அவ்வையாரின் ஆத்திச்சூடியில் மருத்துவ அறிவுரைகள்- 3 (Post No.13,621)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,621

Date uploaded in London – 2 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

88. மனம் தடுமாறேல்.

88.DO NOT BE TROUBLED IN MIND

தற்காலத்தில் அதிகமான பேரைப் பாதிப்பது மன நோய்; தேர்வு முடிவுகள் வந்தவுடன் மன வலிமை இல்லாதோர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்; இதே போல வறுமை , வர்த்தகத்தில் தோல்வி, தேர்தலில் தங்கள் தலைவர் தோல்வி, காதலில் தோல்வி என்ற விஷயங்களும் மனிதர்களுக்கு மோசமான முடிவைக் கொடுக்கின்றன குறுக்கு வழியில், உடனே வெற்றி கிடைக்க வேண்டும் என்ற எண்ணமும் இதற்கு காரணம். பாரதியாரின் பாசிட்டிவ் எண்ணம் உள்ள பாடல்களை மாணவ மாணவியருக்கு பாடமாக வைக்க வேண்டும். தெய்வத்தின் மீது நம் பிக்கையைப்  பரப்ப வேண்டும்.

14. அன்னையை வேண்டுதல்

எண்ணிய முடிதல் வேண்டும்,

நல்லவே எண்ணல் வேண்டும்;

திண்ணிய நெஞ்சம் வேண்டும்,

தெறிந்தநல் லறிவு வேண்டும்;

பண்ணிய பாவ மெல்லாம்

பரிதி முன் பனியே போல,

நண்ணிய நின்முன் இங்கு

நசித்திடல் வேண்டும் அன்னாய்!- பாரதியார்

****

மனதில்  உறுதி வேண்டும்

      வாக்கினிலே இனிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்,

      நெருங்கின பொருள் கைப்படவேண்டும்;

கனவு மெய்ப்படவேண்டும்,

     கைவசமாவது விரைவில் வேண்டும்;

தனமும் இன்பமும் வேண்டும்,

     தரணியிலே பெருமை வேண்டும்;

கண் திறந்திட வேண்டும்,

     காரியத்தில் உறுதி வேண்டும்;

பெண் விடுதலை வேண்டும்,

    பெரிய கடவுள் காக்க வேண்டும்;

மண் பயனுற வேண்டும்.

    வானமிங்கு தென்பட வேண்டும்;

உண்மை நின்றிட வேண்டும்!

ஓம்,ஓம், ஓம்– பாரதியார்

****

91.மீதூண் விரும்பேல்.

91.BE NOT GLUTTONOUS

Do not eat excessive food

You are what you eat ! என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்

இதன் பொருள் : நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதுதான் நீங்கள்! அதாவது உங்கள் மன நிலையும் உடல் நிலையும்  நீங்கள் சாப்பிடுவதைப் பொறுத்தே அமையும்

அம்மா கையால் , அன்புமிக்க உறவினர் கையால் சாப்பிட்டால் நல்ல குணங்கள் பெருகும்; ஹோட்ட்டலில் சாப்பிட்டால் அங்கு சமைப்போர் , பரிமாறுவோரின் எண்ணங்கள் நம்மைப் பாதிக்கும். ராம கிருஷ்ண உபதேச மஞ்சரியில் அவர் ஒரு கதை சொல்கிறார்.

ஒரு சாது சந்நியாசிக்கு கொலைகார எண்ணங்கள் வரவே அவர் என்ன செய்தாலும் அது அகலவில்லை. பின்னர் குருவிடம் சென்று முறையிட்டவுடன், நீ என்ன சாப்பிட்டாய் , எங்கெங்கு  சாப்பிட்டாய்? என்று வினவுகிறார்; அவர் சாப்பிட்ட இடங்களில் ஒன்று வன் முறையில் இறங்குவோர் இடம் ; இனிமேல் அங்கு சாப்பிடாதே என்று அறிவுரை தந்தார் .காம, க்ரோத , லோப எண்ணங்களைத் தவிர்க்க , நல்லோர் கையால் சாப்பிட வேண்டும் ; அப்படிக் கெட்டவர் கையால் சாப்பிட நேர்ந்தால் மனத்தளவில் இறைவனுக்குப் படைத்துவிட்டு சாப்பிட வேண்டும் .

உடல் ரீதியான விளைவுகளை விளக்கவே தேவை இல்லை; சர்க்கரைச் சத்து, கொழுப்புச் சத்து உணவுகளைத் தவிர்த்தால் போதும்; அதாவது அளவுக்கு மீறக் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்ற பழமொழியை நாம் நினைவிற்கொள்ள வேண்டும் .

நேரம் இருந்தால் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சத்வ , ராஜஸ, தாமஸ உணவுகள் எவை என்று கொடுத்த பட்டியலையும் படியுங்கள் (இதே பிளாக்கில் கட்டுரைகள் உள )

****

நீதி வெண்பாவில் வரும் தமிழ் பாட்டு ஒன்று கூறுகிறது:

“ ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே!

இருபோது போகியே யென்ப—திரிபோது

ரோகியே நான்குபோ துண்பா னுடல் விட்டுப்

போகியே யென்று புகல் உண்பான் ”

(ஒருவேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் போகி

மூவேளை உண்பான் ரோகி  நான்கு வேளை உண்பான் போகியே போகி (ஆள் அவுட்!) என்பது இதன் பொருள்)..

யோகி போல உண்ணாவிட்டாலும் ரோகி அளவு உண்ணாதீர்கள் !

****

உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு – என்று கொன்றை வேந்தன் கூறுகிறது,

காரணம்? — பெண்கள் சமையல் அறையில் அதிகம் புழங்குவதால் ‘’ருசி பார்க்கும்’’ சாக்கில் அல்லது குழந்தைகளுக்கு ஊட்டும் சாக்கில் அதிகம் சாப்பீட்டுவிட்டு எப்போதும் ‘’கர்ப்பிணி போல’’ காட்சி அளித்தால் நன்றாக இராது.

****

திருமூலரும் திருமந்திரத்தில் நமக்கு உணவு பற்றி நல்ல அறிவுரைகளை வழங்குகிறார் :

அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை

பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்

உண்டி சுருங்கில் உபாயம் பலவுள

கண்டங் கறுத்த கபாலியு மாமே.– திருமந்திரம்

பொருள்

உடலுறவு (புணர்ச்சி) SEX குறைந்தால் , நமக்கு இறைவன் அளித்த மூச்சு எண்ணிக்கை மிகும். அதனால் உடம்புக்கு அழிவில்லை.

உணவு அளவிற் சிறிது குறைத்து உண்டால்,  மூச்சு மிகுதியாகத் தங்கும். அதனால் இன்பம் மிகும்

பொதுவாக மக்கட்கு உள்ளே போகும் மூச்சு பத்து விரல்; வெளியே போகும் மூச்சு  பன்னிரண்டு விரல்;. இம் முறை, முறையே நடக்கும்போது இருபத்துநான்கு விரல், ஓடும் போது நாற்பத்திரண்டு விரல், உண்ணும்போது பதினெட்டு விரல், உறங்கும்போது ஐம்பது விரல், உடலு றவின்போது அறுபது விரல், மூச்சு வெளிச்செல்லும். விரல் – அங்குலம்.;

செக்ஸ், கோபம்,முதலியன நமது உடல் வங்கியிலுள்ள மூச்சு என்னும் பணத்தை வேகமாகச் செலவிடும் ; இறைவன் நம்மை பூமிக்கு அனுப்பியபோது உனக்கு இத்தனை மூச்சுகள் என்று கணக்குப்போட்டு அனுப்பி இருப்பதாக திருமூலர் வேறு ஒரு பாடலில் கூறுகிறார் அதை விரைவாகச் செலவிட்டு எல்லோருக்கும் குட் பை சொல்லிவிட்டுப் போவதும், குறைவாகச் செலவிட்டு கொள்ளுப்பேரனையும் ஆசீர்வத்திது விட்டுப்போவதும் நம் கையில்தான் உள்ளது.

Continence Leads to God-hood

If the seminal seed thickens by sexual abstention

It shall never be destroyed;

If the body is lightened by austere discipline

Long shall the life be;

If food is eaten sparingly

Many the good that flow;

You may verily become

The Lord of Dark-Hued throat.—Tiru manthiram

To be continued……………………………………..

Tags- அவ்வையாரின் ஆத்திச்சூடி, மருத்துவ அறிவுரைகள், part 3, திருமூலர் , பாரதி, உண்டி சுருக்குதல், ஒருவேளை உண்பான், மனதில் உறுதி, ஒருபோது யோகியே

Leave a comment

Leave a comment