Post No. 13,755
Date uploaded in London – 7 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கோழி அடிக்கிறதற்குக் குறுந்தடி வேண்டுமா? உலகம் முழுவதும் ஒலிக்கும் தமிழ்ப் பழமொழிகள் -4
கோழி அடிக்கிறதற்குக் குறுந்தடி வேண்டுமா?
Is a club needed to kill a fowl?
கோழி அடிக்கிறதற்குக் குறுந்தடி வேண்டுமா? என்ற தமிழ்ப் பழமொழிக்கு இணையாக பல நாடுகளில் பழமொழிகள் உள்ளன
ஆங்கிலத்தில்
To break a butterfly upon a wheel .
Or
To kill a bird with ox butchering knife
என்று பிரபல சீன தத்துவ ஞானி கன்பூசியஸ் Confucius சொல்கிறார்
இது சீன ஜப்பானிய கொரியன் பழமொழிகள் லும் உள்ளது.
இதற்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.
சீன தத்துவ ஞானி கன்பூசியஸ் அவருடைய சீடர் ஷீ யூவைப் பார்த்துக் கேட்கிறார்
ஊ செங் என்னும் சிறிய நகரினை ஆள்வதற்கு உனக்கு எதற்கு இவ்வளவு இசை முதலி ய ஆட்ட பாட்டங்கள்?
ஒரு கோழிக்குஞ்சசை வெட்டுவதற்கு மாட்டை வெட்டும் வாள் தேவையா ?
உடனே ஷீ யூ சொன்னார்
சுவாமி , சங்கீதமும் சடங்குகளும் தெரிந்தால் அந்த மக்கள் அமைதியாகவும் நட்புறவுடனும் வாழ்வார்கள் என்று நீங்கள்தானே உபதேசம் செய்தீர்கள்? நீங்கள் சொன்னதைத்தான் நானும் செய்கிறேன்?
உடனே கன்பூசியஸ் சொன்னார்
நான் தமாஷாக அல்லவோ அதைச் சொன்னேன்.
****
இது ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன ஒரு கதையை நமக்கு நினைவு படுத்தும் .
ஒரு சன்யாசி செடி கொடிகள் நிறைந்த பகுதி வழியே சென்று கொண்டிருந்தார். ஆனால் ஊர் மக்கள் அந்தப்பக்கமே போக பயப்பட்டார்கள்; காரணத்தைக் கேட்டபோது அங்கு ஒரு கொடிய பாம்பு எல்லோரையும் விரட்டி அடிக்கிறது; மேலும் கடிக்கவும் வருகிறது என்றனர்.
துறவி அந்தப் பக்கம் போனபோதும் அதே கொடிய பாம்பு அவரை மிரட்டியது அவர் தபோ சக்தியால் அடக்கி நீ இனிமேல் யாரையும் கொத்தக் கூடாது; என்று உபதேசித்தார். பாம்பும் அவரது உபதேசத்தைக் கடைப்பிடித்து. சில மாதங்களுக்குப் பின்னர் அதே துறவி அந்தப் பக்கம் வருகையில் அந்தப் பாம்பினைப் பார்த்தார் . என்ன இப்படி நலிந்து மெலிந்து போனாய்? என்று குசலம் விசாரித்தார்.
சுவாமி நீங்கள் தானே யாரையும் கொத்தக் கூடாது என்றீர்கள்? நான் உங்கள் உபதேசத்தைத்தான் கடைப்பிடித்தேன் இந்த ஊர் மக்கள் நான் பேசாமல் இருப்பதைக் கண்டு என்னைக் கல்லால் அடித்துத் துன்புறுத்தினார்கள் அதனால்தான் தான் எனக்கு இந்த கதி.
உடனே சுவாமிகள் சொன்னார் :
உண்மைதான்; யாரையும் கடிக்காதே என்றுதான் சொன்னேன்
உன்னுடைய சுபாவமான சீற்றத்தால் அவர்களை வரவிடாமல் செய்திருக்கலாமே; நீ ஏன் அதைச் செய்யவில்லை? என்றார்.
எந்த உபதேசத்தையும் சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே நீதி
****
சூடு கண்ட பூனை
தெனாலிராமன் பூனை வளர்த்த கதை எல்லோருக்கும் தெரியும் ; கிருஷ்ணதேவ ராயர் வீட்டுக்கு ஒரு பூனையைக் கொடுத்து எலிகளை ஒழிக்க ஏற்பாடு செய்தார் ; தெனாலிராமனும் பூனையை வாங்கிக்கொண்டு அதற்குக்கொடுத்த பால் முழுவதையும் தானே குடித்து வந்தான். தனது வீட்டுப் பூனைக்கு ஒரு நாள் கொதிக்கக் கொதிக்க பாலைக் கொடுக்கவே அது பால் என்றாலே மிரண்டு ஓடும். அரசவை அதிகாரிகள் ஒவ்வொரு வீடாகப் பூனைகளை சோதித்த போது தெனாலி ராமன் பூனையைப் பார்த்து ஏன் இப்படி எலும்பும் தோலுமாக இருக்கிறது? என்று வினவினர். நான் என்ன செய்ய? என் பூனை பாலைக் கண்டால் ஓடிவிடுகிறது என்றான்
உடனே அதிகாரிகள் பாலைக் கொண்டு வரச் சொல்லி அதன் முன்னே வைத்தனர் அது ஒரே ஓட்டம் பிடித்தது
இதிலிருந்து இந்த பழமொழி வந்தது
இதற்கு இணையான சீன பழமொழி
A bird once wounded is afraid of a bow.
A bird wounded by an arrow will fall from a bang
ஒருமுறை அம்பினால் அடிபட்ட பறவை வில்லினைக் கண்டாலே பயப்படும் என்பதாகும் இதுவும் ஜப்பானிய கொரிய சீனப் பழமொழி களில் உள்ளது.
இது பற்றியும் ஒரு கதை இருக்கிறது
வில்லுக்கு விஜயன் என்று நாம் அர்ஜுனனைப் புகழவோம். இதே போல சீனாவில் வேய் மாகாணத்தில் வசித்த காங் லே என்பவன் வில்லாதி வீரன் . அவன் பலருடன் சுற்றுலா சென்றபொழுது , ஒரு அடிபட்ட காட்டு வாத்து ஆகாயத்தில் கஷ்டப்பட்டு பறந்து கொண்டிருந்தது .
உடனே காங் லே சொன்னான்: பாருங்கள்! ஒரு வேடிக்கை காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு வில்லினில் அம்பினைப் போடாமல் அதைச் சொடுக்கி, வில் ஒலியை மட்டும் ஏற்படுத்தினான் ; ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த வாத்து தொப்பெனக் கீழே விழுந்து செத்தது. அந்த ஒலியைக் கேட்டவுடன் அது அம்பினால் அடிபட்டதாக நினைந்து பயந்து செத்துவிட்டது .
நீதி – ஒருமுறை கசப்பான அனுபவம் ஏற்பட்டால் அது நமது மனநிலையை எப்போதும் பாதிக்கிறது.
****
கிணறு வெட்டித் தாகம் தீர்க்கலாமா?
Must one dig a well to quench his thirst?
or
Have not your cloak to make when it begins to rain
or
Do not wait till you are thirsty to dig a well
0r
A thirsty man digs a well.
கிணறு வெட்டித் தாகம் தீர்க்கலாமா என்ற பழமொழி எல்லா நாடுகளிலும் உள்ளது
இது பற்றிய சீனக் கதை இதோ –
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் டூக்கே ஜாவோகாங் என்ற மன்னன் , பல தவறுகளைச் செய்தான் . இதனால் லு மாகாண மக்களின் நம்பிக்கையை இழந்து அந்த இடத்தைவிட்டே ஓடிவிட்டான் கீ மாகாணத்தில் தங்கிவிட்டுக் கொஞ்சகாலம் கழித்து அமைச்சரிடம் கேட்டான்:
இப்போது நாட்டுக்குத் திரும்பி நல்லாட்சி நடத்தலாமென்று நினைக்கிறேன்; நீர் என்ன சொல்கிறீர்?
மந்திரி சொன்னார்
மன்னர் மன்னா ; காலம் கனியவில்லை; உமது பிழைகளால் பலர் வழி தவறி இறந்தார்கள் ; மேலும் பலர் நதிகளைக் கடக்கையில் ஆழம் தெரியால் அதில் இறங்கிச் செத்தார்கள்; நீர் சொல்லுவது, போர் துவங்கிய பின்னர் ஆயுதங்களை செய்ய உத்தரவிட்டது போல இருக்கிறது. தாகம் ஏற்பட்டவுடன் தண்ணீரைத்தேடி கிணறு வெட்டப் புறப்பட்டது போல இருக்கிறது.
அமைச்சரின் பதிலைக்க கேட்ட மன்னன் மெளனியாகிவிட்டான்
இதை பரமஹம்சரும் தனது உபதேசத்தில் பயன்படுத்தினார் .
மராத்தி மொழியில் இதை
தஹான லாகல்யாவரே விஹீர கனனே என்பர்
तहान लागल्यावर विहीर खणणें
–subham–
Tags- கோழி அடிக்க, குறுந்தடி , வேண்டுமா? உலகம் முழுவதும், தமிழ்ப் பழமொழிகள் 4, பழமொழி