மிஸ் லட்சுமிக்கு ( HEY, MISS LAKSHMI!) புரந்தரதாசர் கேள்வி (Post No.14,268)

Written by London Swaminathan

Post No. 14,268

Date uploaded in Sydney, Australia –  4 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

(புரந்தரதாசர் பற்றிய 6–வது கட்டுரை இது)

சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசுவாமி தீக்ஷிதர், சாமா சாஸ்திரிகள் ஆகிய மூவரும் ஆண்டவனைப் பாடிப் பரவிய அழகினை நாம் அறிவோம். புரந்தரதாசர் பிறப்பில் செட்டி; பணத்தில் கெட்டி; பட்டினத்தார் போல திடீர் ஞானோதயம் ஏற்பட்டு பணத்தைத் துறந்து இறைவனை நாடினார் ; பாடினார்.

ராமனை யமன் என்று வருணித்தார்; அவர் யார் யாருக்கு எமன் என்பதையும் விளக்கினார்.அதே போல இன்னும் ஒரு கீர்த்தனையை, செல்வி லெட்சுமியைப் பார்த்து, அழகிய பெண்ணே நீ யாரைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறாய் என்ற தொனியில் கேள்வி கேட்டு ஒரு பட்டியலே தருகிறார் ; கட்டாயம் லெட்சுமி திணறிப் போயிருப்பார்.

பாடலைப் படிக்கும் போதே சுவையாக இருக்கிறது; இதைப் பாடிக்கேட்டால் அமிர்தமாக இனிக்கும்; பக்திப் பரவசத்தோடு பாடினாலோ பெருமாளும் தாயாரும் மகிழ்ந்துபோய் நம்மிடம் வந்துவிடுவார்கள்.

பெருமாளின் பெருமையைச் சொல்வதிலும் எத்தனை வகை,  எத்தனை முறை இருக்கிறது என்பதைப் புரந்தரதாசர் காட்டுகிறார்.

இதோ அவரது கீர்த்தனை :

க்ஷீராப்தி கன்னிகே ஸ்ரீ மஹாலக்ஷ்மி

யாரிகே வதுவாகுவே – நீனு யாரிகே வதுவாகுவே

பாற்கடலில் உதித்த கன்னியே ஸ்ரீ மஹாலக்ஷ்மி

யாரை திருமணம் செய்துகொள்வாய் – நீயே..

சாரதி பந்தன ராமசந்திர மூர்த்திகோ

பரமாத்மா அனந்த பத்மனாபனிகோ

சரசிஜனாப ஸ்ரீ ஜனார்த்தன மூர்த்திகோ

உபய காவேரி ரங்க பட்டணத அரசகோ (யாரிகே)

(இலங்கைக்கு) பாலம் கட்டிய ஸ்ரீ ராமசந்திரனையா

பரமாத்மாவான அனந்த பத்மனாபனையா

நாபிக்கமலத்தில் தாமரை மலருடைய ஜனார்த்தனனையா

காவேரிக்கரையில் இருக்கும் ஸ்ரீரங்கத்தின் அரசனையா (யாரிகே)

செலுவ மூர்த்தி பேலூர சென்னிகராயனிகோ

கெலதி ஹேலு ஸ்ரீ உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண ராயனிகோ

இளெயளு பாண்டுரங்க விட்டல ராயனிகோ

நலினாக்‌ஷி ஹேளம்மா பதரி நாராயணனிகோ (யாரிகே)

அழகே வடிவான பேலூர் சென்னிகிருஷ்ணனையா

உன் நண்பன் கேட்கிறேன், உடுப்பி கிருஷ்ணனையா

அல்லது பாண்டுரங்க விட்டலனையா

தாமரை போன்ற கண்கள் உடையவளே, பத்ரி நாராயணனைய (யாரிகே)

மலயஜகந்தி பிந்து மாதவ ராயரிகோ

சுலப தேவரு புருஷோத்தமனிகோ

பலதாயக நித்ய மங்கள தாயககோ

செலுவ நாசதே ஹேளு ஸ்ரீ வேங்கடேசனிகோ (யாரிகே)

மலையிலிருந்து வரும் நறுமணத்தை கொண்ட பிந்து மாதவனையா

யாவரும் சுலபமாக தொடர்பு கொள்ளக்கூடிய புருஷோத்தமனையா

வரங்களை அருளும் நித்ய மங்களமானவனையா

வெட்கப்படாமல் சொல், ஸ்ரீ வேங்கடேசனையா (யாரிகே)

வாசவார்சித கஞ்சி வரதராஜனிகோ

ஆ ஸ்ரீமுஷ்ணதல்லி ஆதி வராகனிகோ

சேஷசாயியாத ஸ்ரீமன் நாராயணனிகோ

சாசிர நாமதொடய அழகிரீசகோ (யாரிகே)

இந்திரன் வழிபட்ட காஞ்சி வரதராஜனையா

அந்த ஸ்ரீமுஷ்ணத்தில் இருக்கும் ஆதி வராகனையா

நாகத்தின் மேல் படுத்திருக்கும் ஸ்ரீமன் நாராயணனையா

ஆயிரம் பெயர்களை உடைய அழகிய மலைகளில் வசிப்பவனையா? (யாரிகே)

சரணாகத ரக்‌ஷக சாரங்கபாணிகோ

வரகள நீடுவ ஸ்ரீநிவாசனிகோ

குரு குலாந்தகனாத ராஜகோபால மூர்த்திகோ

ஸ்திரவாகி புரந்தர விட்டல ராயனிகோ (யாரிகே)

சரணடைந்தவர்களை காப்பாற்றும் சாரங்கபாணியையா

வரங்களைக் கொடுக்கும் ஸ்ரீனிவாசனையா

குரு’ வம்சத்தை அழித்த ராஜகோபாலனையா

நிரந்தரமாக புரந்தர விட்டலனையா (யாரிகே)

பாடலும் மொழிபெயர்ப்பும் தாசர் சாங்ஸ் .காம் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது; நன்றி உரித்தாகுக.

—subham—

Tags– புரந்தரதாசர் , லெட்சுமி, மிஸ், கல்யாணம் ,திருமணம், க்ஷீராப்தி கன்னிகே ஸ்ரீ மஹாலக்ஷ்மி

Leave a comment

Leave a comment