Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும், இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால் மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!— அப்பர்.
****
கங்கைகொண்ட சோழபுரம் நடராஜர் சிலையின் புன்சிரிப்பினைக் காணக் கண் கோடி வேண்டும்!
கங்கை கொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும். 250 ஆண்டு களுக்கு பிற்கால சோழ பேரரசின் தலைநகரமாக விளங்கியது
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களிலும் இக்கோவில் பட்டியலிடப்பட்டுள்ளது.
பிரதான கோவில் கோபுரம் 55 மீ உயரம் கொண்டதாகவும் கம்பீரமானதாகவும் உள்ள கட்டிடம் ஆகும்.
****
சிவன் என்றால் சாந்தம்; ருத்ரன் என்றால் கோபம். நம் எல்லோருக்கும் இந்த இரண்டு குணங்களும் உண்டு . ஆனால் ஒரு வித்தியாசம் ; சிவன் கோபத்தோடு இருந்தபோதிலும் திரி புரங்களில் உள்ள அசுரர்களை அழிப்பதற்கு ஒரு சிரிப்புதான் சிரித்தார். அசுரர்களின் மூன்று கோட்டைகளும் அழிந்தன. .சிவன் சிரிப்பில் அசுரர் கோட்டைகள் அழிந்தன என்ற வரலாறு திருவதிகை தேவார விளக்கக் கதைகளில் வருகிறது
மேலும் திருஞானசம்பந்தர் பாடியருளிய திருமழபாடி பதிகத்திலும் வருகிறது
பாடல் எண் : 7
விண்ணில்ஆர் இமையவர் மெய்ம்மகிழ்ந்து ஏத்தவே
எண்இலார் முப்புரம் எரிஉண நகைசெய்தார்,
கண்ணினால் காமனைக் கனல்எழக் காய்ந்தஎம்
அண்ணலார் உறைவிடம் அணிமழ பாடியே.
பொழிப்புரை :சிவபெருமான் விண்ணுலகத்துத் தேவர்கள் மெய்ம்மகிழ்ந்து போற்றத் தம்மை வழிபட்டு உய்யும் எண்ணமில்லாத அசுரர்களின் முப்புரங்களைச் சிரித்து எரியுண்ணும்படி செய்தவர் . நெற்றிக்கண்ணைத் திறந்து நெருப்புப்பொறி பறக்க மன்மதனை எரித்த எம் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும் .
மேலும் ஒரு பாடலில் அப்பர் சுவாமிகள் கொவ்வைப் பழம்போல சிவந்த சிவனின் புன்சிரிப்பைப் பாடுகிறார் . இதை அப்படியே சிற்பத்தில் வடித்துள்ளார் ஒரு சிற்பி. அந்த ஒரு சிலையக் காண்பதற்காகவாவது கங்கை கொண்ட சோழபுரத்துக்குச் செல்லவேண்டும்.
இந்தச் சிலை கர்ப்பக்கிரகத்தில் இல்லை. வெளிப்புறச் சுவர்களில் உள்ள பல அழகான சிலைகளில் சிரிக்கும் நடராஜரும் ஒன்று . சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு தொல்பொருட்த் துறை இயக்குனர், உலகப் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் டாக்டர் இரா நாகசாமி ஏற்பாடு செய்த ஆயிரம் மைல் தூர இலவச வரலாற்றுப் பயண பஸ்ஸில் நான் ஒருவன் மட்டும் பத்திரிகையாளன்–(மதுரை தினமணி உதவி ஆசிரியர்) அப்போது டாக்டர் நாகசாமி அப்பர் பாடலை மேற்கோள்காட்டி எல்லா சிற்பங்களையும் எங்களுக்கு விளக்கினார். இன்றும் அது நினைவில் நிற்கிறது.
கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக்கும் எண்ணத்துடன் மாபெரும் நகரினை உருவாக்கினான் ராஜேந்திர சோழன். அவன் தந்தை ராஜராஜன் கட்டிய தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலைப்போல கட்ட எண்ணினான். ஆனால் முழுவெற்றி கிடைக்கவில்லை. இது இமிடேஷன் கோல்டுதான்; அசல் அபராஜிதத் தங்கம் இல்லை. மேலும் இப்போது ஐம்பது சதவிகிதம் பாழடைந்த நிலையில் உள்ளது தலைநகரச் சிறப்பு இல்லை. கர்நாடக ஹம்பி நகரம் போல சிறபங்களுக்கு மட்டுமே பிரசித்தம்.
கங்கை வரை படைகளை அனுப்பி புனித கங்கை நீரைக் கொண்டுவந்து விட்டுப் புனிதமாக்கியதால் கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயர் உருவானது போகும் வழியில் எதிர்த்தோரை அடக்கி வென்றான். அவன் கொண்டுவந்த கங்கை நீரை ஏரியில் விட்டு சோழ கங்கம் என்ற நீர்நிலையினையும் உருவாக்கினான் .
நான் 2025 மார்ச் 17-ஆம் தேதி சென்றபோது கர்ப்பக்கிரகத்தில் விளக்குகள் எரிந்தன. மாபெரும் சிவ லிங்கத்தினைத் தரிசித்தேன். அப்போதுதான் குருக்கள் வேறு ஒரு சந்நிதிக்குச் சென்று கொண்டிருந்தார். இது எனது மூன்றாவது விஜயம் என்பதால் வேகமாகப் புகைப்படங்களை மட்டும் எடுக்க வலம் வந்தேன். கல்லும் முள்ளும் கால்களைக் குத்தின. தொல்பொருட்த் துறைக் காவலர்கள் இல்லாவிடில் இது கேடிகளின் உறைவிடம் ஆகிவிடும்
கும்பகோணம்- சென்னை சாலையில் ஜயம் கொண்டம் ஊருக்கு அருகி உள்ளது சாலையில் செல்லும் எவரும் தவறவிட முடியாத மா பெரும் கோபுரம் எல்லோரையும் வரவேற்கும். பல இடங்களில் கல்வெட்டுகளையும் காணமுடிகிறது.
வெளிப்புற சுவரில் உள்ள ஒவ்வொரு சிலையினையும் ரசித்துப் பார்க்கலாம்; அவ்வளவு அழகு.
—subham—
Tags- காணக் கண் கோடி வேண்டும் , கங்கைகொண்ட சோழபுரம் , நடராஜர் புன்சிரிப்பு , அப்பர், சம்பந்தர் , தேவாரம் , டாக்டர் இரா நாகசாமி, ராஜேந்திர சோழன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
22-3-2025 மாலைமலரில் வெளியாகியுள்ள கட்டுரை!
சுற்றுலா இடங்கள்!
மகிழ்ச்சி அலைகள் வீசும் கோவா கடற்கரைகள்!
ச. நாகராஜன்
கோடையின் உக்கிரம் தாங்க முடியாத நிலையில் சற்று உடலும் மனமும் ஓய்வெடுக்க உல்லாசச் சுற்றுப் பயணம் மேற்கொள்வது அவசியமே!
கடற்கரையும் இருக்க வேண்டும்; நீர் வீழ்ச்சியும் வேண்டும்; பல சரித்திரப் பிரசித்தி பெற்ற கோட்டைகளையும் பார்க்க வேண்டும், தவறாமல் சுவாமி தரிசனமும் செய்ய வேண்டும் – ஒரு இடம் சொல்லுங்கள் என்றால் நம் கண் முன் பளிச்சென்று தோன்றுவது கோவா தான்!
துடிப்பும் உல்லாசமும் உள்ள கேளிக்கை நகரம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் கோவா ஒரு சொர்க்கம் தான்!
இந்தியாவின் மேற்குப் பக்க கடற்கரையாக அரபிக் கடலோரம் அமைந்துள்ளது கோவா.
மகராஷ்டிர மாநிலம் வடக்கிலும், கர்நாடக மாநிலம் தெற்கிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் கிழக்கிலும் அரபிக் கடல் மேற்கிலும் அமைந்திருக்க இந்தியாவின் 25வது மாநிலமாகத் திகழும் கோவாவிற்கு பஸ், ரயில், விமானம் மூலமாக எளிதில் பயணப்பட்டு அடையலாம்.
கோவாவின் தலை நகர் பஞ்சிம்.இது பங்களூரிலிருந்து 592 கிலோ மீட்டரிலும் மும்பையிலிருந்து 593 கிலோ மீட்டரிலும் அமைந்துள்ளது.
கோவா இரு பகுதிகளாக வட பகுதி என்றும் தென் பகுதி என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களை அவரவர் பட்ஜெட்டையும், விடுமுறை நாட்களையும் பொறுத்துத் திட்டமிட்டுப் பார்க்கலாம்.
முக்கியமான சில இடங்களை இங்கு பார்ப்போம்.
சுற்றுலா பயணிகள் முக்கியமாக வருவது இங்குள்ள பல கடற்கரைகளுக்காகத் தான்! சுமார் 77 மைல் நீளமுள்ள கடற்கரைப் பகுதி இங்கு உள்ளது.
சுமார் இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட அளவில் பயணிகள் இங்கு வருகின்றனர். இவற்றில் அயல்நாட்டிலிருந்து வருபவர்கள் சுமார் ஐந்து லட்சம் பேர்கள்.
கோல்வா பீச்: தெற்கு கோவாவில் உள்ள இந்தக் கடற்கரையில் நீர் விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளோர் செல்லலாம். ஜெட் ஸ்கீயிங், ஸ்பீட் போட்டிங் உள்ளிட்ட அனைத்தும் இங்கு மிகவும் பிரபலம். கூட்டமோ கூட்டம் என்று ஜே ஜே என்று இருக்கும் இந்த பீச் மனதிற்கு இதத்தைத் தரும் இடமாகும். வெண்மணல் கடற்கரையுடன் தென்னந்தோப்புகளும் உள்ள இது சால்செட் என்ற ஊரில் உள்ளது. இங்கு தேனிலவு கொண்டாட வருபவர்கள் அதிகம்.
பலோலம் பீச்: தெற்கு கோவாவில் உள்ள இந்த பிறை வடிவிலான பீச் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான இடம். இயற்கை எழிலை அமைதியாக ரசிக்கலாம்.
மோர்ஜிம் பீச்: இது வட கோவாவில் அமைந்துள்ளது. இங்கு ரஷிய பயணிகள் அதிகம் வருகின்றனர். ஆகவே இது குட்டி ரஷியா என அழைக்கப்படுகிறது. இது ஆலிவ் ரிட்லி என்ற ஆமைகள் வாழும் இடமும் ஆகும்.
பாகா பீச்: வட கோவாவில் உள்ள இந்த பீச்சிலும் நீர் விளையாட்டுகள் உள்ளன.
பஞ்சிம் பேருந்து நிலையத்திலிருந்து இது 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதைத் தொடர்ந்து உள்ள கடற்கரைகள் கண்டோலிம் மற்றும் கலங்குட் கடற்கரைகள்!
கண்டோலிம் பீச்: கடற்கரையில் படுத்துக் கொண்டு ஓய்வெடுக்க வசதியாக இங்கு படுக்கைகள் உள்ளன. கட்டணம் செலுத்தி இவற்றைப் பயன்படுத்தலாம். வாடகைக்குக் கிடைக்கும் இரு சக்கர வாகனங்களைஎ எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடற்கரையாகச் செல்லலாம்.
அயல்நாட்டினர் அதிகமாக வரும் கடற்கரை இது.
அஞ்சுனா பீச்: வட கோவில் உள்ள இந்த பீச் பார்டிகளுக்குப் புகழ் பெற்றது. இங்கு ஏராளமான கடைகளும் உணவகங்களும் உள்ளன. விதவிதமான பொருள்களை வாங்குவதற்கான ஷாப்பிங் இடம் இது தான்.
அகுவாடா கோட்டையும் கடற்கரையும்: போர்த்துகீசியரால் பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை இது. இங்குள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து கடற்கரையைப் பார்ப்பது கண் கொள்ளாக் காட்சியாகும்.
மோலெம் தேசியப் பூங்கா: இது ஒரு வனவிலங்கு சரணாலயம். வனப்பகுதியில் உள்ள விலங்குகளைப் பார்க்க சஃபாரியில் செல்லலாம்.
தூத்சாகர் நீர்வீழ்ச்சி: கோவா செல்பவர்கள் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான இடம் இது. தூத் சாகர் என்றால் பால் கடல் என்று பொருள். மண்டோவி ஆற்றின் மீது அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி 1017 அடி உயரம் கொண்டது. பகவான் மகாவீர் சரணாலயம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மொல்லம் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது இது. நான்கு அடுக்குகளைக் கொண்ட இந்த நீர்வீழ்ச்சி இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும்.
காவேலம் ஶ்ரீ சாந்த துர்க்கா கோவில்: வட கோவாவில் போண்டா நகருக்கு அருகில் காவேலம் கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் கோவில் பழமையான புராண வரலாறைக் கொண்டது. சிவனுக்கு விஷ்ணுவுக்கும் ஒரு காலத்தில் நடந்த போரில் துர்க்கா தேவி இருவரையும் ஒவ்வொரு கரத்தில் பிடித்து சமாதானத்தை ஏற்படுத்தினார் என்கிறது ஐதீக வரலாறு. இங்குள்ள பிரமிடு வடிவிலான முகப்பு மண்டபமும் சபா மண்டபமும் அழகிய வடிவமைப்புக் கொண்டவை. ஏராளமான பக்தர்கள் கூடும் இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும்.
சப்போரா கோட்டை மற்றும் கடற்கரை: வட கோவாவில் பர்தேசு பகுதியில் உள்ள சப்போரா கோட்டை சப்போரா நதியருகில் உயர்ந்து அமைந்துள்ள கோட்டையாகும். நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்தக் கோட்டையை அக்பர் தனது தளமாக ஆக்கிக் கொண்டு போர்த்துக்கீசியரை எதிர்த்தார். எல்லாத் திசைகளையும் பார்க்கக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது இது. கோட்டைக்கு அருகில் உள்ளது சப்போரா கடற்கரை.
அர்வேலம் குகைகள்: இந்தக் குகைகளில் பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் போது தங்கி இருந்ததால் இந்தக் குகைகள் பாண்டவர் குகைகள் என அழைக்கப்படுகின்றன. சின்குவேரிம் கடற்கரைக்கு அருகில் உள்ளது இது.
தேவாலயங்கள்: கோவாவில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. பாம் ஜீசஸ் பசிலிக்கா எனப்படும் குழந்தை ஏசு பசிலிக்கா கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயமாகும். உலகப் பாரம்பரியங்களுள் ஒன்றாகப் புகழ் பெற்றுள்ள இதில் தான் புனிதர் பிரான்ஸிஸ் சேவியரின் உடல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுக்கப்பட்டு வழிபாட்டிற்காக வைக்கப்படுகிறது.
கோவாவிற்குச் செல்ல விரும்பும் பயணிகள் தங்கள் திட்டத்தை முதலில் வகுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளா அல்லது இரு நாட்களா அல்லது பல நாட்கள் தங்கப் போகிறோமா என்று தீர்மானித்து விட்டால் பத்து இடங்களைப் பார்ப்பது முதல் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களைப் பார்க்கலாம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
On my way to Chennai from Kumbakonam Srivathsam Guest House, I visited the two famous places again on 17-3-2025. When Dr R Nagaswamy, Director of Archaeology, Tamil Nadu Government organised a FREE tour for teachers in 1977, I also joined the group as a journalist from Dinamani newspaper. He took us from Chidambaram to Trivandrum covering various archaeological monuments. At every place he gave us very valuable information. At Gangaikonda chozapuram he rightly said that the smiling Nataraja statue reflected Appar’s Tevaram where he praised the smile of Lord Shiva. But Appar lived long before Gangaikonda chozapuram temple was built. My feeling is that the sculptor must have remembered the Tevaram hymn and sculpted the most beautiful Nataraja (Shiva) .
The Tevaram in Tamil goes as
Kuniththa puruvamum Kovvai sevvayir punsirippum
Kovvai sevvayir punsirippum= smile in the red mouth wich is red like Kovai fruit.
That Nataraja is not the main deity. It is only on the outer wall of the main sanctum sanctorum. Along with the Nataraja statue many other gods are sculpted. When I went there one foreigner was taking pictures of all the sculptures. It is under the protection of the Tamil Nadu Archaeology department. So is closed in the evening.
I saw a huge Shiva linga with lighted lamps. The priest was going to another shrine in the complex. A big student group landed there while we spent half hour there.
Where is it?
Gangaikonda Cholapuram Temple is located in Jayankondam, Ariyalur district, It was built by Rajendra Choza, son of the great Raja raja choza. He imitated his father’s temple built in Thanjavur. He made this place as his capital city and anointed it with holy Ganaga water. To get the Ganges water he had to cross many kingdoms in the north. He conquered all who opposed him and so the city was called Gangaikonda Cholapuram meaning city of one who conquered the kings of Ganges plain. It is a 1000 year old monument; but his capital city lost lustre in course of time. Now only the monument remains in a poor condition unlike Thanjavur big temple. Here also we find a huge Nandhi (bull) and huge Shiva linga like Thanjavur. One may see his inscriptions on the stone walls. Beautiful sculptures protected by the department of archaeology attract tourists.
****
Smiling Nataraja
under Ganapathi sculpture, Tamil inscriptions can be seen.
london swaminathan in Gangaikondacholapuram
Parikkal Lakshmi Narasimha swamy Temple
Once again I wanted to refer to Dr R Nagaswamy’s archaeological tour. Though I lived in Madurai until the BBC World Service brought me to London on 1st January in 1987, I did not know the significance of Narasimmam village near Madurai. There is a beautiful Narasimga swamy cave temple with Vatteluthu Inscriptions of Pandyas clearly visible in the sanctum sanctorum. Dr R Nagaswamy read the whole inscription to our group and explained it. Later I went there several times. One can see Jain caves and inscriptions in the nearby rocks.
Another Narasimhar temple is Singaperumal koil. And the third Narasimha swamy temple I visited for the second time on 17-3-2025 is the Lakshmi Narasimha Swamy temple at Parikkal. When I went there two years ago, the renovation work was going on and so we did see only the Urchava Murti. Now I was fortunate to see the beautiful Mulavar , the main idol in the Sanctum sanctorum/Garabhagriha.
Being Swati Nakshtra/star day, there was a big crowd. The significance of the Temple is that there is a Hanuman idol in the Garbhagriha.
The temple is located near Ulundurpet . It is a small temple built 1000 years ago by a local king named Vasantaraja. People who follow Madhvacharya frequent this place.
Moolavar /main deity– Lakshminarasimha Swamy Thayar / goddess– Kanakvalli Vimanam/ top of the tower – Ashtakona Vimanam
Lord Hanuman In this temple, one can find 2 Anjaneya idols in the same sannidhi. A unique feature here is that, unlike other temples, Anjaneya gets the 2nd right of Thirumanjanam after Lord Narasimha (in other temples, Thaayar/goddess is the one who gets the Thirumanjanam after the Lord).
Since Lakshmi is embracing Lord Narasimha, the idol looks serene/peaceful. In most of the places , Narasimha is sculpted with angry face, who killed the demon king Hiranyakasipu.
temple door
Location:
Located around 25kms South West of Villupuram and 3kms west of the Kedilam Cross Road off the Chennai-Trichi National Highway.
—subham—
Tags- Gangaikonda chozapuram, cholapuram, Parikkal, Narasimha swamy temple, Dr R Nagaswamy, Rajendra Choza, Smiling Nataraja, Appar hymn,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கும்பகோணம் ஸ்ரீவத்சம் முதியோர் இல்லத்திலிருந்து சென்னைக்குத் திரும்புகையில் பரிக்கல் நரசிம்ம சுவாமி கோவிலுக்கு 17-3-2025 அன்று மீண்டும் சென்றேன். மூலவரின் திவ்ய தரிசனம் கிடைத்தது .
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் அருகில் உள்ள பரிக்கல் கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயில் இருக்கிறது . 22-2-2023 அன்று கும்பகோண வட்டார கோவில்கள் தரிசனத்தை முடித்துக்கொண்டு சென்னைக்குத் திரும்புகையில் பரிக்கல்லுக்குச் சென்றோம். ஆனால் சிறிது ஏமாற்றம். நான்கு ஆண்டுகளாக நடைபெறும் திருப்பணி வேலைகள் காரணமாக மூலவரை தரிசிக்கமுடியாதபடி பக்கத்துக் கொட்டகையிலுள்ள உற்சவரைத் தரிசித்தோம் , சென்ற ஆண்டு கும்பாபிஷேகம் நடந்ததால் இப்போது மூலவரின் திவ்ய தரிசனம் கிடைத்தது .
சுவாதி நட்சத்திர நாட்களில் நரசிம்மருக்கு விஷேச அபிஷேக ஆராதனைகளை நடைபெறும்; நாங்கள் சென்ற தினம் சுவாதி நட்சத்திர தினம் என்பதால் கூட்டம் அதிகம் இருந்தது இந்தக் கோவிலின் சிறப்பு சாந்த முகம் உடைய நரசிம்மர் ஆகும் .
நரசிம்மர் மஹிமை
இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுப் பழமை உடையது. மத்வ பீடத்தைச் சேர்ந்த வியாசராஜ சுவாமிகள் 738 இடங்களில் ஆஞ்சனேயர் கோவில் அமைக்க எண்ணி இந்தக் கிராமத்தையும் தேர்ந்தெடுத்தார் . ஆனால் பல தடைகள் ஏற்பட்டன. பின்னர், வசந்த ராஜா என்பவர் கோவில் கட்ட முற்பட்டபோதும் தடைகள் ஏற்பட்டதாம். அதற்குப்பின்னர் கனகவல்லி சமேத லட்சுமி நரசிம்ம மூர்த்தி ஸ்தாபிக்கப்பட்டது. தாயாரை அணைத்தவண்ணம் பெருமாள் இருப்பதால், நரசிம்மனின் உக்கிரம் தணிந்து , அருள் சுரக்கும் கோவில் இது .
இங்கு வருவோருக்குப் பதவி உயர்வு கிடைக்கும், திருமணத் தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் மன நோயால் பாதிக்கப்பட்டோரின் நோயும் நீங்கும்.
இங்கு மூலவருடன் ஆஞ்சனேயரும் உள்ளார். இங்கு உள்ள ஒரு ஆஞ்சாசனேயர் முன்னாள் நெல் தானியத்தைக் கொட்டி அதில் தங்கள் கோரிக்கைகளை எழுதும் நம்பைக்கையும் உளது .
அப்பரிசிகள் கிராமத்தின் ஊரின் பெயர் பற்றிய எனது கருத்து இதோ:
கிராம மக்கள் திரித்த ஊர்ப்பெயர் !
PRAHLADA, DEMON’S SON = PARAKALA= PARIKKAL
இரு முறை கோவில் கட்டுவதில் தடை ஏற்பட்டதற்கு பரகால என்ற அசுரனே காரணம் என்றும் அதனால் அவன் வேண்டிக்கொள்ள, ஊர்ப்பெயரை பெருமாள் பரகால என்றிருக்க அனுமத்தித்ததாகவும் தவறாக கதை கட்டப்பட்டிருக்கிறது. உண்மையில் நரசிம்மர் அழித்தது ஹிரண்ய கசிபு என்ற அசுரனை. அவர் அப்படிச் செய்ததற்கு காரணம். நாராயணன் பெயரை சொல்லிக்கொண்டிருந்த பிரஹ்லாதனைக் காப்பாற்றுவதற்காக என்பது எல்லோரும் அறிந்த கதை .
பிரஹலாதன் பெயர் மருவி பரகால என்றும் பரிக்கல் என்றும் மருவியது என்பதே பொருத்தம்!!
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று நரசிம்மரை நமக்குக் காட்டிய பிரஹலாதன் பெயரை கிராம மக்கள் தெளிவாக எழுதி ஒட்டவேண்டும் . பரகால அரக்கன் அல்ல; பக்தன்; அதாவது பிரகலாதன்!
கோவிலுக்கு வெளியே பூ, துளசிமாலை விற்கப்படுகின்றன. நாங்கள் துளசி மாலை வாங்க்கிச் சென்றோம். பார்ப்பதற்கு இகவும் லட்சணமான மூர்த்தி என்பதால் அனைவரும் தரிசிக்க வேண்டிய தலம் இது . கோவில் மிகச் சிறியது . கல்வெட்டுகளும் இருப்பதாக கேள்விப்பாட்டேன். ஆயினும் நாங்கள் அவற்றைக் காண முடியவில்லை .
temple door carvings at Parikkal Narasimhar temple
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
COLLECTED FROM NATIONAL NEWSPAPERS AND EDITED BY ME
ஞானமயம்வழங்கும்உலகஇந்துசெய்திமடல் 23-3-2025
செய்திகளைத்தொகுத்தவர்லண்டன்சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்து வழங்கும் செய்தி மடல்
அனைவருக்கும்வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்
இன்றுஞாயிற்றுக்கிழமைமார்ச் 23–ம்தேதி 2025-ம்ஆண்டு
****
முதலில் பகவத்கீதைசெய்தி
பகவத்கீதைபற்றிசுனிதாவில்லியம்ஸ்
9 மாதங்களாக விண்வெளியில் சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய நிலையில் அவரை பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் மன அமைதி பெறுவதற்காக விண்வெளிக்கு பகவத் கீதையையும் கொண்டு சென்றார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது
நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்தனர்.
அவர்களின் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக மீண்டும் பூமிக்கு திரும்புவதில் தாமதத்தை ஏற்படுத்தின.
இப்போது இவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் 17 மணிநேரம் பயணம் செய்து பூமிக்கு திரும்பியுள்ளனர்.
புளோரிடா கடற்பகுதியில் இறங்கிய விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹேக், அலெக்ஸாண்டர் கோர்புனோவ் ஆகிய 4 விண்வெளி வீரர்கள் வெளியே அழைத்துவரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே, நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு செல்லும் போது தன்னுடன் பகவத் கீதை மற்றும் சமோசாவை எடுத்துச் சென்றுள்ளார். அதோடு அவர் விநாயகர் சிலையையும் கொண்டு சென்றார் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து சுனிதா கூறுகையில், “பகவத் கீதை மற்றும் சமோசா இவை இரண்டுமே என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. பகவத் கீதையை எனது தந்தை எனக்கு பரிசளித்தார்.
பூமியில் உள்ள மனிதர்கள் போலவே விண்வெளியிலும் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்கு இது உதவுகிறது” என்றார்.
****
துளசி செடியை அவமதித்த ஹக்கீம் மீது வழக்கு
புனித துளசி செடி அவமதிப்பு: குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க கேரள ஐகோர்ட் உத்தரவு
கேரளாவில் துளசி மாடத்தை அவமதித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வீடியோ பதிவேற்றியவர் கைது;
குற்றத்தில் ஈடுபட்டவரை முதலில் கைது செய்ய காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
“துளசித்தாராவை (துளசி மாடம்) அவமதித்ததாக” குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிராக “சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க” கேரள உயர் நீதிமன்றம், மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. துளசித்தாரா என்பது புனித துளசி செடியைக் கொண்ட வீடுகளுக்கு முன்னால் உள்ள ஒரு உயர்ந்த மேடை ஆகும்.
ஆலப்புழாவைச் சேர்ந்த 32 வயது ஸ்ரீராஜ் ஆர்.ஏ.,வின் ஜாமீன் மனுவை பரிசீலித்த நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன் அமர்வு காவல்துறைக்கு இந்த உத்தரவை பிறப்பித்தது. அப்துல் ஹக்கீம் என்ற நபர் “துளசித்தாராவை அவமதிப்பது” போன்ற வீடியோவை பதிவேற்றிய குற்றச்சாட்டில் ஸ்ரீராஜ் கைது செய்யப்பட்டார்.
திருச்சூரில் உள்ள குருவாயூரில் உள்ள கோயில் காவல் நிலையத்தில் மதங்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் தொந்தரவு செய்ததாக ஸ்ரீராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது மற்றும் அப்துல் ஹக்கீம் இன்னும் சுதந்திரமாக இருக்கும்போது ராஜ் மீது போலீசார் நடவடிக்கை எடுத்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
“துளசித்தாரா இந்து மதத்தைப் பொறுத்தவரை ஒரு புனிதமான இடம். மேற்கண்ட அப்துல் ஹக்கீம் தனது முடிகளைப் பறித்து ‘துளசித்தாரா’வில் வைப்பதை வீடியோவில் காணலாம். இது நிச்சயமாக இந்து மதங்களின் உணர்வுகளைப் புண்படுத்தும். அப்துல் ஹக்கீம் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிகிறது. அப்துல் ஹக்கீம் குருவாயூர் கோயில் வளாகத்தில் உள்ள ஒரு ஹோட்டலின் உரிமையாளர் என்று தெரிகிறது,” என்று நீதிமன்றம் கூறியது.
மேலும், “இப்போது கூட அந்த ஹோட்டல் செயல்பட்டு வருகிறது,. அத்தகைய நபர் காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யாமல் விடுவிக்கப்படுகிறார், மேலும் மனுதாரர் இங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்” என்று நீதிமன்றம் கூறியது.
அப்துல் ஹக்கீம் ஒரு மன உளைச்சலுக்கு ஆளான மனிதர் என்று அரசு தரப்பு வாதிட்டது, ஆனால் நீதிமன்றம் அந்த வாதத்தை நிராகரித்தது, அவர் எப்படி தொடர்ந்து கோவிலின் வளாகத்திற்கு வெளியே செயல்பட முடியும் என்று கேள்வி எழுப்பியது. “அவர் ஒரு மனநோயாளி என்றால், அவர் எப்படி வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார் என்பதும் புலனாய்வு அதிகாரியால் விசாரிக்கப்பட வேண்டிய விஷயம்” என்று நீதிமன்றம் கூறியது.
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பிற மதத்தை சேர்ந்தவர்கள் பணியில் இருந்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
தனது பேரனின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலுக்குச் சென்ற முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தரிசனத்துக்குப் பிறகு தரிகொண்டாவில் உள்ள வெங்கமாம்பா அன்னதான விடுதியில் ஒரு நாள் பிரசாதம் விநியோகத்துக்காக ரூ. 44 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். மேலும், குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பக்தர்களுக்கு பிரசாதம் பரிமாறினார்.
நாட்டின் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோவில்கள் கட்டப்படும். வெளிநாடுகளிலும் வெங்கடேஸ்வர சுவாமியின் கோவில்கள் நிறுவப்பட வேண்டும்என பல பக்தர்கள் விரும்புகிறார்கள் என்று பத்திரிகையாளருடன் பேசுகையில் தெரிவித்தார்
ஏழு மலை பகுதிக்கு அருகில் வணிகமயமாக்கல் கூடாது. இந்தப் பகுதியை ஒட்டி மும்தாஜ் ஹோட்டலுக்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டது. 35.32 ஏக்கர் நிலப்பரப்பில் கட்ட திட்டமிடப்பட்ட ஹோட்டலுக்கான ஒப்புதலை ரத்து செய்ய அரசாங்கம் இப்போது முடிவு செய்துள்ளது. ஹோட்டல் நிர்வாகம் சைவ உணவு மட்டுமே வழங்க முன்மொழிந்திருந்தாலும், இந்தப் பகுதியில் எந்தவொரு தனி நபருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
24 கிளேமோர் கண்ணிவெடிகளால் நான் குறிவைக்கப்பட்டேன். அத்தகைய தாக்குதலில் இருந்து தப்பிப்பது சாத்தியமற்றது. ஆனால், நான் வெங்கடேஸ்வரரின் தெய்வீக அருளால் மட்டுமே உயிர் பிழைத்தேன். இவ்வளவு பெரிய குண்டுவெடிப்பில் இருந்து நான் தப்பித்தேன் என்பது இறைவனின் மகத்தான சக்தியை நிரூபிக்கிறது என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார் .
*****
ஜெகநாதர் ரத யாத்திரை விவகாரம்: இஸ்கான்- பூரி கோவில் நிர்வாகம் பேச்சுவார்த்தை
ஒடிசாவின் பூரி நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜெகநாதர் ரத யாத்திரை உலக பிரசித்தி பெற்றது. இந்த ரத யாத்திரையானது இந்து நாட்காட்டியின் ஆஷாட மாதத்தில் வேத வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட நாளில் நடத்தப்படும். பூரியில் கடந்த ஆண்டு ஜூலை 7-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை ரத யாத்திரை நடைபெற்றது. பூரி நகரில்ரத யாத்திரை நடைபெறும் போது நாட்டின் பல்வேறு இடங்களிலும் ரத யாத்திரை நடத்தப்படும். இஸ்கான் அமைப்பு சார்பில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இந்த காலகட்டத்தில் ஜெகநாதர் ரத யாத்திரை நடத்தப்படும்.
வெளிநாடுகளில் இஸ்கான் நடத்தும் ஜெகநாதர் ரதயாத்திரையானது, பூரி ரத யாத்திரை மரபுகளில் இருந்து விலகி, வேதப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட நாள் அல்லாமல் வேறுநாட்களில் நடத்தப்படுகிறது. இந்து இந்துக்களின் மத உணர்வை காயப்படுத்துவதாக பூரி கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் கவலை தெரிவித்தனர். கடந்த ஆண்டு மெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நவம்பர் 9-ம் தேதி நடத்தவிருந்த ரத யாத்திரை, பக்தர்களின் எதிர்ப்பு மற்றும் பூரி மன்னரின் எதிர்ப்பைத் தொடர்ந்து கைவிடப்பட்டத.
இந்த விவகாரத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்தி, மரபுகளின் படி ஒரே நாளில் ரத யாத்திரையை நடத்துவது தொடர்பாக இஸ்கான் அமைப்புடன் பூரி ஜெகநாதர் கோவில் நிர்வாகம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. பூரி மன்னர் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் ஜெகநாதர் கோவில் நிர்வாகிகள் மற்றும் இஸ்கான் பிரதிநிதிகள் பங்கேற்றனர். காலந்தவறி ரத யாத்திரையை நடத்துவது, கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளை காயப்படுத்துவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது .
இதுபற்றி ஸ்ரீ ஜெகநாதர் கோவில் நிர்வாகத்தின் தலைமை நிர்வாகி அரவிந்த பதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இன்றைய சந்திப்பு சுமூகமாக நடைபெற்றது.எங்கள் கவலைகளை இஸ்கான் பிரதிநிதிகளிடம் தெரிவித்தோம். மேலும் பூரியில் நடத்தப்படும் ரத யாத்திரை அட்டவணைப்படி உலகம் முழுவதும் நடத்தும்படி கேட்டுக் கொண்டோம் என்று அரவிந்த பதி சொன்னார்.
*****
அறநிலையத்துறை அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறையில், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் கோவில் இணை ஆணையர்கள் உட்பட, ஐந்து பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விபரம்:
ஹிந்து சமய அறநிலைய துறையில், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் கோவில் இணை ஆணையர்கள் உட்பட, ஐந்து பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கஜினி முகமதுவின் உறவினர் சையது சாலார் மசூத் காஜி விழாவுக்கு தடை
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்துக் கோவில்களை சூறையாடி விக்கிரகக்ங்களை உடைத்து தங்கத்தையும் ரத்தினைக் கற்களையும் கஜினி நகருக்கு எடுத்துச் சென்றவன் கஜினி முகமது .
உத்தரப்பிரத்தேசத்தில் உள்ள சம்பலில் ‘நேஜா’ எனும் பெயரில் ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஒரு விழா நடத்துகின்றனர். இந்த விழாவானது சையது சாலார் மசூத் காஜி என்பவர் பெயரில் கடந்த 47 ஆண்டுகளாக நடக்கிறது. ஆனால், இந்த ஆண்டு மார்ச் 25-ல் தொடங்க இருந்த விழாவுக்கு சம்பல் மாவட்ட காவல் துறை அனுமதி அளிக்க மறுத்துள்ளது. இதற்கு நம் நாட்டின் மீது படையெடுத்தவர்களையும், கொள்ளையடித்தவர்களையும் கொண்டாட தேவையில்லை” என்று காரணம் கூறியுள்ளது.
கஜ்னாவியில் இருந்து இந்தியாவுக்கு படையெடுத்து வந்த முஸ்லிம் மன்னர் முகமது கஜினியின் சகோதரி மகன்தான் சாலார் மசூத் காஜி. கஜினியின் படை தளபதியாகவும் இருந்தார். கடந்த 1206-ம் ஆண்டு சோம்நாத் மீது படையெடுத்து கஜினி முகமது கொள்ளையடித்ததாக வரலாற்று பதிவுகள் உள்ளன. அப்போது கஜினியுடன் அவரது மருமகன் சாலார் மசூதும் இருந்துள்ளார்.
பிறகு ஒரு தனிப்படையுடன் தற்போதைய உ.பி.க்கும் சாலார் மசூத் வந்தார். சம்பலில் ஆட்சி செய்த ராஜபுதன மன்னனை கொன்றார். இந்த வெற்றியின் நினைவாகவே அவரது பெயரில் சம்பலிலும், அருகிலுள்ள முராதாபாத் மற்றும் சஹரான்பூரிலும் நேஜா விழா நடத்தப்படுகிறது. பிறகு சாலார் மசூத் நேபாள எல்லையில் உள்ள பைரைச்சிற்கும் சென்றார்.
இன்றைய உத்தரப்பிரத்தேசத்தில் உள்ள பைரைச்சில் அப்போது குறுநில மன்னர் சுஹல்தேவ் ஆட்சி இருந்தது. தம்முடன் மேலும் 21 குறுநில மன்னர்களின் படைகளை சேர்த்து சாலார் மசூதை எதிர்கொண்டார் சுஹல்தேவ். கடந்த 1034-ல் நிகழ்ந்த போரில் சுஹல் தேவ் படையால் சாலார் மசூத் கொல்லப்பட்டார். அப்போது பைரைச்சிலேயே சாலார் மசூத் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த கல்லறை மீது 1250-ல் துக்ளக் வம்சத்தின் நசிரூதீன் மகமூத், தர்கா கட்டினார். தற்போது, முஸ்லிம்கள் இடையே பிரபலமான சாலார் மசூத் தர்காவுக்கு ஆண்டுதோறும் உருஸ் எனும் சந்தனக்கூடு விழா நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கு நிரந்தர தடைவிதிக்க கோரி இந்து அமைப்பினர் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
*****
R S S ஆர்எஸ்எஸ்-ன் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டம் தொடக்கம்!
பெங்களூருவில் ஆர்எஸ்எஸ்- என்னும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டத்தை அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தொடங்கி வைத்தார்.
பெங்களூரு சொன்னேனஹல்லியில் உள்ள ஜன சேவா வித்யா கேந்திரத்தில், மார்ச் 23ம் தேதி வரை ஆர்எஸ்எஸ்-ன் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். முன்னதாக, விழா மேடைக்கு வந்த அவர், பாரத மாதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே முன்னிலையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரத்து 450 பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். 3 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில், ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை அறிவிப்பார்கள் .
இந்த ஆண்டு ஆர் எஸ் ஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது
உலகிலேயே மிகப்பெரிய தொண்டர் அமைப்பு ஆர் எஸ் எஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்த செய்தி மடல்
அடுத்த ஒளிபரப்பு
மார்ச் 30 –ஆம் தேதி லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும்,
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது ஜெய்பூர் நகரில் உள்ள காலே ஹனுமான்ஜி மந்திராகும்
இது ஜெய்பூர் ரயில் நிலையத்திலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
இந்த அதிசயமான ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அற்புதமானதொரு ஆன்மீக அனுபவத்தை அடைகின்றனர்.
இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
இந்தக் கோவிலைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.
ஹனுமார் சூரிய பகவானிடம் அனைத்துக் கலைகளையும் கற்ற பின் அவருக்கு குரு தக்ஷிணை தர விழைந்தார்.
சூரிய பகவான் ஹனுமானிடம் தனது புத்திரரான சனீஸ்வரனைத் தன்னிடம் அழைத்து வருமாறு கூறி அதுவே அவர் தனக்குத் தரும் குரு தக்ஷிணையாகும் என்றார்.
தானாக சனீஸ்வரன் தன்னிடம் வருவதில்லை என்றும் தான் அழைத்தாலும் அவர் வருவதில்லை என்றும் சூரிய பகவான் குறிப்பிட்டு ஆகவே எப்படியாவது சனீஸ்வரனைத் தன்னிடம் அழைத்து வருமாறு ஹனுமானிடம் கூறினார்.
ஹனுமார் சனீஸ்வரனைத் தேடிப் போனார். ஆனால் அவரைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. ஒருவழியாக அவரைக் கண்டுபிடித்து அவரை சூரிய பகவானிடம் அழைத்துப் போகத் தான் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
ஹனுமான் தனது தந்தையான சூரியனைக் குருவாகக் கொண்டு அவரிடம் வைத்திருக்கும் அசைக்க முடியாத பக்தியைக் கண்டு சனீஸ்வரன் வியந்தார்.
சூரியனைப் பார்க்க வருவதாக ஒப்புக் கொண்ட சனீஸ்வரன் மனம் மிக மகிழ்ந்தார். . தன்னை வழிபடுவோர் ஹனுமானை வழிப்பட்டாலொழிய தனது அருளைப் பெற முடியாது என்று ஒரு நிபந்தனையைக் கூறிய அவர் தனது கறுப்பு நிறத்தையும் ஹனுமானுக்கு வழங்கினார்.
அந்த கறுப்பு நிறத்தைப் பெற்றுக் கொண்ட ஹனுமான் கறுப்பு நிறமானார்.
காலே ஹனுமான் என்றால் கறுப்பு ஹனுமான் என்று பொருள். ஆகவே இங்கு கோவில் கொண்டுள்ள ஹனுமானை காலே ஹனுமான் என்று அனைவரும் துதித்து வழிபடுகின்றனர்.
எப்போதும் பொதுவாக ஹனுமான் எல்லாக் கோவில்களிலும் ஆரஞ்சு வண்ணத்திலோ அல்லது சிவப்பு வண்ணத்திலோ தான் காட்சி அளிப்பார். இங்கு மட்டும் கறுப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறார்.
இந்தக் கோவிலில் உள்ள தூண்கள் புஷ்ய நட்சத்திரத்திற்கு இணங்கக் கட்டப்பட்டுள்ளன.
கோவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கச் மூன்று திசைகளைச் சுற்றிலும் மலைகள் சூழ்ந்துள்ளன.
முகலாயர் மற்றும் ராஜ்புத்ர கட்டிடக் கலையின் படி இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான கோவில் அமைப்பில் ஒரு சிறிய கர்ப க்ருஹத்தில் ஒரே கல்லால் அமைந்துள்ள ஹனுமானின் விக்ரஹம் உள்ளது. இங்கு விநாயகர், ஶ்ரீ ராமர், சிவன், துர்க்கை ஆகியோரின் சிலைகளும் உள்ளன.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கல்கத்தாவிலிருந்து வந்த கட்டிடக் கலை நிபுணர்கள் இந்தக் கோவிலை பெரிதாக்கினர்.
கோவிலைச் சுற்றி பெரிய தோட்டங்களும், விருந்தினர் விடுதிகளும் உள்ளன.
ஒரே சமயத்தில் 5000 பக்தர்கள் உணவருந்தும் விதத்தில் பிரம்மாண்டமான உணவருந்தும் கூடமும், பெரிய சமையல் அறையும் இங்கு உள்ளன.
கண் திருஷ்டியினால் பாதிக்கப்பட்டவர்களும், கண் திருஷ்டி ஏற்படக் கூடாது என்று நினைக்கும் பக்தர்களும் இந்தக் கோவிலுக்கு வருகை புரிகின்றனர். அனைத்து வியாதிகளையும் போக்குபவராக இந்த ஹனுமான் இருப்பதாக இவரை இங்கு வழிபடுபவர்கள் கூறுகின்றனர்.
சனி தோஷம் நீங்கவும், திருமணத்தடை நீங்கவும் தொழிலில் மேன்மை பெறவும், மனோவியாதிகள் நீங்கி அமைதியான வாழ்க்கையைப் பெறவும் ஹனுமானை வழிபட வேண்டும் என்பது முன்னோர்களின் வாக்கு.
ஹனுமத் ஜெயந்தி தினத்தில் இங்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரளாகக் கூடுகின்றனர்.
சாமானியன் முதல் உயர் பதவி வகிப்பவர் வரை ஹனுமனை வழிபட்டு அதனால் தாங்கள் பெற்ற பயன்களை கூறுவதால் ஹனுமனின் புகழ் பெருகிக் கொண்டே இருக்கிறது
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா தனது பையில் அனுமனது சிலையைக் கொண்டு செல்வதை வெளிப்படையாக ஒரு பேட்டியில் கூறி இருப்பது அனைவரும் அறிந்த உண்மையே.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் காலே ஹனுமான் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கல்கிஆன்லைன் 6-3-25 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை!
மாற்று மருத்துவம்!
மலர் மருத்துவம் தரும் 38 மலர் மருந்துகள்!
ச. நாகராஜன்
இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் அருகே உள்ள மோஸ்லி (Mosely)
என்ற கிராமத்தில் மலர் மருத்துவம் என்னும் புது சிகிச்சை முறையைக் கண்டறிந்த டாக்டர் எட்வர்ட் பாச் (Dr Edward Bach) பிறந்தார்.
(பிறப்பு 24-9-1884 மறைவு 27-11-1936)
கேம்பிரிட்ஜில் படித்து பப்ளிக் ஹெல்த்தில் ஒரு டிப்ளமாவை அவர் பெற்றார்.
பின்னர் லண்டனில் யுனிவர்ஸிடி காலேஜ் ஹாஸ்பிடலில் ஹவுஸ் சர்ஜனாக வேலை பார்க்க ஆரம்பித்தார். நேஷனல் டெம்பரன்ஸ் ஹாஸ்பிடலில் 21 வருடம் வேலை பார்த்து நல்ல அனுபவத்தைப் பெற்றார் அவர்.
டாக்டர்கள் வியாதிகளை இனம் கண்டு குணப்படுத்தும் விதத்தில் அவர் அதிருப்தி கொண்டார். நோயாளிகள் கஷ்டப்படுவதைப் பார்த்து அவர் வருத்தமுற்றார்.
தனது 43வது வயதில் தனது மருத்துவ பிராக்டீஸை அவர் விட்டு விட்டார். தாவர வகைகளை ஆராய ஆரம்பித்தார். 1932 வாக்கில் மலர்களை அடிப்படையாகக் கொண்டு 12 மருந்துகளை அவர் கண்டுபிடித்தார். அடுத்து 1933ல் இன்னுமொரு ஏழு மருந்துகளை அவர் உருவாக்கினார்.
1934ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட்ஷைரில் உள்ள மவுண்ட் வெர்னானுக்கு அவர் இடம் பெயர்ந்தார். அங்குள்ள தோட்டம் மற்றும் இதர பகுதிகளிலும் அவர் அலைந்து திரிந்து தன் ஆய்வை மேற்கொண்டு இன்னும் 19 மருந்துகளைக் கண்டுபிடித்தார். தன்னிடம் வருவோருக்கு மலர் மருந்துகளை அவர் தர ஆரம்பித்தார்.
பத்திரிகைகளில் அவரது மலர் மருந்துகளைப் பற்றிய செய்திகள் வரவே பொதுமக்கள் திரளாக அவரை நாடி வந்தனர். ஆனால் ஜெனரல் மெடிகல் கவுன்சில் அவரது மலர் மருத்துவ விளம்பரங்ளை அங்கீகரிக்கவில்லை. என்றாலும் தனது மலர் மருத்துவ முறைகளை அவர் தொடர்ந்து பரப்பினார். 1938ம் ஆண்டு மிக அமைதியாக தன் உயிரை நீத்தார்.
அவர் கண்டுபிடித்த மருந்துகள் மொத்தம் 38.
அக்ரிமனி, ஆஸ்பென், பீச், செண்டாரை, செராட்டோ, செஸ்ட்நட் ப்ளம், செஸ்ட்நட்பட், சிக்கரி, க்ளெமடிஸ், க்ராப் ஆப்பிள், எல்ம். ஜென்ஷன், கார்ஸ், ஹீதர், ஹால்லி, ஹனிசக்கிள், ஹார்ன்பீம், இம்பேஷன்ஸ், லார்ச், மிமுலஸ், மஸ்டர்ட், ஓக், ஆலிவ், பைன், ரெட் செஸ்ட்நட், ராக் ரோஸ், ராக் வாட்டர், செலெராந்தஸ், ஸ்டார் ஆஃப் பெத்லஹேம், ஸ்வீட் செஸ்ட்நட், வெர்வெய்ன், வைன், வால்நட், ஒய்ட் செஸ்ட்நட், வைல்ட் ஓட், வைல்ட் ரோஸ், வில்லோ ஆகிய இந்த 38 மலர் மருந்துகளே அனைத்து வியாதிகளையும் குணப்படுத்துகின்றன.
மலர் மருந்துகளின் விலை மற்ற அல்லோபதி மருந்துகளை ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவு,
இந்த மருந்தை எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது.
ஆண், பெண் அனைவரும் இதைப் பயன்படுத்தலாம்.
ஆனால் நல்ல ஒரு மலர் மருத்துவரிடம் சென்று தனது குறைகளைச் சொன்னால் போதும். கூறுகின்ற வார்த்தைகளிலேயே மலர் மருத்துவர் வியாதி இன்னதென்று நிர்ணயம் செய்து மருந்தை சிபாரிசு செய்வார்.
ஹோமியோபதி மருந்துகளைப் போல சின்னச் சின்ன உருண்டைகளில் இரண்டு அல்லது மூன்றை வாயில் போட்டு சிறிது நீரை அருந்த வேண்டும். ஓரிரு நாட்களிலேயே குணம் தெரிய ஆரம்பிக்கும்.
முக்கியமாக மனம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இது தரும் பலனை உடனே உணர முடியும்.
அதிகமான பயமா, ரெட் செஸ்ட்நட் சாப்பிட வேண்டும்.
வேலை செய்து செய்து உடலும் மனமும் களைத்து விட்டனவா, ஆலிவ் எடுத்துக் கொள்ளலாம்.
ஒரே டென்ஷன் என்றால் வெர்வெய்ன் சாப்பிடலாம்.
இப்படி ஒவ்வொரு மனநிலைக்கும் ஒவ்வொரு வியாதிக்கும் ஒரு மலர் மருந்து உண்டு.
கர்ப்பிணிகள் தங்கள் டாக்டரைக் கலந்து ஆலோசித்தபின் இவற்றை உட்கொள்ளலாம்.
இந்த மருந்துகள் ஹோமியோபதி மருந்துகளை விற்கும் மருத்துவக் கடைகளில் வாங்கலாம்.
மலர் மருந்தைப் பயன்படுத்துங்கள்; அதிக டென்ஷன், உடல்சோர்வு, களைப்பு உள்ளிட்ட அனைத்து வியாதிகளையும் போக்கிக் கொள்ளுங்கள்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
I decided to stay in Kuala Lumpur, capital of Malaysia for two days on my way back to London from Sydney in Australia. The reason for the visit is to take rest and visit Batu Caves Murugan Temple and Petronas Twin Towers. The Twin Towers is in the congested area of the town and so we took Grab (like Ola and Uber is Grab) and it cost us only nine RM (ringitt). But the entrance fee for the Twin Towers is RM 100 for me and my wife; actually it is a concession for senior citizens like us. Others pay double the amount. All the visitors are taken in batches. We stopped at three places: 1.Sky Bridge connecting Twin Towers; 2.Eighty Fourth Floor and 3.Shopping Floor where you can buy momentous, gifts etc.
When you enter the building, they take a photo of you and your companion. It will be ready when you get out of the building; if you want you may buy your picture.
At each stop you are given 10 minutes to fifteen minutes and you can take pictures of the sky scrapers of Kuala Lumpur.
Local people are reluctant to pay and visit the building; but tourists think that it is onetime opportunity in life. The Twin Towers is with a huge shopping mall. When you come out you see a fountains and a park. If you want to cover the tall towers while taking pictures you must walk away.
Following are the details:
Name: Petronas Twin Towers (also known as the KLCC Twin Towers)
Location: Kuala Lumpur, Malaysia
Height: 1,483 feet (452 meters)
Floors: 88 stories
Architects: Cesar Pelli & Associates
Official Opening: August 28, 1999
Design: The design incorporates Islamic arabesques and repetitive geometries characteristic of Muslim architecture.
Historical Significance: From 1996 to 2004, they were the tallest buildings in the world.
Now the tallest Twin Towers in the World.
–subham—
Tags- my visit, Petronas , twin towers, Kuala Lumpur,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
SRI VENKATESWARA TEMPLE, AUSTRALIA
SYDNEY OPERA HOUSE
DARLING HARBOUR, SYDNEY
SYDNEY MURUGAN TEMPLE
Four Countries! Over 40,000 Kilometres! 100 days.
Most of you would have read Jules Verne’s book Around the World in 80 days or at least seen the film. I , London Swaminathan , did go around half of the world in one hundred days. I left London on December 11, 2024 and came back on 20th March 2025. I covered over 40,000 kilometres by travelling to Australia, Singapore, Malaysia and India. Two times I had transit at Frankfurt airport in Germany. But I can claim only covering half of the world because I did not touch American and African continents. Following are the places I visited:
December 11, 2024- I left London Via Frankfurt
December 12- reached Singapore
December 13- visitedSingapore Muthumaramman Temple, and had lunch at famous Komala Vilas
December 14, 2024- reached Sydney in Australia
December 20,21,22- visted Shell Cove beach
December 22- I did Minnamurra Rain Forest Walk
December 23- I had Darshan at Sri Venkateswara Temple at Hellensburg.