ஜோதிடம்: தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்-13 (Post No.13,762)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,762

Date uploaded in London – 9 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஜோதிடம்:  பற்றிய நம்பிக்கையில் இரண்டாவது பகுதி

 நட்சத்திரங்களே !  உங்களை நான் பொய்யாக்குவேன்

–ரோமியோ ஜூலியட் வசனம்

****

என்னுடைய நட்சத்திரங்கள் இருண்டவானத்தைக் காட்டுகின்றன

ட்வெல்த் நைட் வசனம்

****

சுப நட்சத்திரத்தை நம்பி நான் இருக்கிறேன்

டெம்ப்ஸ்ட்  நாடகம்

****

அடக்க கடவுளே

தலைவிதி புஸ்தகத்தைப் படித்து

புரட்சிமிக்க எதிர்காலத்தை  அறியமுடிகிறதே

நாலாவது ஹென்றி நாடகம்

*****

என்ன அறிகுறி / சகுனம் வந்தாலும்

அதைத் தோற்கடிப்போம் .

ஹாம்லெட்

****

மேற்கூறிய வசனங்கள் ஒரு ‘சாம்பிள்’தான். இன்னும் அவர் சகுனங்கள் பற்றிச் சொல்லும் வசனங்களையும் தருகிறேன். இது இந்துக்களுக்குப் புரியும் அளவுக்கு வேறு எவருக்கும் புரியாது. ஏனெனில் ஷேக்ஸ்பியர் எழுதிய காலத்தில் ஐரோப்பா முழுதும் நமது நம்பிக்கைகள்   ஆழ வேரூன்றி இருந்தன. கிறிஸ்தவ மதம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தவுடன் இவற்றை அதிகம்   பிரசாரம் செய்யவில்லை. அது மட்டுமல்ல; யார் எல்லாம் இது பற்றிப்   பேசினார்களோ   அவர்களையெல்லாம் தீயில் எரித்து கொளுத்திவிட்டனர். பல லட்சம் பெண்களை இப்படி எரித்தனர். நமது நாட்டிலேயே கோவா மாநிலத்தில் போர்ச்சுகீசியர் செயின்ட் சேவியர் தலைமையில் இப்படி அட்டூழியம் செய்தனர்.

இன்றுவரை கிறிஸ்தவ மதத்துக்குக்குப் புறம்பாக விமர்சனம் எழுதினால் தன்னை மதிக்க மாட்டார்களே என்று விமர்சகர்களும் சுப நட்சத்திரம் என்பதைக்கூட விதி என்று மொழிபெயர்க்கின்றனர்.

இந்துக்களில் படிப்பு அறிவில்லாத கிராமத்தானுக்குக் கூட பிரம்மா எழுதிய தலைவிதிப்படி நாம் குறிப்பிட்ட ராசியில் பிறக்கிறோம் அதன்படி நம்முடைய வாழ்க்கை நடக்கும் என்பது தெரியும். திருவள்ளுவரும் இளங்கோவும் விதியை/ ஊழ்வினையை வலியுறு த்தியபோதும் மனிதன் முயற்சியினால் விதியை வெல்லலாம் என்று காட்டியுள்ளனர். கண்ணகி அப்படி தெய்வம் ஆனாள்.  மார்க்கண்டேயன் எமனை வென்றான்; அதை திருக்குறளுக்கு பழைய உரை எழுதிய உரைகார்களும் குறிப்பிட்டுள்ளனர். ஞானிகள் முன்னை விதியை முறியடித்ததை திமூலரும் ஆதி சங்கரரும் பாடலில் சொல்கின்றனர் . மாணிக்க வாசகரும் சிவபுராணம் பாடி முன்னை வினையைக் களைவதாகப் பாடுகிறார். இந்த நம்பிக்கை எல்லாம் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பா முழுதும் இருந்ததை ஷேக்சபி யார்  400 இடங்களில் கூறுகிறார் .இந்துக்கள் கோவிலுக்குப் போனாலும் வீட்டில் பூஜை நடத்தினாலும் பிறந்த நட்சத்திரத்தைச் சொன்னவுடன், அர்ச்சகரோ புரோகிதரோ பலத்த குரலில் சங்கல்பம் செய்து நம்மை இறைவனுக்கு அறிமுகப்படுத்தி நமக்காக பூஜை செய்கிறார். பிறந்த நட்சத்திரத்தின்படி நமது ஜாதகம் கணிக்கப்படுகிறது இவை  எல்லாம் இந்துக்களுக்கு அரிச்சுவடி. இதையெல்லாம் மறைக்கும் வகையில் இன்றைய ஆங்கில விமர்சகர்கள்  பூசி மெழுகி உரை எழுதுகின்றனர் ஆனால் சுப நட்சத்திரம், இருண்ட நட்சத்திரம் என்று அப்படியே மொழிபெயர்த்தால் அவர்கள் சாயம் வெளுத்துவிடுகிறது.

வள்ளுவர் குறளில் ,

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்.-620

முயற்சியின் மூலம் விதியை முறியடிக்கலாம் என்று கூறுகிறார் வள்ளுவர் ; இதை ரோமி ஜுலியட் வசனத்தில் காண்கிறோம்.

இது மார்க்கண்டேயன் கதை என்று பழைய உரைகாரர் சொல்கிறார்

நசிகேதன், சாவித்ரி, மார்க்கண்டேயன் ஆகியோர் தன் முயற்சியால் எமனை /சாவினை வென்றதைக் காண்கிறோம்

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும்.-1023

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்

பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்

சென்னியில் வைத்த சிவன் அருளாலன்றே

— திருமந்திரத்தில் திருமூலர்

  . தன்னுடைய குடியை உயர்த்த வருவோனுக்கு தெய்வமே வரிந்துக்கட்டிக்கொண்டு வந்து உதவும் என்றும் கூறுகிறார்.

தமிழில் உள்ள பழமொழிகள் ஒரு மனிதனைக் கிரகங்கள், குறிப்பாக சனிக்கிரகம், எப்படியெல்லாம் படுத்தும்  என்பதைக் காட்டுகின்றன.

12. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச் சனி, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்து ராஜா.

ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு என்றும் சொல்லுவர்.

எனக்கு அட்டமத்துச் சனி.

எல்லாருக்கும் சனி துரும்பு போல, எனக்குச் சனி மலைபோல.

ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன்  விடாது

And by my prescience find my zenith doth depend upon

A most auspicious star,

whose influence now I court not but omit, my fortunes

எனக்கு இப்போது அதிர்ஷ்ட காலம் . என் எதிரிகள் என்னை இந்தத் தீவுக்கு நாடு கடத்தியது என் சுப நட்சத்திரத்தைக் காட்டுகிறது என்ற டெம்ப்ஸ்ட் நாடக வசனம் நமக்கு சம்பந்தரின் கோளறு திருப்பதிகத்தை நினைவு படுத்தும் அப்பர் பெருமான் சமணர்களின் மந்திர தந்திரம் பற்றி எச்சரித்த பொது அவர் கோளறுபதிகம் பாடி கெட்ட நட்சத்திரங்களும் நன்மையே செய்யும் என்கிறார்

கோளறு திருப்பதிகம்  

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க எருது ஏறி ஏழை உடனே

பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்

ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடன் ஆய நாள்கள் அவைதாம்

அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

பொருள் விளக்கம் :

ஊமத்தை மலர்மாலை, கங்கை ஆகியனவற்றை முடிமேல் சூடி உமையம்மையாரோடு எருதேறி வந்து என் உளம் புகுந்து எழுந்தருளியிருத்தலால், அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பது, பத்து, பதினாறு, பதினெட்டு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவனவும் பிறவுமான நட்சத்திரங்கள் அன்போடு மிக நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும்

முதல் பாடலில் ஒன்பது கிரகங்களின் பெயரையும் சொல்லி அவைகளும் தீங்கு செய்யாது என்கிறார் சமபந்தர் அதே வரிசையில் இன்று ஆங்கிலேயர்களும் கிழமைகளை வைத்துள்ளனர் (SUNDAY TO  SATURDAY)

****Not a whit. We defy augury

Hamlet

Augury is a Tamil word borrowed by the European languages அறிகுறி/ சகுனம்; குறி சொல்லுதல்

ஹாம்லெட் நாடகத்தில் வரும் அறிகுறி என்பதே தமிழ்ச் சொல் அறிகுறியை அப்படி உச்சரிக்கின்றனர் நல்ல சகுனம் இன்பத்தை நாம் நல்ல அறிகுறிகள் தென்படுகின்றன என்று இன்றும் சொல்கிறோம்.

அடுத்த கட்டுரையில் சகுனங்கள் பற்றிய ஷேக்ஸ்பியர் வசனங்களைக் காண்போம்

*****

—Subham—

Tags-ஜோதிடம்: தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்-13, ஜோதிடம்:, நம்பிக்கை, இரண்டாவது பகுதி

Leave a comment

Leave a comment