விஷ்ணு சஹஸ்ரநாம,  அதிசயங்கள்,  ரகசியங்கள், மேற்கோள்கள் Part–33 (Post No.13,577) Last Part

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,577

Date uploaded in London – 24 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் –33

மநு பற்றிய  ரகசியங்கள்

மநு என்பவர் கடவுள் ; இறைவன் என்பவர் மநு; எப்படி?

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் (வி.ச.) விஷ்ணுவின் பெயர்களில் மநு என்ற நாமமும் வருகிறது!

மநு ஸ்ம்ருதியில் 2685 ஸ்லோகங்கள் உள்ளன ; அவைகளில் சூத்திரர் களுக்கு எதிரான ஸ்லோகங்கள் 40 உள்ளன. அவைகளை வெள்ளைக்காரர்கள் அதில் இடைச் செருகலாக நுழைத்தனர். இந்தியாவைப் பிரித்தாள ,இந்து மதத்தை ஒழித்துக்கட்ட,  இது கடைசி வரை உதவும் என்று அவர்கள் நம்பினார்கள் .

அவர்கள் இதை புதிதாகப் புஸ்தகத்தில் சேர்த்ததற்கு என்ன ஆதாரம்?

இந்தியாவிலுள்ள எல்லா சம்ஸ்க்ருத நூல்களிலும் இடைச் செருகல் இருப்பதாகச்  சொல்லி ஒவ்வொன்றிலும்  ஒரு பிற்சேர்க்கை சேர்த்தவர்கள் மநு ஸ்ம்ருதி மட்டும்  அப்படியே கிடைத்திருப்பதாகச் சொல்லி , வேண்டாத ஸ்லோ கங்களையும் சேர்த்துவெளியிட்டுள்ளனர் ; ரிக் வேதத்தில் கூட கில — பிற்சேர்க்கை– இருப்பதாகக் கூறும் மாக்ஸ்முல்லர் கும்பல்,  மநு ஸ்ம்ருதி மட்டும் கலப்படம் இல்லாத அசல் அக்மார்க் முத்திரை ணெய் என்று அப்படியே கொடுத்துள்ளது; உலகிலேயே வெள்ளைக்காரன்இடைச்  செருகல் இல்லாது கொடுத்த ஒரே நூல் மனு நீதி ; வெள்ளைக்காரன் கொள்ளைக்காரன் என்பதை உலகெங்கிலும் உள்ள மியூசியங்கள் பறை சாற்றுகின்றன ; அவன் கொள்ளைக்காரன் மட்டுமல்ல ; கள்ளன் ! பெரிய கள்ளன் ! இடைச் செருகல்களை நீக்கிவிட்டால் உலகின் முதல் சட்ட புஸ்தகமான மநு ஸ்ம்ருதி புடமிட்ட பொன் போலும் உயரும் (மநு ஸ்ம்ருதி பற்றிய எனது 60 ஆராய்ச்சிக்கட்டுரைகளில் மேல் விவரம் உள்ளது.)சில கொள்கைகள் காலத்துக்கு ஒவ்வாதவையாக இருக்கலாம். தொல்காப்பியர் தமிழ்ப் பெண்கள் வெளிநாட்டுக்குப் போகக்கூடாது என்கிறார்; பிராமணர்கள் வெளிநாட்டுக்குப் போகக்கூடாது என்று மநு சொன்னார் ; கணவன் என்வன் கடவுள் என்று சங்கத் தமிழ் நூல்களும் மனு ஸ்ம்ருதியும் சொல்லின; பெண்கள் அதைப்பார்த்து சிரிக்கிறார்கள்; கணவன், கடவுளுக்கும் மேலானவன்; அவனைக் காலையில் தினமும் கும்பிடு என்று சொன்ன திருவள்ளுவனைப் பார்த்து தமிழ் மாணவிகள் சிரி சிரி – என்று சிரிக்கிறார்கள் ; மாமிசம் சாப்பிடாமல் இருந்தால் உன்னை எல்லா உயிர்களும் கைக்கூப்பித் தொழும் என்றான் வள்ளுவன்; முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் வாய்விட்டுச் சிரிக்கிறார்கள்; வள்ளுவன் நேரில் வந்தால் கட்டாயம் கல்லடிசொல்லடி இரண்டும் கிடைக்கும்

xxxx

மநுவின் காலம்

எல்லா நூல்களிலும் ஏன் காலத்துக்கு ஒவ்வாத செய்திகள் உள்ளன? ஏனெனில் அவை மிகவும் பழைய நூல்கள் மேலும்  அவை செயலுக்கு வ    த பகுதிகள் மிகவும் குறுகிய பரப்பு ; மநு கூட விந்திய மலையோடு முடிவடையும் ஆர்யாவர்த்துக்கு (எழுத்தறிவு உடைய பகுதிகள் ஆர்யாவர்த்தம்) மட்டுமே செல்லும் என்றும் சொல்லுகிறார். அவரது காலம்  வேதகாலத்தை ஒ ட்டியது

 Philologists Jones and Karl Wilhelm Friedrich Schlegel, in the 18th century, dated Manu smriti to around 1250 BCE and 1000 BCE respectively, இரண்டு மேல் நாட்டு மொழியியல் அறிஞர்கள் மநுவின் காலம் கிமு.1250, அதாவது இற்றைக்கு 3275 ஆண்டுகளுக்கு முந்தியது என்று சொல்லுகிறார்கள்; மநு கொடுக்கும் ஒரு தண்டனை சரஸ்வதி நதியை எதிர்த்து நடப்பதாகும்; சரஸ்வதி நதியோ மஹாபாரத காலத்திலே வற்றிவிட்டது ; அப்படியானால் அவர் வேத காலத்தை ஒட்டி வாழ்ந்தவர் என்பது தெளிவு.

யாரேனும் ஒருவன் மனு நூலை முழுதும் படித்தால் இது விளங்கும்; ஹமுராபிக்கும் முன்னர்,  முதல் சட்டப்  புஸ்தகத்தை எழுதியவர் அவர் என்பதால் லண்டனிலுள்ள , டயானா கல்யாணம் நடந்த, உலகப் புகழ் பெற்ற செயின்ட் பால் கதீட்ரலில் அந்த நூலின் பெயரை கையில் ஏ ந்திய வில்லியம் ஜோன்ஸ் சிலையை  வைத்துள்ளார்கள் (நான் சர்ச்சின் அனுமதி பெற்று உள்ளே சென்று புகைப்படம் எடுத்து இதே பிளாக்கில் வெளியிட்டுள்ளேன் )

xxxxx

மநு மர்மம் நீடிக்கிறது

ரிக்வேதம், பல  மனுக்களின் பெயர்களை சொல்கிறது ; ஆனால் இந்துக்களோ ஒரு மநுவுக்கும் இன்னொரு மநுவுக்கும் இடையே பிரம்மாண்டமான (மன்வந்தரம்) கால இடைவெளியைச் சொல்கிறது இந்துக்கள் தினசரி பூஜை சங்கல்பத்தில் அதை நம்பி இப்போது வைவஸ் வத மன்வந்தரத்தில் வாழ்வதாகவும் இன்னும் 7 பேர் வரப்போவதாகவும் சொல்கிறார்கள்;ரிக்  வேதப்   புதிரை எவரும் கண்டுகொள்ளவில்லை ; நான் எனது கருத்தினை வெளியிட்டிருந்தேன் ; அந்தக்கால ரிஷிகள் அப்படிப் பெயர் வைத்துக்கொண்டு இருக்கலாம் என்று ; இன்று நான் எனது பேரக்குழந்தைகளுக்கு செங்குட்டுவன், ராஜராஜா ரான் , மஹேந்திர பல்லவன் என்று பெயர் வைக்கலாம் அல்லவா ? அது போல 14 மனுக்களின் பெயர்களில் சிலவற்றை ரிக்வேத ரிஷிகள் வைத்துக்கொண்டனர் போலும்!

மானவ என்பது குடும்பப்பெயர் ; இதோ ரிக்வேதத்தில் உள்ள மனுக்கள்.

இப்போது நாம் ஏழாவது மனுவின் ஆட்சிக்காலத்தில் உள்ளோம் என்று இந்துக்கள் நடத்தும் பூஜா  சங்கல் பத்தில் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் .

முதல் ஆறு பேர் :ஸ்வயம்புவ ,ஸ்வரோசிச, உத்தம, தாமஸ , ரைவத சக்ஷுச ; இப்போது ஏழாவது மனு – வைவஸ்வத

இந்தப் பின்னனியோடு வி.ச.வுக்கு வருவோம்.

xxxx

ஸ்வயம்புவ — நாமத்தின் எண் 37–

ஆதி சங்கரர் சொல்கிறார் ;

தாமாகவே தோன்றியவர் அவரை யாரும் தோற்றுவிக்கவில்லை 

அவர் எல்லாவற்றுக்கும் முன்னர் இருந்தார் -மனு 1-6

योऽसावतीन्द्रियग्राह्यः सूक्ष्मोऽव्यक्तः सनातनः ।

सर्वभूतमयोऽचिन्त्यः स एव स्वयमुद्बभौ ॥ 1-७ ॥

yo’sāvatīndriyagrāhyaḥ sūkṣmo’vyaktaḥ sanātanaḥ |

sarvabhūtamayo’cintyaḥ sa eva svayamudbabhau ||1- 7 ||

1-6. Then the divine Self-existent (Svayambhu, himself) indiscernible, (but) making (all) this, the great elements and the rest, discernible, appeared with irresistible (creative) power, dispelling the darkness.

1-7. He who can be perceived by the internal organ (alone), who is subtile, indiscernible, and eternal, who contains all created beings and is inconceivable, shone forth of his own (will).

புலன்களால் அறிய முடியாதவன்நுண்ணியன் காலத்தால் அழியாதவன் யாராலும் தோற்றுவிக்கப்படாதவன் –1-7  மனு

xxxx

மநுஹு – நாம எண் 51–

மனத்தினால் எண்ணுபவன் மனு/ மனிதன் – பிருஹத் ஆரண்யக உபநிஷத் 3-7-23

ந அந்யதஹ  அஸ்தி மந்தா – அவரைக்காட்டிலும் வேறாக நினைப்பவர் இல்லை.

மனஸோ மனஹ – கேன உபநிஷத் 1-2

xxxx

பூர் — புவஹ – ஸ்வஸ்தருஹு – நாம எண் 967-

பொருள்

பூ லோகம் புவர்லோகம், ஸுவர் லோகம் என்ற மூன்று உலகத்தையும் வியாபிக்கும் ஸம்ஸார  விருட் வடிவினர். அல்லது

பூஹு , புவஹ , ஸுவஹ   என்ற வ்யாஹ்ருதி  மந்திரங்களால் உலகை வழி நடத்தி வைப்பவர்.

பட்ட பாஸ்கரர் எழுதிய வி.ச.  உரையில் கூறுவதாவது:பூ லோகம் புவர்லோகம், ஸுவர் லோகம் என்ற மூன்று உலகங்களிலும் உள்ள பிராணிகள் பழுத்த மரத்தை அடுத்துள்ள பறவைகள் ஜீவிக்கும்படி இருப்பவர்.

Agnau prastaa’hutih samyag aadityam upatisthate

Aadityaad jaayate vrstir vrster annam tatah prajaah

மனு ஸ்ம்ருதி சொல்வதாவது :

அக்னெள ப்ரஸ்தாஹுதிஹி  சம்யக் ஆதித்யம் உபதிஷ்டதே

ஆதித்யாத் ஜெயதே வ்ருஷ்டிர்   வ்ருஷ்டேர் அன்னம் ததா ப்ரஜாஹா

பூமியில் அக்கினியில் போடும் ஆகுதிகள் (பொருட்கள்) சூரியனை அடைகிறது; அவனது வெப்பத்தால் மழை உண்டாகிறது ; மழை மூலம் உணவுப் பொருட்கள் விளைகின்றன ; அவற்றை உண்டு மக்கள் வாழ்கிறார்கள் .

(இதே போல ஒரு ஸ்லோகம் பகவத் கீதையிலும் வருகிறது; அதாவது யாகத்தினால்தான் மழை உண்டாகி, தானியங்கள் உண்டாகி, மனிதன் உண்டாகிறான் ).

—subham—

Tags- மநு , மழை , ஸ்வயம்பூ , அன்னம், வி.ச., பட்ட பாஸ்கரர், கடைசி பகுதி, Part 33, Last Part , ஆதி சங்கரர், விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் –33

Leave a comment

Leave a comment