மருக்கொழுந்து ஏற்றுமதி (Post No.12,910)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,910

Date uploaded in London – –   12 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ரோஜாச்செடியில் முள் நிறைந்த தண்டு, கிளைகளுக்கு இடையே ரோஜா மலர் இருக்கும். மல்லிகைச் செடியில் காம்பின் மீது பூக்கள்  இருக்கும். அங்கு மட்டுமே வாசனை. ஆனால் ஒரு செடி முழுதுமே வாசனை அடிக்கிறதென்றால் , அது மருக்கொழுந்து செடியாகவே இருக்கும். பச்சை  நிறத்தில் இருந்தாலும் அது பூ மாலையில், கதம்ப மாலையில் , கடவுளின் பாதத்தில் மணங் கமழ இடம்பெறும்.

ஆங்கிலத்தில் இதை Wormwood வோர்ம் வுட் என்பர். இது ஒரு மூலிகை; மருந்தாகவும் நறுமணப் பொருளாகவும் பயன்படுகிறது .

மரிக்கொழுந்து என்றும் எழுதுவார்கள். பசுமை வண்ணத்தில் சிறிய இலைகளுடன், மெலிதான உருவில் தண்டுகளாகக் காட்சியளிக்கும் அவை, இருக்கும் இடங்கள் எல்லாம், நறுமணத்தைப் பரப்பும்!

மருக்கொழுந்து செடியை இந்தியா உள்பட  48 நாடுகள்  ஏற்றுமதி செய்கின்றன. ஆண்டுதோறும் 1851 கப்பல் லோடு loads விற்பனை ஆகிறது  (Global Export Trade data of Wormwood:1851 Export Shipments found from 48 exporting Countries)

xxxxx

மருக்கொழுந்து சாகுபடி

மரிக்கொழுந்து, வண்டல் நிலம், கரிசல் நிலம், மற்றும் செம்மண் நிலங்களில் அதிக அளவில் வளரும். மிதமான மழை மற்றும் சூரிய ஒளி மரிக்கொழுந்து செடிகளை நன்கு வளர வைக்கும் தன்மை உள்ளவை. அடிக்கடி தண்ணீர் பாய்ச்சி, உரம் மற்றும் மருந்து தெளிக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே, நன்கு செழித்து வளரும் தன்மை மிக்கது. ஓராண்டு காலம் வரை இலைகள் மற்றும் தண்டுகள் மூலம், நறுமணப் பயன்கள் தரும் மரிக்கொழுந்து, அடர்த்தியாக, நிறைய கிளைகளுடன் வளரும்.

மரிக்கொழுந்து சாகுபடி, இந்தியாவில் காஷ்மீர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் சுமார் 1000 எக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.

மரிக்கொழுந்து ஓராண்டு வாழும் வகையை சார்ந்த பயிராகும். 45-80 செ.மீ. உயரம் நேராக வளரக்கூடிய இச்செடிகள் சாம்பல் நிறம் கலந்த பச்சை வண்ண இலைகளை கொண்டது. மாலைகளுக்கு உபயோகிப்பதற்காக பயிரிடப்படும் மரிக்கொழுந்து விதைத்ததில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் அறுவடை செய்யபடுவதால் எந்த பருவத்திலும் சாகுபடி செய்யலாம். ஆனால், வாசனை எண்ணெய்க்காக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மார்ச் வரை சாகுபடி செய்வது நல்லது. பின்பு மறுதாம்பு பயிரை ஏப்ரல் – மே மாதங்களில் அறுவடை செய்யலாம்.

பூக்கும் தாவர வகைப் பிரிவில் ஆஸ்டரேசி ( family Asteraceae) குடும்பத்தில் 2000 வகைகள் உடைய துணைக் குடும்பத்த்தில் இதுவும் ஒன்று. ஆங்கிலத்தில் இதற்கு பல பெயர்கள் இருக்கின்றன (artemisia plant, the artemisia herb, the sweet annie herb, and “sweet wormwood.). இதன் தாவரவியல் பெயர் Artemisia absinthium ஆர்டிமிஸியா அப்சிந்தியம்.

xxxxx

மருத்துவ உபயோகங்கள்

பசியின்மையைக்  குணப்படுத்தவும் பித்த நீர்ப் பிரச்சனைகளை அகற்றவும், வயிற்று நோய்களை நீக்கவும் மருக்கொழுந்து பயன்படுகிறது ; குடலில் ஏற்படும் பிடிப்பு, காய்ச்சல், கல்லீரல் பிரச்சனை, புழுக்கள் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை போக்கவும் இதை உபயோகிக்கிறார்கள் . யாருக்காவது உடலுறவு கொள்வதில் விருப்பமின்மை இருந்தால் அதை மாற்றவும் இது டானிக்காக செயல்படுகிறது ; வியர்வையை வெளியேற்றவும் உதவுகிறது

காயங்கள் ஏற்பட்டாலோ, பூச்சிக்கடி ஏற்பட்டாலோ அந்த இடத்தில் மருக்கொழுந்தை வைத்து வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். சோப்புகளிலும், அழகு சாதனப் பொருட்களிலும் , வாசனைப் பூச்சுகளிலும் மருக்கொழுந்து எண்ணை பயன்படுகிறது .

சருமத்தில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றுகளுக்கு (Anti fungal) , மருந்தாகிறது. உடல் வீக்கங்கள் கட்டிகள் தரும் வலியைப் போக்கி, அவற்றை சுருங்க வைக்கிறது. மன நல பாதிப்புகளுக்கு ஆற்றல்மிக்க, நிவாரணமாகத் திகழ்கிறது., நல்ல தூக்கம் வர உதவும்.

தினமும் உறங்கப் போகுமுன், தலையணையின் கீழே, ஒரு கொத்து, மரிக்கொழுந்து இலைகளைத் தண்டுடன் வைத்துக்கொண்டு, அதன் பின் உறங்கச் செல்ல கண்களைத் தூக்கம் மெள்ளத் தழுவும்.

xxxxx

மதுபானத்தில் மருக்கொழுந்து

சிலவகை மதுபானங்களில் மருக்கொழுந்து எண்ணையைப் பயன்படுத்துகிறார்கள் . வெர்மவுத் , அப்சிந்த்தே (alcoholic drinks  Vermouth, Absinthe ) முதலியவற்றில் இது உள்ளது.

19, 20 ஆம் நூற்றாண்டுகளில் பிரான்ஸ் நாட்டில் அப்சிந்த்தே மதுபானம் பிரபலம் ஆகியது. இதை அருந்தினால் போதை ஏற்பட்டு மாயக் காட்சிகளைக் காணுவார்கள் என்ற எண்ணம் பரவியதால் இதை பச்சை தேவதை என்று அழைத்தார்கள் Absinthe  was thought to have hallucinogenic properties – hence its nickname “la fee verte” (the green fairy). வெர்மவுத் என்பது இத்தாலிய ஒயின் பானம் (Vermouth, a fortified Italian wine) இதில் மருக்கொழுந்து மணம்  வீசும். .  பிரபல பெர்ப்பியூம் நிறுவனங்கள் அதிக விற்பனையாகும் வாசனைப் பூச்சுகளில் மருக்கொழுந்து ஆயிலை பயன்படுத்துகின்றன ( popular fragrances like Burberry Body and Ralph Lauren Polo Black.)

xxxx

மருக்கொழுந்துக்கு தடை விதித்தது ஏன்?

சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் உள்பட சில ஐரோப்பிய நாடுகள் மருக்கொழுந்த்து உபயோகத்துக்கு தடைவிதித்தன . இதை அதிகம் பயனபடுத்தினால் அது நரம்பு மாண்டலத்தை பாதிக்கும் அமைதியற்ற மன நிலை, வலிப்பு, மூளை பாதிப்பு  ஏற்படும்  ஆயினும் இப்போது கட்டுப்பாடுகளுடன் இதன் உபயோகம் மீண்டும் வந்துவிட்டது.

அமெரிக்காவிலும் 100 ஆண்டுகளுக்கு முன்னர் தடை இருந்தது . இப்போது அமெரிக்கா , கனடாவில் இது பயிராகிறது.

செடியின் தண்டு, பூ, இலைகளைக் கொதிக்க வைத்து அதிலிருந்து வரும் ஆவியைக் குளிர வைத்தால் அசுலின் எண்ணெய் கிடைக்கும்; நீலப் பச்சை நிறத்தில் இருக்கும் azulene. எண்ணெயில் துஜோன், போர்னியோல், பைனின் ஆகிய ரசாயனப் பொருட்கள் இருக்கின்றன ( The oil is blueish-green due to the oil’s concentration of azulene.  The extract is rich in other organic chemicals such as thujone, borneol, and pinene) The main components of artemisia oil are ñ-thujone, Ã-thujone, sabinene, myrcene, trans-sabinol, trans- Sabinyl acetate, and linalyl acetate and geranyl propionate.

 —subham—

Tags- மருக்கொழுந்து, மரிக்கொழுந்து, சாகுபடி, ஏற்றுமதி, மருத்துவ, பயன்கள், நறுமணம், மதுபானம், தடை

Leave a comment

Leave a comment