சம்ஸ்க்ருத ராமாயணத்தை அகராதி துணையின்றி படித்த ஜெர்மானியர் (Post.13,756)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,756

Date uploaded in London – 7 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சம்ஸ்க்ருதத்தை லத்தீன், கிரேக்க மொழிகளுடன்

ஒப்பிட்டு  ஆராய்ந்த பிரான்ஸ் பாப் Franz Bopp 1791- 1867 .

சம்ஸ்க்ருத ராமாயணத்தை அகராதி

துணையின்றி படித்த ஜெர்மானியர்

முதலில் பிரான்ஸ் பாப் செய்த சாதனைகளை பார்ப்போம்

நிறைய ஜெர்மானிய சம்ஸ்க்ருத அம்ம்மா றிஞர்கள் அவரைப் புகழந்து அவர்தான் என் குரு என்று சொல்வதிலிருந்து அவரது செல்வாக்கினை அறிய முடிகிறது

இந்திய- ஐரோப்பிய மொழிக்குடும்ப மொழிகளின் இலக்கணத்தை ஒப்பிட்டு ஆராய்ந்த முதல் மனிதர் இவர்தான். இந்தியாவில் இருந்த வில்லியம் ஜோன்ஸ் போன்றோர் மேக்ல் ம்  போக்காக ஒற்றுமையாக் கையை காட்டினேன் ர் . ஆனால் பாப் ஆழமாகச் சென்று இலக்கணத்தை ஒரு சாப்பிட்டதால் அது மொழியியல் துறையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.. சம்ஸ்க்ருத நளோபாக்கியானத்தை எடிட் செய்து வெளியிட்டார்

கத்தோலிக்க தத்துவ அறிஞர்  கே ஜெ விண்டிஸ்மானிடம் கற்று வாழ்நாள் முழுதும் அவருடன் நட்பு பாராட்டினார்  அவர் மூலம்தான் கீழ்த்திசை மொழிகளின் மீது ஆர்வம் ஏற்பட்டது

பின்னர் பாரீஸ் நகருக்குச் சென்று  சில்வஸ்டர் டே சசியிடம் பாரசீக அராபிய மொழிகளைக் கற்றார்  இந்திய மொழிகளில் ஆர்வம் ஏற்பட்ட போது அவரது குருநாதர்  வின்டிஷ்மனுக்கு புகார் கடிதம் எழுதினார் யாருமே இந்திய மொழிகளைக் கற்பிப்பதும் இல்லை ; யாரும் அவைகளை படிப்பதும் இல்லை என்று.

அந்தக் காலத்தில் அதைக் கற்பிக்கும் பண்டிதர்கள் ஐரோப்பாவில் இல்லாததால் இந்தியாவில் வெளியான மொழிபெயர்ப்புகளைக் கொண்டு சம்ஸ்கிருதம் கறறார்கள்.

பின்னர் அவரே எழுதினார் “நான் சம்ஸ்கிருத அகராதியின் துணையில்லாமல் முழு ராமாயணத்தையும் படித்து முடித்துவிட்டேன்” 1819-ஆம் ஆண்டில் வில்சனின் சம்ஸ்க்ருத- ஆங்கில அகராதி வெளியானது ஆனால் அதன் விலை யானை விலை- குதிரை விலையாக இருந்தது.

பிறந்த தேதி –14-9-1791

இறந்த தேதி–23-10-1867

கல்வி கற்ற இடம் — Aschaffenburg

பிறந்த ஊர் -Mainz

வேலை –  பேராசிரியர் வேலை

பாப் ஒப்பிட்ட மொழிகள் – லத்தீன்சம்ஸ்க்ருதம்பாரசீகம்ஜெர்மன்கிரேக்கம் வினைச் சொற்களை ஆராய்ந்த அவர்  கால வரிசைப்படி ஆராய்ந்தார். இதை நூலாக வெளியிட்டபோது அவருக்கு வயது 25 தான்.

பவேரியா மன்னர் இவருக்கு நிதி உதவி கொடுத்து லண்டனுக்கு அனுப்பினார் பாரீஸ், லண்டன் நகர்களில் இருந்த நளோபாக்கியான சுவடிகளை ஆராய்ந்து நளோபாக்கியந்ததை வெளியிட்டார்.

காட்டிங்கன் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்க்டர் பட்டம் அளித்தது பின்னர் பெர்லின் சென்று அங்குள்ள சம்ஸ்க்ருத மொழி அறிஞர்களுடன் கலந்துரையாடினார். பெர்லினில் ஸம்ஸ்க்ருதத் துறை உருவானவுடன் அங்கு பேராசிரியாகப் பணியாற்றினார்; சாகும் வரை பெர்லின் நகரிலேயே இருந்தார் .

மேலும் பல ஐரோப்பிய மொழிகளை ஒப்பிட்டு அவர் உரையாற்றினார் பிலிப்பைன்ஸ்- மலேயன் மொழிகளை ஆராயும் அவரது திட்டம் நிறைவேறவில்லை  அவர் ஜெர்மன் மொழியில் எழுதிய விஷயங்கள் பின்னர் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டன .

–subham—

Tags– பிரான்ஸ் பாப், இலக்கண ஒப்பீடு , இந்திய -ஐரோப்பிய மொழிகள் , ஜெர்மன் அறிஞர்

Leave a comment

Leave a comment