண்டவர்கள் தங்கி இருந்ததாகவும் அப்போது பீமன் உருவாக்கிய நீர் நிலையே உறவுப்பாறா என்றும் கதைகள் உள்ளன. மூன்று பெரிய பாறைகள் பீமன் பயன்படுத்திய அடுப்பு என்றும் , தண்ணீர் கிடைக்காததால் அவன் ஒரு பாறையை உராய்ந்து தண்ணீரை உண்டாக்கினான் என்றும் சொல்லுவர் .

பால சுப்ரமண்ய வடிவத்தில் முருகன் அருள்பாலிக்கிறார்.

மகர மாதத்தில் ஆண்டு விழா நடக்கும். வைத்தீஸ்வரன் கோவில் போல உப்பு, மிளகு பிரசாதம் கிடைக்கும்.

XXXXX

102. மூணாறு முருகன் கார்த்திகை விழா


மூணாறு Munnar என்னும் இடம் தமிழ்நாட்டு எல்லையை ஒட்டி உள்ளது. இங்குள்ள முருகன் கோவில் கார்த்திகை விழாவால் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது.

கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை  விழா  நாளில் கோவில் முழுதும் விளக்குகளை ஏற்றுவார்கள் . ஜெகஜ்ஜோதியாக காட்சிதரும்  அதற்கு முதல் நாளன்று பழங்குடி இன மக்கள் ஒன்று கூடி , அவர்கள் கடைப்பிடிக்கும் சம்பிரதாய சடங்குகளைச் செய்வார்கள்.

விழாக்காலத்தில் தூக்கம் என்னும் காவடிச் சடங்கு நடக்கும். விரதம் இருக்கும் ஒரு முருக பக்தர் மிக உயரத்திலிருந்து தொங்குவார் . அவர் இருக்கும் மேடை ஒரு வண்டி மீது இருக்கும். அதை கோவிலைச் சுற்றி வலமாக இழுத்து வருவார்கள்;p முருக பக்தர்கள் கோஷம் எழுப்பி இறைவனை வணங்குவது எல்லோரையும் பக்திப் பரவசத்தில் மூழ்கடித்துவிடும் .

XXXXX

103.கிருஷ்ணன் கோவில், தொடுபுழா

இடுக்கி மாவட்டத்தில் தொடு புழா என்னும் ஊரில் கிருஷ்ண பகவான், கையில் வெண்ணெய் வைத்திருக்கும் நவநீத கிருஷ்ணனாக தரிசனம் தருகிறார். மூவாற்றுப்புழாவின் உபநதியான தொடு புழா நதிக்கரையில் கோவில் அமைந்துள்ளது . ஒரு பிராமண பக்தர் இந்தக் கோவிலை மீனம் மாத சுவாதி நட்சத்திரத்தில் ஸ்தாபித்தார் ஆண்டுதோறும் அந்த மாதத்தில் பத்து நாள் விழா நடக்கும்.

முதல் நாளன்று பிரபல வித்வான்களின் இன்னிசை நிகழ்ச்சியும் 4,5,6 ஆவது நாள் உற்சவத்தில் சாக்கியர் கூத்தும், 5,5 ஆவது நாட்களில் கதகளி நடனமும் ஏற்பாடு செய்யப்படும்.

7,8,9 ஆவது நாட்கள் முக்கிய நாட்கள் ; அப்போது அலங்கரிக்கப்பட்ட 5 யானைகளின் பவனி மேளதாளத்துடன் வலம் வரும். உற்சவ பலி என்ற புனித விழா, ஒன்பதாம் நாளன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வணங்க நடக்கிறது .

‘நிலாபதுதரா’ அல்லது புனித மேடை கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ளது. திருவிழாவின் போது இறைவனின் சிலையானது கருவறையில் இருந்து வெளியே எடுத்துவரப்பட்ட இந்த மேடைக்கு கொண்டுவரப்பட்டு முழுமையாக அலங்கரிக்கப்பட்டு மீண்டும் கருவறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

XXXXX

104.காரிகோடு பகவதி கோவில்

தொடுபுழா அருகில் காரிகோடு பகவதி கோவில் இருக்கிறது ; இங்கு பத்ரகாளி வடிவத்தில் தேவியை வணங்குகிறார்கள் . சுமார் 500 ஆண்டுகள் பழமையான கோவில் . இங்கு சிலைக் கண்ணாடி மூலம் தேவியை வழிபடுகின்றனர் .

சிவன் மற்றும் பிள்ளையார் ஆகியோர் பிற பரிவார தெய்வங்களாக உள்ளனர். ஆண்டுதோறும்  திருவிழா, மலையாள மாதமான ‘கும்பம்’ அஸ்வதி மற்றும் பரணி நாட்களில் நடக்கிறது.

வடக்கம்கூர் மன்னர் தனது பிரார்த்தனையால் கொடுங்கல்லூர்  பகவதியை இங்கு அழைத்து வந்தார் என்று பக்தர்கள் கூறுகிறார்கள் .

–சுபம் —

TAGS- காரிகோடு பகவதி, தொடுபுழா கிருஷ்ணன் ,கோவில், உரவப்பாறா , சுப்பிரமணிய சுவாமி

Leave a comment

Leave a comment