டாக்டர் யார்? புலவர் யார்? அறிஞன் யார்? குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை -4 (Post.14,293)

Written by London Swaminathan

Post No. 14,293

Date uploaded in Sydney, Australia –  12 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

  குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை 4

 குமரேச சதகம்

  11. இப்படிப்பட்டவர் இவர்

ராயநெறி தவறாமல் உலகபரி பாலனம்

     நடத்துபவ னேயரசனாம்

ராசயோ சனைதெரிந் துறுதியா கியசெய்தி

     நவிலுமவ னேமந்திரி,

நேயமுட னேதன் சரீரத்தை எண்ணாத

     நிர்வாகி யேசூரனாம்,

நிலைபெறு மிலக்கண மிலக்கிய மறிந்துசொலும்

     நிபுணகவி யேகவிஞனாம்

ஆயதொரு வாகடம் தாதுவின் நிதானமும்

     அறியும்மதி யோன்வைத்தியன்,

அகம்இன்றி மெய்யுணர்ந் தைம்புல னொழித்துவிட்

     டவனேமெய் ஞானியெனலாம்

மாயவர் சகோதரி மனோன்மணிக் கன்பான

     வரபுத்ர வடிவேலவா

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரே சனே.

திருமாலின் தங்கையான உமையம்மைக்கு அன்புடைய நல்ல மகனே!,

வடிவேலேந்திய கையனே!, மயிலேறி……..குமரேசனே!, ராய

 அரச நெறி மாறாமல் உலகைக் காப்பாற்றுவோனே மன்னவ னாவான்,

அரசியல்சூழ்ச்சியறிந்து நன்மைதரும் பொருளைக் கூறுவோனே அமைச்சன்,

தன் உடல்மேல் பற்று வைக்காத தலைவனே வீரனாவான்,

நிலையான இலக்கண இலக்கிய முறையறிந்து கூறும் வல்லமையுள்ள கவியே கவியெனத் தக்கவன், – நன்மையைத் தரும் மருத்துவ நூல்களையும்

எழுவகைத் தாதுக்களின் நிலையையும் அறிந்த (அறிவால்) முதியவனே மருத்துவன்,

நானெனும் செருக்கின்றி உண்மையறிந்து ஐந்து

பொறிகளையும் அடக்கிவிட்டவனே உண்மை யறிஞன் எனப்படுவான்.

****

இந்துக்களின் கணக்கில் மாவீரன் யார்?

 மஹா வீரன் யார்? இந்தியாவில் இருவருக்குத்தான் மஹாவீர் என்று பெயர். ஒருவன் அநுமன். மற்றொருவர் சமண தீர்தங்கரர் மஹாவீரர்.

 யார் வீரன்? என்று மேலை நாட்டில் கேள்வி கேட்டால் ஏகே 47 துப்பாக்கியால் நூற்றுக் கணக்கான பெயர்களைச் சுட்டுத் தள்ளியோரின் பெயரைக் கூறுவார்கள். திரைப்படம் பார்க்கும் படிப்பறிவு இல்லாதவர்கள் தமிழ் இந்தி திரைப்பட கதாநாயகன் ,வில்லன்கள் பெயர்களைக் கூறுவார்கள். படித்திருந்து ஆங்கிலப் படம் பார்க்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இண்டியானா ஜோன்ஸ் நினைவுக்கு வரலாம். பயங்கரவாதிகள் என்று ஒரு நாடு முத்திரை குத்துவோரையும் அவருடைய கொள்கையில் நம்பிக்கை கொண்டோர் மாவீரன் என்று கொண்டாடுவார்கள். ஆனால் வியப்பிலும் வியப்பான  கொள்கை– இந்தியக் கொள்கை புலன்களை வென்றவனே மஹாவீரன்.

 ஒன்றாகக் காண்பதே காட்சி, புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்

   என்பது ஆன்றோர் வாக்கு. வள்ளுவனும்” பிறன் மனை நோக்காத பேராண்மை” என்று பெரும் வீரத்தைப் புகழ்கிறான்.

எப்படி துளசிதாசரின் ஹனுமான் சாலீஸா இந்தியர்களைத் தட்டி எழுப்புகிறதோ அதே போல மஹவீரரின் சிலையும் கொள்கைகளும் சிரவணபெளஹோலாவில் உள்ள பாஹுபலியின் சிலையும் நம்மை எல்லாம் புத்துணர்ச்சி பெற வைக்கிறது.

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு” ஆகியவற்றை அந்தச் சிலைகளில் காண முடிகிறது. புலன்களை வென்றதாலேயே மஹாவீரர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். இது பாரத நாட்டுக்கே உரிய ஒரு கொள்கை. உலகில் வேறு எங்கும் காணமுடியாதது.

“கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும், உரும் உடன்று எரியினும், ஊறு பல தோன்றினும், பெரு நிலம் கிளறினும், திரு நல உருவின் மாயா இயற்கைப் பாவை என்று கொல்லிப் பாவையை நற்றிணைப் புலவர் பரணர் வருணித்தது மஹாவீரர், பாஹுபலி போன்ற புனிதர்களுக்கும் பொருந்தும்.

அனுமன் ஜயந்தியும் மஹாவீர் ஜயந்தியும் அருகருகே ஏப்ரல் மாதத்தில் வருவதால் இரண்டையும் இணைத்தேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத்தாவி, 

அஞ்சிலே ஒன்று ஆறாக, ஆரியர்க்காக ஏகி 

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் 

அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான். 

xxxxx

ஒன்றாகக் காண்பதே காட்சி புலனைந்தும்

வென்றான்தன் வீரமே வீரம்-என்றானும்

சாவாமற் கற்பதே கல்வி தனைப்பிறர்

ஏவாமல் உண்பதே ஊண்—-ஔவையார்

“அனைத்தையும் இறைவனின் சொரூபம் என்றபடி ஒன்றாகக் காண்பதே மெய்க் காட்சியாகும். ஐம்புலன்களையும்அடக்கி வென்றவனுடைய வீரமே உண்மையான வீரமாகும். எக் காலத்தாயினும் சோம்பி மடிந்து போகாமல் உயிருள்ள வரைக்கும் அயராது கற்பதே கல்வியாகும். தன்மைப் பிறர் ஏவிப் பணிகொள்ளுகின்ற நிலைக்கு உட்படாமல், தன் உழைப்பினால் விளைவித்துப் பெற்றதனை உண்பதே சிறந்த உணவாகும்” என்பது பொருள்.

அமைச்கர்   பற்றி வள்ளுவர் கூறிய கருத்தையும் இங்கே காணலாம் .

****

முக்காலமும் உணர்ந்தோனே கவி என்று வேத நூல்கள் விளம்புகின்றன ; ரிக்வேத உஷனஸ் கவி இதற்கு முன்னுதாரணமானவர் ; பகவத் கீதையில் கிருஷ்ணனும் கவிகளுள் தான் உஷனஸ் என்று பகர்கிறார்

*****

மனு என்ன சொல்கிறார்? 

மூத்தவர் என்ற தகுதி நரைமுடியாலோ, செல்வத்தாலோ, பரம்பரையாலோ வருவதில்லை. இது ரிஷிகள் வகுத்த சட்டம்; வேதங்களையும் வேதத்தின் அங்கங்களையும் கற்றவனே நம்மில் உயர்ந்தோன் (2-154 மனு). 

பிராமணர்களில் மூத்தவன் வேதம் கற்றோன்;

க்ஷத்ரியர்களில் மூத்தவன், வீரம் மிக்கவன்;

வைஸ்யர்களில் மூத்தவன், அதிக தானியம் வைத்திருப்பவன்.

சூத்திரர்களில் மூத்தவன், வயதில் பெரியவன்! (மனு 2-155)

–SUBHAM—

TAGS– குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை 4, டாக்டர் , புலவர் , அறிஞன் யார்

Leave a comment

Leave a comment