திருவல்லம் பரசுராமர், உல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்கள்- 56 (Post No.12,912)

picture of Ulloor Subrahmanya Swami temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,912

Date uploaded in London – –   13 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 56

கோவில் எண்கள் –107, 108

107.திருவல்லம் பரசுராமர் கோவில்

திருவனந்தபுரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் திருவல்லம் என்னும் இடத்தில் பரசுராமர் கோவில் இருக்கிறது. கேரள மாநிலத்தையே கடலிலிருந்து மீட்டுத் தந் த பரசுராமருக்கு உள்ள ஒரே கோவில் இதுதான். கேரளத்தில் பஞ்ச பாண்டவர்களோ, அவருக்கு முந்தைய ராம லெட்சுமண  பரதரோ , அவருக்கும் முந்தைய பரசுராமரோ சம்பந்தப்படாத கோவில்கள் மிகச் சிலவே .

கரமணை ஆற்றின் கரையில் அமைந்த பரசுராமர் கோவில் , கோவலம் கடற்கரையிலிருந்து 6 கி.மீ தொலைவுதான்.

கருவறையைச் சுற்றி நாலம்பலம் உள்ளது. இந்தக் கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது . கேரள தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்படுகிறது; அடிக்கடி நடத்த திருப்பணிகளால் பல பழைய கட்டிடங்கள் மறைந்துவிட்டன .

இங்கும் முன்னோர்களை வழிபடும்  பலி சடங்குகள் நடக்கின்றன.ஆடி அமாவாசை தினத்தன்று கரமனை ஆற்றில் குளித்து விட்டு  தர்ப்பணம் செய்கிறார்கள்.’கர்க்கிடக வாவு’ எனப்படும் இந்த நாள் அரசு விடுமுறை நாளாகும் .

ஆண்டுதோறும் அக்டோபர் – நவம்பரில் பத்து நாள் உற்சவம் நடக்கும். எட்டாம் நாளன்று திடம்பு வடிவில் புறப்படும் ஊர்வலம் மறுநாள்தான் கோவிலுக்குத் திரும்பும். ஒன்பதாம் நாள் நடக்கும் யானைகள் பவனி, திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலுக்குச் செல்லும் . போகும் வழியில் சங்குமுகம் கடலில் மூர்த்தியை நீராட்டுவார்கள்.. இது ஆராட்டு ஆகும். திரு வனந்தபுரத்தில் பல சடங்குகள் நடக்கும். மறுநாள் காலையில் பரசுராமர் திருவல்லத்துக்குத் திரும்புவார்.

XXXX

108.உல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருவனந்த புரத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இருக்கிறது.  . இது ஒரு அழகான கோவில் . மார்ச் (பங்குனி உற்சவம்) மாதத்தில் எட்டு நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கும்.  கேரளத்துக்கே உரித்தான அத்தனை வகை நடனங்களும், சிறப்பு இன்னிசை நிகழ்ச்சிகளும் நடக்கும். ஏழாவது நாளில் ஆறாட்டு நடக்கிறது. யானைகள் பவனி, அருகிலுள்ள சாஸ்தா கோவில் வரை சென்று, மாலையில் திரும்பிவிடும்.

தை (ஜனவரி) மாதம் தைப்பூச உற்சவம் வெகு விமரிசையாக நடக்கிறது; .நூற் றுக்கணக்கான பக்தர்கள் காவடிகளை சுமந்து கொண்டு, கொட்டு மேளத்துக்கு ஏற்ப நடனம்  ஆடிக்கொண்டு வருவார்கள். சுமார் 300 காவடிகள் அருகாமையிலுள்ள கெளரீபட்டம் கோவிலில் புறப்பட்டு உல்லூரை  வந்தடையும்.

XXXX

109.குளத்தூர் சிவன் கோவில், த்ரிப்பாத புரம்

Thrippadhapuram Mahadeva Temple (aka Major Thrippappoor Shree Mahadevar Kshethram)

திருவனந்தபுரம்  நகரிலிருந்து 15 கிமீ தொலைவில் மனோரம்யமான சூழ்நிலையில் சிவன்- விஷ்ணு கோவில் இருக்கிறது . குளத்தூர் என்பது ஊரின் பெயர். அங்கு சிவா- விஷ்ணுவோடு கணபதி, ஐயப்பன் ஆகிய தெய்வங்களையும் தரிசனம் செய்யலாம்.

திரு பாத புரம் என்றால் இறைவனின் கால் FEET பதித்த புனித இடம் என்று பொருள். இங்கு விஷ்ணுவின் பாதங்களைக் காணலாம். ஆயினும் பிரதான தெய்வம் சிவ பெருமான்தான்.

திவாகர முனிவரின் முன்னால், விஷ்ணு தோன்றிய போது  அவருடைய தலை திரு வனந்த புரத்திலும் , கால்கள் இங்கும் தோன்றியதாம் . அதன் நினைவாக இங்கே பாதங்கள் உள்ளன. கோவிலுக்கு அருகில் கண் தீர்த்தம் இருக்கிறது .

  கோவிலில் இரண்டு கருவறைகள் உண்டு. சிவனுக்கும் கிருஷ்ணன்/விஷ்ணுவுக்கும் உள்ள அவை எதிரெதிரே அமைந்து ள்ளன .  ஆறு சிவலிங்கங்களும் இரண்டு விஷ்ணு பாதங்களும் இருப்பது தனிச் சிறப்பு ஆகும்

கோவிலில்  கண் EYE  வடிவிலுள்ள தீர்த்தம் தவிர , வெளியே பாபநாஸத் தீர்த்தக் குளமும் இருக்கிறது 

சிவ பெருமானுக்கு 7 நாள் உற்சவத்தையும், விஷ்ணுவுக்கு பத்து நாள் உற்சவத்தையும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது . விழாக் காலங்களில் எல்லா வகை கலை நிகழ்ச்சிகளையும் காணலாம் . இத்துப் பாண்டிகை தினங்களில் பெரும் பக்தர் கூட்டத்தைக் காணலாம்.

XXXXX

110.பழம் சிரா தேவி கோவில்

திருவனந்தபுரம் நகரிலிருந்து 3 கி.மீ தொலைவில் பழம்சிறை என்னுமிடத்தில் தேவி கோவில் அமைந்துள்ளது; நாகர் ஊட்டு என்பது கோவிலின் சிறப்பு வழிபாடு. விரதம் இருக்கும் புலவர்கள் என்போர் நள்ளிரவுக்குப் பின்னர் நாகர் / பாம்பு படத்தை பாடிக்கொண்டே வரைவார்கள் . நாகர் குறித்து அவர்கள் பாடுவார்கள். கடைசி நாளன்று பக்தர்கள் பொங்கல் வைத்து தேவிக்குப் படைப்பார்கள். மார்ச் மாதம் நடக்கும் 7 நாள் விழாவில் ஐந்தாம் நாள் தான்  நாகர் களம் என்னும் நாகர் படம் வரைதல்  நடக்கும். விழாக்காலத்தில் கோவில் விளக்குகளில்  ஜொலிக்கும். கலை நிகழ்ச்சிகளும் நடக்கும். தாளப்பொலி ஏந்தி பெண்கள் பவனி வருவார்கள் .

கர்ப்பகிரகத்தை சுற்றிலும் 17 யானைகள், ஆறு சிங்கங்கள் தாங்கி இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேற்பகுதியில் மும்மூர்த்திகள் அவர்களது தேவியர்களுடன் காட்சி தருகின்றனர். இவை சமீப கால படைப்புகள் .பிரகாரத்தில் தசாவதார காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  ரத்த சாமுண்டி, பிரம்ம ராட்சசன், நவகிரகங்கள் மூர்த்திகளும் இருக்கின்றனர் .

–SUBHAM—

TAGS- பழம் சிரா தேவி கோவில், த்ரிப்பாத புரம், திருவல்லம் பரசுராமர்

Leave a comment

Leave a comment